Sunday, November 30, 2008

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜினாமா



டெல்லி: ஒரு வழியாக ராஜினாமா செய்துள்ளார் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல். நாட்டில் கடந்த நாலரை ஆண்டுகளாக நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களுக்கு உளவுப் பிரிவின் தோல்வியே காரணம் என்று மீண்டும் மீண்டும் உறுதியான நிலையில் அந்தப் பிரிவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த உள்துறை அமைச்சகமும் அதன் அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் தனது பதவியைக் காப்பதிலேயே தீவிரமாக இருந்தார். தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தில் முன்னிலையில் நிற்க வேண்டிய இந்தத் துறை பெரும் தோல்வியை அடைந்த நிலையில் பாட்டீல் மீதான கோபம் நாடு முழுவதும் அதிகரித்து வந்தது. ஆனாலும் சோனியா காந்தி குடும்பத்துடனான தனது நல்லுறவை பயன்படுத்திக் கொண்டு பதவியை தக்க வைத்து வந்தார் பாட்டீல்.

இந் நிலையில் வந்தது மும்பை தாக்குதல். இதுவரை இந்தியா கண்டிராத மிகப் புதிய வகையிலான தாக்குதல் இது. கடல் வழியே வந்து தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதல் நாட்டை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் கடல் வழியே பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் வந்து போவது குறி்த்தும், ஆயுதங்கள் வருவது குறித்தும் மகாராஷ்டிர, குஜராத் மீனவர்கள் அந்த மாநிலங்களின் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர். ஆனால், இரு மாநில அரசுகளும் செயல்படத் தவறியுள்ளன. இந்த மாநிலங்களின் செயல்படும் மத்திய உளவுப் பிரிவான இன்டெலிஜென்ஸ் பீரோவும் இந்த தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து தகவல்களை திரட்டத் தவறியுள்ளது. இவர்களுக்கு எதிர்க் கட்சித் தலைவர்களை உளவு பார்க்கவே நேரம் போதாது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல உள்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கடலோரக் காவல் படையும் (கடற் படை அல்ல) இந்த விஷயத்தில் பெரும் தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து உள்துறைக்கு தலைமை வகிக்கும் பாட்டீலுக்கு எதிரான கோபம் மீண்டும் வெடித்தது. தாக்குதல் நடந்து 4 நாட்களாகிவிட்ட நிலையில் அவரை மும்பையிலும் பார்க்க முடியவில்லை, டெல்லியிலும் வெளியில் தலை காட்டவில்லை. மூத்த அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், நேற்று பிரதமர் நடத்திய மிக முக்கியமான உயர் மட்டக் கூட்டத்துக்கு பாட்டீல் அழைக்கப்படவில்லை. மேலும் நேற்று கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக் ஆகியோருக்கு எதிராக பல்வேறு தலைவர்களும் கடும் கருத்துத் தெரிவித்தனர். அவரை உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந் நிலையில் இன்று பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ள நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளார் சிவராஜ் பாட்டீல்.

ராஜ்தாக்கரேக்கு குட்டு.

இது மராட்டியம். வெளிமாநிலத்தவர்கள் வெளியேறுங்கள் என்றார்களே, இப்போது பார்த்தீர்களா..? தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டு அப்பாவிகளை காப்பாற்றிய இருநூறுக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் யாரும் மராட்டியர்கள் இல்லை.எல்லோரும் வட மாநிலத்தவர்கள் மற்றும் தென்னிந்தியர்கள்தான். இவர்கள் உயிரை பணயம் வைத்து போரிட்டுக்கொண்டிருப்பதால்தான் சிவாஜிபார்க்கில் ராஜ்தாக்கரே, நிம்மதியாக தூங்கமுடிகிறது. இந்த தகவலை எல்லோருக்கும் பரப்புங்கள்.மும்பையில் துப்பாக்கி சண்டை தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் செல்போன்கள் வழியாக வெகுவேகமாக பரவிய எஸ்.எம்.எஸ்.தான் இது. மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியினரிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.-

நன்றி;தமிழ்முரசு

மும்பை தாக்குதல் - ஹிந்து தீவிரவாதிகளே காரனம் - சீனா (CHINA)


மும்பை தாக்குதல் - ஹிந்து தீவிரவாதிகளே காரனம் - சீனா (CHINA)




புகைப்படத்தின் மேல் கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்
மும்பை தாக்குதல் - ஹிந்து தீவிரவாதிகளே கரனம் - சீனா (CHINA) மும்பையில் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலின் பின்னணியில் இருப்பது ஹிந்து தீவிரவாதிகளே. ஹிந்துத்துவ தீவிரவாதிகளை இந்த வழக்கிலிருந்து வேறுபடுத்தி பார்க்க கூடாது. அவர்களை இவ்வழக்கில் இந்து நீக்கிவிடவும் முடியாது என்று சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தியில் குறிப்பிடபட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சீன அரசின் பத்திரிக்கை செய்தியாளர் குறிப்பிடுகையில் மும்பை தாக்குதலில் ஈடுபடடவர்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன அவற்றில் மக்கள கவணிக்க மறந்த ஒன்று இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனவைரும் தங்கள் வலது கையில் ஹிந்துத்துவ தீவிரவாதிகள் அணியும் காவி நூலை கட்டியிருப்பதுதான்.
குஜராத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களும், அஸ்ஸாமிலும், ஒரிஸாவிலும் கிருத்துவ மக்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹிந்துத்துவ தீவிரவாதிகள் எப்போதும் இதுபோல் தங்கள் வலது கையில் காவி நூலை அணிந்திருப்பது வழக்கம்.சீனா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளின் உளவுத்துறைகளும் ஹிந்துத்துவ அமைப்புகள் மீது தங்கள் சந்தேகத்தை பதித்துள்ள நிலையில் இந்திய ஊடகங்கள் மட்டும் திரும்ப திரும்ப "முஸ்லிம் தீவிரவாதிகள்" பாடலை தொடாந்து பாடிக் கொண்டிருப்பது யாரை காப்பாற்ற என்றுதான் தெறியவில்லை.உண்மைகளை இந்திய உளவுத்துறையும், காவல்துறையும் தான் வெளிக்கொணர வேண்டும். இந்த வழக்கில் யார் முக்கிய விசாரனை நடத்த வேண்டுமோ அந்து முக்கிய நபரான ATS தலைவர் மேந்த் கர்கரே உட்பட முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தான் இந்த மும்பை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் முதல் குறியாக இருந்துள்ளனர். இதில் இருந்தே நாம் புறிந்து கொள்ளலாம் இந்த தாக்குதலின் பின்னணி யார் என்று. திரு. ஹேமந்த் கர்கரே அவர்கள் மறைந்தாலும் அவரைப்போன்ற பல நியாயமான நேர்மையான அதிகாரிகள் இன்னும் இந்திய காவல்துறை உளவு நிறுவனங்களில் உள்ளனர் அப்படிப்பட்ட அதிகாரிகளை கொண்டு இந்த தாக்குதலின் உண்மை முகங்களை மக்கள் முன் அடையாளப்படுத்த வேண்டும். ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் இந்த தீவிரவாதிகளுக்கு அஞ்சாமல் இதை செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Thanks : Indian Express

Saturday, November 29, 2008

மும்பையில் தாக்குதல்... பிண்ணனியில் யார்?

