Showing posts with label மராட்டியம். Show all posts
Showing posts with label மராட்டியம். Show all posts

Wednesday, December 24, 2008

கேள்வியின் நாயகன்-அந்துலே!

சமீபத்தில்அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக ஆக்கப்பட்டிருக்றிர், திரு. அப்துல் ரகுமான் அந்துலே அவர்கள், மத்திய அரசில் சிறுபாண்மைத் துறை அமைச்சராக உள்ள அந்துலே அவர்கள் மும்பை தாக்குதலின்போது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுத் தலைவர் ஹேமந்த் கார்கரேவின் மரணம் பற்றி கூறுகையில்,

ஹேமந்த் கார்கரே மலேகான் குண்டு வெடிப்பு சதி வழக்கின் புலனாய்வில் மிக முக்கிய பங்காற்றியதன் பின்னணியில் கொல்லப்பட்டுள்ளார். கொன்றவர்களை விட கொல்ல அனுப்பியவர்கள் யார்என்பதுதான் முக்கியமான கேள்வி என தன் சந்தேகத்தைப் பகிர்ந்துகொண்டார். நாடெங்கும் உள்ள ஜனநாயகவாதிகள் மனதிலும் இந்த கேள்வி இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஊடகங்கள் தொடர்ந்து லஷ்கர் இயக்கம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆகியவைதான் மும்பை தாக்குதலுக்கு காரணமென்றும், இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் நாட்டின் மீதே இராணுவ தாக்குதலை தொடங்க வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்து வருகின்றன.
சில அரசியல் பார்வையாளர்கள் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-தான் இத்தாக்குதலின் சூத்திரதாரியாக இருக்கக்கூடும் எனவும் கருதுகின்றனர். அப்படியான அனுமானங்களுக்கு அடிப்படை இல்லாமல் இல்லை.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடலால் தன் ரத்த வெறி கொண்ட முகத்தை அமெரிக்கா திரை போட்டு மறைத்தே வைத்திருக்கிறது. தன் சந்தை நலனுக்காக உலகெங்கும் உள்ள வளரும் நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து அந்த நாடுகளின் இயற்கை வளங்களை சுரண்டிக் கொழுக்க தன் ஆக்டோபஸ் கரங்களால் அந்நாடுகளின் குரல் வளையை நெறிக்கும் ஏகாதிபத்தியம்தான் அமெரிக்கா.

பெட்ரோலிய வளம் கொண்ட வளைகுடா நாடுகளில், கட்டுமான பணிகளுக்கு செல்கின்ற சாக்கில் ஒட்டு மொத்த வளைகுடா எண்ணெய் வளத்தையே தன் கைக்குள் கொண்டு வந்துள்ளது அமெரிக்கா.
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் கொண்டே இன்னொரு பக்கம் அரபு நாடுகளை தன் அடிவருடிகளாக வைத்துள்ளது. உலகெங்கும் நடக்கிற மண்ணுக்கான போரினையும், அரசியல் அதிகாரத்திற்காக போராட்டத்தையும், ஆதிக்கத்திற்கு எதிரான, ஆக்கரமிப்புகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களையும் மதச்சாயம் பூசி, மதவெறிப் போராட்டங்களாக சித்தரித்து, அதன் மூலம் மத அடிப்படைவாதிகளை வளர்த்து விடுகிறது.

மத அடிப்படைவாதிகளுக்கு ராணுவ பயிற்சியும், ஆயுதங்களையும் அளித்து கலகங்களை உருவாக்கிவிட்டு அந்த கலகங்களை அடக்க அந்நாட்டு அரசுகளுக்கும் ஆயுதங்களை விற்கிறது. கலகக்காரர்களும், கலகத்தை அடக்கும் அரசும் தங்களின் ஆயுத தேவைக்கு அமெரிக்காவையே சார்ந்திருக்க வேண்டிய நிலை.

