Wednesday, January 28, 2009

இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்கா தவறிழைத்துள்ளது என்பதை ஏற்கிறேன் - ஒபாமா

வாஷிங்டன்: அமெரிக்காவை தங்களது விரோதியாக கருதவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளார் பராக் ஒபாமா.

அமெரிக்கா என்றாலே இஸ்லாமிய நாடுகளில் வெறுப்பு நிலவுகிறது. இதை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஒபாமா.

மத்திய கிழக்கு நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்முதலாக பேட்டி அளித்த ஒபாமா முஸ்லிம் நாடுகளுடன் சமாதானமாக செயல்படுவதையே அமெரிக்கா விரும்புகிறது என்றார்.

'எனது குடும்பத்தில் முஸ்லிம் உறுப்பினர்களும் உள்ளனர். இஸ்லாமிய நாடுகளில் நான் வசித்தவன். இஸ்லாமிய நாடுகளுக்கு விரோதியாக அமெரிக்கா செயல்படுகிறது என்ற கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். அதை புரியவைப்பதே எனது பணி. பரஸ்பர நலன், மரியாதை அடிப்படையில் புதிய கூட்டாளி உறவை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். இதை அரேபிய, இஸ்லாமிய நாடுகள் ஏற்றால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்' என்று பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதில் அமெரிக்கா திடமாக உள்ளது. இப்படிச் செய் என்று கட்டளையிடுவதற்கு பதிலாக மற்றவர் சொல்வதை காது கொடுத்து கேட்பதே நல்லது என்று அமெரிக்கா கருதுகிறது.

பதவியில் அமர்ந்து 100 நாள் ஆனதும் இஸ்லாமிய நாடு ஒன்றின் தலைநகரிலிருந்து இஸ்லாமிய நாடுகளிடம் நேரடியாக நான் பேச விரும்புகிறேன்
எவற்றை அழித்தோம் என்பதை விட என்ன செய்தோம் என்பதை வைத்தே நாம் மதிப்பிடப்படுகிறோம். (முஸ்லிம்களை அழித்தோம் என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமோ...?)
பின்லேடன், ஜவாஹிரி போன்றவர்கள் செய்வது அழிவுவேலைதான். இதனால் மரணமும் அழிவும்தான் விளையும் என்பதை முஸ்லிம் நாடுகளுக்கு புரிந்துவிட்டது. (புஷ்ஷும் அவரது கூலிப்படைகளும் லட்சக்கணக்கான மக்களை அநியாயமாக் கொன்றது மட்டும் ஆக்க வேலையோ...?) முஸ்லிம் நாடுகள் முன்னேற்றம் அடைய தன்னாலான அனைத்தையும் அமெரிக்கா செய்யும். (......!!!!! ....?) அமெரிக்கா தவறிழைத்துள்ளது என்பதை ஏற்கிறேன். (உண்மையை ஒப்புக்கொண்டவரை சரி! பரிகாரம் என்ன..?) பல ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய நாடுகளுடன் அமெரிக்கா வைத்திருந்த நட்புறவு மீண்டும் உருவாக பாடுபடுவேன் என்றார் ஒபாமா.


மகாராஷ்ட்ரா; இது இந்தியாவின் மாநிலமா? இந்துத்துவாவின் மாநிலமா?



இந்துத்துவாவாதிகளுக்கு கொள்கை என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை. தேசியம் என்பார்கள் அந்த தேசியத்தின் ஒரு அங்கமான முஸ்லிம்களை கருவருப்பார்கள். தீவிரவாதத்தை ஒழிப்போம் என்பார்கள் ஆனால் மாலேகான் போன்று குண்டுவைத்து அவர்களே தீவிரவாதிகளாகவும் காட்சிதருவார்கள். ராமராஜ்ஜியம் என்பார்கள் தேர்தல் முடிந்தவுடன் ராமரை, அடுத்த தேர்தல்வரை வனவாசம் அனுப்பிவிடுவார்கள். இந்துக்கள் எந்தப்பிரிவாக இருந்தாலும் அவர்களை பாதுகாப்போம் என்பார்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்துக்க்களாக இருந்தால்கூட அவர்களையும் தாக்குவார்கள். சுருங்கசொன்னால் இந்துத்துவா என்றாலே சுயநலம் என்பதே உண்மை.இதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது அவர்கள்செய்யும் நடவடிக்கைமூலம் உலகுக்கு உணர்த்திவிடுவார்கள்.

சில மாதங்களுக்குமுன் மும்பையில் ரயில்வேத்துறை வேலைவாய்ப்பிற்கான நேர்முகத்தேர்வுக்கு வந்த வட இந்தியர்களையும், மும்பையில் வசித்துவந்த வடஇந்தியர்களையும் மும்பையில் தனிராச்சியம் நடத்திக்கொண்டிருக்கும் ராஜ்தாக்கரேயின் ஆட்கள் அடித்து துவைத்து காயப்போட, விஷயம் பெரியஅளவில் எதிரொலித்தவுடன் ராஜ்தாக்கரே கைதுசெய்யப்பட்டார்.பின்பு, வட இந்தியர்களுக்கு எதிராகப்பேசக்கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கொஞ்சகாலம் அடக்கி வாசித்த ராஜ்தாக்கரே, இருதினங்களுக்குமுன் ஒரு பொதுக்கூட்டத்தில் வட இந்தியர்களை தாக்கிப்பேச, அதையே உத்தரவாக எடுத்துக்கொண்ட அவரின் நவநிர்மான் கட்சியினர், நேற்று நாசிக்கில் ஒரு பள்ளிக்கூடத்தில் குடியரசுதினம் கொண்டாடிக்கொண்டிருந்த வட இந்தியர்களை தாக்கியதில் ஏராளமானோர் படுகாயமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன. மேலும்,இது காவல்துறையின் கண்முன்னேநடந்த வன்முறை என்றும் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 23.அன்று மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒற்றை தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்கிய வழக்கில் சிவசேனா எம்.பி.ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது, சட்டம் பால்தாக்கரே,ராஜ்தாக்கரே கும்பலுக்கு வளைகிறதோ என்ற எண்ணமும், மகாராஷ்டிர மாநிலம் இந்தியாவில் உள்ளதா? என்ற சந்தேகமும் நடுநிலையாளர்களுக்கு ஏற்படுவதில் வியப்பில்லை.

thanks to :நிழல்களும் நிஜங்களும்

Tuesday, January 27, 2009

குட் இந்திய போலீஸ் குட்


டெல்லி: இந்தியாவில் அதிகம் லஞ்சம் வாங்குவதில் காவல்துறை முன்னணியில் இருப்பதாக சர்வதேச நிறுவனம் ஒன்றின் சர்வே தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து இயங்கி வரும் டிரேஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் லஞ்சத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவ்வமைப்பு சார்பில் இந்தியாவில் லஞ்சம் அதிகம் வாங்கும் துறை எது என்ற சர்வே நடத்தப்பட்டது.

கடந்த 2007 ஜூலை 1ம் தேதி முதல் 2008 அக்டோபர் 30ம் தேதி வரையிலான காலத்தில் அதிக லஞ்சம் வாங்கிய இந்திய துறை எது என்பதை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியாவில் கேட்கப்படும் லஞ்சத்தில் 30 சதவீதத்தை போலீஸ் துறையினர் கேட்டுள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு துறையினர் இவர்களை விட 3 சதவீதம் அதிக லஞ்சம் கேட்டாலும் அவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் போலீசுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.



மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தலா 10 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

இது குறித்து இவ்வமைப்பின் தலைவர் அலெக்சாண்ட்ரா விரேஜ் கூறுகையில், சில தவறுகளை மறைக்க பலவந்தமாக லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. அதில் போலீசுக்கு அதிக பங்கிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினருக்கும் இந்த சிக்கல் இருக்கிறது என்றார் அவர்.

அன்று இடித்தவர்கள், இன்று பரிகாரம் தேடுகிறார்கள்!


'அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்?' (திருக் குர்ஆன் 2:114)

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மஸ்ஜிதின் நடுக்கோபுர உச்சியில் கடப்பாரையுடன் நிற்கும் இரண்டு பேர், நினைவிருக்கிறதா?

இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை தன் ஊருக்கு எடுத்துச்சென்று ‘ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்' என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழிக்க வைத்தவர் இன்று இஸ்லாத்தில் இணைந்து 100 பள்ளிவாசல்களையாவது புனர் நிர்மாணம் செய்ய உறுதிபூண்டு தன் பாவத்துக்கு பரிகாரம் தேடும் அதிசயம்!
அவ்விருவரும் இன்று முஹம்மது ஆமிர், முஹம்மது உமர் என்று பெருமையோடு கூறுவதுடன் பல மஸ்ஜிதுகளை கட்டுவதையும், புனர்நிர்மாணம் செய்வதையும் தமது பிறவிப்பலனாக கருதி செய்து வருகின்றனர். இந்த அதிசயம் எப்படி நடந்தது? இவர்கள் முஸ்லிம்களாவதற்கு யார் காரணம்? என்ன காரணம்?

அறிந்து கொள்ள உள்ளே நுழைவோம்!

பல்பீர் சிங் - 6-12-1970-ல், ஹரியானாவிலுள்ள பானிபட் மாவட்டத்திலள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். அவர் தந்தை ஒரு சிறந்த விவசாயி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்பதோடு நல்லவர், மனிதநேயமிக்கவர். பிறருக்கு அநீதம் விளைவிப்பதை கடுமையாக வெறுப்பவர்.

மும்பாய்க்குப் பிறகு 'சிவசேனா' வின் உறுதிமிக்க கோட்டையான பானிபட்டடில் வாலிபர்களும் மாணவர்களும் சிவசேனாவில் ஈடுபட்டிருந்த நேரம் அது.; பானிபட்டில் இன்டர் மீடியேட்டில் படித்துக் கொண்டிருந்த போது பல்பீரசிங்; 'அந்த' இயக்கத்தில் தன்னை பதிவு செய்து சேர்ந்து கொண்டார்.

பானிபட்டில், இந்திய வரலாற்றை எடுத்துக் கூறும் சாக்கில், வாலிபர்களிடையே முஸ்லிம்கள் மீதும், பாபர் போன்ற முஸ்லிம் மன்னர்கள் மீதும் வெறுப்பை ஊட்டப்பட்டது. தனது மகன் ‘அந்த’ இயக்கத்தில் சேர்ந்ததை அறிந்த பல்பீர்சிங்குடைய தந்தை உண்மை சரித்திரத்தை தனது மகனுக்கு புரிய வைக்க முயன்றார். "பாபர் மற்றும் அவ்ரங்கசேப் ஆட்சிக்காலத்தில் இருந்த நீதம், முஸ்லிம் அல்லாதோருடன் அவர்கள் நடந்து கொண்ட நன்னடத்தைகளையும், இந்திய மக்கள் தமக்குள்ளே மோதி இந்நாடு பலவீனப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலேயர்கள் வரலாற்றுத் திரிபுகள் செய்துள்ளனர்" என்கின்ற உண்மையை எடுத்துச் சொல்லியும் தனது மகனை அவரால் திருத்த முடியவில்லை.

1990-ல் அத்வானியின் ர(த்)த யாத்திரையின்போது பானிப்பட்டின் முக்கிப் பொறுப்பு பல்பீர் சிங்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. ர(த்)த யாத்திரையில் வந்த தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை கக்க அந்த நிமிடமே மஸ்ஜிதை இடிக்க எவர் வந்தாலும் வராவிட்டாலும் தான் மட்டுமே சென்று அதை இடித்துத் தரை மட்டமாக்குவதாக சிவாஜியின் மீது சத்திய பிரமானம் எடுக்கிறார் பல்பீர் சிங்.

சிவசேனாவின் ‘இளைஞர் பறக்கும் படை' யின் துணைத்தவைராக பொறுப்பேற்று 1990 அக்டோபர் 30 அன்று அயோத்திக்கு புறப்பட்ட அவரை ஃபஸாபாத்தில் போலீஸார் தடுத்து நிறுத்துகின்றனர். அதையும் மீறி அவரும் அவரது நண்பர்களும் எப்படியோ தப்பி அயோத்திக்குள் நுழைந்து விடுகின்றனர். அதற்கு முன்னர்தான் அங்கு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டிருந்ததால் எவ்வளவோ முயன்றும் அவர்களால் பாபரி மஸ்ஜிதை நெறுங்கக்கூட முடியவில்லை. கோபம் எல்லை மீறியது. அப்பொழுதே உடனே லக்னோ சென்று முலாயம் சிங்கை தனது கரங்களால் சுட்டுப் பொசுக்க அவர் உள்ளம் நாடியது.

அங்கு சோனிப்பட்டின் ஜாட் இனத்துக் கிராமத்தைச் சார்ந்த அவரது நண்பர் யோகேந்திர பாலும் சேர்ந்து கொண்டார். யோகேந்திர பாலின் தந்தை ரகுபீர் சிங் சௌத்ரி பெரும் நிலச்சுவான்தரராக இருந்தார். அவர் எவ்வளவோ தடுத்தும் இவர்கள் சற்றும் பின் வாங்கவில்லை.

டிசம்பர் - 6, 1990 – க்கு முந்தைய இரவு பாபரி மஸ்ஜிதை நெருங்கி அருகிலுள்ள முஸ்லிம்களின் வீட்டு மாடியில் இரவைக் கழித்தனர். தலைவர்களின் உத்தரவை எதிர்பார்க்காமல் கரசேவையை துவங்கி விட அவர் உள்ளம் துடித்தது. அவ்வளவு அவசரம்! இருந்த போதும் குழுத்தலைவர் கட்டுக்கோப்புடன் இருக்கும்படி கூறி தடுத்து விட்டார்.

இந்நிலையில் கரசேவகர்ளுக்கிடையில் உமாபாரதி உரை நிகழ்த்தினார். அவரது உரையை கேட்டதுமே பல்பீர் சிங்கும் அவரது நண்பர்களும் தங்கியிருந்த வீட்டின் மாடியிலிருந்து இறங்கி கடப்பாறையுடன் மஸ்ஜிதின் முகட்டில் ஏறினர். உமாபாரதி ம்… ஏக், தோ, பாபர் மஸ்ஜித் தோடுதோ! (ஒன், டூ … இடியுங்கள் பாபர் மஸ்ஜிதை) என்று முழங்க அந்த நாசகாரக் கும்படலுன் பல்பீர் சிங்கும் மஸ்ஜிதின் நடுக்கோபுரத்தின் மீது கடப்பாறையை செலுத்தி கொக்கரித்தபடி இடித்துத் தரை மட்டமாக்குகிறார்.

அதற்குப்பிறகு அந்த இடத்தில் சிலையை நட்டு விட்டு திரும்புகின்றனர். திரும்பும்போது இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் இரு செங்கற்களை உடன் எடுத்துச் செல்கின்றனர். அச்செங்கற்களை பானிபட்டில் தனது மற்ற நண்பர்களிடம் காட்டி பாராட்டையும் பெறுகின்றனர். சிவசேனா அலுவலகத்தில் அக்கற்கள் வைக்கப்பட்டு ஒரு விழாவே நடந்தது.

இந்நிகழ்வுகள் அனைத்தும் தெரிய வந்தபோது பல்பீர் சிங்கின் தந்தை மிகவும் கோபமுற்றார். தனது மகனிடம், "இப்போது இந்த வீட்டில் நீயும் நானும் ஒன்றாக இருக்க முடியாது. இறைவனின் இல்லத்தை இடித்தவனின் முகத்தை நான் பார்க்க மாட்டேன். எனது மரணம் வரும் வரை உன் முகத்தைக் காட்டாதே" என்று உறுதிபடக் கூறிவிட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பல்பீர் சிங் பானிபட்டில் தனக்கு கிடைத்த மரியாதையை அவரிடம் எடுத்துச் சொல்லியும் அவரது கோபம் தணியவில்லை. "இத்தகைய அநியாயக்காரர்களினால் இந்த நாடே அழிந்து போகும்" என்று கூறியவராக வீட்டை விட்டு வெளியேற தயாரானார். தந்தையின் கோபத்தைக் கண்ட பல்பீர் சிங் தானாகவே அவ்வீட்டை விட்டு வெளியேறி பானிபட்டில் தங்கினார்.

அதற்குப்பிறகு நடந்த சம்பவங்களைப்பற்றி அவரே கூறுகிறார், கேளுங்கள்:

நான் முஸ்லிமாவதற்கு படிப்பினையாக இருந்த எனது நண்பன் யோகேந்திரபாலின் சம்பவத்தை முதலில் சொல்கிறேன். பிறகு என் சம்பவத்தை கூறுகிறேன். எனது நண்பன் யோகேந்திரபாலும் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை எடுத்து வந்திருந்தான். 'ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்’ என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தான். மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழித்தனர். இங்குதான் ‘மஸ்ஜிதின் எஜமானன் அல்லாஹ் தான் யார் என்பதை நிரூபித்தான்'.

இறையாலயத்தின் செங்கல் மீது சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய நான்கைந்து நாட்களுக்குப்பின் யோகேந்திரபாலுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. தனது ஆடைகளை சுற்றி எறிந்துவிட்டு நிர்வாணமாக அலைந்தான். இவன் கண்ணியமிக்க ஜமீன்தாரின் ஒரே மகன். பைத்தியம் முற்றி தாயின் ஆடையை உரிந்து தவறான செயலில் ஈடுபட முயன்றான். பலமுறை இத்தீய எண்ணத்தில் பெற்ற தாயை கட்டியணைத்தான். அவனது தந்தை பரிதவித்து மந்திரிப்போர் பலரிடம் தன் மகனை காட்டினார். தானதர்மங்கள் செய்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார்.