மும்பையில் தாக்குதல்... பிண்ணனியில் யார்?
கடந்த மூன்று தினங்களாக மும்பைச் செய்திகள் மக்களை ஆக்கிரமித்த வகையில் வ‌ேறு ச‌ெய்திகள் ச‌ெய்திருக்க முடியாது. வ‌ெளிநாட்டவரும் கொல்லப்பட்டதால் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தொலைக்காட்சிகளும் தொடர்ந்து செய்திகளைத் தந்து வருகின்றன.தீவிரவாதிகள் தாக்குதல் என்றாலே பொதுமக்கள் கூடும் இடத்தில் குண்டு வைப்பது, கும்பலாகச் சென்று தாக்குவது என்றிருந்த நிலை மாறி திட்டமிட்டு துப்பாக்கிப் பயிற்சி எடுத்து , தாக்கப் போகும் நிலைகளையெல்லாம் கவனமாக அனுமானித்து பிணைக்க‌ைதிகளை வைத்து "ஏதோ ஒரு" கோரிக்கையை முன் வைத்து உயிர் போகுமளவிற்கு போராடுவது என்றிருப்பது, இந்திய மக்களுக்கு மிகப் புதிது. முன்பொரு முற‌ை கந்தகார் விமானக் கடத்தல் நாடகம் உங்கள் கண் முன்பு வந்தால் ஆச்சரியமல்ல.இந்தச் சம்பவத்தில் ஏகப்பட்ட கேள்விகள் உள்ளன. நாட்டின் மிக முக்கிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எல்லோரும் அடர்ந்த ம‌ெளனம் சாதிக்கிறார்கள். பொதுமக்களைப் போலவ‌ே அவர்களுக்கும் போதிய தகவல்கள் கிடைக்க வில்லை போலும்.இந்தச் சம்பவம் மிகவும் திட்டமிடப்பட்டு துளியும் பிசகின்றி ச‌ெயல்படுத்தப்பட்டிருப்பது, இதன் பிண்ணனிய‌ைப்பற்றி மிகவும் தீவிரமாகச் சிந்திக்க வைத்துள்ளது. இந்தத் திட்டமிடலுக்குத் த‌ேவையான தகவல்கள், பணம், உள்ளூர் ஆதரவு, தொடர்ந்த சாட்டிலைட் போன் உத்தரவுகள் இத‌ெல்லாம் ஒன்று அல்லது அதற்கும் ம‌ேற்பட்ட அம‌ைப்புகளின் உதவியின்றி நடந்திருக்க முடியாது என்று உள்ளுணர்வு சொல்லுகிறது. இது வ‌ெறும் பாகிஸ்தான் மண்ணோடு நின்று விடப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. அம‌ெ ரிக்கர்கள் நின‌ை த்தால் இந்த முடிச்ச‌ை சுலபமாக அவிழ்த்து நம் க‌ையில் தரமுடியும். சாட்டில‌ைட் தொடர்புகள் மற்றும் முந்த‌ைய தகவல் தொடர்புகள் அன‌ைத்த‌ையும் ஆராய்ந்து இதன் மூலகர்த்தாக்கள‌ை அட‌ையாளங் காண அவர்கள் உதவ முடியும்.முன்னாள் உளவதிகாரி திரு ராமன் அவர்கள் கூற்றின் படி டெக்கான் முஜாகித்தீன் என்பதெல்லாம் ஒரு பொய்யாக இருக்கலாம். உள்ளூர்த் தீவிரவாதிகளுக்கு இவ்வளவு திட்டமிடலும் (ஒரு அதிகாரி, இது ஒரு த‌ேர்ந்த கமாண்டோ ஆபர‌ேஷன் போல இருக்கிறது என்கிறார்) பொருளாதார பலமும் கிட‌ையாது என்றிருக்கிறார். அதே சமயம், ராண்ட் கார்ப்பர‌ேஷனைச் ச‌ேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் இது முழுக்க முழுக்க உள்ளூர் வாசிகளின் வ‌ேலை என்றிருக்கிறார். குழப்பத்தில் நாம்.ஆரம்பத்தில் அமெரிக்கர்களையும் பிரிட்டிஷார‌ையும் தனிம‌ைப்படுத்துகிறார்கள் என்பதாக ஊடகங்கள் பெரிது படுத்திப் பேசின. ஆனால், மொத்தம‌ே 5 அம‌ெரிக்கர்கள் தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். அப்படியானால், அந்தச் சமயத்தில் மொத்தம‌ே 5 அம‌ெரிக்கர்கள் மட்டும‌ே இருந்தார்களா என்பது தெரியவில்லை.உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிப்பது என்ன வென்றால், அம‌ெரிக்க மற்றும் இஸ்ர‌ேலிய உளவுத் துறை அதிகாரிகள் அந்தச் சமயத்தில் தாஜ் ஓட்டலில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இதற்கு மறுப்பை அம‌ெரிக்கா தெரிவித்தது. ம‌ேலும் அது அந்த ஓட்டலில் அமெரிக்கர்கள் யாரும் தங்கியிருக்க வில்லை என்றும் தெரிவித்தது. பிற்பாடு, 5 அமெரிக்கர்கள் இறந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. அவர்கள் உண்ம‌ையில் யார்?முதலில் ப‌ேரம் ப‌ேச தீவிரவாதிகள் விரும்பியதாகவும் ஆனால் அரசு அந்தக் கோரிக்க‌ைக்கு உடன்படவில்லை என்றும் தெரிகிறது. தாம் பிடித்து வைத்திருந்த பிணைக் க‌ைதிகளை ய‌ெல்லாம் அவரவர் தூதரகங்களுக்கு போன் ச‌ெய்து மும்ப‌ை அரசை அவர்களுடன் பேரம் ப‌ேசச் சொல்லுமாறும் சொல்ல வில்லை ய‌ென்றால் அவர் களை க் கொன்று விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்கள். அப்படி ஒரு நிலை சிங்கப்பூர் இளம் ப‌ெண் வக்கீலுக்கு நேர்ந்திருப்பதாக ஊடகங்களின் வாயிலாக அறிகிறோம். பின்னர் அவர் அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். மும்பை அரசுடன் அப்படி என்ன ப‌ேரம் ப‌ேச விரும்பினார்கள் என்பது புரியவில்லை. யாரை விடுவிக்க விரும்பினார்கள் என்பதும் தெரிய வில்லை.தீவிரவாதிகள் முதலில் தேடிக் கொன்றது, கர்னல் புரோகித்தைக் க‌ைது ச‌ெய்த மூன்று மிக முக்கிய அதிகாரிகளைத்தான். அந்த முக்கிய அதிகாரி கர்காரே துப்பாக்கி துளைக்காத அங்கியை அணிவதை க‌ேமராவில் காட்டுகிறார்கள். ஆனால், அவர் மார்பில் மூன்று குண்டுகள் துளைத்து வ‌ெளிய‌ேறியிருக்கின்றன. அவர் உண்ம‌ையில‌ேயே தீவிரவாதிகளால் சுடப்பட்டாரா அல்லது சந்தர்ப்பத்த‌ைப் பயன்படுத்தி சில "வ‌ேண்டியவர்கள்" அவர்களைக் கொன்றனரா என்பத‌ையும் இனி தீவிரமாக விசாரித்தாக வ‌ேண்டும்.INDIA TV தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டது. அதில் ஒருவன் சுத்தமான உள்ளூர் இந்தியில் ப‌ேசுகிறான். கொஞ்சம் யோசித்துவிட்டு தனது ப‌ெயரை சகத்துல்லா என்று தெரிவிக்கின்றான். அவர்கள் உண்ம‌ையில் தீவிரவாதிகளா அல்லது தொலைக்காட்சியின் ச‌ெட்டப்பா என்பத‌ை அரசு விசாரிக்க வ‌ேண்டும்.தீவிரவாதிகள‌ை ஏற்றி வந்ததாகச் சொல்லப்படும் படகு ஒன்று குஜராத்த‌ைச் ச‌ேர்ந்தவருட‌ையது. அவர் படகு காணாமல் போய் ஒரு வாராமாகி விட்டது என்றும் ஆனால் போலிஸில் புகார் கொடுக்க வில்ல‌ை என்றும் சொல்லியிருக்கிறார். ஏனோ ப‌ெண் சாமியார் ஒருவர் தனது ப‌ைக்க‌ை விற்று விட்டதாகவும் ஆனால் வாங்கியவர் அவர் ப‌ெயருக்கு மாற்ற வில்ல‌ை என்பது தனது குற்றமாகாது என்று வாதாடியதும் நின‌ைவிற்கு வருகிறது.ஒரு பிண‌ைக் க‌ைதி நாடகத்த‌ை நடத்தி தனது கோரிக்க‌ைகள‌ை நிறைவேற்ற ஒரு புரொபஷனல் தீவிரவாதக் கும்பல் முயன்றுள்ளது. விடுவிக்கப்படும் க‌ைதிகளுடன் வ‌ெளிய‌ேறி விடலாம் என்றிருந்த தீவிரவாதிகள், தங்கள் திட்டம் பலிக்காமல் போனதால் பிண‌ைக்க‌ைதிகள‌ைக் கொன்றிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்திய அதிகாரிகள் சாதாரணமானவர்கள் அல்ல. நிச்சயம் அந்த தீவிரவாதச் ச‌ெயல‌ைச் ச‌ெய்த அன‌ைத்து தொடர்புகள‌ையும் வ‌ெளிக் கொணர்வார்கள் என்று நம்புவோமாக.பிரிட்டிஷ் பாகிஸ்தானிய நபர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தற்போது ஊகங்கள் எழுகின்றன. கராச்சியிலிருந்து தாம் வந்ததாகவும் 20 ப‌ேர் மொத்தம் என்பதாக ஒரு பிடிபட்ட LeT தீவிரவாதி கூறுகிறான். நடந்த சம்பவங்களின் கோர்வ‌ைய‌ையும் அதன் வீச்ச‌ையும் கூர்ந்து நோக்கினால் இதில் குற‌ைந்தது 40/50 ப‌ேர்களாவது ஈடுபட்டிருக்க வ‌ேண்டும் என்று அனுமானிக்க முடிகிறது. அப்படியானால் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் போக மீதம் ப‌ேர் என்ன வானார்கள்? அவர்களும் வ‌ெளிய‌ேறும் பிண‌ைக்க‌ைதிகளுடன் தப்பித்தனரா என்பதும் தெரியவில்ல‌ை. அவர்களின் அடுத்த இலக்கு என்ன என்பதும் தெரியவில்ல‌ை. இதில் முத்தாய்ப்பாக அவர்களின் தல‌ைவன் என்பவன் தனது கூட்டத்தாரில் ஒருவரால‌ேயே சுட்டுக் கொல்லப்பட்டான் என்றும் ச‌ெய்திகள் தெரிவிக்கின்றன.ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. இதில் மாப‌ெரும் சதிவலை ஒன்றிருக்கிறது. வளரும் இந்தியாவில் உள் நாட்டுப் பூசல‌ை உருவாக்கி அதில் குளிர்காய நின‌ைக்கும் நாடு அல்லது நாடுகள் இவற்றிற்கு பிண்ணனியாக இருக்கும் என்று மட்டும் புரிகிறது.