அமெரிக்க ஆதரவாளர் ஈரான் மன்னர் ஷா-வை அதிரடிப் புரட்சியின் மூலம் அகற்றிவிட்டு கொமேனி ஈரான் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றினார். அமெரிக்காவின் சொத்துகளை முடக்கினார். உடனே ஈரானைத் தாக்க சதாம் உசேனை அமெரிக்கா ஏவிவிட்டது. இரசாயன ஆயுதங்கள் உட்பட ஏராளமான ஆயுதங்களை உலகத்தை பங்கு போடும் போட்டியில்இருந்த ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரு ஏகாதிபத்தியர்களில் ஆப்கனிஸ்தானை ஆக்ரமிக்கும் முயற்சியில் ரஷ்யா வென்றது. மத்திய ஆசிய, நாடுகளின் கச்சா எண்ணெய் குழாய்களின் மூலமாக ஆப்கன், பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்ல ஆப்கானிஸ்தான் மண் தேவைப்பட்டது.
1979ஆம் ஆண்டு ரஷ்யா தன் கைப்பாவை நஜிபுல்லாவின் துணையுடன் ஆப்கனை ஆக்ரமித்தது. நாத்திகவாதிகளான ரஷ்ய கம்யூனிஸ்ட்களை விரட்ட, இஸ்லாமிய மத தீவிரவாதத்தை அமெரிக்கா திட்டமிட்டே வளர்த்தது. ஆப்கனில் முஜாஹிதீன்களும், தாலிபன்களும் அமெரிக்காவால், பாராட்டி சீராட்டி வளர்க்கப்பட்டனர். பல கோடி டாலர் பெருமான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியது. இது போதாதென பின்லேடனின் அல்-கொய்தாவும் சவுதி அரேபியாவிலிருந்து ஆப்கனுக்கு வந்து முஜாஹிதீன்களுக்கும், தாலிபான்களுக்கும் பக்கபலமாக நின்றது.

ஆப்கன் மண்ணை ரஷ்ய ஆக்ரமிப்பிலிருந்து காப்பாற்றும் மக்களின் போராட்டம் திசை திருப்பப்பட்டு, மத வெறியூட்டப்பட்ட தாலிபான்களும், முஜாஹிதீன்களும் ரஷ்ய படைகளையும், அதன் பொம்மை அரசான, கைகூலி நஜிபுல்லாவின் படைகளையும் எதிர்த்து வீரப்போர் புரிந்தனர். 1989ல் ரஷ்யாவின் படை புறமுதுகிட்டு ஓடியது. ஆப்கனில் ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான ஆக்ரமிப்பு யுத்தம்-நஜிபுல்லா அரசுக்கு எதிராக தாலிபான்களும், முஜாஹிதீன்களும் நடத்திய யுத்தமாக-உலகத்தின் பார்வைக்கு காட்டப்பட்டது.

ஆனால், அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு, ஊட்டி வளர்க்கப்பட்ட தாலிபன்களும், அல்-கொய்தாவும் வளைகுடாப் போரிலே அமெரிக்காவின் நரித்தனத்தை கண்டுகொண்டன. மேலும் தன் சொந்த மண்ணிலேயே அகதிகளாய் வாழும் பாலஸ்தீன மக்களின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக இருப்பதும் தாலிபன்களுக்கும், அல்-கொய்தாவுக்கும் ஒப்புடையதாக இல்லை. எனவே, அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரி என அறிவித்து அவை தாக்குதலில் இறங்கின.
தன்னாலே வளர்க்கப்பட்ட தாலிபன்களும், அல்-கொய்தாவும் தனக்கெதிராகவே திரும்பி இரட்டை கோபுரத்தை தாக்கியதும், தன் நரித்தனங்களையும், ஆயுத விற்பனைகளையும், வளைகுடா நாடுகளிடம் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதையும் மூடி மறைக்கவும், தன் சந்தை நலனைக் காத்துக்கொள்ளவும் அமெரிக்கா "பயங்கரவாதம் என்ற சொல்லாடலை உருவாக்கி உலவவிட்டது. "பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரிலே ஆப்கனில் தாலிபான்கள் மற்றும் அல்-கொய்தாவையும், இதற்கு உலக நாடுகளின் எதிர்ப்பு கடுமையாக இருக்கவே தனக்கு ஆதரவாக தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆளாகும் இந்தியா போன்ற நாடுகளை தன் வலைக்குள் இழுக்க முயற்சிக்கிறது. இந்த பின்னனியில்தான் மும்பை தாக்குதலில் அமெரிக்க சி.ஐ.ஏ.வின் சதித்தனம் இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் அனுமானிக்கின்றனர்.