ஆனால், யோகேந்தர் நிலை மென்மேலும் மோசமடைந்தது. மீண்டும் ஒரு முறை பெற்ற தாயை உடலுறவு கொள்ள அவன் முயன்றபோது தாயாரின் கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் ஓடி வந்து தாயை காப்பாற்றினர். நிலைமை மிக மோசமானதால் யோகேந்தர்பால் சங்கிலியால் கட்டப்பட்டான். மக்களிடம் மதிப்பு மிக்க அவனது தந்தை அவனை சுட்டுக்கொல்ல நாடினார். அப்போது ஒருவர் ‘சோனிபட் ஈத்காவில் ஒரு மதரஸா உள்ளது. அங்கு பெரிய மவ்லானா ஒருவர் வந்து செல்கிறார். கடைசி முயற்சியாக அவரிடம் சென்று உங்கள் பிரச்சனையை கூறுங்கள். அங்கும் பிரச்சனை தீரவில்லை என்றால் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்' என்று கூறினார்.


சோனிபட்டில் நடந்தது என்ன?

ஆனால் அவரால் பெரிய மவ்லானா(கலீம் சித்தீக்கி)வை சந்திக்க முடியவில்லை. மகனை சங்கிலியால் கட்டிக்கொண்டு டில்லி-பாவானாவின் இமாம் மவ்லானா பஷீர் அஹ்மதை சந்தித்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு பஷீர் அஹ்மது இப்படிச் சொன்னார். தற்போதைய நிலைமை மோசமாக இருப்பதால் டிசம்பர் 6 க்கு (1992) முன்பே ஹரியானாவின் பல இமாம்கள், ஆசிரியர்கள் உ.பி.யிலுள்ள தங்களது வீடுகளுக்கு திரும்பி விட்டனர். இந்நிலையில் இம்மாதம் முதல் தேதிதான் பெரிய மவ்லானா (கலீம் சித்தீக்கி) கவலையுடன் உரையாற்றினார்கள். அதில் முக்கிய சில வரிகளைக் கூறுகிறேன்.

‘முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ், இஸ்லாம், மஸ்ஜித், இறைத்தூது பற்றி முன்பே எடுத்துக் கூறியிருந்தால் இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்காது. எனவே பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதில் முஸ்லிம்களும் ஒரு விதத்தில் குற்றவாளிகளே! ஆகவே. இப்பொழுதாவது நாம் உணர்வு பெற்று அழைப்பப்பணியில் ஈடுபட்டால் மஸ்ஜிதை இடித்தவர்களே மஸ்ஜிதை நிர்மாணிப்பவர்களாக, புனர் நிர்மாணம் செய்பவர்களாக மாறிடுவர். ஏனெனில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யா அல்லாஹ்! என் சமூக மக்களுக்கு நேர்வழி காட்டு, அவர்கள் அறியாதவர்களாக உள்ளனர்’ என்று பிரார்த்தித்தார்கள் - என்று பெரிய மவ்லானா குறிப்பிட்டார்கள்.

உங்கள் மகனுக்கு சூனியம் எதுவும் இல்லை. இது எஜமானனின் தண்டனைதான். ஆகவே, நாளை மறுநாள் புதன் கிழமை மவ்லானா கலீம் சித்தீக்கி இங்கு வரும்போது உங்கள் மகனின் நிலையை கூறுங்கள். அவர் சரியாக்கி விடுவார் என்று நம்பிக்கை உள்ளது என்றார் பஷீர் அஹ்மது. அதற்கு யோகேந்தர்பாலின் தந்தை என் மகன் குணமடைந்து விட்டால் நான் எதையும் செய்ய தயாராக உள்ளேன் என்று பதிலளித்தார்.

புதன் கிழமையன்று ஜமீன்தார், சங்கிலியால் கட்டப்பட்டு அரை நிர்வாணக் கோலத்துடன் இருந்த தன் மகன் யோகேந்தர்பாலுடன்; மல்லானாவை சந்தித்தார். அவர் சொன்ன அனைத்தையம் கேட்டுக்கொண்ட மவுலானா கலீம் சித்தீக்கி ‘உங்கள் மகன் இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் இல்லத்தை இடித்த மாபெரும் அநீதி இழைத்துள்ளான். இத்தண்டனை இவர் ஒருவருக்கு கிடைத்தது மிகவும் குறைவுதான். நாங்களும் அந்த இறைவனின் அடிமைகளே! மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு இறையில்லம் என்றால் என்னவென்பதை எடுத்துரைக்க நாங்கள் தவறிவிட்டதால், இப்பெரும் அநீதத்திற்கு நாங்களும் ஒருவிதத்தில் காரணமாக உள்ளோம். இப்போது எதுவும் எங்கள் கையில் இல்லை. ஒரே ஒரு வழி மட்டும்தான் உள்ளது. அந்த ஏக இறைவனின் சமூகத்தில் அழுது மன்றாடுங்கள். நாங்களும் மன்னிப்பு வேண்டுகிறோம். இம்மஸ்ஜிதின் நிகழ்ச்சி முடிவுறும் வரையில் நீங்கள் இறைவனிடம் ‘இறைவா! என் சிரமத்தை உன்னைத்தவிர வேறு எவராலும் நீக்க முடியாது’ என்று மாசற்ற உள்ளத்துடன் மன்றாடி பிரார்த்தித்துக் கொண்டே இருங்கள் என்று கூறிவிட்டு மஸ்ஜிதுக்குள் சென்று தொழுதார்;. சிறிதுநேரம் உரையாற்றி துஆ செய்ததுடன் மற்றவர்களையும் ரகுபீர்சிங் - யோகேந்தர்பால் ஆகியோருக்காக துஆச் செய்ய கூறினார். நிகழ்ச்சிக்குப்பின் மஸ்ஜிதிலேயே உணவு பரிமாறப்பட்டது.

உணவு முடித்து வெளியே வந்தால் அனைவருக்கும் மிகப்பெரும் ஆச்சர்யம்! அல்லாஹ்வின் கிருபையை என்னவென்பது! இத்துனை நாட்களாக நிர்வாணத்துடன் திரிந்து கொண்டிருந்த யோகேந்தர்பால் திடீரென தன் தந்தையின் தலைப்பாகையை கழற்றி தனது உடலை நன்கு மறைத்து தந்தையுடன் சாதாரண மனிதன் போல் பேசிக் கொண்டிருந்தான். பைத்தியம் தெளிந்த அவனைக்கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி. ஜமீன்தார் ரகுபீர்சிங்கிற்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி.

இஸ்லாத்தை தழுவுவதற்காக ரகுபீர்சிங் மஸ்ஜிதுக்குள் நுழைய விழைந்ததைக் கண்ட யோகேந்தர்பால் ‘தந்தையே! சற்றுப்பொறுங்கள்! உங்களுக்கு முன் நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். பாபரி மஸ்ஜிதை நான் திரும்பவும் கட்ட வேண்டும்’ என்று கூறினார். பிறகு இருவரையும் ஒளு செய்ய வைத்து கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டது. ரகுபீர்சிங் - முஹம்மது உஸ்மானாக, யோகேந்தர்பால் - முஹம்மது உமர் ஆக மாறிவிட்டார்கள். இருவரும் சந்தோஷமாக ஊர் திரும்பினார்கள்.

தமது ஊர் திரும்பியவர்கள் முதல் வேலையாக அவ்வூர் மஸ்ஜிதின் இமாமை சந்தித்து தாங்கள் முஸ்லிமாகிவிட்ட விபரத்தை தெரிவித்தனர். இமாம் இச்சம்பவங்களை மக்களிடம் எடுத்துக்கூற அந்த பகுதி முழுவதும் செய்தி பரவியது. ஹிந்துக்களுக்கு இச்செய்தி மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களில் சிலர் அவசரமாக ஆலோசனை செய்து இவ்விருவரையம் அன்று இரவே கொன்றுவிட வேண்டும் முடிவு செய்தார்கள். இல்லையேல் பலரும் இஸ்லாத்துக்கு மாறிவிடுவார்கள்' என்ற பயம் அவர்களுக்கு! அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் இச்செய்தியை இமாம் ஸாஹிபிடம் தெரிவித்து விட்டதால் அல்லாஹ்வின் அருளால் அன்ற இரவே அவர்கள் இருவரும் ஊரைவிட்டு வெளியேறி புலத் சென்று சிலநாட்களுக்குப்பின் 40 நாள் ஜமா அத்தில் சென்று விட்டனர்.
முஹம்மது உமர் ஜமாஅத் அமீரின் ஆலோசனைப்படி மேலும் 4 மாதங்கள் ஜமாஅத்தில் சென்று விட்டார். இதன் தொடராக அவரது தாயாரும் முஸ்லிமாகிவிட்டார். டில்லியில் சிறந்ததொரு முஸ்லிம் குடும்பத்தில் முஹம்மது உமருக்கு திருமணமும் நடந்தது. தற்போது அனைவரும் மகிழ்ச்சியடன் டெல்லியில் வசிக்கின்றனர். சொந்த ஊரிலுள்ள சொத்துக்களை விற்று டெல்லியில் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர்.

முஹம்மது உமர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி, தான் இஸ்லாத்தை எற்ற நிகழ்ச்சியின் முதல் பகுதிதான் என்று கூறும் முஹம்மது ஆமிர் (பல்பீர்சிங்) இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு எப்படி?

கேள்வி: உங்கள் நண்பர், அவர் தந்தையின் இஸ்லாம் பற்றி கூறினீர்கள். நீங்கள் இஸ்லாத்தை தழுவியதைப்பற்றி கூறுங்களேன்?

பதில்: முஹம்மது உமர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி நான் இஸ்லாத்தை ஏற்ற நிகழச்சியின் முதல் பகுதிதான். இதோ நான் இஸ்லாத்தை ஏற்றதை கூறுகிறேன்! கேளுங்கள்.

9-மார்ச் 1993-ல் எனது தந்தை திடீரென மாரடைப்பால் மரணித்து விட்டார். பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் அதில் நான் பங்கெடுத்ததும் அவரை மிகவும் பாதித்திருந்தது. அவர் என் தாயரிடம்,

"இறைவன் நம்மை ஏன் முஸ்லிமாக படைக்கவில்லை?

முஸ்லிம் குடும்பத்தில் பிறந்திருப்பின் குறைந்த பட்சம் அநீதம் இழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவனாகியிருப்பேனே?

அநீதி இழைக்கும் கூட்டத்தாரில் நம்மைபிறக்கச் செய்து விட்டானே?" என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் தான் இறந்த பிறகு தனது இறுதி சடங்கில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்றும்,

தனது சடலத்தை அநீதம் செய்யும் கூட்டத்தாரின் வழமை போல் எரிக்கக் கூடாது

ஹிந்துக்களின் அடக்கஸ்தலங்களுக்கும் எடுத்துச் செல்லக்கூடாது.

மண்ணில் புதைத்துவிடுங்கள் அல்லது தண்ணீரில் மூழ்கடித்து விடுங்கள் என்று தமது ஆசையை வெளிப்படுத்துயிருந்தார். (மறுமையில் இவர்களின் நிலை என்ன என்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான்)

எங்களது வீட்டினர் அவரது ஆசைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்தனர். எட்டு தினங்களுக்குப் பிறகே அவரது மரணச் செய்தியை கேள்விப்பட்ட நான் மிகவும் நொடிந்துவிட்டேன். என் உள்ளம் நொறுங்கிவிட்டது.

"அவர் இறந்த பிறகுதான் பாபரி மஸ்ஜிதை இடித்தது எனக்கு அநீதியாகப்பட்டது எனது பெருமை அனைத்தும் கைசேதமாக தெரிந்தது."

நான் மிகவும் மனம் வெதும்பி எனது இல்லம் சென்றடைந்தபோது எனது தாய் என் தந்தையின் கவலையை பிரஸ்தாபித்து அழுது கொண்டிருந்தார்;. ஒரு சிறந்த தந்தையை துன்புறுத்தி கொன்றுவிட்டாயே! நீ ஒரு மனுஷனா? என்று இடித்துரைத்தார். இதன் பின் வீட்டிற்கு செல்வதை நிறுத்திக் கொண்டேன்.

யோகேந்தர்பாலுடன் சந்திப்பு

ஜுன், 1993-ல் முஹம்மது உமர் (யோகேந்தர்பால்) ஜமா அத்திலிருந்து பானிபட் வந்து என்னை சந்தித்தார். தனது சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறினர். இரண்டு மாதங்களாக வானிலிருந்து ஆபத்து ஏதும் எனக்கு இறங்கிடுமோ என்று பயந்தேன். தந்தை இறந்த கவலையும் பாபரி மஸ்ஜித் இடிப்பும் என்னை வாட்டி வதைத்தன. முஹம்மது உமரின் சம்பவம் கேட்டு மேலும் கலக்கம் அடைந்தேன்.

ஜுன், 23ஆம் தேதி மௌலானா கலீம் சித்தீகி அவர்கள் சோனிபட் வரவிருப்பதாகவும் அவர்களை சந்தித்து அவர்களுடன் சில நாட்கள் தங்குவது தான் சிறந்தது எனவும் முஹம்மது உமர் மிகவும் வலியுறுத்தி கூறினார். நான் மௌலானாவை சந்திக்க திட்டமிடலானேன் எனினும் நான் சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது எனக்கு முன்பாகவே முஹம்மது உமர் சென்று என்னை பற்றிய முழு விபரத்தையும் மௌலானாவிடம் தெரியப்படுத்திவிட்டார்.

நான் மௌலானாவிடம் சென்ற போது மிகவும் அன்புடன் வரவேற்றார்கள். மேலும் யோகேந்தர்பாலுக்கு அல்லாஹ் தண்டனை அளித்தது போல் நீங்கள் செய்த பாவத்திற்கும் அல்லாஹ் தண்டனை அளித்திருக்க முடியும். அதே சமயம் இவ்வுலகில் தண்டனை கிடைக்காவிட்டாலும் மறுமையின் தண்டனை நிரந்தரமானது அத்தண்டனை எப்படியிருக்குமென உமது சிந்தனைக்கே எட்டாது என்றார்கள்.

முஸ்லிமாவதே தீர்வு:

ஒரு மணி நேரம் மௌலானவுடன் அமர்ந்த பின் "இறை வேதனையிலிருந்து தப்ப முஸ்லிமாகுவதே தீர்வு என தீர்மானித்தேன்" மௌலானா இரண்டு நாட்கள் பயணத்தில் செல்லவிருப்பதை அறிந்து நானும் உடன் வருகிறேன் என்றேன். அவர்களும் சம்மதித்தார்கள். டில்லி, ஹரியானா, கூர்ஜா ஆகிய இடங்கள் சென்று ‘புலத்’ வந்தோம் இதற்கிடையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள நான் தயாராகிவிட்டேன். இந்த எனது எண்ணத்தை சகோதரர் உமரிடம் கூறிய போது அவரும் சந்தோஷப்பட்டு மௌலானவிடம் தெரிவித்தார்.

"அல்ஹம்துலில்லாஹ்! ஜுன் 25, 1993 அன்று லுஹர் தொழுகைக்குப்பின் புனித இஸ்லாத்தை தழுவினேன். மௌலானா எனக்கு முஹம்மது ஆமிர் என்று பெயரிட்டார்கள்.

தொழுகை மற்றும் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள என்னை புலத்தில் தங்கியிருக்க மௌலானா ஆலோசனை அளித்தார்கள் எனது மனைவியும், சிறு குழந்தையும் தனியாக இருப்பதை கூறியபோது எனக்காக ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்தார்கள். நான் சில மாதங்கள் புலத்தில் குடும்பத்துடன் தங்கி எனது மனைவிக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னேன். அல்ஹம்துலில்லாஹ்! மூன்று மாதத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

கேள்வி: உங்களது தாய் உங்கள் மீது வருத்தத்தில் இருந்ததால் நீங்கள் இஸ்லாத்தைத் தழுவியதைப் பற்றி என்ன கூறினார்?

பதில்: நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை கூறிய போது மிகவும் சந்தோஷமடைந்து இப்போது தான் உன் தந்தையின் ஆத்மா சாந்தியடையும் என்று கூறினார். அதே வருடம் என் தாயாரும் இறைவன் அருளால் முஸ்லிமாகிவிட்டார்.

கேள்வி: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

பதில்: "அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை இடித்ததற்கு பகரமாக பாழடைந்த மஸ்ஜிதுகளை நான் புதுப்பிக்க வேண்டும். சகோதரர் உமர் புதுப்பள்ளிகளை உருவாக்க வேண்டும்" என்று நாங்கள் இருவரும் உறுதி எடுத்துக் கொண்டோம். மேலும் இப்பணியில் ஒருவருக் கொருவர் துணையாக இருந்து வாழ்நாளில் மஸ்ஜிதுகளை உருவாக்கவும், 100 மஸ்ஜிதுகளை புதுப்பிக்கவும் இலக்கு நிர்ணயித்தோம்.

அல்ஹம்துலில்லாஹ்! டிசம்பர் 6-2004க்குள்- இந்தப்பாவி ஹரியானா, பஞ்சாப், டில்லி, மீரட், கேன்ட் ஆகிய இடங்களில் பாழடைந்த அபகரிக்கப்பட்ட 13 மஸ்ஜித்களை புனர் நிர்மாணம் செய்துள்ளேன். சகோதரர் உமர் என்னையும் விஞ்சி 20 மஸ்ஜித்களை கட்டி முடித்து 21வது மஸ்ஜிதுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்."

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று நான் பாழடைந்த ஒரு மஸ்ஜிதில் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். சகோதரர் உமர் புதுப்பள்ளிக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்! எந்த வருடமும் எங்களுக்கு தவறவில்லை. எனினும் 100 என்ற இலக்கு தூரமாகவே உள்ளது. இவ்வாண்டு 8 பள்ளிகள் பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது. சில மாதங்களில் அங்கும் தொழுகை ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

சகோதரர் உமர் என்னைவிட ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் உள்ளார் எனது பங்கும் அவருக்குரியதே என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் என்னை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததே அவர்தான்.