இந்தியா தனது தீவிரவாதத்திற்கு எதிரான அணுகுமுற‌ையை பரிசீலன‌ை ச‌ெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சிந்திக்க வல்ல அதிகாரிகள‌ைக் கொண்டு தேச நலன் மட்டும் பிரதானமாக என்னக் கூடிய அதிகாரிகளைக் கொண்டு ஒரு அம‌ைப்பு உருவாக்க வேண்டும். தீவிரவாதம் ச‌ெய்பவர்கள் எத்தக‌ைய அம‌ைப்பில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் ச‌ெயல்படத் தயங்காத அதிகாரிகள‌ை அது கொண்டு இருக்க வ‌ேண்டும்.இந்த மாதிரியான நிகழ்வுகள் இனியும் ஒரு முற‌ை நடந்த‌ேறாதாவாறு விசாரண‌ையில் தெரிய வரும் அன‌ை த்துக் காரணிகள‌ையும் முள‌ையில‌ேயே கிள்ளி எறிய வேண்டும்.கட்டாய இராணுவப் பயிற்சிய‌ை அன‌ைவருக்கும் கொண்டு வருவது பற்றி அரசு யோசிக்கலாம்.இந்த நிகழ்வில் வீர மரணமட‌ைந்த போலீஸ், மற்றும் NSG அதிகாரிகளுக்கு நமது வீர அஞ்சலிய‌ை உரித்தாக்குவோமாக..REDIFF.COM ல் கீழ்க்கண்ட க‌ேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. நியாயமான க‌ேள்விகள். இவற்றிற்கு பதில் கிட‌ைக்குமா?How many terrorists were there? Did they number 20 as Maharashtra Chief Minister Vilasrao Deshmukh told a press conference on Thursday? Or did they number many more? If two or three terrorists attacked the CST, how many terrorists were present at the Taj and Trident? Did the CST terrorists drop a grenade/explosive device at Dockyard Road on the way to the station? Or was someone else responsible for that act of terror which claimed three lives?
The terrorists are said to have set up control rooms at the Taj and Trident hotels, a Cabinet minister told PTI on Thursday. When were these bookings made? A detailed investigation into the bookings made at both hotels in the months, weeks and days before the attacks may reveal the names of suspicious guests who registered there.
Military sources tell rediff.com that there was no way the terrorists could have carried so much ammunition with them when they assaulted the two hotels with their guns blazing. They believe the ammunition may have been stored earlier in rooms at both the hotels, perhaps on the higher floors.
If some of the terrorists had registered at the hotels earlier, could these men/women have left along with the guests who were released? Did the police record the identities and addresses of the guests who were released from both hotels?
Indian Hotels Chairman Ratan Tata indicated on Thursday that the terrorists had intimate knowledge of the Taj, its service corridors, its layout. Does this mean that they had a mole inside the Taj? Or more worrying, did a couple of them work there at some point of time? Did they have drawings of the layout of the two hotels?
If the terrorists were Pakistani, how did they have such an intimate knowledge of the terrain? The two or three cowards who attacked the CST on Wednesday night made their way from the CST through a road on the left side of The Times of India building towards the Cama and Albess hospital/Azad Maidan police station, a route that is known only to true-blood Mumbaikars. Were they locals? Or did they conduct extensive reconnisance of the likely routes of escape?
These same two or three men, who are said to have commandeered ATS Chief Hemant Karkare's [Images] police Qualis after shooting him, Additional Commissioner of Police Ashok Kamte and Inspector Vijay Salaskar, revealed similar familarity with the road outside the Esplanade Court, making an easy U-turn towards the Metro cinema junction rather than head on the road towards the CST. How did they know this if they were Pakistanis?
How did those men, whose images have appeared all over the world, get to the CST from Colaba where they are said to have landed by boat? Did they take a taxi? Or did they have local transportation? Did they come by a suburban train, which could explain the firing on one of the suburban train platforms? Who left the grenade on the Gitanjali Express, which killed a Bengali mother?
The terrorists are said to have done extensive reconnisance of the city. If they are Pakistanis, how did they get earlier entry to the city unnoticed? Did they come in by boat? Or did they use other routes to escape notice?
Such an operation could not have been conducted without extensive training and preparation, possibly on models of the Taj and Trident or Chabad House/Nariman House. Could this have been achieved at the rudimentary training camps hosted by the Lashkar-e-Tayiba in Pakistan occupied Kashmir? Or was it a more systematised operation conducted by a State agency in a hostile country?
How did they know Chabad House/Nariman House, which even long-time residents of Colaba -- the area in South Mumbai where the Taj, the Leopold Cafe [Images] and Chabad/Nariman House are located -- are unfamiliar with? The choice of this target indicates precision thinking -- it is doubtful if the Lashkar strategists are capable of such deep strategy -- and again points the needle of suspicion at a government intelligence agency in a nation inimical to India or renegades within such a bureau.
Early on Thursday morning, the television channels spoke about an exchange of fire between the terrorists and the police near the Liberty cinema (which is close to the Metro cinema/Cama hospital, but situated on an inner road). There was even fear expressed that these terrorists would enter the Bombay hospital, but nothing was heard about them thereafter. Where did they go? Were these two/three terrorists the same men who took over the police Qualis and shot at people near the Metro junction? Or have they escaped?
The police say the two men, who took over the Qualis, grabbed the Skoda that was halted at a police road block near the Girgaum Chowpatty [Images] beach. One of them was later killed by the police. Where did the other man go? Is he the Ismail, the Lashkar terrorist who is appparently singing like a canary to the police? Or is he someone else? If these are the two of the three terrorists who attacked the CST, what happened to the third man seen in photographs and video captures? Where did he vanish?
Another terrorist is said to be in custody. Where was he captured? What has he told the police?

