Tuesday, June 29, 2010

மென்டோஸ் மிட்டாயும் கோகோ கோலாவும் கலந்தால்

மென்டோஸ் மிட்டாய் நாம் அறிந்த ஒன்று. சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவர். பிரேசில் நாட்டில் ஒரு சிறுவன் இந்த மிட்டாயை சாப்பிட்டு விட்டு கோகோ கோலா அருந்திய சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனான். இதே மாதிரி மரணம் முன்பு பிரேசில் நாட்டில் மற்றொரு சிறுவனுக்கும் ஏற்பட்டது. மென்டோஸ் மிட்டாயை கோகோ கோலா/ பெப்சி பானத்துடன் கலந்தால் என்ன நடக்கிறது என்பதை பின்வரும் ஒரு எளிய ஆனால் அதிர்ச்சிகரமான சோதனை விளக்குகிறது.

எனவே மென்டோஸ் (போலோ) மிட்டாய் சாப்பிட்ட உடன் கோகோ கோலா அல்லது பெப்சி பானம் அருந்த வேண்டாம். எச்சரிக்கையாக இருங்கள்.

இப்போது வேதனையை உண்டாக்கும் சோதனையை கவனிப்போம்.







என்ன பயங்கரம்? இந்த சோதனை நமது வயிறுக்குள் நடந்தால் என்னவாகும் என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள். நினைத்தாலே குலை நடுங்குகிறது.

இது சற்றே பழைய சங்கதியாக இருந்தாலும், தெரிந்து கொள்ளாதவர்கள் தெரிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் இந்த இரண்டு வகைகளையும் விரும்பி சாப்பிடுவதால் அவர்களுக்கு பெற்றோர்கள் எடுத்துக் கூற வேண்டும். அதாவது ஒரு சமயத்தில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம். அடுத்ததடுத்து வேண்டாம்.
நன்றி : http://sattaparvai.blogspot.com/2010/06/blog-post_29.html

Sunday, June 27, 2010

சிறுமிகளிடம் செக்ஸ் டார்ச்சர்-காப்பகங்களில் போலீஸ் சோதனை

குளச்சல்: சிறுமிகளிடம் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து குளச்சல் அருகே முறையான அனுமதியின்றி நடத்தப்பட்ட இரண்டு காப்பகங்களில் அதிரடி ரெய்டு நடந்தது.

குளச்சல் அருகே உள்ள கல்லுகூட்டத்தில் கடந்த சில வருடங்களாக மூன்று குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வந்தன. ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ஒரு காப்பகம் சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பு இங்கிருந்து களக்காடு பகுதிக்கு மாற்றப்பட்டு அங்கு இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள படர்நிலத்தை சேர்ந்த மேரி என்பவர் குளச்சல் இன்ஸ்பெக்டரிடம் கடந்த 24ம் தேதி ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனது கணவர் செல்வம் இறந்து விட்டதாகவும், அவரது இரண்டு மகள்கான ஜெபசபீனா, ஜெயரபீனா ஆகியோர் கல்லுகூட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வருவதாகவும், அந்த காப்பதத்தை நிர்வாகித்து வரும் ஞானதாஸ் என்பவர் தனது மகள்களை செக்ஸ் டார்ச்சர் செய்வதாகவும் அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றால் அதற்கு அனுமதி மறுத்து விட்டதாகவும் மகள்களை காப்பகத்தில் இருந்து மீட்டு தரும்படியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அன்று இரவே இன்ஸ்பெக்டர் கந்தகுமார், சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்பு மேரியின் இரண்டு குழந்தைகளையும் மீட்டு மேரியிடம் ஓப்படைக்கப்பட்டனர். மேலும் நேற்று முன்தினம் அந்த காப்பகத்தில் தங்கியிருந்த மொத்தம் 11 குழந்தைகளிடமும் தனி தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த காப்பகம் குறித்து ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து மனித உரிமை மீறல் மற்றும் பெண் குழந்தைகள் பலத்கார தடுப்பு பிரிவு ஏடிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் ஏட்டுகள் நெல்சன், முருகேசன், உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கல்லுகூட்டம் குழந்தைகள் காப்பகத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர்

Tuesday, June 22, 2010

English - Tamil Dictionary



உங்களுக்கு ஆங்கிலத்தில் உள்ள அனைத்து வார்த்தைக்கும் அதற்கான அர்த்தம் தெரியுமா? (நமக்கு சில தமிழ் வார்த்தைக்கான அர்த்தம் கூட தெரியாது. அது வேற விஷயம்). நாம் செல்லும் இடமெல்லாம் Oxford or Lifco Dictionary-ஐ கொண்டு செல்ல இயலாது. இன்றைய கணினி, இணைய தொழில்நுட்ப உலகில் பல்வேறுபட்ட மென்பொருட்கள் தமிழ்மொழிக்கென உருவாக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு உருவாக்கபட்டதொரு மென்பொருள் தான் PALS e-DICTIONARY என்னும் தமிழ்-தமிழ்-ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் மென்பொருள் அகராதி. இந்த மென்பொருளானது இந்திய மொழிகளுக்கான தொழில்நுட்ப அபிவிருத்தி என்னும் நிறுவனத்தின் மென்பொருளாகும். இந்த மென்பொருளானது இலவசமாக கிடைக்ககூடியதொரு மென்பொருளாகும். இந்த அகராதியில் 60,000 மேற்பட்ட சொற்களுடன் இந்த அகராதியானது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிக்கென உருவாக்கப்பட்டுள்ள சிறப்பானதொரு மென்பொருளாகும்.













Click here to Download

Thursday, June 17, 2010

விபசாரம் செய்யும் கல்லூரி மாணவிகள்

"பிரான்சில் நாற்பதாயிரம் மாணவிகள் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்! பிரான்சில் அதிகரித்து வரும் கல்விக் கட்டணத்தை கட்ட முடியாமல் இரண்டு லட்சம் மாணவர்கள் திண்டாடுகிறார்கள். ஒரு ஆய்வின் படி 45000 மாணவர்கள் வறுமையில் வாடுகிறார்கள்." இந்த திடுக்கிடும் செய்தி Le Figaro என்ற பிரபல பிரெஞ்சு தினசரியில் வெளியானது. பல்கலைக்கழக மாணவிகள் படிப்புச் செலவுகளுக்காக விபச்சாரம் செய்வது செல்வந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. பிரிட்டனில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின் படி, விபச்சாரத்தில் ஈடுபடும் மாணவிகளின் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றது. கடந்த ஆறு ஆண்டுகளில் தான் அரசு கல்விக் கட்டணத்தை அதிகரித்திருந்தது. அது அங்கே தற்போது வருடத்திற்கு 3000 பவுன்கள். பிரிட்டிஷ் கல்லூரிகளில் செய்யப்பட்ட ஆய்வின் பொழுது, பத்து சதவீத மாணவர்கள் தமக்கு தெரிந்தவர்கள் விபச்சாரம் செய்வதாக கூறினார்கள்.

பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஏழை மாணவர்கள் பகுதி நேர வேலை பார்ப்பது வழக்கமாக நடப்பது தான். ஆனால் பகுதி நேர வேலை, படிக்கும் நேரத்தை ஆக்கிரமிக்கிறது. மேலும் வேலை செய்த களைப்பு காரணமாக படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. அத்தகைய காரணங்களால், பல மாணவிகள் ஒரு உணவு விடுதியில் வேலை செய்வதிலும் பார்க்க, விபச்சாரம் மேல் எனத் தேர்ந்தெடுக்கின்றனர். விபச்சாரம் செய்வதன் மூலம் பணம் இலகுவாக கிடைக்கின்றது. நேரத்தையும் மிச்சம் பிடிக்க முடியும். விபச்சாரத்தில் ஈடுபடும் மாணவிகள் அது குறித்து எவருடனும் பகிர்ந்து கொள்வதில்லை.