தற்சமயம் நான் ‘ஜுனியர் ஹைஸ்கூல்’ நடத்தி வருகிறேன். இஸ்லாமிய போதனைகளுடன் ஆங்கிலவழிக் கல்வியும் உள்ளது.

கேள்வி: நீங்கள் முஸ்லிமான பிறகு உங்களது தாயார் முஸ்லிமாகிவிட்டார்கள் சரி. உங்கள் குடும்பத்தில் வேறு யாரும் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்களா?

பதில்: எனது மூத்த சகோதரரின் மனைவி நான்கு வருடங்களுக்கு முன் மரணித்துவிட்டார். நான்கு சின்னஞ்சிறு குழந்தைகள் அவரக்குண்டு. அதில் ஒரு குழந்தை ஊனம். எனக்கு பிறகே அண்ணணுக்கு திருமணம் நடந்தது. எனது அண்ணி சிறந்த பெண்ணாகவும் முன்மாதிரி மனைவியாகவும் நடந்து கொண்டதினால் அவரது மரணத்தால் எனது அண்ணன் மிகவும் பாதிக்கப்பட்டார். அவரது பிள்ளைகளை என் மனைவியே பராமரித்து வந்தார். என் மனைவியின் இச்சேவையினால் எனது அண்ணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

நான் அவருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தேன் என் தந்தையின் மரணத்திற்கு நான் காரணமாக இருந்ததால் அவர் என்னை நல்ல மனிதராகவே கருதவில்லை.

ஸஹாபாக்கள் செய்தது போன்ற தியாகம்

நான் என் மனைவியிடம் "நம் பிள்ளைகள் பெரிய பிள்ளைகள் என் சகோதரர் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளார். எனவே நான் உன்னை விவாகரத்து செய்து நீ இத்தா காலம் முடிந்தபின் என் சகோதரர் முஸ்லிமாக தயாராகிவிட்டால் அவரை நீ திருமணம் செய்துகொள். இது இருவரின் வெற்றிக்கும் வழிகோலாகும் என்றேன்".

ஆரம்பத்தில் சம்மதிக்காத எனது மனைவி விளக்கிக் கூறியவுடன் ஏற்றுக்கொண்டார். எனது அண்ணனிடமும் நீங்கள் முஸ்லிமாகி குழந்தைகளின் வாழ்க்கைக்காக எனது மனைவியை திருமணம் செய்து கொள்ளுங்கள். அவள் தன் பிள்ளைகளைப் போன்று உங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்வாள் என்றேன் ஊராரை பயந்து தயங்கிய என் சகோதரரும் பிறகு சம்மதித்தார்.

பிறகு என் மனைவியை தலாக் கூறிவிட்டேன். இத்தா கழிந்த பிறகு என் சகோதரருக்கு கலிமா சொல்லிக்கொடுத்து அவருடன் திருமணமும் செய்து வைத்தேன். அல்ஹம்துலில்லாஹ்! அவர் இப்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். எனது குழந்தையும் அவருடனேயே வசிக்கிறது.மௌலானா அவர்களின் ஆலோசனைப்படி புதிதாக இஸ்லாத்தை ஏற்ற வயதான ஒரு பெண்ணை நான் திருமணம் செய்து அல்ஹம்துலில்லாஹ்! சந்தோஷமாக வாழந்து வருகிறோம். (சுப்ஹானல்லாஹ்! ஈமானில் உறுதியிருந்தால் இன்றும் ஸஹாபாக்களின் மலைக்க வைக்கும் தியாகங்களை மீண்டும் பிரதிபலிக்க முடியும் என்பதை முஹம்மது ஆமிர் உணர்த்தி விட்டார்.)

கேள்வி : நீங்கள் முஸ்லிம் சகோதரர்களுக்கு கூற விரும்புவதென்ன?

பதில் : 1. முஸ்லிம்கள் தமது வாழ்வின் இலட்சியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

2. இஸ்லாத்தை மனிதகுலத்திற்காக நம்மிடம் ஒப்படைக்கபட்ட அடைக்கலப்பொருளாகக் கருதி அதை முழு மனித சமுதாயத்திற்கும் சேர்த்து வைக்கவேண்டும்.

3. ஒரு சில இஸ்லாமிய விரோதிகளை பார்த்து மற்ற மக்களையும் அவ்வாறு எடை போடாதீர்கள். அவர்களிடம் பழிவாங்கும் எண்ணத்தை மேற்கொள்ளாதீர்கள்.

4. பாபர் மஸ்ஜித் இடிப்பில் கலந்து கொண்ட சிவசேனா, பஜ்ரங்தள் மற்றுமுள்ள ஹிந்து சகோதரர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம்கள் யார்? குர்ஆன் என்பது என்ன? மஸ்ஜித்தின் மகத்துவம் என்ன? போன்ற விபரங்கள் உண்மையான முறையில் தெரிந்திருக்குமேயானால் நிலைமையே வேறு ஒவ்வொரு ஹிந்து சகோதரரும் பள்ளியை கட்டும் எண்ணம் கொண்டிருப்பார். பள்ளியை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லாது போயிருக்கும் இது அனுபவப்பூர்வமான உண்மை.

5. பால் தாக்கரே, வினய் கட்டியார், உமா பாரதி, அசோக்சிங் கால் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கு இஸ்லாத்தின் உண்மை நிலை தெரிந்திருக்குமேயானால் நிச்சயமாக அத்தலைவர்களில் ஒவ்வொருவரும் தமது சொந்தப்பணத்தில் பாபர் மஸ்ஜிதை நிர்மாணிப்பதை தங்கள் வாழ்க்கையில் தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் பேறாக கருதியிருப்பர்.

6. நாட்டில் முஸ்லிம் விரோதிகளாக வலம் வருபவர்கள் 100கோடி ஹிந்துக்களில் ஒரு இலட்சம் கூட இருக்க மாட்டார்கள். ஒரு இலட்சம் என்பதே அதிகம் தான் 99 கோடியே 99 இலட்சம் மக்கள் என் தந்தையைப் போன்று மனிதநேய நண்பர்களாக, இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை உளமாற நேசிப்பவர்களாகவே இருக்கின்றனர்.

என் தந்தை (ஃபித்ரத்) படைப்பால் முஸ்லிமாக இருக்க வில்லையா? முஸ்லிம்கள் அவருக்கு தீனை எடுத்துரைக்காததினால் நிராகரிப்பிலேயே இறந்துவிட்டார். இது என் மீதும் என் தந்தை மீதும் முஸ்லிம்கள் செய்த மிகப்பெரும் அநீதியல்லவா?

பாபர் மஸ்ஜிதை இடித்த என்னைவிட அநியாயக்காரர்கள் யாருமிருக்க முடியாது என்பது மறுக்கவியலாத உண்மை. ஆனால் என்னைவிட கொடுமைக்காரர்கள் யார் தெரியுமா? முஸ்லிம்கள்தான் அழைப்புப்பணியில் அவர்களின் அலட்சியம் பொடுபோக்கு என் பிரியமான தந்தையை நரகிற்கு தள்ளிவிட்டது.

7. மௌலானா கலீம் சித்தீகி அவர்கள் "இஸ்லாம் முஸ்லிம்கள் பற்றி அறியாத காரணத்தினால் தான் பாபர் மஸ்ஜிதை இடித்துள்ளனர்’ என்று கூறியது முற்றிலும் உண்மை.

ஆம்! நாங்கள் அறியாமையால் தான் இந்த அநியாயத்தை கையாண்டோம். ஆனால் முஸ்லிம்கள் அறிந்து கொண்டே அம்மக்கள் நரகம் செல்ல காரணிகளாக இருக்கின்றனர்.

என் தந்தை நிராகரிப்பில் மரணித்துவிட்டார் என்ற எண்ணம் இரவில் ஏற்பட்டுவிட்டால் என் தூக்கம் பறந்துவிடும் வாரக்கணக்கில் தூக்கம் வராது தூக்க மாத்திரை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்படுவேன்.

இந்த வேதனையை, வலியை முஸ்லிம்கள் உணர வேண்டுமே!

நன்றி: மனாருல் ஹுதா

Monday, January 26, 2009

தமுமுக தலைமையகத்தில் குடியரசு தினவிழா



சென்னை, மண்ணடி, வட மரைக்காயர் தெருவிலுள்ள தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழக தலைமையகத்தில் நமது நாட்டின் 59வது குடியரசு தின விழா நடைபெற்றது. தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கொடியேற்றியேற்றினார். கொடியேற்றிய பின்னர் உரையாற்றிய தமுமுமு தலைவர் ''நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் தமிழ்நாடு முஸ்­ம் முன்னேற்றக் கழகம் மகிழ்ச்சி அடைகின்றது.


250 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நிலவிய வெள்ளை ஏகாதிபத்திய ஆதிக்கத்தை இந்துக்கள் முஸ்­ம்கள் கிறிஸ்த்தவர்கள் சீக்கியர் என நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் தோளோடு தோள் நின்று அளப்பரிய தியாகம் செய்ததினால் முறியடித்து 1947ல் விடுதலைப் பெற்றோம். அத்தகைய ஒற்றுமை உணர்வும், நல்­ணக்கப் பண்பாடும் இந்தக் காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியமாகும்.


குடியரசு தினம் நாம் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்பதை மீண்டும் பிரகடனம் செய்யும் தினமாகும். இத்தினத்தில் நாட்டின் இறையாண்மையை காக்கவும், நாட்டில் தீவிரவாத சிந்தனை வேரறுக்கப்படவும், அனைத்து சமூகங்களிடையே நல்­ணக்கம் மேலோங்கவும் அனைவரும் ஒன்றுபட்டுப் பாடுபட உறுதி எடுத்துக் கொள்வோமாக'' என்று அவர் கூறினார்.


இந்நிகழ்ச்சியின் போது தமுமுக துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் எம். தமிமுன் அன்சாரி, அப்துஸ் சமது, மாநில உலமா அணிச் செயலாளர் எஸ்.பி. யூசுப், மாநில தொண்டரணிச் செயலாளர் முகம்மது ரஃபி தலைமைக் கழக பேச்சாளர் கோவை செய்யது மற்றும் வட சென்னை மற்றும் தென் சென்னை தமுமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் உரிமை குடும்பகத்தினர்களும் முன்னிலை வகித்தனர்

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்! - பகுதி 4



தாக்கியவர் இருவர், தாக்குதல் நடந்தது நான்கு இடங்களில்!

கார்கரே கொலை செய்யப்படுவதற்குச் சற்று முன்பு மருத்துவமனையில் நடந்த தாக்குதலைக் குறித்து காவல்துறை கூறுவதற்கு மாற்றமாக காமா மருத்துவமனையிலுள்ள ஊழியர்கள் வேறு விதமாகக் கூறுகின்றனர். "தீவிரவாதிகள் தூய மராத்தி மொழியில் பேசினர்" என மருத்துவமனை ஊழியர்கள் கூறியதன் தொடர்ச்சியாகும் இது.

யூனிஃபார்மில் இருந்த மருத்துவமனை செக்யூரிட்டிகளைக் கொன்ற கொலையாளிகள், யூனிஃபார்மில் இல்லாத மற்றொரு நபரையும் கொன்றனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையின் மேல்மாடியில் ஏறினர். லிஃப்ட் ஆபரேட்டர் டிக்கே என்பவர் அவர்களை மேல் மாடிக்குக் கொண்டு சென்றார். சற்று நேரத்தில் சுமார் எட்டு பேரடங்கிய காவல்துறைக் குழு ஒன்று, தீவிரவாதிகளை எதிர்கொள்ள மருத்துவமனை வந்தடைந்தது. அவர்களுக்கும் மேல்மாடிக்கான வழிகாட்டியாக அதே லிஃப்ட் ஆபரேட்டரே உடன் சென்றார். காவல்துறையினரில் ஒருவர் இரும்பு போன்ற ஒரு துண்டை எடுத்து டெரஸ்ஸில் எறிந்தார். லிஃப்ட் ஆபரேட்டர் தாமதிக்காமல் கீழே ஓடினார். தொடர்ந்த சுமார் 45 நிமிடங்களுக்கு மேல்மாடியில் துப்பாக்கி சூடும் சப்தம் கேட்டது. A.C.P. ஸ்தானந்த் தத்தாவிற்குக் காயம் ஏற்பட்டது. அப்போது மருத்துவமனை வார்டுகளிலிருந்த நோயாளிகள், விளக்குகளை அணைத்து விட்டு மூச்சையடக்கிப் பிடித்தபடி பயந்து நடுங்கியபடி இருந்தனர். ஆனால், காவல்துறையினர் சற்று நேரத்தில் வெறுங்கையுடன் கீழே இறங்கி வந்தனர். தாக்குதல் நடத்திய கொலையாளிகள் எப்படித் தப்பித்தனர் என்பதைக் குறித்து எவ்வித விவரமும் இல்லை. இதே ஸதானந்த் தத்தாவிற்குத்தான் தீவிரவாதிகளுடனான போராட்டத்தில் காயமேற்பட்டதாகவும் "உடனடியாக காமா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்" என்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கிடைத்த தகவலின்படி ஸலஸ்கர் காமா மருத்துவமனை வந்தார். கார்கரேவிற்கும் இதுபோன்றதொரு தகவல் கிடைத்திருந்தது.

காமா மருத்துவமனைக்கு அருகில் பணியிலிருந்த துர்குடா என்ற சப்-இன்ஸ்பெக்டரின் மொழியினை அடிப்படையாக வைத்து இதே போன்ற, கீழ்க்காணும் செய்தியை டிசம்பர் 2 நாளிட்ட டி.என்.எ என்ற பத்திரிகைத் தெரிவிக்கிறது:

"காமா மருத்துவமனைக்கு அருகிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் துப்பாக்கி சூடு நடப்பதாக மூச்சிரைக்க ஓடியபடி ஒரு சிறுவன் தன்னிடம் வந்து கூறியதாக இன்ஸ்பெக்டர் கூறுகிறார். ஆனால், அதனைக் காவல்துறை கண்டுகொள்ளவில்லை. காமா மருத்துவமனைக்கு அருகிலுள்ள இந்த செயின்ட் சேவியர் கல்லூரி வளாகம் ஒரு ஆளரவமற்ற பகுதியாகும். அதற்குப் பின்பக்கத்தில் வைத்தே கார்கரே கொல்லப்பட்டர்" மெட்ரோ சினிமாவிற்கு அருகில் தீவிரவாதிகளின் மீது கார்கரே துப்பாக்கி சூடு நடத்துவதாகவும் காயமேற்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவதாகவும் TV சானல்கள் ஒளிபரப்புச் செய்திருந்தன.

கஸபும் இஸ்மாயிலும் சி.எஸ்.டி உட்பட நான்கு இடங்களில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்துவது எப்படி சாத்தியமாகும்?. வி.டியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரவாதிகளுள் வேறு சிலரும் இருந்திருந்தனரா?

நரிமன் ஹவுசிற்கு அருகில் வசிக்கும் ஆனந்த் ராவ் ராணா என்பவர் கூறியதாக, டி.என்.ஏ தினசரி மற்றொரு செய்தி வெளியிட்டது: "தொலைகாட்சியில் கார்கரே கொல்லப்பட்ட செய்தி வெளியான உடன் நரிமன் ஹவுஸிலிருந்து மகிழ்ச்சி ஆரவாரம் கேட்டது". நரிமன் ஹவுஸுக்கென அளவுக்கதிகமாக மாமிசமும் மதுவும் உணவு வகைகளும் அன்றைய தினம் வாங்கிச் சென்றதாக ஒரு வியாபாரியை விசாரித்து அதே பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்திகள் அனைத்தையும் காவல்துறையும் அதிகாரிகளும் கண்டுகொள்ளாதது ஆச்சரியமானது!

1992-93இல் மும்பையில் நடந்தக் கலவரத்தை விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கையில் கலவரம் மிக மோசமாகத் தொடரக் மிக முக்கியக் காரணமாக, "மும்பை காவல்துறை காவி மயமாகியிருக்கிறது" எனச் சுட்டிக் காண்பிக்கப் பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட அந்தக் கலவரத்தில், கீழ்நிலை அதிகாரி - கான்ஸ்டபிள் - முதல் அடிஷனல் கமிஷனர் வரை 31 காவல்துறை அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதாக கமிசன் கண்டுபிடித்தது. மாலேகோன் வழக்கு விசாரணையில் கார்கரே எதிர்கொண்ட பிரச்சனைகளில் காவிமயமாக்கப்பட்ட மும்பைக் காவல்துறையும் ஒன்றாகும். முஸ்லிம் எதிர்ப்புணர்வு கொண்ட அதிகாரி எனப் பெயரெடுத்த ரகுவன்ஷி வகித்த 'தீவிரவாதத் தடுப்புப் படை'த் (ATS) தலைவர் பதவியைத்தான் கார்கரே ஏற்றுக் கொண்டிருந்தார். ஆனால், அவரது ATS குழுவில் இருந்தவர்களில் பெரும்பான்மையினரும் ரகுவன்ஷியின் ஆதரவாளர்களாக இருந்தனர். அதுமட்டுமல்ல, "ஆர்.எஸ்.எஸின் வெடிகுண்டு உற்பத்தித் தொழிற்சாலை" என கார்கரே கண்டு பிடித்த போன்ஸாலா இராணுவப் பயிற்சி பள்ளியுடன் ATSக்கும் தொடர்பு இருந்திருந்தது. "இன்று மாலேகோன் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள கர்னல் புரோஹித் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ATSக்குப் பயிற்சியளித்தவர்" என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயமாகும்!.