அமெரிக்காவின் அடிவருடியாக பல பத்தாண்டு காலங்கள் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த பாகிஸ்தான் சமீபமாகத்தான் பாராளுமன்ற ஜனநாயகப் பாதைக்கு திரும்பியுள்ளது. இதுவரை பாகிஸ்தானை ஆண்ட இராணுவ தளபதிகள், அமெரிக்காவின் கைக்கூலிகளாக, அடியாட்களாக வலம் வந்தனர்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ என்பது பாராளுமன்ற அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத அமைப்பு. அமெரிக்க நலன் காக்கும் அரசு தொடர்ந்து இருப்பதை அது உறுதி செய்யும். முஜாஹிதீன்கள், லஷ்கர் போன்ற மத அடிப்படைவாத குழுக்களை உருவாக்கி, பயிற்சி அளித்து, ஆயுதங்களும் வழங்கி தம் அடியாட்களாக வைத்துள்ளது ஐ.எஸ்.ஐ. இதன் செயல்பாடுகளுக்கு மாறான எண்ணம் கொண்ட அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதும், 'மாண்டு போவதும் பாகிஸ்தானில் சகஜம். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது "நாங்கள்ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதிகளை இந்நாட்டிலிருந்தே ஒழித்திடுவோம் என முழக்கமிட்ட பெனாசிர் பூட்டோவும் இவர்கள் கையிலேதான் செத்துப் போனார். பாகிஸ்தான் அதிபரும், பிரதமரும் கூறுவதுபோல பாகிஸ்தான் இன்றளவும் பயங்கரவாதிகளின் களமாகவே உள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மட்டும் பாகிஸ்தானில் நடந்த நூற்றுக்கும் அதிகமான தற்கொலைப் படை தாக்குதல்களில் சுமார் 1200 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவைவிட அதிகமாக பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் கலவர பூமியாகவே இருக்கும் வரைதான் அமெரிக்காவின் ஆயுதங்கள் அங்கே விற்பனையாகும். அதற்காகவே, மத அடிப்படைவாத தீவிரவாதிகளை அமெரிக்கா ஆயுதங்களைக் கொடுத்து பாகிஸ்தானில் வளர்த்து வருகிறது.

இன்றைக்கு மும்பை தாக்குதல்களை நடத்தியவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அனைத்து ஊடகங்களும் பிரச்சாரம் செய்வதும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்ற பொதுக் கருத்தை மக்களிடம் உருவாக்க முயல்வதும் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒரு பதற்றமான நிலையை தொடர்ந்து இருக்க செய்வதற்கான மிகப்பெரிய சதி வலையின் கண்ணிகளே. இந்த பதற்றமான நிலை தொடர்வது அமெரிக்காவிற்கு பல வகைகளில் சாதகமானதாகும்.

முதலாவதாக "இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடலை இந்தியாவில் நிலை நிறுத்தலாம். "பயங்கரவாத எதிர்ப்பு போர் என்ற அமெரிக்காவின் படுபாதகத்திற்கு ஆதரவு அணியிலே உலகின் மிகப்பெரிய, வல்லரசு நாடாக வரக்கூடிய இந்தியாவையும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போரை மூளவைத்து விட்டால் அமெரிக்காவின் ஆயுத வியாபாரம் இரு நாடுகளுக்கும் கனஜோராக நடக்கும். இத்துணை சாதகங்கள் இருப்பதால்தான் மும்பை தாக்குதல்கள், பாகிஸ்தான் மத அடிப்படைவாத குழுக்கள் மூலம் அமெரிக்க உளவு அமைப்பால் நடைபெற்றிருக்கலாமோ என அரசியல் நோக்கர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்தியாவில் இந்துத்துவா அடிப்படைவாதிகள், முஸ்லிம்களை இல்லாதொழித்து, அகண்ட பாரதம், இந்து ராஷ்டிரம் உருவாக்கும் களப்பணியிலே இருப்பவர்கள். பல கொலைக்களங்களை கண்டவர்கள். குஜராத் கல வரத்தில் 2500க்கும் அதிகமான முஸ்லிம்களை படுகொலை செய்ய ஏதுவாக கோத்ராவில் தாங்களே ரயிலை எரித்து 60பேரை களப்பலி தந்தவர்கள். இவர்களின் அமைப்பு அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளில் இருந்து நிதி வசூலித்து அனுப்பி இந்திய திரு நாட்டை ரத்த பூமியாக்குவதை பல்வேறு ஊடகங்கள் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

