Wednesday, October 27, 2010

ராஸல் கைமா மன்னர் மரணம்

ஐக்கிய அரபு அமீரக நாட்டின் 7 மாகாணங்களில் ஒன்று ராஸ் அல் கைமா. இதனுடைய மன்னராக இருந்த ஷேக் ஷக்ர் பின் முஹம்மத் அல் காஷிமி இன்று (27.10.2010) காலை மரணம் அடைந்தார்.

இவருடைய மரணத்திற்கு ஜனாதிபதி ஷேக் கலிபா இரங்கல் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் ஒரு வாரத்தை துக்க தினங்களாக அறிவித்துள்ளது. ராஸ் அல்கைமாவிலுள்ள அரசு அலுவலகங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் அரசு அலுவலகங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அருந்ததி ராயை கைதுச் செய்யும் முயற்சி கண்டிக்கத்தக்கது -NCHRO

புதுடெல்லி,அக்.27:டெல்லியில் கருத்தரங்கில் கஷ்மீரைக் குறித்து உரை நிகழ்த்திய சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராயை தேசத்துரோகம் குற்றஞ்சாட்டி கைதுச் செய்ய முயல்வது அரசியல் சட்டம் அனுமதித்த அடிப்படை உரிமைகள் மீதான அத்துமீறல் என NCHRO என்ற மனித உரிமை அமைப்பின் தேசிய கமிட்டி தெரிவித்துள்ளது.

தனது கருத்தை வெளியிட்டதற்காக ஜனநாயக அரசு ராணுவ அரசு மேற்கொள்வதற்கு சமமான மனித உரிமை மீறலை நடத்துகிறது. சர்வதேச அளவில் பிரபலமான இலக்கியவாதியும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராயை கைதுச் செய்ய நடத்தப்படும் முயற்சி
எதிர்க்கப்பட வேண்டியதாகும்.

அருந்ததிராயை பொய் வழக்கில் கைதுச்செய்து சிறைக்கொட்டடியில் அடைக்க முயற்சிக்கும் மத்திய அரசின் தீர்மானம் கண்டிக்கத்தக்கது என NCHRO தலைவர் நீதிபதி ஹெச்.சுரேஷ், தேசிய ஒருங்கிணைப்பாளர் ரெனி ஐலின் ஆகியோர் இவ்வறிக்கையை வெளியிட்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

பாப்ரி மஸ்ஜித்:வீணான பேச்சுவார்த்தைகளை நிறுத்துங்கள் -முஸ்லிம் தலைவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்

பெங்களூர்,அக்:பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் சங்க்பரிவார் மற்றும் அதன் துணை அமைப்புகளுடனான எல்லாவித சமரசப் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டு முஸ்லிம் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய முடிவெடுத்திருக்கும், சுன்னி வக்ஃப்போர்டு மற்றும் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய முஸ்லிம்களில் அதிக செல்வாக்குப் பெற்ற அமைப்பான முஸ்லிம் தனியார் சட்டவாரியம் இந்த மாதம் கூட்டிய கூட்டத்தில் வைத்து சமரசத் தீர்வு காண்பதற்கான சந்தேகங்களுக்கு முடிவுக்கட்டி, எதிர்கால செயல் திட்டங்களுக்கு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படவும் செய்ததாகும்.

ஆதாரங்களை விட நம்பிகையை அடிப்படையாகக் கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பின் அபத்தங்களை திருத்துவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையும், பொறுப்பும் முஸ்லிம்களுக்கு உண்டு என அக்கூட்டம் மதிப்பீடுச் செய்திருந்தது.

கோயிலை இடித்துவிட்டு மஸ்ஜித் கட்டப்பட்டது என்ற வாதம் நிரூபிக்கப்படாத சூழலில், பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடையாக அளிக்கவேண்டும் என்ற வாதம் உள்ளிட்ட சில தனிப்பட்ட கருத்துக்களை முஸ்லிம் தனியார் சட்டவாரியம் நிராகரித்துவிட்டது.

நிலைமை இவ்வாறிருக்க, மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் இதுக்குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் சில உறுப்பினர்களின் நடவடிக்கை ஆச்சரியமளிப்பதாகவும், தேவையற்றதுமாகும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் விமர்சிக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ்குமார், ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவாளர்களான சுவாமி சிதானந்த், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோருடன் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது வீண் வேலையாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் குறித்த முஸ்லிம்களின் உரிமைக் கோரிக்கையைக் குறித்து பொதுமக்களிடம் இது சந்தேகத்தை கிளப்பவே உதவும்.

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை ராமன் பிறந்த இடம் என்பதை அங்கீகரித்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யாமலரிந்தால்தான் மட்டுமே பேச்சுவார்த்தையின் மூலம் பரிகாரம் காண இயலும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ்
தெளிவுப்படுத்தியுள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் முடிவுச் செய்துள்ள தீர்மானங்களைக் குறித்து எல்லா மாநிலங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமென முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசியத் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

ஹிந்தத்துவா அமைப்புகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தும் வாரியத்தின் உறுப்பினர்களை தலைவர்கள் சந்தித்து அந்த சிந்தனையிலிருந்து மாற்றவேண்டும் என இ.எம்.அப்துற்றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

இஸ்லாமிய வங்கி முறையை RBI அறிந்து கொள்ள பிரதமர் வேண்டுகோள்!

மலேசியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ஆய்வு செய்து அதனை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முனைய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

இஸ்லாமிய வங்கியலை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை செயல்படுத்தும் விதமாக, மாலேசிய வங்கிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்கிறேன்என்று பிரதமர் மன்மோகன் சிங் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கூறினார்.

மலேசியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து அறிய இந்தியா விரும்புகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ள பிரமர், மலேசியப் பிரதமர் முஹம்மது நஜீப் துன் அப்துல் ரஜாக்குடன் பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார்.

வட்டியில்லா வங்கி முறையான இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன

Thursday, October 21, 2010

அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை மறித்த பூமியா?

உத்தரபிரதேச மாநிலம் ஃபைசாபாத் மாவட்டத்திலுள்ள அயோத்தியில், சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு, பாபர் மசூதி - இராமர் ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அங்கு இராமர் பிறந்திருக்க முடியுமா? அல்லது அங்கு இராமருக்கு கோயில் இருந்திருக்க முடியுமா? என்பது குறித்து ரகு வம்சத்தை எடுத்துக் காட்டி ஒரு எதிர் விளக்கத்தை தருகிறார் சத்தியமங்கலம் என். நாகராஜன்.

FILE
84 வயதாகும் திரு. எஸ்.என், நாகராஜன் பொதுவுடைமை இயக்கதில் நீண்ட காலம் பணியாற்றியவர். கீழை மார்க்சிய சிந்தையாளர். அதுமட்டுமின்றி, ஆழ்வார்களின் தென் கலை வைணவப் பின்னணியும், அதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். இன்றைக்கு விவசாயத்தையும், சுற்றுச் சூழலையும் காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி வருபவர். நமது நாட்டின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அறிந்த ஒரு சீரிய சிந்தனையாளர்.

இவர் அயோத்தியில் இராமர் பிறந்திருக்க முடியாது என்று வாதிடுகிறார். அவருடைய வாதம் வருமாறு:

“அயோத்தி அரசன் தசரதனின் மனைவியான கோசலை, குசால இராஜ்யத்தின் இளவரசியாவார். இவரை தசரதன் கடத்திச் சென்றோ அல்லது கடி மனமோ (காந்தர்வ விவாஹம்) புரியவில்லை, முறைப்படியே மணம் புரிந்துள்ளார். எனவே, தொன்று தொட்டு இந்நாட்டில் நிலவிவரும் மரபுப் படி, நிறைமாத கர்பினியான ஒரு பெண், தனது தாய் வீட்டிற்குச் சென்று பிள்ளை பெறுவதைப்போல, தசரதனின் மனைவியான கோசலையும் தனது தாய் வீடான (இராஜ்யமான) குசால மன்னன் அரண்மனைக்குச் சென்று அங்குதான் இராமனை பிரசவித்திருக்க முடியும்.

எனவே, அயோத்தியில்தான் இராமன் பிறந்தார் என்பதற்கு அடிப்படையேதுமில்லை. எந்தப் புராணத்திலும் அதற்கான ஆதாரமும் இல்லை.

இரண்டாவதாக, அயோத்தி புண்ணிய பூமியா? என்ற கேள்வியும் உள்ளது. இராவணனின் பிடியில் இருந்து சீதையை காப்பாற்றி வந்த இராமன், அவளுடைய கற்பின் தூய்மையை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்ய முற்பட்டபோது, இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசத்தை நிறைவேற்றிய இடம் அயோத்தியாகும். இந்த விவரம் வால்மீகி இராமயணத்தில் உள்ளது. அக்னிப் பிரவேசத்தின் போது சீதையை அவளுடைய தாயான பூமிதேவி தன்னுள் எடுத்துக் கொண்டாள் என்று அனைத்துப் புராணங்களும் கூறுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்கது ரகு வம்சம். காளிதாசர் எழுதிய ரகு வம்சத்தில் அயோத்தி ஒரு புனித தலமாக சித்தரிக்கப்படவில்லை. அதை சீதை மறித்த பூமியாகவே காட்டுகிறார் காளிதாசர். ரகு வம்சத்தில் உத்தர காண்டம் மிக முக்கியமானது. அதில் இந்த விவரம் உள்ளது.

தனது மனைவி சீதை மீது இராமன் சந்தேகம் கொண்ட நிலையிலேயே, சீதையை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார் வால்மீகி. இராமனின் பிள்ளைகளான லவ, குசா இருவரும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில்தான் பிறந்தனர். அங்குதான் வளர்ந்தும் வந்தனர். அவர்கள் 6 வயதைக் கடந்த நிலையில் அவர்களை இலக்குவன் அயோத்திக்கு அழைத்து வருகிறார். அப்போது வால்மீகியும் உடன் வருகிறார்.

அப்போது லவ, குசா இருவரும் யாருக்குப் பிறந்தவர்களோ என்ற சந்தேகத்தை ஒருவன் எழுப்ப (வண்ணான் என்று கூறுகின்றனர்), சீதை அக்னி பிரவேசம் செய்ய முற்படுகிறார். அதை இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசம் செய்த நிலையில், அவளுடைய தாயான பூமிதேவி சீதையை தன்னோடு அழைத்துக் கொண்டு பூமிக்குள் சென்று விடுகிறாள்.

தங்களது தாய் மறித்த இடத்தில் நாங்கள் வாழ் மாட்டோம் என்று கூறிவிட்டு, லவ, குசா இருவரும் அயோத்தியை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களோடு அயோத்தி மக்களும் வெளியேறி விடுகின்றனர். அத்துடன் அயோத்தியே காலியாகிவிடுகிறது.

அயோத்தியை விட்டு வெளியேறி, வேறொரு இடத்தில் வாழ்ந்துவந்த குசாவின் கனவில் வரும் அயோத்தியின் தேவதை, “உனது தந்தை ஆண்ட பூமி இன்று வனமாகிவிட்டது. அங்கு புலிகளும் மற்ற கொடிய விலங்குகளும் தான் வாழ்கின்றன. அங்கு நீங்கள் வந்து மீண்டும் அயோத்தியை புனர் நிர்மாணம் செய்யுங்கள” என்று கூறியதா காளிதாசர் எழுதியுள்ளார்.

இந்த விவரத்தை ரகு வம்சத்தில் 13வது சர்க்கத்தில் காளிதாசர் வர்ணிக்கிறார். “அதேதரே சப்த ரகுப்பிரவீராக... என்று தொடங்குகிறது அந்த பாடல்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டப் பிறகு டெல்லியில் தீனதயாள் உபாத்தியாய ஆய்வு மையத்தில் ‘அக்டோபர் புரட்சியும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்து, ஜே.டி.சேத்தி துவக்கி வைத்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசியபோது இதை நான் தெரிவித்தேன். 13வது சர்க்கத்தை அப்படியே அங்கு நான் மனப்பாடமாக ஒப்பித்து விளக்கமும் அளித்தேன். அந்த நிகழ்ச்சியில் பின்னாளில் பிரதமராக வந்த ஐ.கே.குஜ்ரால், நேபாள நாட்டின் இந்திய தூதராக இருந்த பீமல் மிஸ்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பர்தன், சுப்ரத்தா பானர்ஜி, இமிதியாஸ் அகமது, சுபாஷ் சந்திர போசின் சகோதரர் போஸ், பாரதிய ஜனதா கட்சியின் நானாஜி தேஷ்முக், எம்.எம்.ஜோஷி, கே.ஆர்.மசானி ஆகியோரெல்லாம் இருந்தனர். நான் கூறியதற்கு ஒருவரும் எதிர்க்கருத்து கூறவில்லை.

ரகு வம்சத்தில் உத்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ள விவரம் இது. ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த உத்தரகாண்டம் பகுதியே இருக்காது. அதனை கவி கம்பர் தவிர்த்துவிடுகிறார். ஏனெனில் உத்தரகாண்டத்தைக் கூறினால், சீதை மறித்ததைக் கூற வேண்டும், அது இராமனுக்கு இழுக்காக ஆகுமல்லவா?

மீனவன் குகனோடு ஐவரானோம் என்று கூறியவன் இராமன், ஜடாயுவிற்கு அண்ணனாக நின்று ஈமக் கிரியை செய்தவர் இராமன். சபரியின் எச்சிலை உண்கிறார். அவளைத் தாயாராக பாவிக்கிறார். சுக்ரீவனையும், விபீடனனையும் தம்பிகளாக ஏற்றுக் கொள்கிறார். இப்படிப்பட இராமனுக்கு, உத்தரகாண்டத்தைக் கூறுவதால் பெருமை குறைந்துவிடாதா? எனவே தவிர்த்து விடுகிறார் கம்பர்.

கம்பன் காட்டிய இந்த இராமனைத்தான் தமிழ்நாட்டு மக்கள் வழிபடுகின்றனர். இதனை தமிழும், சமஸ்கிருதமும் அறிந்த ஒரு உபய வேதாந்தியால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். நான் அந்த பாரம்பரியத்தில் வந்தவன். இந்த அறிதலை அத்வானியிடமிருந்தோ அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரிடமிருந்தோ எதிர்பார்க்க முடியாது” என்று கூறுகிறார் திரு.எஸ்.என். நாகராஜன்.

Tuesday, October 5, 2010

இஸ்லாத்திற்கு எதிரானவரா பெரியார்?



