Monday, January 18, 2010

முஸ்லிம் மூதாட்டியை அடக்க விடாமல் மையவாடியை அபகரிக்கும் அதிகாரிகள்!





விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே 208 கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேரூராட்சி சேத்தூர். இங்கு 8 வருடங்களுக் முன்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சுலைமான் என்ற ஏசைய்யா, அப்துல்லா என்ற ஜெபமணி, இவர்களின் தாயார் மரியம் என்ற ஞானவடிவம்மாள் ஆகியோரும் இன்னும் டாக்டர் கரீமுல்லா, முதியவர் முகம்மது இபுறாஹிம் என்ற கோபால கிருஷ்ண தேவர் போன்றோர் இவ்வூரில் முஸ்லிம்களாக வாழ்ந்து வருகின்றனர்.

சேத்தூரில் முஸ்லிம்களுக்கான பொதுமையவாடி தேசிய நெடுஞ்சாலையில் காலம் காலமாக இருந்துவருகிறது. ஆனால் அது பராமரிப்பில்லாமல் இருக்கின்றது. இவ்வூரில் முஸ்லிம்களாக வாழ்ந்து வரக்கூடிய மேற்கண்ட சகோதரர்கள் அதனை சீர் செய்து, அளந்து எல்கைகளை வரையறுத்துத் தரும்படி பலமுறை மாவட்ட ஆட்சித்தலைவர் (அப்போதிருந்த ஜவஹர்) மனுச்செய்துள்ளனர். இதன் விளைவாக இறுதியாக கடந்த 16. 02. 2007 அன்று சேத்தூரின் அப்போதைய கிராம நிர்வாக அதிகாரி இந்த இடம் சம்பந்தமாக ஒரு அறிக்கையை வட்டாட்சியருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அனுப்பியுள்ளார். அதில் புல எண் : 348/1 விஸ்தீரணம் 0.18.0 ஏர்ஸ் அரசுக்குச் சொந்தமான பொதுமயானம் என்றும் இது முஸ்லிம்களின் பயன்பாட்டில் உள்ளது என்றும் மேலும் புல எண் : 327/1, விஸ்தீரணம் 0.16.0 ஏர்ஸ் புறம்போக்கில் கோவில், பள்ளிவாசல், மந்த வெளி என தாக்கலாகி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். புல எண் 327/1 ல் உள்ள பள்ளிவாசலுக்காக வேண்டி உள்ள பொது மையவாடிதான் 348/1 ஆகும். இந்நிலையில் இங்கு கடந்த 7.01. 2010 அன்று மூதாட்டி மரியம் மரணமாகிவிட்டார். இவரை மேற்கண்ட முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தபோது காவல்துறையும், வருவாய்துறையும் சேர்ந்து கொண்டு இந்த இடம் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு. இங்கு அடக்கம் செய்யக் கூடாது என தடைவிதித்தனர். உடனே மரியம் அவர்களின் மகன்களான அப்துல்லா , சுலைமான் ஆகியோர் இராஜபாளையம் தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறினர் விருது நகர் மாவட்டத் தலைவர் அக்பர் அலி தலைமையில் இராஜபாளையம் கிளை நிர்வாகிகள் சேத்தூர் காவல் துறை ஆய்வாளரைச் சந்தித்து இது இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான மையவாடி. இங்குதான் அடக்கம் செய்வோம் என்றனர்.

காவல் துறை மற்றும் வருவாய் துறையின் சதி

இதற்கிடையில் வருவாய் துறையும், காவல் துறையும் சேர்ந்து கொண்டு மையாவாடிக்கு அருகில் இருக்கும் நாடார் சமுதாயத்தைச் சார்ந்தவர்களையும், மரியம் அவர்களின் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மற்ற பிள்ளைகளையும் தூண்டிவிட்டு நாங்கள் மரியம் என்ற எங்கள் தாயைகிறிஸ்தவ கல்லறையில்தான் அடக்கம் செய்வோம் எனக் கூறுமாறு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக ஆக்கி முஸ்லிம்களுக்கு சொந்தமான மையவாடியில் அடக்கம் செய்ய விடாமல் தடைசெய்தனர். மரியம் அவர்கள் முஸ்லிமாக வாழ்ந்தாலும் அரசாங்கப் பதிவேட்டில் அவருடைய பெயர் ஞான வடிவம்மாள் கிறிஸ்டின் என்றே உள்ளது. இதனைக் காரணம் காட்டி இந்த பிரேதத்தை கிறிஸ்வத கல்லறையில்தான் அடக்க வேண்டும் என்று காவல்துறையும் கூறியது. இறுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான மையவாடியில் அடக்கம் செய்யவிடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றினர். இந்நிலையில் காவல் துறை மற்றும் வருவாய் துறையின் சதியினால் பிரச்சினை திசைமாறுவதைக் கண்ட இறந்த மூதாட்டியின் இரண்டு மகன்களும் தவ்ஹீத் சகோதரர்களை தொடர்பு கொண்டு இராஜபாளையம் முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்ய முன்வந்தனர். சேத்தூரிலிருந்து 12 கிமீ தொலைவிலுள்ள இராஜபாளையம் முஸ்லிம் மையவாடியில் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

அமைதிப் பேச்சு வார்த்தை

பின்னர் வருவாய் வட்டாட்சியர் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்து வருகின்ற 11. 01. 2010 திங்கள் கிழமை மாலை 4 மணியளவில் இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பிரச்சினைக்குரிய இடம் சம்பந்தமாக உங்கள் தரப்பில் ஐந்து நபர்களும் எதிர்தரப்பில் ஐந்து நபர்களுமாக சமாதானக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். நமது தரப்பில் மேலாண்மைக் குழு உறுப்பினர் ஸைஃபுல்லாஹ், விருது நகர் மாவட்டத் தலைவர் அக்பர் அலி, துணைத்தலைவர் ஜான் பாஷா , நெல்லை மாவட்ட அரசு நலத்திட்ட செயலாளர் குறிச்சி சுலைமான், டைகர் சம்சுதீன், டாக்டர் கரீமுல்லாஹ் ஆகியோர் பெயர் கொடுக்கப்பட்டு வட்டாட்சியர் காளிமுத்து தலைமையில் காவல் ஆய்வாளர் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அதிகாரி துரைராஜ் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

அரசுத் தரப்பு : எதற்கு நீங்கள் வந்துள்ளீர்கள்.
ஸைஃபுல்லாஹ் : எதற்கு எங்களை அழைத்தீர்கள்.
அரசுத்தரப்பு : அரசுக்கு சொந்தமான இடத்தை மையவாடியாக பயன்படுத்தக்கூடாது.
ஸைஃபுல்லாஹ் : இதை காலம் காலமாக முஸ்லிம்கள் மையவாடியாக பயன்படுத்தியுள்ளனர். அதற்கான ஆதாரமாக இதுவரை மூன்று முஸ்லிம் கப்ருகள் (புதைகுழிகள்) அங்கு இருந்து வருகின்றன. இன்னும் 500 பேருக்கு மேல் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசுத் தரப்பு : இது முஸ்லிம்களின் புதை குழிதான் என்பதற்கான ஆதாரம் என்ன?
ஸைஃபுல்லாஹ் : அது முஸ்லிம்களுக்குரியதில்லை என்பதற்கான ஆதாரத்தை நீங்கள் தாருங்கள் என்றார்.மேலும் அவர் கூறுகையில் இறுதியாக கடந்த 2007 ஆம் ஆண்டு சேத்தூர் கிராம நிர்வாக அதிகாரி இந்த இடம் சம்பந்தமாக ஒரு அறிக்கையை வட்டாட்சியருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அனுப்பியுள்ளார். புல எண் : 348/1 விஸ்தீரணம் 0.18.0 ஏர்ஸ் அரசுக்குச் சொந்தமான பொதுமயானம் என்றும் இது முஸ்லிம்களின் பயன்பாட்டில் உள்ளது என்ற அறிக்கை நகலை ஸைஃபுல்லாஹ் அவர்கள் காண்பித்தார். அதைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் காளிமுத்து அந்த அதிகாரி கொடுத்த அறிக்கையையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். உடனே டைகர் சம்சுதீன் என்பவர் அரசு ஆவணத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மையவாடி என்று உள்ளது எனக் குறிப்பிட்டார். உடனே அரசு ஆவணத்தை வட்டாட்சியர் எடுத்துக் காண்பித்தபோது அதில் திருத்தம் செய்திருப்பதைப் பார்த்து சம்சுதீன் அதிர்ச்சி அடைந்தார்.

இறுதியாக இந்த இடம் முஸ்லிம்களின் மையவாடிதான் என்பதற்கு மேலும் வலுவான ஆதாரங்களைக் கொடுக்கும் வரை அந்த இடத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று கூறி கூட்டத்தை முடித்தார். எதிர் தரப்பில் உள்ளவர்கள் இறுதிவரை வாய்திறக்காமல் இருந்ததைப் பார்க்கும் போது தாசில்தார் மட்டுமே எதிர்தரப்புக்கு வக்கீலாகவும் பின்னர் அவரே நீதிபதியாகவும் இருந்து இந்த இடம் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு என்று கூறி ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது ஜமாஅத்தார்களுக்கு வேதனையாக இருந்தது.

சேத்தூர் கிராமம்…

இங்கு நானுறு ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் வாழ்ந்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் தேவர் சமுதாயத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட கலவரத்தால் முஸ்லிம்கள் அங்கு வாழ முடியாமல் பலர் தங்கள் சொத்துகளை அப்படியே விட்டுவிட்டும். சிலர் கேட்ட விலைக்கே வீடுகளையும் விளைநிலங்களையும் விற்பனை செய்து விட்டும், அருகிலுள்ள இராஜபாளையம் சிரிவில்லி புத்தூர்,சம்பந்த புரம், ஜீவா நகர் ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர். கோபால கிருஷ்ண தேவராக இருந்து தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சமூக சேவகர் பெரியவர் முகம்மது இபுறாஹிம் (75), டாக்டர் கரீமுல்லா ஆகியோர் கடந்த ஐந்து ஆண்டுகளாக முஸ்லிம்களுக்குச் சொந்தமான மையவாடியை அதன் அருகே உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும் என்று முதல்வரின் தனிப்பிரிவிற்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இரண்டாயிரமாவது ஆண்டில் அரசு இந்த இடத்தில் ஆரம்ப சுகாதர நிலையம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தது. அதன் பின்னர் 2007ம் ஆண்டு கிராம நிர்வாக அதிகாரி இது முஸ்லிம்களின் பயன்பாட்டிலுள்ள மாயனம் என்று அறிக்கை தாக்கல் செய்தார். இந்த இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்காவிட்டால் தென்மாவட்ட இஸ்லாமியர்களை அழைத்து தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் மையவாடியை மீட்கும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று மேலாண்மைக் குழு உறுப்பினர் ஸைஃபுல்லா தெரிவித்தார்.