இஸ்ரேலின் இனவெறி 'மொசாத படையுடன் நெருக்கமான இந்த இந்துத்துவா அமைப்புகள், மொசாத்தின் அரசியல் குரு சி.ஐ.ஏவுடன், நெருக்கமாகவே உள்ளன. இந்தியாவில் "இஸ்லாமிய பயங்கரவாதம் எனும் கடைச்சரக்கை விற்க இந்த "சாவு வியாபாரிகள் ஒப்பந்தம் போட்டிருக்கலாம் என்றும் சில அரசியல் நோக்கர்கள் அச்சமடைந்துள்ளனர்.

"ஹேமந்த கார்கரேவை கொன்றது பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகளாகவே இருக்கலாம் ஆனால் கொல்ல அனுப்பியது யார்?-என்ற அந்துலேவின் கேள்வி, இந்த நாட்டின் மீது பற்றுகொண்ட ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு தேசபக்தனும், கேட்கின்ற கேள்வி.

-வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன்

Monday, December 1, 2008

விலாஸ் ராவ் தேஷ்முக்கும் விலகினார்-துணை முதல்வரும் விலகுகிறார்

மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தாஷ்முக்கும், துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீலும் பதவி விலகி விட்டனர்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் விலகி விட்டார். அடுத்து மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் மற்றும் துணை முதல்வரும், அம்மாநில உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை பாட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் தேஷ்முக்கை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.

மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆர்.ஆர்.பாட்டீல், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். டெல்லியில் நடந்த இக்கட்சிக் கூட்டத்தில் பாட்டீலை ராஜினாமா செய்ய கேட்டுக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து கட்சித் தலைவர் சரத்பவார், பாட்டீலை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார். இதையடுத்தே ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார் பாட்டீல்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் மக்களை மீட்கும் முயற்சியில் உயிரைப் பணயம் வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, செய்தியாளர்களிடம் பேசிய பாட்டீல், இது சாதாரண சம்பவம்தான், பெரிய விஷயமல்ல என்று முட்டாள்தனமாக உளறினார் என்பது நினைவிருக்கலாம்.

தேஷ்முக்கும் விலகினார்

இதைத் தொடர்ந்து முதல்வர் தேஷ்முக்கும் விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி தேஷ்முக்கும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு அவர் அனுப்பி விட்டார். இன்னும் 48 மணி நேரத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

செளகான் அல்லது ஷிண்டே

தேஷ்முக்குக்குப் பதில் மத்திய அமைச்சர் பிருத்வி ராஜ் செளகான் அல்லது ஏற்கனவே முதல்வராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரில் ஒருவர் முதல்வர் பதவிக்கு அமர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்க சொல்லி ஓலமிடும் தெருநாய்!!

