
அந்த வரிசையில் சர்கோசியும் தன்பங்கிற்கு இஸ்லாமிய எதிர்ப்பை பர்தாவை பற்றிய விமர்சனம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். பர்தாவை பெண்ணடிமைத்தனம் என்ற சர்கோசி,பெண்களுக்கு எது சுதந்திரம் என்பதை தன் மனைவியின் ஆடை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.[பார்க்க படம் ]
கிராமங்களில் குளங்களில் குளிக்கும் பெண்களில் சிலர் தங்களின் சேலை, ஜாக்கெட்டுகளை அவிழ்த்துவிட்டு பாவாடையை மார்பை மறைக்கும் அளவுக்கு ஏற்றிக்கட்டிக்கொண்டு குளிப்பார்கள். அதுபோன்றதொரு ஆடையைத்தான் சர்கோசியின் மனைவி அணிந்திருக்கிறார். அதுவும் அந்நிய நாட்டு மன்னர் ஒருவரின் வரவேற்பு நிகழ்ச்சியில். இவ்வகை ஆடை அணிவது சர்கோசியின் மனைவியின் உரிமை. அதை நாம் குறை கூற மாட்டோம். அதே நேரத்தில், பர்தாவை விரும்பி அணியும் பெண்களெல்லாம் அடிமைத்தளையில் கட்டுண்டவர்கள் என்ற ரீதியில் பேசும் சர்கோசி, இதுபோன்ற ஆடை தான் பெண்களின் சுதந்திரம் என்று கருதுகிறார் போலும்.
அது சரி! ' எல்லோரும் நிர்வாணமாக திரியும் ஊரில் ஒருவன் உள்ளாடை அணிந்து வந்தால் அவனை கண்டு கைகொட்டி சிரிப்பார்கள்' என்ற முதுமொழிக்கேற்ப, முக்கால் நிர்வாணமாக அலையும் மேற்க்கத்திய உலகத்திற்கு கணவனைத்தவிர மற்றவர் பார்வையிலிருந்து தற்காத்து கொள்ளும் கவச உடையான பர்தா அணிபவர்களைப்பார்த்தால் இலப்பமாகத்தான் தோன்றும்.
படம் நன்றி;தினத்தந்தி.
No comments:
Post a Comment