Source: tntj

Wednesday, January 13, 2010

பணிந்தது விஜய் டிவி! அல்ஹம்துலில்லாஹ்!

star-vijay பர்தா விஷயத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய நிகழச்சியை விஜய் டிவி ஒளிபரப்ப இருந்ததையும் அதை கண்டித்து விஜய் டிவி அலுவலக முற்றுகைப் போராட்டத்தை தமிpழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்ததையும் தாங்கள் அறிவீர்கள்.

மேலும் எங்களுடன் இது குறித்து அறிவிபுபூர்வமாக விவாதிக்க நாங்கள் தயார் என்று தவ்ஹீத் ஜமாஅத் விஜய் டிவிக்கு நேரடி விவாத அழைப்பும் கொடுத்திருந்தது. Click Here

தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தை மதியம் 2 மணி அளவில் தொடர்பு கொண்ட விஜய் டிவி நிர்வாகத்தினர்,”அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம் என்றும் முஸ்லிம்கள் புன்படும் விதத்தில் ட்ரையலர் ஒளிபரப்பியதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது!

எல்லாப் புகழும் இறைவனுக்கு!

இந்தச் செய்தி பற்றி வீனர்களின் விமர்சனங்களுக்கு பதில் Click Here
http://onlinepj.com/vimarsanangal/vijay_tv/

போராடத்தூண்டாதே! (க)மலஹாசனுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

தீவிரவாதத் தாக்குதல்களுக்கு முஸ்லிம் வியாபாரிகள் திருட்டு சீடிக்கள் விற்கும் பணம்தான் காரணம் என்று பொய் கூறி மத துவேசத்தை தூண்டிவிடும் (க)மலஹாசனே!

நீ சம்பாத்திக்கும் கறுப்புப் பணத்தை இந்து தீவிரவாதிகளுக்கு வழங்குவதை நிறுத்துக் கொள்! உன் முஸ்லிம் விரோதப்போக்கு தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்!

இஸ்லாமியர்களுக்கு எதிரான கூத்தாடி (க)மலஹாசனின் முஸ்லிம் விரோத போக்கைக் கண்டித்துதான் இந்த கண்டனத்தை பதிவு செய்கிறோமே தவிர இதன் மூலம் திருட்டு வீசிடி விற்கும் வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக யாரும் விளங்கிக் கொள்ளக் கூடாது.

ஆபாசத்தை உறமிட்டு வளர்க்கும் சினிமாவும் சதயை விற்று பிழைப்பு நடத்தும் கூத்தாடிகளும் அவர்கள் நடித்த சினிமாக்களை சீடிக்களாக வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் இஸ்லாத்தின் பார்வையில் குற்றமிழைத்தவர்களே!

இத்தகைய கேவலமான கூத்தாடிகள் கூட தீவிரவாத்தோடு முஸ்லிம்களை சம்பந்தபடுத்தி பேசுவதற்கு வழிவகுத்துவிட்ட கூத்தாடிகளின் சீடிக்களை விற்கும் முஸ்லிம் வியாபாரிகளும் கண்டனத்திற்குரியவர்கள்தான் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது!

விஜய் டிவி அலுவலக முற்றுகை

neeya_naana3aமுஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது மிகவும் கேவலமானது ஒவ்வொரு பெண்களையும் நிர்பந்தபடுத்தி தான் பர்தா அணிய வைக்கின்றார்கள் என்று வக்கிரச் செய்தியை முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லக் கூடிய ஒழுங்கீனமான பெண்களை வைத்து நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பத் துடிக்கும் விஜய் டிவியே! முஸ்லிம்களுக்கு எதிரான மதத்துவேச நிகழ்ச்சியை ஒளிபரப்பாதே. ஒளிபரப்பமாட்டோம் என்ற உறுதிமொழியை வருகின்ற வியாழன் இரவுக்குள் (14-1-2010) வழங்கவில்லையானால் 15-1-2010 மாலை 4 மணிக்கு விஜய் டிவி அலுவலகம் முஸ்லிம்களால் முற்றுகையிடப்படும் இன்ஷா அல்லாஹ்!

விஜய் டிவியின் இந்த வக்கிரச் செய்தியை ஒளிபரப்பாமல் நிறுத்தக் கோரி சென்னை மாநகர காவல்துறை கமிஷனிரிடம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்று (11-1-2010) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஒளிரப்பப்பட்டால் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த கொந்தளிப்பு ஆளாகும் எனவே மத துவேசத்தை பரப்பும் இந்த நிகழ்;சி தடை செய்யப்பட வேண்டும் விஜய் டிவிக்கும் எச்சரிக்கை கடிதம் நேற்று (11-1-2010) நேரடியாக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளால் வழங்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஸ்டார் விஜய் டிவிக்கு நேரடி விவாதத்திற்கு பகிரங்க அழைப்பு:

போலிமதவாதிகளை வைத்து இஸ்லாத்தை கொச்சைபடுத்தும் இந்த போக்கை கைவிட்டு விட்டு பர்தா அணிவது தான் பெண்ணினத்திற்கு பாதுகாப்பானதும் கண்ணியமானது என்பதை நிருபீக்க நேரடி விவாதத்திற்கு முஸ்லிம் நாங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராக இருக்கின்றது என்ற பகிரங்க விவாத நேரடி விவாத அழைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் மற்றும் விஜய் டிவிக்கு கொடுக்கப்பட்ட கடிதம்:








Tuesday, January 12, 2010

செல் பேசியபடி பஸ் ஓட்டிய 31 டிரைவர்கள் சஸ்பெண்ட்

Bus

சென்னை: செல்போன் பேசியபடி பேருந்துகளை இயக்கிய 31 அரசு பஸ் டிரைவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

செல்போன் பேசியபடி பேருந்துகளை இயக்குவதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டதையடுத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கு முதல்வர் கருணாநிதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

அரசு பஸ் டிரைவர்கள் செல்போன் பேசியபடி பேருந்துகளை இயக்குவதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டதையடுத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கு முதல்வர் கருணாநிதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இதன்படி அரசு பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதைக் கண்காணிக்க கிளை மேலாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் திடீரென்று அரசு பஸ்களில் ஏறி டிரைவர்களை சோதனையிட்டு வருகின்றனர்.

இந்த சோதனைகளில் தமிழகம் முழுவதும் ஏராளமான அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் செல்போன் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் முறை அவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

ஆனாலும் டிரைவர்கள் பணியின்போது செல்போனை கொண்டு செல்வது நிற்கவில்லை.

இதையடுத்து 226 டிரைவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களுக்கு நோட்டீசும் தரப்பட்டது.

இந் நிலையில் செல்போன் பேசிக்கொண்டே பஸ்சை ஓட்டிச்சென்ற 31 டிரைவர்கள் மீது போக்குவரத்துக் கழகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்னர்.

இதில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக டிரைவர்ள் 2 பேரும், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 6 பேரும், கோவை போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 7 பேரும், சேலம் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.

மேலும் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 6 மண்டலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 63 டிரைவர்கள் பிடிபட்டனர். இவர்களது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ன.

இந்ச செல்போன்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது 6 டிரைவர்கள் பணியில் இருந்தபோது செல்போனில் பேசியிருந்தது தெரியவந்ததால் அவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மற்றவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.

கோவையில் பிடிபட்ட 62 டிரைவர்களில் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கும்பகோணம் போக்குவரத்து கழகத்திலும் செல்போன் வைத்திருந்த 52 டிரைவர்கள் பிடிப்பட்டனர்.

இதில் ஒருவர் மட்டும் செல்போனை பயன்படுத்தியதால் அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பணியின்போது டிரைவர்கள் செல்போனை பயன்படுத்தினால் அது பற்றி பயணிகள் புகார் செய்யலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. 94450-30516, 93833-37639 ஆகிய எண்களில் பயணிகள் புகார் தரலாம்.

சென்னையில் இது தொடர்பான எண்கள் அடங்கிய ஸ்டிக்கர் எல்லா பஸ்களிலும் ஒட்டப்பட்டு வருகின்றன.

புத்தாண்டின் பெயரால் நடந்த விபரீதங்கள்


-இனியவன்

வருடா வரும் புத்தாண்டு தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் குடித்து விட்டு கூத்தடிப்பதையும், நடன நிகழ்ச்சி என்ற பெயரில் ஆண், பெண், இருவரும் இணைந்து உரசி ஆடும் ஆபாசக் கூத்துக்களையும் நடத்திக் கொண்டிருப்போர் இந்த வருடமும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்தனர்.டிசம்பர் 31 அன்று கடந்த வருடங் களைப்போல் இந்த வருடமும் விபத்துக்கள் அசம் பாவிதங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்று காவல்துறையும் தங்கள் பங்குக்கு குடித்துவிட்டு வாக னம் ஓட்டாதீர்கள், பொது இடங்களில் ஆபாசமாக நடந்துக் கொள்ளாதீர்கள் என்று பரவலாக எச்சரிக்கை செய்தும், கோரிக்கை வைத்தும் கூட அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்க முடிய வில்லை.

காரணம் புத்தாண்டு என்றாலே அதைக் குடித்து விட்டுத்தான் கொண்டாட வேண்டும் என்று இளைஞர்கள் எண் ணிக் கொண்டிருப்பதுதான். இதற் கேற்றாற் போல் தமிழக அரசும் வீதிக்கு வீதி மதுக்கடைகளையும், பார்களையும் திறந்து சமூக சேவை செய்து கொண் டிருக்கிறது.