இணைய இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த மாணவி ஒருவர் இவ்வாறு கூறினார். "இன்டர்நெட் மூலமாக வாடிக்கையாளர்களை பிடிப்பதாகவும், சில நாட்கள் பேசிப் பார்த்து நம்பிக்கை வந்த பின்னரே, ஹோட்டல்களில் சந்திப்பதாக" தெரிவித்தார். "கல்லூரியில் கூடப் படிக்கும் மாணவி ஒருவர் உணவு விடுதியில் வேலை செய்வதாக சொன்னார். மூன்று மாதங்களின் பின்னர் ஒரு கார் வாங்கினார். உணவு விடுதியில் என்ன சம்பளம் கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். மூன்று மாதங்களில் கார் வாங்குவதானால் வேறு தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். பல மாணவிகள் காதலன் என்ற பெயரில் பணத்துக்காக ஒருவனுடன் உறவு வைத்துக் கொள்கின்றனர். "


ஐரோப்பிய நகரங்களில் சட்டபூர்வ விபச்சாரிகளுக்கு உதவும் அரச அல்லது தொண்டு நிறுவனங்கள், தம்மிடம் மாணவிகள் பற்றிய புள்ளி விபரம் எதுவும் இல்லை என தெரிவிக்கின்றனர். ஆனால் அதே நேரம் தம்மிடம் உதவி பெறும் விபச்சாரிகளில் மாணவிகளும் இருக்க வாய்ப்புண்டு என்றனர். மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமல்ல. ஆயினும் அவர்கள் பகிரங்கமாக விளம்பரம் செய்ய தடை உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகங்கள் இந்தப் பிரச்சினை இருப்பதை மறுக்கின்றன. வறுமை காரணமாக கல்விக் கட்டணம் கட்ட முடியாத மாணவர்களுக்கென அரசு மானியம் வழங்குவதாகவும், அதைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தனர். அண்மைக் காலமாக மானியத்திற்காக விண்ணப்பித்த மாணவர்கள் தொகை அதிகரித்திருப்பதை ஏற்றுக் கொண்டனர். ஆனால் நாட்டு நிலைமை அவர்கள் சொல்வது போன்றில்லை.

மேற்கு ஐரோப்பா மாறி வருகின்றது. முன்பெல்லாம் கல்வி ஒன்றில் இலவசமாக கிடைத்தது, அல்லது வருமானம் குறைந்தவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு கட்டி வந்தது. அந்தக் காலம் இப்போது மலையேறி விட்டது. அப்போதெல்லாம் அக்கரையில் சோஷலிச நாடுகள் இருந்தன. அங்கெல்லாம் கல்வி இலவசம். அவர்களை விட நாம் சிறந்தவர்கள் என்று காட்ட வேண்டாமா? இப்பொழுது தான் கம்யூனிச நாடுகள் காணாமல் போய் விட்டனவே. இனி என்ன பயம்? போர்த்தியிருந்த பசுத்தோலை கழற்றி விட்டு, முதலாளித்துவம் தைரியமாக தனது கோரப் பற்களை காட்டுகின்றது.

பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், ஐரோப்பிய அரசாங்கங்கள் வலதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தி வருகின்றன. கல்வியில் தனியாரின் ஆதிக்கத்தை அதிகரிப்பது அவர்கள் நோக்கம். அதற்காக வருடாந்த பட்ஜெட்டில் கல்விக்கென ஒதுக்கப்படும் அரச செலவினத்தை குறைத்துக் கொண்டு வருகின்றனர். மக்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் வெட்டப்படுகின்றன.

முதலாளித்துவ குருக்கள் அரசு கல்வியை முழுவதும் தனியாரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று சதா காலமும் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல் தற்போது அரங்கேறுகின்றது. நம் மத்தியிலும் தனியார்மயத்திற்கு ஆதரவளித்து சமூக சீரழிவுகளை வளர்க்கத் துடிக்கும் "முதலாளித்துவ குருக்கள்" இருக்கிறார்கள். "விபச்சாரம் செய்யினும் கற்கை நன்றே!" என்று எமக்கு புத்திமதி கூறலாம். அவர்கள் முதலில் தம் வீட்டுப் பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்ப முன்வருவார்களா?

இந்த செய்தியை பதிவில்(கலையகம்) பார்த்தோம் அதை அப்படியே இங்கே அளித்தோம்.

Monday, June 14, 2010

நித்யானந்தா பெண்களைக் காரில் அழைத்துச் செல்லுவது ஏன்? எதற்காக?





சாமி-யார்?

மக்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி நாள்தோறும் காமக் களியாட்ட சொர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நித்யானந்தா என்ற ஆசாமி சிறை என்னும் நரகத்தில் வாசஞ் செய்து இப்பொழுது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இவருக்கு ஜாமீன் கேட்டு, அவரின் வழக்குரைஞர் பி.வி. ஆச்சாரியார் நீதிமன்றத்தில் வாதாடினார்.

சாமியார் என்று கூறிக் கொள்ளும் நித்யானந்தா தன்னுடன் பெண்களைக் காரில் அழைத்துச் செல்லுவது அவருடைய பக்தர்களின் மனதைக் காயப்படுத்தாதா? என்று நீதிபதி சுபாஷ் கேட்டார்.

அதற்கு நித்யானந்தாவின் வழக்குரைஞர் சொன்ன பதில் அனைவரையும் தூக்கி வாரிப் போடச் செய்தது. இந்தக் காவி வேட்டிகளின் கபடத்தனத்தையும் ஒரு வகையில் தோலுரித்தும் காட்டியது.

அப்படி என்னதான் சொன்னார் நித்யானந்தாவின் வழக்குரைஞர்?

நித்யானந்தா சாமியார் அல்ல. அவர் தன்னை ஒருபோதும் சாமியார் என்று சொல்லிக் கொண்டதும் கிடையாது. சில ஆசிரமங்களில் குடும்ப வாழ்க்கை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, நித்யானந்தாவையும் சாதாரண மனிதராகத்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த வழக்கையும் சாதாரண விஷயமாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

இதுவரை நித்யானந்தாவை ஆண்டவனிடத்தில் வைத்துப் பார்த்தனர் அவர் சாதாரண மனுஷன்தான் என்று அவரது வழக்குரைஞரே முகத்திரையைக் கிழித்துக் காட்டிவிட்டார்.

பக்தி சமாச்சாரங்கள் இந்த யோக்கியதையில்தான் உள்ளன என்று பக்தர்கள் என்றுதான் புத்தியைப் பயன்-படுத்தி உணரப் போகிறார்களோ என்று தெரியவில்லை.

ஏதோ நித்யானந்தாதான் இப்படி என்று இல்லை. ரமண மகரிஷி ரமண மகரிஷி என்று பூதாகரப்படுத்துகிறார்களோ, அந்தப் பெரிய மனுஷன் என்ன செய்தார் தெரியுமா?

தொடக்கத்தில் முற்றும் துறந்த முனிவர்போல, பற்றற்றவர்போல காட்டிக்கொண்ட இந்த வெங்கட ரமண பார்ப்பனருக்குச் சொத்துக்கள் குவியக் குவிய சொந்த பந்தங்களும் சுற்றி வந்து சூழ்ந்துவிட்டன.

கடைசியில் என்ன செய்தார்? தன் தம்பிக்குச் சொத்துக்களை எழுதி வைத்து-விட்டார்.

ரமண ரிஷியின் அந்தரங்கச் சீடராகவிருந்த பெருமாள்சாமி என்பார் நீதிமன்றம் சென்றார்.