மும்பாயைச் சொல்லி யுத்தம் கவியுமா? மும்பாயில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து,பார்ப்பனியப் பண்டாரங்கள் பதைபதைத்துப் பாரதத்தின் படைகளிடம்-இராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைக்கக்கோருவதும் அல்லது முஸ்லீம்களை குஜராத்தில் நரவேட்டையாடிய மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்கச் சொல்வதிலிருந்து நாம் பார்ப்பனியத்தின் பக்கச் சார்பைக் கணிக்கமுடியும்.இந்தியத் தேசவிரோதப் பார்ப்பனியம் இந்தியத் தேசத்தை அந்நியச் சக்திகளிடம் கையளித்து, ஆரிய நாமத்தை இந்தியமக்களுக்குப் போடுவதற்குப் பெயர்"இந்திய-பாராத தேச நலம்"என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.இந்தத் தேச விரோதப் பார்ப்பனிய மற்றும் பனியா நலன்களின்பின்னே கைகோர்த்திருக்கும் அந்நியத் தேசங்களினது அரசியல் இலக்கு என்ன?அது குறித்து எவர்-எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதிலிருந்தே இந்தியப் பிராந்தியத்தில் சமாதானத்துக்கான முன்னெடுப்பு அமையும்.இது குறித்துப் புரிய முனைவோம்.









"பயங்கரவாதத்தின்" இன்னொரு முகத்தை நாம் மிக மெலினப்படுத்தப்பட்ட மொழிவுகளால் உய்துணர முடியாது! இதைப் புரிக முதலில்-புரிக!இந்தத் தருணத்தில் இந்தியாவின்மீது கவிந்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கத்தின் அரசியல் மோசடிகள் மிகவும் கெடுதியானவொரு சூழலை முழுமொத்த இந்திய உழைக்கும் வர்க்கத்துக்கு வழங்கப் போகிறது.கடந்தபல நூற்றாண்டுகளாக இந்தியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கங்கள் காலனித்துவக்காலத்தில்கூட அந்நியர்களைத் தமது ஏஜமானர்களாக்கி, முழுமொத்த இந்தியாவையும் சுரண்டிக் கொழுத்தார்கள்.அவர்களில் மிக முக்கியமான டாட்டா போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் அன்று, நிபந்தனையற்ற உதவிகளை காந்திக்கு வழங்கிப் போலிச் சுதந்திரத்துக்குப் பின்பான இந்தியாவைத் தமது காலடிக்குள் வைத்துச் சுரண்டிக் கொழுத்தார்கள்.இது,இந்தியப் போலித் தேசியத்துள் மறைக்கப்பட்ட வரலாறு.இதைக் காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காரன் கோட்சேயின் மொழியில் நாம் இனம் காணமுடியும்.இந்தியாவின் மிக முக்கியமான கல்வியாளரும் சமூகவியலாளருமான திரு.அஸீஸ் நந்தியைக் கற்றவர்களுக்கு இதுள் சந்தேகம் வரமுடியாது.





இன்றும், இதே கதையோடு தலைமுறை கடந்த "டாடட்டா"நிறுவன அதிபர் திருவாளர் இராற்றான் டாடா தனது தாஜ்மால் கோட்டலின் சிதைவுகளுக்கு மத்தியில் ஆத்திரத்தோடு இந்தியப் பாதுகாப்புக்குறித்துத் தமது எஜமானர்களின் தொலைக்காட்சிச் சேவையான சி.என்.என்.க்குப் பதிலளிக்கையில், இந்தியப் பாதுகாப்புக்குறித்து கேள்வி எழுப்புகிறார்.தமது கோட்டலுக்குப் பாதுகாப்பு வழங்குவதிலுள்ள குறைபாடுகளைக்குறித்து மூச்சுவிடும் இந்தக் களவாணிப்பயல் மோடியின் தலைமையில் அழித்தொழிக்கப்பட்ட அப்பாவி முஸ்லீங்கள் மூவாயிரம் பேர்கள் குறித்தோ, அவர்களது வாழ்வாதாரங்களின் சிதைப்புக் குறித்தோ மூச்சு விடவில்லை அன்று!இப்போது இத்தகைய துரோகிகளின் மூச்சுத் திணறல் தமது எஜமானர்களின்(அமெரிக்க-மேற்குலக) நாடுகளினது பொருளாதார இருப்போடு சம்பந்தப்படுகிறது.மும்பையில் நடந்தேறிய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவினதும் பாகிஸ்த்தானினதும் அரசியல் நடாத்தையில் பல மாற்றங்களை வேண்டி, உலகம் எதிர்பார்க்கிறது.அதற்கேற்ற சதிவேலைகளை உருவாக்கியவர்கள் மும்பாயில் நடந்தேற்றிய ஒரு நாடகம் பல நூறு மக்களைப் பலியெடுத்துள்ளது.இதன் உண்மை மிக விரைவாக அம்பலத்துக்கு வரும்-வரவேண்டும்!பாகிஸ்த்தானும்,இந்தியாவும் போருக்குச் செல்வதை உலகம் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிடக்கிறது.இதற்கு மும்பாயில் நடத்திமுடிக்கப்பட்ட தாக்குதல் வழிவகுக்குமென அவர்கள் ஏலவே திட்டமிட்டார்கள்.அது அவர்களது பொருளாதார நலனுக்குமட்டுமல்ல,இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதாரத்தைத் திட்டமிட்டுச் சிதைப்பதற்கும் இதுவே அவர்களது இறுதி முடிவாகவும் இருக்கிறது.மேற்குலகம் திட்டமிட்டபடி இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தானும் அதனால் வளர்த்தெடுக்கப்படும் காஸ்மீரிய விடுதலை கோரும் அமைப்பான Jaish-i-Mohammed மற்றும் Lashkar-i-Toiba அடிப்படைவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாகச் சொல்லும் கருத்துகளுக்குள் தமது பொருளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் ஆயுதத் தளபாடவுற்பத்திச் சாலைகளுக்கான புதிய ஓப்பந்தங்கள் குறித்த நோக்கு இருக்கிறது என்பதை நாம் இனம் காணவேண்டும்