இதனால் பாட்டிலும், கையுமாய் இளை ஞர்கள் புத்தாண்டை கோலகலமாய் கொண்டாடினர். குடித்துவிட்டு பைக்கில் சாகசங்கள் செய்வது, தெருக்களில் ஆவேசமாக கத்தியபடி செல்வது என்ற புத்தாண்டு சாகசங்களால் சென்னையில் மட்டும் வாகன விபத்துகளில் 125 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர். 4 பேர் விபத்துக்களில் பலியாகி உள்ளனர்.

புத்தாண்டு தினத்தன்று சாலை விதிமுறைகளை மீறியதாக சென்னையில் மட்டும் சுமார் 4000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருவான்மியூர் கடற்கரையில் நள்ளிரவில் குடித்துவிட்டு கும்மாளமிட்ட இளைஞர்கள் பலர் அங் கேயே மட்டையாகி விட, காலை யில் வாக்கிங் செல்ல வந்தவர்கள் கடற்கரை முழுவதும் ஆங்காங்கே போதையில் மூர்ச்சையாகி டி சர்ட், ஜீன்ஸாடு படுத்துக் கிடந்தவர்களின் முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்து எழுந்திருக்காமல் போகவே வாக்கிங்க செல்ல வழியில்லாமல் திரும்பச் சென்றுள்ளனர்.

இளைஞர்கள் குடித்துவிட்டு போட்ட பாட்டில்களை பொறுக்க மட்டும் பெருங்கூட்டம் கூடியிருக்கிறது. அது மட்டுமில்லாமல் குடித்துவிட்டு குழு மோதல்களும் பல இடங்களில் ஏற்பட் டிருக்கின்றன. புதுவையில் குடித்துவிட்டு கும்மாளமிட்ட இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னையில் நைஜிரிய வாலிபர் ஒருவர் இதேபோல் புத்தாண்டு பார்ட்டியில் வீட்டில் வைத்து கொல்லப்பட்டுள்ளார்.

போதை தலைக்கேறி புத்திப்பிசகிப் போய் புத்தாண்டை வரவேற்கிறோம் என்று இளைஞர்கள் அடிக்கும் கூத்துக் களைபற்றி தமிழகத்தின் எந்த அரசி யல் கட்சிகளும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. தமிழ்ப் புத்தாண்டைக் கூட எந்த கோலாகலமும் இன்றி கழிக்கும் தமிழர்கள் ஆங்கிலப் புத்தாண்டை ஏன் இவ்வளவு கொண்டாட்டங்களோடு வரவேற்கிறார்கள். குடிக்கலாச்சரத்தை ஊக்குவிக்கும் மேலைநாட்டு மோகத்தில் தமிழ்ச்சமுதாயம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் வீழ்ந்துதான் போயிருக்கிறது.

இதில் முஸ்லிம் இளைஞர்களும் விதிவிலக்கல்ல, சமுதாய அமைப்புகளின் தாக்கங்களால் முஸ்லிம் சமுதாயம் இந்த புத்தாண்டு குடிக்கலாச்சாரத்தில் இருந்து விலகி இருந்தாலும் மார்க்கம் அறியாத முஸ்லிம் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாடங்களில் பங்கேற்பதை பரவலாக காணமுடிந்தது, முஸ்லிம்கள் நிறைந்து வாழும் மண்ணடி பகுதியில் கூட இளைஞர்கள் மோட்டர் பைக்குகளில் சீறிச் செல்வதை காண முடிந்தது.

இந்துத்துவ அமைப்புகள் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோவில்களை திறக்ககூடாது என்று கோஷமிட்டதோடு சரி. கோவையில் ஒரு சில இந்து அமைப்பு கள் நட்சத்திர ஒட்டல்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர் அவ்வளவுதான். டாஸ்மாக்கில் குடிப் பவர்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

விநாயகர் சதுர்த்தி போன்ற கலவரங் களை உண்டாக்கும் நிகழ்ச்சிகளை தமி ழகம் முழுக்க நடத்தும் சங்பரிவார்கள் புத்தாண்டு என்ற பெயரில் கும்மாளமிடும் இந்து இளைஞர்கள் நல்வழியில் செல்ல ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை.

இந்து ஆன்மிக அமைப்புகள் உட்பட அனைத்து சமூக இயக்கங்களும் ஒன்றிணைந்து முயற்சித்தால்தான் தமிழகத்தில் குடிக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியும். வரும் ஆண்டுகளிலாவது குடி இல்லாத, வன்முறை இல்லாத, விபத்தில்லாத ஆங்கில புத்தாண்டு மலருமா?

சென்னையில் ஓடும் ரெயிலில் தீ: பயணிகள் ஓட்டம்

ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இன்று காலை தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.அங்கு பயணிகளை இறக்கிய பின்னர் மீண்டும் ரெயில் எழும்பூர் நோக்கி புறப்பட்டது.ரெயில் புறப்படும் போது எஞ்சின் பகுதியிலிருந்து 6வது ஏசி பெட்டிக்கும், 7வதாக இருந்த இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கும் இடையே புகை வந்ததோடு தீப்பிடித்தும் எரிந்தது.

இதனை பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகளும், ரெயில்வே ஊழியர்களும் பார்த்ததோடு உடனடியாக இத்தகவலை ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித் தனர். ரெயில்வே அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் எஞ்சின் டிரைவரை தொடர்பு கொண்டு இத்தகவலை தெரிவித்ததோடு உடனடியாக ரெயிலை நிறுத்தும்படி கூறினார். இதை யடுத்து ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்திற்கும், சான டோரியம் ரெயில் நிலையத் திற்கும் இடையே நிறுத்தப்பட்டது.

ரெயில் நின்றவுடன் 7வது பெட்டியில் இருந்த பயணிகள் புகை வருவதை கண்டு அலறியடித்துக் கொண்டு ரெயிலை விட்டு கீழே இறங்கினர். அத்துடன் 6வது ஏசி பெட்டியில் இருந்த பயணிகளையும் கீழே இறங்கும்படி கூறியதை அடுத்து அப்பெட்டியில் உள்ள பயணிகளும் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்த போது, ரெயில் பெட்டியின் பேட்டரி சார்ஜ் செய்யும் டயனமோவி லிருந்து மின்கசிவு ஏற்பட்டு மின் ஒயர்கள் எரிந்தது தெரிய வந்தது.தீயை அணைத்தவுடன் ரெயிலில் வந்த பயணிகள் அனைவரையும் மின்சார ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அத்துடன் ராமேஸ்வரம் ரெயிலை பல்லாவரம் ரெயில் நிலையத்தில் 4வது பிளாட்பாரத்தில் நிறுத்தி பழுது நீக்கும் பணியை ரெயில்வே ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.இந்த ராமேஸ்வரம் ரெயிலில் ஏற்பட்ட தீயை உடனடியாக பயணிகள் கண்டுபிடித்து அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவத்தால் ராமேஸ்வரம் ரெயிலுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த செங்கல்பட்டு கடற்கரை விரைவு மின்சார ரெயிலும், புதுச்சேரிசென்னை விரைவு ரெயிலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏசி கோளாறு-விமானத்தில் பெண் பயணி மயக்கம்

அகமதாபாத்: கோவாவில் இருந்து அகமதாபாத் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் ஏசி செயலிழந்ததால் பயணிகள் பெரும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். இதில் ஒரு பெண் பயணி மயங்கி விழுந்தார்.

இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. ஆனால், இன்று தான் விவகாரம் வெளியி்ல் வந்துள்ளது.

அன்றைய தினம் அரை மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கு அந்த விமானம் கோவாவில் இருந்து அகமதாபாத் கிளம்பியது.

விமானம் பறக்க ஆரம்பிக்கும் முன்பே ஏசி செயல்படவில்லை. இதனால் விமானத்துக்குள் கடும் வெக்கை நிலவியது. பலர் மூச்சுவிடவே பலர் சிரமப்பட்டனர். இது குறித்து ஏர் ஹோஸ்டஸ்களிடம் பயணிகள் விசாரித்தபோது விமானம் பறக்க ஆரம்பித்தது ஏசி செயல்படும் என்றார்.

இதை நம்பி பயணிகள் அமைதியாயினர். ஆனால், விமானம் பறக்க ஆரம்பித்தும் கூட ஏசி செயல்படவில்லை. இதனால் நடுவானில் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் அதிகரித்தது.

ஒரு பெண் பயணி மயங்கி விழுந்தார். இதையடுத்து விமானப் பணிப் பெண்கள் விமானியிடம் ஓடிச் சென்று தகவலே தரவே அந்த விமானம் மும்பைக்குத் திருப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அங்கு ஏசி கருவி சரி செய்யப்பட்டு மீண்டும் அந்த விமானம் கிளம்பியது. 4 மணி நேரம் தாமதமாக இரவு 10 மணிக்கு அகமதாபாத் போய் சேர்ந்தது.

இப்போது பயணிகள் தங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என கோர ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இந்த விவகாரம் குறித்து கருத்து சொல்ல மறுத்து வருகிறது.

மலேசியாவில் 'மாயமான' 39,000 தமிழர்கள்!

Kuala Lumpur
கோலாலம்பூர்: தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்கு வந்த சுமார் 39,000 பேர் விசா காலம் முடிந்தும் இன்னும் நாடு திரும்பவில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் நஜீத் ரசாக் கூறியுள்ளார்.

டெல்லி மற்றும் சென்னைக்கு ஜனவரி 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை,​​ நஜீத் பயணம் மேற்கொள்கிறார். அப்போது பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந் நிலையில் தனது இந்தப் பயணம் தொடர்பாக மலேசியாவின் புத்திரஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் இந்திய பத்திரிகையாளர்களை சந்தித்தார் நஜீத்.

அவர் கூறுகையில்,

இந்தியர்கள் மலேசியாவுக்கு சுற்றுலா வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் தாராளமாக நடந்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் சரியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்.

