Monday, December 28, 2009

பர்தா அணியாமல் இருந்தால் தான் எங்களுக்கு கஷ்டம்!மதவக்கிர கிருக்கன்களுக்கு சவுக்கடி!!


thanks to : -சுமஜ்லா.



............... இந்த இடுகைக்கு என்ன காரணம் என்றால்....


நான் பதிவர் சந்திப்புக்கு பர்தாவுடனே சென்றேன், கடைசிவரை பர்தாவுடனே இருந்தேன் என்று எழுதியிருந்ததற்கு, முந்தய பதிவுகளில் மாற்று மத அன்பர் ஒருவர் இவ்வாறு மறுமொழியிட்டிருந்தார்,


//நான் பேண்ட்டுடனே சென்றேன், கடைசிவரை பேண்ட்டுடனே இருந்தேன்; பெண்கள் புடவையுடனே சென்றார்கள், கடைசிவரை புடவையுடனே இருந்தார்கள், இப்படியெல்லாம் நாங்கள் எழுதினோமா?//


இதைப் படித்ததும், எனக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை! பர்தாவைப் பற்றி பல தவறான கருத்துக்கள் மாற்று மத அன்பர்களிடையே உள்ளது, அதைத் தெளிவாக்குவது தான் இந்த இடுகையின் நோக்கம்!


சில கேள்விகளும் பதில்களும்...


பர்தா என்றால் என்ன?


பர்தா என்பது உடையல்ல...அது உடைக்கு மேல் அணியும் ஒரு அங்கி தான், அதைக் கழட்டினால் உள்ளே உடை இருக்கும்!!!


அழகாக உடை உடுத்தி, நகையெல்லாம் அணிந்து, பிறகு அதை பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்களே?!


நாங்கள் திருமணம் போன்ற விஷேசங்களில், ஆண்களுக்கு தனி இடம், பெண்களுக்கு தனி இடம் என்று ஒதுக்கி இருப்போம். இருவரும் கலப்பதில்லை. ஆக, நாங்கள் வெளியே செல்லும் போது பர்தா அணிந்து சென்றாலும், திருமண மண்டபத்தில் பெண்கள் பகுதிக்கு சென்றதும் அதை கழட்டி பையில் வைத்து விடுவோம். பிறகு திரும்பும் போது, மீண்டும் அணிவோம். உறவுகளின் இல்லங்களுக்கு செல்லும் போது இதே போலத்தான்.


பர்தா அணியச் சொல்லி கட்டாயப்படுத்துவது யார்?


எங்கள் பெண்களிடம் ஏன் என்னிடமும் கணவர் உட்பட எந்த ஒரு ஆணும் கட்டாயப்படுத்தியதில்லை. நானே விரும்பித் தான் அதை அணிகிறேன். அதன் சவுகரியங்களை உணர்ந்த எந்த ஒரு பெண்ணும், பர்தா இல்லாமல் வெளியே செல்வதை விரும்புவதில்லை.


பர்தா ஏன் அணிகிறோம்?


எங்களுடைய அழகும் வனப்பும் கணவருக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறோம். இது ஒரு வித சுயநலம் போலத்தான் தெரியும். ஆயினும், எங்கள் வளர்ப்பு முறை அப்படி! ஆக, வெளி ஆண்கள் யாரும் எங்கள் உடலின் தோற்றத்தைப் பார்ப்பது எங்களுக்கு விருப்பமில்லை! அதற்காகத்தான் பர்தா அணிகிறோம்.


ஆண்கள் மட்டும் ஏன் பர்தா அணிவதில்லை?


நிச்சயமாக எங்கள் மதத்தில் ஆண்களுக்கும் பர்தா இருக்கிறது. ஆனால் அது வேறு விதம். ஆணும் பெண்ணும் உடல் தோற்றத்தில் வேறு வேறு மாதிரி இருக்கும் போது, எப்படி இருவருக்கும் ஒரே மாதிரி பர்தா அணிய முடியும்?


ஆண்களுக்கு தாடியும் நீளமான அங்கியும் தொப்பியும், தொப்புள் முதல் முட்டுக்கால் வரை மறைப்பதும் அவர்களுடைய பர்தா போலத்தான். அதோடு, பெண்களைப் பார்த்தால், தம்முடைய பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும்படி அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஏன் ஒரு சில முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில்லை?