அமெரிக்க-ஐரோப்பியப் பங்குச் சந்தைகளில் தமது பெரும் மூலதனத்தை இழந்த இத்தேசங்களின் ஆளும் வர்க்கங்களுக்கு மிக அவசியமாக ஒரு பாரிய யுத்தம் தேவையாக இருக்கிறது.யுத்தங்களில் அழிக்கப்படும் இராணுவத் தளபாடங்களால் ஆயுத உற்பத்தி தொடர்ந்து மேல் நிலைக்கு வரும்போது, அத்தகைய தொழிலில் முதலீடு செய்த இந்த ஆளும் வர்க்கம் ஓரளவாவது அழிந்த மூலதனத்தை; மிக விரைவாகத் திரட்ட முடியும்.இது,பொருளாதாரத்தின் அரிச்சுவடியாகத் திருவாளர்.கெய்னிஸ் குறித்துரைப்பதிலிருந்து நாம் விளங்க முடியும்.நவ லிபரல்களின் பொருளாதார இலக்குள் யுத்தம் மிக அவசியமானது.இதனால் அவர்கள் செய்த பற்பல யுத்தங்களை நாம் வரலாற்றில் கண்டோம்.

இன்று,மேற்குலகப் பொருளாதாரச் சரிவைக்குறித்து யுத்தமொன்றை நேரடியாகச் செய்வதற்கு மேற்குலக நாடுகளின் மக்கள் தடையாக இருக்கிறார்கள்.அதேபோன்று, அமெரிக்கா இருக்கும் பொருளாதாரச் சூழலில் அது இன்னொரு யுத்தத்தில் ஈடுபட்டுத் தமது எஜமானர்களைக் காக்கும் நிலையில் இல்லை!இதன் தாக்கம் மிகவிரைவாக மூன்றாந்தரப்பால் யுத்தம் நடாத்தப்பட்டுத் தமது ஆயுத உற்பத்தியால் வளங்களைப் பெருக்குவதற்கு ஏதாவதொரு இழிச்சிவாய்த் தேசங்கள் அவசியமாக இனம் காணப்பட்டது.அங்கே,மிகப் பலமான முரண்பாடுகளைக் கொண்ட யுத்தமுனைப்புத் தேசங்களாக இருப்பவை தென்கிழக்காசியாவில் இந்தியாவும்,பாகிஸ்த்தானுமாகவே இனம் காணப்படுகிறது.இதற்குப் பல தசாப்தங்களாக இந்துமதப் பரிவாரங்கள் முகாந்திரம் அமைத்துள்ளார்கள் கூட்டாக!