பெரியார் இந்து மதத்திலிருந்து வெளியேறிச் சென்றவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வர நினைத்திருந்தார் - இஸ்லாம் குறித்து விமர்சன சிந்தனைகளைக் கொண்டிருந்தார் - அவர் இஸ்லாத்தைப் பாராட்டியதாகக் கூறுவது தவறு என்றெல்லாம் கருத்துப்பட பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, "பெரியாரோடு ஒரு பயணம்' என்ற கருத்தரங்கில் பேசியதை, பேராசிரியர் அ. மார்க்ஸ் மற்றும் சன் டி.வி. வீரபாண்டியன் ஆகியோரிடத்தில் எடுத்துக்காட்டி அவர்களது கருத்தை கேட்டோம். அவர்கள் தெரிவித்த கருத்துக்களை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம். (-ஆர்)

""நபிகளின் வாழ்க்கையை அறியும்போது, எனக்கு இஸ்லாமிய உணர்வு ஏற்படுகிறது என்றார் பெரியார்''
- - அ. மார்க்ஸ்

கொளத்தூர் மணியா அப்படிச் சொன்னார். நான் நம்பவில்லை. கௌத்தூர் மணி நேர்மையான கருத்துக்களை திரிக் காமல் பேசக் கூடியவர் என்றே நான் நம்பு கிறேன். இந்தப் பேச்சை பதிவு செய்திருக் கிறீர்களா? என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் தவறாக சொல்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இருந்த போதிலும் இப்படித்தான் அவர் சொன்னார் என்று நீங்கள் சொல்வீர்களானால் அதற்கான நான் பெரிதும் வருந்துகிறேன்.
பெரியார் குறித்து ஒரு தவறான நம்பிக்கை ஏற்படுத்த மணி முயற்சிப்பது வருந்தத்தக்கது. பெரியார் மிகத் தெளிவாக இஸ்லாம் குறித்து பேசியிருக்கிறார். எல்லா மதங்களையும் ஒழிக்க மாநாடு போடும் நீங்கள், இஸ்லாத்தை மட்டும் ஆதரிப்பது ஏன் என்று கேட்கப்பட்ட கேள் விக்கு, ""எல்லா மதங்களும் ஒழிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் ஏதாவது ஒரு மதம் இருக்க வேண்டுமானால் அது இஸ்லாமாகத் தான் இருக்க வேண்டும் என்று பதில் சொன் னவர் பெரியார். ஆனால் அவர் இந்து மதத்தை விட்டு வெளியே போனவர்களை இந்து மதத் திற்கு கொண்டு வர நினைத்திருந்ததாகச் சொல் வது வேதனை மட்டுமல்ல வியப்பாகவும் இருக்கிறது.
அதற்கான உரிய ஆதாரங்களை மணி தர வேண்டும். பெரியார் இஸ்லாத்தை தீண்டத் தகாதவர்களுக்கு மட்டும்தான் பரிந்துரைந்தார் என்று சொல்வதும் விஷமத்தனமானது. பெரி யாரிடம் எல்லோரையும் இஸ்லாத்திற்கு வரச் சொல்லும் நீங்கள் ஏன் இஸ்லாத்திற்கு வரவில்லை என்று கேட்டபோது, ""இஸ்லாத்தில் இல்லாமல் இருந்தால்தான் நான் இந்து மதத்திற்கு எதிராக விமர்சிக்க முடியும்'' என்று பதில் சொன்னவர் அவர்.
அது மாத்திரமல்ல, இஸ்லாமிய நம்பிக்கைக ளில் ஒன்றான நபிகள் நாயகம் தான் இறுதி இறைத் தூதர் என்கிற கருத்தையும் ஏற்றுக் கொண்டவர் பெரியார். அவருக்குப் பின் அந்தத் துறையில் யாரும் இல்லாததனால் அவர் இறுதித் தூதர் என்கிற கருத்து என்று சொன்னார். அது போலவே ஹஜ் யாத்திரை போவதைக் கூட அவர் ஏற்றுக் கொண்டு பேசியிருக்கிறார். இந்து மதத் தைப் போல எல்லாப் பாவங்களையும் செய்து விட்டு, கோவில் குளத்திற்குப் போய் குளித்தால் போதும் என்கிற அர்த்தத்தில் ஹஜ் யாத்திரை செய்யப்படுவதில்லை. அது ஒரு மதக் கடமையாக நபிகள் தோன்றிய இடத்திற்கு சென்று வருதல் என்கிற பொருளில் மேற்கொள்ளப்படுகிறது என விளக்கம் அளித்தார்.

எனவே இஸ்லாம் குறித்து பெரியார் தொடர்ச் சியாகப் பாராட்டும் வகையிலேயே பேசியிருக் கிறார். அது மாத்திரமல்ல, கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது என்கிற கருத்து வந்தபோது கிறிஸ்தவ மத்திலும் சாதி உள்ளது. இஸ்லாத்திற்கு மாறு வதே சிறந்தது என்றும் அவர் மொழிந்துள்ளார்.

அம்பேத்கர் புத்த மதத்திற்குச் செல்வது என்கிற முடிவெடுத்தபோது கூட இஸ்லாத்திற்குச் செல்வது சிறந்தது என்கிற கருத்தை பெரியார் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை அவர் விமர்சித்தது என்பது இன்று உண்மையான முஸ்லிம்கள் எல்லோரும்
விமர்சிக்கக் கூடிய அம்சங்களைத்தான் எடுத்துக் காட்டாக தர்காவை வணங்குவது, கந்தூரி விழா எடுப்பது, பேய் பிசாசு ஓட்டுவது முதலான மூட நம்பிக்கைகள் இஸ்லாத்தில் புகுந்திருப்பதைத் தான் அவர் விமர்சித்தார். இவை தவிர நான் அறிந் தவரை இஸ்லாத்தில் அவர் விமர்சித்திருப்பது பெண்களுக்கு ஹிஜாப் என்னும் முகத்திரை போடுகிற அம்சத்தைத்தான் அவர் கண்டித்தார்.
எனவே பெரியார் இஸ்லாத்திற்கு எதிரானவர் என்று சித்தரிப்பது அடிப்படையில் பெரியாரை புரிந்து கொள்ளாத ஒன்றாகும். அது மாத்திர மல்லாமல் சமீபத்தில் வந்த ஆணைமுத்து தொகுதிகளில் பெரி யார் ஓரிடத்தில், ""நபிகளின் வாழ்க் கையை அறியும் போது, எனக்கு இஸ் லாமிய உணர்வு ஏற்படுகிறது'' என்கிற பொருள்பட குறிப்பிட்டுள்ளார். பெரியார் இருந்த வரைக்கும் எந்த அம்சங்களிலும் அவர் இந்துத்து வாவாதிகளுடன் சமரசம் செய்து கொண்டதில்லை. ஆனால் சமீபத்தில் முல்லைப் பெரி யார் அணை விஷய மாக சாலை மறியல் போராட்டம் நடந்தபோது, இந்து முன்னணி அமைப்பு, பெரியார் திராவிடர் கழ கம் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தியது இங்கே குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் நான் பெரிதும் மதிக்கும் மணி, இவ்வாறு பேசியிருப்பது எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை உறுதி செய்கிறது.

ஆனாலும் இப்போதும் கூட மணி அப்படி பேசியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன். பெரியார் கடைசி பல ஆண்டுகள் பொது மேடைகளில் கைலியுடன் தோன்றி னார் என்பதைக் கூட நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். அதை வெறும் உடல் நோயின் விளைவு என்று நான் கருதவில்லை. எத்தனை அரசியல்வாதிகள் இப்படி யான ஒரு நிலையில் கைலியுடன் பொது மேடைகளில் தோன்றக் கூடியவர்களாக இருப்பார்கள்?

தயவு செய்து நீங்கள் மணியிடம் இன்னொரு முறை இப்படித்தான் பேசினீர்களா என்று கேட்டுப் பாருங் கள். அவர் இல்லை என்று சொன் னால் நான் மகிழ்வேன். அவர் மீதுள்ள மரியாதைகளை நான் தக்க வைத்துக் கொள்வேன்.

""இஸ்லாம் மார்க்கம் உங்களுக்கு ஒரு வழிமுறையாக இருக்கும் என்றார் பெரியார்''
- வீரபாண்டியன்

இஸ்லாம் குறித்து பெரியாரின் கருத்துக்களை பெரியாரியவாதிகள் இருட் டடிப்புச் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இஸ்லாம் என்பது தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தீண்டப்படாமல் கிடந்த மக்களுக்கான ஒரு மாற்ற மருந்து என்கிற கருத்தை பெரியார் கொண்டிருந்தார். அதே வேளையில் மதம் மாறுவது பற்றி அம்பேத்கர் ஆலோசனை கேட்டபோது, ""நீங்கள் போய் புத்த மதத்தில் சேருங்கள், நீங்கள் முடிவு செய்து விட்ட விஷயத்தில் நான் தலை யிட விரும்பவில்லை. ஆனால் சாதாரண மாய் போகதீர்கள். கூட்டம் கூட்டமாகப் போனால்தான் உங்களை அங்கே மதிப் பார்கள். பெரும் கூட்டத்தை திரட்டிக் கொண்டு செல்லுங்கள். ஆனால் அதே வேளையில், நான் பிறந்த - நான் வாழ்ந்து கொண்டிருக்கிற மதத்தில் இருக்கிற பிரச்சனை களை சரி செய்வதற்காக இந்த மதத்திற்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியில் போனால் அதைப் பற்றி விமர்சனம் செய்யும் உரி மையை நான் இழந்து விடுவேன். அதனால் கடைசி வரையில் இங்கேயே இருந்து உள்ளிருப்புப் போராட் டம்தான் நடத்துவேன். இங்கி ருந்து கொண்டு தான் இவர்களிடத்தில் சண்டை செய்வேனே தவிர மதம் மாற மாட்டேன்'' என்று சொன்னார்.
அதே நேரத்தில், இந்து மதத்தின் பிற்போக் குத் தனங்கள், இங்கிருக்கிற தீண்டாமைக் கொடுமை, ஏற்றத் தாழ்வுகள் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக - தீண்டத்தகாதவர்கள் சேரிகளில் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்கு வடிகாலாக, ""நீங்கள் இஸ்லாத்திற்குப் போங்கள். அங்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லை. சாதிப் பிரிவுகள் இல்லை. அந்த மார்க்கத் தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். உங்களுக்கு அது ஒரு வழி முறையாக இருக்கும்'' என்று அவர்க ளுக்கு அவர் பரிந்துரை செய்தார்.

ஆனால், எல்லா மக்களையும் மதம் மாற்றுவது, மதத்திற்கு மாறிப் போவது என்கிறபோது தான் மாறத் தேவையில்லை என்றும் பெரியார் சொன்னார். எனவே பெரியாரிய வாதி இஸ்லாம் குறித்து பெரியார் சொன்ன கருத்துக்களை இருட்ட டிப்புச் செய்யத் தேவையில்லை. ஒரு வேளை பேராசிரியர் பெரியார் தாசன் அவர்கள் அண்மையில் இஸ் லாத்திற்கு மாறிப் போனதைப் பற்றி திராவிட இயக்கப் பத்திரிகைகளில் கடுமையான விமர்சனங்கள் வந்ததை நான் படித்தேன். அவர் மாறிப் போனது ஒரு பெரியாரியவாதி, ஒரு பகுத்தறிவாளர் என்று சொன்ன நாத்திகவாதி. அப்படி இஸ்லாத் திற்கு மாறிப் போகிறாரே என்கிற கோபத்தில் திராவிட இயக்கப் பத்தி ரிகைகள் கடும் விமர்சனம் செய்ததை நான் பார்த்தேன். அந்த அடிப்படை யில் அவர்கள் இது போன்ற கருத் துக்களை சொல்லியிருக்கலாம்.

அதே நேரத்தில் இஸ்லாம் என் பது உட்பிரிவுகள் ஏதுமில்லா மல், மனிதர்களை சாதிப் பிரிவுகள் ஆக்கி விட்டு, பேதப்படுத்துகிற வேலை யைச் செய்வதில்லை. அங்கே சமத் துவம் இருக்கிறது என்கிற பெரியா ரின் கருத்திலிருந்து பெரியாரியவாதி கள் மாறுபடவும் வாய்ப் பில்லை.
பெரியாரியவாதிகள் எனப்படு வோர் உயர்சாதி மேலாண்மையை, உயர்சாதிக்காரர்களின் கொடுமை களை எதிர்த்துப் போராடுவதில் பின்வாங்குகிறவர்கள் அல்ல. அதே நேரத்தில் அவர்கள் எந்த மதத்திற் காகவும் பிரச்சாரம் செய்ய மாட் டார்கள். மதம் என்பது மனிதர் களுக்கு "அபின்' என்கிற கருத்துக் கொண்டவர்கள் தான் அவர்கள். அதுதான் அவர்களின் கருத்தாக்கம். பல சமூகப் பிரச்சனைகள் வருகிற போது, உதாரணமாக பாபர் மஸ் ஜித் இடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு போன்ற பிரச்சனைகளின் போது இஸ்லாமியச் சகோதரர்க ளோடு அவர்கள் கைகோர்த்து நின்றதை நாடு பார்த்தது. பிரச்சனை என்றால் அவர்கள் வருவார்களே தவிர மதப் பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபடுவ தில்லை. இதுதான் அவர்க ளின் நிலைப்பாடு என்று நான் புரிந்து கொள்கிறேன்.

Sunday, October 3, 2010

இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல -- பாபர் மசூதி தீர்ப்பு

1. இராமன் இந்தியாவில் நம்பப்படும் ஆயிரக்கணக்கான சாமிகளில் ஒருவன். ஆனாலும், இராமனே முதன்மையான நாயகன் என்பதுபோல பிற்காலத்தில் நம்பவைக்கப்பட்டான். (இந்தியவின் பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் இராமன் ஒரு முதன்மை தெய்வம் அல்ல).

2. அயோத்தி இராமர் கோவிலை இசுலாமிய மன்னர்கள் எவரும் இடிக்கவில்லை. இராமர் கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் வாழ்ந்தவர் துளசி தாசர். அவர் எழுதிய ஆவாதி மொழி இராமாயணத்தில் - கோவில் இடிக்கப்பட்டது பற்றி எந்த குறிப்பும் இல்லை.

3. குறிப்பிட்ட அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துத்வ சங்கப்பரிவாரம் உருவாக்கிய ஒரு கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

4. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதச்சண்டையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இசுலாமிய மன்னர்கள் இந்துக்கோவிலை இடித்ததாக கட்டுக்கதைகளை பரப்பினர். அதனை பின்னர் இந்துத்வ தீவிரவாதிகளும் பயன்படுத்தி வருகின்றனர். (ஒருமன்னன் மற்றொரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அங்குள்ள கோவில்களை இடிப்பதோ, எரிப்பதோ, கொள்ளையடிப்பதோ வழக்கம். இதனை பல இந்து மன்னர்களும் செய்துள்ளனர்.)