அதற்குக் காரணம், அவர்களின் வளர்ப்பு தான். நற்குடியில் பிறந்து, இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்படும் அனைவரும் நிச்சயமாக பர்தாவை விரும்புவார்கள். பொதுவாக ஒரு குடும்பத்தில் பெண் எடுக்கும் போது, அக்குடும்பப் பெண்கள் பர்தா அணிபவராக இருந்தால்,விரும்பி பெண் எடுப்பார்கள்.


பர்தா அணிவது கஷ்டமாக இல்லையா?


உடை அணிவதை நாம் கஷ்டமாக நினைப்பதில்லையே! நாம் நம் கைகளை ஓரளவுக்கும், உடலின் சில பாகங்களையும், உடையினால மறைத்துக்கொள்கிறோம். கையின் பெரும்பகுதியும், கழுத்தும் முதுகும் இடுப்பும் தெரியும்படியாக சேலை கட்டுகிறோம்.


இன்னின்ன இடத்தை மறைக்க வேண்டும், இன்னின்ன இடத்தை மறைக்க வேண்டியதில்லை என்று தீர்மானித்தது யார்? முதன்முறையாக சேலை உடுத்தும் பெண், இடுப்பு வெளியே தெரியும் போது, சற்று சங்கோஷமடைவாளல்லவா? அது போலத்தான், மீதியுள்ள பாகங்களான கழுத்து, கை முதுகு ஆகியவை வெளியே தெரியும் போது, நாங்கள் அவமானப்படுகிறோம். ஆக, பர்தா அணியாமல் இருந்தால் தான் எங்களுக்கு கஷ்டம்.


காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளாமல் ஏன் இன்னும் பர்தா அணிகிறீர்கள்?


பர்தா அணிவதால், எம்மினப் பெண்களின் வளர்ச்சி தடைபடுவதில்லை. மாறாக, படிக்கும் காலத்தில் காதல்வலையில் வீழ்ந்து தம்மை இழந்துவிடாமல், நேரிய வழியில் செல்வதற்கு இது ஏதுவாக இருக்கிறது. பர்தா அணிந்தாலும், நாங்கள் விரும்பியதைப் படிக்கிறோம். விரும்பிய துறையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுகிறோம். அதற்கு நானே உதாரணம்.


ஏன் இந்த பதிவு?


ஆரம்பத்திலேயே நான் சொல்லிவிட்டேன். மற்றபடி நான் அனைத்து மத பழக்கவழக்கங்களையும் மதிப்பவள்.


சைவ சித்தந்தக் கொள்கையின் பட்டையையும், திருமால் பக்தர்களின் நாமத்தையும், பார்ப்பனீயர்களின் பூணூலையும், பாதிரிகளின் அங்கியையும், கன்னியாஸ்த்திரிகளின் ரோஸரியையும், சீக்கியர்களின் டர்பனையும் புரிந்து கொண்டு அதற்கு மரியாதை தருபவள் நான். அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அதே போல எம்மையும் எம்பர்தாவையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த இடுகை!


சந்தேகங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கலாம். ஆனால், மதவக்கிரம் பிடித்த அனானி கமெண்ட்டுகளுக்கு இங்கு இடமில்லை என்று சொல்லிக் கொள்கிறேன்.



Wednesday, December 23, 2009

மாணவியிடம் காமலீலை - ஆசிரியர் கைது

மாணவியுடன் காம லீலையில் ஈடுபட்டு அதை செல்போனில் படம்பிடித்த டியூஷன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


மணலி பலராமன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (34). திருமணமானவர். மகள், மகன் உள்ளனர். மணலி காமராஜர் தெருவில் டியூஷன் சென்டர் நடத்தி வந்தார். இவரிடம், படிக்க வந்த மணலியை சேர்ந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதை தனது செல்போனிலும் படம் பிடித்துள்ளார். இதை நண்பரிடம் காட்ட அவர் மூலம் பலருக்கும் எம்எமஎஸ் மூலம் பரவியது. மணலியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மாணவியின் பெற்றோர் போலீசுக்கு சென்றனர். மாணவியின் எதிர்காலம் கருதி வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரித்து வந்தனர். இதையறிந்த டியூஷன் ஆசிரியர் குடும்பத்துடன் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.


செல்வராஜின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் கோனூருக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். இதையறிந்த செல்வராஜ், திருப்பதிக்கு தப்பி சென்றார். ரயிலில் ஒவ்வொரு இடமாக சுற்றி வருவது தெரிந்தது. நேற்று சென்ட்ரலில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று, செல்வராஜை மடக்கி பிடித்தனர்.


