Showing posts with label விஷ்வ ஹிந்து பரிஷத். Show all posts
Showing posts with label விஷ்வ ஹிந்து பரிஷத். Show all posts

Thursday, March 19, 2009

காங்கிரஸ் குடும்பத்தில் கோட்சேவின் சிந்தனையாளரா?


இந்துக்கள் நல்லவர்கள்.நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.அதே நேரத்தில், இந்துத்துவாக்கள் எனப்படுபவர்கள் தங்களின் சுயநலத்திற்காக, பதவி அரசியலுக்காக எதையும் பேசவும், எழுதவும், செய்யவும் தயங்கமாட்டார்கள். இப்படிப்பட்ட இந்த கும்பலில், காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து, அகிம்சையை போத்தித்த காந்தியின் பெயரை தன்பெயரோடு ஒட்டிக்கொண்டு மதவாத பா.ஜ.க வில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் வருண்காந்தி என்பவர் பா.ஜ.க சார்பாக நாடாளுமன்ற வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.


மேற்படி வருண்காந்தி தேர்தல் பிரச்சாரத்தின்போது, இது எனது கை. காங்கிரஸின் சின்னம் அல்ல. இது பா.ஜ.கவின் பலம். இந்துக்களுக்கு எதிராக யாராவது விரலை நீட்டினாலோ, இந்துக்கள் பலவீனமடைந்து விட்டதாக, தலைமை இல்லாமல் போய்விட்டதாக நினைத்தாலோ, ஓட்டுக்காக இந்துதலைவர்கள் காலில் விழுவார்கள் என்று நினைத்தாலோ, பகவத் கீதையின்மீது சத்தியம் செய்து அத்தகையவர்களின் கையை வெட்டுவேன் என்று பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வருணின் இந்த பேச்சை காங்கிரஸ் மட்டுமல்ல பா.ஜ.க. சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி, ஷானவாஸ் ஹுசைன் உள்ளிட்டோர்கூட கண்டித்துள்ளனர்.


மேலும், வருணின் பேச்சை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன், ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் வருணின்மீது வழக்கு தொடுக்க காவல்துறைக்கு உத்தவிட்டதையடுத்து இ.பி.கோ.153 [ஏ],மற்றும் 188 .பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. வருண்காந்தி கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதில் வருன்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் கம்பி எண்ணுவதோடு, தேர்தலிலும் போட்டியிடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


இது ஒருபுறமிருக்க, வருணை போன்றவர்கள் இவ்வாறு பொது இடத்தில் பேசும் துணிச்சல் எங்கிருந்து கிடைத்தது எனில், கடந்த காலங்களில் மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மத துவேஷத்தோடு பேசி வரும் இந்துத்துவாக்களின்மீது நடவடிக்கை எடுக்கப்படாததுதான்.

*ரத யாத்திரை என்ற பெயரில் செல்லுமிடமெல்லாம் முஸ்லிம்விரோத கருத்துக்களை பேசி ரத்த யாத்திரை நடத்திய அத்வானிமீது நடவடிக்கை இல்லை.

*தனது பேச்சுக்களாலும், 'தலையங்கங்களாலும்' மும்பையில் சுமார் மூவாயிரம் முஸ்லிம்கள் கொள்ளப்பட காரணமான பால்தாக்கரே மீது நடவடிக்கை இல்லை.

*வட இந்தியர்களுக்கெதிரான தொடர் துவேஷத்தை கடைபிடிக்கும் ராஜ்தாக்கரே மீது நடவடிக்கை இல்லை.

*திரிசூலத்தில் உள்ள மூன்று சூலங்களின் ஒருமுனை முஸ்லிம்களையும், மறுமுனை கிறிஸ்தவர்களையும்,மற்றொரு முனை நாத்திகர்களையும் கருவறுக்கும் என்று பேசிய பிரவீன் தொகாடியா மீது நடவடிக்கை இல்லை.

*ராமர் பாலம் விஷயத்தில் எந்தெந்த அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள் என்று கணக்கெடுத்து வருகிறோம்.ராமர் பாலத்தை காக்க எங்கள் உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம். எவரது உயிரையும் எடுக்கவும் தயங்கமாட்டோம் என்று பேசிய உமாபாரதி மீது நடவடிக்கை இல்லை.

*ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று கருத்து சொன்னதற்காக, தமிழக முதல்வரின் தலையை கொண்டுவருபவர்களுக்கு சன்மானம் என்று அறிவித்த சாமியார் வேதாந்தி மீது நடவடிக்கை இல்லை.


இப்படி இந்துத்துவாக்களின் மத,மனிதநேய,சமூகத்திற்கெதிரான பேச்சுக்களை அடுக்கிகொண்டே போகலாம். இவ்வாறு அவர்கள் பேசும்போது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், வருணுக்கு இவ்வாறு பேசும் துணிவு வந்திருக்காது. என்ன செய்ய! நம்ம நாட்டு சட்டம் ஏழைகள்/பலவீனர்களிடத்தில், ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதல் பெற்ற 'முறுக்கு கம்பி' போல் விறைப்பாக நடந்து கொள்வதும், அதிகார வர்க்கம் விசயத்தில் 'நாணல்'போல வளைவதும் வாடிக்கைதானே! சட்டம் வருணுக்கு கருணை காட்டுமா அல்லது கடமையை செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday, January 21, 2009

மாலேகான்: முக்கிய தீவிரவாதி லெப்டினென்ட் கர்னல் புரோஹித்!

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மாலேகான் சம்பவத்தை திட்டமிட்டு நிறைவேற்றியது ராணுவ அதிகாரியான
தீவிரவாதிலெப்டினென்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் தான் என்று குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கையை நேற்று தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்தனர். இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் நோக்குடன் இந்த செயலில் அனைவரும் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மாலேகான் நகரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கை ஹேமந்த் கர்கரே தலைமையிலான மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர்.

வழக்கு முக்கிய கட்டத்தை நெருங்கிய நிலையில் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி கர்கரே உயிரிழந்தார். இருப்பினும் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து தொய்வின்றி விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையி்ல் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குண்டுகளை சப்ளை செய்த தீவிரவாதி புரோஹித்...
மாலேகான் சதிச் செயலுக்கு முக்கிய காரணகர்த்தாவாக லெப்டினன்ட் கர்னல் தீவிரவாதி புரோஹித் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவர்தான் வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆட்களை ஏற்பாடு செய்த தீவிரவாதி பிரக்யா...

அதேபோல பெண் தீவிரவாதி பிரக்யா சிங் தாக்கூர், வெடிகுண்டுகளை வைக்க ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 4000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், மகாராஷ்டிர ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்ட சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

குற்றப் பத்திரிக்கையின் முக்கிய அம்சங்கள்...

கடந்த 2007ம் ஆண்டு அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பை தொடங்கினார் புரோஹித். இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவது, இந்துக்களுக்கான சட்டத்தை உருவாக்குவது, இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது ஆகியவைதான் இந்த அமைப்பின் நோக்கம்.

தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு வழிகளில் நிதி திரட்டினார் புரோஹித். ரூ. 21 லட்சம் வரை இவ்வாறு அவர் திரட்டினார். இந்தப் பணத்தை அமைப்பின் பொருளாளர் தீவிரவாதி அஜய் ரஹீர்கர், குற்றம் சாட்டப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்குப் பிரித்துக் கொடுத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் படி கேட்டுக் கொண்டார்.