இவ்விரண்டு தேசங்களினதும் முரண்பாடுகள் வெறுமனவே பொருளாதார இலக்குகளாக நீர்த்துப்போவதைத் தடுத்து, அவற்றுக்கு "இந்து-முஸ்லீம்"எனும் மிகப் பெரிய மத முரண்பாடு உருவகப்படுத்தி அடுத்த பல தசாப்தத்துக்கு அதையே யுத்தமாக நடந்தேற்றுவதற்கு அவசியமான தத்துவார்த்த அடித்தளதைக் கோரிக் கொள்கிறது மேற்குலகமும் அமெரிக்காவும்.இது மிக அவசியமான அரசியற் சூழ்ச்சியோடு அடுத்த தசாப்த வியூகமாக அமெரிக்க-மேற்குலக அரசியல்-பொருளாதாரச் சூழலில் விரிகிறதென்பதை மூன்றாம் உலகத்தவர்களின் அரசியல் புரிந்துகொள்வது மிக அவசியமானது.

அண்மைக் கிழக்குத் தேசங்களின் மூலதன இருப்பினது வளப் பிரிப்புப் போட்டியானது மேற்குலகத்தோடு மிகக்கெடுதியான பகை முரண்பாட்டைக் கொண்ட இஸ்லாமிய அடிப்படை வாதமாக முன்னே தள்ளுகிறது.இதனால்,மூலதனத்தைத் தொடர்ந்து கையகப்படுத்தும் அரசியல் வியூகமானது மேற்குலகத்தின் முற்றத்துக்கு இஸ்லாமியக் குண்டுதாரிகளைக் கையோடு கூட்டிவருகிறது.இது தமது தேசத்தின் உள்நாட்டு அரசியலில் பாரிய பின்னடைவுகளை இத்தேசங்களுக்குள் ஏற்படுத்திவருகிறது. இப்போது,இந்த இஸ்லாமியக் குண்டுகளை இந்தியாவை நோக்கித் திசை திருப்பிவிடும்போது,மிகவும் சாதகமான பொருளாதார வளர்ச்சியை மேற்குலக மற்றும் அமெரிக்கா மூலதனம் எட்டிவிடும்.

ஈராக் யுத்தத்துக்குப் பின்னான அரசியல்-பொருளாதார மற்றும் உள் நாட்டுப் பாதுகாப்புச் சூழல் மிகவும் கெடுதியாக மேற்குலகைப் பாதிக்கிறது.என்றுமில்லாதவாறு பெரும் பாதுகாப்புச் செலவீனங்களும் பொருளாதார நெருக்கடிகளையும் இத்தேசங்கள் சந்திக்கும்போது,இந்தியா மற்றும் சீனா போன்ற தேசங்கள் மிக இலகுவாக உலகத்தில் தமது சந்தைகளை வரிவுப்படுத்திப் பொருளாதார ஸ்த்திரத்தைக்கொண்டியங்குவது சகிக்கமுடியாத அச்சத்தை இந்தத் தேசங்களுக்கு ஏற்படுத்தியதைக் கடந்தகால மேற்குலகத் தகவல் மற்றும் ஊடகங்களில் பயிற்சியுடையவர்கள் அறிந்திருக்க முடியும்.

இன்று,"கிறிஸ்த்துவ-இஸ்லாம்" பகை முரண்பாட்டைத் திசை திருப்பி "இந்து-இஸ்லாம்" பகை முரண்பாடாக்கிய பெருமைக்கு மேற்குலகத்தோடு சேர்ந்து-கள்ளக்கூட்டுவைத்து இயங்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்திய மக்களின் எதிரிகளுக்கே சேரும்.