நன்றி : திருவடியான்

Thursday, November 27, 2008

1,85,000 கோடி - யாரு அப்பன் வீட்டுப் பணம்?

ரூ. 1,85,000 கோடி யாரு அப்பன் வீட்டுப் பணம்?
நவீன தருமன் ஐயா,

"நல்ல காலம் முடிந்தது'' இப்படி அலறுகிறது, இந்தியாடுடே வார இதழ். 21,000 புள்ளிகளாக இருந்த பங்குச் சந்தை வளர்ச்சி, 10,000 புள்ளிகளுக்கும் கீழே

சரிந்து விழுந்த பிறகு; பங்குச் சந்தை சூதாட்டத்தால் உலகக் கோடீசுவரர்களான இந்தியத் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு சடசட வெனச் சரியும்பொழுது, இப்படித்தான் ஓலமிட முடியும்.
பங்குச் சந்தையும், தகவல்தொழில்நுட்பத் துறையும், ரியல் எஸ்டேட் வியாபாரமும், சுற்றுலா உள்ளிட்ட சேவைத் துறையும், ஏற்றுமதி சார்ந்த தொழில்களும் இந்தியாவை வல்லரசாக்கி வருவதாகக் கூறி வந்தார்கள். ஆனால், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுனாமி இந்தத் தொழில்கள் அனைத்தையும் ஆட்டம் காண வைத்துவிட்டது; தாராளமயம் உருவாக்கியிருந்த நீர்க் குமிழி உடைந்து விட்டது. ஆளும்வர்க்கம் பீற்றிக் கொண்ட 9 சதவீத பொருளாதார வளர்ச்சி, வேரோ விழுதோ அற்ற வளர்ச்சி என்பது நிரூபணமாகிவிட்டது.
அரசு, பொருளாதாரத்தில் தலையீடு செய்வதை "லைசென்ஸ் ராஜ்ஜியம்'', "கோட்டா ராஜ்ஜியம்'' எனத் தூற்றிய முதலாளிகள், இன்று அரசாங்கம் உதவ வேண்டும் எனத் தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறார்கள். ஆட்குறைப்புச் செய்வதன் மூலம், புதிய முதலீடுகளைச் செய்யாமல் பணத்தை இரும்புப் பெட்டிக்குள் பூட்டி வைத்துக் கொள்வதன் மூலம் அரசையும் மக்களையும் ""பிளாக் மெயில்'' செய்கிறார்கள். முதலாளிகளின் மிரட்டலுக்கு ஆடிப் போன மன்மோகன் ப.சிதம்பரம் கூட்டணி 1,85,000 கோடி ரூபாயைச் சந்தையில் கொட்டுகிறது.
மனசாட்சியோடு கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏறத்தாழ ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகுதான்; பல இலட்சக்கணக்கான விவசாயிகள் தாராளமயத்தால் ஓட்டாண்டியாகி, விவசாயத்தை விட்டு நகர்ப்புறங்களுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்த பிறகுதான், மன்மோகன் சிங் விவசாயக் கடன் தள்ளுபடி என்ற அரைகுறை திட்டத்தை அறிவித்தார்.
இப்பொருளாதார நெருக்கடியால் எந்தவொரு முதலாளியும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவில்லை; எந்தவொரு முதலாளியும் ஓட்டாண்டியாகித் தெருவுக்கு வந்துவிடவில்லை. ஆனாலும் கடந்த அக். 6 தொடங்கி அக்.20க்குள், இரண்டே வாரத்திற்குள் 1,85,000 கோடி ரூபாய், முதலாளிகள் வாரிக் கொள்ளும்படி சந்தையில் கொட்டப்பட்டது. இது, மன்மோகன் சிங்கின் சொந்தப் பணமோ, முதலாளிகளின் அப்பன் வீட்டுச் சொத்தோ அல்ல. இந்த 1,85,000 கோடி ரூபாயும் இந்திய மக்களின் சேமிப்புப் பணம்; மக்கள் அரசாங்கத்திற்கு வரியாகக் கட்டிய பணம்.
இந்திய முதலாளிகளும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சுவிஸ் நாட்டு வங்கிகளில் போட்டு வைத்துள்ள கருப்புப் பணம் மட்டும் 55 இலட்சம் கோடி ரூபாய் என்றும்; கருப்புப் பணத்தை சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்குவதில் இந்தியாதான் முதலிடத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன (தினமணி 16.10.2008) மன்மோகன் சிங் இந்தக் கருப்புப் பணத்தை முடக்கினால், பங்குச் சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள "நட்டத்தை' மட்டுமல்ல, இந்தியாவின் உள்நாட்டுவெளிநாட்டுக் கடன்களைக் கூட அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். ஊழல்வரி ஏய்ப்பின் மூலம் குவிக்கப்பட்ட இந்தக் கருப்புப் பணத்தின் மீது கை வைக்கத் தயங்கும் மன்மோகன், பொதுமக்களின் சேமிப்பைப் பங்குச் சந்தை சூதாடிகளுக்காக வாரியிறைக்கிறார்.
மாணவர்களுக்குக் கல்விக் கடன் தர மறுக்கும் வங்கிகள்; சிறு தொழில்களுக்கு உரிய நேரத்தில் உதவ மறுக்கும் வங்கிகள்; விவசாயக் கடன் தர மறுக்கும் வங்கிகள், பங்குச் சந்தைச் சூதாடிகளைக் காப்பாற்ற வட்டியைக் குறைத்து, தங்கள் கஜானாவைத் திறந்து வைத்துவிட்டன.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அமெரிக்க முதலாளிகளைக் கைதூக்கி விட 70,000 கோடி அமெரிக்க டாலர் பெறுமான மானியத் திட்டத்தை அறிவித்த பொழுது, அதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் நாடகத்தை நடத்த வேண்டியிருந்தது. மன்மோகன் சிங் ப.சிதம்பரம் கும்பலோ, 1,85,000 கோடி ரூபாய் மானியத்தை வாரிக் கொடுக்க, யாருடைய ஒப்புதலுக்காகவும் காத்திருக்கவில்லை.
விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பொழுது, அதனால் வங்கிகள் நட்டமடையும் எனக் கவலைப்பட்ட பொருளாதார நிபுணர்கள்; அத்திட்டத்தை ஓட்டுவங்கி அரசியல் எனக் கிண்டலடித்த நடுத்தர வர்க்கக் கனவான்கள், முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த மானியம் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள். ஏதோ நாட்டு நலனுக்காகத்தான் இந்தப் பணம் கொடுக்கப்பட்டதைப் போலச் சாதிக்கப் பார்க்கிறார்கள்.