மாலேகான் குண்டுவெடிப்புக்கான சதித் திட்டம் தொடர்பான கூட்டங்கள் 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தொடங்கின. பரீதாபாத், போபால், கொல்கத்தா, ஜபல்பூர், இந்தூர், நாசிக் ஆகிய இடங்களில் கூட்டம் போட்டு ஆலோசித்துள்ளனர்.

காஷ்மீரில் பணியில் இருந்த தீவிரவாதி புரோஹித் அங்கிருந்து திரும்பியபோது ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளை கொண்டு வந்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் தீவிரவாதி ராம்ஜி கலஸங்கரா, தீவிரவாதி சந்தீப் டாங்கே,
தீவிரவாதி பிரவீன் முத்தலீக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். வெடிகுண்டுகளை இவர்கள்தான் வைத்துள்ளனர் என்று குறப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர கூடுதல் டிஜிபி ரகுவன்ஷி கூறுகையில்,தீவிரவாதி புரோஹித்தான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸை கொடுத்தார்
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும்போது விசாரிக்கப்பட்ட ஒரு சாட்சி, தீவிரவாதி புரோஹித்தான் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸைக் கொடுத்தார் என்று தெரிவித்திருந்தார்.
சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிரவாதி புரோஹித்தை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என அந்த நாடு கோரி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸாரின் இந்த கூற்று முக்கியத்துவம் பெறுகிறது.

Wednesday, January 14, 2009

'நரமாமிசபட்சினி' நரேந்திரமோடிக்கு உச்சநீதிமன்றம் குட்டு!


மறக்கமுடியுமா?

மோடியின் ஆசீர்வாதத்தோடும்,ஆசியோடும் நடைபெற்ற முஸ்லீம் இனபடுகொலையை!
மாபாவிகள் எம் சகோதரிகளின் மானத்தை பறித்த அந்தநாளை!

எம் சொந்தங்கள் கரிக்கட்டையாக கொளுத்தப்பட்டதை!
வயிற்றில் உள்ள பிஞ்சையும் வயிற்றை கிழித்து கொளுத்திய கொடுமையை! பயங்கரவாதிகள் நாங்கள் தான் செய்தோம் மோடியின் ஆசியோடு செய்தோம் என்று பகிரங்கமாக சொல்லியதை!

தடயங்கள் அழிக்கப்பட்டதை! சாட்சிகள் மிரட்டப்பட்டதை! வழக்குகள் குழியில் புதைக்கப்பட்டதை!

இருப்பினும், உண்மையை ரெம்ப காலம் ஒழிக்கமுடியாது என்ற நியதிக்கேற்ப சில மனிதநேயர்களின் முயற்சியால் புதைக்கப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தோண்டப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைத்துவிடக்கூடாது என்பதிலே ஆரம்பம்முதலே குறியாக இருப்பவர் குஜராத் காவல்துறை தலைவர் பாண்டே என்பவர்.

இதற்கிடையில், இந்தவழக்கில் பாண்டே குறுக்கீடு செய்வதாக கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ - மோடி அரசின் நிருவாகத் திறமையின்மையைக் குறிப்பிட்டுக் கூறினார். குஜராத்தில் நடந்தப்பட்ட கொலைகளும், வன்கொடுமைகளும் இந்திய நாட்டுக்கே அவமானத்தை உண்டாக்கிவிட்டன என்றார். குஜராத்தில் சிறுபான்மையின மக்களுக்கு என்ன கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். அந்தக் கொடுமைகள் இந்திய நாட்டுக்கு அவமானமானவை என்று நீதிபதி குறிப்பிட்டார்.
காவல்துறைத் தலைவரின் தலையீடு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தால் அவரை மாற்றவேண்டும் என நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கப்பட்டது.

ஏற்கனவே,திருவாளர் மோடியை 'ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னனோடு'ஒப்பிட்டு உச்சநீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

தர்மத்தின்[முஸ்லிம்களின்]வாழ்வுதனை சூது[இந்துத்துவாக்கள்]கவ்வும்; மறுபடியும் தர்மம்[முஸ்லிம்கள்]வெல்லும். அன்று இந்த மோடிகள் 'குமுதம்-அரசு' சொன்னதுபோல, இருக்குமிடம் தூக்கு மேடையாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்!