வெளி நாடுகளில் இருந்து மலேசியா வருபவர்கள் மலேசிய விமான நிலையத்திலேயே விசா பெற்றுக் கொள்ளும் முறையை ரத்து செய்துவிட்டோம். வேறு நாடுகளில் இருந்து மலேசியா வந்து இங்கிருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்வதைத் தடை செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுபோன்ற பிரச்சனை சென்னையில் இருந்து சுற்றுலா விசாவில் வரும் பயணிகளால்தான் ஏற்படுகிறது. டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து வருபவர்களால் எந்த பிரச்சனையும் இல்லை. சென்னையில் இருந்து வருபவர்கள்தான் இங்கு தங்கி விடுகிறார்கள்.

அல்லது இங்கிருந்து வேறு நாடுகளுக்குச் செல்கிறார்கள்.
இவ்வாறு செல்பவர்களினால் ஆஸ்திரேலியா தான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.​ இது குறித்து ஆஸ்திரேலியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் எந்த பிரச்சனையும் இல்லை.​ கடந்த ஜூன் மாதம் முதல் சென்னையிலிருந்து இங்கு வந்தவர்களில் 39, 046 பேர் உரிய விசா காலம் முடிந்த பிறகும் இந்தியா திரும்பவில்லை.​ இது தவறான முன் உதாரணமாகும்.

மாயமானவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மலேசியாவில் தான் இருக்கிறார்களா அல்லது வேறு நாடுகளுக்குப் போய்விட்டார்களா என்பதும் தெரியவில்லை. அவர்கள் தீவிரவாதிகள் அல்ல, வேலைவாய்ப்புகளுக்காக வந்தவர்கள் தான் என்றாலும், அவர்கள் மலேசியாவில் மறைந்து வாழ்வதும் இங்கிருந்து வேறு நாடுகளுக்குப் போவதும் கவலை தருகிறது.

இந்த விவகாரம் குறித்தும் இந்தியாவுடன் பேசுவேன். இந்தியாவில் நான் மேற்கொள்ளும் பயணம் சம்பிரதயமாக முடிந்துவிடாமல் பயனுள்ளதாக அமையும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவேன்.

இந்தியப் பயணத்தின்போது நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து துறை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என நம்புகிறேன்.

மலேசியாவில் உள்ள தகவல் தொழில்நுட்பம்,​ சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தொழில்நுட்பங்கள்,​​ கனரக தொழில் துறைகளில் இந்தியா முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவுக்கு தொடர்ந்து தடையில்லாமல் பாமாயிலை வழங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என நம்புகிறேன்.​

இந்தியாவில் இருந்து வரும் பலர் இங்குள்ள கோவில்களில் பூசாரிகளாகவும் மற்றும் சலவை தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர் என்றார் நஜீத்.

Monday, January 11, 2010

மயக்கம்-பெண்ணை ஆபாச படம் எடுத்த கடைக்காரர்

பெங்களூர்: கடைக்கு வந்த இளம்பெண்ணின் முகத்தில் 'மயக்க ஸ்பிரே' தெளித்து, ஆபாச புகைப்படம் எடுத்த கடைக்காரரை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

பெங்களூர் மூடலப்பாளயா பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. மோகன் என்ற 35 வயது ஆசாமி, தனது கடைக்கு பொருள் வந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்து உட்காரச் செய்துள்ளார்.

பி.காம் படிக்கும் அந்த 21 வயது இளம்பெண் அசந்த நேரத்தில் 'மயக்க ஸ்பிரே'யை முகத்தின் அருகே அடித்துள்ளார்.

பெண் மயங்கியவுடன் ஆடைகளை களைந்து ஆபாசப் படங்கள் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

சற்று நேரத்தில் நினைவு திரும்பியதும் நிலைமையை உணர்ந்து அதிர்ந்த இளம் பெண்ணிடம், 'ரூ.1 லட்சம் கொடு இல்லையெனில் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன்' என மிரட்டியுள்ளார் அந்தக் கடைகாரர்.

மிரண்டுபோய் வீட்டிற்கு வந்த பெண் பெற்றோரிடம் நடந்ததை கூறினாள். இதையடுத்து பெண்ணின் உறவினர்கள், அப் பகுதி பொதுமக்கள், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் எல்லோரும் ஒன்று சேர்ந்து சென்று கடைக்காரரை வீதியில் இழுத்துப்போட்டு தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர் சந்திரா லேஅவுட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாடகை மனைவி! பாகம்2 - நடுங்கவைக்கும் விஷக்கலாச்சாரம்..

வாடகை மனைவி!
நடுங்கவைக்கும் விஷக்கலாச்சாரம்!!
தமிழகத்தின் குடும்பயியலை குழிதோண்டி புதைக்கும் இழிகலாச்சாரத்தை தடுத்து நிறுத்துமா தமிழக அரசு??
சமூக நலன் கருதி தட்டிக் கேட்க சமுதாய அமைப்புகள் முன் வருமா???
நன்றி ஜூவி

வாயில் குதப்பிய வெற்றிலை, சாயம் போன ஜிப்பா, அக்குளில் ஒரு தோல் பை, அதற்குள் கசங்கிய ஆல்பம்..! இப்படித்தான் சில தமிழ் சினிமாக்களில் நாம் அந்தத் தொழிலின் 'புரோக்கர்'களைப் பார்த்திருப்போம்.

வாடகை மனைவிகளைப் பேசி அமர்த்தும் ஓர் இடைத்தரகரைப் பார்த்தபோது அசந்தே நின்றுவிட்டோம். அவருடைய காரும், பேரும், ஊருமெல்லாம் வேண்டாம். ஆனால், அவர் மீது வீசியது ஹைகிளாஸான வெளிநாட்டு பர்ஃபியூம். அவரே பார்ப்பதற்கு சினிமா ஹீரோ கணக்காக இருந்தார். அவர் கையோடு கொண்டுவந்த 'லேப்-டாப்'பை க்ளிக் செய்தபோது, 'பவர் பாயின்ட் பிரஸன்டேஷன்' பாணியில் அடுத்தடுத்து சில குடும்பத் தலைவிகளின் புகைப்படம் மற்றும் விவரங்கள்.

''நமக்குத் தெரிஞ்ச இன்னொருத்தர், ஃபேமிலி கேர்ள்ஸை அப்படியே வெப் கேமரா முன்னாடி பேசச் சொல்லி, இப்படி அப்படி நடக்கச் சொல்லி, அவங்களோட வீட்டில் ஒரு குடும்பத் தலைவியாக வளைய வர்ற காட்சிகளையும் அப்படியே பதிவு செஞ்சு வெச்சுருவாரு. கஸ்டமர்களுக்கு போட்டுக் காட்டும்போதே ஒருவித 'கிக்' ஆயிடும். வரிசையா பொண்ணு பார்க்கிற மாதிரி வீடு வீடா கூட்டிட்டுப் போயி காட்ட வேண்டாம் பாருங்க. லேப்-டாப் வீடியோவைப் பார்த்து நேரடியா ஒருத்தரை செலக்ட் பண்ணிக்கிட்டா... ஜோலி முடிஞ்சுது, இல்லையா?" என்றார், நாம் சந்தித்த 'லேப்-டாப்'பர்!

எப்படியோ போராடி அப்படியரு லேப்-டாப் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றோம். நம்மையும் ஒரு தொழிலதிபராகவே கூறியிருந்ததால், குறிப்பிட்ட அந்த இடைத்தரகர் வரிசையாக, ஆர்வ மாகப் போட்டுக் காட்ட ஆரம்பித்தார்.

எடுத்த எடுப்பிலேயே கம்பீரமாக காட்டன் புடவை உடுத்தியபடி எதிரில் இருந்த யாரிடமோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்மணியைக் காட்டினார். வீட்டுக்கு வந்திருக்கும் யாரோ ஒரு விருந்தினரிடம் பேசுவதும், இடையில் எழுந்துபோய் அவருக்கு ஒரு தட்டில் பிஸ்கட்கள் கொடுப்பதும் அதில் தெரிந்தது. இன்னொரு அறையிலிருந்து டீக்காக உடுத்தியபடி வெளியில் வந்த மனிதர்40-களில் இருந்தார். ''மேடத்தோட ஹஸ்பெண்ட்..." என்றார் இடைத்தரகர். வெளியில் கிளம்புவதாகச் சொல்லி விட்டுப் புறப்படுகிறார் அந்தக் கணவர். அதோடு காட்சி முடிகிறது.

''இந்த மேடம் ரொம்ப ஹோம்லி, சாஃப்ட்டான டைப்! டெலிகாம்ல நல்ல வேலை. பொதுவா, நார்த் இந்தியாவுல இருந்து வர்றவங்களை மட்டும் மாசக் கணக்குல ரேட் பேசி புக் பண்ணிப்பாங்க. மேடம் ரெகுலரா வேலைக்கும் போய்க்கிட்டு இருப்பாங்க. பிசினஸ் புள்ளிகளுக்கும் இங்கே பகல் நேரத்துல அவங்க வந்த வேலை சரியா இருக்கும்தானே... தினமும் சாயங்காலம் ஆனா தன்னோட சொந்த வீட்டுக்கு வர்ற மாதிரியே மேடம் வீட்டுக்குப் போயிடுவாரு!" என்று விவரித்துக்கொண்டே போனார் இடைத்தரகர்.

யார் பார்த்தாலும் சட்டென்று தப்பாகவே தெரியாத வண்ணம் அந்த சாம்பிளை எடுத்திருப்பது புரிந்தது. அந்த வீட்டையும் தனி க்ளிப்பிங்காக வைத்திருந்தார். ''தங்குறவங்களுக்கு வீடும் புடிக்கணுமில்லையா?" என்று கேட்டு அயர வைத்தார் நம்மை!

வீடியோ காட்சியில் விரிந்த அந்த வீட்டின் வாசலில்... குட்டை குட்டையான குரோட்டன்ஸ் செடிகள் அழகாய் வெட்டப்பட்டிருக்க, பெயர் தெரியாத ஏதோ ஒரு பூச்செடிகள் நீல நிறத்தில் அந்த வீட்டின் சுற்றுப்புறத்தை அழகாக்கி வைத்திருந்தன. கேமரா அப்படியே உள்ளே நுழைய, வீட்டு ஹாலின் நடுநாயகமாக ஒரு உருளியில் அழகான ரோஸ் நிற செம்பருத்திப் பூக்கள் நீரில் பரப்பப்பட்டிருக்க, உருளிக்கு அருகில் கலைநயமிக்க சின்ன டேபிளில் மரத்தாலான நர்த்தன விநாயகர் சிலை!