நித்யானந்தாவின் வழக்குரைஞர் நித்யானந்தா சாமியாரே இல்லை என்று சொன்னதுபோல ரமண ரிஷியின் விஷயத்திலும் நடந்தது.

நீங்கள் சந்நியாசியாயிற்றே, எப்படி அண்ணன், தம்பி பாசமெல்லாம்? என்ற கேள்வியை நீதிபதி எழுப்பியபோது, நான் எப்பொழுது சந்நியாசம் வாங்கினேன்? என்று எதிர்க்கேள்வியைப் போட்டாரே பார்க்கலாம், இதுதான் சாமியார்களின், ரிஷிகளின் யோக்கியதை!

பூரி சங்கராச்சாரியார் மனைவி மக்களுடன் குடும்பம் நடத்துகிறாரே, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிகூட அதிகாரப்பூர்வமாகக் குடும்பம் நடத்தாவிட்டாலும், ஏராளான வைப்புகளை வைத்துக்கொண்டு சல்லாபம் செய்யவில்லையா? சிறைக் கம்பிகளை எண்ணி ஜாமீனில் நடமாடவில்லையா?


சாமியார்களில் காமியார்கள் என்ற பெயரில் ஒரு சங்கத்தைக் கூட ஆரம்பிக்கலாமே!

இதற்கு மேலும் பக்தியா? ஆன்மீகமா? வெண்டைக்காயா?

---------------- மயிலாடன் அவர்கள் 14-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை


கல்கி ஆசிரமத்தில் காவலாளி மர்ம சாவு

பூந்தமல்லியை அடுத்த நேமத்தில் கல்கிபகவான் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில்தான் போதை மாம்மழம் தந்து பக்தர்களை அடிமையாக்குவதாக அதிர்ச்சி வீடியோ வெளியானது. பின்பு இந்த வீடியோவை ஒளிபரப்ப ஆசிரமம் தடை வாங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆசிரமத்தில் வேலை பார்த்துவந்த காவலாளி மர்மமான முறையில் இறந்துள்ளார்.

மேல்மணம்பேடு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இந்த ஆசிரமத்தில் காவலாளியாக இருந்தார்.

ஆசிரமத்திற்கு வரும் வாகனங்களுக்கு கதவை திறந்து விட்டுக்கொண்டிருந்த அவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.

இதனால் ஆசிரமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த ஊழியர்கள் ராஜேந்திரனை போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் காவலாளி ராஜேந்திரன் இறந்தார்.

இது சம்பவம் தொடர்பாக வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

தூங்கி கொண்டிருந்த பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வி.ஏ.ஓ. கைது

இளையான்குடி: இளையான்குடியில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை, மானபங்கம் செய்ய முயன்ற, கிராம நிர்வாக அதிகாரி சுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ளது நெஞ்சத்தூர். இதன் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் சுந்தரம். இவருக்கு வயது 56. இன்னும் 2 வருடங்களில் இவர் ஓய்வு பெறவுள்ளார்.

இந்த நிலையில், இவர், கடந்த மே 19 ம் தேதி, இரவு 11 மணிக்கு தனியாக படுத்திருந்த கமலா என்ற 32 வயது பெண்ணை அவரது வீட்டிற்குள் சென்று, மானபங்கம் செய்ய முயன்றார்.

இதனால் தூக்கத்தில் இருந்த கமலா அலறல் சத்தம் போடவே, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். கூட்டத்தை பார்த்ததும் வி.ஏ.ஓ. தப்பித்து ஓட முயன்றார். இருப்பினும் ஊர்மக்கள் ஒன்று கூடி சுந்தரத்தைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். பின்னர் கமலா தனக்கு நேர்ந்த மானபங்கம் குறித்து மாவட்ட எஸ்.பி, மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சிவகங்கை ஆர்.டி.ஓ. பொன்னையா, வி.ஏ.ஓ. சுந்ரத்தை சஸ்பெண்ட் செய்தார்.

Sunday, June 13, 2010

பள்ளியில் பெண்கள்

நபி அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில் இமாம் தவறு செய்தால் தவறைச் சுட்டிக்காட்டுவதற்கு) தஸ்பீஹ் கூறுவது ஆண்களுக்கும், கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:புகாரி

உமர்(ரலி) அவர்களின் மனைவி (ஆதிகா) சுபுஹ் தொழுகைக்கும், இஷா தொழுகைக்கும் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்திலே கலந்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்களிடம் (உங்கள் கணவர்) உமர் அவர்கள் இதை விரும்பமாட்டார். இன்னும் ரோஷப்படுவார் என்று அறிந்திருந்தும் எதற்காக நீங்கள் வெளியேறி (மஸ்ஜிதுக்கு) வருகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (இதுவரை என்னை அவர் தடுக்கவில்லையே) என்னை மஸ்ஜிதுக்கு வராமல் தடுப்பதை விட்டும் அவரை எது தடுத்தது என்று வினவினார்கள். அதற்கு (அவர்களின் மகன் அப்துல்லாஹ்) இப்னு உமர் அவர்கள் அல்லாஹ்வினுடைய பெண் அடிமைகளை அல்லாஹ்வின் மஸ்ஜிதை விட்டும் தடுக்காதீர்கள் என்ற நபியின் சொல்தான் அவர்களை தடுத்துள்ளது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி அவர்கள் எழுவதற்கு முன் சற்று அமர்ந்து இருப்பார்கள். பெண்கள் ஆண்களை சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக நான் கருதுகிறேன் என்று இப்னு ஹிஷாம் கூறுகிறார். நூல்:புகாரி

இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

நபி அவர்கள் கூறினார்கள்: உங்கள் துணைவியர் (பள்ளிவாசலுக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி

“உங்களில் ஒரு பென் மஸ்ஜிதுக்கு வந்தால் அவள் நறுமணம் பூசவேண்டாம்” என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஜைனப் (ரலி) நூல்: முஸ்லிம்

நபி அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குவேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலை நான் கேட்பேன். (எனக்குப் பின்னால் தொழுதுகொண்டு இருக்கும்) அந்த குழந்தையின் தாயாருக்கு சிரமமளிக்க கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கி முடித்து விடுவேன். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்:புகாரி

Saturday, June 12, 2010

'ரஞ்சிதா' புகழ் நித்யானந்தா செக்ஸ் சாமியார் பிணைப்பில் விடுதலை.

'ரஞ்சிதா' புகழ் நித்யானந்தா பிணைப்பில் விடுதலை.

நித்யானந்தாவின் பழைய கதைகள் அனைவரும் அறிந்தது . சிறையில் இருந்த அவர் ஜாமீன் கேட்டு வக்கீலை நியமித்திருந்தார் அது தொடர்பாக,நேற்று முன்தினம் விசாரணை நடந்த போது, நித்யானந்தா தரப்பில் ஆஜரான வக்கீல் ஆச்சார்யா, "சாமியார் சன்னியாசியல்ல' என்று வாதாடினார். ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி சுபாஷ் தெரிவித்திருந்தார். இந்த மனு, நேற்று மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நித்யானந்தா வக்கீல் ஆச்சார்யா கூறுகையில், ""நித்யானந்தா மீது கூறப்பட்ட புகார்கள் எதுவும் நிரூபிக்கப்பட வில்லை. அரசு தரப்பில் நித்யானந்தா மீது கூறப்பட்டுள்ள புகாருக்கு சரியான சாட்சியங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. நித்யானந்தா மீது, எந்த தனி நபரும் புகார் கொடுக்கவில்லை. நித்யானந்தா உடல்நிலை கருதியும், எந்த நேரமும் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதையும் தெரிவித்துக் கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஷ் ஆதி கூறியதாவது: நித்யானந்தா, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க ஜாமீனும், இதே தொகைக்கு, உள்ளூரைச் சேர்ந்த இரு நபர் ஜாமீனும் வழங்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை ராம்நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும். தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் வரை ஆன்மிக சொற்பொழிவுகளோ, பயிற்சி வகுப்புகளோ நடத்தக்கூடாது. வழக்கு விசாரணை முடியும் வரை வெளியூர்களுக்கு செல்லக் கூடாது. அவரது பாஸ்போர்ட்டை, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும். போலீஸ் விசாரணைக்கு அழைக்கும் போது ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி சுபாஷ் ஆதி கூறினார்.


நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டாலும், இந்த ஜாமீன் உத்தரவை, ராம்நகர் கோர்ட்டில் சமர்ப்பித்து, அவர்களின் அனுமதியின் பேரில், ராம்நகர் கிளை சிறையில் இருக்கும் நித்யானந்தாவை வெளியில் கொண்டு வரலாம். இன்றும், நாளையும் கோர்ட் விடுமுறை என்பதால், திங்கட்கிழமை தான் நித்யானந்தா, சிறையிலிருந்து வெளியே வருவார். இதற்கிடையில், கர்நாடகா சி.ஐ.டி., போலீசாரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள நித்யானந்தா வங்கி கணக்குகள் தொடர்பான விசாரணை, வரும் 18ம் தேதியும், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி, கர்நாடகா ஐகோர்ட்டில் நித்யானந்தா தாக்கல் செய்திருந்த மனு, வரும் 24ம் தேதியும் விசாரணைக்கு வருகின்றன. இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட நடிகை ரஞ்சிதாவை பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. போலீஸ் தரப்பிலோ, நித்யானந்தா தரப்பிலோ எந்த தகவலும் சமர்ப்பிக்கவில்லை.

Tuesday, June 8, 2010

மதுரை: செல்போனில் ஆபாச படம்; 3வாலிபர்கள் கைது



மதுரையில்,மாணவிகளை திட்டமிட்டு ஏமாற்றி,செல்போனில் ஆபாச படம் எடுத்த 3வாலிபர்கள் பிடிபட்டனர். தொலைந்து போன செல் போன் போலிசரின் கையில் சிக்கியதால் இந்தக் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில்,கீழே கிடந்ததாக கூறி ஒருவர் செல்போன் ஒன்றினை ஒப்படைத்தார். அந்தச் செல்போன் யாருடையது என்று அறிய அதை ஆய்வு செய்து பார்த்த போலிசார் திடுக்கிட்டனர்.

ஏனெனில், அந்தச் செல்போன் முழுவதும் இளம்பெண்களின் ஆபாச படங்கள் நிரம்பி இருந்தன. இதைத் தொடர்ந்து, யாரோ செல்போனில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து பரவ விட்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்த போலிசார் அந்த நபரை பிடிக்க வலைவிரித்தனர்.


அந்தச் செல்போன் நிருவனத்துடன் ரகசியமாக தொடர்பு கொண்டு விசாரித்ததில், அந்தப் போனின் சொந்தக்காரர் ஜெய்ஹிந்துபுரதைச் சேர்ந்த வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது.அவரைப் பிடித்து மேலும் துருவித்துருவி விசாரித்ததில், பிடிபட்ட வாலிபரும், அவரது 3 நண்பர்களும் சேர்நது இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.


இதன் அடிப்படையில், ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெருவைச் சேர்ந்த பப்லு (வயது21), புலிப்பாண்டியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்கிற ஜெகதீஷன்(21), முத்துப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(21),ஆகியோரை போலிசார் கைது செய்தனர்.

இவர்கள் கைதானதை அறிந்து, இவர்களது கூட்டாளிகளான ராஜாவும்,திலீப் என்கிற கார்த்திக்கும் தப்பி ஓடிவிட்டனர். இவர்களை போலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அவர்களிடம் போலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவிகளை இவர்கள் குறிவைத்து பின் தொடர்ந்து செல்வார்கள்.அவர்களிடம் நைசாக பேசி,காதல் வலை விரிப்பார்கள். இதை நம்பி ஏமாறும் மாணவிகளை ஆபாசப் படம் எடுப்பார்கள்.அதைக் காட்டி அவர்களுடன் உல்லாசமாக இருக்க மிரட்டுவார்கள் என்றும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும், அந்த ஆபாச படங்களை எல்லாம் ஒரு ’சிப்’ ஆக தயாரித்து உள்ளனர். அவற்றை ’சி.டி’க்களாக் தயாரித்து விற்பனை செய்து இருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கிறார்கள்.

இது போக, பஸ் நிறுத்தத்தில் கல்லூரி மற்றும் பள்ளி செல்ல காத்து நிற்கும் மாண்விகளை அவர்கள் காரில் கடத்திச் சென்றதும் போலீஸ் வசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலீசார், 4 பிரிவுகளின் கீழ் அந்த வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் அவர்கள் 3பேரையும் சிறையில் அடைத்தனர்.

முஸ்லிம்கள் - விடுதலைப்புலிகள்

பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரேலிய பாசிசம் நடத்தும் இனவெறிக்கு நிகரான போக்கை மேற்கொள்வதில் விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பு எப்போதும் முன்னணி வகிக்கின்றது. ஆனால் சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிராக வரும் கண்டனங்கள் போன்று விடுதலைப்புலிகளுக்கு எதிரான கண்டனங்கள் உலகில் ஒலிக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான வெறியாட்டத்திற்கு இவர்களுக்கு 'தமிழீழம்' என்ற முகமூடி தேவைப்பட்டது - பயன்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த வெறியர்கள் நடத்திய கொலையாட்டங்கள் வெளி உலகிற்கு ஒரு நாள் நிச்சயம் தெரியவரும்.


ஆகஸ்ட் மாதம் அங்கு நடந்த - விடுதலைப் புலிகள் நடத்திய - அதனால் உயிரிழந்த முஸ்லிம்களை நினைவுக் கூறுவோம். அவர்களின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோம். இணைய ஆசிரியர்

மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) அமைப்பினால் 08.05.1991 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை இலக்கம் 7 இலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பு

பக்கம் 16

2.5 காத்தான்குடி

இந்திய அமைதி காக்கும் படை நிலைகொண்டிருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் காத்தான்குடி முஸ்லிம்களுடன் நல்லுறவைக் கொண்டிருந்ததுடன், பிரச்சினையான சமயங்களில் அங்கு அடைக்கலம் பெற்றும் வந்தனர். டிசம்பர் 1989ல் இப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் வந்த போது, முதல் இரண்டு வாரங்கள் அவர்களது நடைமுறைகள் மிகவும் சிறப்பான முறையில் அமைந்திருந்தது. அப்போது முஸ்லிம்களின் நம்பிக்கையும் உயர்மட்டத்தில் இருந்தது. ஆயினும் இதன் பின்னர் நிலைமைகள் படிப்படியாக கீழ்மட்டங்களுக்கு வீழ்ச்சியடையத் தொடங்கின. புலிகளால் கோரப்பட்ட அதிகளவு கப்பம் பெருமளவு வணிகத்திலேயே தங்கியிருந்த மக்களை பெரிதும் சுமைக்குள்ளாக்கியது. முஸ்லிம்களின் சுயாதீனமான நடவடிக்கை எதற்கும் பாதகமான அணுகுமுறைகளை புலிகள் ஆரம்பித்தனர். சிறியளவு புலி ஆதரவாளர்களுக்கான எதிரப்புகளும் அதற்கான பதில் நடவடிக்கைகளும் காணப்பட்டன.