தேங்க்ஸ் டு :நிழல்களும் நிஜங்களும்

Saturday, January 3, 2009

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் - 2


கார்கரே கொலையைக் குறித்த காவல்துறையின் விளக்கத்தை கார்கரேயின் குடும்பம் உட்பட மக்கள், அப்படியே நம்பாமல் சந்தேகப் படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. முதன்முதலாகக் கார்கரே தாஜ் ஹோட்டலிலும் காந்தே மற்றும் ஸலஸ்கர் இருவரும் தாஜிற்கு அடுத்துள்ள மெட்ரோவிற்கருகில் வைத்தும் கொல்லப் பட்டதாகவே காவல்துறை கூறியிருந்தது. பின்னர், மூவரும் ஒரே இடத்தில் வைத்து ஒன்றாகவே கொல்லப்பட்டதாகக் காவல்துறையே மாற்றிக் கூறியது.
மும்பைத் தாக்குதல் தொடங்கிய வேளையில், கார்கரே தாதரிலுள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார். காந்தே அன்று ஆஃப் டூட்டியில் இருந்தார். தாக்குதல் நிகழ்வை முதலாவதாக அறிந்த ஸலாஸ்கர், நேரடியாகத் தாஜ் ஹோட்டலுக்குத்தான் முதலில் வந்து சேர்ந்தார். தாஜ் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த ஸலாஸ்கரை ஜாயிண்ட் கமிஷனர் ராகேஷ் மரியா கொலாபா காவல்நிலையத்திற்கு வரும்படி கன்ட்ரோல் ரூம் வழியாக ஆணையிட்டிருக்கின்றார். தாஜிலிருந்து கொலாபா காவல்நிலையத்திற்குப் புறப்பட்ட ஸலாஸ்கருக்கு, ரமேஷ் மரியாவிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது - தீவிரவாதிகளின் தாக்குதலில் அடிஷனல் கமிஷனர் சதானந்த் தத்தா காயமடைந்திருப்பதாகவும் உடனடியாக ஸலாஸ்கர் காமா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் அந்த அழைப்புக் கூறியது. காமாவுக்குச் செல்லும் வழியில் ஸலாஸ்கர் கார்கரேயைச் சந்தித்தார். காந்தேயும் இவர்களுடன் இணைந்தார். அச்சமயம் ACP பிதோனாய் குவாலிஸ் வண்டியில் அங்கு வந்து சேர்ந்தார். குவாலிஸ் வண்டியினைத் தங்களுக்குத் தர வேண்டும் என காந்தே கேட்டுக் கொண்டார். இதன் பின்னர் நடந்ததாகக் காவல்துறை கூறிய கதை கீழ்கண்டவாறு:"வண்டியை ஸலஸ்கர் ஓட்டினார். அவருக்கு அருகில் காந்தே உட்கார்ந்திருந்தார். ஜாதவும் மற்ற இரு கான்ஸ்டபிள்களும் கடைசி வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தனர். இரண்டாவது வரிசை இருக்கையில் கார்கரே அமர்ந்திருந்தார். காமா மருத்துவமனைக்குப் புறப்பட இருந்த வேளையில் இவர்களுக்கு மீண்டும் அழைப்பு வந்தது. "செயின்ட் சேவியர் கல்லூரிக்கு அருகில் வைத்து, தீவிரவாதிகள் வண்டி ஒன்றைக் கடத்துவதற்கு முயற்சி செய்தனர்" என அந்த அழைப்பு கூறியது. அந்நேரம் ஓர் ஆள் அவர்களின் வண்டியின் குறுக்காக பாய்வதைக் கண்டனர். தற்பொழுது காவல்துறையின் கஸ்டடியில் உள்ள அஜ்மல் கஸப்தான் அவன். ஸலஸ்கர் தன் கையிலுள்ள கைத்துப்பாக்கியால் கஸபை நோக்கிச் சுட்டார். கஸ்பின் கையில் காயம் ஏற்பட்டது. திடீரென கஸபுடன் இருந்த இஸ்மாயில் இருளிலிருந்து கொண்டு தாறுமாறாக சுட்டான். வண்டியில் இருந்த கார்கரே உட்பட அனைவருக்கும் குண்டடி பட்டது. அனைவரையும் வண்டியிலிருந்து வெளியே இழுத்துப் போட்டுவிட்டு, கஸபும் இஸ்மாயீலும் அவ்வண்டியில் தப்பியோடினர்; பின்னர் பிடிபட்டனர்." காவல்துறை கூறும் இக்கதை, நம்பமுடியாத ஒன்றுக்கொன்று பொருந்தாதவை என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். கார்கரேக்கு மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் கொலை மிரட்டல்கள் தொடர்ந்து இருந்ததால், அவருடன் ஆயுதமேந்திய இரு போலீசார் நியமிக்கப் பட்டு, எந்நேரமும் உடன் இருந்தனர். ஆனால், இவர்கள் இல்லாமலேயே கார்கரே முதலில் CSTக்கும் பின்னர் காமா மருத்துவமனைக்கும் சென்றுள்ளார். தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெறுவதற்கு முந்தைய தினம், அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் தலைமையில் நடந்த காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், "மாலேகோன் குண்டு வெடிப்பு விசாரணையில் ஈடுபட்டிருப்பதால் மிகக் கவனமாக இருக்க வேண்டும்" என கார்கரேக்குப் பாட்டீல் முன்னெச்சரிக்கை கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்தே கார்கரேக்குப் பாதுகாப்பாக இரு போலீசார் நியமிக்கப் பட்டனர். இருப்பினும் அந்தப் பாதுகாப்பு அதிகாரிகள் துணையின்றி, கார்கரே தீவிரவாதிகளை எதிர்கொள்ள தனியாகச் சென்றது எப்படி? கார்கரே சி.எஸ்.டிக்கு வந்தபோது, ATSஇல் முன்னர் தலைவராக இருந்த பி.கே. ரகுவன்ஷி CSTயில் இருந்தார். இருப்பினும் இவரோ கார்கரேயின் பாதுகாப்பு அதிகாரிகளோ சம்பிரதாய விசாரிப்புக்காகக்கூட கார்கரே அருகில் செல்லத் தயாராகவில்லை. காந்தேயும் ஸலஸ்கரும் கார்கரேயுடன் காமாவுக்குப் புறப்படும் பொழுது, அவர்களது வண்டியில் ரகுவன்ஷி ஏறவில்லை; கார்கரேயின் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் செல்லவில்லை.காமா மருத்துவமனைக்குத் தனியாகச் செல்லுமாறு யாராவது கார்கரேயிடம் கோரிக்கை/உத்தரவு விடுத்திருந்தனரா?அச்சமயம் கார்கரேக்குத் தொடர்ச்சியப் பல தொலைபேசி அழைப்புகள் வந்திருந்ததை அவரது இறுதியான அசைவுகளை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகளிலிருந்து உறுதியாகக் கூறலாம். அந்நேரம் காவல்துறை கண்ட்ரோல் அறையில், ஜாயின்ட் கமிஷனர் ராகேஷ் மரியாதான் இருந்தார். இதே மரியாதான் தற்பொழுது மும்பைத் தாக்குதல் வழக்கை விசாரிக்கின்றார். கஸபை விசாரணை செய்த ஒரேயொரு அதிகாரியும் இவர்தான். கார்கரே கொல்லப்பட்ட நிகழ்வில் ஒரே சாட்சி அருண் ஜாதவ், மீண்டும் நடந்த சம்பவத்தை விவரிக்கும்போது கதையில் மாற்றம் வருகிறது. "தீவிரவாதிகள் கார்கரேயின் மீதும் மற்றவர்கள் மீதும் தாறுமாறாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காந்தே, ஸலஸ்கர், கார்கரே முதலானவர்களை வண்டியிலிருந்து வெளியே தூக்கி வீசிவிட்டு, காரைக் கடத்திக் கொண்டு தப்பிச் சென்றனர். அதே காருக்குள் காயம் அடைந்திருந்த நான், இறந்தவன் போன்று வண்டியின் சீட்டிற்கு கீழே மறைந்து கிடந்தேன்" என்பதாக ஜாதவ் கூறுகிறார். "தீவிரவாதிகள் அவ்வண்டியை விட்டு மற்றொரு வண்டியைக் கடத்தித் தப்பிச் செல்வதுவரை நான் அவ்வண்டியின் சீட்டிற்கு கீழே கிடந்தேன். தீவிரவாதிகள் சென்ற பிறகு வயர்லெஸ் மூலமாக காவல்துறை கண்ட்ரோல் அறைக்குத் தகவல் கொடுத்தேன்" என்பது ஜாதவ் தரும் விவரணம். ஸலஸ்கரின் பாதுகாப்பு அதிகாரியான கான்ஸ்டபிள் ஜாதவின் கையில் ஒரு கைத்துப்பாகி கூடவா இல்லாமல் இருந்தது?தீவிரவாதிகள் முதலில் கடத்திச் சென்ற குவாலிஸ் வண்டியின் பின்சீட்டிற்குக் கீழே, தீவிரவாதிகளுக்குத் தெரியாமல் கிடந்த ஜாதவ், தீவிரவாதிகளைப் பின்பக்கமிருந்து சுட்டுத் தள்ளியிருக்கலாமே?இக்கேள்விக்கு ஜாதவின் பதிலைக் கேளுங்கள்:"என் கைவசமிருந்த கைத்துப்பாக்கியைக் காமா மருத்துவமனையில் வைத்து நான் வேறோர்(?) அதிகாரிக்குக் கொடுத்து விட்டேன்".எவரும் நம்ப முடியாத பதில்!.ஜாதவைப் போன்ற என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், இதுபோன்ற இக்கட்டான சூழலில் தனது கைத்துப்பாக்கியை மற்றொருவருக்கு கொடுப்பது என்பது மட்டுமல்ல, கலாஷ்நிக்கோவ் துப்பாக்கிகளுடன் நிற்கும் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்கு அனுபவமிக்க ஓர் என்கவுண்டர் அதிகாரி வெறுங்கையுடன் செல்வது என்பது உலகமகா காமடியாகும். அதுமட்டுமல்ல, காமா மருத்துவமனைக்கு எதிரில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் காயம் பட்டதாகக் கூறும் ஜாதவ், அதற்கு முன்பு காமா மருத்துவமனைக்கு எப்பொழுது சென்றார்?. காமா மருத்துவமனைக்கு முன்பாக வண்டியிலிருந்து இறங்கும் முன்னரே தீவிரவாதி இஸ்மாயில் தாறுமாறாகச் சுட்டதாகவும் கையில் குண்டடி பட்டிருந்த கஸபும் இஸ்மாயீலும் கார்கரே முதலானவர்களை வண்டியிலிருந்து இழுத்து வெளியே போட்டு விட்டு வண்டியைக் கடத்திச் சென்றதாகவும் அந்நேரம், தான் வண்டியின் பின் இருக்கையின் கீழே குண்டடி பட்டு இறந்தது போன்று கிடந்ததாகவும் இதே ஜாதவ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சம்பவம் நடந்த சமயத்தில் காமா மருத்துவமையின் முன்பாக வண்டியிலிருந்து கீழே இறங்காத ஜாதவ், எப்பொழுது காமா மருத்துவமனையில் வைத்து மற்றொரு அதிகாரிக்குத் தனது கைத்துப்பாக்கியைக் கொடுத்தார்?. ஜாதவின் கைத்துப்பாக்கியைப் பெற்றுக் கொண்ட அந்த மர்ம அதிகாரி யார்?ஸலஸ்கரின் பாதுகாப்பு அதிகாரியான ஜாதவிற்கு, ஸலஸ்கருடன் செல்லும் சாதாரண வேளைகளில்கூட கையில் துப்பாக்கி இருக்க வேண்டியது கட்டாயமாகும். இருப்பினும் தீவிரவாதிகளை எதிர்கொள்ளச் செல்லும் வேளையில், கையில் துப்பாக்கி இல்லாமல் சென்றார் என்பது உச்சகட்ட நகைப்பாகும்.கொல்லப்படுவதற்குச் சில மணித்துளிகளுக்கு முன்னர், கார்கரே மாலேகோன் வழக்கின் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் ரோஹிலி சாலினியுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியிருந்தார். மாலேகோன் வழக்குத் தொடர்பான மேலதிக விஷயங்கள் குறித்து அடுத்தநாள் விரிவாகப் பேசிக் கொள்ளலாம் என இருவரும் தீர்மானித்திருந்தனர். கிட்டத்தட்ட அதே நேரம், பூனே காவல்துறைக்கு ஒரு மொட்டை தொலைபேசி மிரட்டல் வந்தது. "அடுத்த இரு தினங்களுக்குள் கார்கரே குண்டுவெடிப்பில் கொலை செய்யப்படுவார்" என அம்மிரட்டல் கூறியது. அம்மிரட்டலை விடுத்தவர் தூய மராட்டி மொழியில் பேசியுள்ளார். கார்கரே கொல்லப்பட்டார்; நாட்களுக்குள் அல்ல, சில மணிநேரங்களுக்குள்ளேயே! கார்கரேயின் அருகில் செல்வதற்கோ அவருடன் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குவாலிஸ் வண்டியில் அவருடன் ஏறிச் செல்வதற்கோ தயாராகாத முன்னாள் ATS தலைவர் ரகுவன்ஷி உடனடியாக மீண்டும் ATS தலைவராகப் பதவியேற்றார்.இன்ஷா அல்லாஹ் தொடரும்...
தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் - 1
தேங்க்ஸ் டு : சத்யமார்க்கம்