இப்படிப் போகிற அந்தக் காட்சியிலும் வக்கிரமாக எதுவுமே இல்லை.

''இந்த மேடத்தோட ஹஸ்பெண்ட் பார்த்தீங்களே... அவரும் கோவை பக்கத்துல ஒரு காலேஜ்ல லெக்சரரா இருக்கார். கல்யாணமாகி பத்து வருஷமாச்சு. இன்னும் குழந்தை இல்லை. முதல்ல இவங்க டிபார்ட்மென்ட்ல ஒரு சின்னப் பையனோட பழக்கம் வந்துச்சு. ஹஸ்பெண்ட் கண்டிச்சாரு போல. பெரிசா சண்டை ஆயிடுச்சு. மேடம் பிரிஞ்சு போயிட்டாங்க. ஊர் உலகத்துக்கு பயந்து லெக்சரரே போயி மேடத்தைத் திரும்பவும் கூட்டிவந்து வச்சுக்கிட்டாரு. அதுக்கப்புறம்தான் மெதுமெதுவா இன்னொரு லேடி மூலமாக நமக்கு அறிமுகம் ஆனாங்க. புருஷன்-பொண்டாட்டி ரெண்டு பேருமே சீக்கிரமா ஒரு அண்டர்ஸ்டாண்டிங்குக்கு வந்துட்டாங்க. சும்மாங்களா... போன வருஷம்கூட ரெண்டு பேருக்கும் ஃபுல்லா யூரோப் டூருக்கு நம்ம கஸ்டமர் ஒருத்தரே ஏற்பாடு பண்ணாருங்களே..!" என்று சிரித்தார் இடைத்தரகர்.

நமக்குத் தடதடவென்று உடம்பு உலுக்கிப் போட்டது. அப்படியரு முகம்... அப்படியரு நடை உடை பாவனையில்... 'இவர்களா இப்படி!' என்ற படுகௌரவத் தோற்றத்தில் இருந்தார்கள் அந்தப் பெண்மணியும் கணவரும்.

இதே போன்ற பிசினஸில் சில மாதங்கள் இருந்து விட்டு, தற்போது அது பிடிக்காமல் ஒதுங்க நினைக்கும் ராஜன் என்பவரையும் நாம் இதே லிங்க்கை வைத்து சந்தித்தோம்.

கரூர் காந்தி கிராமத்தில் உள்ள ஒரு பெண்மணியின் கதையை அவர் சொன்னபோது, வேதனையாக இருந்தது.

''கரூர் பக்கத்துலதான் அதோட ஊர். அப்பா கிடையாது, அம்மா மட்டும்தான். அம்மாவும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துபோகவும் சித்தி வீட்டுல இருந்துதான் டிகிரி முடிச்சிது. அப்பத்தான் பஸ்ல போறப்ப, வர்றப்ப ஒரு பையனை பார்த்து லவ் பண்ணியிருக்கு. வீட்டை விட்டு வெளியே வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. பனியன் கம்பெனியில சூபர்வைஸரா மாசம் நாலாயிரம் சம்பளம் வந்துச்சு அந்தப் பையனுக்கு. அதை வெச்சு எதுவுமே செய்யமுடியாத நிலையில்தான் தன்கூடப் படிச்ச கோயம்புத்தூர் பொண்ணு ஒருத்தி மூலமா இந்த விஷயம் தெரிஞ்சுகிட்டு, அப்ரோச் பண்ணுச்சு. இப்ப அது ரேஞ்சுக்கு மாசம் குறைஞ்சது இருபதாயிரம் ரூபாயாச்சும் கிடைக்குது!" என்றவரிடம், ''காதல் கணவர் எப்படி இதை சகித்துக் கொள்கிறார்?" என்றோம்.

''காதல் - கத்தரிக்காயெல்லாம் கல்யாணம் ஆன கொஞ்ச காலத்துக்குதான் சார். அதுக்கப்புறம் ஒவ் வொரு ஆம்பளைக்குள்ளே இருக்கிற ஒவ்வொரு மைனஸா வெளியில வருது. இந்த பையன் செமத்தியா குடிப்பான் போல. காசு கிடைக்குதுன்னதும் மெதுமெதுவா புரிஞ்சு, அமைதியாயிட்டான்! கான்ட் ராக்ட்ல தங்குற ஆளுங்க வீட்டுக்குள்ள இருக்கிற நேரத்துல, தண்ணியடிச்சிட்டு வந்து தகராறு பண்ணக் கூடாது... அது மட்டும்தான் அவனுக்கு கண்டிஷன்!" என்றார் ராஜன் சாதாரணமாக!

இந்த விவகாரம் குறித்து நமக்கு முதல் க்ளூ கொடுத்த, கடந்த இதழில் கட்டுரையின் ஆரம்பத்தில் நம்மோடு பேசிய கோவிந்தன் என்ன சொல்கிறார்?
''எங்க டிரஸ்ட் சார்பா நாங்க கள ஆய்வு செஞ்சப்ப - காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய நகரங்களில்தான் இந்த 'வாடகை மனைவி' கலாசாரம் படுவேகமாகப் பரவுவது புரிந்தது. இந்த நகரங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தொழில்துறை வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டவை. வெளி மாநில ஆட்கள் வந்து வாரக்கணக்கில், மாதக்கணக்கில் தங்கி தங்கள் பிசினஸை கவனிக்கும் இடங்கள். இந்த நகரங்களில் வசிக்கும் ஒரு சில வில்லங்க விபசார புரோக்கர் களின் புத்தியில் உதித்ததுதான் இந்த 'வாடகை மனைவி' கான்செப்ட். இந்த ஊர்களில் இருக்கும் விபசார புரோக்கர்கள் பணத் தேவையிலோ, பணத்தாசையிலோ உள்ள தம்பதியை வெகு அழகாகப் பேசி இதற்கு வளைக்கிறார்கள்.

பெரும்பாலும், பெண்களை மட்டுமே முதலில் சந்திக்கும் இந்த கும்பல், தங்களது ஆசை வலையை பக்குவமாக விரிக்கும். சிக்குபவர்கள் முதலில் கணவருக்குத் தெரியாமல்தான் இதில் இறங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் விஷயம் தெரியும்போது, குடும்ப மானத்துக்கு பயந்து சகித்துக்கொள்ளும் முடிவுக்கு வரும் கணவர்கள், காலப்போக்கில் இதை வருமான வழியாகவே பார்க்க ஆரம்பித்து, முற்றிலுமாக சும்மா இருந்துவிடுகிறார்கள். சம்பந்தப்பட்ட பெண் மட்டுமின்றி, அவருடைய கணவரும் பிசினஸ் புள்ளியை நேரில் பார்த்துப் பேசி சம்மதித்தால்தான் 'கான்ட்ராக்ட்' ஓகே ஆகும் என்கிற இடங்கள்கூட உண்டு!" என்ற கோவிந்தன்,

''இரண்டு காரணங்கள்தான் இந்த கலாசாரச் சீரழிவுக்கான காரணிகள். ஒன்று... மாறிவிட்ட நமது கலாசாரப் பழக்கவழக்கம். எதற்கெடுத்தாலும் மேற்கத்திய பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ளும் நம்மில் பலர், குடும்ப தாம்பத்ய விஷயத்திலும் மெள்ள மெள்ள மேற்கத்திய நாகரிகத்துக்கு மாறத் தொடங்கியிருக்கிறோம் என்பதுதான் வேதனையான உண்மை.

இன்னொரு காரணம்... அளவுக்கதிகமான பணத்தாசை. முன்பெல்லாம் வீடுகளில் ஒரு டி.வி. இருப்பதே அதிசயமாக இருக்கும். இப்போது ரூமுக்கு ஒரு டி.வி. என்றும் சின்ன கார் - பெரிய கார் என்று இரண்டு கார் இருக்க வேண்டும் என்றும் நடுத்தரக் குடும்பங்களே ஆசைப்படுகிற நிலைமை வந்துவிட்டது. அஞ்சாமல் கடன் வாங்குவது... அடைக்க முடியாமல் சிக்கித் தவிப்பது என்று பாடாய்ப் படும் குடும்பங்களைத்தான் இடைத்தரகர்கள் சுலபமாக இனம் கண்டு வளைக் கிறார்கள்.

இதெல்லாம் போக, 'பாதுகாப்பான உறவு' என்று சொல்லித்தான் பிசினஸ் புள்ளிகளை இந்த கான்ட்ராக்ட் விவகாரத்தில் வீழ்த்துகிறார்கள். ஆனால், ஹெச்.ஐ.வி. வராது என்ற உத்தரவாதம் இங்கும் கிடையாது. இவர்களுக்கெல்லாம் இதன் பாதிப்பு இப்போது தெரியாததால், விஷயம் பெரிதாக வெளியே வரவில்லை. இன்னும் நாலைந்து வருடங்கள் கழித்து இந்த பாதிப்பை உணர்ந்து, அப்போது அலறுவார்கள்.

இதன் விபரீதங்களை உணர்ந்து, இந்த மாதிரியான 'வாடகை மனைவி' கலாசாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், அவர்களாகவே அதை விட்டு விலக வேண்டும். அரசாங்கமும் இந்த விபரீதத்தைக் கண்டுபிடித்து, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் கவுன்சிலிங்குகளை வழங்க வேண்டும். பாலியல் தொழில் செய்வோருக்குத் தரப்படுகிற எல்லாவிதமான விழிப்பு உணர்வையும் இது போன்ற பெண்களுக்கும் தந்தாக வேண்டும். இந்தக் கலாசாரச் சீரழிவை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால்... அது நினைத்துப் பார்க்கமுடியாத விபரீதங்களில் போய் முடியும்!" என்றார் கோவிந்தன்.
நன்றி: ஜூனியர் விகடன்
-மு. தாமரைக்கண்ணன்
படங்கள்: என்.ஜி. மணிகண்டன்

Thursday, January 7, 2010

மாதா கோயிலில் காம விளையாட்டு - அதிகாரி இடைக்கால பணிநீக்கம்

பெர்லின், ஜெர்மனி - கத்தோலிக்கர்களின் மாதா கோயில் ஒன்றில் இறைவழிபாடு நடைபெறும் நேரத்தில் 26 வயது அதிகாரி ஒரு பெண்ணுடன் காம விளையாட்டில் ஈடுபட்டிருந்ததார். அதனை ஒருவர் பார்த்து விட்டு தகவல் தெரிவிக்க, ஜோடிகள் தப்பிவிட்டனர். ஆனால் மாதா கோயில் பணியாளர் அந்த அதிகாரியை அடையாளம் காட்டினார்.