பங்குச் சந்தை வளர்ச்சி 20,000 புள்ளிகளாக ஊதிப் பெருத்திருந்தபொழுது, முதலாளித்துவ நிறுவனங்களின் பங்கு மதிப்பு 62,16,900 கோடி ரூபாயாக வீங்கியிருந்தது. இந்தச் சரிவினால், இந்தச் சந்தைத் திரட்சி சரிபாதியாக வீழ்ந்து விட்டது. இதனால், அம்பானி, மிட்டல் போன்ற உலகக் கோடீசுவரர்களின் சொந்த சொத்து மதிப்பும் படுத்துவிட்டது. மீண்டும் பங்குச் சந்தை வீங்கினால்தான் இவர்களின் சொத்து மதிப்பு உயரும். அதற்குத்தான் இந்த 1,85,000 கோடி ரூபாய் பயன்படும். வீட்டுக் கடன் மூலம் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் கைகளுக்கும்; நுகர்பொருள் கடன் மூலம் மேட்டுக்குடி ஊதாரிக் கும்பலின் பாக்கெட்டுக்கும்தான் இந்த 1,85,000 கோடி ரூபாய் செல்லப் போகிறது.
மாறாக, பங்குச் சந்தை வளர்ச்சியின் கவர்ச்சியில் மயங்கி, அதில் பணத்தைப் போட்டு, 3,00,000 கோடி ரூபாய் நட்டமடைந்திருக்கும் நடுத்தர வர்க்கத்து ஆசாமிகளுக்குக் கூட இந்தப் பணம் உதவப் போவதில்லை.
***
பங்குச் சந்தையை சேவைத் துறை எனப் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த மன்மோகன் சிங், இன்று அதனைச் சூதாட்டப் பொருளாதாரம் எனச் சொல்லும் அளவிற்கு இடிந்து போய் நிற்கிறார். "பங்குச் சந்தை சூதாட்ட பேர்வழிகளைக் கட்டுப்படுத்த உலகளாவிய அளவில் கண்காணிக்கும் நிர்வாக அமைப்புகள் தேவை'' என சமீபத்தில் ஜப்பானில் நடந்த ஆசிய ஐரோப்பிய நாடுகளின் மாநாட்டில் உபதேசம் செய்திருக்கிறார்.
இந்தியப் பங்குச் சந்தையின் சரிவுக்கு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்தான் காரணம் என முதலாளித்துவப் பத்திரிகைகள் கூடக் குற்றஞ் சுமத்துகின்றன. அந்நிறுவனங்கள் 1,000 கோடி டாலர் பெறுமான பங்குகளைத் திடீரென விற்று, இலாபத்தை எடுத்துக் கொண்டு ஓடிப் போனதால், பங்குச் சந்தை மட்டுமல்ல, இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து விட்டது. மன்மோகன் சிங், இந்த வெளியேற்றத்தைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவரோ பங்குச் சந்தை சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், மேலும் பல சலுகைகளை வாரியிறைத்து வருகிறார்.
ஒருவர், தான் இன்னார் எனக் காட்டிக் கொள்ளாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பங்கேற்புப் பத்திரம் என்றொரு வசதி இருக்கிறது. கருப்புப் பணத்தை நல்ல வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ளப் பயன்படும் குறுக்கு வழி இது. இந்தியாவின் கருப்புப் பண முதலைகள், அந்நிய நிதி நிறுவனங்களின் மூலம் இந்த வழியைப் பயன்படுத்திக் கொண்டுதான் சூதாடுகிறார்கள் என மோப்பம் பிடித்துவிட்ட பங்குச் சந்தை பரிமாற்ற வாரியம், இந்தக் குறுக்கு வழியை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் எனக் கோரியது. மன்மோகன் சிங் இத்தடைக்கு ஒத்துக் கொள்ளாததால் அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் செய்யும் முதலீட்டில், பங்கேற்புப் பத்திரங்கள் 40 சதவீத அளவிற்குள்தான் இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால், இப்பொழுதோ, பங்குச் சந்தை சரிவைத் தடுத்து நிறுத்துவது என்ற பெயரில், இக்கட்டுப்பாடு முற்றிலுமாக நீக்கப்பட்டு, கருப்புப் பணப் பேர்வழிகளின் முதலீட்டுக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பூனைக்கு மணி கட்ட வேண்டும் என்ற அவரது உபதேசம் ஊருக்குத்தான் போலும்!
***
பங்குச் சந்தையை மட்டுமல்ல, இந்திய நிதி சந்தை முழுவதையும் அந்நிய நிறுவனங்களிடம் தூக்கிக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் மன்மோகன் சிங் கும்பலின் இலட்சியம். அந்நிய நிதி நிறுவனங்கள் காப்பீடு துறையில் 26 சதவீதம் அளவிற்கு மூலதனம் இடுவதை அனுமதித்திருக்கும் மன்மோகன் சிங், அதனை 49 சதவீதமாக உயர்த்த விரும்புகிறார்.
இந்தியாவிலுள்ள தனியார் வங்கிகளைப் பன்னாட்டு பகாசூர வங்கிகள் கைப்பற்றிக் கொள்வதற்கு வசதியாக, அந்நிய வங்கிகள் இந்திய வங்கிகளில் மூலதனமிடுவதை 74 சதவீதமாக உயர்த்தவும்; இதற்காக வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தைத் திருத்தவும் முயன்று வருகிறது, காங். கூட்டணி ஆட்சி.
தொழிலாளர் சேமநல நிதியை நிர்வகிப்பதை முற்றிலுமாகத் தனியார்மயமாக்கி, அந்நிதியைப் பங்குச் சந்தையில் கொட்டிச் சூதாடுவதைச் சட்டபூர்வமாக்குவதற்காக சேமநல நிதி ஒழுங்கு மற்றும் வளர்ச்சி ஆணையத்தை நிறுவ சட்டம் தயாரிக்கப்பட்டு, அது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றது.
மன்மோகன் சிங்கால் நிதித்துறை தொடர்பாக எடுக்கப்படும் ஒவ்வொரு "சீர்திருத்தமும்'' வாடிக்கையாளர் நலனுக்கானது அல்ல; அரசின் அரைகு றைக் கட்டுப்பாட்டில் இயங்கும் நிதித்துறையை, அமெரிக்காவைப் போல நிதி ஆதிக்கக் கும்பலிடம் கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கமுடையது. பூனைக்கு மணிகட்ட வேண்டும் என்றால், மன்மோகன் சிங் இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். ஆனால், அவரது சிஷ்யப் பிள்ளை ப.சிதம்பரமோ, அமெரிக்காவின் தனியார் வங்கிகள் திவாலானதைப் பார்த்த பிறகும், "இந்திய நிதித்துறையைச் சீர்திருத்தம் செய்வதற்குத் தடை போட முடியாது'' எனத் திமிராக அறிவிக்கிறார்.