Wednesday, December 31, 2008

தேவையான கோரிக்கையும், தேவையற்ற எதிர்ப்புகளும்!



இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளுக்கும் ஒர் ஒற்றுமை உண்டு. ஒரு முக்கிய சம்பவம் நிகழும் போதும் அதற்கு முந்தைய சம்பவங்கள் அனைத்தும் முக்கியமிழந்து போகும். அது பற்றிய விவாவதங்களும், செய்திகளும் குறைந்து போகும். அரசும், ஊடகமும் இதற்கு துணை நிற்கும். ஒருவகையில் இது திட்டமிட்ட சதியாகக்கூட இருக்கலாம். அந்த வகையில் பார்க்கும்போது தற்போதைய மும்பை தாக்குதலுக்கும் ஒரு வகையில் தொடர்பு இருப்பதனை நாம் மறுக்கவும் கூடாது, மறைக்கவும் கூடாது. எந்த ஊடகங்களை நாம் பார்க்க நேர்ந்தாலும் மும்பைத்தாக்குதல் பற்றிய ஏதாவது ஒரு முக்கிய செய்தி இடம் பிடித்திருக்கும். யாராவது ஒரு வெளிநாட்டு தலைவர் இந்தியாவிற்கு வந்து துக்கம் விசாரித்துவிட்டு சென்றிருப்பார். இந்திய அதிகாரிகளின் முகத்தில் மகிழ்ச்சி வழிந்தோடும். இது ஒரு புறம் இருக்கட்டும். இவர்களை விடுங்கள்!

இந்தியாவில் நடந்த ஏறக்குறைய அனைத்து குண்டு வெடிப்புகளூக்கும் ஆர்.எஸ்.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பின் குண்டர்கள்தான் காரணம் என்ற உண்மை செய்தி கசிந்ததே அதனை நாம் எப்படி மறந்தோம்? உண்மையை மறைக்க நினைத்தவர்களுக்கு நாம் மறந்த போன விஷயம் ஊக்கமாக மாறுவதற்கு முன்பு நாம் விழித்துக்கொள்ள வேண்டும். நல்லவேளையாக அப்துல் ரஹ்மான் அந்துலே என்ற அமைச்சர் இது பற்றி நாடாளுமன்றத்திலேயே குரல் எழுப்பி இந்தியா முழுவதும் உள்ள எம்போன்றவர்களின் நியாயமான எதிர்பார்ப்பினை நிறைவேற்றியிருக்கிறார்.

மாலேகான் உள்ளிட்ட நாட்டில் நடந்த பல குண்டுவெடிப்புகளில் ஹிந்து பயங்கரவாதிகளின் சதித்திட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கர்கரே கொல்லப்பட்டிருப்பதனால் இதுபற்றி தனியானதொரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். சாதாரண குடிமகனின் குரலை அவர் அங்கு ஒலித்தார். உடனே பா.ஜ.க மற்றும் சிவசேனை உறுப்பினர்கள் பொங்கி எழுந்து அந்துலே மீது வசைமாறி பொழிந்தனர். யாருக்கும் அஞ்சாது துணிச்சலுடன் குரல் எழுப்பிய அந்துலேயை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கூச்சலிட்டனர். அதிலும் சிலர் ஒருபடி மேலே போய் அந்துலே பாகிஸ்தானின் கையாளாக செயல்படுகிறார் என்றும் கூச்சலிட்டனர். துரதிஷ்டவசமாக காங்கிரஸ் கட்சியும் அந்துலே பக்கம் நிற்காமல் சங்பரிவாரத்தினருக்கு ஆதரவு கரம் நீட்டியது மிகவும் கேவலமானது. விசாரணை என்றவுடன் சங்பரிவாரத்தினருக்கு ஏன் இவ்வளவு பயம்? விசாரணை தானே கோரினார். சாத்விக்கள் பழி தீர்த்தனர் என்று கூறவில்லையே. பிறகு ஏன் இப்படி அலறுகிறார்கள்? நாட்டின் மீது உண்மையான பற்றுக்கொண்ட கோடானுகோடி மக்களின் மனசாட்சியை நாடாளுமன்றத்தில் பிரதிபலித்ததனாலா? இல்லை விசாரணையில் தங்களின் முகமூடி கிழிந்துவிடும் என்ற பயத்தினாலா? சங்பரிவாரத்தினரின் கூச்சலுக்கு பயந்து காங்கிரஸ் வேண்டுமானால் அந்துலே மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர் எழுப்பிய கோரிக்கையை தொடர்ந்து மக்களின் மனதில் உள்ள நியாயமான சந்தேகங்களூக்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளட்டும். (முஸ்லிம்களுக்கு துரோகம் இழைப்பது காங்கிரஸுக்கு ஒன்றும் புதிதில்லையே).