இன்று கார்கரே மறைவிற்குப் பின் மீண்டும் ATSஇன் தலைவராக நியமிக்கப்பட்டு, மாலேகோன் குண்டுவெடிப்பை விசாரிக்கும் ரகுவன்ஷி, கார்கரேக்கு முன்னரும் ATSஇன் தலைவராக இருந்த வேளையில், மும்பை நாக்பாடாவிலுள்ள ATS தலைமையகத்தில் ATS உறுப்பினர்களுக்கு ஒரு ஒருநாள் பயிற்சி வகுப்பு நடந்திருந்தது. அந்த ஒருநாள் பயிற்சி கேம்பில் முதல் வகுப்பெடுத்தது, இதே மாலேகோன் வழக்கின் முதல் குற்றவாளியான கர்னல் புரோஹித். "ஆபரேசன் டெக்னிக்ஸ் அண்ட் ஸ்ட்ரேட்டர்ஜி" என்பது பாடத்தலைப்பாக இருந்தது. இந்தக் கேம்பிற்கே தலைமையேற்றிருந்தது இப்போது மாலேகோன் வழக்கை விசாரிக்கும் ரகுவன்ஷி. ATS பயிற்சிப் பள்ளியில் வகுப்பெடுத்த மற்றொருவரின் பெயர் கர்னல் எஸ்.எஸ்.ரய்கார். இவர் போன்ஸாலா இராணுவப் பயிற்சி பள்ளியின் கமாண்டராக இருந்தார்.

மாலேகோன் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த கார்கரே, "கர்னல் புரோஹித்தான் குண்டு வெடிப்புக்குக் காரணம்" எனக் கைது செய்ததோடு, போன்ஸாலே இராணுவப் பயிற்சிப் பள்ளிக்கு எதிராக விசாரணை நடத்தியவேளை, கமாண்டர் ரய்காரை விசாரணனையில் உட்படுத்தி இருந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாயாவிற்குப் புரோஹிதை அறிமுகப்படுத்தியவர் இதே கமாண்டர் ரய்காரேதான்.

ரமேஷ் உபாத்யாயா, புரோஹித் ஆகியோரின் கைதுக்குப் பின், அப்பொழுது ரயில்வே காவல்துறையில் டிஐஜியாக இருந்த ரகுவன்ஷியிடம் கார்கரே இவற்றைக் குறித்து விசாரித்த பொழுது, "பயிற்சி வகுப்பு நடந்தது உண்மைதான். அப்போது புரோஹித் இராணுவ உளவுத்துறையில் வேலை செய்திருந்தார்" என்று அவர் கூறினார். "ATS பயிற்சி கேம்பிற்கு வகுப்பெடுக்கப் புரோஹிதிற்கு அழைப்பு விடுத்தது நான்தான்" என ஒப்புக்கொண்ட ரகுவன்ஷி, "அதற்கு மேல் வேறு சம்பவங்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை" என்று பதிலளித்துள்ளார்.

மும்பை ATSஐ நன்றாக அறிந்திருந்த கார்கரே, மாலேகோன் வழக்கில், அதன் அனைத்து விஷயங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு ஆரம்பத்திலிருந்தே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவாறே வழக்கை விசாரிக்க ஆரம்பித்திருந்தார். தன்னுடன் இணைந்துச் செயல்பட்ட மற்ற அதிகாரிகள் தவறாகப் புரிந்துக் கொள்ளாமல் இருக்க, அனைத்து விசாரணைகளிலும் குற்றவாளிகளை விசாரிப்பதிலும் நேரடியாக ஈடுபட்டார். வாக்குமூலங்களைத் தயார் செய்வதிலும் நேரடியாக கவனம் செலுத்தி இருந்தார். பப்ளிக் ப்ராசிகியூட்டர் ரோஹிணி ஸாலயனுடன் இடையிடையே கருத்துப்பரிமாற்றம் நடத்திக் கொண்டிருந்தார். ஹிந்துத்துவ இயக்கங்களுடன் தொடர்புடைய அடிஷனல் கமிஷனர் பரம்பீர் சிங்கை ஊடகங்களுக்கு விவரங்கள் வழங்குவதிலிருந்து விலக்கினார். அவருக்குப் பதிலாக அடிஷனல் கமிஷனர் சுக்வீர் சிங்கை ATS அதிகாரப்பூர்வச் செய்தியாளராக நியமித்தார். சுருக்கமாக, காவல்துறையிலுள்ள ஹிந்துத்துவவாதிகளைக் கார்கரே இவ்வழக்கின் அருகிலேயே வரவிடவில்லை.

தேசத்தின் பலப்பாகங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கான ஹிந்துத்துவவாதிகளின் திட்டங்களைக் குறித்தும் கார்கரேக்கு தகவல்கள் கிடைத்திருந்தன. இவற்றைச் சுட்டிக்காண்பித்து, தனது உயர் அதிகாரிகளுக்குக் கார்கரே அறிக்கை சமர்ப்பித்தார். சிமி, இந்தியன் முஜாஹிதீன் போன்ற செயல்படும் தொண்டர்கள் சக்தியில்லாத, அதிகாரப்பூர்வமாகத் தங்கள் நிலைபாட்டை வெளிப்படுத்த இயலாத, நாடு முழுவதும் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ள, ஒன்றும் செய்ய இயலா இயக்கங்களைத் தொடர்பு படுத்தி மத்தியப் புலனாய்வுத்துறை புனைந்த கதைகளுக்கு அவை நேர் எதிராக இருந்தன.

அது மட்டுமல்ல, இராணுவப் புலனாய்வு துறையில் அதிகாரியாக இருக்கும்போது கர்னல் புரோஹித் சமர்பித்த ரகசிய தகவல்களின் உண்மைநிலையை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் புரோஹிதின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கைகளை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கார்கரே கொடுத்த அறிக்கையில் கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் அவரது விசாரணை ஹிந்துத்துவ சக்திகளுக்கும் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஐ.எஸ்.ஐக்கும் இடையிலான தொடர்புகளின் வலுவான முடிச்சுகளை அவிழ்க்கும் நிலை வரை வந்தது. அவர் கொல்லப்படுவதற்கு முந்தைய தினம், சில ஹிந்துத்துவ சக்திகளுக்கும் ஐ.எஸ்.ஐக்கும் இடையிலான தொடர்புகளை நோக்கி மாலேகோன் விசாரணை நீள்வதாகவும் விரைவில் உறுதிப் படுத்தத் தக்க, நம்பகமானக் கூடுதல் விவரம் கிடைக்கப்பெறும் எனவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது இங்கு நினைவு கூரத் தக்கது.

இத்தகைய இக்கட்டான நிலையிலேயே கார்கரேயை நீக்குவதற்காக பாஜக முனைப்புடன் முன் வந்தது. ATSஇன் தலைமைப் பதவியிலிருந்துக் கார்கரேயை நீக்குவதே பாஜகவின் முதல் முயற்சியாக இருந்தது. அவருக்குப் பதிலாக, ஆர்.எஸ்.எஸ்ஸுடன் பயணம் செய்யும் மும்பை காவல்துறையிலுள்ள ஒரு டி.ஜி.பியை அப்பதவியில் நியமிப்பதற்கு மேல்மட்டத்தில் முயற்சிகள் நடந்தன. ஆனால், அப்போதைய உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலின் துணை கார்கரேக்கு இருந்ததால் உடனடியாக பாஜகவால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இருப்பினும் அரசியல்வாதிகளின் துர்பிரச்சாரங்களும் கண்டனங்களும் கார்கரேயை வெறுப்படைய வைத்திருந்தன. அவருக்கு எதிரான மோசமான கண்டனங்கள் அவரை மிகவும் வருத்தப்படுத்தியிருந்தன. இதனை ஆர்.ஆர். பாட்டீலிடம் அவர் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாக கூறி வருத்தப்பட்டிருந்தார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்! - பகுதி 3

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்! - பகுதி 2

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்! - பகுதி 1

thanks to : .satyamargam.com

Sunday, January 25, 2009

கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? -

கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? - பாகம்1

ஏசுமட்டும்தான் பரிசுத்தமானவர், ஷைத்தானின் தூண்டுதலுக்கு அப்பாற்பட்டவர் என்கிறார் உண்மையடியான். அப்படியானால் இவ்வுலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களும், யூதர்களும், கிருஸ்தவர்களும், தீர்க்கதரிசிகள் என்று விசுவாசிக்கும் நோவா, டேவிட், ஆப்ரஹாம், ஐசக், இஸ்மவேல், மோஸே (அவர்கள் அனைவர் மீதுமும் இறைசாந்தி என்றும் நிலவட்டுமாக) போன்ற இறைத்தூதர்களின் நிலை என்ன? இவர்களைப் பற்றி உண்மையடியான் என்ன சொல்ல வருகிறார்? அவர்களெல்லாம் ஷைத்தானால் வழிகெடுக்கப்பட்டவர்கள் என்கிறாரா? (நவ்வூதுபில்லாஹ்).
முஸ்லிம்களாகிய நாங்கள் அன்னை மர்யம் (அலை) முதல் இறைத்தூதர் நபி ஈஸா (அலை) அவர்கள் உட்பட இவ்வுலகில் தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகளையும் புனிதமானவர்களாகவே கருதுகிறோம். ஷைத்தானின் கெடுதல்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட பரிசுத்தவான்களாக அவர்கள் அனைவரையும் விசுவாசங்கொள்கிறோம்.

தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்


WWW.IIPONLINE.ORG

Saturday, January 24, 2009

உயிரைப்பறித்த இறை[மூட]நம்பிக்கை!

இறை நம்பிக்கை காரணமாக காயத்துக்கு மருந்து சாப்பிடாததால் துறைமுக ஊழியர் பரிதாபமாக செத்தார். இதே போல் அவருடைய குடும்பத்தில் 4 பேர் ஏற்கனவே உயிரிழந்து உள்ளனர்.துறைமுக ஊழியர்சென்னை துறைமுகத்தில் வேலைபார்த்து வந்தவர் சுதாகர் (வயது 50). இவர் கடந்த மாதம் 23&ந் தேதி தனது மகளை மோட்டார் சைக்கிளில் தியாகராய நகரில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவரை விட்டுவிட்டு திரும்பும்போது, பள்ளிக்கூடத்துக்கு அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியதில் நிலைதடுமாறி சுதாகர் கீழே விழுந்தார். இதில் அவருடைய இடது கணுக்காலில் காயமும், லேசான சிராய்ப்பும் ஏற்பட்டது.

அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. காயத்துக்கு அவர் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றிருந்தால் ஒரு வாரத்துக்குள்ளாகவே வழக்கம் போல் வேலைக்குச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் மருத்துவரை பார்ப்பதை தவிர்த்துவிட்டார். சுதாகர், பெந்தகோஸ்தே அமைப்பின் தீவிர உறுப்பினர்.

, ராயப்பேட்டையில் உள்ள பெந்தகோஸ்தேயின் சபைக்கு சென்று ஜெபம் செய்து, காயத்தை போக்கிக் கொள்ள நினைத்தார் (பெந்தகொஸ்தே சபையில் உள்ளவர்கள், பெரும்பாலும் இறைவனின் கருணையால் உடல் நலம் பெறுவதையே விரும்புவார்கள்). இதைத் தொடர்ந்து, அங்கு சென்று தனது நிலையை விளக்கி அங்கு சில நாட்கள் தங்கியிருந்தாராம். அப்போது, அங்குள்ள பாதிரியாரிடம் ஜெப எண்ணையை வாங்கி காயத்தில் தேய்த்துவிட்டு வழக்கம் போல் அவர் வேலைக்கும் மற்ற இடங்களுக்கும் சென்றுள்ளார். ஆனால் நினைத்தபடி காயம் ஆறவில்லை. சுதாகருக்கு சர்க்கரை நோய் இருந்த காரணத்தினால், மாறாக காயம் புரையோடிப் போனது (செப்டிக்). அதனால் அவர் உடல்நிலை மோசமடைந்து, பரிதாபமாக செத்தார். ஒரே குடும்பத்தில் 5 பேர்சுதாகரைப் போலவே, உடலுக்கு வைத்தியம் செய்து கொள்வதை விரும்பாமல் சுதாகருடைய குடும்பத்தில் ஏற்கனவே 4 பேர் மரணத்தை தழுவியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதாகருடைய மாமனாரான ஜேக்கப், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் ஆஸ்பத்திரிக்கு செல்லாமலே சில வருடங்களுக்கு முன்பு இறந்ததாக கூறப்படுகிறது. ஜேக்கப் மனைவியும், சுதாகரின் அத்தையுமான ஆனந்தியும் நோய்வாய்ப்பட்ட போது ஆஸ்பத்திரிக்கு செல்லாததால் இறந்துவிட்டாராம். ஜேக்கப்&ஆனந்தியின் ஒரே மகனான ஜோஷ்வா 11 வயதாக இருக்கும் போது மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை தரப்படாததால் இறந்தார். பட்டதாரியான மகள் பிரிசில்லாவும் இதே போல் மரணம் அடைந்தார். அவர்களது குடும்பத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் மரணமடைந்த 5&வது நபர் சுதாகர் ஆவார்.

கட்டுப்பாடுஇது குறித்து பெந்தாகோஸ்தே அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:உடல்நிலை சரியில்லை என்றால், ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டாமென்று பெந்தேகோஸ்தே அமைப்பில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் சபையில் இருக்கும் பெரும்பாலானோர் ஆஸ்பத்திரிக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்பவர்களுக்கு இறைவனடியில் இடம் கிடைக்காது என்ற நம்பிக்கை உள்ளதாகவும், ஆஸ்பத்திரிக்கு செல்பவர்களை, அமைப்பைச் சேர்ந்த மற்றவர்கள், ஒரு மாதிரியாக பார்ப்பார்கள் என்பதாலும் டாக்டர்களிடம் பெரும்பாலான பெந்தகொஸ்தே அமைப்பினர் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி நன்றி; தினத்தந்தி

இறை மார்க்கமாம் இஸ்லாம் கூறுகிறது;
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள். அல்லாஹ் அதிலும் நிவாரணம் வைத்துள்ளான். நூல்;முஸ்லிம்.

இறைமார்க்கமாம் இஸ்லாம் மட்டுமே பகுத்தறிவுடன் கூடிய பக்திக்கு வழிகாட்டுகிறது என்பது உலகறிந்த உண்மை!

நன்றி : நிழல்களும் நிஜங்களும்

Wednesday, January 21, 2009

மாலேகான்: முக்கிய தீவிரவாதி லெப்டினென்ட் கர்னல் புரோஹித்!

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மாலேகான் சம்பவத்தை திட்டமிட்டு நிறைவேற்றியது ராணுவ அதிகாரியான
தீவிரவாதிலெப்டினென்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் தான் என்று குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கையை நேற்று தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்தனர். இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் நோக்குடன் இந்த செயலில் அனைவரும் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மாலேகான் நகரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கை ஹேமந்த் கர்கரே தலைமையிலான மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர்.

வழக்கு முக்கிய கட்டத்தை நெருங்கிய நிலையில் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி கர்கரே உயிரிழந்தார். இருப்பினும் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து தொய்வின்றி விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையி்ல் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குண்டுகளை சப்ளை செய்த தீவிரவாதி புரோஹித்...
மாலேகான் சதிச் செயலுக்கு முக்கிய காரணகர்த்தாவாக லெப்டினன்ட் கர்னல் தீவிரவாதி புரோஹித் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவர்தான் வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆட்களை ஏற்பாடு செய்த தீவிரவாதி பிரக்யா...

அதேபோல பெண் தீவிரவாதி பிரக்யா சிங் தாக்கூர், வெடிகுண்டுகளை வைக்க ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 4000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், மகாராஷ்டிர ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்ட சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

குற்றப் பத்திரிக்கையின் முக்கிய அம்சங்கள்...

கடந்த 2007ம் ஆண்டு அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பை தொடங்கினார் புரோஹித். இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவது, இந்துக்களுக்கான சட்டத்தை உருவாக்குவது, இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது ஆகியவைதான் இந்த அமைப்பின் நோக்கம்.

தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு வழிகளில் நிதி திரட்டினார் புரோஹித். ரூ. 21 லட்சம் வரை இவ்வாறு அவர் திரட்டினார். இந்தப் பணத்தை அமைப்பின் பொருளாளர் தீவிரவாதி அஜய் ரஹீர்கர், குற்றம் சாட்டப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்குப் பிரித்துக் கொடுத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் படி கேட்டுக் கொண்டார்.

மாலேகான் குண்டுவெடிப்புக்கான சதித் திட்டம் தொடர்பான கூட்டங்கள் 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தொடங்கின. பரீதாபாத், போபால், கொல்கத்தா, ஜபல்பூர், இந்தூர், நாசிக் ஆகிய இடங்களில் கூட்டம் போட்டு ஆலோசித்துள்ளனர்.

காஷ்மீரில் பணியில் இருந்த தீவிரவாதி புரோஹித் அங்கிருந்து திரும்பியபோது ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளை கொண்டு வந்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் தீவிரவாதி ராம்ஜி கலஸங்கரா, தீவிரவாதி சந்தீப் டாங்கே,
தீவிரவாதி பிரவீன் முத்தலீக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். வெடிகுண்டுகளை இவர்கள்தான் வைத்துள்ளனர் என்று குறப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர கூடுதல் டிஜிபி ரகுவன்ஷி கூறுகையில்,தீவிரவாதி புரோஹித்தான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸை கொடுத்தார்
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும்போது விசாரிக்கப்பட்ட ஒரு சாட்சி, தீவிரவாதி புரோஹித்தான் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸைக் கொடுத்தார் என்று தெரிவித்திருந்தார்.
சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிரவாதி புரோஹித்தை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என அந்த நாடு கோரி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸாரின் இந்த கூற்று முக்கியத்துவம் பெறுகிறது.