ஆயினும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட முஸ்லிம் தலைமைத்துவம் புலிகளை உரிய முறையில் அணுகி தொடர்ந்த தலையீட்டின் ஊடாக விடயங்களைச் சரிப்படுத்தி வந்தது. சம்மேளனமானது 'புலிகள் முஸ்லிம்களுக்கு மதிப்பளித்து அவர்களது சுய நிர்ணய உரிமையை புலிகள் ஏற்றுக் கொள்ளாத வரை அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது இகழ்வுக்குரியது' எனும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்த கடும்போக்குடைய இளைஞர்களிடமிருந்து குறிப்பிடத்தக்களவு அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சம்மேளனம் ஏனைய முஸ்லிம் தலைவர்களுடன் இணைந்து புலிகளை பொறுப்புணர்வுடன் நடக்க வைக்கத்தக்க நட்புறவான அழுத்தத்தை தொடர்ந்து ஏற்படுத்திய போதிலும், முஸ்லிம்களின் அனைத்து சுயாதீன கருத்து வெளியீட்டு வகைகளையும் உடைக்கத் தக்கதாக புலிகளால் தடைசெய்யப்பட்டது.

யோகி கிழக்குக்கு வருகை தந்த போது, உள்ளூர்த் தலைமைகள் சம்மேளனத்தின் மீதான தடை ஏற்படுத்தியுள்ள பாதகமான சூழ்நிலை குறித்து அவருக்கு விளக்கினர். அவர்கள் புலிகளை எதிர்க்கவோ புலிகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கவோ முஸ்லிமகள் எவ்விதத்திலும் முயற்சிக்கவில்லை என்றும், யோகி இத்தடையை உத்தியோகபூர்வமாக நீக்கினாலும் அவர்கள் வழமை போன்று செயற்பட முடியும் என்றும் விளக்கினர். யோகி இத்தடையை நீக்கினார் எனினும் முஸ்லிம்களின் ஏனைய கோரிக்கைகள் மீது பாராமுகமாகவே செயற்பட்டார். ஓரளவு வழமையான நிலைகளும் உறவும் தொடர்ந்தன. காத்தான்குடியின் மூத்த தலைமுறையோடு அடிக்கடி நட்புறவான தொடர்புகளைக் கொண்டவர்களாக புலிகளின் பிராநதியத் தலைவர்களான நியூற்றன், கரிகாலன், டேவிற் மற்றும் ரஞ்சித் அப்பா ஆகியோர் காணப்பட்டனர்

ஜூன் யுத்தம்: யுத்தத்தின் ஆரம்பத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் நேரடி தரைவழிப் பாதைகள் மூடப்பட்டதாலும், தமிழ் வர்த்தகர்களும் அவர்களது லொறிகளும் மாவட்டத்திற்கு வெளியே செல்ல முடியாததாலும், காத்தான்குடி வர்த்தகர்கள் கல்முனையிலிருந்து பொருட்களை முக்கியமாக உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதாலும், மட்டக்களப்பு மாவட்ட மக்களிடையே காத்தான்குடியின் முக்கியத்துவம் அதிகரித்ததோடு, காத்தான்குடி முழு மாவட்டத்துக்குமான உணவு மூலமாக மாறியது. வெளியில் வசிக்கும் மக்கள் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய கூட்டம் கூட்டமாக காத்தான்குடிக்கு வருகை தந்தனர்.

ஜின்னா ஹாஜியார் காத்தான்குடியின் மஞ்சந்தொடுவாய் எல்லைப் பகுதியில் வசிக்கும் அரிசி ஆலை உரிமையாளர் ஆவார். அவர் ரஞ்சித் அப்பாவை அறிந்திருந்தார். யுத்தம் உக்கிரமான பொழுதில் ரஞ்சித் அப்பாவிடம் ஜின்னா ஹாஜியார் அப்பாவித்தனமாக 'காத்தான்குடி மக்களுக்கு தீங்குகள் ஏற்படாமல் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தார். அச்சமயம் சிங்கள பொலிசாருடன் சேர்த்து முஸ்லிம் பொலிசாரும் பெரும் எண்ணிக்கையில் புலிகளால் கொல்லப்பட்டிருந்தும், காத்தான்குடியின் பொது நிலைப்பாடு இதை யுத்த அடிப்படையில் நியாயப்படுத்தத் தக்கதாகவே அமைந்திருந்தது.

ஜூன் 26ம் திகதி புலிகள் காத்தான்குடிக்குள் பெரும் எண்ணிக்கையில் பிரவேசித்து ஊரடங்கை பிரகடனப்படுத்தி பிரதான வீதியின் இருபுறங்களிலும் அமைந்திருந்த கடைகளை களவாடத் தொடங்கியது மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விடயத்தை அறியாமல் பிரதான வீதிக்கு வந்த ஒருவர் கொல்லப்பட்டார். மாவட்டத்தில் தமிழ் கிராமங்களையும் உள்ளடக்கியாதாகத் தொடர்ந்த ஒன்றாகவே இக் களவுகள் காணப்பட்டாலும், பள்ளிவாயல் ஒன்றின் வருமானத்துக்காய் இயங்கிய அப் பள்ளிவாயலின் அருகில் காணப்பட்ட 3 கடைகள் புலிகளால் எரியூட்டப்ட்டமை முஸலிம்களை மிகவும் பாதித்தது. புலிகள் அங்கிருந்து சென்ற உடனேயே விரைந்த மக்களால் பள்ளிவாயல் தீயிலிருந்து பாதுகாக்கப்பட்டது. தொடர் கடைத்தெருக் களவாடல்கள் மாவட்ட மக்களின் உணவு விநியோகத்தை முற்றாகவே முடக்கியது.

உள்ளூர் முஸ்லிம் தலைமைகள் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளுடன் நட்புறவான பிரதிநிதுத்துவப்படுத்தலைக் கொண்டிருந்தனர். களவாடலின் ஒரு வார நிறைவில் புலிகளின் உள்ளுர்த் தலைவர்களான நியுற்றன் மற்றும் ரஞ்சித் அப்பா ஆகியோர் காத்தான்குடிக்கு வந்து 15 மூத்தோருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இதில் தவறுக்காக மன்னிப்பையும் கோரியிருந்தனர். மேலும் எதிர்காலத்தில் புலிகளின் நன்னடத்தைக்கான உறுதியையும் அளித்திருந்தனர்.

முஸ்லிம்கள் சற்றே நம்பிக்கையுடன் காணப்பட்ட போதும், அதற்கு பெரும் ஊறு விளைவிக்கும் வகையில் புலிகள் காத்தானகுடிக்குத் தெற்கே 3 மைல் தூரத்திலுள்ள குருக்கல்மடத்தில் ஜூலை 12ம் திகதி 68 முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர். கொல்லப்பட்ட அனைவரும் காத்தான்குடியைச் சேர்ந்தோர் ஆயினும், இதற்கான காரணத்தை கண்டறியும் பாங்கில், புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம் ஒருவர் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடத்தை இராணுவத்துக்கு காட்டிக்கொடுத்தமைக்குப் பழிவாங்கவே இப்படுகொலைகள் இடம்பெற்றன எனும் கதை ஒன்று அப்போது நிலவியது.