இந்தப் பார்ப்பனிய-பனியாச் சகதிகள் பாரத தேசத்தின் பாதுகாப்பு என்று கூலிக்குக் குரல் கொடுத்துப் பாகிஸ்த்தானுக்கும், இந்தியாவுக்குமானவொரு யுத்தத்தை மேற்குலகோடிணைந்து உருவாக்க முனையுந்தருணங்கள் தென்படுகின்றன.இங்ஙனம் யுத்தம் மேல் நிலைக்கெழுந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை யுத்தத்துக்குள் கொட்டித் தமது மக்களில் பலரைப் பலியாக்கும்.இதனால் தேசம் தனது பொருளாதார ஸ்த்திரத்தை இழந்து,அனைத்து வளங்களையும் மேற்குலக ஆயுத உற்பத்தியாளர்களிடம் தாரவார்த்துவிடும்.இதுவே இன்றைய மேற்குலக-அமெரிக்க அரசியல்-பொருளியல் வியூகமாக எதிர்காலத்து அரசியல் இலாபங்களையும் அதனூடாகச் சந்தை விரிவாக்கத்தையும் தக்கவைக்க முனைகிறது.

இதையெல்லாம் ஒருங்கே நிறைவேற்றத் தகுந்த மாதிரிகளை உருவாக்கத் தமிழ்நாட்டுப் பார்ப்பனியக்கூட்டமும் தம்மாலான முயற்சியல் கூக்குரலிடுகிறது.அதில் ஒன்றுதாம் யூதர்களிடம் ஆலோசனை மற்றும் இந்திய இராணுவத்திடம்-மோடியிடம் ஆட்சியை ஒப்படை என்று ஓலமிடுகிறது.இத்தகையத் தெரு நாய்கள் இந்தியத் தேசத்தையும்,இந்திய உழைப்பாளர்களையும் அந்நியத் தேசங்களுக்குக் காட்டிக் கொடுத்து, கொலை செய்து வருகிறது.இதன் ஆரம்பம் மும்பையில் தொடரவில்லை.அது, ஏலவே மோடி தலைமையில் அயோத்திக்கான கொலைகளாக நடந்தேறியது.

அந்நிய ஆர்வங்களுக்கும் அமெரிக்க-மேற்குலக உளவுப்படைகளுக்கும் ஏஜென்டுக்களாக மாறியுள்ள இந்தப் பார்ப்பனியத்தை(சுப்பிரமணியசுவாமி மற்றும் சோ,சிதம்பரம் போன்றவர்களை மனதில் நிறுத்தவும்) வேரோடு சாய்பதற்கு மேற்குலகமே முட்டுக்கட்டையாக இருக்கும்.ஏனெனில், அடுத்தகட்ட யுத்த முனைப்பும்,பகை முரண்பாடும் மையங்கொள்வது இந்தியப் பிராந்தியத்தில் என்பது முடிந்த முடிவாகும்.அது,"இந்து-இஸ்லாம்"மதவாத யுத்தமாக உலகம் தகவமைக்கிறது!

இது குறித்து,இந்திய வம்சாவழியாகிய ஒவ்வொரு மனிதரும் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.பாப்பனிய மற்றும் மேற்குலக உறவுகளை அம்பலப்படுத்தி,இவர்களைத் தோற்கடிக்காமால் தென்கிழக்காசியப் பிராந்தியத்தை சமாதான பூமியாக்கமுடியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.11.2008
நன்றி : அகதி

Sunday, November 30, 2008

ராஜ்தாக்கரேக்கு குட்டு.

இது மராட்டியம். வெளிமாநிலத்தவர்கள் வெளியேறுங்கள் என்றார்களே, இப்போது பார்த்தீர்களா..? தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டு அப்பாவிகளை காப்பாற்றிய இருநூறுக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் யாரும் மராட்டியர்கள் இல்லை.எல்லோரும் வட மாநிலத்தவர்கள் மற்றும் தென்னிந்தியர்கள்தான். இவர்கள் உயிரை பணயம் வைத்து போரிட்டுக்கொண்டிருப்பதால்தான் சிவாஜிபார்க்கில் ராஜ்தாக்கரே, நிம்மதியாக தூங்கமுடிகிறது. இந்த தகவலை எல்லோருக்கும் பரப்புங்கள்.மும்பையில் துப்பாக்கி சண்டை தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் செல்போன்கள் வழியாக வெகுவேகமாக பரவிய எஸ்.எம்.எஸ்.தான் இது. மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியினரிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.-

நன்றி;தமிழ்முரசு