1) கர்கரே தான் கொல்லப்பட்டதற்கு சில நாட்களூக்கு முன்பு பத்திரிக்கையாளர்களிடம் "சில அடிப்படைவாதிகளிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக" தெரிவிக்கிறார். இதற்கும் கர்கரே கொல்லப்பட்டதற்கும் தொடர்பு இருக்குமா என்பது பற்றி விசாரிப்பதில் என்ன தவறு இருக்கிறது.

2)கர்கரேவை கொன்றவர்கள் காவல்துறையினரின் வாகனத்தில் எவ்வாறு வந்தார்கள்?

3)கர்கரேவைக் கொன்றவர்கள் பாகிஸ்தானியர் என்றால் அவர்கள் மராத்திய மொழியில் பேசினாதாக அங்குள்ளவர்கள் எப்படி சொல்கிறார்கள்?

4)கர்கரே கொல்லப்பட்டவுடன் நரவேட்டை நரேந்திர மோடி அவசர அவசரமாக அனுதாபம் தெரிவிப்பது மக்களை ஏமாற்றவா?

5)கர்கரேவுக்கு நரேந்திர மோடி வழங்கிய பணத்தினை கர்கரே குடுப்பத்தினர் வாங்க மறுத்ததேன்?

6)கர்கரே கொல்லப்பட்ட இடமான காமா மருத்துவமனைக்கு அவரைப் போகும் படி அவருக்கு அறிவுறுத்தியது யார்?

7)மும்பை தாக்குதலின் போது கொல்லப்பட்ட சுமார் 170 அப்பாவி மக்களூம் தனியாக குறிவைக்கப்படாத போது மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி போன்ற சங்பரிவார இயக்கத்தினரை கைது செய்த போலீஸ் உயர் அதிகாரியினர் மட்டும் குறிவைக்கப்பட்டது எப்படி?


மக்களின் மனதில் தோன்றியிருக்கும் இதுபோன்ற சந்தேகங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பயங்கரவாதம் தானே நாட்டில் அதிமுக்கியமான பிரச்சனை. பயங்கரவாத்தினை ஒழிப்பதற்கு தானே அரசு பல கோடிகளை செலவழித்து வருகிறது. பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்குத்தானே பல படைகளை உருவாக்கி வருகிறது. அப்படி உருவாக்கப்பட்ட ஒரு படைதானே பயங்கரவாத ஒழிப்புப் படை. அதன் தலைவர் கொல்லப்பட்டது குறித்தே விசாரணை நடத்த அரசு தயக்கம் காட்டும் போது சாதாரண குடிமகனின் மரணம் குறித்து அரசு எப்படி அக்கறை காட்டும். மும்பை ஹோட்டல் மீட்பு போராட்டத்தில் அப்பாவி மக்களை காப்பதற்க்காக தன்னுயிரை இழந்த கமாண்டோ படையினர் பற்றி கவலை காட்டும் அரசு கர்கரே மரணம் பற்றி ஏன் அவ்வளவாக கவலை காட்ட மறுக்கிறது?

இதனால் அரசிற்கு அப்படி என்ன இழப்பு ஏற்பட போகிறது? கர்கரே சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்துவதில் சாத்விகளை ஆதரிக்கும் அத்வானிகளுக்கு உடன்பாடு இல்லாமல் இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் சோனியா காந்திக்கும் இதில் ஏன் உடன்பாடில்லை.?

பயங்கரவாதத்தினை ஒழிக்க வேண்டும், பயங்கரவாத செயலில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அரசிற்கு உண்மையிலேயே இருக்குமேயானால் இனியும் தாமதிக்காமல் கர்கரே உட்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தி எம்போன்ற சாதாரண குடிமகனின் எண்ணத்தில் தோன்றியிருக்கும் சந்தேகத்தினை களைய முன்வர வேண்டும். இல்லை, மும்பையில் நடந்த அனைத்து பயங்கரவாத செயல்களுக்கும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புதான் காரணம் என்று அமெரிக்காவின் அறிக்கையிலேயே உறுதியாக இருக்குமேயானால் மக்கள் மனதில் தோன்றியுள்ள சந்தேகங்கள் நீங்காமல் அரசின் மீதான நம்பகத்தன்மை குறைந்து போகும் என்பதில் ஐயமில்லை.

வாசகர்: Faizur Hadi M
thanks to :சத்தியமார்க்கம்.

Saturday, December 20, 2008

கர்கரே இல்லாத மாலேகான் வழக்கு-விசாரணை தேங்கும் அச்சம்



மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டு விட்டதால், மாலேகான் வழக்கு விசாரணை முன்பு போல துடிப்புடன் இருக்குமா என்று, அந்த வழக்கை விசாரித்து வரும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் அஞ்சுகின்றனர்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் கர்கரே. மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவராகப் பொறுப்பேற்றவுடன் மாலேகான் வழக்கை துப்பு துலக்குவதில் தீவிரம் காட்டினார்.

அவரது தீவிரமான, ஆழமான விசாரணையில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. பெண் தீவிரவாதி(துறவி) பிரக்யா சிங் தாக்கூர், தீவிரவாதி (சாமியார்) பான்டே உள்ளிட்ட பல இந்து தீவிரவாதிகள்தான் இதில் கைதாகினர்.
இந்து தீவிரவாதிகள்தான் இந்த செயலுக்குக் காரணம் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கினார் கர்கரே.
வழக்கு துரித கதியில் போய்க்கொண்டிருந்த நிலையில்தான் துரதிர்ஷ்டவசமாக மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியானார் கர்கரே.

இதனால் மாலேகான் வழக்கை விசாரித்து வரும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் பெரும் சோகத்தில் உள்ளனர். வழக்கு இனி எப்படிப் போகும், முன்பு போல தீவிரம் இருக்குமா, அரசிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் மற்றும் அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.

கர்கரேவும் இல்லை, கர்கரே கேட்ட உதவிகளையெல்லாம் செய்து கொடுத்த உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இல்லை. இந்த நிலையில் இந்த வழக்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

முன்பு போல தங்களுக்கு ஆதரவு கிடைக்காது என்ற அச்சமும் அவர்களிடம் உள்ளது. இதுகுறித்து அவர்கள் பகிரங்கமாக பேசாவிட்டாலும் கூட, போலீஸ் வட்டாரத்தில் இந்த வழக்கு குறித்த கவலைகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றனவாம்.

இருப்பினும், கர்கரே கடுமையாக பாடுபட்டதற்கு உரிய பலனை அடையாமல் விடக் கூடாது என்ற உறுதியில் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் உள்ளனராம்.
தீவிரவாத தடுப்புப் பிரிவு கூடுதல் ஆணையர் சுக்வீந்தர் சிங் கூறுகையில், விசாரணையின் இறுதி கட்டத்தில் நாங்கள் உள்ளோம் என்றார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கை தற்போது குற்றப் பிரிவு விசாரித்து வருகிறது. மாலேகான் வழக்கை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு விசாரித்து வருகிறது. மும்பைத் தாக்குதல் வழக்கை தீவிரவாதத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தால் மாலேகான் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்பதால் இப்போதைக்கு அது ஒப்படைக்கப்படவில்லையாம்.