அவர் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் நிரூபிக்கப்படுமானால் அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

வாடகை மனைவி! தமிழகத்தில் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக் கலாசாரம்.

வாடகை மனைவி! இதயத்தை நொறுக்கும் ஒளிப்பதிவு ஆதாரங்களுடன்....
பதறச் செய்யும் ஒரு விஷக் கலாச்சாரம்.

நன்றி: ஜூனியர் விகடன்

ஜனவரி... 3-ம் தேதி....

திருச்சி, உறையூரில் குறுக லான தெருவில் இருக்கிறது, அந்த பழங்காலத்து வீடு..!

துருப்பிடித்த இரும்பு கிரில் கதவு... திறக்கும்போதே கிறீச்சிடுகிறது. அதைக் கேட்டதுமே உள் வாசல் கதவு மெதுவாய் திறக்கிறது.

ஏற்கெனவே சொல்லி வைத்திருந் ததால் அதிகம் அறிமுகப் பேச்சு இல்லை!

''வாங்க, வணக்கம்!'' என நம்மையும், நம்மை கூட்டிச் சென்ற தொழிலதிபரையும் கைகூப்பி வரவேற்கிறார், அந்தக் குடும்பத் தலைவி. வீட்டுக்குள் நுழைந்த சில மைக்ரோ செகண்டுகளில் நம் கண்கள் உள்ளே அளவெடுக்கின்றன.

எப்போதோ அடித்த டிஸ்டம்பர் பெயின்ட் பாதிக்குமேல் உதிர்ந்து வெளிறிய சுவர்கள்... ஒரு ஹால், இரண்டு படுக்கையறை, சமையலறை..! ஹாலில் நான்கு ஃபைபர் சேர்கள் கிடக்க, புத்தம் புது எல்.ஜி. டி.வி--யில் ஏதோ பாடல் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

டி.வி.டி. பிளேயர், ஃபிரிஜ், வாஷிங் மெஷின் என்று மேல்நடுத்தர வர்க்கத்துக்கான வசதிகளைக் கொண் டிருந்தாலும், அது ஒரு வாடகை வீடு என்பதை முன்கூட்டியே நாம் அறிந்திருக்கிறோம். 'வீடு மட்டு மல்ல... நம்மை வரவேற்கும் அந்தக் குடும்பத் தலைவியே ஒரு வாடகை மனைவிதான்...' எனும்போது வாசகர்களுக்கு எப்படி தீயை மிதித்தாற்போல் இருக்கும் என்று புரிகிறது. விவகாரத்தை முதலில் கேள்விப்பட்டபோது அதே உணர்வு தான் நமக்கும்.

'மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறுவதாக நாம் இதுவரை கேள்விப்பட்டிருந்த அதே விபரீத கலாசாரம், தமிழ்நாட்டுக் குள் காலடி வைத்துவிட்டது' என்று கோவிந்தன் சொன்னபோது, முதலில் நாம் நம்பவில்லை. ஆனால், துளிகூட ஜீரணிக்க முடியாவிட்டாலும் உண்மை அதுதான்!

''ஒரு மாதம், இரண்டு மாதம் என்று தொழில் நிமித்தமாக ஊர் மாறி, மாநிலம் மாறி தமிழகம் வரும் பல தொழிலதிபர்களுக்கு 'விழிப்பு உணர்வு' கூடிப் போயிருக்கிறது. ஹெச்.ஐ.வி-க்கு இரையாவதற்கோ, தினம் தினம் ஒரு பெண்ணைத் தேடிப் போய்க் கொண்டிருக்கவோ அவர்களில் பலருக்கு இஷ்டமில்லை. அதுவும் தவிர, அழகான ஒரு குடும்பத்துக்குத் தலைவியா இருக்கிற பெண்களை - கௌரவமான ஒரு உத்தியோகம் பார்க்கிற நடுத்தர வயது இல்லத்தரசிகளை - மொத்தமாக சில நாட்கள் தங்களுக்கே தங்களுக்கு என்று வைத்துக் கொள்வதில் அவர்களுக்குத் தனியாக ஒரு கிக் இருக்கிறது. பேசிய அமவுன்ட்டை கொடுத்துவிடுகிறார்கள். இவர்களைச் 'சேர்த்து'விடுபவர்களையும் 'புரோக் கர்' என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது...'' என்று கோவிந்தன் கொடுத்த அறிமுகத் திலேயே, நம் தலை தட்டா மாலை சுற்றியது.


கோவிந்தன்..?

திருச்சியில் 'லைட் டிரஸ்ட்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் இவர்.

''மலைப்பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வேலைத் திட்டங்களில் ஈடுபடுவதுதான் எனது டிரஸ்டின் வேலை. இதற்காக வேலூர் மலைப் பகுதிகளில், சத்தியமங்கலம் மலைப் பகுதிகளில் என தமிழகத்தின் பல்வேறு மலைப்பிரதேசங்களிலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி களுக்கு அடிக்கடி சென்று வருவது என் வழக்கம். அப்படி ஒருமுறை காஞ்சிபுரத்துக்கு சென்றபோதுதான் 'வாடகை மனைவி' என்ற பயங்கரத்தை முதலில் கேள்விப்பட்டேன். கணவர், குழந்தைகள், மற்றும் புகுந்த வீட்டுச் சொந்தங்களுடன் ஒரு சராசரி இல்லத்தரசியாகவே வாழும் சில பெண்கள், மாதக் கணக்கில் வேறொருவருக்கு மனைவி யாகப் போய் வாழ்ந்துவிட்டு, கான்ட்ராக்ட்(?) காலம் முடிந்தவுடன் பழையபடி தங்கள் வீட்டுக்கே வந்து சேர்ந்து, வழக்கமான குடும்ப வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் என்பதை சாட்சிகளுடன் உறுதி செய்துகொண்டபோது, கிட்டத்தட்ட நடுங்கிப் போய்விட்டேன்!

இந்த பயங்கரத்தின் அடி ஆழம் வரைக்கும் சென்று பார்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் எனது டிரஸ்ட் ஊழியர்கள் சிலருடன் களத்தில் இறங்கினேன். முதலில் காஞ்சிபுரத்தில் ஒரு புரோக்கரின் உதவியுடன் ஒரு வாடகை மனைவியை சந்தித்தோம். அந்தப் பெண்

காஞ்சிபுரம் பக்கமுள்ள ஒரு டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் லெக்சரராக இருந்தார். புரோக்கர், அந்தப் பெண்ணின் வீட்டுக்கே நேரடியாக என்னை அழைத்துச் சென்றார். குடும்பப்பாங்கான அழகும், அடக்கமும், லேசான மிரட்சியும் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அவர் வீட்டிலேயே போய், அவருடைய புகுந்த வீட்டு சொந்தங்களுக்கு மத்தியில் 'கான்ட் ராக்ட்'டுக்குப் பேச முடிந்தது.

வறுமைக்காக வழி தவறிப் போகிற பெண்களை நாம் பார்த் திருக்கிறோம். ஆனால், இந்தப் பெண்ணின் வீட்டு சூழலைப் பார்த்தபோது, நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தை நடத்துவதற்கு அங்கே எந்தக் குறையும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. என்னை அந்தப் பெண்ணிடம் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு புரோக்கர் கிளம்பி விட்டார். காபி கொண்டுவந்து கொடுத்தவர், எடுத்த எடுப்பிலேயே 'என்னைப் பிடிச்சிருக்கா?' என்று ஏதோ பெண் பார்க்க வந்தவரிடம் கேட்பதுபோல் விசாரிக்கவும்... தூக்கி வாரிப் போட்டது. மேற்கொண்டு பேசப் பேசத்தான் இந்த பகீர் கலாசாரத்தின் நெட்வொர்க் தமிழ் நாட்டில் எந்தளவுக்கு விரியத் தொடங்கியுள்ளது என்று புரிந்தது...'' -சொல்லி நிறுத்திய கோவிந்தன்...

''அதையெல்லாம் உங்களுக்கு விளக்கமாகச் சொல்கிறேன். அதற்கு முன், ஒரு கான்ட்ராக்ட் எப்படி முடிவாகிறது என்பதை நீங்களே கண்ணால் பார்த்துவிட்டு வாருங்கள். அப்போதுதான் இதன் முழுப் பரிமா ணத்தைப் புரிந்துகொள்ள முடியும்!'' என்று, சில ஏற்பாடுகள் செய்து நம்மை அனுப்பி வைத்தார்.

வாடகை மனைவிக்கான 'தேடலு டன்' திருச்சிக்கு வந்திருந்த ஒரு சென்னைத் தொழிலதிபருடன் ஏதோ 'மாப்பிள்ளைத் தோழன்' ரேஞ்சுக்கு நம்மையும் கோத்துவிட்டார் அவர். நம் வசம் உள்ள ரகசிய கேமராவில், ஒவ்வொரு நொடியும் காட்சிகளோடு சேர்ந்து பதிவாகிறது என்பது தொழில திபருக்குத் தெரியாது. முப்பது வயது மதிக்கத்தக்க அந்த குடும்பத் தலை வியும் அதை அறியார்!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தலையெடுக்கத் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக் கலாசாரத்தின் சாட்சியாக அந்த வீட்டுக்குள் நடப் பதை வாசகர்கள் நம்மோடு சேர்ந்து அமைதியாகக் கவனிக்கவும். இன்னும் அதிர்ச்சிகரமான ஆதாரங்களுடன், பின்னணிகளை பிறகு பார்ப்போம் -

குடும்பத் தலைவி: (மெல்லிய குரலில்) வாங்க....உக்காருங்க....

தொழில் அதிபர்: வணக்கங்க!

குடும்பத் தலைவி: தண்ணீ குடிக்கிறீங் களா?

தொழில் அதிபர்: ம்....குடுங்க...