Tuesday, January 20, 2009

மாட்டுப் பொங்கல் "பின்பக்க”த்திற்குப் பூஜை



தை இரண்டாம் நாளை “மாட்டுப் பொங்கல்” என்கிறார்கள். உழவுக்குப் பயன்படும் (காளை) மாட்டுக்கு “நன்றி” பாராட்டும் நாள் என்கிறார்கள்.

அன்றைய நாளில் பல ஊர்களிலும் “ஏறு தழுவுதல்” நடைபெறுகிறது. போர்க் குணத்தோடு வளர்க்கப்படும் காளைகள் போட்டியின் போது அவிழ்த்து விடப்பட்டு ஓடிவரும்போது அதன் திமிலைப் பிடித்து அடக்கி நிறுத்த இளைஞர்கள் முயன்று, வீழும் விளையாட்டு. உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்தும் விளையாட்டு. ஆனாலும் உயிரைப் பொருட்படுத்தாமல் இதில் ஈடுபடுகின்றனர். இது தமிழர் பண்பாடாக இருந்தது.

அறுவடைத் திருநாளாம் பொங்கலை, “சங்கராந்தி” ஆக்கிய பார்ப்பனர், மாட்டுப் பொங்கலையும் பார்ப்பனப் பண்பாட்டு நிகழ்ச்சியாக்கி விட்டனர். ஓர் அய்யங்கார் அம்மணிக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் மாட்டுப் பொங்கல் நிகழ்ச்சியைக் காட்டினார்கள். பசு மாடுகள் வரிசையாகக் கட்டப்பட்ட தொழுவம். பார்ப்பன மடிசார் மாமிகள், கையில் பித்தளைத் தட்டில் கர்ப்பூரத்தைக் கொளுத்தி எடுத்துக் கொண்டு, பசு மாட்டின் பின்புறம் மலம், மூத்திரம் வெளிவரும் உறுப்புகளுக்குக் கர்ப்பூர தீபாராதனை காட்டும் காட்சியைக் காட்டினார்கள். இதுதான் பார்ப்பன பண்பாடு!

இந்து மதத்தின் எல்லாக் கடவுள்களும் பசு மாட்டில் வசிக்கின்றன என்ற முட்டாள்தனமான கருத்தின் அடிப்படையில் பசு மாட்டைக் கும்பிடும் பார்ப்பனர், இப்போது மாட்டுப் பொங்கலன்றே இதைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். பசுவின் மூத்திரம் வரும் வழியில்தான், லட்சுமி வாசம் செய்கிறாள் என்கிறது, இந்து மதம்! அதனால்தான், வைணவக் கோயிலில் விடிந்ததும் பூஜை நடக்கும்போது பெருமாள் முகத்திற்கு நேரே பசு மாட்டின் யோனியைக் காட்டுகிறார்கள்! கடவுள் லட்சுமியை தரிசனம் செய்கிறதாம்!

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழர்களைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளும் காலத்தில், அந்த முயற்சிகளுக்கு ஓரளவு வெற்றிகள் கிடைத்துள்ள காலத்தில், தம் பண்பாட்டுத் திணிப்பில் பார்ப்பனர்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கின்றனர் என்பதை அத்தொலைக்காட்சி பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது! என்னே, காட்டுவிலங்காண்டித்தனம்!

பார்ப்பவர்கள், பார்க்காமல் புறக்கணிக்க வேண்டாவோ?
நன்றி விடுதலை

Sunday, January 18, 2009

தினமலரைத் தடை செய்

நபிகள் நாயகத்தைக் குறித்துக் கேலிச்சித்திரம் வரைந்து தன் பாஸிச வெறியைக் கக்கிய தினமலர் பத்திரிக்கைக்கு எதிராக முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்தனர். முஸ்லிம்களின் எதிர்ப்பு, தினகரன் போன்ற பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடகங்களின் விமர்சனத்தால் நாறிப் போன தினமலர் வேறு வழியின்றி மன்னிப்புக் கேட்பதாக அறிவித்தது. சில வளைகுடா நாடுகளில் இணைய தளம் தடை செய்யப்பட்டதும் கதறி அழுது நாங்கள் ஆன்மீகம் பகுதியில் இஸ்லாம் குறித்து நல்ல செய்தி வெளியிடுகிறோம் என்று புலம்பியது. தினமலரின் புலம்பலால் மனம் இளகிய இஸ்லாமியப் பெரியவர்கள் கூட தினமலர் வெளியிடும் நல்ல செய்திகளைக் கருத்தில் கொண்டு இதனை மன்னித்து விடலாம் என்று கருத்திட்டனர். இது சாக்கடையில் தெளிந்த நீரைத் தேடும் முயற்சி என்றும் குப்பைத் தொட்டியில் உள்ள மலருக்கு எவரும் ஆசைப் படுவதில்லை, அது போல தினமலரின் ஆன்மீகச் செய்திகளை முஸ்லிம்கள் விரும்பவில்லை என்றும் நமது கருத்தைப் பதிவு செய்தோம். தினமலர் திருந்த வில்லை, இஸ்லாத்தைக் குறித்த தனது மோசமான மனநோயை அது அதிகப்படுத்திக் கொண்டுள்ளது என்பதை இன்றைய தினமலரில் அவர்கள் எடுத்துள்ள வாந்தியே போதுமான சான்றாக உள்ளது.

தினமலர் இன்று (18-01-2009) வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில்

10 வயதில் சிறுமிக்குத் திருமணம்

//சவுதி அரேபியாவின் மிக மூத்த, அதிக அதிகாரம் படைத்த மதகுரு ஒருவர் பெண்குழந்தைகளுக்கு 10 வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். இஸ்லாமியர்களில் சிறுமிகளை அவர்கள் கொள்ளுத் தாத்தா வயதுடைய ஆண்களுக்குக் கூட திருமணம் செய்து வைப்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.//

மேற்கண்டவாறு இஸ்லாமின் மீது தனது எதிர்ப்பைக் கொட்டியுள்ளது. தினமலர் இஸ்லாத்தைப் பற்றிய தனது காழ்ப்புணர்வுகளை கக்கும்போதெல்லாம் இவ்வாறு ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது வழக்கம். சவுதி பெரியவர் எங்கு எப்போது இவ்வாறு பேசினார்?அவர் பேசியது என்ன? அதன் முழு விவரத்தையும் வெளியடத் தயாரா?

அவர் பேசியதாகக் குறிப்பிட்ட செய்தியிலேயே முரண்பட்டு திரித்துக் கூறியதில் தினமலரின் மனநோய் வெளிப்பட்டுள்ளதைப் பாருங்கள்

//பெண்களுக்கு 11 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைப்பதை ஷரியத் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் இதை சிலர் சிறுமிகளுக்கு ஏற்படுத்தப்படும் அநீதி என்று விமர்சிக்கின்றனர். அது தவறு. பெண்களில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று கூறப்படுவது தவறானது. ஒரு பெண் 10 வயதைத் தாண்டும் போதும் 12 வயதை எட்டும்போதும் அவருக்கு திருமணம் செய்து வைக்கும் தகுதியை பெற்றுவிடுகிறார்.//

பெரியவர் பேசியதாக தினமலர் வெளியிட்ட செய்தி உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட சிறுமிகளைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எங்கே இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது? சிறுமி என்று சொன்னாலும் 10 வயதைக் கடந்து விட்டால் பெண்கள் பருவமடைவதற்கு வாய்ப்புள்ளதே? பருவமடைந்த பெண்களை எவரும் சிறுமி என்று கூறுவதில்லை. தினமலரின் விஷம மூளைக்கு இவை விளங்காமல் போனது ஏன்? மேற்கண்ட தினமலர் செய்தியை படிப்பவர்களுக்கு என்ன புரியும்? 10 வயது கடந்து விட்டால் ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அனுமதி உள்ளது என்று பெரியவர் கூறியதாக குறிப்பிட்டு விட்டு அதை வலியுறுத்துகிறார் என்றும் இஸ்லாமியர்களில் சிறுமிகளை அவர்கள் கொள்ளுத் தாத்தா வயதுடைய ஆண்களுக்குக் கூட திருமணம் செய்து வைப்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. என்றும் தினமலர் பொய்யைக் கக்கியதன் உள்நோக்கம் என்ன?

கொள்ளுத்தாத்தா வயதுடையவர்களுக்கு சிறுமிகளைத் திருமணம் செய்து வைப்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது என்று கூறிய தினமலர் அதற்கு ஆதாரத்தை வெளியிட வேண்டும். சவுதிப் பெரியவர் பேசியது என்ன? அதன் ஆதாரம் என்ன என்பதையும் தினமலர் வெளியிட வேண்டும்.

இல்லையேல் தொடர்ந்து இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் தினமலரைத் தடை செய்யக் கோரி முஸ்லிம்கள் கிளர்ந்தெழுவதை அஞ்சிக் கொண்டு இது போன்று வாந்தி எடுக்காமல் மவுனமாக இருக்கட்டும் என்று எச்சரிக்கிறோம்.

தேங்க்ஸ் டு : அபூ அப்திர்ரஹ்மான்

இஸ்லாம் பார்வையில் "நட்பு"

எவனுடைய கையில் என் உயி இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரையில் சுவனபதி செல்ல இயலாது. உங்களில் ஒருவர் மற்றவரை நேசிக்காதவரை நம்பிக்கையாளராகவும் இயலாது. எனவே நான் உங்களுக்கு கூறுகிறேன். அதனை நீங்கள் மேற் கொண்டால் ஒருவர் மற்றவருக்கு நீங்கள் நேசமுள்ளவராக ஆகிவிடுவீர்கள். அதாவது, உங்களுக்கிடையில் ஸலாம் கூறுவதை பழக்கத்தில் கொண்டுவாருங்கள் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீஎனக்காக நட்புக்கொண்டவர்கள் எங்கே? இன்று நான் அவர்களுக்கு என்னுடைய நிழலில் இடமளிப்பேன். இன்று என்னுடைய நிழலைத்தவிர வேறு நிழல் கிடையாது என்று மறுமை நாளில் இறைவன் கூறுவான் என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்: முஸ்லிம் முஅத்தாஎனக்காக நட்பு கொள்பவர்கள் மீதும் எனக்காக (மார்க்க உரையாடல்) அமர்பவர்கள் மீதும் எனக்காக ஒருவர் மற்றவரைச் சந்திக்கச் செல்பவர்கள் மீதும் எனக்காககச் செலவழிப்பவர்கள் மீதும் என் அன்பு கடமையாகிவிட்டது. என்று இறைவன் கூறியதாக நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூ இத்ரீஸில் கவ்லான் முஆது (ரலி) முலம் அறிந்து நூல்:முஅத்தாஅல்லாஹ்வுக்காக நட்புக்கொள்வதும் அல்லாஹ்வுக்காக சினமுறுவதும் (நம்பிக்கையாளரின்) மேலான செயல்களாகும் என நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூசர் (ரலி) நூல்: அபூதாவூத்அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் நபிமார்களும் அல்ல, தியாகிகளூம் அல்ல. மறுமை நாளில் இறைவனிடம் அவர்களுக்குள்ள பதவிகளைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் பொறாமைக் கொள்வர். என்று நபி கூறினர். (அப்பொழுது) அவர்கள் யார்? என்று எங்களுக்கு அறிவியுங்கள் என்று தோழர்கள் கேட்டனர். (அதற்கு) நபி அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடையே நட்புக்கொள்வர். அவர்களுக்கிடையில் உறவின் முறையும் இருக்காது. பணத்திற்காகவும் அவர்கள் நட்புக் கொள்ள மாட்டார்கள். இறைவன்மீது ஆணையாக அவர்களின் முகம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இறை வழியில் செல்வார்கள். மக்கள் அச்சமுறும் பொழுதும், துக்கிக்கும் பொழுதும் அவர்கள் அச்சமுறவும் மாட்டார்கள். துக்கிக்கவும் மாட்டார்கள். ".(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." என்ற 10:62 வது வசனத்தை ஓதினர். அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: அபூதாவூத்உங்களில் ஒருவர் தம் சகோதரர் மீது அன்பு கொண்டால், தாம் அவர்மீது அன்பு கொண்டிருப்பதாக அவரிடம் அறிவித்து விடவும். என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மிக்தாம் இப்னு மஃதீகர்பு (ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதீ
தேங்க்ஸ் டு : அமைதி ரயில்

Saturday, January 17, 2009

வீரவிளையாட்டு என்றபெயரில் மிருகவதை;தடைசெய்க!

தமிழகத்தில் வீரவிளையாட்டுகள் என்று சிலவிசயங்கள் நடைமுறையில் உள்ளன.அதில் சிலவிஷயங்கள் மனிதர்களின் உயிருக்கு உளைவைப்பதாகவும், மிருகங்களை வதைசெய்வதாகவும் உள்ளது.மாடுகளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் இந்த ஆண்டு ஆறு பேர் பலியாகியுள்ளனர். ஐந்நூறு பேர் காயமாகியுள்ளனர். இதுபோக மாடுகளை வதை செய்வதையும் பார்க்கிறோம்.அதாவது, வீரம் என்றால் நாம் எதை சொல்வோம் பத்துபேர் சேர்ந்து ஒருவனை அடிப்பதையா? இல்லை. ஒத்தைக்கு ஒத்தையாக நின்று ஜெயிப்பவனையா? ஜல்லிக்கட்டை நீங்கள் பார்த்தால் ஒரு மாட்டை பலபேர் அதன்மீது விழுந்து அமுக்குவதை காணலாம். திமிளைப்பிடித்து தொங்குவதும், வாலைப்பிடித்து இழுப்பதும் இப்படியான வேதனைகள்.மேலும், சிலபகுதிகளில் எருதுகட்டு என்றபெயரில் மாட்டை வடத்தில்கட்டி, அதை ஓடவிடாமல் செய்து அதை பலபேர் சேர்ந்து அமுக்குவது. அதுபோல, கோவில் திருவிழா மற்றும் தலைவர்களின் பிறந்தநாள்விழா இப்படி சில நிகழ்ச்சிகளில் மாட்டுவண்டி பந்தயம் என்ற பெயரில் மாடுகளை கடுமையாக ஓடவிடுவதும், சாட்டையால் அடிப்பதும், தார்கம்பால் ரத்தம் வழியும் அளவுக்கு குத்துவதும் இதுபோன்ற கொடூரங்களை பார்க்கிறோம்.ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதை முன்னிட்டு தொடரப்பட்ட வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. தமிழக அரசின் மேல்முரையீட்டால் சில நிபந்தனைகளுடன் அனுமதியளித்தது. அனால் ஜல்லிக்கட்டை முற்றிலுமாக தடை செய்வதே சரியாகும். இல்லையென்றால் மாடுகளை தொடாமல் ராமராஜன் மாதிரி பாட்டுப்பாடி காளைகளை அடக்கட்டும்.இதுபோக ஆடுகளை மோதவிடுவது, சேவல்களின் காலில் கத்தியை கட்டி மோதவிடுவது இதுபோன்ற மிருகவதைகளும் தடைசெய்யப்படவேண்டும்.கால்நடைகள் நமக்கு பலவகைகளில் உதவியாக இருக்கிறது. உதவி செய்த ஜீவனுக்கு உபத்திரவம் செய்வதுதான் மனித பண்பாடா?என்பதை சிந்திக்கவேண்டும்.முஸ்லிம்களும், ஏனைய அசைவப்பிரியர்களும் உணவுக்காக உயிரினங்களை அறுப்பதை மிருகவதை என தத்துவம் பேசிய ஜீவகாருண்ய மேதைகள்' கண்முன்னே நடக்கும் இந்த கொடூரங்களை கண்டுகொள்ளாதது ஏன்?
thanks to : நிழல்களும் நிஜங்களும்


'சிறுவயதுத் திருமணங்கள் இந்தியாவில் அதிகம்


'சிறுவயதுத் திருமணங்கள் இந்தியாவில் அதிகம் - யூனிசெப்
உலக அளவில் சட்டரீதியான திருமண வயதை எட்டுவதற்கு முன்பே, பெண் சிறுமிகளுக்கு திருமணம் நடக்கும் போக்கு இந்தியாவில் மிக அதிகமாக இருப்பதாக ஐநா மன்றத்தின் சிறார்களுக்கான அமைப்பான யூனிசெப் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

நேற்று வெளியிடப்பட்ட உலக அளவிலான சிறார் நிலமைகள் குறித்த யூனிசெப் அமைப்பின் அறிக்கையில் இந்தியாவில் 45 சதவீத பெண்கள், சட்டப்பூர்வ திருமண வயதான 18 வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்விக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி திருமணம் செய்விக்கப்படும் பெண்கள் மகப்பேறு காலத்தில் இறக்கும் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகம் என்றும், குழந்தைகளின் இறப்பு விகிதமும் இதனால் இந்தியாவில் அதிகமாக இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

சரப்ஜித்சிங்கின் மரண தண்டனைரத்து? அப்சலின் கதிஎன்ன?



பாகிஸ்தானில் முக்கிய நகரங் களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சதிகளில் முக்கிய பங்கு வகித்தவர் என இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. சரப்ஜித் சிங்கிற்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. சரப் ஜித் சிங்கிற்கு ஆதரவாக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியாவில் பல்வேறு மட்டத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. சரப்ஜித் சிங் கிற்கு ஆதரவாக இந்திய ஊடகங்கள் அனைத்தும் வரிந்து கட்டின.


சரப்ஜித் சிங்கை நேரில் சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு பாகிஸ் தான் அரசு அனுமதி வழங்கியது. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாட்டிலுமுள்ள மனித உரிமை ஆர்வலர் களின் முயற்சியால் இது கை கூடியது.