பின்னர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பல மாணவிகளின் வாழ்க்கையை அவர் சூறையாடி இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் கணேசன் தீவிரமாக விசாரித்து வருகிறார். இதற்கு பின்னரே, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

பலஸ்தீன் பெண்கைதி தொடந்து 100 நாட்களுக்கும் மேலாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

ரமல்லா – இஸ்ரேலிய ரமேல் சிறையில் தமது இளைய மகள் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாகத்

தொடர்ந்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக பெண் கைதி வஃபா அல் பெஸ்ஸின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

மனிதாபிமான அமைப்புகள் தலையிட்டு, தமது மகள் மீது இஸ்ரேலிய சிறை நிர்வாகம் மேற்கொண்டுவரும் நியாயமற்ற வதைச்செயல்களை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பெண் கைதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்ப அங்கத்தவர்கள் சென்று கைதியைச் சந்திப்பது, கைதி தன் வழக்கறிஞரைச் சந்திப்பது முதலான அனைத்தையும் தடுத்துள்ளதன் மூலம் வெளி உலகத்துடன் எவ்வகையிலும் தொடர்புகொள்ளவே முடியாமல் இஸ்ரேலிய சிறை நிர்வாகம் தமது மகளைத் துன்புறுத்துவதாக அப் பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பெய்ட் ஹனூன் கடவையருகில் வைத்து 2005 ஜூன் மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட வஃபா, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கோர்ட்டினால் 12 ஆண்டுகள்- 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தனது தண்டனைக் காலத்தில் நான்கரை ஆண்டுகளைத் தற்போது அவர் நிறைவு செய்துள்ளார்.

நன்றி: PIC

free palestine

குஜராத்: கொடூரத்தின் பதிவாக ஒரு குறும்படம் ‘திற' சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற திரையிடலும் திறனாய்வும்

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைகள் உலகையே உறைய வைத்தன. இந்துத்துவத்தின் சோதனைச் சாலை என வர்ணிக்கப்பட்ட குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திர மோடியின் ஆசிகளோடும், வழிகாட்டுதல் மற்றும் அரசு எந்திர உதவிகள் துணையுடனும் சங்பரிவார பயங்கரவாதிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் பெண்களும், குழந்தைகளும் ஏராளம் அடங்குவர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சூறையாடப்பட்டன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவின் ஆட்சி நடந்தால் இத்தகைய இனப்படுகொலைகள் அரசு உதவியுடன் அரங்கேறும் என்று குஜராத்தில் காட்டப்பட்டது.

இதையெல்லாம் முன்னின்று நடத்திய கொலை பாதகன் மோடிக்கு மறுபடியும் முதலமைச்சர் பதவி, தண்டனையாக(?) வழங்கப்பட்டது. (முஸ்லிம்களை அகதி முகாம்களில் அடைத்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்றது பாஜக.

குஜராத் இனப்படுகொலைகளின் போது முஸ்லிம் பெண்களின் மீது சங்பரிவார ஆண் மிருகங்கள் நடத்திய பாலியல் கொடுமைகள் எழுத்தில் வடிக்க இயலாதவை. இந்தக் கொடியவர்களுக்கு நீதிமன்றங்களில் கண்டனம்தான் தெரிவிக்க முடிந்ததே தவிர, நடந்த கொலைகளுக்கு உரிய தண்டனைகளை வழங்க முடியவில்லை.

மறதியால் சபிக்கப்பட்ட மக்களை திசைதிருப்ப எத்தனையோ வேடிக்கைகள் இங்கே அரங்கேறும். மதவெறியின் கொடூரங்களை அதனால் நடத்தப்பட்டக் கொடுமைகளை, அதை வழிநடத்திய தலைமைகளை, சட்டக் காப்பாளர்களின் கயமைகளை, மக்கள் மறந்துவிடாமலும், மனங்கள் மரத்துவிடாமலும் யாராலும் தடுக்க முடியும்.

அதைச் செய்யவல்ல ஒரே ஆயுதம் கலை ஊடகம்தான். குஜராத்தின் கொடுமைகளை சுப்ரதீப் சக்ரவர்த்தியின் கோத்ரா தக், ரமேஷ் டாம்பிளின் ஆக்ரோஷ் ஆகிய குறும்படங்களின் வாயிலாக வெளிக்கொணரப்பட்டன.