எனினும், பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

5. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பாபர் மசூதிக்குள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராம் லல்லா சிலைகள் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டன. இந்த அநீதியான செயலை இந்திய அரசு தடுக்கத்தவறியது மட்டுமின்றி, திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தவும் தவறிவிட்டது.

6. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதிச்செயலால், 1992 டிசம்பர் 6 அன்று, இந்திய அரசின் பாதுகாப்பில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

7. அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம் - அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்துத்வ பயங்கரவாதிகளின் அநீதியான செயல்களை அங்கீகரித்துள்ளது.

படிப்பினை: இந்திய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் அல்ல.

ஒரு குற்றச்செயல் தண்டனைக்குறியதா அல்லது போற்றுதலுக்குறியதா என்பது குற்றமிழைப்பவர் சார்ந்திருக்கும் சாதி, மதத்தைப் பொறுத்தது.

தேங்க்ஸ் டு : பசுமை பக்கங்கள்...

கருப்பு கோட் எதற்கு , காவி உடை போதுமே





பாபர் மசூதி பற்றி தீர்ப்பு வந்துள்ளது பா ஜா கா மற்றும் இந்து முண்ணனியினர் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் ,தீர்ப்பின் சாராம்சம் இந்து மதத்தினுடைய நம்பிக்கை , அதாவது ராமர் கோவில் அங்கு இருந்தது என்று ஒருநம்பிக்கையாம் அதனால் இந்துக்களுக்கும் நிலத்தை பகிர்ந்து கொடுக்கிறார்களாம் . சில கேள்விகள்

1 வெறும் நம்பிக்கை மட்டுமே ஆதாரமாய் இருக்கும் பட்சத்தில் , இப்பொழுது இருக்கும் ஒரு ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு இங்கு ஒரு கிருத்துவ சர்ச் இருந்தது என்றால் நீதிமன்றம் , கிறுத்துவர்களுக்கு நிலத்தை பாதியாய் தந்து விடுமா ??????
2 நம்பிக்கை மட்டுமே தீர்ப்பின் சார்மசமாய் இருக்கும் பட்சத்தில் , சட்ட மன்றம் இருக்கும் இடத்தில் என் மதத்தினுடைய கோவில் இருந்தது என்று அதை இடித்தால் நீதிமன்றம் , மற்றும் கரசேவகர்கள் ஒத்துக்கொள்வார்களா ?????3 மசூதியை இடித்ததற்கு வீடியோ ஆதாரம் முதல் இருக்கும் பொழுது அதை எல்லாம் ஒரு பொருட்டாய் கருதாமல் அங்கு முன்பே ராமர் கோவில் இருந்தது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் ????? 4 அப்படி பார்க்கும் பொழுது ஒவொவொரு இடமுமே 10000 வருடங்களுக்கு முன்பு வேறு போல் இருக்கும் அதற்க்கு
ஏற்றார் போல் அனைத்து தீர்ப்பும் எழுதப்படுவது எவ்வளவு முட்டாள் தனம் .
5 ராமர் இருப்பது உண்மை என்றால் சேது சமுத்திர திட்டம் போன்ற திட்டங்கள் அம்பேலா ???????
6 கோவிலை இடித்து கட்டியதால் அது மசூதியே அல்ல என்கிறார்களே , கோவிலை இடித்ததற்கு ஆதாரம் உண்டா ?????
பார்ப்பனர்கள் கடல் கடந்து போகக்கூடாது என்று வேதம் சொல்கிறது , இன்று US போன்ற வெளிநாடுகளில் இருப்பது
பார்ப்பனர்களே , அதற்காக அவர்கள் பார்ப்பனர் இல்லை என்று ஒத்துக்கொள்வார்களா ?????
7 நான் ஒரு வீடை இடித்து விட்டு , முன்பு ஒரு காலத்தில் அது என் தாத்தாவின் வீடு அங்கே அவர் படம் எல்லாம் இருக்கிறது என்று சொன்னால் நீதி ஏற்றுக்கொள்ளுமா ???
8 வருணாசிரமம் தூக்கிப்பிடிப்பதை போல் உள்ளதே நீதி இதற்க்கு எதற்கு நீதி மன்றம் , கருப்பு கோட் எதற்கு , காவி உடை
போதுமே ...................................??????

தேங்க்ஸ் டு : வெண்ணிற இரவுகள்....!

Saturday, October 2, 2010

வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் அணுகாமல் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பு!

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு:

வரலாற்று ஆவணங்களின்
அடிப்படையில் அணுகாமல்
ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பு!

தொல். திருமாவளவன் அறிக்கை!


அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது. அநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படை. அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம், அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல், ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.


450 ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும், அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949இல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி, அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும், 1992இல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால், ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும். இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது. மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.

அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது. பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும், இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப்பெரும் மோடியாகும். ஏற்கனவே நம்பிக்கை இழுந்து விரக்தியில் வாழும் இசுலாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.

இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது சனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகின்றது. பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரசு அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற சனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.

இவண்

(தொல். திருமாவளவன்)

அயோத்தி விவகாரம் - அற்புதமான கட்டப்பஞ்சாயத்து

கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவை இம்சித்துக் கொண்டிருந்த ஒரு பிரச்சனைக்கு சரியான தீர்ப்பினை வழங்கிவிட்டார்கள் நீதியரசர்கள். இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டு விட்டது, சமநிலையான தீர்ப்பு என அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் கருத்தினை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். இது போன்ற தீர்ப்பினை இதுவரையிலே இந்திய நீதிமன்றங்கள் அளித்தது இல்லை என்றால் தான் இந்த தீர்ப்பு குறித்து நாம் ஆச்சரியப்படவேண்டும். ஆனால் வழக்கமாக வரும் அடிப்படையிலே இந்த தீர்ப்பும் அமைந்திருப்பது தான் வருத்தப் படவைக்கிறது. இனிமேல் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் மசூதிகளை இடிக்கலாம். அந்த வழக்கும் நீதிமன்றத்திடம் செல்லும். ஏம்பா ரெண்டு பேரும் அடிச்சிக்கிறீங்க? இந்தாங்க ஆளுக்குப் பாதியா பிரிச்சிக்கிங்க. அதுவும் இடித்தவர்களுக்கு முக்கிய இடங்களாகப் பிரித்து விட்டு இடிபட்டவனுக்கு கக்கூஸ் இருந்த இடம் மற்றும் காம்பவுண்ட் இருந்த இடங்களை ஒதுக்கிக் கொடுங்கள் என இனிமேல் இந்தியாவில் இருக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் தீர்ப்புகள் வெளியாகலாம்.


அதிலும் நீதிபதிகளில் முக்கியமானவரான நீதியரசர் டிவி.சர்மா கீழ்க்கண்டவாறு அறிவிக்கிறார்,.

* சர்ச்சைக்குரிய இடம் இராமர் பிறந்த இடம் தான்
* அங்கு பாபரால் கட்டிடம் எழுப்பப்பட்டது
* அது எந்த வருடம் என்பது தெரியவில்லை. ஆனால் அது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாக இருந்தது. மசூதிக்கு உரிய அம்சங்களே அதில் இல்லை. எனவே அதை மசூதியாக கருதமுடியாது.ஏற்கனவே இருந்த பழமையான கட்டிடத்தை இடித்து விட்டுத்தான் இந்த கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது..

என தன் கருத்தினைச் சொல்லி இருக்கிறார். இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கு வேட்டு வைத்து தங்களின் அரசியல் வெறியை தீர்த்துக் கொண்ட ஒரு கூட்டத்தினருக்கு மேலும் வலுசேர்க்கும் இந்த தீர்ப்பு.



அடித்தவனுக்கு 100 ரூபாய் அபராதமும், அடிவாங்கியவனுக்கு 200 ரூபாய் அபராதமும் இனிமேல் நீதிமன்றங்களில் விதிக்கப்படலாம். சட்டம் ஒரு இருட்டறை என அன்றைக்கே அறிஞர் அண்ணா சொல்லிவிட்டார். இந்த தீர்ர்பு குறித்து திராவிடர் கழகத்தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் கீழ்க்கண்டவாறு தெரிவித்து இருப்பது கொஞ்சம் நமக்கு ஆறுதலை தருகிறது.

சட்டக் கோர்ட்டா? நம்பிக்கைக் கோர்ட்டா?

புராண கால கற்பனைகளுக்கும், இதிகாச கால நம்பிக்கைகளுக்கும் மதப் பூச்சு பூசப்பட்டதாலேயே வெறும் நம்பிக்கை அடிப்படையில் ராமர் அங்குதான் பிறந்தார் என்றெல்லாம் இதுபோன்ற தீர்ப்புகளில் எழுதப்படுவது, நீதிமன்றங்களை - சட்ட கோர்ட்டுகள் (Courts of Law) என்பதற்குப் பதிலாக, நம்பிக்கை கோர்ட்டுகளாக (Courts of belief and Faith) ஆக்குவதாக அமைந்துள்ளது. இதன் தீய விளைவு நிகழ்காலத்தில் மட்டுமல்ல, வருங்காலத்திலும் நியாய விரோத தீர்ப்புகள், புற்றீசல்கள்போல் கிளம்ப வழிவகுத்து விடும்.







இது போன்ற வார்த்தைகளிலேயே நடுநிலையாளர்கள் இந்த தீர்ப்பினை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற தீர்ப்புகள், மக்கள் கடைசி கடைசியாக நம்பி வரும் நீதிமன்றங்களின் மீது ஒரு நம்பிக்கையின்மையையே ஏற்படுத்துகிறது. நீதியரசர் சொல்வதைப் போல அந்தக் கட்டிடம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது அல்ல. ஆனால் முழுக்க முழுக்க இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக ஆக்ராவில் கட்டப்பட்டிருக்கும் தாஜ்மஹாலை மட்டும் ஏன் தொல்லியல் துறை, சுற்றுலா துறை பாதுகாக்கிறது என தெரியவில்லை.





இதை எப்படி சமநீதியான தீர்ப்பு என ஏற்றுக் கொள்ள முடியும்? உதாரணமாக‌

ஒரு கிராமத்தில் "A" என்பவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரீடத்திலே வீடு கட்டி வாழ்ந்து வருகிறார் என வைத்துக்கொள்வோம். ஒரு நாள் அந்த வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த "B" அங்கே தன் பண்டபாத்திரங்களை வைத்துவிட்டு இது என் வீடு என்கிறார். வழக்கு நாட்டாமையிடம் போகிறது. வழக்கை மிகவும் நேர்மையாக விசாரித்த நாட்டாமை, அப்படியா சங்கதி!! வீடு யாருக்கும் இல்லை, இழுத்துப் பூட்டு என்கிறார். வீடு இழுத்துப் பூட்டப்படுகிறது. இந்த நிலையில் "C" என்பவர் இந்த நிலம் என் தாத்தா காலத்து பூர்வீகம், எனவே நான் தான் அதற்கு உரிமையாளர் என சொல்கிறார்.அ தையும் நாட்டாமை ஏற்றுக்கொள்கிறார். ஒருநாள் "B" பஞ்சாயத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்கிறார்.அதாவது என்னுடைய பாத்திரங்களை நான் கழுவி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது துருபிடித்து விடும் என கேட்கிறார். அப்படியா அப்படியானால் நீ ஜன்னல் வழியாக திறந்து அதை செய்து கொள் என்கிறார் நாட்டாமை.

உடனே அந்த வீட்டின் உரிமையாளர் "A" நாட்டாமையிம் அவருக்கு மட்டும் ஜன்னலை திறந்து விடுவது மாதிரி எனக்கும் கொஞ்சம் கதவைத் திறந்து விட்டா நான் அந்த வீட்டுக்கு ஒட்டடை அடித்துக் கொள்வேனே என கேட்க, அதெல்லாம் முடியாது வழக்கு பஞ்சாயத்துல இருக்கு என்கிறார் நாட்டாமை. கொஞ்ச நாளில் "B" தன் ஆட்களை அழைத்து வந்து அந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்குகிறார். செய்வதறியாத "A" நாட்டாமையிடம் முறையிட அவரை தேடி அலைகிறார். ஆனால் வீடு இடிக்கப்படும் வரை நாட்டாமை தலைமறைவாகி விடுகிறார். சரி வீடு போனா போகட்டும் அந்த நிலமாவது மிஞ்சுமே என மீண்டும் நாட்டாமையை தேட அப்போதும் அவர் கிடைக்கவில்லை. அதற்குள்ளாக "B" தன் பாத்திரங்களை வைப்பதற்கு ஏற்ப ஒரு தற்காலிகமாக கொட்டகை அமைத்துக் கொள்கிறார்.


இப்போது மீண்டும் வழக்கு நாட்டாமையிடம் வருகிறது. இப்போது நாட்டாமை சொல்கிறார், கொஞ்ச நாள் ஆறப்போட்டு அப்புறமா பாத்துக்கலாம் என்று. நீண்ட நாள் குறித்து தன்னுடைய கட்டப்பஞ்சாயத்தைக் கூட்டி நாட்டாமை ஒரு அழகான தீர்ப்பினைச் சொல்கிறார். அதாவது "A" இருந்தது வீடே அல்ல. அது ஒரு பேய் பங்களா. ஆனாலும் அவருக்கு உரிமை உண்டு. "B" தான் இப்போது அந்த இடத்தை பராமரித்து வருகிறார். எனவே அதிலே அவருக்கும் உரிமை உண்டு. இது "C" யின் தாத்தா காலத்து நிலமாம். எனவே அவருக்கும் அதிலே உரிமை உண்டு. ஆக இதை மூன்றாக பிரித்து "B" பாத்திரம் வைத்திருக்கும் முக்கிய இடமான ஹால் மற்றும் அறைகளை அவருக்கும், தாத்தா காலத்து வாரிசுதாரரான "C"க்கு ஹால் மற்றும் முற்றப்பகுதிகளும், ஆதாரமேயில்லா விட்டாலும் போனா போவுது "A" க்கு மாட்டுக்கொட்டகை மற்றும் காம்பவுண்டு சுவர் பகுதியும், அதிலும் மூன்றாக‌ பிரிக்கும் போது இடம் போறாவிட்டால் "A"க்கு அவர் வீட்டு வாசலில் கொஞ்சமாக கிடக்கும் ஏரிப்புறம் போக்கையும் சேர்த்து அவர் கணக்கை செட்டில் செய்ய தீர்ப்பளிக்கிறேன் என ஒரு சாதாரண கட்டப்பஞ்சாயத்து கிராமத்து நாட்டாமை சொன்னா நாமெல்லாம் ஏற்றுக் கொள்வோமா?

இதுபோன்றவற்றையெல்லாம் பார்க்கக் கூடாது என்று தானோ என்னவோ நீதி தேவதை தன் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறாள் போலும். ஆனாலும் இன்னமும் நீதியின் கண்கள் மங்கிவிடவில்லை. தூரத்தில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தை நோக்கி மேல் முறையீடு செய்யப்படுகிறது.அதிலாவது சரியான நீதி கிடைக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உச்ச நிதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். காரணம் நாம் வாழும் நாட்டின் இறையான்மைக்கு எந்த வகையிலும் உலக அரங்கில் குந்தகம் வந்துவிடக் கூடாது. உலக அரங்கில் ஜார்ஜ் புஷ் மற்றும் ராஜபக்சே போன்றவர்கள் குற்றவாளிகளாக கைகட்டி நிற்கும் நிலை நம் நாட்டுக்கும் வந்து விடக்கூடாது. எனவே மேல்முறையீட்டுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர் நோக்க வேண்டும். அதுவும் இப்படியே வந்தால் நாம் மனம் உவந்து நமக்கென வழங்கப்பட்ட இடத்தையும் கோவிலுக்காக கொடுத்து விட்டு ஒதுங்கி விடவேண்டும். சகோதரத்துவமான இந்தியாவின் நிலையை சீர்குலைக்க சதி செய்யும் சண்டாளர்களின் சூழ்ச்சிகளில் இனியும் சிக்கி யாரும் பலியாகிட வேண்டாம். பொருமையே சிறந்த ஆயுதம். இறைவன் பொருமையாளர்களுடன் இருக்கிறான்.

நிஜாம்

Wednesday, September 29, 2010

பெரியாரைப் புரிந்து கொள்ளாத பெரியாரிஸ்டுகள்



இன்று எல்லாத் துறையிலும் போலிகள் அதிகரித்து விட்டனர். அரசியல், இலக்கியம், ஆன்மீகம் என இல்லாமல் பகுத்தறிவு தளத் திலும் போலிகளின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கிறது.

சாமியார்களும், சன்னியாசிகளு மாகிய காவி உடைதாரிகள் மட்டுமல்லாமல், "கருஞ்சட்டை' பெருமை பேசும் பெரியாரிஸ்டு களிலும் போலிகள் நிறைந்து காணப்படுகின்றனர். அதிர்ச்சியோ, ஆச்சரியமோ கொள்ளாதீர்கள்.... இது நிஜம்!

பகுத்தறிவு தந்தை என அழைக் கப்படும் திராவிடக் கழக நிறுவனத் தலைவர் பெரியார் ஈ.வே. ராமசாமியின் பிறந்த நாள் பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் - தமிழகம் முழுவதும் பலராலும் நடத்தப்பட்டுக் கொண்டிருக் கின்றன. அந்த வகையில் "கீற்று' இணைய தளம் குழுவினர் ஏற்பாட் டில் ""பெரியாரோடு ஒரு பயணம்'' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் 18-09-2010 அன்று சென்னை தேவநேய பாவணர் நூலக கருத் தரங்கு வளாகத்தில் நடைபெற்றது.

பெரியார் நடத்தி வந்த குடியரசு பத்திரிகையின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு கால வரிசைப்படி சுமார் 6 பேர் உரையாற்றும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது.
பெரியார் திராவிட கழகத் தலைவர் கௌத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட மூத்த பெரியாரிஸ்டுகள் பங்கேற்று பங்கேற்று உரையாற்றினர்.

பெரியார் இன இழிவு நீங்கவும், தீண்டாமைக் கொடுமை, சாதீய இழிவுகள் நீங்கவும் இஸ்லாமே நன் மருந்து எனப் பரிந்துரைத்தார். இஸ்லாம்தான் சாதியை வேரறுத்து சகோதரத்துவத்தையும், சமத்துவத் தையும் தருகிறது என்றெல்லாம் இஸ்லாம் குறித்து தனது மேடைப் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் வெளிப்படுத்தினார்.
"குடியரசு' பத்திரிகை தொகுப்பு களின் செய்திகளைப் பார்த்தால், பெரியார் அனைத்து விதமான இழிவுகளிலிருந்தும் விடுபட இஸ் லாம் மார்க்கத்தை தீர்வாகச் சொல்லியிருப்பது விளங்கும். தனது பேச்சுக்களில் எழுத்துக்களில் இஸ் லாத்தை வெகுவாகப் பாராட்டியுள் ளார். மதம் கூடாது, கடவுள் இல்லை என்ற பரப்புரை செய்த அவர், சமத்துவ - சகோதரத்துவ அடிப்படையில், பகுத்தறிவு சிந்த னைக்கு ஒட்டிய இறை நம்பிக்கை கொண்ட இஸ்லாத்தைப் பாராட்டி பேசிய செய்தி இன்று பலராலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருகிறது.
பெரியாரைப் பின்பற்றுகிறோம், பெரியாரின் வாரிசுகள் நாங்கள் தான் எனக் கூறுவோர் எல்லாம் கூட - இஸ்லாம் குறித்த சிந்தனை களை பேச மறுக்கின்றனர். பெரியா ரின் படம் தான் அவர்களுக்குத் தேவை! பாடம் இல்லை! அவரால் திரட்டப்பட்ட லட்சங்கள் தேவை - அவரது லட்சியங்கள் தேவை இல்லை என்ற நோக்குடன் செயல் படுகின்றனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் நிறை வுரையாற்றிய பெரியார் தி.க. தலைவர் கொளத் தூர் மணியின் பேச்சுத் தான் நம்மை ஆச்சரியப்படுத்தியது.

""பெரியார் இஸ்லாத்தைப் பாராட்டியதாக கூறுவது தவறு. அவர் எல்லா மதங்களையும் விமர்சித்துள்ளார். அவர் ஒன்றும் ஏமாளி அல்ல! இஸ்லாத்தைப் பாராட்ட... அவர் தீண்டாமைக் கொடுமையில் சிக்கித் தவித்தவர்க ளுக்கு மட்டும்தான் இஸ்லாத்தைத் தீர்வாகச் சொன்னார். அது குறித்து இன இழிவு ஒழிய இஸ்லாம் என புத்தகம் கூட வந்துள்ளது. சுயமரி யாதைக்காரர்களுக்கும், பெண்ணுரி மையை விரும்புவர்களுக்கும் இஸ் லாத்தை அவர் பரிந்துரைக்க வில்லை.
மேலும் துருக்கியில் புரட்சி நிகழ்த்திய கமால் பாஷாவை பெரி யார் பாராட்டிப் பேசினார். கமால் பாஷா குர்ஆனை தடை செய்தவர், பள்ளிவாசலைப் பூட்டியவர்.
அவரைப் பாராட்டியதிலிருந்தே பெரியார் இஸ்லாம் குறித்த விமர்சன சிந்தனை கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. மேலும் பெரி யார் இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்குப் போனவர்களை எல்லாம் திரும்பவும் இந்து மதத் துக்கே கொண்டு வர நினைத்திருந் தார்'' என்பதாக கொளத்தூர் மணி பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் பெரியாரிஸ் என கூறிக் கொள்ளும் ஒருவரது வாயிலிருந்து இப்படியான வார்த் தைகள் வெளிப்பட்டதும், பார்வை யாளராக பங்கேற்றிருந்த நமக்குப் பேரதிர்ச்சி! அப்பொழுதுதான் நமக்கு ஒன்று விளங்கியது. போலிகள் ஆன்மீகத் துறையில் மட்டுமல்ல, அறிவுத் துறையிலும் ஊடுருவியிருக்கின்றனர் என்று!
பெரியாரின் கொள்கைகளைச் சொல்வதாகக் கூறிக் கொண்டு அவரது லட்சியங்களை இருட்ட டிப்புச் செய்யக் கூடியவர்களாக அவர்கள் உலவுகின்றனர். பெரியா ரின் கோடிக்கணக்கான சொத்துக் களுக்கு வாரிசுரிமை கொண்டாடும் கி. வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் மட்டுமல்லாமல், லட்சியங்களுக்கு உரிமை கொண் டாடுவதாகக் கூறும் கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடக் கழகத்தினரும் கூட பெரியாரின் உண்மையான கொள் கைகளை - லட்சியங்களை இருட்ட டிப்புச் செய்வதில் குறியாக இருக் கின்றனர்.
வெளியில் பேசும் போது, சாதீய ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் பாடுபடுகிறோம் என கூறிக் கொள்ளும் அவர்கள் ஒவ்வொருவ ரும், அந்தரங்கத்தில் மிகப் பெரிய சாதீய இந்துத்துவா உணர் வாளர்களாக இன்னும் கூர்மையாகச் சொல்வதானால், சாதி வெறியர்களாக - தீவிர இந்துக்களாக உள்ளனர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

சாதி, தீண்டாமை ஒழியக் கூடாது என்பதில் இந்துத்துவ சக்திகளுக்கு நிகராக இவர்களும் உழைத்துக் கொண்டிருக்கின்றார் களே என்ற சிந்தனை எழுகிறது. திகவின் சார்பில் பெரியார் பெய ரால் நடத்தப்படும் கல்லூரிகள், பல்கலைக் கழகத்தில் இதுவரை சமூக நீதி அடிப்படையிலான 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்படவே இல்லை.
பெரியாரின் சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளை தலை மைப் பொறுப்பில் தாழ்த்தப்பட்ட வர் ஒருவர் கூட நியமிக்கப்பட வில்லை என கூப்பாடு போடும் பெரியார் திராவிட கழகத்தின் தலைமை பொறுப்பில் மட்டும் தலித்களுக்கு வாய்ப்பளிக்கப்பட் டுள்ளதா என்றால், இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.
இடஒதுக்கீட்டில் தான் இப்படி என்றால் பெண்ணுரிமை விஷயத்தி லாவது கி. வீரமணியும், கொளத் தூர் மணியும நேர்மையாக நடந் துள்ளார்களா என்றால் இல்லை என்பதுதான் பதிலாகும். பெரியார் தி.கவின் தலைமைப் பொறுப்பில் எத்தனை பெண்கள் உள்ளனர்? கொளத்தூர் மணி குடும்பத்துப் பெண்கள் முழு உரிமையுடன் நடத்தப்படுகிறார்களா? என்றால் இல்லை! இல்லை.... இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.
சரி, பெரியார் விரும்பியபடி சுய மரியாதை உணர்வுடனாவது இவர்கள் நடந்து கொள்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை.

""ஏண்டா வெங்காயம்... சாமின்னு சொல்லி கல்லுக்கும் - சிலைக்கும், மாலையும், மரியாதையும் செய்து பூஜை செய்கிறாயே இது முட்டாள் தனமாக, பகுத்தறிவுக்குப் பொருந் தாத செயலாக உனக்குப்படவில் லையா?'' எனக் கேட்ட பெரியா ருக்கே, இவர்கள் சிலை அமைத்து பூஜை செய்வது சுயமரியாதையா? பகுத்தறிவா?
இப்படி எல்லா வகையிலும் பெரி யாருக்கு எதிராக - அவரது கருத் துக்களுக்கு விரோதமாக செயல்பட் டுக் கொண்டு போலி பெரியாரிஸ்டு களாக உள்ளவர்கள், பெரியாரின் இஸ்லாமிய சிந்தனைகளை இருட் டடிப்புச் செய்வது மட்டுமல்லாமல், திரிவு வேலைகளும் செய்யத் துவங்கி இருக்கின்றனர்.

பெரியார் இஸ்லாத்தைத் தீண் டத்தகாத தலித்துகளுக்கு மட்டும் தான் பரிந்துரைத்தார் என்பது எவ் வளவு பெரிய பொய்? திரிபு வாதம்? தலித்களுக்கு மட்டுமா அவர் சொன்னார்! ஒட்டு மொத்த திரா விட இனமும் இழிவிலிருந்து விடு பட இஸ்லாம் தான் தீர்வு என்ப தாகத்தான் பெரியார் கூறியுள்ளார்.
மேலும் கொளத்தூர் மணி கூறு வது போல், இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்கு மாறியவர்களை மீண்டும் இந்துத்துவாக மாற்ற முயற்சித்தார் என்பது அபாண்டம்! அநியாயம்! அக்கிரமம்! அயோக்கி யத்தனம்!
இப்படி ஒரு சிந்தனையை பெரி யார் எப்போதுமே கொண்டிருக்க வில்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும் பெரி யார் துருக்கி கமால் பாஷாவை ஆத ரித்தார் என்பதன் மூலம் இஸ் லாத்தை அங்கீகரிக்கவில்லை என்ப தாக கொளத்தூர் மணி கூறுவது அறிவுக்குப் பொருந்தாத விஷயம்.

"குடியரசு' பத்திரிகையில் பெரி யார் மட்டுமே கட்டுரைகள் எழுத வில்லை. பல நேரங்களில் குத்தூசி குருசாமியும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்படி குத்தூசி குருசாமி எழுதிய பல கட்டுரைகள் பெரியார் எழுதியதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதுண்டு. இது குறித்து குத்தூசி குருசாமியே வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.
துருக்கி கமால் பாஷா குறித்த கட்டுரை குத்தூசி குருசாமி எழுதி யதுதானே தவிர பெரியார் எழுதிய தில்லை. பெரியார் இஸ்லாத்தைப் புரிந்து கொண்டிருந்த அளவுக்கு குத்தூசி புரிந்து கொண்டவரல்ல என்பது திராவிட இயக்க ஆய் வாளர்களுக்கு எளிதாகப் புரியும். பெரியார் இஸ்லாத்தை தீர்வாகக் குறிப்பிட்டு பல மேடைகளில் பேசி யுள்ளதால் அதனைத்தான் அவரது கருத்தாகக் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் மார்க்கத்தையும், முஸ் லிம் சமுதாயத்தையும் நுட்ப மாக ஆராய்ந்து தெளிவாக பெரி யார் புரிந்து கொண்டிருந்தது போன்று பெரியாரை - அவரது சிந்தனை களை, லட்சியங்களை முழுமையா கத் தெளிவாகப் புரிந்து கொண்ட வர்கள் முஸ்லிம்கள்! முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் பெரியாரின் லட் சியங்களை பரப்புரை செய்யத் துவங்கினால் எத்தனை "மணி'கள் வந்தாலும், சதிகள் பல செய்தாலும் இஸ்லாமிய எழுச் சியை - திராவிட இன மறுமலர்ச்சி யைத் தடுக்க முடியாது. முஸ்லிம் அமைப்புகள் - இயக்கங்கள் பெரியாரின் சிந்தனை களை பரப்புரை செய்வது காலத் தின் கட்டாயம்.
- பாபா

Monday, September 20, 2010

காதலனை நம்பி ஏமாந்தாள்: விபசார விடுதியில் விற்கப்பட்ட பெண்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் ரஷ்மி (21). இவர் அந்த பகுதியில் RSS னுடைய smart friend சேர்ந்த கிருஷ்ணா என்ற வாலிபரை சந்தித்தார். முதல் சந்திப்பே அவர்களுக்குள் காதலை ஏற்படுத்தியது. கிருஷ்ணா ஐதராபாத்தை சேர்ந்தவர். சினிமா கலைஞர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவரோடு நெருங்கி பழகிய ரஷ்மி அவர் இல்லை என்றால் தான் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்.

ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள் ளும் படி காதலனிடம் கேட்டார். கிருஷ்ணாவும் சம்மதித்தார். ஆனால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பெற்றோருக்கு தெரியாமல் காதலனுடன் ரஷ்மி வீட்டை விட்டு வெளியேறினார். ரஷ்மிக்கு அன்று தான் 18-வது பிறந்த நாள். ஐதராபாத்துக்கு அழைத்து சென்ற கிருஷ்ணா அங்கு ஒரு வீட்டில் தங்க வைத்தார்.

பிறந்த நாள் அன்றே காதலனை கரம் பிடிக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ரஷ்மி திளைத்து போனார். திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக சில பொருட்களை வாங்கி விட்டு வருவதாக கிருஷ்ணா வெளியே சென்றார். அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை.
அதன் பிறகு தான் ஒரு விபசார கும்பலிடம் விற்கப்பட்டுள்ளோம் என்பது ரஷ்மிக்கு தெரிய வந்தது.

தேடிவரும் வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் அடி விழுந்தது. அந்த வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்ட ரஷ்மி பலருக்கு விருந்தாக்கப்பட்டாள். 2 வருடங்களாக கட்டாயப்படுத்தி விபசார தொழிலில் தள்ளப்பட்டார். வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பியபடி ஒத்துழைக்காவிட்டால் அடித்து துவைப்பார்கள்.
அந்த விபசார பங்களாவில் இருந்து தப்பி செல்ல உதவும்படி அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கெஞ்சினார். ரெய்டில் ஈடுபட்ட போலீஸ்காரரின் மனிதாபிமான உதவியால் விபசார கும்பலிடம் இருந்து ரஷ்மி மீட்கப்பட்டார்.

பல ஆண்டுகள் பட்ட வேதனை கலந்த நினைவுகளுடன் ரஷ்மி தற்போது சென்னையில் ஒரு மறுவாழ்வு மையத்தில் தங்கி உள்ளார்.

Saturday, September 18, 2010

கற்புதான் குருதட்சணையா? கொந்தளிக்கும் மாணவிகள்!



நமது செல்போனில் பதட்டத்தோடு வந்த அந்தப் பெண்குரல்...’’""நர்ஸிங் கல்லூரி மாணவி சாய்னா பேச றேன். நக்கீரன் மூலம் எங்க கல்லூரி தாளாளரின் முகத்திரையைக் கிழிக்க விரும்பறேன். உங்களைச் சந்திக்கணும்'' என்றார் அழுகை கலந்த குரலில்.

"பதட்டப்படாதேம்மா. எப்ப வேண்டு மானாலும் சந்திக்கலாம்'’என்று ஆறுதல் படுத்தினோம். அடுத்த கொஞ்ச நேரத்தில் தன் வாப்பா அப்துல் ரஹீத்துடன் நம்மை சந்தித்தார் சாய்னா. என்ன நடந்தது? என்றோம்.

தனக்கு நேர்ந்த சங்கட அனுபவங்கள் குறித்து விவரிக்க ஆரம்பித்தார் சாய்னா. ""எனக்கு சொந்த ஊர் குடியாத்தம். வாப்பா.. எங்கவூர் மசூதியில் வேலை பாக்கறார். நர்ஸிங் படிச்சி... அன்னை தெரசா மாதிரி... நோயாளிகளுக்கு சேவை பண்ணணும் என்பதுதான் என் லட்சியம். எங்க வாப்பாவும் இதுக்கு ஓ.கே. சொல்லிட்டார். இங்க தமிழ்நாட்டில் இருக்கும் நர்ஸிங் கல்லூரிகள் நன்கொடைகளை அதிகமா கேட்டுச்சி. அப்ப என் தோழிகள்... ஆந்திர மாநில கல்லூரிகள்ல நன்கொடை குறைவு. அதேபோல்.. கட்டணத்தை வசதிக்குத் தகுந்த மாதிரி... கொஞ்ச கொஞ்சமா கட்டலாம்னு சொன்னாங்க. அதைக்கேட்டு சந்தோசமான நான்... திருப்பதியில் இருக்கும் வேதா நர்ஸிங் கல்லூரிக்கு அப்ளிகேஷன் போட்டேன். எனக்கும் சீட் கிடைச்சிது. ரொம்ப சந்தோசமா... அந்தக் கல்லூரியில் போய்ச் சேர்ந்தேன். அங்க என் சந்தோசம் ஒருவாரம் கூட நீடிக்கலை. காரணம், அங்க சேர்ந்தப்பவே என் சீனியர் மாணவிகள் என்னைத் தனியாக் கூப்பிட்டு... "இங்க இருக்கும் கரஸ்பாண்டண்ட் வேதநாயகம் மோசமான ஜொள் பார்ட்டி. அவர்ட்ட ரொம்ப... ஜாக்கிரதையா இருக்கணும்'னு எச்சரிக்கை கொடுத்தாங்க.


அவங்க சொன்னமாதிரியே... கரஸ்பாண்டண்ட் வகுப்பில் டபிள் மீனிங்கில் பேசினார். சிலநேரம் வல்கராவும் கமெண்ட் அடிப்பார். ஹாஸ்டல தங்கி இருக்கும் மாணவிகளை அடிக்கடி வீட்டுக்குக் கூப்பிட்டு.. வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வார். அப்ப அவர் நிறைய சில்மிஷங்களும் பண்ணுவாராம். பல மாணவிகள் இதைச் சொல்லி அழுதிருக்காங்க. அவர் பலவிதமா எனக்குத் தூண்டில் போட்ட போதும் ரெண்டு வருசம் எப்படியோ சமாளிச்சிட் டேன். இப்ப ஃபைனல் இயர். இதற்கிடையில் இதே கல்லூரியில் படிக்கும் எங்க மாமா பையனை எங்க வீட்டில் எனக்கு நிக்காஹ் பண்ணிவச்சிட்டாங்க. எக்ஸாம் நெருங்கிய நேரத்தில் பலருக்கும் ஹால் டிக்கட் கொடுத்த கரஸ்பாண்டண்ட் எனக்கு மட்டும் கொடுக்காம இழுத்தடிச்சார்.. அதைக் கேட்டு நான் அவர் அறைக்குப் போனேன். எடுத்த எடுப்பிலேயே "நீயும் உன் ஹஸ்பண்டும் ஒழுங்கா எக்ஸாமை எழுதி நல்லபடியா ஊர்ப்போய்ச் சேரணும்னா... நான் சொல்றதைக் கேட்கணும். உன்னை நினைச்சி நான் பலநாள் தூங்கலை. உன் அழகு என்னை பைத்தியமா ஆக்கிடிச்சி. ஒருநாள்.. ஒரே ஒருநாள் என் ஆசையை நீ தீர்த்துவச்சா... அடுத்த நிமிஷமே ஹால் டிக்கட் தருவேன். இல்லைன்னா... உன்னைப்பத்தி தப்புத் தப்பா வதந்தி பரப்பி... உன்னை வாழவிடாமப் பண்ணிடு வேன்'னு வில்லன் கணக்கா.. வெட்கமில்லாமப் பேசினார். எனக்கு அழுகை வந்துடுச்சி. அப்படியே வெளில ஓடிவந்துட்டேன்...''’என்று வழிந்த கண்ணீரைத் துடைத்துகொண்டவர்..

""மேதாவி வேசத்திலிருக்கும் அந்த அயோக்கியனின் முகமூடியைக் கிழிக்கணும். என்னோட எக்ஸாமை நான் நல்லபடியா முடிச்சி.. நர்ஸ் சேவையை வாழ்நாள் முழுக்கத் தொடரணும். இதுதான் என் விருப்பம். நம்ம வேலூர் கலெக்டர்ட்ட கூட... அந்த கேடுகெட்ட கரஸ்பாண்டண்ட் பத்தி புகார் கொடுத்திருக்கேன். எனக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன்''’’ என்றார் அழுத்தமாக.
அந்தக் கல்லூரி கரஸ்பாண்டண்ட் வேதநாயகத்தைப் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும்.. ’அவர் பிஸி. வெளியே போயி ருக்கிறார்’ என்ற பதிலையே காலர் ஐ.டி.போல சொல்லிக் கொண்டிருந்தது அந்தக் கல்லூரி நிர்வாகம்.

இது குறித்து வேலூர் ஆட்சியர் ராஜேந்திரனிடன் நாம் கேட்டபோது ‘""சாய்னாவின் புகார் திடுக்கிடவைத்தது. இது குறித்து சித்தூர் கலெக்டருக்கு இவரது புகார் மனுவை அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருக்கிறேன். கல்லூரிக்குள்ளேயே இப்படி காமப் பிசாசுகள் என்றால்... சங்கடமாகத்தான் இருக்கிறது''’என்றார் வருத்தம் இழையோட.

இந்த நிலையில்.... நமது நண்பர் ஒருவர் மூலம் கடலூர் பகுதியைச் சேர்ந்த அந்த இரண்டு கல்லூரி மாணவிகளும் நம்மைச் சந்தித்தனர். அவர்கள் முகத்தில் கவலையான கவலை. அவர்களின் புகாரும் இதே ரகம்.

அவர்களை விசாரித்தபோது... ""கடலூரில் இருக்கும் ஒரு கிறிஸ்த்தவக் கல்லூரியில் படிக்கிறோம். எங்க கல்லூரியில்.. தனது பெயரில் அருமையை வைத்திருக்கும் வசதிப் பேராசிரியர்... துறைத் தலைவரா இருக்கார். அவரிடமும் ஜானின் மகன் என்ற பொருள் வரக்கூடிய பெயரையுடைய பேராசிரியரிடமும் நாங்க படாதபாடு படறோம். புராஜக்ட் ஒர்க்குக்கு கையெழுத்து வாங்கப்போனா.... அனுசரிச்சிப்போனாதான் கையெ ழுத்துன்னு கட்டிப்பிடிக்கறாங்க. மிரட்டி மிரட்டியே தப்புத்தப்பா நடந்துக்கறாங்க. குறிப்பா துறைத் தலைவர் வீட்டில் பெரும்பாலும் அவர் மனைவி இருக்கமாட்டாங்க. அதனால் மகள் வயசு உள்ள மாணவிகளை எல்லாம் பலவந்தமா வீட்டுக்கு கூட்டிட்டுப்போய்.... விதவிதமா தன் ஆசையைத் தீர்த்துக்குவார்.

அழகான மாணவிகளைப் பார்த்தா எதையாவது சொல்லி... தங்கள் சபலத்தை தீர்த்துக்கறதில் இவங்க ரெண்டுபேருமே கில்லாடிங்க. போன வருசம் டூர் போனப்ப... இந்த மன்மதப் பேராசிரியர்கள் பல மாணவிகளைத் தனித்தனியா கூட்டிட்டுப்போய் அங்க இங்க தொட்டுத் தடவி... எல்லா அசிங்கமும் பண்ணி... செல்போன்லயும் படம்பிடிச்சாங்க. அதே போல் இப்ப வந்திருக்கும் பாதரும்.. அந்த விஷயத்தில் பிளேபாயா இருக்கார். படிக்கவரும் மாணவிகள் வாழ்க்கையில் இவர்கள் விளையாடுவது எந்த வகையில் நியாயம்? இவங்க அட்டூழி யம் நாளுக்கு நாள் அதி கரிச்சிக் கிட்டே இருக்கு. இவங்களை யாரு தட்டிக்கேட்கறது.?''’’ என குமுறி யவர்கள்....

""எங்களுக்கு மட்டும் இல்லை. திருவண்ணாமலை கடவுள் பெயரில் இருக்கும் அந்த கல்வி உலகத்தில் படிக்கும் மாணவிகளையும்... சில பேராசிரிய மிருகங்கள் வேட் டையாடிக்கிட்டு இருக்கு. என் தோழி ஒருத்தியை போனில் பேசச் சொல்றேன் அவ கிட்டயும் விசாரிங்க''’ என்றபடி அந்த மாணவியை செல்போன் லைனில் பிடித்துக்கொடுத்தனர்.

லைனில் வந்த அந்த மாணவி...

""எங்க கல்லூரியில் மகிழ்ச்சியானவரும்... அரச மோகனமானவரும் பேராசிரியரா இருக்காங்க. இவங்க மாணவிகளை பாலியல் ரீதியாய்ப் பாடாய்ப் படுத்திக்கிட்டு இருக்காங்க. அவங்க எந்த மாணவியைக் குறிவைக்கிறாங்களோ அவங்க.. இவங்க கூப்பிடற இடத்துக்கு வந்தாகணும். இல்லைன்னா... எல்லா வகையிலும் பழிவாங்கிடுவாங்க. சமீபத்தில்... நாங்க நெட்டை குட்டைன்னு பட்டப்பெயர் வச்சிக்கூப்பிடும் ரெண்டு மாணவிகளை அவங்க வற்புறுத்தி... பிச்சாவரத்துக்குக் கூட்டிட்டுப்போனாங்க. குட்டையான மாணவிக்கு தங்கமான பெயர். ஆள் சிவப்பா, கொஞ்சம் புஷ்டியா இருப்பா. அந்த நெட்டை மாணவிக்கோ ஒரு மிடுக்கான கவிஞரின் பெயர். ஆள் கருப்பா இருந்தாலும் வளர்ந்து வாட்டசாட்டமா இருப்பா. இவங்களை அங்க இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. அப்ப ஒரு பேராசிரியர் தன் செல்போன்ல... ஒரு மாணவியை அங்க அங்கமா... படம் எடுக்க... அந்த மாணவி... என் வாழ்க்கையை ஏன் சார் வீணாக்கறீங்கன்னு அழுதிருக்கா. அவ அழுகையைப் பார்த்து பயந்துபோன அந்த பேராசிரியர்... சரி இதோ டெலிட் பண்ணிடறேன்னு அவ எதிர்லயே அழிச்சிருக்கார். அப்பவும் அந்தப் பொண்ணு... அழிச்சாலும் படத்தை ரெகவரி பண்ணமுடியும். எனக்கு எதிர்காலத்தில் பிரச்சினை வந்தா என்ன பண்றதுன்னு... கதற... "உனக்கு நிறைய மார்க் போடறேன். ஏன் கவலைப்படறே. இதை நானும் மறந்துடறேன், நீயும் மறந்துடு'ன்னு சொல்லியிருக்கார். பாடம் போதிக்கக்கூடிய புனிதமான தொழிலில் இருப்பவர்கள் செய்யக்கூடிய செய்கையா இது?''’என்றார் கொதிப்பாய்.

இவர்கள் சொன்ன தகவல்களைக் கேட்டு கலவரமான நாம்.. சிதம்பரத்தில் இருக்கும் அந்த எஸ்.ஐ.யைத் தொடர்பு கொண்டு... இது குறித்தெல்லாம் கேட்க...

""கல்விக்கூடங்கள் சமீபகாலமா காமக்கூடங்களா மாறிக்கிட்டு வருது. பிச்சாவரத்துக்கு போறதோட இதே சிதம்பரத்தில் இருக்கும் லாட்ஜ்களில் ரூம்போட்டும் மாணவிகளை இப்படிப் பட்ட பேராசிரியர்கள் வேட்டை யாடறாங்க. ஒரு தடவை நாங்க ரெய்டுக்குப் போனப்ப.... ஒரு லாட்ஜில் மாணவிகளோட தங்கியிருந்த பேராசிரி யரைக் கையும் களவுமா பிடிச்சோம். அந்த மாணவிகள்... வீட்டுக்குத் தெரிஞ்சா தற்கொலை பண்ணிக்குவோம்னு கதற அவங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பி வச்சோம். அந்தப் பேராசிரியருக்கு மட்டும் நாலு அறைகொடுத்து எச்சரிச்சோம். இதேபோல்.... இன்னொரு ரெய்டில் டி.டி.யில் ஒர்க் பண்ணும் 35 வயசு பேராசிரியை ஒருத்தர்... 19 வயசு மாணவ னோட மாட்டினாங்க. அந்தப் பேராசிரி யை இனி இப்படி செய்யமாட்டேன். என்னை விட்டுடுங்கன்னு காலில் விழுந்து கதறினாங்க.

பையனோ மேடம்தான் வற்புறுத்தி அழைச்சிக்கிட்டு வந்தாங்கன்னு கண்ணைக் கசக்கினான்.... அடக் கருமமேன்னு ரெண்டுபேரையும் துரத்திவிட்டோம். காலம் எப்படியெல்லாம் மாறிப்போச்சு பாருங்க'' என்று அதிரவைத்தார்.

இத்தகைய கொடு மைகளுக்கு யார் முற் றுப்புள்ளி வைப்பது?

Wednesday, September 15, 2010

காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு

‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர். பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.

காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பதை அலசி ஆராயும் முன், காஷ்மீர் மாநிலம் கடந்த இருபது ஆண்டுகளில் எப்படி ஒரு திறந்தவெளி இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரில் 3,00,000 இந்திய இராணுவச் சிப்பாய்களும், தேசியத் துப்பாக்கி படைப் பிரிவைச் சேர்ந்த 70,000 சிப்பாய்களும், மத்திய போலீசு படையைச் சேர்ந்த 1,30,000 சிப்பாய்களும் – ஆக மொத்தம் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலப் போலீசுப் படை இந்த எண்ணிக்கையில் சேராது.

காஷ்மீரில் ‘அமைதி’யை ஏற்படுத்த இத்தனை இலட்சம் துருப்புகள் தேவை என்றால், எத்தனை ஆயிரம் தீவிரவாதிகள் அம்மாநிலத்தில் இருக்கக்கூடும் என உங்கள் மனம் கணக்குப் போடலாம். அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள், அங்கே வெறும் 660 தீவிரவாதிகள்தான் இருப்பதாக சமீபத்தில் இந்திய இராணுவம் அறிக்கை அளித்துள்ளது.

‘‘தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தை முசுலீம் தீவிரவாத அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கி நடத்துவதாகத் தெரியவில்லை; இளைஞர்களும் தாய்மார்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடுகிறார்கள்; போராடுபவர்கள் கைகளில் துப்பாக்கிகள் கிடையாது; மாறாக, தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்; இப்போராட்டத்தை போலீசைக் கொண்டே கட்டுப்படுத்திவிட முடியும்; இராணுவம் தேவையில்லை” எனச் சில நடுநிலையான பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர். உண்மை இப்படியிருக்க, அம்மாநிலத் தலைநகர் சீறிநகரை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமென்ன?

ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் இறக்கிவிடப்பட்டிருக்கும்பொழுது, காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது. அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?

****

தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பு, எப்படிபட்ட அநீதியை காஷ்மீர் மக்களுக்கு இழைத்து வருகிறது தெரியுமா?
1990-ஆம் ஆண்டு தொடங்கி 2007-ஆம் ஆண்டு முடியவுள்ள 17 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள், இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல் ‘காணாமல்’ போய்விட்டனர். அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது.

அம்மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் மீது, இந்திய அரசின் அனுமதியின்றி அம்மாநில அரசு புகார்கூடச் செய்ய முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தேசிய நலன் என்ற பெயரில் இராணுவச் சிப்பாய்கள் நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றி காஷ்மீரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் புகார் கொடுக்க வேண்டும் என்றால், அவர் முதலில் “தான் இந்திய தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை” என்று நிரூபித்தாக வேண்டும்.

காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைச் சந்தித்து வரும்பொழுது, மைய அரசோ கடந்த பதினேழு ஆண்டுகளில் இராணுவச் சிப்பாய்களுக்கு எதிரான வெறும் 458 வழக்குகளைத்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. இதே காலத்தில் இந்திய இராணுவத்தின் மனித உரிமைப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1,321 வழக்குகளில் 54 வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

காஷ்மீர் மக்கள் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான், இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும், இப்போராட்டங்களின்பொழுது நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இப்படி காஷ்மீர் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் இந்திய அரசையும் அதனின் இராணுவத்தையும் வெளியேறக் கோரி அம்மக்கள் போராடுவது தேச விரோதச் செயல் என்றால், கொலையும், கொள்ளையும், பாலியல் வன்புணர்ச்சியும்தான் தேச நலனின் பொருளாகிவிடுகிறது.

காஷ்மீர்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 'காணாமல் போனவர்களின்' புகைப்படங்களைப் பார்ர்த்து விம்மியழும் காஷ்மீரத்துத் தாய்

இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் இந்து தேசிய வெறிதான் இப்பிரச்சினையின் மூல காரணமாக இருக்கிறது என்பதும்.

இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி ஜம்மு-காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தாமல் மறுத்தது; இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சில தனியுரிமைகளை நீர்த்துப் போகச் செய்தது; காங்கிரசு கும்பல் தனது சுயநலனுக்காக அம்மாநிலத்தில் நடத்திய ஆட்சி கவிழ்ப்புகள், தேர்தல் மோசடிகள் – இவைதான் 1980-களின் இறுதியில் காஷ்மீரில் ஆயுதந்தாங்கிய போராட்டம் வெடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தன.

வரலாற்றை அவ்வளவு பின்னோக்கிப் பார்க்கத் தேவையில்லை. இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துபோய்விட்டதாகச் சொல்லப்பட்ட பின்னும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஷ்மீரில் அடுத்தடுத்து இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதற்குக் காரணம் பாகிஸ்தானா, இல்லை இந்திய தேசியவாதிகளா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அம்மாநிலத்தை ஆண்டு வந்தபொழுது, அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கிப் போவதற்காக 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கப் போவதாக அக்கூட்டணி ஆட்சி அறிவித்தது. அமர்நாத் யாத்திரை முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வருடாந்திர நிகழ்ச்சி நிரலாக மாறிப் போனதால், காஷ்மீர் மக்கள் பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். உடனே, ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெளிமாநிலங்களில் இருந்து ஜம்முவிற்கு ஆட்களைத் திரட்டிவந்து எதிர் போரட்டத்தை நடத்தியதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது ஒரு சட்டவிரோத பொருளாதார முற்றுகையைத் திணித்தது. காஷ்மீர் மக்கள் இம்முற்றுகையை முறியடிக்கும் வண்ணம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பது என்ற போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியான பின்னர், நில ஒதுக்கீடு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இப்போராட்டத்திற்குப் பின் நடந்த தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிட்ட காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் தேர்தலுக்குப் பின் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. இந்தச் சந்தர்ப்பவாத ஆட்சிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளும் முகமாக, “காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்; அத்துமீறல்கள் குறித்த உண்மை கண்டறியும் குழு நிறுவப்படும்” என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார், முதல்வர் ஒமர் அப்துல்லா. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை என்பது ஒருபுறமிருக்க, காஷ்மீர் மக்களின் மீதான இராணுவத்தின் பிடியும், அடக்குமுறையும் கொஞ்சம்கூடக் குறையவில்லை என்பதையும் மக்கள் கண்டனர்.

ஷோபியான் என்ற சிறுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது; கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஜஹித் ஃபாரூக் என்ற 16 வயது சிறுவன் நடுத்தெருவில் நாயைச் சுடுவது போல எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; கடந்த ஏப்ரல் மாதம் தேசியத் துப்பாக்கிப் படைப் பிரிவினர், மூன்று தொழிலாளர்களை எல்லைப் பகுதிக்குக் கடத்திக்கொண்டு போய்ச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை எல்லை தாண்டி வரமுயன்ற தீவிரவாதிகளாக ஜோடனை செய்த சம்பவம் – இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரும், துணை இராணுவப் படைகளும், காஷ்மீர் போலீசாரும் நடத்திய பல பச்சைப் படுகொலைகள்தான் இப்போராட்டத்தின் தூண்டுகோலாக அமைந்தன.

‘‘துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்ட பிறகு, மக்களின் விடுதலை உணர்வும் செத்துவிடும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் பாலிவுட் திரைப்படங்களிலும், பப் கலாச்சாரத்திலும் மூழ்கிப்போய் விடுவார்கள் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால், எங்களின் விடுதலை வேட்கை கொஞ்சம்கூடக் குறையாமல் இருப்பதைத்தான் இப்போராட்டம் காட்டுகிறது” என காஷ்மீர் மக்களின் மனோநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பள்ளத்தாக்கைச் சேர்ந்த புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஷாத் சலீம்.
காஷ்மீர் மக்களின் தேசிய இன விடுதலை உணர்வுதான் இப்போராட்டத்தின் அடிப்படையாக உள்ளது என்ற உண்மையை மூடிமறைக்க, இப்போராட்டம் பற்றிப் பலவித கட்டுக்கதைகளையும் அவதூறுகளையும் மைய அரசும் அதனை நத்திப் பிழைக்கும் தேசியப் பத்திரிகைகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு பரப்பி வருகின்றன. “விரக்தியடைந்த இளைஞர்களின் போராட்டம்” என ஒருபுறம் நையாண்டி செய்துவரும் அக்கும்பல், இன்னொருபுறமோ, “லஷ்கர்-இ-தொய்பாவிடம் 200 ரூபாய்யை வாங்கிக்கொண்டு நடத்தப்படும் கூலிப் போராட்டம்” என அவதூறு செய்து வருகிறது.

சோபுர் நகரில் கடந்த ஜுன் 29 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டான். “அவன் அப்பாவி கிடையாது; கூலிக்காக வேலை செய்யும் போக்கிரி” என அச்சிறுவனைப் பற்றிக் கூறியிருக்கிறார், உள்துறை அமைச்சகச் செயலர். இப்படி வக்கிரமும், காலனியாதிக்க ஆணவமும் நிறைந்த இந்திய அரசை வெளியேறக் கோருவது எந்த விதத்தில் தவறாகிவிடும்?

பதாமாலூ என்ற ஊரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு வெளியே வருவதைப் பார்த்த இராணுவச் சிப்பாய்கள், துப்பாக்கியை நீட்டியபடியே அவனை நோக்கிப் பாய்ந்து வந்து, “உன்னைக் கொன்று விடுவோம்” என மிரட்டியுள்ளனர். அரண்டு போய் வீட்டுக்குள் ஓடிப்போன அந்தச் சிறுவன் பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகிப் போனான். ஐந்து வயதுச் சிறுவனைக் கொன்றுவிடுவோம் என மிரட்டும் இந்திய இராணுவம் காஷ்மீரில் யாரைக் காப்பாற்ற நிற்கிறது?

இந்தக் கேள்வியை காஷ்மீருக்கு வெளியேயுள்ள பெரும்பாலான “இந்தியர்கள்” எழுப்ப மறுக்கிறார்கள். “அவர்கள் காஷ்மீர் பற்றி பொய் சொல்கிறார்கள்; தங்களின் சொந்தப் பொய்யைத்தான் அவர்கள் நம்புகிறார்கள்” என இத்தகைய இந்தியர்களைப் பற்றிக் கூறுகிறார், டெல்லியில் வாழும் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்.

காஷ்மீர்

காஷ்மீர் பற்றிய உண்மை நிலவரம் வெளியே தெரியக்கூடாது என்ற நோக்கில், இந்திய இராணுவம் உள்ளூர் செய்தி ஊடகங்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாட்டுகளைக் கண்டித்து பத்திரிக்கையாளகர் நடத்தும் ஆர்பாட்டம்

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் 800-க்கும் மேற்பட்ட அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன மக்கள் இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தி வரும் இண்டிஃபதா போராட்டத்தைத்தான் இது நமக்கு நினைவூட்டுகிறது. சமூகம் தழுவிய ஆதரவோடு நடைபெற்று வரும் இப்போராட்டங்களை, இராணுவ அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் ஒடுக்கிவிட முடியும் என ஆளுங்கட்சி காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.-வும் ஒரேவிதமாக எண்ணுகின்றன.

ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தங்களைத் தற்காத்துக் கொள்ள இராணுவம்-துணை இராணுவப் படைகள் மீது கற்களை வீசியெறியும் இளைஞர்கள், மரண தண்டனைகூட விதிக்கப்படும் சாத்தியமுள்ள, “அரசின் மீது போர் தொடுத்த” குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். இந்த அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரத்தையும் தியாக உணர்வையும் 200 ரூபாய் கூலிப் பணத்தால் ஊட்டிவிட முடியுமா? விடுதலை உணர்வால் உந்தித் தள்ளப்படும் அந்த இளைஞர்கள் தமது மனங்களிலிருந்து பயம் என்பதையே அகற்றி விட்டார்கள் என்கிறார், ஹுரியத் மாநாட்டு கூட்டணியைச் சேர்ந்த தலைவரான சையத் ஷா கீலானி.

காஷ்மீரில் ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால்கூட, “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது; இராணுவத்தையும், துணை இராணுவப் படைகளையும் திரும்ப அழைத்துக் கொள்வதோடு, காஷ்மீர் போலீசு துறையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குழுவைக் கலைப்பது; மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது” ஆகிய குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற மைய அரசு முன்வர வேண்டும்.

ஆனால், மைய அரசோ, இந்த குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற மறுக்கிறது. இதற்குப் பதிலாக, பொருளாதார சலுகை என்ற பெயரில் அஞ்சையும் பத்தையும் தூக்கியெறிந்து, இப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என இந்திய ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கின்றனர். விடுதலை உணர்வை பணத்தால் விலை பேசும் இந்திய அரசின் முட்டாள்தனமான ஆணவம் காஷ்மீரில் பலமுறை தோல்வி கண்டிருக்கிறது.