இந்நிலையில் சரப்ஜித்சிங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்ட னையை ரத்து செய்ய வேண்டும் எனகோரிக்கைகள் இந்தியாவெங் கும் எழுந்தன. சரப்ஜித்சிங் உள்பட மரண தண்டனைக் கைதிகள் அனை வரது தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி பாகிஸ்தான் உள்துறை அமைச்கத் துக்கு அந்நாட்டு சட்ட மந்திரி பரூக் நயீக் பரிந்துரை செய்துள்ளார். இதை உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் சரப்ஜித் சிங் மரண தண்டனை அபாயத்திலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தானிலிருந்து வரும் தகவல் கள் தெரிவிக்கின்றன.


சரப்ஜித்சிங் விவகாரத்தில் இந்தி யாவில் பெருவாரியான மக்கள் அவ ருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர்.


பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் அன்சர் பர்னி சரப்ஜித் சிங்கின் விடுதலைக்காக முழுவீச்சில் பாடு பட்டார். தனது நாட்டைச் சாராத ஒருவருக்காக இன்னும் தன்னுடைய நாட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு களில் தொடர்புடைய குற்றம்சாட்டப் பட்ட ஒருவருக்காக பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் மனித உரிமை ஆர்வலர் அன்சர் பர்னி பாடுபட்டு வருகிறார்.


ஆனால் நம் நாட்டில் நம் இந்தியக் குடிமகன் அப்சல் குருவை தூக்கி லிட்டுக் கொலை செய்ய வேண்டும் என துடியாய் துடிக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்படாத அப்சலின் உயிரைப் பறிக்க குறியாய் அலைபவர்கள் சரப்ஜித் விவகாரத்தையும் பாகிஸ்தான் முன் னாள் அமைச்சர் அன்சர் பர்னியையும், நம் நாட்டில் பொறுப்பற்ற சில ஊடகங் களையும், பாஜகவையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது பொருத்தமாக இருக்கும்.
- ஸ்ரீதரன், திருவண்ணாமலை

எல்லாரும் ஜோரா ஒருதடவை கைதட்டுங்க! ஐ.நா.வுக்கு சொரணை வந்திருச்சு!!


பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேலிய ராணுவ பயங்கரவாதிகளின் தொடர்தாக்குதலில் முன்னூறு குழந்தைகள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்து நூறுபேர் ஷகீதாகியுள்ளனர். இஸ்ரேலின் இந்த ரத்தவெறியை உலகநாடுகள் மற்றும் இதயமுள்ள மக்கள் அனைவரும் கண்டித்துவருகின்றனர்.
ஒரு உத்தரவு மூலம் இஸ்ரேலை அடக்கவல்லமை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று மயிலிறகால் வருடியது. வன்நெஞ்சம் கொண்ட வந்தேறி இஸ்ரேல் ஐ.நா.வின் வேண்டுகோளை காற்றில்பறக்கவிட்டுவிட்டு வழக்கம்போல காசாமீது தனது விமானத்தை பறக்கவிட்டது.
குவைத்தை விட்டு ஈராக் வெளியேறவேண்டும் என்று ஐ.நா. கட்டளையிட்டபோது, அதை ஏற்க மறுத்தார் சதாம். உடனே ஐ.நா.வுக்கு கோபம் பொங்கிக்கொண்டுவந்தது. உடனடியாக ரத்தவெறி பிடித்த காட்டேரி அமேரிக்கா தலைமையில் பன்னாட்டுப்படையை அனுப்பி குவைத்தை மீட்டது. இன்று இஸ்ரேல்,ஐ.நா.வின் கட்டளையை தூக்கி விசியபோது ஐ.நா.தூங்கிக்கொண்டிருக்கிறது.
தூங்கிக்கொண்டிருந்த ஐ.நா.வின் வாலில் இஸ்ரேலில் தீயை கொளுத்திவிட்டவுடன் துடித்து எழுந்தது ஐ.நா. ஆம்! காசாவில் வீடுகள்,மசூதிகள்,பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அவ்வளவு ஏன் மையவாடி வரை இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தபோது கண்டுகொள்ளாத ஐ.நா., காசாவில் உள்ள ஐ.நா. நிவாரண நிறுவனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இது பற்றி ஐ.நா.மன்றத்தின் தலைமை செயலாளர் பான் கி மூன் கூறியதாக வெளியாகியுள்ள செய்தியில்,
ஐ.நா. நிவாரண நிறுவனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது தனக்கு கடும் கோபத்தை வரவழைத்ததாகவும், காசாவில் துன்பங்கள் தாங்கமுடியாத அளவுக்கு வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் நேற்று இஸ்ரேலிய போர்விமானம் காசாவில் உள்ள மையவாடியில் குண்டுமழை பொழிந்ததால் அடக்கம் செய்யப்பட்டிருந்த ஜனாசாக்கள் சிதறியதாக செய்தி வெளியாகியுள்ளது. செத்தவர்களையும் விட்டுவைக்காத பிணம்தின்னி இஸ்ரேலே! நீ விதைத்ததற்கான பலனை ஹாமாஸ் உனக்கு வழங்கும் இன்ஷா அல்லாஹ்
.

Thursday, January 15, 2009

தென்காசி முஸ்லிம்களின் அவலநிலை

தென்காசி முஸ்லிம்களின் அவலநிலை

2007ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தென்காசி காவல் நிலையத்தில் ஒரு வழக்கில் பிணைக்காக கையெழுத்திடச் சென்ற முஸ்லிம் இளைஞர்களை இந்து முன்னணியினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர்.

இத்தாக்குதலில் இஸ்லாமியர் தரப்பில் மூவரும், தாக்கவந்த இந்து முன்னணி தரப்பில் மூவரும் உயிரிழந்தனர். இந்நிகழ்வில் தொடர்புடைய இரு பிரிவினரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (NSA) வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் சிறைத்தண்டனையை முடித்து பிணையில் வெளிவந்துள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தென்காசியில் பெரும்பான்மை இந்துக்களும், சிறுபான்மை இஸ்லாமியரும் எவ் விதப் பதற்றமோ, சலனமோ இன்றி அமைதியாக வாழ்ந்துவரும் இச்சூழலில், நெல்லை சரக டி.ஐ.ஜி. திரு. கண்ணப்பன், தென்காசி நகர டி.எஸ்.பி. திரு. மயில்வாகனன் ஆகியோரின் வரம்பு மீறிய நடவடிக்கைகளால் கடந்த ஒரு மாத காலமாக தென்காசி முஸ்லிம்களாகிய நாங்கள் நிம்மதி இழந்துள்ளோம்.

2007ஆம் ஆண்டு நிகழ்வில் தொடர்புடைய, தற்போது பிணையில் இருக்கும் ஹனீபாவின் திருமண வைபவத்தில் பங்கேற்ற ஒரே காரணத்திற்காக தென்காசியைச் சேர்ந்த 1. ஜெயிலானி, 2. அப்துர் ரஹீம், 3. ஜஃபர் சாதிக், 4. முஸ்தபா, 5. சுலைமான் ஆகிய 19 வயது முஸ்லிம் சிறுவர்கள் ஐவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும், மேலப் பாளையத்தைச் சேர்ந்த 1. முள்ளன் செய்யதலி, 2. ஷேக் பாஷா, 3. அபூதாஹிர், 4. சாதிக் அலீ, 5. கிச்சான் புகாரீ ஆகிய ஐவர்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் குற்றஞ்சாட்டி தடுப்புக்காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நபர்கள்மீது காவல்துறை வெடிமருந்து சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு புனைந்துள்ளது. இந்நபர்களுக்கு வெடிமருந்து விற்றதாகக் காவல்துறை கூறும் கோபால் என்ற காவல்துறை உளவாளிமீது எந்த நடவடிக்கையும் இல்லை. இவ் வழக்கில் நீதிமன்ற காவலுக்காக செங்கோட்டை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர் களை ஆஜர்படுத்தும்போது நீதிபதி, கோபாலின் காவல்துறைக்கு உளவுபார்க்கும் எடுபிடி போக்கை கண்டித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் தடுப்புப் பிரிவின்கீழ் கைது செய்யப் பட்டு சிறைபிடிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் டி.ஐ.ஜி. திரு. கண்ணப்பன், டி.எஸ்.பி. மயில்வாகணன் ஆகியோர் பின்வருமாறு மிரட்டியுள்ளனர்.

"2007ஆம் ஆண்டு ஆறு பேர் கொலைவழக்கில் தொடர்புடைய இஸ்லாமியர்களுக்கு எவ்வித சமூக, சட்ட உதவிகள் செய்தாலோ, அவர்களுடன் தொடர்பு வைத்தாலோ அவர் யாராக இருந்தாலும் அனைவர்மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் பாயும்.''
இது மட்டுமன்றி தொப்பி, தாடி என இஸ்லாமிய மத அடையாளங்களுடன் பள்ளி வாசலுக்குத் தொழுகைக்காகச் செல்லும் இஸ்லாமிய இளைஞர்களையும், தெருவில் நின்று உரையாடும் இளைஞர்களையும் முதியவர்களையும் டி.எஸ்.பி. மயில்வாகணன் தலைமையிலான காவல்துறையினர் கடுமை யான சொற்களால் இழித்து பழிப்பதோடு நடு வீதியிலேயே முழங்காலிடச் செய்து மிரட்டி அனுப்புகின்றனர். ஜமாத்தினர் நியாயம் கேட்கச் சென்றால், அவர்கள்மீதும் பொய்வழக்கு பதிவு செய்வோம் என்று மிரட்டப்படுகின்றனர்.
இவ்வாறு தென்காசி நகர முஸ்லிம்களில் 250 பேர் பொய்வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக தென்காசி நகர இஸ்லாமியர்கள் பலர் பயந்து வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். இதற்கு வழியில்லாதோர் பொய்வழக்கு களில் சிக்கவைக்கப்பட்டு வாய்தாவிற்கு அலையவே நேரம் கழிந்துவிடுவதால், தொழில் செய்ய முடியாமல் மிகுந்த நெருக்கடிகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளாகின்றனர். ஒரு முற்றுகையிடப்பட்ட சமூகமாக மாற்றப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்து முன்னணி தரப்பினரோ எவ்வித நெருக்கடியும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றித் திரிவதோடு பொதுக்கூட்டங்கள் அரங்கக் கூட்டங்கள் வாயிலாக முஸ்லிம்களை மிரட்டுகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அமைதியாக திகழ்ந்துவரும் தென்காசியில் டி.ஐ.ஜி. கண்ணப்பன் மற்றும் டி.எஸ்.பி. மயில்வாகணன் ஆகியோரின் விரோதப்போக்கால் சொந்த ஊரில் முஸ்லிம்கள் சுதந்திரமாக வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடித்து, பதற்றமான சூழ்நிலையை தென்காசியில் உருவாக்கிவரும் டி.ஐ.ஜி. கண்ணப்பன், டி.எஸ்.பி. மயில்வாகனன் மற்றும் காவலர்கள்மீது தக்க நடவடிக்கை எடுத்து தென்காசி நகர இஸ்லாமியர்கள் தங்களது குடும்பத் தாருடன் நிம்மதியாக உழைத்து வாழ்வதற்கான ஒரு சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கு மாறும், காவல்துறையினரின் பொய்வழக்குகளிலிருந்து இஸ்லாமிய இளைஞர்ககளின் விடுதலைக்காக துஆச் செய்யுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு

தென்காசி நகர
முஸ்லிம் ஜமாத்தார்
vellioli@gmail.com

Wednesday, January 14, 2009

'நரமாமிசபட்சினி' நரேந்திரமோடிக்கு உச்சநீதிமன்றம் குட்டு!


மறக்கமுடியுமா?

மோடியின் ஆசீர்வாதத்தோடும்,ஆசியோடும் நடைபெற்ற முஸ்லீம் இனபடுகொலையை!
மாபாவிகள் எம் சகோதரிகளின் மானத்தை பறித்த அந்தநாளை!

எம் சொந்தங்கள் கரிக்கட்டையாக கொளுத்தப்பட்டதை!
வயிற்றில் உள்ள பிஞ்சையும் வயிற்றை கிழித்து கொளுத்திய கொடுமையை! பயங்கரவாதிகள் நாங்கள் தான் செய்தோம் மோடியின் ஆசியோடு செய்தோம் என்று பகிரங்கமாக சொல்லியதை!

தடயங்கள் அழிக்கப்பட்டதை! சாட்சிகள் மிரட்டப்பட்டதை! வழக்குகள் குழியில் புதைக்கப்பட்டதை!

இருப்பினும், உண்மையை ரெம்ப காலம் ஒழிக்கமுடியாது என்ற நியதிக்கேற்ப சில மனிதநேயர்களின் முயற்சியால் புதைக்கப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தோண்டப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைத்துவிடக்கூடாது என்பதிலே ஆரம்பம்முதலே குறியாக இருப்பவர் குஜராத் காவல்துறை தலைவர் பாண்டே என்பவர்.

இதற்கிடையில், இந்தவழக்கில் பாண்டே குறுக்கீடு செய்வதாக கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ - மோடி அரசின் நிருவாகத் திறமையின்மையைக் குறிப்பிட்டுக் கூறினார். குஜராத்தில் நடந்தப்பட்ட கொலைகளும், வன்கொடுமைகளும் இந்திய நாட்டுக்கே அவமானத்தை உண்டாக்கிவிட்டன என்றார். குஜராத்தில் சிறுபான்மையின மக்களுக்கு என்ன கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். அந்தக் கொடுமைகள் இந்திய நாட்டுக்கு அவமானமானவை என்று நீதிபதி குறிப்பிட்டார்.
காவல்துறைத் தலைவரின் தலையீடு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தால் அவரை மாற்றவேண்டும் என நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கப்பட்டது.

ஏற்கனவே,திருவாளர் மோடியை 'ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னனோடு'ஒப்பிட்டு உச்சநீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

தர்மத்தின்[முஸ்லிம்களின்]வாழ்வுதனை சூது[இந்துத்துவாக்கள்]கவ்வும்; மறுபடியும் தர்மம்[முஸ்லிம்கள்]வெல்லும். அன்று இந்த மோடிகள் 'குமுதம்-அரசு' சொன்னதுபோல, இருக்குமிடம் தூக்கு மேடையாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்!

தேங்க்ஸ் டு :நிழல்களும் நிஜங்களும்

பிரதமருக்கு மிரட்டல் கடிதம் தமுமுக

பிரதமருக்கு மிரட்டல் கடிதம் தமுமுக நிர்வாகியை பொய் வழக்கில் சிக்க வைக்க காவல்துறை முயற்சி!


புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் - கடந்த 7ந்தேதி காலை, காவல்துறையின் நடவடிக்கையால் பதற்றத்திற்குள்ளானது.

அதிகாலையிலிருந்தே மஃப்டியில் காவல்துறையினர் ஆங்காங்கே நின்று கொண்டும், போலீஸ் ஜீப்கள் ஆங் காங்கே அலைந்து கொண்டுமிருக்க, சில காவலர்கள் எஸ்.ஏ.நகர் போன்ற இடங்களிலுள்ள வீடுகளில் தமுமுக மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீமை கேட்டு விசாரித்துள்ளனர்.

இந்தத் தகவல் அப்துல் ரஹீமுக்கும் மாநில உலமா அணிச் செயலாளர்
எஸ்.பி.யூசுக்கும் மற்ற தமுமுக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தெரியவர அவர்களும் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு என்ன விஷயம்? என்று கேட்டபோது, ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு காரணத்தை கூறுகின்றனர்.

இது ஏதோ சதியில் சிக்க வைக்கும் திட்டமாக இருக்குமோ என விளங்கிக் கொண்ட நிர்வாகிகள் உடனே உளவுத் துறை மற்றும் காவல்துறை அதிகாரி களிடம் என்னவென்று கேட்க, அவர்கள் மழுப்பியதைத் தொடர்ந்து ஏதோ விபரீதம் என்பதை விளங்கிக் கொண்டு தமுமுக தலைமையைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்கின்றனர்.

உடனே, தலைமையின் ஆலோ சனைப்படி ஒரு வழக்கறிஞருடன் அப்துர் ரஹீமை அழைத்துக் கொண்டு காவல் துறை கண்காணிப்பாளரிடம் நிர்வாகிகள் செல்ல, இதற்கிடையே செய்தி கேள்விப் பட்ட தமுமுகவினரும், பொது மக்களும் குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதியே பதற்றமடைந்தது.

காரை மாவட்டக் காவல்துறை கண் காணிப்பாளர் பழனிவேலுவை உலமா அணிச்செயலாளர் யூசுப் எஸ்.பி. தலைமையில் தமுமுக மாவட்டத் தலை வர் லியாகத் அலி, மாவட்டப் பொருளாளர் ஷாஜகான், துணைச் செயலாளர் யூசுப் கான் ஆகியோர் சந்தித்து என்ன வென்று கேட்க, அவர், ‘எங்களுக்கே என்னவென்று தெரியவில்லை, தமிழகப் போலீஸ் ரஹீமை ஏதோ விசாரிக்க வேண்டும் எனக் கேட்கின்றனர். அனுப்பி வைத்தால் விசாரித்து விட்டு உடனே அனுப்பி விடுவார்கள்’ என்கிறார். ‘இதற்கு ஏன் இப்படி ஊரையே கலங் கடிக்க வேண்டும்? எங்களிடம் சொன் னால் நாங்களே அழைத்து வந்திருப் போமே?’ எனக் கேட்க, அதற்கு அவரிட மிருந்து எந்த பதிலும் இல்லை.