அமெரிக்காவின் வீட்டுக் கடன் பிரச்சினையில் சிக்கிக் கொண்டு, இந்தியப் பொதுத்துறை வங்கிகள் 450 கோடி ரூபாயும்; இந்தியத் தனியார் வங்கிகள் 2,100 கோடி ரூபாயும் இழந்துவிட்டதாக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இது அரைகுறை உண்மைதான் என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க, இந்திய வங்கிகள் வகைதொகையின்றி அளித்திருக்கும் கிரெடிட் கார்டு கடன்கள், வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள், நுகர்வோர் கடன்கள் ஆகியவை எதிர்காலத்தில் இந்தியாவிலும் அமெரிக்க பாணியில் ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்கலாம் என வல்லுநர்களே அச்சப்படுகின்றனர். குறிப்பாக, தகவல்தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் வேலையிழப்பும், சம்பள வெட்டும் வங்கிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
மேலும், இந்தியப் பணத்தின் சந்தை மதிப்பை அரசின் தலையீடின்றி, சூதாடிகள் தீர்மானிக்க விட்டு விடவேண்டும் என்பதுதான் மன்மோகனின் வாழ்நாள் இலட்சியம். ஒருவேளை அவரது கனவு முன்பே நிறைவேறியிருந்தால், இந்நேரம் இந்தியா திவாலாகியிருக்கும். கட்டுப்பாடு பற்றி உபதேசிக்கும் மன்மோகன் சிங், தனது இந்தக் கனவைக் கைகழுவிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
***
இந்தியா, அமெரிக்கா போல மாற வேண்டும் எனக் கத்திக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்துக்கு, இந்த ""நெருக்கடி'' சரியான பாடம் புகட்டிவிட்டது. தகவல் தொழில்நுட்பத் துறையில் கொழுத்த சம்பளத்தில் அதிகாரியாக வேலை பார்க்கும் சீமா குக்ரேஜாவை, அவரது நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, வேலை நீக்க உத்தரவில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு அனுப்பி விட்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 1,900 ஊழியர்கள் ஒரே நொடியில் வேலையில் இருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் போராடிய பிறகு, ஜெட் ஏர்வேஸ் முதலாளி நரேஷ் கோயல் அவர்களைத் ""தாயுள்ளத்தோடு'' வேலைக்கு எடுத்துக் கொண்டார். இந்தக் கருணைக்குப் பின்னே சம்பள வெட்டு என்ற குருவாள் மறைந்திருந்தது. இரண்டு இலட்சம் வரை சம்பளம் வாங்கிய தனியார் விமான நிறுவன ஊழியர்களுக்கு இன்று 10,000 ரூபாய் சம்பளமாகக் கிடைத்தால் அதிருஷ்டம்தான்!
வேலை பறி போய்விடும் என்பதால் தகவல் தொழில்நுட்பத் துறையில் யாரும் வருடாந்திர சம்பள உயர்வு பற்றியோ, போனசு பற்றியோ வாயே திறப்பதில்லை எனக் கூறப்படுகிறது. சம்பள வெட்டு, இல்லையென்றால் வேலையிழப்பு இந்த இரண்டில் ஒன்று ஊழியர்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது.
தெருவில் இறங்கிப் போராடும் தொழிலாளர்களை, "நான்சென்ஸ்'' என எரிச்சலாகப் பார்த்த இந்த மூளை உழைப்பாளிகள், இன்று தெருவில் இறங்கி "வாழ்க, ஒழிக'' முழக்கம் போட வேண்டிய நிர்பந்தம் உருவாகி விட்டது. தொழிற்சங்கத்தில் சேர்வதை கௌரவக் குறைச்சலாகப் பார்த்த இந்த மூளை உழைப்பாளிகள், இன்று தங்களுக்காக யாராவது பரிந்து பேச மாட்டார்களா எனத் தவிக்கிறார்கள். தாராளமயத்தால் இவர்கள் அனுபவித்த வசதிகள் கிரெடிட் கார்டு, வண்டிக் கடன், வீட்டுக் கடன் ஆகியவை இன்று வேலையிழப்பாலும், சம்பள வெட்டாலும் சுமையாக மாறி, அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. நிரந்தரமானது என அவர்கள் நம்பிக் கொண்டிருந்த இந்த சொர்க்க வாழ்க்கை, இன்று நொறுங்கி விழுகிறது.
நெருக்கடியில் சிக்கிக் கொண்ட ஜெட் ஏர்வேஸ், கிங் ஃபிஷர் ஆகிய நிறுவனங்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கும், இந்திய விமான ஆணையத்திற்கும் தர வேண்டிய 3,000 கோடி ரூபாயை மெதுவாக அடைக்கலாம் என கருணை காட்டியிருக்கிறார், மன்மோகன் சிங். அதேசமயம், ஏர்இந்தியாவில் இருந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள 15,000 ஊழியர்களுக்குக் கருணை காட்ட அரசு தயாராக இல்லை.
இதுதான் அமெரிக்க பாணி; தொழிலாளர்களை வேலையில் இருந்து கறிவேப்பிலை போலத் தூக்கியெறிவதுதான் அமெரிக்காவின் தொழில் உறவுக் கொள்கை. இந்தத் தீவட்டிக் கொள்கையைத்தான் தொழிலாளர் நலச் சீர்திருத்தம் என்ற பெயரில் அமலாக்கத் துடிக்கிறார், மன்மோகன் சிங்.
தனியார்மயம் சூதாடிகளைத் தவிர, உழைக்கும் மக்களில் எந்தவொரு பிரிவினருக்கும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், ஊழியர்கள், இடைநிலை அதிகாரிகள் குறைந்தபட்ச வாழ்க்கை பாதுகாப்பையோ, வேலை பாதுகாப்பையோ அளிக்கப் போவதில்லை என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணமாகி விட்டது. இச்சூதாட்டப் பொருளாதாரத்தை, அமைப்பாகத் திரண்டு போராடி வீழ்த்துவதை விட்டுவிட்டு, விதியே என்று நமது தலையில் சுமப்பது இனியும் அறிவுடைமையாகாது!
நன்றி: ரஹீம்/புதிய ஜனநாயகம்