‘‘காஷ்மீரில் ஒரு அடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தேசிய வெறியூட்டும் ஓட்டுக்கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை. இதனை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆளும் கும்பலின் தேசியம் என்பது மாபெரும் மோசடி என்பதைப் புரிந்து கொண்டுவிட முடியும்.

இந்து தேசியவெறி கொண்ட ஓட்டுக்கட்சிகள், அவர்களை நத்திப் பிழைக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற துரோகிகள், போலி மோதல் கொலைகள் மூலம் பணத்தையும் பதவியையும் அள்ளிக் கொள்ளத் துடிக்கும் காக்கிச் சட்டை கிரிமினல்கள் – ஆகியோர்தான் காஷ்மீர் இந்திய அரசின் காலனியாக நீடிப்பதால் இலாபமடையப்போகும் பிரிவினர். போலி தேசியப் பெருமையில் மூழ்கிப் போயுள்ள பிற இந்தியர்களுக்கு ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை எந்தப் பலனையும் அளிக்காது. மாறாக, முசுலீம் தீவிரவாதம் வளர்வதற்கும், பாகிஸ்தான் அதனைத் தூண்டிவிடுவதற்கும், இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து முறுகல் நிலை நீடிப்பதற்கும் ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

Tuesday, September 7, 2010

எங்கே…செல்லும்…இந்தப்பாதை…

மொபைல் போனில் பொழுதுபோக்காக வாலிபர்களிடம் பேசி, காதலில் விழ அலைய வைக்கும் பெண்கள் மீது வரும் புகாரின் எண்ணிக்கை கூடி வருவதாக, கோவை சைபர் க்ரைம் போலீசார் “அதிர்ச்சி” தகவல் தெரிவிக்கின்றனர்.

கோவை மாநகர குற்றப்பிரிவின் கீழ் செயல்படும், “சைபர் க்ரைம்” பிரிவுக்கு வரும் புகார்களில், மொபைல்போன் மூலம் ஆபாச அழைப்பு விடுத்தல், “செக்ஸ் மெசேஜ்” மற்றும் ஆபாச படங்கள் அனுப்பி, “டார்ச்சர்” கொடுப்பது தான் அதிகம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள், தனியார் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு மட்டுமன்றி, முன் பின் அறிமுகமில்லாத மாணவியர், வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் மற்றும் குடும்ப பெண்களுக்கும் அனுப்பி தங்களுக்குள் சந்தோஷம் கொள்கின்றனர்.

தொடர்ந்து பெறப்படும் ஆபாச அழைப்புகளால் மனவேதனை அடையும் பெண்கள், மாணவியர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் தரும் புகாரின் எண்ணிக்கை கூடியுள்ளன. சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, “டார்ச்சர்” கொடுக்கும் ஆசாமிகளை வளைத்து பிடிக்கின்றனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஜாலிக்காகவும், ஆர்வ கோளாறு காரணமாகவும் மெசேஜ் அனுப்புவதாகக் கூறி, மன்னிப்பு கேட்டு மன்றாடி தங்களை விடுவித்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில், கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த 160 க்கும் மேற்பட்ட புகார்கள், புகார்தாரரின் வேண்டுகோளின்படி எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர். சிலர் மட்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவற்றில், போலீசாரையே திடுக்கிட வைத்துள்ள சில சம்பவங்களும் நடந்துள்ளன. முன் பின் பார்த்திராத வாலிபரை காதல் வலையில் விழ வைத்த திருமணமான பெண், தங்கைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய அக்கா, ஒருதலைக் காதல் வசப்பட்டு, ஆபாச மெசேஜ் அனுப்பிய தனியார் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஆகியோரை, சைபர் க்ரைம் போலீசார் பிடித்துள்ளனர்.

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் ஸ்வீட்டி (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், பெற்றோருடன் வசிக்கிறார். தனக்கு தெரிந்த வாலிபர் ராகுலுடன் (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மொபைல் போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு குழையக் குழைய பேசியுள்ளார். அவளது பேச்சில் தன்னை பறிகொடுத்த வாலிபர், நேரில் சந்திக்க வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுத்தும், பிடி கொடுக்காமல் இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் என காலம் கடத்தியுள்ளார்.

தன்னுடன் பேசுவது யார் என்று தெரிந்து கொள்ளாமலே காதலில் விழுந்த வாலிபர், திருமணம் செய்தே ஆக வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றுள்ளார். இதை உறுதி செய்த ஸ்வீட்டி தன்னை பெண் பார்க்க வருமாறு சென்னைக்கு அழைத்துள்ளார். ஆர்வத்தில் தன் பெற்றோரையும், பக்கத்து வீட்டு நண்பரின் பெற்றோரையும் சென்னை அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற போது, ஸ்வீட்டியின் தோழி ஒருவர் போனில் தொடர்பு கொண்டு, “ஸ்வீட்டிக்கு உடல் நலமில்லை. அவளது தோழி வீட்டில் இருக்கிறார். பெண் பார்க்கும் நிகழ்ச்சியை இன்னொரு நாளைக்கு வைத்து கொள்ளலாம்” என்று தெரிவிக்க, ராகுல் மற்றும் குடும்பத்தினர் ஏமாற்றத்துடன் கோவை திரும்பினார்.

அடுத்தடுத்து அவள் யார் என்று தெரிந்து கொள்ள ராகுல் பல முயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லை. சில மாதங்களுக்கு முன், சூலூர் போலீசுக்கு வந்த போனில், தனது பெயர் ஸ்வீட்டி என்றும், தன்னை காதலிக்கும் ராகுல், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும் புகார் செய்ததோடு, தன் காதலனின் மெபைல் எண்ணையும் கொடுத்து இணைப்பை துண்டித்து விட்டாள். போலீசார் விசாரித்ததில் ஸ்வீட்டி கொடுத்த மொபைல் எண்ணுக்கு, சொந்தக்காரர் காதலில் விழுந்த வாலிபர் தான் என தெரிந்தது.

ஆத்திரமடைந்த ராகுல், “அவள் யாரென்று தெரியாது. முன் பின் முகத்தை பார்த்ததில்லை. ஆனால், என்னை காதலிப்பதாக கூறி அலைய விட்டு அசிங்கப்படுத்தி விட்டாள். அவளை கண்டுபிடித்து கொடுங்கள்” என, புகார் தெரிவித்துள்ளார். இது சைபர் க்ரைம் விசாரணைக்கு வந்தது. தீவிர தேடுதலில் ஸ்வீட்டி சிக்கினாள். அவள் வேறு யாருமல்ல. காதலில் விழுந்த ராகுலின் பக்கத்து வீட்டு குடும்ப நண்பரின் மருமகள்; திருமணமானவர். மேலும், அப்பெண்ணிடம் 10 சிம்கார்டுகள் இருந்ததாகவும், ஒவ்வொரு முறை பேசும் போதும் வெவ்வேறு எண்களில் இருந்து பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

காதலில் ஆண்கள் எப்படி விழுகின்றனர் என்பதை அறிந்து கொள்ள, ஜாலிக்காக இதில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இரு வீட்டாரும் கேட்டுக் கொண்டதால் வழக்குப் பதிவு செய்யவில்லை.

மற்றொரு வழக்கு :

மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் விற்பனை மையத்தில் வேலை. இவரது கடைக்கு பொருள் வாங்க வரும் வாலிபரும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தான். இவரது மொபைல் போனை தெரிந்து கொண்ட செல்வி, தொடர்ந்து போன் செய்து, தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.காதல் மெசேஜ், ஆபாச படங்களுடன் கூடிய மெசேஜை தொடர்ந்து அனுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த வாலிபர், சைபர் க்ரைமில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்ததில் செல்வி பிடிபட்டார்.

விசாரணையில், தினமும் ஒரே பஸ்சில் பயணிக்கும் வாலிபரின் அழகை ரசிப்பதற்காகவே இச்செய்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். வாலிபரின் வேண்டுகோள் காரணமாக செல்வி மன்னிக்கப்பட்டாள். இதை விட, மிக மோசமான, தரமில்லாத மெசேஜ் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வந்ததால், மனநிம்மதி இழந்த ஒரு பெண், போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்தனர். அந்த வீட்டில் அக்கா, தங்கை இருவர். தங்கை அழகானவர். இதனால் ஆபாச படங்கள், ஆபாச அழைப்புகள் தங்கைக்கு வந்துள்ளது.

குறிப்பிட்ட மொபைல் எண்ணை கண்டுபிடித்து பார்த்த போது, அக்காவே தங்கைக்கு மெசேஜ் அனுப்பியது தெரிந்தது. விசாரணையில் பொறாமை தான் காரணம் என தெரிய வந்தது. இதுவும் சமாதானத்தில் முடிந்துள்ளது. தற்போதைய சூழலில் ஆண்களுக்கு நிகராக, மொபைல் போனில் மெசேஜ், ஆபாச அழைப்பு விடுத்து பெண்களும் சிக்கிக் கொள்கின்றனர் என்பது வெளிப்படையாக நடக்கிறது. போலீசுக்கு வரும் புகார் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கோவை சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்தனர்.

எங்கே…செல்லும்…இந்தப்பாதை…

Sunday, September 5, 2010

காவி பயங்கரவாதமல்ல, காவி தரித்த பயங்கரவாதம்

FILE
நமது நாட்டில் “காவி பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளத” என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னாலும் சொன்னார், பாஜக உள்ளிட்ட சங் பரிவாரங்கள் அவருக்கு எதிராக பெரும் போரை நடத்தி வருகின்றன.

பாபர் மசூதியை இடிப்பதற்கு இர(த்)த யாத்திரை மேற்கொண்டு, அந்த இடிப்பிற்கு தலைமை தாங்கி, உற்சாகப்படுத்தி நடத்தி முடித்த இந்த நாட்டின் முன்னாள் துணைப் பிரதமர் லால் கிஷண் அத்வானி முதல் குஜராத்தில் மிகப்பெரிய கலவரத்தை ‘வெற்றிகரமா’ நடத்தி முடித்நரேந்திர மோடி வரை, அமைச்சர் சிதம்பரம் மீது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுகமாக பாய்ந்து பாய்ந்து தாக்கிக்கொண்டிருக்கின்றனர்.

ரெய்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் நித்தின் கட்கரியும் தன் பங்கிற்கு சிதம்பரத்தை கடித்துக் குதறியுள்ளார். அவர் கூறிய குற்றச்சாற்றுதான் சற்று வேடிக்கையானது. “காவி பயங்கரவாதம் என்று கூறியதன் மூலம் உள்துறை அமைச்சர் இந்தியப் பண்பாட்டை இழிவுபடுத்தியுள்ளார” என்று குற்றம் சாற்றியுள்ளார்.

அதுமட்டுமல்ல, நமது நாட்டின் தலைவர்கள் அனைவரும் - பிரதமரில் இருந்து முதல்வர்கள் வரை - கூறுவதை கட்கரியும் கூறியுள்ளார். அதாவது, பயங்கரவாதத்திற்கு நிறமும் இல்லை, மதமும் இல்லை, சாதியும் இல்லஎன்று தனது தெளிவை வெளி்ப்படுத்தியுள்ளார்.

நமது நாட்டின் பண்பாட்டுக் காப்பாளர்களான சங் பரிவாரின் அரசியல் கிளையின் தலைவர்கள் இந்த அளவிற்கு கடிந்து குற்றம் சாற்றுவதற்கு அமைச்சர் சிதம்பரம் என்னதான் சொல்லிவிட்டார்? என்பதை முதலில் பார்க்க வேண்டும். அவர் கூறியதில் உண்மையேதும் இருக்கிறதா என்பதை அடுத்து ஆராய வேண்டும்.

மதத்தின் பெயரால் இளையோரை...

ஆகஸ்ட் 25ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடந்த காவல் துறை இயக்குனர்கள், தலைமைக் ஆய்வாளர்கள் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், “இதுவரை நடந்துள்ள பல்வேறு குண்டு வெடிப்புக்களை புலனாய்வு செய்ததில் காவி பயங்கரவாதம் எனும் புதிய வடிவம் தலையெடுத்துள்ளது தெரியவந்துள்ளது” என்று பேசினார்.

இந்தியாவின் உள்துறை அமைச்சராகவுள்ள சிதம்பரம், இவ்வாறு பேசியதற்கு அடிப்படையென்ன? பல்வேறு குண்டு வெடிப்புகளில் சில சாமியார்களும், அவர்களின் தொடர்புகளும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும், அந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதும், அந்த ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதுமே காரணமாகும்.

2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்ற சம்ஜெளதா விரைவு இரயிலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 68 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இந்தக் குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளே காரணமாக இருப்பார்கள் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஓராண்டுப் புலனாய்விற்குப் பிறகு தெரியவந்த தகவல்தான் நாட்டையே திடுக்கிட வைத்தது.

மராட்டிய மாநிலம் மாலேகானிலுள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களே, சம்ஜெளதா இரயிலிற்கும் குண்டு வைத்தவர்கள் என்பதே அந்த உண்மையாகும். மாலேகான் குண்டு வெடிப்பில் இந்திய இராணுவத்தில் பணியாற்றி வந்த லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோகித் என்பவர்தான் குண்டுகளில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை தருவித்துத் தந்தவர் என்பதும், இவர் அபினவ் பாரத் என்ற அமைப்பில் செயல்பட்டு வந்தவர் என்பதையும் கண்டு பிடித்தனர்.

இவர் யாரோடு சேர்ந்து இந்த குண்டு வெடிப்புச் சதித் திட்டம் தீட்டினார் என்பைத மராட்டிய காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அவர்கள் மட்டும் தனியாக அல்ல, உத்தரப் பிரதேச காவல்துறையுடன் இணைந்த பல்வேறு குண்டு வெடிப்புகள் குறித்து புலனாய்வு செய்தபோது தெரிந்த உண்மையே நாட்டை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“பிரக்யான் தாக்கூர், தயானந்த் பாண்டே (இவர்கள் இருவரும் காவி தரித்த சாமியார்கள்) ஆகியோருடன் சேர்ந்தே பிரசாத் புரோகித் சதித் திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளார். மாலேகான் மட்டுமல்ல, பல குண்டு வெடிப்புக்களில் இவர்கள் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று நாசிக் நீதிமன்றத்தில் அவர்களின் விசாரணைக் காவலை நீட்டிக்கக் கோரி வாதிட்ட மராட்டிய காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவிற்கு வாதிட்ட அரசு வழக்கறிஞர் அஜய் மிசார் கூறியுள்ளார்.
பிரசாத் புரோகித் காஷ்மீருக்குச் சென்று 60 கி.கி. ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை பெற்றுக் கொண்டு வந்ததாகவும், அதனை பக்வான் என்பவரிடம் கொடுத்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார். அவர் கொடுத்த சரக்கை பயன்படுத்தித்தான் சம்ஜெளதா விரைவு இரயிலில் குண்டு வைக்கப்பட்டுள்ளது.

சம்ஜெளதா விரைவு இரயில் குண்டு வெடிப்பு, ஹைதராபாத்திலுள்ள மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு, ஆஜ்மீர் தர்க்கா குண்டுவெடிப்பு ஆகியன அபினவ் பாரத் எனும் இந்த சாமியார் கும்பலின் சதி வேலை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகியுள்ளது.

ஆனால் காவி உடை தரித்தவர்கள் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டியது என்று கூட பாரதிய ஜனதா கட்சி கண்டனம் வெளியிடவில்லை. மாறாக, அவர்களை கைது செய்தது தவறு என்று நாடாளுமன்றத்திலேயே குரல் கொடுத்தது.

அபினவ் பாரத் என்கிற இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய சங் பரிவார் அமைப்புகளில் உள்ளவர்களுக்கும் தொடர்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலை ஒலி பரப்பிய காரணத்தினால்தான் ஹெட்லைன்ஸ் டுடே தாக்கப்பட்டது. இதே ஆதாரத்தை டெஹல்கா இணையத் தளமும் வெளியிட்டது.

ஆக தாக்குதல் நடத்துவதற்காக துவக்கப்பட்டுள்ள ஒரு அமைப்புதான் அபினவ் பாரத் என்று தெரிகிறது.

இதைக் குறிப்பிடும் வகையில்தான் காவி பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது, எச்சரிக்கையாய் செயல்படுங்கள் என்று காவல் துறை இயக்குனர்களையும், தலைமை ஆய்வாளர்களையும் உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் எச்சரித்துள்ளார். இதில் என்ன தவறு உள்ளது?

இவர்கள் கூறியதை இப்படி எடுத்துக் கொள்ளலாம். எங்களின் துணை அமைப்புகளோடு தொடர்புடைய சில காவிகளை வைத்து ஏன் ஒட்டுமொத்தமாக காவியை தொடர்புபடுத்திப் பேசிகிறீர்கள் என்று கேட்கிறார்களா அத்வானியும் கட்கரியும் மோடியும்?

அப்படியென்றால் சரிதான். காவி பயங்கரவாதம் என்று கூறுவதற்கு பதிலாக காவி தரித்த பயங்கரவாதிகள் என்று இவர்களை குறிப்பிடலாம். பசுத்தோல் போர்த்திய புலி என்பதுபோல் காவி தரித்த பயங்கரவாதிகள்.

பயங்கரவாதத்தை அரசியலாக்கக் கூடாதா?

மற்றொரு குற்றச்சாற்றையும் கட்கரி கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் பயங்கரவாதத்தை அரசியல் ஆக்குகிறார் என்று கூறியுள்ளார். அதில் என்ன தவறு? பயங்கரவாதம் இந்த நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் அச்சுறுத்தும் ஒரு பிரச்சனை என்றாகிவிட்டப் பிறகு அதனை ஏன் அரசியலாக்கக் கூடாது?

FILE
மதம் என்பது தனி மனிதர் சம்மந்தப்பட்ட பிரச்சனை. அதனை அரசியலாக்கி ஆட்சியைப் பிடிக்கவில்லையா பாரதிய ஜனதா கட்சி? இதர பிறபடுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்து வி.பி.சிங் அரசு உத்தரவு பிறப்பித்ததை எதிர்க்க பாபர் மசூதியா ராம் ஜன்ம பூமியா? எனும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சனையை பெரிதாக்கி, பாபர் மசூதியை இடித்து, அதன் மூலம் பிரிவினைக்குப் பிறகு இந்தியா கண்டிராத மாபெரும் மதக் கலவரத்தை ஏற்படுத்திய பாரதிய ஜனதா, மதவாத வாக்குவங்கியை உருவாக்கி ஆட்சியிலும் 6 ஆண்டுகள் இருந்ததே? மதத்தை அரசியலாக்கலாம், பயங்கரவாத செயல்களுக்கு மூல காரணமாக இருந்தவர்களை (அவர்கள் சாமியாராக இருந்தால் என்ன, சந்நியாசியாக இருந்தால் என்ன?) அடையாளம் காட்டக் கூடாதா?

ஜனநாயகம், சமூக நீதி, மத நல்லிணக்கம், மதச் சார்ப்பற்ற அரசியல் என்ற நாகரீக பொது அரசியல் கோட்பாடுகள் எதையும் மதிக்காத ஒரு கொள்கை கொண்ட வன்முறை அரசியலாளர்கள், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்குத் தகுதி பெற்றவர்கள்தானா?

இந்தியாவிற்கு இன்றைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாத செயல்களுக்கு தங்களுடைய மதவாத நடவடிக்கைகளால் வித்திட்ட கட்சியும் அதற்கு அடித்தளமாக உள்ள அமைப்புகளும் பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசுவதை விட வேறு என்ன வேடிக்கை விநோதம் இருக்க முடியும்?

Saturday, September 4, 2010

கல்விக் களவாணிகள்!

சிராஜ் சுல்தானா

அண்ணா பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு, பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கிய மாணவர்களில் 41 பேரும், மருத்துவப் படிப்பிற்கு சான்றிதழ் வழங்கிய மாணவர்களில் 10க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண் சான்றிதழ், போலி என கண்டறியப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வில், தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கப் பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தில் தங்களுக்கு மதிப்பெண்கள் அதிகம் இருக்கும் என்ற எண்ணத்தில், மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்கின்றனர். இது வழக்கமான ஒன்று தான். யார், யார் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்கின்றனர் என்பது, கல்வித் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம், ஏஜன்டுகள் கைக்குச் செல்கிறது.

அவர்கள் மாணவர்களை அணுகி, 10 ஆயிரம் முதல், பல லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்று, "கல்வித் துறையின் கம்ப்யூட்டரில் மதிப்பெண் மாற்றியமைக்கப்படும்' என்ற உறுதிமொழியுடன், கடந்த 2000 ஆண்டு முதல், மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக வாரி வழங்கியுள்ளனர். இதில் பலர், பல லட்சம் சம்பாதித்தும், ஓய்வு பெற்றும், வேறு துறைக்கும் போய்விட்டனர். இந்த ஆண்டு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய, 66 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

கல்வித் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம், அவர்களின் முகவரி அறிந்த ஏஜன்டுகள், 10 அல்லது 5 சதவீத மாணவர்களையாவது அணுகி இருப்பர் என வைத்துக் கொண்டால் கூட, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், போலி மதிப்பெண் சான்றிதழ்களை இந்த ஆண்டு பெற்றிருப்பர். இதில், ஒரு சில மாணவர்களின் மதிப்பெண், கல்வித் துறையில் உள்ள கம்ப்யூட்டரில், சரியான தருணத்தில் திருத்தப்படாத காரணத்தால், இன்று சிலர் மட்டும் மாட்டிக் கொண்டனர். 2000ம் ஆண்டிலிருந்து, இதுபோன்ற போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்ற மாணவர்கள், இன்று காலரை தூக்கிக் கொண்டு, பல உயர் பதவிகளில் அமர்ந்து, தங்களின், "கடமை'யை செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில், பணம் கொடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம், வசதியானவர் அல்லது ஓரளவு வருமானம் உள்ளவர்கள். ஏழை, எளிய கிராமப்புற மக்கள் இதில் சிக்கவில்லை என்பது, கவனிக்க வேண்டிய ஒன்று.

பண வசதியில்லாத, தன் கிராமத்தில் பள்ளி இல்லாத ஏழை மாணவன், இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே பள்ளிக்கு புறப்பட வேண்டும். அங்கு பாடம் படித்து, தனிப் பயிற்சி எனும் டியூசன் இல்லாமல், மாலை வீடு வந்து, பெற்றோருக்கு சில உதவிகள் செய்ய வேண்டும். மின் வசதி கூட இல்லாத நிலையில் படித்து, தேர்வில் வெற்றி பெறுவதே சாதனையாக உள்ள நிலையில், பணம் உள்ளவர்கள், இப்படி குறுக்கு வழியில், போலி மதிப்பெண்கள் மூலம் சாதனை மதிப்பெண்கள் பெற்று, சன்மானம் பெறுகின்றனர். போலிகள், இன்று நமக்கு விடப்பட்ட சவால்களில் பெரும் சவாலாக உள்ளது. போலி டாக்டர், போலி வக்கீல், போலி காவல் அதிகாரி என பலர், இன்று நாட்டில் உலா வருகின்றனர்.

மனிதனுக்கு முக்கியம் உயிர். அதில் கூட விளையாட, போலிகள் துணிந்து விட்டனர். ஊசி போட தெரிந்தால் போதும், மருத்துவ பிரதிநிதிகள் மூலம் நான்கு மாத்திரைகள் பெயரை தெரிந்து வைத்து, போலி டாக்டர்கள் உலா வர துவங்கி விட்டனர். போலி கல்வி நிறுவனங்களில், தங்களின் வாழ்வை தொலைத்து, பலர் நடுத்தெருவில் நிற்கின்றனர்.

போலி முத்திரை தாள்கள், போலியாக தயாரித்த விற்பனை பத்திரம், கள்ள நோட்டுகள், போலி தபால் தலைகள் என, பல போலிகள் வந்துவிட்டன. தமிழகத்தில், அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் பங்கு பெற்ற மாணவர்களின், போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டன. வேறு கலைக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், வேறு மாநிலத்திற்குச் சென்ற மாணவர்களின் போலி மதிப்பெண் சான்றிதழ் என்னவானது?

தமிழக அரசின் சிறப்பு முத்திரை வில்லை ஒட்டப்பட்ட, போலி மதிப்பெண் சான்றிதழ், கல்வித் துறையில் பணிபுரியும் பலரின் துணை இல்லாமல் எப்படி கிடைத்தது? சரி... ஒவ்வொரு மதிப்பெண்ணும், ஒவ்வொரு மாணவனுக்கும் உயிர். ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட, விரும்பிய பாடமோ, கல்லூரியோ கிடைக்காமல் போய்விடும். ஒரு மதிப்பெண்ணுக்கு இத்தனை ரூபாய் என்று பணத்தை கறந்துள்ளனர்.

மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்த 66 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாள்களை சரிபார்த்து, சான்றிதழ்களை சரிபார்த்தால், இந்த ஆண்டில் நடந்த ஊழலில் உண்மை, உலகுக்குத் தெரியும்.

o மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டை கண்காணிக்க, தனியாக ஒரு துறை ஏற்படுத்த வேண்டும்.

o கடந்த 2000 ஆண்டு முதல், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்த மாணவர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும்.

o விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, நல்ல ஓய்வு தரப்பட வேண்டும். ஒரு சில ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு தினமும் 100 கி.மீ., பயணம் செய்கின்றனர். காரணம், விடைத்தாள்களை திருத்தும் மையத்திற்கு தங்கும் வசதி போதிய அளவில் இல்லை.

o விடைத்தாள் திருத்தும் இடங்களில் போதிய மின் வசதி, தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். கத்திரி வெயில் காலத்தில், விடைத்தாள் திருத்துபவர்களுக்கு கஷ்டம் தவிர்க்கப்பட வேண்டும்.

நன்கு படித்து, தேர்வு எழுதி, எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத ஏழை, எளிய மக்கள் என்ன செய்வர்? தன் பிள்ளை நல்ல மதிப்பெண் பெற்று வாழ வேண்டும் என்று எண்ணி, மூட்டை தூக்கும் தொழிலாளி, கூலித் தொழிலாளி, விற்பனை பிரதிநிதிகள், ரிக்ஷா ஓட்டுபவர்கள் என, ஏழை மக்கள் எல்லாம் வாய் பேச முடியாத ஊமைகள். இவர்களின் வாய்ப்பை பறித்து, தங்கள் வாழ்வை வசந்தமாக மாற்றிய போலி மதிப்பெண் சான்றிதழ் பெற்றவர்களை, எந்த சட்டத்தின் மூலம் தண்டிப்பது?

கடந்த 2009ம் ஆண்டு, மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வில், 1,179 மதிப்பெண் பெற்ற மூன்று மாணவர்கள், மாநிலத்தில் முதல் மாணவர்களாக அறிவிக்கப்பட்டனர். தனக்கு மதிப்பெண்கள் மிகவும் குறைந்துள்ளது என்று எண்ணிய ஊத்தங்கரை தனியார் பள்ளியைச் சேர்ந்த பாலமுருகன், மறு மதிப்பீடு செய்தான். விடைத்தாள்களின் நகல்களை வாங்கிய போது தான் தெரிந்தது, சில விடைகள் திருத்தப்படவே இல்லை என்று. அந்த மாணவனுக்கு, 1,184 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, சத்தமில்லாமல் சாதனை அமுக்கப்பட்டது. ஒருவேளை அந்த மாணவனுக்கும், பெற்றோருக்கும், பள்ளிக்கும் போராடும் திறன் இல்லையென்றால், அந்த மாணவனின் திறமை வெளியே தெரிந்திருக்காது. இதுபோல் எத்தனை மாணவர்கள், காணாமல் போயினர்.

மொரார்ஜி தேசாயின் மகள், மருத்துவக் கல்லூரி தேர்வில் தோல்வியடைந்தார். "மறு மதிப்பீடு செய்ய வேண்டும்' என மகள் கூறியதை, மொரார்ஜி தேசாய் மறுத்தார். "மறு மதிப்பீட்டில் மகள் வெற்றி பெற்றால், என் அதிகாரத்தை நான் தவறாக பயன்படுத்தி, இந்த வெற்றி கிடைத்தது என கூறுவர். எனவே, மீண்டும் தேர்வை எழுதி வெற்றி பெறு' என அறிவுரை கூற, மனமுடைந்த தேசாயின் மகள், தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும் தேசாய், தன் மீது தவறில்லை என வாதிட்டார். தேசாய் நினைத்திருந்தால், தன் மகளுக்கு ஒரு மருத்துவமனையே கட்டித் தந்திருக்க முடியும். தேசாய் எங்கே... இவர்கள் எங்கே...

நவீன கம்ப்யூட்டர் உலகில், தவறுகள் நடக்காது என்று எல்லாரும் எண்ணினோம். கம்ப்யூட்டரில் திருத்தி, ஊழல் செய்ய முடியும் என்றால், உண்மையான குடிமகன் ஒவ்வொருவனும், போலி நாட்டில் வாழும் போலி மக்கள் போல் உள்ளனர்.

சிராஜ் சுல்தானா - முதுகலை ஆசிரியர்

நன்றி: தினமலர்