ஏதோ விசாரிக்க அழைத்துள்ளனர் அவ்வளவு தானே? மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என்ற ரீதியில் அப்துல் ரஹீம் காவல்துறை விசாரணைக்காகச் செல்கின்றார்.. தமுமுகவினர் பின்தொடர்கின்றனர். ஆனால் நாகை காவல் கண்காணிப் பாளர் அன்றைய தினம் சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்காக சென்றுள்ளார். அவரது அலுவலகத்தில் அப்துல் ரஹீமை வைத்துக் கொண்டு இல்லை என்று சொன்னதால் சிறிது நேரம் அங்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. நாகை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் மற்றும் நாகை நகர நிர்வாகிகளும் அங்கு குவியத் தொடங்கினர். “அலுவலகத் திற்குள் யாரும் நுழையக்கூடாது. வெளியே நில்லுங்கள்’’ என அங்கிருந்த காவலர்கள் நிர்வாகிகளைப்பார்த்துச் சொன்னதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட் டது. அதன்பிறகு அங்கு வந்த துணை கண்காணிப்பாளர் குணசேகரன் விசாரிக்கத் துவங்குகிறார். அப்போது தான் என்ன விசாரணை என்ற விபரமே நமக்குத் தெரிகிறது.


கடந்த வாரம் சென்னை வந்திருக்கும் பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கூரியர் வந்திருப்பதாகவும் அது காரைக்காலிலிருந்து ஒரு டிராவல்ஸ் பெயரில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது சம்பந்தமான விசாரணை என்பதும் நமக்குத் தெரிய வரவே, இதில் ரஹீமை ஏன் சம்பந்தப்படுத்தினர்? எப்படி சம்பந்தப்படுத்தினர்? என தமுமுக நிர்வாகிகள் வினவினர்.


இங்கு விசாரித்ததில் அந்த மிரட்டல் கடிதத்திற்கும் தமுமுக அப்துல் ரஹீமுக் கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிறது. வேண்டுமென்றே காரைக்கால் காவல்துறை கண்காணிப் பாளர் பழனிவேலு, போக்குவரத்துக் காவல்துறை உதவி ஆய்வாளர் மருத்தனி ஆகியோர் அப்துல் ரஹீமை சிக்க வைத் துள்ளனர், என்பதும் தெரிய வருகிறது.


சென்னை ஏர் இந்தியா நிறுவனத் திற்கு சென்ற கூரியரை தொடர்ந்து அது சம்பந்தமான விசாரணையை மேற்கொண்ட சென்னை போலீசார் அந்த கூரியர் காரைக்காலிலிருந்து அனுப்பப்பட்டிருப் பதால் அதுபற்றி விசாரிப்பதற்காகச் சென்னை எழும்பூர் உதவி ஆய்வாளர் பன்னீர் செல்வத்தை காரைக்கால் அனுப்பி வைக்கின்றனர். அவர் காரை மாவட்டக் கண்காணிப்பா ளரைச் சந்தித்துக் கேட்க, அது அனுப்பப்பட்ட தனியார் கூரியர் அலுவலகத்திற்குச் சென்று அங்கு கடிதப் பிரிவில் பதிவு செய்யும் பெண்ணிடம் விசா ரித்தபோது நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். அதனால் தெரியாது என்கிறார். உடனே காரைக்கால் காவல்துறை ஆலோசனைக்கூட்டம் இரவு நடக்கிறது. அதில் யாரை யாவது ஒரு முஸ்லிம் நபரைப் பிடித்துக் கொடுத்து நமது வேலையை முடித்துக் கொள் வோம். யாரைப் பிடித்து கொடுக் கலாம்? என யோசித்து தமுமுக மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீமை பிடித்து கொடுக்கலாம் என முடிவெடுக்கின்றனர். ஆனால் நியாயமான ஓரிரு காவலர்கள் இதனை மறுக்கவே அதனையும் மீறி எஸ்.பி. இப்படி முடிவெடுத்து விடுகிறார். தனியார் கூரியரில் தபால் பதிவு பிரிவி லிருந்த தனலெட்சுமி என்ற அந்தப் பெண்ணிடம் அப்துல் ரஹீமின் புகைப் படத்தைக் காட்டிய போலீசார் ‘இவர் தான் என சொல்’ என்று சொல்லு மாறு கேட்டுள்ளனர்.


அதற்கு அந்தப் பெண் மறுத்துள் ளார். ஆகவே காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் ‘இவன்தான் என்று சொல். இல்லையேல் உன்னையே சிக்க வைப்போம்’ என மிரட்டியுள்ளார்.


இதற்கிடையில் அப்துர் ரஹீம் நாகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் திலிருந்து வெளிப்பாளையத்திலுள்ள ஆயுதப் படை பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவரை பின் தொடர்ந்து தமுமுகவிரும் செல் கின்றனர். காரைக்கால் காவல்துறையும் நாகை காவல்துறையும் ஏதோ ஒரு பெரிய தீவிரவாதியைப் பிடித்துக் கொண்டு செல்வது போல பெரிய பில்ட்-அப் செய்தனர்.


இதனையடுத்து சென்னை காவல் துறை டீம் ஒன்று கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வரவிருப்பதாகவும் ரஹீமை அங்கு அழைத்துச் செல்கிறோம் என்றும் கூறி டெம்போ டிராவலர் வாகனத்தில் ஏ.கே. 47 துப்பாக்கிகள் ஏந்திய எட்டு பேர்ப் பாதுகாப்போடு நாகூர் காவல்நிலைய ஆய்வாளர் கருணாநிதி தலைமையில் அழைத்துச் செல்லப்படுகிறார்.


இதற்கிடையே காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர் நீதிமன்ற நீதிபதி, ஆளுநர், முதல்வர், மனித உரிமை கமிஷன் என அனை வருக்கும் தந்தி அனுப்பப்படு கிறது.


காரைக்கால் வழியே சென்றால் பிரச்சனையாகும் என எண்ணிய காவல் துறை திட்டச்சேரி வழியாக அழைத்துச் செல்கின்றனர். அந்த வாகனத்தைப் பின் தொடர்ந்து மைதீன், நியாஜுதீன், ஜியாவுதீன், சிக்கந்தர் ஆகியோர் இரு சக்கர வாகனம் இரண்டில் பின்தொ டர்ந்து எங்கு அழைத்துச் செல்கின்றனர் என்ற தகவலைத் தந்த வண்ணமிருந் தனர். அந்த வாகனம் பேரளம் காவல் நிலையத்தில் நின்றதும் அங்கும் தமுமுக வினர் குவிகின்றனர்.


உடனே காவல்துறையினர் தயவு செய்து பின் தொடர்ந்து வராதீர்கள். இப்படிக் கூட்டம் போடாதீர்கள் என கூறுகின்றனர்.


யாரோ முகம் தெரியாத ஒருவருக்குப் பிரச்சனை என்றாலும் ஒன்று திரளும் தமுமுகவினர், தமுமுக மாவட்டச் செய லாளருக்குப் பிரச்சனை எனும்போது ஒன்றுசேர மாட்டார்களா? அப்படித்தான் பின்தொடர்வோம் எனக்கூறிய அவர்கள் கொட்டும் மழையிலும் பின் தொடர்ந்த வண்ணமிருந்தனர். இதற்கிடையே மாலை பத்திரிகைகளிலும் ஒரு சில தனியார் தொலைக்காட்சிகளிலும் பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தமுமுக பிரமுகர் கைது என்ற செய்தி வெளியிடப்படுகிறது.


இச்செய்தியைப் பார்த்த, கேட்ட, படித்த தமிழகத்தின் பல பகுதிகளி லிருந்தும் தமுமுக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு என்ன? என்ன? எனக் கேட்டனர். அவர்களை அமைதி யாக இருக்குமாறு விசாரணையின் போக்கு எப்படி அமைகிறது என்பதைப் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு முடிவெடுப் போம் என்றும் கூறப்படுகிறது..


இந்நிலையில் ஆணைக்காரச் சத்திர காவல் நிலையத்திலிருந்து சிதம்பரம் காவல்நிலையம் அழைத்துச் செல்லப் படுகிறார். அவரைப் பின்தொடர்ந்து மாநில உலமா அணிச் செயலாளர் யூசுப் எஸ்.பி. தலைமையில் காரை மாவட்டப் பொருளாளர் ஷாஜஹான், துணைச் செயலாளர் யூசுப் கான், வர்த்தகர் அணிச் செயலாளர் காசிம் ராஜா, ரஹீமின் மாமா சாஹிர் ஆகியோர் சென்றனர்.


சிதம்பரம் காவல் நிலையத்தில் காத்திருந்த சென்னை காவல்துறை டீமிடம் அவரை ஒப்படைத்தனர்.


சென்னை டீம் பொறுப்பெடுத்தபின் காவல் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. சென்னை திருவல்லிக்கேணி ஆய்வாளர் முத்து வேலுபாண்டி தலைமையில் நான்கு காவலர்கள் மஃப்டியில் வந்திருந் தனர்.


நாகூர் காவல் ஆய்வாளர் கருணாநிதி சென்னை காவல் குழுவிடம் ‘என்ன - ஏ.கே.47 துப்பாக்கி எடுத்து வராமல் வந்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்க, ‘இவர் என்ன தீவிரவாதியா? சந்தேகத் தின் பேரில் விசாரணைக்காக அழைத் துச் செல்கிறோம். அவ்வளவுதான்’ எனக் கூறியபோது அது அவர்களது அனுபவ முதிர்ச்சியைக் காட்டியது.


கருணாநிதி, பழனிவேலு போன்ற வர்கள் இதனைப் பார்த்த பிறகாவது பாடம் (புத்தி) படிக்கட்டும்.


சென்னை காவல்துறை டீம் நீதி யுடனும், நடுநிலையுடனும் செயல்பட்டது பாராட்டுக்குரியது.


இரவு கடலூரில் தங்கி ஓய்வெடுத்து விட்டு மறுநாள் 8ந்தேதி பிரதமர் பங்கு கொண்ட நிகழ்ச்சி முடிந்தபின் பிரதமர் சென்னையை விட்டுக் கிளம்பிய பிறகு சென்னை அழைத்து வரப்பட்ட ரஹீமை எழும்பூர் எஃப்-2 காவல் நிலையத்தில் வைத்து உதவி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். நேரம் செல்லச் செல்ல இங்கும் தமுமுக வினர் குவியத் தொடங்கினர்.


அப்துல் ரஹீமிற்கும் பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது விசாரணை யில் தெரிய வந்தவுடன் இது சம்பந்த மாக எப்போது அழைக்கப்பட்டாலும் வர வேண்டுமெனவும் உண்மைக் குற்ற வாளியைப் பிடிக்க ஒத்துழைப்புத் தாருங் கள் எனவும் கேட்டுக் கொண்டு அனுப்பி வைத்தனர்.


கைகுலுக்கி விடைபெற்ற அப்துல் ரஹீமை தமுமுக நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர், எல்லாப் புகழும் இறை வனுக்கே, தொடர்பு கொண்ட அனை வருக்கும் தகவல் தரப்பட்டது. தமுமுக தலைமையகத்திற்குச் சென்று தலைமை நிர்வாகிகளைச் சந்தித்த பின் மீண்டும் காரைக்கால் சென்றார் அப்துல் ரஹீம்.

சங்பரிவாரின் சதி!
‘பிரதமருக்கு மிரட்டல் கடிதம்’ சம்பந்தமான விசாரணையில் ரஹீம் இணைக்கப்பட்ட செய்தியை அறிந்த சங் பரிவாரங்கள் இதனை ஊதிப் பெரிதாக்கித் தங்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக 12ந்தேதி காரைக்காலில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய் துள்ளனர். இதற்குக் காவல்துறையும் உடந்தை. தமிழகத்திலிருந்து ஆட் களைக் கொண்டு வந்து கலவரம் விளைவித்து முஸ்லிம்களின் பொரு ளாதாரத்தைச் சூறையாடவும் திட்டம். நாகூரில் கலவரம் செய்த சங்பரி வாரங்களை வைத்துக் காரைக்காலி லும் கலவரம் விளைக்கத் திட்டம்? இதனை முறியடிக்க ‘முஸ்லிம் ஒருங் கிணைப்புக்குழு’ மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து முறை யிட்டபோது வழமை போலவே அவர் சமாளித்து அனுப்பியுள்ளார். இந்து முன்னணி இராமகோபாலன் வருவ தாகவும் தகவல். அவர் மீது வாரண்ட் உள்ள நிலையில் எப்படி காரை வரு வார்? காவல்துறை என்ன செய்யப் போகிறது? கலவர நோக்கோடு பேரணி நடத்தபோகும் சங்பரிவார் ஏதேனும் கலவரம் விளைவித்தால் அதற்குக் காரைக்கால் காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.

ரஹீமை சிக்க வைப்பதற்கான காரணங்கள்
தமுமுக காரை மாவட்ட நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி நிறைய விஷயங்களைச் சாதித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வீட்டு மனைப் பட்டா வழங் காமல் இழுத்தடித்துப் பட்டாவிற்கு இவ்வளவு பணம் தந்தால்தான் தருவோம் எனக்கூறிக் கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்படாமல் இருந்தன. இந் நிலையில் ஆர்.டி.ஏ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனு போட்டவுடன், ஒருவாரம் முழுவதும் இரவு பகலாக வேலை பார்த்து அவசர கதியில் 1500 பட்டாக்கள் வழங்கப் பட்டுவிட்டன. பெரிய அளவில் லஞ்சம் எதிர்பார்த்த அரசு அதிகாரிகள் தமுமுக வினர் மீது கடும் கோபம் கொண்டி ருந்தனர்.


காரைக்கால் காத்தாப்பிள்ளை கோடி சிக்னலில் இருந்த ஹோம் கார்டு ஒருவர் தமுமுக மாவட்டச் செயலாளர் ரஹீமை தரக்குறைவான வார்த்தை யால் திட்டிவிட, இதைக் கேள்விப்பட்ட தமுமுகவினர் சாலையில் அமர்ந்து சம்பந்தப்பட்ட ஹோம்கார்டு மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இதில் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் மருத்தணி கடுப்பாகிப் போனார்.


டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு முஸ்லிம்கள் ஆண்டுதோறும் தங்களது கண்டனத் தையும் எதிர்ப்பையும் காட்டி வருகின் றனர். இதைக் கெடுக்கும் விதமாகவும் தடுக்கும் விதமாகவும் காரைக்கால் காவல்துறை சங்பரிவாரத்தை தூண்டி விட்டு அவர்களையும் அதே தினத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த இவ்வருடம் அனுமதி வழங்கி னர். இதனைத் தட்டிக்கேட்டது தமுமுக உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள்.


முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கக் கூடிய பகுதிகளில் பிஜேபி அருள் முருகன் தலைமையில் கார் ஓட்டுனர் சங்கம் என்ற பெயரில் பலகை அமைத்து சங்பரிவாரத்தின் அட்டூழி யம் செய்ய முயன்றதற்குக் காவல் துறை அனுமதி வழங்கியது. இதனைத் தட்டிக்கேட்டனர் தமுமுகவினர்.


நேரு நகர் பள்ளிவாசலுக்காக வாங்கப்பட்ட இடத்தில் ஒரு பெயர்ப் பலகைக்கூட வைக்கவிடாமல் பி.ஜே.பி அருள்முருகன் உள்ளிட்ட சங்பரி வாரத்தினர் அட்டகாசம் செய்து வந்த னர். இதனை எதிர்த்துக் களமிறங் கியது தமுமுக.


நல்லம்பலில் நடைபெற்ற வரதட் சணை ஒழிப்புத் திருமணத்தில் கலந்து கொண்டதற்காகக் காரைக் கால் காவல்துறை கடந்த 1999ல் அணில் சுக்லா என்பவர் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தபோது தமுமுகவினர் 10 பேர் மீது பொய் வழக்குப் போட்டனர். அவ்வழக்கு முடிவு தமுமுகவினருக்கு ஆதரவாக வந்தது. முகத்தில் கரி பூசிக் கொண்ட னர் காவல்துறையினர்.


சேத்தூரில் இறந்துபோன ஒருவ ரின் சடலத்தை அடக்க விடாமல் தடுத்தவர்களுக்கு எதிராக தமுமுக களமிறங்கியபோது எதிர்த்தவர் களுக்குச் சாதகமாக இன்றைய போக்குவரத்து ஆய்வாளர் மருத்தணி செயல்பட்டார். அவருக்கு எதிராக நின்ற தமுமுக இறுதியில் உடலை அடக்கம் செய்தது.


சேத்தூரில் பள்ளிவாசல் கட்ட விடாமல் சங்பரிவார் தடுத்தபோது தமுமுகவினர் எதிர்கொண்டு நின்ற னர். அதோடு மக்கள் நலப்பணிகள் பல செய்து வரும் தமுமுகவினருக்கு எதிராக சங்பரிவாரோடு கைகோர்த் துக் கொண்டு இன்றைய காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவலர் கள் தங்களுடைய அரிப்பை இதன் மூலம் சொரிந்து கொள்ள நினைத்துள்ளனர்.

செய்தி ஊடகங்களின் இரட்டை நிலைகள்


பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இந்தச் செய்தி பரபரப்பாக வெளியானதற்கு பி.ஜே.பியின் முக்கிய நபர் ஒருவரே காரணம். அவர்தான் அனைத்து செய்தியாளர்களுக்கும் போன் செய்து ரஹீமின் பெயர் மற்றும் முகவரிகளைத் தந்துள்ளார். அதே வேளையில் மறுநாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மாநில உலமா அணிச் செயலாளர் யூசுப் எஸ்.பி செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறிய மறுப்பை வெளியிடாமல் பார்த்துக் கொண்டது. இஸ்ரேலைக் கண்டித்ததை மட்டும் ஒளிபரப்பிய உள்ளூர்த் தொலைக்காட்சி காரைக்கால் காவல்துறையைக் கண்டித்த செய்தியை ஒளிபரப்பவில்லை


விசாரணை வளையத்தில்...

சென்னை போலீசாரின் விசார ணைக்கு தமுமுக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்புத் தந்து யாரையெல்லாம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற பட்டியலையும் தந்துள்ளது.


பாரதப் பிரதமராக மன்மோகன் சிங்கோ சோனியாவோ வர வேண்டும் என்பதற்காக உயிரைக் கொடுத்து தேர்தல் பணியாற்றியவர்கள் தமுமுக வினர். தமுமுக சுனாமியின்போது பணியாற்றியதைக் கேள்விப்பட்டு குளச்சல் வந்த பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டிச் சான்றழித்தார்.


இட ஒதுக்கீடுக்காக டெல்லியில் பேரணி மற்றும் மாநாடு நடத்திய போதும் பாபரி மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ல் டெல்லியில் நடத்திய பேரணியின் முடிவிலும் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தமுமுக தலைவர் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். இப்படி எப்போதும் நல்லுறவோடு உள்ள தமுமுகவினரை பிரதமருக்கு எதிரான விசாரணை வளையத்திற்குள் இழுத்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.


இதே வேளையில் மன்மோகன் சிங் மற்றும் அவரது வகையறாக்கள் பிரதம ராக வந்துவிடக்கூடாது என்பதற்காக கங்கணம் கட்டி கொண்டிருந்தவர்கள், அவர் பிரதமராக வந்த பின்பும் அவரை கவிழ்த்து விட்டு குறுக்கு வழியில் எப்படியாவது பிரதமராக வந்து விட வேண்டும் என்பதற்காகச் செயல்படு பவர்கள். வாஜ்பாய், அத்வானி வகை யறாக்கள் ஏன் இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வில்லை.


கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத் தன்று நல்லம்பல் சேத்தூர் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பணியாற்றுவதற் காக தமுமுகவினர் சென்றிருந்தபோது திருபட்டினத்தில் ஒரு வீட்டில் தங்கி யிருந்த 4 இந்துத்துவ தீவிரவாதிகள் வெடிகுண்டுகளோடு பிடிபட்டனர். இந்தச் செய்தி வெளிவராமல் காரைக் கால் காவல்துறை மிகக்கவனமாகப் பார்த்துக் கொண்டது. அவர்களை ஏன் விசாரிக்கவில்லை. இதையெல்லாம் விட்டு விட்டு அப்பாவி முஸ்லிம்களில் யாரையாவது சிக்க வைக்கக் காவல் துறை முயற்சிப்பது கைவிடப்பட வேண்டும். காரைக்கால் திட்டச்சேரி, நாகூர் என விசாரணை வளையம் விரிவடைகிறது. உண்மை குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் கருத்து வேறு பாடில்லை. ஆனால், குற்றவாளியைத் தப்பவிடும் வேலையைக் காவல்துறை கைவிட வேண்டுமென்பதே அனை வரின் எதிர்பார்ப்பாகும்.

ஒன்றுபட்ட ஜமாஃத்

பிரிந்து கிடந்த முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக, அமைப்புகளாக, இயக்கங்களாக, ஜமாஅத்களாக இருந்தது. ஆனால் பொதுவான ஒரு பிரச்சனை எனும்போது ஒன்றுபடுவது சுனாமி, பாபர் மசூதி, இட ஒதுக்கீடு போராட்ட நேரங்களில் நாம் கண்டு வந்த உண்மை. அதேபோல காரைக்கால் காவல்துறையின் இந்த மோசமான செயலால் மீண்டும் அனைவரும் ஒன்றுபட்டு ‘முஸ்லிம் ஒருங்கிணைப்புக் குழு’ என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி இனி எப்போதும் இந்த அமைப்பு அமைப்புச்சாராமல், அரசியல் சாராமல் சமுதாயப் பிரச்சனைகளின் போது ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்ற உறுதியோடு அல்லாக்குட்டி என்கிற அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்து.

வரவேற்பு பேரணி

விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டு அப்துல் ரஹீமை அழைத்து வரும்போது காரைக்கால் எல்லையான நண்டலாற்று பாலத்திலிருந்து நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் அணி வகுக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. 10 கி.மீ இவ்வாகன பேரணி சென்று சாலைகளின் இரு ஓரங்களிலும் நின்றிருந்த பொது மக்கள் பார்க்க அவரது வீடுவரைக் கொண்டு சென்று விட்டு வந்தனர். அவரது வீட்டினர் சந்தோஷக் களிப்பில் எதிர்கொண்டனர். ஒரு சகோதரனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அனைவரும் அணி திரள்வோம் என்ற பிரகடனத்தை இப்பேரணி கட்டியம் கூறியது.

பாராட்டுக்குரியவர்கள்

தமுமுக காரைக்கால் மாவட்ட தலைவர் லியாகத் அலி, மாவட்டப் பொருளாளர் ஷாஜகான், மாவட்ட துணைச் செயலாளர் யூசுப்கான், மாவட்ட துணைத் தலைவர் ஷேக் அலாவுதீன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் மைதீன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் காசிம் ராஜா மற்றும் நகர நிர்வாகிகள் ஜியாவுதீன், நஜீமுதீன், நியாஜுதீன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜா முகம்மது, திருப்பட்டினம், கருக்கங்குடி, திருநள்ளார், காரைக்கால் கிழக்கு கிளை நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டது பாராட்டுக்குரியது.

Tuesday, January 13, 2009

ஓமனில் வேலை: 24, 25ம் தேதிகளில் இன்டர்வியூ

சென்னை: ஓமன் நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு சிவில் என்ஜீனியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆளெடுப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான இன்டர்வியூ வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

ஓமன் நாட்டின் மஸ்கட்டில் உள்ள கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் மிகப்பெரிய நிறுவனத்திற்கு சிவில் இன்ஜினீயரிங் பட்டம் பெற்ற பொறியாளர்கள், சிவில் காண்ட்ராக்ட் நிர்வாகிகள், புராஜக்ட் நிர்வாகிகள், பிளானிங் இன்ஜினீயரிங் பட்டம் பெற்ற எச்வி ஏசி புராஜக்ட் பொறியாளர்கள், எலக்ட் ரிகல் பிரிவில் தேர்ச்சி பெற்ற புராஜக்ட் இன்ஜினீயர்கள், குவாண்டிட்டி சர்வேயர்கள் பணிக்கு ஆட்கள் தேவை என்று தமிழக அரசுக்கு சொந்தமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தெரி வித்துள்ளது.

கட்டுமானப் பிரிவில் 8 முதல் 15 ஆண்டு பணி அனுபவம் ஆங்கிலத்தில் பேசும் திறமை ஆகியவை இருக்க வேண்டும்.

பி.காம் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்து, ஆங்கிலத்தில் பேசும் திறமை பெற்ற அலுவலக வரவேற்பாளர்கள் (ஆண்) தேவைப்படுகிறார்கள்.

மேற்காணும் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு ஜன. 24, 25ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி, பேக்ஸ் எண்கள் குறித்த விவரம் ...

OVERSEAS MANPOWER CORPORATION LTD
(A Government of Tamilnadu Undertaking)
First Floor, Tamilnadu Housing Board Commercial Complex,
No.48, Dr.Muthulakshmi Salai, Adayar,
Chennai - 600 020, Tamilnadu, India.
Tel: 0091-44-24464268, 24464269
Fax: +91 44 24464270
Email:omc@md4.vsnl.net.in
omc_cmd07@rediffmail.com

இணையதளம் - www.omcmanpower.com

தகுதியும், அனுபவமும் உள்ளவர்கள் தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம் மற்றும் பாஸ்போர்ட் இரண்டு நகல்களுடன் கலந்து கொள்ளலாம்.

காஸா துயரம் துடிக்கும் உயிர்களைக் காப்பாற்றத் தடை! வெடிக்கும் மருத்துவர்கள்!!




ஜோர்டானைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் முஹம்மத் அல் ஹாலிதி. அவர் மனம் இப்போது போல் எப்போதுமே வேதனை அடைந்திருக்காது. பாலஸ்தீனில் மக்கள் படும் துயரங்களைக் கண்டு வேதனையடைந்த ஹாலிதி, அவர்களுக்கு உதவுவதற்காக பல்லாயிரம் மைல்களைக் கடந்து பயணம் செய்தார்.


இஸ்ரேலின் தரைவழி தாக்குதல், வான்வழி தாக்குதல், கடல்வழி தாக்கு தலை சந்தித்து சொல்லொ ணாத் துயரங்களை அனுபவித்து வரும் அந்த அப்பாவி மக்களைக் காப்பாற்றலாமே என்ற தவிப்பில் அவர் பயணம் செய்தார். காஸா எல்லையை நெருங்கினார். ஆனால் எகிப்தின் அதிகாரிகள் டாக்டர் முஹம்மத் அல் ஹாலிதியை தடுத்தனர். 14 நாட்களுக்கு மேலாக வேதனையில் வாடிவரும், கொடும் காயங்களால் அலறும் மக்களைக் காப்பாற்றச் சென்ற அவர், எகிப்திய அதிகாரிகளால் தடுக்கப் பட்டார்.


ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என காத்திருந்தார். காஸா - எகிப்திய எல்லையில் மூன்று நாள் காத்திருந்தும் பலனில்லை. தயவு செய்து என்னை காஸாவிற்குள் செல்ல அனுமதியுங்கள் என கெஞ்சினார். “நான் என்னுடைய சொந்த பொறுப்பில் செல்கிறேன், என்னுடைய உயிருக்கு நானே பொறுப்பு, தயவு செய்து எல்லை களைத் திறந்து விடுங்கள், அங்கே ஏராளமான குழந்தைகளும், முதியவர் களும், பெண்களும் மருத்துவ உதவி யின்றி இறந்து கொண்டிருக்கிறார்கள்’’ என கெஞ்சுகிறார்.




இந்த டாக்டர் மட்டுமல்ல. உலகெங் கிலுமிருந்து வந்த நூற்றுக்கணக்கான டாக்டர்களும் இவ்வாறு காஸா எல்லை யில் நுழைய முடியாமல் தவிக்கிறார்கள். மலேஷியா, இந்தோனேஷியா, துருக்கி, கிரீஸ் முதலிய நாடுகளிலிருந்து டாக்டர் கள் மனம் பதைபதைக்க நின்றனர்.


“காஸாவுக்கு செல்லும் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் தர முடியாத நிலையில் இருக்கிறோம்’’ என எகிப்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹாத்தம் அல் ஜபலி கூறினார்.


“அங்கு தாக்குதல் நிறுத்தப்படட்டும், பிறகு நாங்கள் உங்களை உள்ளே அனுமதிப்போம்’’ எனக் கூறி நிர்தாட் சண்யமாக மறுத்து விட்டார். அவர் மறுத்துக் கொண்டி ருக்கும் போது காஸாவில் 800 பேருக்கும் மேல் பலியாகி இருந்த னர். 220க்கும் மேற் பட்ட பெண்களும், 100க்கும் மேற்பட்ட குழந்தை களும் பலியாகி இருந்தனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படு காயம் அடைந்திருந்தனர்.


எகிப்து, ரஃபா எல்லையைத் திறந்து வைத்திருந்தது. காஸாவிலிருந்து மக்களுக்கு உலகைப் பார்க்கும் ஒரே கண்ணாடியாக ரஃபா எல்லை மட்டுமே அமைந்திருந்தது. அந்தப் பகுதி வழி யாகவே படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


அவசர சிகிச்சை செய்தால் பிழைக்க வாய்ப்புண்டு என்ற நிலையில் உள்ளவர்கள் ஏராளமானவர்கள் இறந்து போன செய்தியறிந்து எல்லையிலுள்ள நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் வேதனையில் ஆழ்ந்தனர். சில நூறு மீட்டர் தூரம் மட்டுமே உள்ள பகுதியில் ஏராளமானவர்கள் அவதியில் இருக்கும் நிலையில் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே, இது வெட்கக்கேடாக இருக்கிறது என வேதனைப்படுகிறார் முஹம்மத் அல் ஹாலித்.


இஸ்ரேலின் அத்துமீறல்களையும், அராஜகங்களையும் மவுனமாக பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்க முடிகிறது.


எது எப்படியாயினும் ஒருநாள் நாங்கள் காஸாவில் நுழையத்தான் போகிறோம் என உறுதிபடக் கூறுகிறார் டாக்டர் முஹம்மத் அல் ஹாலிதி.

இஸ்ரேல் தூதரகத்திற்கு செருப்பு மரியாதை!

நாசகார ஆயுதங்களின் மூலமாக மனிதகுலத்தினை அச்சுறுத்தி வரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு மிகவும் கேவலமான அனுபவம் சமீபகாலமாக ஏற்பட்டு வருகிறது.


அணுஆயுதங்களை ஏராளமாக குவித்து வைத்திருக்கும் அமெரிக் காவும், அமெரிக்காவின் ஏவல் நாய் என வரலாற்றில் வர்ணிக்கப்படும் யூத இனவெறி இஸ்ரேலும் காலணி மரியாதைக்கு இலக்கானது.


ஈராக்கை குதறிய கொடூரன் ஜார்ஜ் புஷ் மீது ஈராக்கின் இளம் பத்திரிகை யாளர் முன்ததர் அல் ஜைதி தனது காலணிகளை வீசி கௌரப்படுத்தி னார். அப்பாவி மக்களின் மீது பேரழிவு ஆயுதங்களை வீசிய சீரழிவின் நாயகன் ஜார்ஜ் புஷ் மீது காலில் போடும் செருப்புகளை வீசி அவரை வரலாறு காணாத அவமானத்தில் ஆழ்த்தினார்.


தற்போது காஸாவில் படுகொலை களை நிகழ்த்திவரும் இனவெறி இஸ்ரேலின் ஈனச் செயலைக் கண் டித்து உலகெங்கும் கண்டன ஆர்ப் பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


குறிப்பாக சிலி நாட்டில் இஸ்ரேலிய தூதரகத்தில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத் தில் தலைநகர் சாண்டியாகோ-வில் உள்ள இஸ்ரேலியத் தூதரகம் செருப்பு களால் நிரம்பி வழிந்தது.


பழைய செருப்புகள் அடங்கிய குப்பைக் கூடைகளை மலைபோல வீசியதால் இஸ்ரேல் தூதரகம் முடை நாற்றம் வீசுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிணங்கள் விழும்போது இஸ்ரேலில் விருந்து!

பிணங்கள் விழும்போது இஸ்ரேலில் விருந்து!
நியூயார்க் மேயரை உலுக்கும் முஸ்லிம்கள்!

கொலைகார கொடூர நாடான இஸ்ரேலைக் கண்டித்து உலகெங்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வரும்போது எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினாற் போன்ற ஒரு செயலை நியூயார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் செய்திருக்கிறார்.


நியூயார்க் மேயர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். இஸ்ரே லியப் பிரதமர் யஹுத் உல்மர்ட் டையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹுத் பராக்கையும் சந்தித்து உரையாடினார். இஸ்ரே லில் உள்ள அஸ்ஹெலான், ஸ்டெராட் என்ற இரு நகரங் களுக்கும் சென்று அங்கு ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் வீச்சினால் பாதிக்கப்பட்ட இஸ்ரே லிய ராணுவத்தினருக்கு ஆறுதல் கூறினார். “நான் நிறைய பேச விரும்புகிறேன்; அமெரிக்கர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு ஆதர வாகவே இருக்கிறார்கள்; இஸ்ரேல் எதைச் செய்தாலும் நன்மைக்காகவே செய்யும். இஸ்ரேல் தனது பாதுகாப்புக் காக காஸாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது; இதில் தவறு இல்லை’’ என்று தெரிவித்தார்.


இது செய்தி ஊடகங்களில் வெளி யானதைத் தொடர்ந்து நியூயார்க் மக்களின் ஆத்திரம் கரையுடைத்த வெள்ளமென பொங்கியது. அமெரிக்க முஸ்லிம் கூட்டமைப்பு என்ற அமைப் பின் ஒருங்கிணைப்பில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.


சமாதானம் நாடும் நியூயார்க் மக்களை மைக்கேல் ப்ளூம்பெர்க் அவமானப்படுத்தி விட்டார் என்று கூறிய அந்த அமைப்பினர் நூற்றுக் கணக்கானவர்கள் நியூயார்க்கின் சிட்டி ஹால் முன்பு திரண்டனர். ஆவேசம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நியூ யார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம் பெர்க்கின் படத்தின் மீது காலணி களை வீசி மரியாதை(!) செய்தனர்.


போர் எதிர்ப்பு தொழிலாளர் அமைப்பு இந்த காலணி மரியாதையில் முக்கியப் பங்கு வகித்தது.


மைக்கேல் ப்ளூம்பெர்க் ஓர வஞ்சனை கொண்டவராக நடந்துள்ளார். ராக்கெட் வீச்சினால் தாக்கப்பட்ட இஸ்ரேலிய நகரங்களுக்கு சென்ற அவர் காஸாவின் எந்தப் பகுதிக்காவது சென்றாரா? எந்த பாலஸ்தீன மக்களை அல்லது தலைவரையாவது சந்தித் தாரா? இது அவரது ஒருதலைப்பட்ச மான ஆளுமையைக் காட்டுகிறது. இவர் அனைத்து நியூயார்க்கர்களுக்கும் பொதுவானவர். இஸ்ரேலிய தரப்புக்கு மட்டும் அவர் ஆதரவாகப் பேசக் கூடாது.


நாங்கள் இந்நாட்டு குடிமக்கள். நாங்கள் நியூயார்க் நகரத்தின் மேம் பாட்டுக்காக வரி செலுத்துகிறோம். அவரைத் தேர்ந்தெடுத்தவர்கள் நாங் களே என்று கூறும் முஸ்லிம் கூட்ட மைப்பின் தலைவர் ஹாஜி கான், ப்ளூம் பெர்க் நியூயார்க் திரும்பியதும் அவரை நேரில் சந்தித்து தங்கள் கண்டனங் களை தெரிவிப்போம் என்றார்.


நியூயார்க்கில் 10 லட்சம் முஸ்லிம் கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது