Showing posts with label தமிழக சிறைத்துறையும். Show all posts
Showing posts with label தமிழக சிறைத்துறையும். Show all posts

Wednesday, March 25, 2009

எங்கிருந்தாலும் பலன் கருதாமல் பணி செய்யும் பண்பாளர்!


அபூசாலிஹ்

ஒரு மனிதன் வெற்றிகரமான முறையில் பணி செய்ய வேண்டு மென்றால் அவனுக்கு அனைத்து நல்ல அம்சங்களும் வாய்த்திருக்க வேண்டும். சோகம் சுமையாகக் கூடாது. கவலைகள் கருக்கொள்ளக் கூடாது. மகிழ்ச்சி தாண்டவமாடும் போது ஒரு எழிலான, அறிவான செயலை செய்வான். தன் கவலைகள் நீங்கினால் மட்டுமே பிறருக்கான பணி செய்யும் மனப்பாங்கு கொண்ட உலகில் இந்த மக்கள் தொண்டருக்கு உள்ள தொண்டுள்ளம் பாராட்டுக் குரியதாக இருக்கிறது.


ஆம் தமுமுக நிறுவனத் தலைவர் சகோ. குணங்குடி ஹனிபா சிறையில் வாடிக் கொண்டிருக்கும் போது கூட அனைத்து சிறைக் கைதிகளுக்காக நடத்தப்படும் உள்ளொளி என்ற மாத இதழின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருவதாக இந்தியா டுடே (ஏப்ரல் 1, 2009) குறிப்பிட்டிருக்கிறது. தமிழக சிறைத்துறை மலரும் மாறுதல் என்ற தலைப்பிட்ட கட்டுரை இதனைக் குறிப்பிடுகிறது.


மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தமிழக சிறைத்துறையும், எங்கிருந்தாலும் நலப்பணி புரியும் குணங்குடி ஹனிபா அவர்களும் மிகவும் பாராட்டுக்குரிய வர்கள்.