தீவிரவாதி பாண்டேவுக்கு டிச. 1 வரை போலீஸ் காவல்

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைதாகியுள்ள தீவிரவாதி சாமியார் தயானந்த் பாண்டேவை டிசம்பர் 1ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மும்பை கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கடந்த 14ம் தேதி உ.பி. மாநிலத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி பாண்டே, மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (எம்.சி.ஓ.சி.ஏ) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று அவர் எம்.சி.ஓ.சி.ஏ. கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது, அவரை போலீஸ் காவலில் விடுவிக்க அனுமதி கோரி தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் ரோஹினி சலியான் கூறுகையில், பாண்டேவின் லேப்டாப் கம்ப்யூட்டரிலிருந்து இரு ஆடியோ கிளிப்பிங்குகள் மற்றும் ஒரு வீடியோ கிளிப்பிங் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் தீவிரவாதி தயானந்த பாண்டே, பெண் தீவிரவாதி பிரக்யா சிங் தாக்கூர், தீவிரவாதி புரோஹித் மற்றும் சில முக்கிய குற்றவாளிகளின் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. வீடியோ கிளிப்பிங்கில், பாண்டே, பிரக்யா, புரோஹித் மற்றும் தீவிரவாதி பேசிக் கொண்டுள்ளனர். அவர்கள் ஆர்.டி.எக்ஸ், வேதிப்பொருட்கள், கையெறி குண்டுகள், பயிற்சி உள்ளிட்டவை குறித்து பேசிக் கொண்டுள்ளனர். ஏதோ ஒரு கோவிலில் வைத்து இவர்கள் பேசியிப்பது தெரிகிறது. அபினவ் பாரத் தீவிரவாதி அமைப்பின் மூலம் ஹிந்துக்களுக்கு பிரசாரத்தை மேற்கொள்வது எனவும் அவர்கள் பேசியுள்ளனர். எனவே பாண்டேவை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். இதைத் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி வரை பாண்டேவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இஸ்லாமிய சேனல் நடத்திய கத்தோலிக்க கிறிஸ்தவர் இஸ்லாமைத் தழுவினார்!!!