கு.த: இந்தாங்க.... (சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொண்டு வந்து தருகிறார்).

தொ.அ: தாங்க்ஸ்ங்க... நீங்களும் உக்கா ருங்க!

கு.த: இப்பதான் வர்றீங்களா?

தொ.அ: ஆமாம்... (ஒரு பெயரைச் சொல்லி) உள்ள வரமாட்டேன் னுட்டார். வாசல்லயே அப்படியே கிளம்பிட்டார்.

கு.த: ஆமாம்.... எப்பவுமே அவரு போயிடுவாரு....

தொ.அ: சொந்த வீடா இது...

கு.த: இல்லீங்க, வாடகை வீடு.

தொ.அ: உங்க பேருங்க..?

கு.த: (பெயரைச் சொல்கிறார்).

தொ.அ: நான் யாருன்னு சொன் னாரா?

கு.த: ம்....ஒண்ணும் சொல்லலை.

தொ.அ: என் பேரு ...... (சொல்கிறார்!). நான் சென்னை. மெடிக்கல் லைனுல இருக்கறேன். அடிக்கடி திருச்சி வருவேன்.

கு.த: ஓ, அப்படியா...

தொ.அ: மேரேஜ் ஆயிடுச்சா, உங்களுக்கு?

கு.த: ம்....ஆயிருச்சு.

தொ.அ: அப்படியா, ஹஸ்பெண்ட் என்ன பண்றாங்க?

கு.த: ஒரு பிரைவேட் கம்பெனியில ஒர்க் பண்றாங்க.

தொ.அ: என்னவா..?

கு.த: சும்மா... கம்பெனியில ஒர்க் பண்றார்...

தொ.அ: சரி, சரி.. குழந்தைங்க இருக் குதா..?

கு.த: ஒரு பையன்... ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான்.

தொ.அ: எத்தனை வருஷம் ஆச்சு கல்யாணமாகி?

கு.த: ஏழு, எட்டு வருஷம் ஆச்சு

தொ.அ: அவரு உங்களோட சொந்தக்கார பையனா?

கு.த: ஆமாம்...

தொ.அ: நீங்க வேற எங்கயும் ஒர்க் பண்றீங்களா?

கு.த: இல்லீங்க... நான் ஹவுஸ் ஒய்ஃப்தான்.

தொ.அ: வீட்டுலதான் இருக்கீங்க.... ம்... என்ன படிச்சிருக்கீங்க?

கு.த: (சின்ன தயக்கத்துடன்) டுவெல்த் வரைக்குந்தான்....

தொ.அ: ஏன்.... டிகிரி போக லையா?

கு.த: ம்ஹ§ம்... படிக்கலை!

தொ.அ: ............தான் சொன்னாரு, எனக்கு எல்லா மேட்டரும்...

கு.த: ம்ம்ம்ம்...

தொ.அ: நான் எப்ப திருச்சி வந்தா லும் எங்கயாவது போறதுண்டு! அதான் அவர்கிட்ட(?)கேட்டேன். அவர் சொன்னாரு... இந்த மாதிரி இருக்காங்கன்னு! உங்களுக்கும் ஒண்ணும் பிரச்னை இருக்கா துன்னு சொன்னார்! அதான் பார்க் கலாம்ன்னு வந்தேன். ஆல்ரெடி நாலஞ்சு டைம் அவரு ஆபீஸுக்கு நீங்க வந்துருக்கீங்க. அப்ப நான் அறிமுகப்படுத்திக்கலை. பேசலை... ஆனா உங்களைப் பார்த்திருக்கேன்.

கு.த: ஓ... அங்கேயே பார்த் திருக்கீங்களா..!

தொ.அ: ஆமாங்க. நீங்க எவ்ளோ வாங்கறீங்க?

கு.த: 25,000 ரூபாய்.

தொ.அ: மாசத்துக்கு தானே?

கு.த: ம்.. மாசத்துக்குதான்.

தொ.அ: ஓ.. நான் இப்ப 25,000 ரூபாய் குடுத்துட்டா, நான் சொல்ற அந்த ஒன்மன்த்துக்கு வேற எங்கயும் போக மாட்டீங்க தானே...?

கு.த: வேற எங்கயும் போக மாட்டேன்.

தொ.அ: எப்படிங்க.... நான் வீட்டுக்கு வரணுமா? இல்லாட்டி நீங்க வெளியே வருவீங்களா?

கு.த: வெளியவும் வருவேன். நீங்க வீட்டுக்கும் வரலாம். ஒண்ணும் பிரச் னையில்லை.

தொ.அ: வீட்டுக்குன்னா? வீட்டுல குழந்தை..?

கு.த: என்னைப் பொறுத்தவரைக்கும் குழந்தை இல்லாத நேரத்துலதான் வரமுடியும். ஏன்னா, பையன் ஸ்கூலுக்கு போயிடுவான். எயிட் டு ஃபோர் ஓ கிளாக் அவன் போயிடு வான். டியூஷனுக்கும் இடையில போயிடுவான். 4 மணிக்கு மேல, அந்த நேரத்துல ஆள் இல்லாத நேரத்துலயும் நீங்க வந்து போய்க்கலாம்.

தொ.அ: (நீண்ட மௌனத்துக்குப் பிறகு) ஓ!

கு.த: குழந்தை இல்லாத நேரம் போக, மத்தபடி வீட்டுக்காரர் இருக் கறப்பகூட வரலாம்.

தொ.அ: அப்படியா... வரலாமா? அவருக்குத் தெரியுமாங்க எல்லாம்?

கு.த: அவருக்குத் தெரி யுங்க.

தொ.அ: அவரு ஒண்ணும் சொல்ல மாட்டாரா?

கு.த: எல்லாம் அவருக்குத் தெரியும். ஒண்ணும் சொல்ல மாட்டாரு.

தொ.அ: என்னங்க சொல்றீங்க..? பிரச்னை எதுவும் வந்துறாதா? நான் இங்க இருக்கற நேரம் அவரு வந்து ஏதாவது ரசாபாசம் ஆகிடப் போகுது...

கு.த: இல்லை... இல்லை... அந்த ஒரு மாசத்துக்கு நீங்க 'பே' பண்ணிடறீங்க, இல்லையா...

தொ.அ: இந்த மாசத்துல ஆல்ரெடி யாரும் இருக்காங்களா?

கு.த: ம்.... இருக்காங்க.

தொ.அ: யாருன்னு தெரிஞ்சுக்க லாமா?

கு.த: அவரும் ஒரு கம்பெனி ஓனர்.

தொ.அ: திருச்சியா அல்லது வெளி யூரா?

கு.த: உள்ளூர்க்காரங்க எப்படி? வெளியூர்தாங்க.

தொ.அ: ஓஹோ... நான் வர்றப்பலாம் ஊட்டி, கொடைக்கானல்னு வேற ஊர்களுக்கும் போறதுண்டு. அங்கெல் லாம்கூட வருவீங்களா....?

கு.த: போலாங்க. எங்க ஃபேமிலியைப் பொறுத்தவரைக்கும் சனி, ஞாயிறு மட்டும்தான் வெளியூர் வருவேன். அந்த சமயத்துல பையனை வீட்டுக் காரர் பார்த்துப்பாரு...

தொ.அ: அப்படியே பண்ணிக்கலாம். ஒண்ணும் பிரச்னையில்லை. உங்களுக் குத் தெரிஞ்ச ஃபிரெண்ட்ஸ் வேற யாரும் இதேமாதிரி இருக்காங்களா?

கு.த: இருக்காங்க! அவங்க எல்.ஐ.சி-ல ஒர்க் பண்றாங்க. லெக்சரரா ஒர்க் பண்றவங்களும் இருக்காங்க. இ.பி-யில ஒர்க் பண்றவங்களும் இருக்காங்க. சொன்னாக்கா, பண்ணித் தரலாம்.

தொ.அ: அவங்கள்லாம் எவ்வளவு?

கு.த: எல்லாம் கொஞ்சம் பெரிய ஃபேமிலி பாருங்க. நல்லா இருப் பாங்க. ஐம்பதாயிரம் வரைக்கும் வாங்கறாங்க.

தொ.அ: அவங்க வீட்டுக்குல்லாம்கூட தெரியுமா?

கு.த: அதுங்களா... .ஒரு சிலர் வீட்டுல தெரியலாம். ஆனா, அவங்க ஹஸ்பெண்டுக்கு எந்த அளவுக்கு தெரியும்னு எனக்கு சரியாத் தெரியலை!

தொ.அ: ஆனா, வருவாங்கள்ல?

கு.த: ம்...

தொ.அ: எப்படி? வேலைக்குப் போனா எப்படி வருவாங்க?.

கு.த: எத்தனை நாள் வேணுமோ லீவு எடுத்துட்டு வருவாங்க!

தொ.அ: ஓ... ஓ... வேற பிரச்னை எதுவும் இருக்காதுல்ல?

கு.த: ஒரு பிரச்னையும் இருக்காது. நீங்க என்ன பிரச்னையைக் கேட் கறீங்க?

தொ.அ: இந்த ஹெச்.ஐ.வி... எய்ட்ஸ் அந்த மாதிரின்னு சொல்றாங்களே... ஒரே பயமா இருக்கு (சிரிக்கிறார்!).

கு.த: (பதிலுக்கு மெலிதாகச் சிரித்து) நாங்க ஃபேமிலி கேர்ள்ஸ்தானேங்க! அதனால ஒண்ணும் வராது! அதுமாதிரி கேக்கறாங்கனுதான், ஒருத்தர்கிட்டே அக்ரிமென்ட் தொடங்குறதுக்கு முன்னாடி நாங் களும்கூட ஃபிரெஷ்ஷா மெடிக்கல் டெஸ்ட் எடுத்துத் தந்துடறோம்.

தொ.அ: அதான்... அடுத்த மாசத்துக்கு இது பண்ணிக்கலாம்னுதான்... அன்னிக்கு ............கிட்ட 5,000 பணம் கொடுத்திருந்தேன், கொடுத் துட்டாரா?

கு.த: கொடுத்துட்டாரு.

தொ.அ: இதே வருஷத்துல மறுபடி வருவேங்க. அப்ப உங்க ஃபிரெண்ட் யாராவது அரேஞ்ச் பண்ணிக்கலாம்... (சிரிக்கிறார்).