ஆகஸ்ட் 3 மனிதப் படுகெலைகள்: விபரங்கள் 4ம், 5ம் இலக்க அறிக்கைகளில் உள்ளன, இப்படுகொலைகள் முஸ்லிம்களிடம் புலிகளுடன் எவ்வாறானதொரு தொடர்பையும் வைத்திருக்க முடியாது எனும் மனநிலையைத் தோற்றுவித்தன. இவையும் ஜூலை 12 படுகொலைகள் போன்றே எவ்வித அடிப்படையும் அற்றவை. சம்மேளன செயலாளரால் யார் இக்கொலைகளைச் செய்தது என்பதில் நிறைந்திருந்த குழப்பத்தை தணிக்கும் முகமாக ஒரு அறிக்கை விடுக்கப்பட்டது. மக்களிடம் ராணுவமே பொறுப்பு என்ற கதைகளும் காணப்பட்டன ஆயினும் உள்ளுர்த் தலைவர்கள் புலிகள் அவ்விடத்தில் காணப்பட்டதையும், அவர்களே பொறுப்பென்பதையும் விபரித்தனர்

ஆகஸ்ட் 3 பள்ளிவாயல் படுகொலைக்கு சற்று முன்னர் ஜின்னா ஹாஜியாரின் வீட்டுக்குச் சென்ற ரஞ்சித் அப்பா அவரின் மருமகன் எங்கே என்று கேட்டுள்ளான். மருமகனின் சிறிய மகன் தந்தை குளியலறையில் இருப்பதாகக் கூறினார். ரஞ்சித் அப்பா அங்கு அடிக்கடி வருபவர் ஆகையால் எதையும் வித்தியாசமாக அவர்கள் உணரவில்லை. மருமகன் ரஞ்சித் அப்பாவை சந்திக்க வெளியே வந்ததும் அவனால் மனையியினதும் மகனினதும் முன்னிலையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் ரஞ்சித் அப்பாவின் தலைமையில் வந்திருந்த புலிகள் அணி இரு பள்ளிவாயல்களுக்குச் சென்று இரவு 8.30 அளவில் 102 பேரைச் சுட்டுக் கொன்றது. இப்படுகெலைகள் முஸ்லிம்களின் தொழுகையின் மிகப் புனிதமான சுஜூது நிலையில் இருந்தோர் மீது மேற்கொள்ளப்பட்டது.

சுஹதாக்கள் விபரம்


03 ஆகஸ்ட் 1990 அன்று காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியாப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இசாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் விபரம்

எம். எஸ். எம். அக்ரம் (06)
எம். எஸ். எம். தல்ஹான் (08)
எஸ். ஏ. எம். இம்தியாஸ் (09)
எம். சீ. எம். றிஸ்வான் (10)
எம். ஐ. ஜரூன் (10)
எஸ். செய்யது அஜ்மல் (10)
எம். ஐ. அஸ்றப் (11)
எம். ஐ. எம். ஆரிப் (12)
எம். கமர்தீன் (12)
எம். ஐ. எம். அஜ்மல் (12)
ஏ. எல். மக்கீன் (12)
எம். எஸ். எம். பௌசர் (12)
ஏ. எல். அபுல்ஹசன் (12)
வை. எல். எம். ஹரீஸ் (12)
எம். எஸ். எம். ஜவாத் (13)
எம். எஸ். பைசல் (13)
எம். பீ ஜவாத் (13)
யூ. எல். எம். அனஸ் (13)
ஏ. எல் அப்துல் சமத் (14)
எச். எம். பௌசர் (14)
ஏ. ஜௌபர் (14)
எம். எஸ். எம் சகூர் (14)
ஏ. சமீம் (14)
பீ. எம். முஹம்மத் பஸ்லூன் (15)
எம். இஸ்ஸதீன் (15)
எம். எம். எம். பைசல் (15)
எம். வை. இனாமுல் ஹசன் (16)
எம். இக்பால் (16)
எஸ். எம். சித்தீக் (16)
எம். ஐ. ஜௌபர் (17)
கே. எல். முஹம்மத் றாபி (17)
எம். எம். எம். ஜௌபர் (17)
எஸ். சுல்பிகார் (17)
யூ. எல். முஹைதீன் (17)
எம். ரீ. ஜௌபர் (17)
எஸ். ஏ. எம் ஐன்சாத் (18)
எச். கே. எம். ஆரிப் (18)
ஐ. றபீக் (18)
எம். எஸ். அப்துல் முத்தலிப் (18)
எம். ஏ. எம். அமீன் (20)
ஏ. எல் சலாஹுதீன் (20)
எம். எம். அஸ்றப் கான் (20)
எம். எஸ். ஏ. சுஹைப் (20)
ஏ. எல் சலாஹுதீன் (20)
எம். ஐ. ஹுசைன் (20)
எம். எம். ஜுனைத் (21)
எம். அப்துல் நவாஸ் (21)
எம். ஏ. பௌசர் (21)
எம். ஐ. ஹசன் (22)
எம். ஆர். அப்துல் சலாம் (23)
எஸ். எல். எம். ஜுனைத் (23)
எம். எஸ். அப்துல் றஹீம் (25)
ஏ. பீ. எம். யாசீன் (26)
எம். எல். எம். தாஹிர் (27)
எம். ஐ. அப்துல கபூர் (28)
யூ. எல். எம். இப்றாஹீம் (28)
எம். ஐ. கமால்தீன் (30)
ஏ. பாறூக் (30)
ஏ. றம்ளான் (30)
ஏ. நூர்தீன் (30)
ஏ. கே. ஹாறூன் (31)
எஸ். எச். எம். நஸீர் (32)
எம். சம்சுதீன் (33)
எம். பீ. எம் ஜுனைத் (34)
வீ. எம். இஸ்மாயில் (37)
எம். ஏ. சீ. எம். புஹாரி (35)
எம். சீ. எம். பரீத் (35)
பீ. எம். எம். இப்றாஹீம் (35)
எம். ஐ. ஏ. அஸீஸ் (37)
எஸ். ஏ. மஜீத் (37)
எம். உமர் லெப்பை (38)
எம். ஹனீபா (38)
எம். பீ. ஏ. சமத் (38)
எம். எம். இஸ்மாயில் (40)
ஏ. சீ. எம். நஸ்றுதீன் (40)
எச். எம். எம். சமசுன் (40)
எம். ஏ. எம். அப்துல் காதர் (40)
எம். எஸ். எம். சஹாப்தீன் (41)
கே. எம். ஏ. அஸீஸ் (42)
கே. எல். எம். றஹ்மதுல்லா (42)
எச். எம். மீராலெப்பை (43)
எம். ஏ. தம்பிலெப்பை (45)
என். எம். இஸ்மாயில் (45)
பீ. எம். அப்துல் காதர் (45)
எம். எம். ஹனீபா (46)
ஏ. ஆர். ஆதம் பாவா (47)
எம். எஸ். அப்துல் முத்தலிப் (47)
எம் லெப்பைத்தம்பி (48)
ஏ. எம். சலாஹுதீன் (48)
எம். ஐ. ஆதம்லெப்பை (52)
ஏ. சரீபுதீன் (52)
ஆர். எம் அன்வர் (53)
எம். எம். காசிம் (54)
எம். எம். அசனார் (55)
எம். ரீ. எம். அசனார் (55)
ஏ. எல். கச்சி முஹமமத் (56)
ஏ. ஆதம் லெப்பை (57)
ஏ. எம். முஹம்மத் முஸ்தபா (59)
எஸ். எம். ஹயாத்து கலந்தர் (60)
ஏ. எம். கலந்தர் லெப்பை (60)
எம். எம். சஹாப்தீன் (60)
ஏ. பக்கீர் முஹைதீன் (65)
எம். எல். முஹம்மத் முத்து (70)
எஸ். எம். எம். முஸ்தபா (72)
12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் விபரம்.

ஏ. றஹ்மத்தும்மா (40) பெண்
எம். பீ. ஹிதாயா (16) பெண்
எம். பீ. சரீனா (14) பெண்
எம். பீ. ஹபீபா (12) பெண்
ஏ. உசனார் (30) ஆண்
யூ. லாபிர் (03) ஆண்
எம். எல். சீனி முஹம்மத் (47) ஆண்
எஸ். எம். அஸ்மி (11) ஆண்
எம். மஹ்மூத் லெப்பை (70) ஆண்
சாஹிறா உம்மா (65) பெண்
எஸ். எம். காசிம் லெப்பை (37) ஆண்
எம். எஸ். நதீமா (27) பெண்
சீ. ஏ. எம். இஸ்மாயில் (46) ஆண்
வீ. ரீ. கதீஜா பீவி (30) பெண்
எம். எல். றமீஸ் (16) ஆண்
எம். எல். சமீமா (10) பெண்
எம். எல். எப். றிஸ்னா (05) பெண்
எம். ஐ. எம். சானாஸ் (05 மாதம்) பெண்
எஸ். எம். வெள்ளைத்தம்பி (70) ஆண்
ஏ. பீ. வெள்ளை உம்மா (65) பெண்
ஏ. எல். புஹாரி (30) ஆண்
வீ. ரீ. பரீதா (25) பெண்
ஏ. றிபாகா (01) பெண்
எஸ். ஏ. ஆயிஸா (25) பெண்
எம். ஜனூபா (20) பெண்
எஸ். சனூஸியா (01) பெண்
வீ. ஆமினா (40) பெண்
எம். எஸ். மதீனா உம்மா (23) பெண்
எம். எஸ். ஜிப்ரியா (12) பெண்
எம். எஸ். றமீஸா (10) பெண்
எம். எஸ். றம்சுலா (07) பெண்
எம். எஸ். சஹீலா (04) பெண்
எம். எஸ். மஹ்ரிபா (25) பெண்
எஸ். எல் நஜீபா (04) பெண்
எஸ். எல். நஸ்ரின் (06) பெண்
எம். பீ. பொன்னி உம்மா (65) பெண்
எம். பீ. மஹ்மூத் (55) ஆண்
ரீ. கே. சிமிலத்தும்மா (70) பெண்
ரீ. கே. சின்னலெப்பை (75) ஆண்
ஏ. ஆமினா (65) பெண்
எம். எப். நசார் (18) ஆண்
ஏ. செல்லத்தும்மா (45) பெண்
வை. ஐ. அலியார் (50) ஆண்
ஐ. எம். ஹம்சா (25) ஆண்
எம். எச். நிபாஸ் (14) ஆண்
ஐ. இஸ்மாயில் (45) ஆண்
எல். காதர் (18) ஆண்
எம். சீ. வெள்ளைத்தம்பி (50) ஆண்
வை. எம். சரீப் (30) ஆண்
கே. பீ. கச்சி முஹம்மத் (50) ஆண்
எம். ஐ. பாறூக் (35) ஆண்
எம். எல். தாஹிர் (25) ஆண்
ஏ. எல். அமீனா உம்மா (57) பெண்
எம். ஐ. குழந்தை உம்மா (40) பெண்
எம். ஐ. எம். ஜாபிர் (23) ஆண்
எஸ். ஐ. எம் முஹைதீன் பாவா (50) ஆண்
எம். ஐ. சீனி முஹம்மத் (75) ஆண்
ஏ. ஹயாத்து முஹம்மத் (50) ஆண்
ஐ. ஜுனைத் (40) ஆண்
எம். எஸ். ஐதுரூஸ் (11) ஆண்
வீ. கே. காசிம் லெப்பை (38) ஆண்
வீ. கே. கச்சி உம்மா (40) பெண்
எம். ஐ. காதர் அலி (35) ஆண்
சீ. ஏ. அனீஸா உம்மா (45) பெண்
சீ. ஏ. சுலைஹா (50) பெண்
யூ. எம். இஸ்மாயில் (58) ஆண்
யூ. சர்வான் உம்மா (38) பெண்
எம். ஐ. எஸ். லரீபா (17) பெண்
எம். எல். எம். சித்தீக் (15) ஆண்
எம். ஐ. சபீரா (06) பெண்
எம். ஐ. எம். தாஹிர் (06) ஆண்
யூ. ஐ. எஸ். உம்மா (40) பெண்
எச். எம். ஜெமீலா (20) பெண்
எச். எம். ஜனூரா (18) பெண்
எச். எம். ஹிதாயா (08) பெண்
எச். எம். பஸ்மி (03) ஆண்
எச். எம். இஸ்மாயில் (30) ஆண்
ஏ. எம். ஆமினா உம்மா (20) பெண்
எம். ஐ. பர்சானா (02) பெண்
எம். ஐ. பர்சான் (01) ஆண்
எச். கே. அஹ்மத் லெப்பை (81) ஆண்
ஏ. எல். நயிமுதீன் (12) ஆண்
ஏ. எல். பாத்தும்மா (10) பெண்
ஏ. எல். அன்சாரா (1 மாதம்) பெண்
ஜே. எம். நௌபர் (11) ஆண்
பீ. எம். நூர்ஜஹான் (16) பெண்
பீ. எம். ஹாஜறா (24) பெண்
யூ. எல். ஏ. சதார் (13) ஆண்
ஆர். ஹிதாயா (10) பெண்
எம். கே. முஹம்மத் லெப்பை (20) ஆண்
வீ. கே. நஜீமா (30) பெண்
ஏ. எஸ். பைரூஸ் (8 மாதம்) ஆண்
எஸ். எல். ஹபீபா (19) பெண்
எம். எல். ஜுனைத் (47) ஆண்
ஜே. பரீதா (16) பெண்
ஏ. ரீ. றாவியா உம்மா
ஆர். பைரூசா (19) பெண்
ஆர். எம். சித்தீக் (08) ஆண்
யூ. எம். சீனத்தும்மா (37) பெண்
எம். வை. எம். பசீர் (03) ஆண்
எஸ். எல். சுலைமாலெப்பை (40) ஆண்
எஸ். எல். சுலைஹா உம்மா (35) பெண்
எம். வை. எம். சபீர் (26) ஆண்
ஜே. சுலைமாலெப்பை (38) ஆண்
ஆர். எப். றம்சியா (06) பெண்
எம். என். எம். நியாஸ் (17) ஆண்
எம். சீ. எம். தாஹிர் (20) ஆண்
யூ. எல். ஜமால்தீன் (35) ஆண்
எச். எம். அப்துல் சமது (23) ஆண்
எம். எல். ஹனீபா (60) ஆண்
எம். இஸ்மாயில் (28) ஆண்
ஏ. அப்துல் மஜீத் (1 வாரம்) ஆண்
எம். எல். மரியம் பீவி (28) பெண்
ஏ. எல் சமீர் (10) ஆண்
யூ. எல். எப். மர்ழியா (35) பெண்
நன்றி: காத்தான்குடி இணையம்.

Monday, June 7, 2010

உயிரைக் குடித்த பேஸ்புக்

இளைஞர்கள் மத்தியில் சமூக இணையதளமான பேஸ்புக் பிரபலமானது. இதனைப் பயன்படுத்தி பலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் இந்த இணைய தளத்தின் காரணமாக ஒரு கொலை

ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது அந்த அரசாங்கத்தை மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சார்ந்த 18 வயது இளைஞி நோனா பிளோமிசாப். இவர் பேஸ்புக்கில் தனது முழு விபரங்களையும் வெளியிட்டு தனது நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இவரைத் தொடர்பு கொண்ட கிறிஸ்டோபர் ஜேம்ஸ் என்ற 20 வயது இளைஞர் தான் மிருக நலச் சங்கத்தில் வேலை செய்வதாக தெரிவித்தார். இவரது பேஸ்புக் இணையதளத்திலும் இவ்வாறே குறிப்பிட்டிருந்தார். நோனாவும் மிருக நலத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால் ஜேம்ஸூடன் நட்பு வைத்திருந்தார். நோனாவின் மதிப்பைப் பெற்ற ஜேம்ஸ் நோனாவுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னோடு சுற்றுலா வருமாறு அழைத்துச் சென்றிருக்கிறார்.

சுற்றுலா சென்று இரண்டு நாட்கள் கழித்து மே 14ம் திகதி சிட்னியின் கடற்கரையோரத்தில் நோனா பிணமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் கிறிஸ்டோபர் ஜேம்ஸை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பேஸ்புக்கில் தங்களைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தாலும் பேஸ்புக்கின் மீதான கவர்ச்சி குறைந்தபாடில்லை. இணையம் மூலம் ஏற்படுகின்ற நட்பை நம்பி நம்மைப் பற்றிய முழுமையான தகவல்களை வெளியிடாமல் வைத்திருப்பது பாதுகாப்பானது.

Sunday, June 6, 2010

காணாமல்போன பர்ஸ் திரும்ப கிடைத்தது 69 ஆண்டுகளுக்கு பிறகு

வாஷிங்டன்:உரிமையாளரை தேடி அலைந்த பர்ஸ் இறுதியில் 69 ஆண்டுகளுக்குப் பிறகு உரிமையாளரிடம் தஞ்சமடைந்தது.

ரோபர்ட் பெல் என்பவர்தான் இந்த அதிர்ஷ்டசாலி. இரண்டாம் உலகப்போரில் கலந்துக் கொண்ட அமெரிக்காவைச் சார்ந்த ராணுவ வீரரான பெல்லுக்கு கடந்த 69 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன பர்ஸ் தான் தற்பொழுது கிடைத்துள்ளது.

1941 ஆம் ஆண்டு சிகாகோ வொக்கேஷனல் ஸ்கூலில் ஹைட்ராலிக் ரிப்பேர் பயிற்சிக்குச் சென்ற பொழுதுதான் பெல்லிற்கு பர்ஸ் தொலைந்து போனது.

கப்பல் படை வீரனுடைய யூனிஃபார்மில் பெல்லும் அவருடைய காதலியும் போஸ் கொடுக்கும் புகைப்படமும், அவருடைய சமூக பாதுகாப்பு அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் அதில் இருந்தன.

1966 ஆம் ஆண்டே பெல்லின் பர்ஸ் போப் ஜோர்டான் என்பவருக்கு கிடைத்தது. ஆனால் உரிமையாளரை கண்டறிவதற்காக ஜோர்டான் நடத்திய முயற்சிகள் வீணானது.

கடந்த ஆண்டு ஜோர்டான் பத்திரிகையாளர் ஜோஸஃப் க்ரைக்கிற்கு இந்த பர்ஸை ஒப்படைத்தார். சமூக பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் க்ரைக் இறுதியில் உரிமையாளரை கண்டுபிடித்தார்.

பர்ஸ் திரும்பக் கிடைத்ததை பெல்லால் நம்ப இயலவில்லை. பின்னர் அதனை தனது மகனிடம் பர்ஸில் உள்ள புகைப்படங்களை காட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Tuesday, June 1, 2010

நாகர்கோவில்: மகளை கர்ப்பமாக்கி, கொலை செய்த தந்தை கைது!

நாகர்கோவில்: தனது மகளையே கர்ப்பமாக்கி, அவரை கொலையும் செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் அருமனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் புரூஸ்வெல்ட். அவரது முதல் மனைவியின் மகள் ஜாஸ்மின் (16), மார்த்தாண்டத்தில் ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பிளஸ்-2 செல்ல இருந்தார்.

கடந்த 29ம் தேதி காலை புரூஸ்வெல்ட்டும், அவரது 2வது மனைவி ஐடாவும், ஐடாவின் சொந்த ஊரான திருவரம்பு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் பின்புறக் கதவு திறந்து கிடந்தது. உள்ளே உள்ள குளியலறையில் உள்ள நீர் தொட்டியில் ஜாஸ்மின் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார்.

வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. போலீஸ் மோப்ப நாய்களை திணறச் செய்ய வீட்டின் உள்புறம் முழுவதும் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்தது.

போலீசார் ஜாஸ்மினின் உடலைக் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் ஜாஸ்மின் 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

மேலும் கொலை செய்யப்படும்போதும் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணை நடத்தியபோது மாணவியின் தந்தை புரூஸ்வெல்ட் மீதே சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உரிய முறையில் போலீசார் விசாரித்தபோது, தனது மகளையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதையும், கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டார்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,

ஓய்வு பெற்ற ராணுவ வீரரான புரூஸ்வெல்ட் கன்னமாமோடு அருகே உள்ள பி.எஸ்.என்.எல். டவரில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். அவரது முதல் மனைவி இறந்ததையடுத்து ஐடா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முதல் மனைவி மூலம் பிறந்தவர் தான் ஜாஸ்மி்ன்
புரூஸ்வெல்டின் தந்தை, தனது சொத்துக்களை ஜாஸ்மின் பெயருக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்து விட்டார்.

வீட்டில் ஐடா இல்லாதபோது புரூஸ்வெல்ட் வேறு ஒரு பெண்ணுடன் உறவு கொண்டிருந்ததை ஜாஸ்மின் பார்த்து விட்டார். இதையடுத்து புரூஸ்வெல்ட தனது மகள் என்று பாராமல் ஜாஸ்மினையும் மிரட்டி, தனது ஆசைக்கு இணங்க வைத்து, தகாத உறவு வைத்துள்ளார்.

இதனால் ஜாஸ்மின் கர்ப்பமானார். அவர் 4 மாதம் கர்ப்பமானதால் வயிறு பெரிதானது. இதனால் அவரை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியாத நிலையும், கருக்கலைப்பு செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.

ஜாஸ்மின் கர்ப்பமானது வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் அதிலிருந்து தப்பிக்க அவரை கொலை செய்ய புரூஸ்வெல்ட் முடிவு செய்தார்.

இந் நிலையில் கடந்த 28ம் தேதி இரண்டாவது மனைவி ஐடாவின் ஊரான திருவரம்புக்கு புரூஸ்வெல்ட் சென்றார். ஊருக்குப் புறப்படும்போதே மகள் ஜாஸ்மினுக்கு தூக்க மாத்திரைகள் கலந்த பாலை குடிக்க வைத்தார்.

திருவரம்பு சென்றதும் தனக்கு அவசர வேலை இருப்பதாகக் கூறிவிட்டு புரூஸ்வெல்ட் கிளம்பினார். அங்கிருந்து நேராக தனது வீட்டுக்கு வந்தார்.

தூக்க மாத்திரை கலந்த பாலை குடித்ததால் ஜாஸ்மின் மயங்கிக் கிடந்தார். அந்த நிலையிலும் அவரை பாலியல் பலாத்காரம் செய்த புரூஸ்வெல்ட், பின்னார் கயிற்றால் ஜாஸ்மினின் கழுத்தை இறுக்கி, தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார்.

இது கொள்ளை சம்பவம் போல தெரிவதற்காக பீரோவையும், சூட்கேசையும் உடைத்து பொருட்களை சிதறடித்துவிட்டு, மிளகாய் பொடியையையும் தூவினார்.

15 பவுன் நகைகளையும், ரூ. 5,000 பணத்தையும் தனது ஷூவுக்குள் மறைத்துவிட்டு, மனைவியின் ஊருக்குச் சென்று, மாலையில் அவருடன் ஒன்றும் தெரியாதவர் போல திரும்பி வந்துள்ளார்.

இதையெல்லாம் அவரே வாக்குமூலமாகத் தந்துள்ளார் என்றனர் போலீசார்.