குண்டுவைக்க ரூ. 10 லட்சம் நிதி:

இதற்கிடையே, தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம், மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணமான இந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத் பொருளாளர் அஜய் ரஹிர்கர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்காக பாரத் அமைப்பிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை இந்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் ரஹிர்கர், 2 அறைகளை புக் செய்துள்ளார். இந்த அறைகள் ரஹிர்கர், எச்.வி. ஆப்தே, கர்னல் பி.எஸ். ராவ் பல்வந்த் ஆகியோரது பெயர்களில் புக் ஆகியுள்ளது. இதை ஹோட்டல் ஊழியரான கெளரவ் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

சிங்காகாட்டில் ஆயுதப் பயிற்சி:

மேலும், இந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு சிங்காகாட் என்ற இடத்தில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ராகேஷ் தாவ்டே கூறியுள்ளார்.

இவருக்கும், நான்டெட் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், சிபிஐ தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை, ராம்ஜி கலஸ்கரே என்பவர்தான் தனது மெக்கானிக் ஷாப்புக்கு கொண்டு வந்ததாக, இந்தூரைச் சேர்ந்த மெக்கானிக் கடை உரிமையாளரான ஜிதேந்திரா சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.

கலஸ்கரே-டேங்களேவுக்கு வலைவீச்சு:

இந்த கலஸ்கரே தற்போது தலைமறைவாக உள்ளார். மேலும் குண்டுகளை வைத்ததாக கருதப்படும் சந்தீப் டேங்களே என்பவரும் தலைமறைவாக உள்ளார். இவர்கள் இருவரும் இந்த வழக்கில் அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதால் இவர்களைப் பிடிக்க தற்போது தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கர்கரே இல்லாவிட்டாலும் கூட அவர் ஏற்படுத்தி வைத்து விட்டுப் போயுள்ள வேகத்தைப் பிடித்துக் கொண்டு தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் மாலேகான் வழக்கில் மீண்டும் மும்முரமாகியுள்ளனர்.

Saturday, December 13, 2008

ஹிந்துத்துவா என்றால் மறைக்கப்படும் பயங்கரவாதம்!


யார் தீவிரவாதி? ஹிந்துத்துவா என்றால் மறைக்கப்படும் பயங்கரவாதம்! என்ற பெயரில் "அவுட்லுக் இந்தியா" இதழில் திருமதி. ஸ்மிதா குப்தா ஆங்கிலத்தில் எழுதிய செய்திக் கட்டுரை!
இக்கட்டுரையின் சாரம்சம் - அவுட்லுக் வெளிப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்கள்:
கடந்த 2006ம் ஆண்டில் Nanded இல் நடந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது பஜ்ரங்தள்தான் என்பது மஹாராஷ்ட்ராவின் தீவிரவாதத் தடுப்புத்துறை (ATS) நடத்திய புலனாய்வில் வெளியானது.
பஜ்ரங்தள்ளின் முக்கியக் குறி பள்ளிவாசல்களாக இருந்தன. கடந்த 2003-லும் மூன்று பள்ளிவாசல்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் ATS & CBI இனரால் திட்டமிட்டு கைவிடப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 2008 இல் கான்பூரில் குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக வெடித்து இரு பஜ்ரங்தள் உறுப்பினர்கள் இறந்தனர். அதைத் தொடர்ந்து இந்தியா உட்பட உலகமே அதிரும் வகையில் பல்வேறு இடங்களில் வண்டி வண்டியாக வெடிகுண்டுகள் கைப்பற்றப் பட்டன.
பெங்களூரு, அஹ்மதாபாத், டெல்லி ஆகிய பெருநகரங்களில் கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான குண்டு வெடிப்புகளினால் உலகமே உறைந்து போயிருந்தது.
இதில் பாதிப்புக்குள்ளானவர்கள், வெடிகுண்டுகளில் இறந்து போனவர்களும் அவர்தம் உறவினர்கள் மட்டுமல்ல; இந்திய முஸ்லிம்களும் அடக்கம். இன்று வரை எந்த ஓர் இஸ்லாமிய இயக்கமோ, குழுவோ இந்த பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்காத சூழலில் இப்பழி இந்திய முஸ்லிம்களின் மீது திட்டமிட்டுச் சுமத்தப்பட்டது.
பாதிக்கப்பட்டது இந்திய முஸ்லிம்கள் என்றால், நன்மையடைந்தது?
வேறு யார்? பிஜேபிதான். இல்லாத இயக்கங்கள் பெயரை உருவாக்கி பாமரன் கூட "முஸ்லிம்கள் தான் செஞ்சாங்களாம்" என்று முணுமுணுக்க வைத்தது பிஜேபியின் ஒரு வெற்றிகரமான போர் தந்திரம் என்றால் அது மிகையில்லை.
இந்திய சட்டதிட்டங்களுக்கு எதிராக குறிப்பிட்ட சமூகங்களைக் கொன்றொழிக்கவென்றே பிரத்யேகமான இராணுவ பயிற்சி முகாம்களை பகிரங்கமாக நடத்திவரும் பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP)இன் இளைஞர்களுக்கான பிரிவாகச் செயல்பட்டு வரும் பிரிவு என்பது
அனைவரும் அறிந்த ஒன்று.
இத்தகைய பயங்கரவாதச் செயல்கள் அனைத்திற்கும் பின்புலமாகச் செயல்படுவது பஜ்ரங்தள் என்பது காவல்துறையினரின் புலனாய்விலிருந்து வெளிப்படும் விஷயங்கள்.
இங்கே கூறப்படும் எவையும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல.
உதாரணத்திற்கு, மஹாராஷ்ட்டிராவின் தீவிரவாதத் தடுப்புத்துறையின் புலனாய்வில் வெளியான உண்மைகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்:
ஓய்வு பெற்ற PWD பொறியாளரான எல்.ஜி. ராஜ்கொண்டுவார், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராவார். கடந்த ஏப்ரல் 2006 இல் மஹாராஷ்ட்ராவின் Nanded பகுதியில் உள்ள இவரது வீட்டில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் இவர் பலியானார். இவருடன் இறந்தவர் ஹெச்.பான்ஸே. காயமடைந்தவர்கள் எம்.கே.வேக், ஒய்.தேஷ்பண்டே, ஜி.ஜே.துப்தெவார் மற்றும் ஆர்.எம்.பாண்டே ஆகியோர்.இவர்கள் அனைவரும் பஜ்ரங்தள் அமைப்பின் கட்டளையைச் செயல் படுத்திக் கொண்டிருந்தவர்கள்.
பதிவான FIR அறிக்கையில் "சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறியதால் அசம்பாவிதம் ஏற்பட்டது" என்று பஜ்ரங்தள் கூறியிருந்தது.
ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்த விசாரணையில் திடுக்கிடும் பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாயின. அவற்றில் ஒன்று, மஹாராஷ்ட்ராவில் சில பள்ளிவாசல்களைக் குறி வைத்து நிகழ்த்த இருந்த பெரும் குண்டு வெடிப்புகளுக்கான தயாரிப்புப் பணியில் பஜ்ரங்தள் உறுப்பினர்களான மேற்கண்ட நபர்கள் ஈடுபட்டிருந்த வேளையில், வெடிகுண்டுகளை இடம் மாற்றும்போது தவறுதலாக வெடித்திருக்கிறது. ஆனால், அதிர்ச்சியில் உறைய வைத்த காவல்துறையின் ஜோடனையில், அனைத்து குண்டு வெடிப்புக்களையும் முஸ்லிம்கள் செய்ததாகக் காண்பிக்கும் வண்ணம் "உருவாக்கப்பட்ட தடயங்கள்" பதிவான FIR அறிக்கை அவசர அவசரமாக மாற்றி எழுதப்பட்டது.
புத்தம் புதிய FIR அறிக்கை, "இஸ்லாமியத் தீவிரவாதி"களே இதனைச் செய்ததாகக் கூறியது. தீவிரவாத அமைப்புக்கு பேரும் சூட்டப்பட்டது.அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 16 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கையில் மேற்படி நடந்த குண்டு வெடிப்புக்கான வரைபடங்கள், பொருட்கள் இருந்ததாகவும் இவர்களே இதற்கு முன் நடந்த குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்கள் என்றும் ரிமாண்ட் விண்ணப்பத்தில் எழுதப்பட்டபின் செய்தியாளர்களை அழைத்து, அழுத்தம் திருத்தமாக செய்தி கொடுக்கப்பட்டது.
கடந்த மே 4, 2006இல், இந்த வழக்கு ATS இன் கைக்கு மாறியது.அதன்பின்னர் கடந்த ஆகஸ்ட் 24 ந்தேதியில் ATSஇன் முதல் குற்றப்பத்திரிகையின்படி பஜ்ரங்தள் மற்றும் சங் பரிவாரின் பயங்கரவாதப் பின்னணி முழுமையாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது:இந்தியாவில் உள்ள முக்கிய பள்ளிவாசல்களில் முஸ்லிம்களே வைத்துக் கொண்டதுபோல் உருவாக்கப்பட்டு உலகத்தை உலுக்கிய, பேரிழப்பை உண்டாக்கியவர்கள் பஜ்ரங்தள் குழுவினர்.
இவர்கள் நிகழ்த்திய சில பள்ளிவாசல் குண்டு வெடிப்புகள் பின்வருமாறு:
பர்பானி பகுதியில் உள்ள முஹம்மதியா பள்ளிவாசல் (நவம்பர் 2003)
ஜல்னா பகுதியில் உள்ள காதிரியா பள்ளிவாசல் (ஆகஸ்ட் 2004)
பர்பானி மாவட்டத்தில் உள்ள பூர்ணா நகரத்தின் மெராஜுல் உலூம் பள்ளிவாசல் / மதரஸா (ஆகஸ்ட் 2004)
அவுரங்காபாத் நகரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பெரும் குண்டு வெடிப்பினை நிகழ்த்துவதற்காக பஜ்ரங்தள் குழுவினால் தயாரிக்கப்பட்ட குண்டே தவறுதலாக வெடித்துள்ளது. இதில் பன்ஸே மற்றும் வேக் ஆகியோர் கடந்த மே மாதம் 2004 இல் அவுரங்கபாத் பள்ளிவாசலுக்குச் சென்று எடுத்துக்கொண்ட குறிப்புகளும், குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்கு அவ்விருவரும் கலந்தாலோசனை செய்து பேசிய பேச்சுகள் பதிவாகிய செல் போன்களும் சிக்கியுள்ளன.
இந்து இளைஞர்களைக் கவரும் வகையில் உடற்பயிற்சி மையத்தைத் துவங்கிய பன்ஸே மற்றும் பாண்டே, முஸ்லிம் எதிர்ப்பு வெறியை இந்துக்களுக்கு ஊட்டப் பல்வேறு செமினார்கள் / வகுப்புகளை நடத்தினர். அதில் குறிப்பாக முஸ்லிம்கள் என்றாலே இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் முஸ்லிம்களை அழித்து ஒழிக்க "ஏதாவது" செய்தே ஆக வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு இரத்தம் சூடேற்றும் பாடங்கள் எடுக்கப் பட்டன.
புனே, கோவா மற்றும் நாக்பூர் போஸ்லாவில் உள்ள இராணுவப் பயிற்சிக் கூடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிக்கும் பயிற்சியினை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் இவர்கள். மேற்கண்ட நகரங்களில் உள்ள RSS முகாம்களில் கராத்தே, துப்பாக்கி சுடும் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.தவறுதலாக நடந்த குண்டு விபத்தில் பலியான ஹெச்.வீ.பன்ஸேவின் வீட்டைச் சோதனையிட்டபோது, ஒட்டு தாடி, ஒட்டு மீசை மற்றும் முஸ்லிம்கள் அணியும் உடைகள் ஆகிய பொருட்கள் கிடைத்தன.
இந்த ஒட்டுமொத்த நாடகத்தின் நோக்கம் என்ன?
எங்குப் பார்த்தாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும். அதைத் தொடர்ந்து அவர்கள் சமூகத்தில் இருந்து அப்புறப் படுத்தப் படவேண்டும். அமைதி மார்க்கம் என்ற எண்ணம் கொண்டு இஸ்லாத்தில் இணையும் மக்களின் எண்ணிக்கை, இத்தகைய நிகழ்வுகள் மூலம் பெருமளவு குறைக்கப் படல் வேண்டும். மொத்தத்தில் இஸ்லாத்தின் மீதான வெறுப்பு நாடெங்கிலும் நிலவ வேண்டும் என்பதே இந்த சதித் திட்டத்தின் நோக்கம் என்பதை, கிடைத்துக் கொண்டு வரும் ஆதாரங்கள் தெளிவு படுத்துகின்றன.
ATS இன் புலனாய்வு அறிக்கை இவ்வாறு முடிகிறது:
பஜ்ரங்தள் மற்றும் சங் பரிவாரின் குறி மஹாராஷ்ட்ராவின் முஸ்லிம்களே!மஹாராஷ்ட்ரா முழுவதும் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பங்களில் மேற்கூறிய இரு அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர்."குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தியது முஸ்லிம்களே!" என்று உலகிற்குக் காண்பிக்கும் வகையில் முஸ்லிம்களில் ஒருபிரிவினர் இன்னொரு பிரிவினருக்கு தனிப்பட்ட விரோதம் காரணமாக குண்டு வைத்ததாக ஜோடிக்கப் பட்டது
ATS துப்புத் துலங்கவும் அதன் புலனாய்வில் பல்வேறு உண்மைகளை உடைத்து வெட்ட வெளிச்சமாக்கவும் உதவிய, தான் எழுதிய Communalism Combat என்ற நூலை எழுதிய தீஸ்ட்டா செட்டால்வாட் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.
"ATSஇன் இந்தப் புலனாய்வு இந்திய மண்ணில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்ந்ததில் அதன் பங்கு மிக முக்கியமானதாகவும் உள்ளது. ஹிந்துத்துவாவின் சாயம் வெளுத்த நிமிடத்தில் இருந்து ATS மீது விழுந்த கனத்த அழுத்தம் காரணமாக அதன் அறிக்கைகளில் யூ-டர்ன் அடிக்க ஆரம்பித்தன. இதில் CBI இன் நடவடிக்கைகள் கேள்விக்குரியவையாகும். இந்த வழக்கினை வலுவிழக்கச் செய்யும் அனைத்து அயோக்கியத் தனங்களையும் CBI செய்தது"ATI இன் புலனாய்வின் மூலம் வெளிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளையும் அதன் பின்னணியில் இருந்து செயல்பட்ட பஜ்ரங்தள்ளும் அதைப் பின்னணியில் இருந்து கொண்டு இயக்கிய சங் பரிவார் ஆகியன CBI யின் குற்றப்பத்திரிகையில் மாற்றி எழுதப் பட்டன. அதாவது, வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டபோது இறந்தவர்களுக்கும் எந்தவொரு பயங்கரவாதச் செயலுக்கும் தொடர்பு இல்லை என்ற தொனியில் வழக்கின் போக்கினை CBI மாற்றியமைத்தது. (The CBI chargesheet, which Setalvad procured on an RTI application, reveals that the agency simply diluted the ATS's charges of criminal conspiracy involving terrorist acts.) இதன் மூலம் மஹாராஷ்ட்டிராவில் உள்ள எந்தவொரு பயங்கரவாத அமைப்பினையும் தொடர்பு படுத்தி விசாரிக்க வழியில்லாமல், தனிப்பட்ட வழக்காக CBI மாற்றி அமைத்தது.
இதன் மூலம் பஜ்ரங்தளுக்கோ சங் பரிவாரத்தின் எந்தவொரு குழுவுக்கோ வெடிகுண்டுகள் தயாரித்து நாட்டை நிர்மூலமாக்கும் மிகப் பெரிய சதித்திட்டத்தில் எந்த விதச் சம்பந்தமும் இல்லை என்று CBI கதை கட்டியது.கான்பூரில் கடந்த ஆகஸ்ட் 24, 2008இல் சக்தி வாய்ந்த குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பஜ்ரங்தள் ஐச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ரா மற்றும் புபிந்தர் சிங் ஆகிய இருவரும் உடல் வெடித்துச் சிதறி இறந்தார்கள்.இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த கான்பூர் மண்டல ஐ.ஜி.ப்பி. எஸ்.என்.சிங், "உத்தரபிரதேசத்தின் Special Task Force சிறப்புப் படையினர் நடத்திய புலனாய்வில் நாட்டையே சுடுகாடாக்கும் பெரும் வெடிகுண்டுகளுக்கான திட்டம் தீட்டப்பட்டிருப்பது வெளியாகியுள்ளது" எனக் கூறியிருந்தார்.பஜ்ரங்தள் தயாரித்த வெடிகுண்டுகளில் உள்ள கிரானேடுகள் இராணுவப் படையில் பயன்படுத்தும் இரகங்களைச் சார்ந்தவை என்று வெளியான தகவல் இன்னும் சந்தேகங்களைக் கூடுதலாக்குகிறது.இறந்துபோன பஜ்ரங்தள் புபிந்தர் சிங்கின் லாஜ்பட் நகரில் உள்ள ஸ்டுடியோவையும் அவனது வீட்டையும் காவல் துறையினர் சோதனையிட்டபோது அதிர்ந்து போயுள்ளனர்!. அங்கே சிக்கிய புபிந்தர் சிங்கின் டயரியில் முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் ஃபெரோஜாபாத் நகரத்தில் உள்ள பள்ளிவாசல்களில் கடுமையான உயிர்ச்சேதம் விளைவிக்கும்படியாகக் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்காக வைத்திருந்த குறிப்பேடுகள் சிக்கின. இதில் அனைத்து குண்டு வெடிப்புகளும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமளான் மாதத்தில் நடத்த திட்டமிடப் பட்டிருந்தன என்பதைக் கான்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.கான்பூர் வெடிகுண்டு சம்பவத்தில் பஜ்ரங்தள்தான் குற்றவாளிகள் என்ற ரீதியில் வலுவான ஆதாரங்களுடன் வழக்கு சென்று கொண்டிருக்கும் சூழலில், அதைப் பற்றிச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் ஒரிஸா, கர்நாடகா, கேரளா என்று மாநில வாரியாக கிறித்துவர்கள் மீது வன்முறைகளை நிகழ்த்திக் கொண்டு வருகிறது பஜ்ரங்தள்.மனிதம் எனும் உணர்வை ஆழமாகக் குழி தோண்டி புதைத்து, மதத்தினைக் காரணம் காட்டி, தொடர்ந்து இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் ஹிந்துத்துவா எனும் தீய சக்தி நாட்டில் திகிலைத் தொடர்ந்து கிளப்பி வருகிறது.
இந்திய நீதித்துறையின் மீதும் காவல்துறையின் மீதும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வரும் இந்திய மக்களுக்கு, இத்தகைய ஆதிக்க சக்திகளை அடியோடு வேரறுக்கும் கடுமையான நடவடிக்கைகள் மட்டுமே ஆறுதலாய் இருக்கும்.
பஜ்ரங்தள் : பின்னணி என்ன?
ராம் ஜானகி யாத்ராவின் பாதுகாப்பிற்கு ஒரு குழு என்ற பெயரில் கடந்த 1984 இல் விஷ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கிய அமைப்பே பஜ்ரங்தள் ஆகும்.அதன் பின் கடந்த 1993 இல் உத்தரபிரதேச எல்லையைத் தாண்டி மிகப் பெரிய அளவில் விஸ்தீரணம் செய்யப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவாக பஜ்ரங்தள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.வருடங்கள் உருண்டோட, ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளின் பக்கம் பஜ்ரங்தள்ளின் கவனம் திரும்பியது. பிரச்னை தீர்க்க 'அவதாரம் எடுத்ததாக' அதன் தலைவர் ப்ரகாஷ் ஷர்மாவினால் வர்ணனை செய்யப்பட்டது.
"பசுக்களை கொல்பவர்களையும், ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என்று நாங்கள் அடையாளம் காட்டும் முஸ்லிம்களையும் இந்திய அரசு தண்டிக்காவிட்டால், அரசின் அப்பணிகளை நாங்களே கையில் எடுத்துக் கொள்வோம்!" - உத்தரபிரதேசத்தின் வி.ஹெச்.ப்பி தலைவரான ருக்குன் சிங் பாயல் பஜ்ரங்தள் பற்றிக் கூறிய வாக்கு இது!
இந்தியாவின் குருட்டுப் பார்வை!
குற்றமிழைத்தவர் சிறுபான்மையினர் என்றால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் இந்திய மாநிலங்கள், சங்பரிவாரங்கள் சட்டத்தை மீறுகையில் சும்மா இருப்பதேன்? ?
அவுட்லுக் இதழின் கேள்விக்கு சிலரின் பதில்கள்:
"கர்நாடகா மற்றும் ஒரிஸ்ஸாவில் பஜ்ரங்தள் மேற்கொண்டு வரும் வெறியாட்டங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் அரசு இயந்திரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன!. கிறித்துவர்கள் ஓட்டுவங்கிகளாக இல்லை என்பது அரசின் நினைப்பாக இருக்கலாம்."
-டொமினிக் இம்மானுவேல், டெல்லி கத்தோலிக் சர்ச் செய்தித் தொடர்பாளர்
"இது இந்திய முஸ்லிம்களின் அழிவுக்காலம் என்று சொல்லலாம். ஏனெனில் அநீதியான முறையில் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று காண்பிப்பதன் மூலம் தேசிய அளவில் ஒரு நபர் புகழ் பெறுகிறார்
-ஷாஹித் சித்திக்கி, ஆசிரியர் - நயி
மாநில அளவில் நடந்து வரும் இத்தகைய நிகழ்வுகள் அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது. இதில் சிறுபான்மையினரைக் குற்றம் சொல்வது தவறு."
-குர்சரன் தாஸ், பத்திரிகையாளர்
ஹிந்துத்துவக் குழுக்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும்போது மட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குவதற்கு என்ன காரணம்?
ஆம்
இல்லை
அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் அதனைச் சார்ந்த நோக்கம்தான் காரணம்
81%
19%
நடவடிக்கை எடுத்தால் அது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சுவதால்...
68%
32%
காவல்துறையில் பெரும்பாலோனோர் ஒருமதச் சார்புடன் நடப்பதால்...
55%
45%
இந்திய அரசு பஜ்ரங்தள்ளைத் தடை செய்ய வேண்டுமா?
69%
27%
பஜ்ரங்தள்ளின் வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற நடவடிக்கைகள், பயங்கரவாதத்தில் சேருமா?
70%
27%
thanks to : அவுட்லுக்