கு.த: பார்த்துக்கலாம்ங்க. இல்லாட்டி அவர்கிட்டயே(?)கூட கேட்கலாம்.

தொ.அ: இந்த லெக்சரர் வேலை பாக்குறவங்க... (சட்டென்று) அது மாதிரி இல்லாட்டியும் காலேஜ் பொண்ணுங்க யாராவது இருக் காங்களா?

கு.த: காலேஜ் பொண்ணுங்களா? எனக்குத் தெரிஞ்சு காலேஜ் லெக் சரர்தான் இருக்காங்க....

தொ.அ: (மறுபடி) இந்த மாதிரி சின்னப் பொண்ணுங்க இல்லைன்றீங்க... ஆனா, இதுல பிரச்னை எதுவும் இருக்காதுல்ல..?

கு.த: இல்லீங்க... திருச்சியில அம்பது அறுபது பேர் இருக்காங்க....

தொ.அ: அவ்வளவு பேருங்களா?! எப்படி..? இவங்க எல்லாருக்குமே பேசி முடிக்கிறதுக்கு ஆள் இருக் காங்களா?

கு.த: ம்... இருக்காங்க. இப்ப உங்களை அறிமுகப்படுத்தி வெச்சாங்கள்ல... அவங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க.

தொ.அ: இவங்களுக்கு நீங்க ஏதாச்சும் பணம் தரணுமுங்களா...

கு.த: அவங்களே கமிஷன் மாதிரி எடுத்துப்பாங்க...

தொ.அ: பட்.. என்னிக்காவது இதெல்லாம் பிரச்சனைஆயிடாதா?

கு.த: அப்படி ஆகறதுக்கு சான்ஸ் இல்லை, ஏன்னா நாங்க எல்லாம் ஃபேமிலீல இருக்கோம் பாருங்க... அதனால யாருக்கும் இப்படினு தெரியாது. அதுவும் வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சு பண்றதால ஒண்ணும் பிரச்னையில்லை.

தொ.அ: அவரு எப்படிங்க அக்செப்ட் பண்றாரு, ஆச்சர்யமா இருக்கு!

கு.த: இல்லை.... தெரிஞ்சுதான், நாங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணித்தான் இப்படி பண்றது.

தொ.அ: ஃபேமிலியில ஏதாச்சும் பெரிசா பணப் பிரச்னைங்களா?

கு.த: பிரச்னை இருக்கு. அவரு வாங்கற சம்பளம் எங்களுக்குப் பத்தாது. அதனால இந்த மாதிரி!

தொ.அ: அடுத்த குழந்தை எதுவும் பெத்துக்கலையா.....

கு.த: இல்லைங்க... பார்க்கலாம்.

தொ.அ: (சில நொடி அமைதி நிலவ) சரி... அதான் அடுத்த மாசத்துக்கு கன்ஃபார்ம் பண்ணிடலாம்னு...

கு.த: கண்டிப்பா வாங்க.

தொ.அ: இன்னும் 20,000 ரூபாய் தரணும், சரிங்களா?

கு.த: வரும்போது தாங்க!

தொ.அ: சரிங்க. அப்ப அடுத்த மாசத்துக்கு நீங்க வேற யாரையும் எடுத்துக்க வேணாம்.

கு.த: இல்லீங்க... பணம் வாங்கிட்டா அப்படிஎங்க குடும்பத்துல செய்ய மாட்டோம்!

தொ.அ: ஓகே, நான் கிளம் புறேன்...

கு.த: போய்ட்டு வாங்க..!

விக்கித்துப் போன நிலையிலேயே நாம் வெளியில் வருகிறோம். அடுத்தடுத்து நாம் சந்தித்த இன்னும் சில முகங்கள், அவர்களின் சுற்றுச் சூழல்கள்... தோரணைகள்...

அது ஒரு விசாரணை வெடி குண்டு!
- தொடர்வோம் அடுத்த இதழில்...

Monday, January 4, 2010

குப்பையில் வீசப்பட்ட கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை!

பயங்கரவாதத்தின் கோரமுகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய மகாராஷ்ட்ரா மாநில பயங்கரவாத தடுப்புப்படைத் தலைவர் மறைந்த ஹேமந்த் கர்கரேயின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மற்றொரு அவமானம் நிகழ்ந்துள்ளது. கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை குப்பைக் கிடங்கில் வீசப்பட்டதாக அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்துள்ளன.


கர்கரே பயங்கரவாதத்திற்கு பலி­யான மறுநாள் 2008 நவம்பர் 27 ஆம் நாள் அவரது உடனி­­ருந்த குண்டுதுளைக்காத சட்டையை குப்பை போடும் பையில் வைத்து குப்பைக்கிடங்கில் வீசிவிட்டதாக கர்கரேயின் உடலை போஸ்ட்மார்டம் செய்த மும்பை ஜே.ஜே. மருத்துவமனையின் துப்புரவு பணியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

காந்தியைக் கொன்ற பயங்கரவாதிகள். பாப்ரி மஸ்ஜிதைத் தகர்த்த பாதகர்கள் நாட்டில் எந்த பயங்கரவாதச் செயல்கள் நடந்தாலும் சிறுபான்மை சமூக இளைஞர்களின் மீது பழிபோட்டு களங்கம் சுமத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த நிலையில் சங்பயங்கரவாதத்தின் கோர முகத்தை தோலுரித்தார் மாவீரன் கர்கரே.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் சங்பரிவாரைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார் கர்கரே.

அதனைத் தொடர்ந்து கடமை வீரர் கர்கரேக்கு மிரட்டல் அதிகரித்தது. மோடி உள்பட சங்முக்கிய பிரமுகர்கள் மிரட்டியதாக தகவல்கள் வெளிவந்தன.

2008 நவம்பர் 20 ஆம் நாள் மும்பை நகரம் பயங்கரவாத முற்றுகைக்கு இலக்கான போது கர்கரே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

கர்கரேயின் மர்ம படுகொலை குறித்து உரிய நீதி விசாரணை தேவை என பல்வேறு உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்த போதிலும் மராட்டிய சிங்கம் அப்துற் ரஹ்மான் அந்துலேயின் நாடாளுமன்ற கர்ஜனையும் கர்கரேயின் மனைவியார் கவிதா கர்கரேயின் போர்க் கோலம் எதிரிகளை திகைக்க வைத்தது. ஹேமந்த் கர்கரே குண்டு துளைக்காத உடை அணிந்திருந்தும் அவரது உடலை குண்டுகள் துளைத்தது எப்படி? அந்த உடை இப்போது எங்கே இருக்கிறது? எனக் கேட்டு கர்கரேயின் மனைவி நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படியும் வினா எழுப்பப்பட்டது.

குண்டுதுளைக்காத கவச ஆடை குறித்த விஷயத்தில் மகராஷ்ட்ர அரசின் அலட்சியம் குறித்து கொதிப்படைந்த நீதிமன்றம் மகராஷ்ட்ரா முதல்வர் அசோக் சவானின் பிரத்யேக பாதுகாப்பை உடனடியாக நீக்குங்கள். அவருக்கு கர்கரேக்கு அணிவிக்கப்பட்ட குண்டுதுளைக்காத ஆடையை அணிவியுங்கள் என கோபமாக குறிப்பிட்டார்.

கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை தொடர்பான கேள்விகள் இறுகத் தொடங்கியதைத் தொடர்ந்து. மும்பை ஜேஜே மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் குண்டு துளைக்காத ஆடையை மறுநாளே மருத்துவமனை குப்பைக்கிடங்கில் போட்டு விட்டதாக அவரது பதிவு செய்யப்பட்ட நீதி மன்ற வாக்கு மூலம் குறிப்பிடுகிறது.

கர்கரேயின் குண்டுதுளைக்காத உடை காணாமல் போயிற்று என மும்பை போ­லீஸ் முதன் முத­ல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு கண்துடைப்பான பதில் இவ்வளவு காலம் இல்லாத துப்புரவு பணியாளர் மற்றும் அவரது வாக்கு மூலம் திடீரென தோன்றியது. எப்படி என கேள்வி எழுப்புகிறார் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான ஒய்.டி.சிங் இவர் கர்கரேயின் குண்டுதுளைக்காத ஆடை என்னவாயிற்று? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கோரிக்கை எழுப்பியவர்.

சங்பரிவார் சதிகளை அமல்படுத்திய ஒரு கடமை தவறான காவல் அதிகாரிக்கு மேலும் மேலும் அவமானம் தொடர்வது தான் இந்நாட்டின் நீதியா?

கவிதா கர்கரேயின் கண்ணீருக்கும், நாட்டிலுள்ள கோடிக்கணக்கான நீதி நாடுவோரின் ஆதங்கத்திற்கும் பதில் கிடைப்பது எப்போது?

இனவெறித் தாக்குதல்: ஆஸ்திரேலியாவில் இந்தியர் படுகொலை

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 21 வயது இந்திய வாலிபர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய மாணவர்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுவரை சுமார் 1400 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில், இந்தியர்கள் மீதான தாக்குதலில் முதல் முறையாக வாலிபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இது ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிதின் கார்க் (21). இவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தார். மெல்போர்னில் உள்ள உணவகம் ஒன்றில் பார்ட்-டைம் வேலை பார்த்து வந்தார்.

ஆஸ்திரேலிய நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு சோமர்வில்லி சாலை- கீலாங் சாலை சந்திப்பில் தான் வேலை பார்க்கும் உணவகத்துக்கு வரும் வழியில் ஒரு பூங்கா அருகே மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

மேலும் வயிற்றுப்பகுதியில் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்துடன் ஒடி வந்துள்ளார். ரத்த காயங்களுடன் சத்தம் போட்டுக்கொண்டே தட்டுத்தடுமாறி உணவகத்துக்கு சேர்ந்த அவரை ஊழியர்கள் ராயல் மெல்போர்ன் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி நிதின் உயிரிழந்தார்.

நேற்று இரவு ஒன்பது மணிக்கு நியூபோர்ட்டில் இருந்து யரவில்லி ரயில் நிலையத்துக்கு நிதின் பயணம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவில் இந்திய வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது