Showing posts with label sex சாமியார். Show all posts
Showing posts with label sex சாமியார். Show all posts

Saturday, June 12, 2010

'ரஞ்சிதா' புகழ் நித்யானந்தா செக்ஸ் சாமியார் பிணைப்பில் விடுதலை.

'ரஞ்சிதா' புகழ் நித்யானந்தா பிணைப்பில் விடுதலை.

நித்யானந்தாவின் பழைய கதைகள் அனைவரும் அறிந்தது . சிறையில் இருந்த அவர் ஜாமீன் கேட்டு வக்கீலை நியமித்திருந்தார் அது தொடர்பாக,நேற்று முன்தினம் விசாரணை நடந்த போது, நித்யானந்தா தரப்பில் ஆஜரான வக்கீல் ஆச்சார்யா, "சாமியார் சன்னியாசியல்ல' என்று வாதாடினார். ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி சுபாஷ் தெரிவித்திருந்தார். இந்த மனு, நேற்று மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நித்யானந்தா வக்கீல் ஆச்சார்யா கூறுகையில், ""நித்யானந்தா மீது கூறப்பட்ட புகார்கள் எதுவும் நிரூபிக்கப்பட வில்லை. அரசு தரப்பில் நித்யானந்தா மீது கூறப்பட்டுள்ள புகாருக்கு சரியான சாட்சியங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. நித்யானந்தா மீது, எந்த தனி நபரும் புகார் கொடுக்கவில்லை. நித்யானந்தா உடல்நிலை கருதியும், எந்த நேரமும் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதையும் தெரிவித்துக் கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஷ் ஆதி கூறியதாவது: நித்யானந்தா, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க ஜாமீனும், இதே தொகைக்கு, உள்ளூரைச் சேர்ந்த இரு நபர் ஜாமீனும் வழங்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை ராம்நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும். தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் வரை ஆன்மிக சொற்பொழிவுகளோ, பயிற்சி வகுப்புகளோ நடத்தக்கூடாது. வழக்கு விசாரணை முடியும் வரை வெளியூர்களுக்கு செல்லக் கூடாது. அவரது பாஸ்போர்ட்டை, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும். போலீஸ் விசாரணைக்கு அழைக்கும் போது ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி சுபாஷ் ஆதி கூறினார்.


நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டாலும், இந்த ஜாமீன் உத்தரவை, ராம்நகர் கோர்ட்டில் சமர்ப்பித்து, அவர்களின் அனுமதியின் பேரில், ராம்நகர் கிளை சிறையில் இருக்கும் நித்யானந்தாவை வெளியில் கொண்டு வரலாம். இன்றும், நாளையும் கோர்ட் விடுமுறை என்பதால், திங்கட்கிழமை தான் நித்யானந்தா, சிறையிலிருந்து வெளியே வருவார். இதற்கிடையில், கர்நாடகா சி.ஐ.டி., போலீசாரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள நித்யானந்தா வங்கி கணக்குகள் தொடர்பான விசாரணை, வரும் 18ம் தேதியும், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி, கர்நாடகா ஐகோர்ட்டில் நித்யானந்தா தாக்கல் செய்திருந்த மனு, வரும் 24ம் தேதியும் விசாரணைக்கு வருகின்றன. இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட நடிகை ரஞ்சிதாவை பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. போலீஸ் தரப்பிலோ, நித்யானந்தா தரப்பிலோ எந்த தகவலும் சமர்ப்பிக்கவில்லை.

Monday, December 14, 2009

பாலியார் புகார்: சென்னை sex சாமியாருக்கு போலீஸ் வலைவீச்சு!

சென்னை கோடம்பாக்கம் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது ஹேமலதா என்பவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். வேலைவாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும், தமது ஆபாசப் படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும், சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவார் எனவும் அந்த புகாரில் கூறியுள்ளார். பெண்ணின் புகாரை அடுத்து சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாருக்கு போலீஸ் வலைவீசியுள்ளனர்.

சென்னை தேனாம் பேட்டை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

அடையாறு சர்தார்பட் டேல் சாலையில் உள்ள சக்தி விலாஸ் மிஷனில் உள்ள டாக்டர் ஈஸ்வர ஸ்ரீகுமார் என்கிற சாமியார் தனது நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள் எடுப்பதாக என் அப்பாவின் நண்பர் மூலம் தகவல் கிடைத்தது.

நானும் அந்த நிறுவனத்திற்கு வேலை கேட்டு விண்ணப்பம் போட்டேன். சாமியார் ஈஸ்வரகுமார் என்னிடம் இண்டர்வியூ நடத்தினார். சூப்பர்வைசர் வேலை தரு வதாகவும் படிபடியாக சிங்கப்பூரில் உள்ள தனது நிறுவனத்தில் பதவி உயர்வும் அதிக சம்பளமும் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.

ஒரு தனி அறையில் வைத்து எனக்கு காபி கொடுத்தார். அதை குடித்த சிறிது நேரத்தில் மயங்கிவிட்டேன். பிறகு கண்விழித்து பார்த்த போது ஆடைகள் களைந்த நிலையில் அலங்கோலமாக கிடந்தேன். என்னை சாமியார் பலாத்காரம் செய்ததை உணர்ந்தேன்.

இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று சாமியார் மிரட்டி அனுப்பினார். அடிக்கடி போன் செய்து அழைத்தார். நான் மறுத்தேன். உன்னுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன். அதனை இண்டர்நெட்டில் போட்டு விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போய் அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு மீண்டும் என்னை கற்பழித்தார். எனக்கு 10வயதில் மகள் இருக்கிறாள் என்று கெஞ்சினேன். அவர் விடவில்லை. தொடர்ந்து ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி என்னை அனுபவித்தார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது ஆபாச வீடியோவை அழித்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகார் மனு குறித்து விசாரிக்க சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அதிவீர ராம பாண்டியனுக்கு உத்தரவிடப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமார் நடத்திய விசாரணையில் சம்பவம் தியாகராயநகர் பகுதியில் நடந்ததாக தெரிய வந்ததால் புகார் மாம்பலம் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.