"பின்னாட்களில் நாம் ஒளிபரப்பும் சேனலில் என்னவெல்லாம்கூறப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான் இஸ்லாத்தின் உயர்வான போதனைகளை உணர முடிந்தது. பிறகு குர்ஆனை ஆய்வுக்கு எடுத்தேன். நேர்வழிக்கான வாசலை குர்ஆன் எனக்கு திறந்து விட்டது. "
குமரி மாவட்டம் கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாவட்டமாகும். கொள்கைகளால் வேறுபட்டிருந்தாலும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்டத்தில், பாதிரிகள், சமூக நல ஆர்வலர்கள், இளைஞர்கள் என பல கிறிஸ்தவர்களும் இஸ்லாமைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு வருகின்றனர். சமீபத்தில் மோகனன் என்ற கத்தோலிக்க கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் இஸ்லாமைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார். இஸ்லாமைத் தழுவுவதற்கு முன்னரே இஸ்லாமியத் தொலைக்காட்சி நடத்தியவர் அதன் காரணமாகவே இஸ்லாத்தின் பால் கவரப்பட்டிருக்கிறார். சகோதரர் மோகனன் தனது பெயரை காலித் என்று மாற்றம் செய்துள்ளார். அவர் அல்ஜன்னத் இதழுக்கு அளித்த பேட்டியை வாசகர்களுக்காக சமர்ப்பிக்கின்றோம்.
நன்றி: அல்ஜன்னத் நவம்பர் 2008 அல்ஜன்னத்: நீங்கள் இஸ்லாத்தை ஏற்க காரணமான நிகழ்வுகள் குறித்து...
சகோதரர்: கேபிள் டி.வி. தொழில் செய்து வரும் நான், இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் இன்றைய மீடியாக்கள் எதை கற்பிக்கின்றனவோ, அதாவது தீவிரவாதிகள், வன்முறையாளர்கள், பிற்போக்கு மதம் இதுதான் எனது கருத்தாகவும் இருந்தது. எனது கேபிள் நெட்வொர்க் மூலம் இஸ்லாமிய சேனல் என்ற பெயரால் நிகழ்ச்சி நடத்தினால் வருமானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கடந்த பிப்.2008-ல் துவங்கினேன். முஸ்லிம்களுக்கென தமிழில் தனிச் சேனல் இல்லையே என்ற ஏக்கம் முஸ்லிம்களிடம் இருப்பதை அறிந்த நான் அதையே எனது வருமான பெருக்கத்திற்கான வழிமுறையாக தேர்வு செய்தேன். பின்னாட்களில் நாம் ஒளிபரப்பும் சேனலில் என்னவெல்லாம் கூறப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதுதான் இஸ்லாத்தின் உயர்வான போதனைகளை உணர முடிந்தது. பிறகு குர்ஆனை ஆய்வுக்கு எடுத்தேன். நேர்வழிக்கான வாசலை குர்ஆன் எனக்கு திறந்து விட்டது.
அல்ஜன்னத்: தங்கள் குடும்பம் பற்றி...
சகோதரர்: ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சார்ந்த நாடார் கிறிஸ்தவ குடும்பத்தைச் சார்ந்தவன் நான். இஸ்லாத்தை ஏற்றது குறித்து எனது குடும்பத்தில் ஆரம்பத்தில் சில சலசலப்புகள் ஏற்பட்டன. அவ்வளவாக பெரிய அளவு எதிர்ப்பு ஏதுமில்லை.
அல்ஜன்னத்: இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் பற்றி தங்கள் கருத்து...?
சகோதரர்: தஹஜ்ஜத் எனும் ஒரு நடு நிசித் தொழுகை என்னை மிகவும் கவர்ந்த அம்சம். மன அமைதியும் உள்ள ஒற்றுமையும் இதில் ஏற்படுகிறது. துஆக்கள் அங்கீகரிக்கப்படுகிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.
அல்ஜன்னத்: நீங்கள் நடத்தும் இஸ்லாமிக் சேனல் குறித்து..
.சகோதரர்: குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான பயான் சி.டிக்கள் ஒளிபரப்புதல், இஸ்லாமிய அறிஞர்கள், சிந்தனையாளர்களின் பயான் அல்லது அவரது பேட்டிகள் நேரடி (LIVE) ஒளிபரப்பு, இஸ்லாமிய அறிவை வளர்க்கும் விதமாக கேள்விபதில் நிகழ்ச்சிகள், திறமையானவர்களைக் கண்டறிந்து நேர்காணல்... இவ்வாறு பன்முகத் தன்மையுடன் இஸ்லாமிய போதனைகள் மக்களைச் சென்றடைகிறது.
அல்ஜன்னத்: இஸ்லாமிய போதனைகளுடன் முஸ்லிம்களுக்குள்ள தொடர்பு குறித்து உங்கள் பார்வை என்ன?சகோதரர்: குர்ஆன், ஹதீஸ் என்ற முழக்கத்துடன் தவ்ஹீத் என்ற அடை மொழியில் வாழும் முஸ்லிம்கள் 80% தொழுகை போன்ற கடமைகளை நிறைவேற்றுநின்றனர். மற்ற முஸ்லிம்களோ இது விஷயத்தில் 25% மட்டுமே. இந்த ரமலானட முழுவதும் குர்ஆன் கேள்வி பதில் போட்டி ஒன்றை நடத்தினேன். தினமும் 30க்கும் அதிகமானவர்கள் தொலைக்காட்சியில் பதில் கூறுவார்கள். இந்நிகழ்ச்சியில் பிறந்தவுடன் பேசிய நபி யார்? என்ற கேள்விக்கு பதிலேதும் இல்லை. அதே போல் பெருநாள் தினத்தில் ஒரு கேள்வி: - ஸதக்கதுல் ஃபித்ர் எதற்காக? என்ற கேள்விக்கே பதில் இல்லை.
பெருநாள் தினத்துக்கு மறுநாள் ஆளூர் எனும் ஊரில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நான் ஸதகதுல் ஃபித்ர் எதற்காக என்ற கேள்வியைக் கேட்டேன். கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான மக்கள் கூட்டமிருந்த அந்த நிகழ்ச்சியிலும் யாரிடமும் பதில் இல்லை.
இஸ்லாமியர்கள் குர்ஆன், ஹதீஸ் வழியில் இஸ்லாத்தை விளங்க வேண்டும் அதுதான் வெற்றிக்கு வழி.
அல்ஜன்னத்: முஸ்லிம் இளைஞர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

சகோதரர்: முஸ்லிம் உம்மத்திற்கு இன்றைய அவசரத் தேவை இரண்டு விஷயங்கள்: 1. தமிழில் ஒரு இஸ்லாமிய சேனல் துவங்கப்பட வேண்டும். 2. ஒவ்வொரு முஹல்லாவிலும் பைத்துல் மால் எனும் நிதியத்தை துவங்கி தகுதியும், திறமையும் உள்ளவாஸகளுக்கு உதவித் தொகையாகவோ தொழில் கருவியாகவோ அல்லது கடனுதவிகளாகவோ வழங்கப்பட வேண்டும். இன்னபிற நிறுவனங்களையும் சார்ந்து இருப்பதை விட்டுவிட்டு முஸ்லிம் உம்மத் தனது சொந்தக் காலில் நிற்கும் நிலையை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
அபூ அப்திர்ரஹ்மான்

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம்…

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பொயரால் துவங்குகின்றேன்.


1. எல்லாப் புகழும் அல்லாஹவுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.

2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

3. தீர்ப்பு நாளின் அதிபதி.

4. (எனவே) உன்னையே வணங்குகின்றோம். உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்.

5. எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக.

6, 7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.

- அல் குர்ஆன் - 1: 1 - 7