ஆனால் தமிழில் குஜராத்தின் கொடுமைகளை அதியற்புதமாய்ப் பதிவு செய்துள்ளார் இளம் இயக்குநர், பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியார்.

‘திற' (Open) என்ற அவரது குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு 17.12.09 அன்று சென்னை ரஷிய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவரான பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியார், மக்கள் மனசாட்சியை உலுக்கும் வகையில் இந்தக் குறும்படத்தை எடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். குண்டர்களின் அயோக்கியத்தனங்களை, அராஜகங்களை இப்படித் தோலுரித்துக் காட்டிய படம், நாமறிந்த வரை தமிழில் இதுபோல வேறில்லை எனலாம்.

படம் 12 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது. அது ஏற்படுத்தும் தாக்கமோ மணிக்கணக்கில், ஏன் நாள்கணக்கில் நீள்கிறது.

‘திற’ குறும்படம், ஒட்டுமொத்த தேசத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கிறது என்றால் மிகையில்லை.

குஜராத் கலவரத்தில், தாயைப் பறிகொடுத்து, தந்தையிடமிருந்தும் பிரிக்கப்பட்ட 18 வயது முஸ்லிம் பெண் சகீனா, சங்பரிவாரக் கொடியவர்களால் சிதைக்கப்படும் கொடுமையைப் படம் பதிவு செய்கிறது. இது, மதவெறியால் தெறித்த ரத்தத்தின் ஒரு துளி என்கிறது.

திற படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையேற்றார். சாக்ரடீஸ் பெரியார் வரவேற்புரையாற்றினார். கவிஞர் ராஜசேகர் சிறப்பாகத் தொகுத்து வழங்க, தி.க. பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், நக்கீரன் கோபால், தமுமுக மாநிலச் செயலாளர் ஜெ. ஹாஜாகனி, பேரா.சுபவீ, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ‘நிழல்’ ஆசிரியர் திருநாவுக்கரசு, தலித் முரசு ஆசிரியர் புனிதப் பாண்டியன், வழக்குரைஞர் அருள்மொழி, திரைப்படக் கல்லூரி பேரா. வி.எம். ரவிராஜ், பட இயக்குநர் ஃபாத்திமா பீவி ஆகியோர் திறனாய்வு உரையாற்றினர்.

நன்றியுரை ஆற்றிய குறும்பட இயக்குநர் பிரின்சு என்.ஆர்.எஸ்.பெரியார், “பட விழாக்களுக்கு இப்படத்தை அனுப்பி வைப்போம். படம் பார்த்த உடனேயே ‘அருமையாக இருக்கிறது’ என்று தொலைபேசி வரும். பிறகு என்ன நடக்குமோ நடக்குமோ தெரியாது. நடுவர்கள் இப்படத்தைத் திரையிடவே அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று தகவல் வரும். இப்படி ஏராளமானப் புறக்கணிப்புகள், தடைகளைத் தாண்டி இந்தக் குறும்படம். தமிழக அரசின், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றிருக்கிறது என்றார்.

வழக்குரைஞர் அருள்மொழி, “55 ஆண்டுகளுக்கு முன்னால் உருது எழுத்தாளர் மண்டோ எழுதிய மூலக்கதையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது. பெண்கள் மீதான கொடுமைகளை இப்படம் உள்ளத்தை உலுக்கும் வகையில் பதிவு செய்துள்ளது என்றார்.

தலித் முரசு புனிதப் பாண்டியன், ‘பிற்படுத்தப்பட்டோருக்கும், தலித் மக்களுக்கும் இடையில் கூர்மைப்படுத்தப்படும் சாதி ஆதிக்க உணர்வை எடுத்துரைத்து, அதை அடியோடு களைய அணிதிரள வேண்டும் என்றார்.

பேராண்மை, ஈ, இயற்கை ஆகிய படங்களின் மூலம் சமூக அக்கறையுள்ள திரைப்படங்களால் வெற்றி பெற்றுள்ள இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், படத்தை வெகுவாகப் பாராட்டினார். ‘இளம் வயதில் எனக்கு எழுத்தாளர் மண்ட்டோவைத் தெரியவில்லை. பிரின்சுக்குத் தெரிந்திருக்கிறது. சினிமா எடுப்பது ஒன்றும் கஷ்டமான வேலையில்லை. இதுபோன்ற குறும்படங்களை எடுப்பதுதான் சிரமம். வளரும் தலைமுறையை வாழ்த்துகிறேன் என்றார்.

இப்படத்தை எடுக்க அனுமதியளித்த திரைப்படக்கல்லூரி பேராசிரியர் ரவிராஜ், “எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியைப் பார்வையிட வந்தவர்கள் கல்லூரியின் கட்டடங்கள் மற்றும் வசதிகளைக் குறை சொன்னார்கள். அவர்களிடம் ‘திற’ படத்தைப் போட்டுக் காட்டினேன். வியந்து போனவர்கள், திரைப்படக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்த படைப்பு இது” என்றார்கள்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேரா. சுபவீ, “படம் எடுப்பது மட்டுமல்ல, மேடையில் பேசுவது, கவிதை எழுதுவது, நடிப்பது என எதுவுமே சிரமமானதில்லை. அதை மனிதநேயத்தோடும், கொள்கைக்காகவும் செய்வதுதான் சிரமமானது. தாழ்த்தப்பட்டவர்களை சங்பரிவாரத்தினர் மக்கள் தொகைக் கணக்கில்தான் சேர்த்துக் கொள்கின்றனர். கோவிலுக்குள் சேர்ப்பதில்லை. சூலம் வழங்கும் நிகழ்ச்சியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மதச்சார்பற்ற இந்துக்களையும் சேர்த்தே அழிப்போம் என்றுதான் சொல்கிறார்கள். இத்தகையக் கொடியவர்களை உயிருள்ளவரை எதிர்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இத்திரைப்படம் தெருத்தெருவாக பாராட்டப்பட வேண்டும்' என்றார்.

தமுமுக மாநிலச் செயலாளர் பேரா. ஹாஜாகனி, “திற என்ற இத்திரைப்படம், மனதைத் திறப்பதாகவும், மௌனப் பூட்டுக்களைத் திறப்பதாகவும் அமைந்துள்ளது. இப்படத்தில் காட்டப்பட்ட கொடுமைகளைச் செய்தவர்கள், நாங்கள்தான் இதைச் செய்தோம் என்று பெருமைபொங்க பேட்டி கொடுத்தார்கள். தெஹல்கா இதழ், அதைப் படம்பிடித்து ஒளிபரப்பியது. அவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனைக் கொடுத்தது?

பாபரி மஸ்ஜிதை இடிக்க ரதயாத்திரை போன அத்வானியையும், அந்த இடத்தை சமப்படுத்துங்கள் என்று இடிப்பதற்கு ஆணையிட்ட வாஜ்பாயையும், பாபரி மஸ்ஜித் இடிப்பை முன்னின்று நடத்திய குற்றவாளிகளையும் சட்டத்தால் தண்டிக்க முடிகிறதா?

மும்பையில் 2 ஆயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த சூத்ரதாரி என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தால் அடையாளம் காட்டப்பட்ட பால்தாக்கரேவைத் தண்டிக்க முடிந்ததா? உச்சநீதிமன்றம் ராகவன் கமிட்டி என்ற கமிட்டி அமைத்து மோடியின் கொடுமைகளை விசாரித்ததே, மோடி சிறையிடப்பட்டாரா?

இல்லை. சட்டத்தால் சங்பரிவாரத்தின் சல்லிவேரைக் கூட கிள்ளிப்போட முடியவில்லை. ஆனால், செய்த குற்றம் என்னவென்றே தெரியாமல் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில், எந்த ஆதாரமும் இல்லையென்றாலும் கூட, கூட்டு மனசாட்சியின்படி அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை அளிக்கிறது நீதிமன்றம். நாங்கள்தான் செய்தோம் என்று குற்றவாளிகளே கூறினாலும், நீதிமன்றங்களில் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை.

எனவே உறங்குகின்ற நாட்டின் மனசாட்சி உலுக்கி எழுப்பப்பட வேண்டும். அதை இப்படம் திறம்படச் செய்துள்ளது'' என்றார்.

நக்கீரன் கோபால்-“இந்தப் படத்திற்குக் கைதட்ட வேண்டும் என்று தோன்றவில்லை. அந்த அளவுக்கு இது உள்ளத்தை பாதித்தது. இந்தக் கொடுமைகளைச் செய்தவர்களை தண்டிக்க முடிந்ததா? என்று பேரா. ஹாஜாகனி கேட்டார். அந்தக் கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை. ஆனாலும் இந்தக் கொடுமையைச் செய்தவர்களுக்கு இறங்குகாலம் தொடங்கிவிட்டது.

காஞ்சி சங்கராச்சாரியாருக்கு விழுந்த அடி, அந்தக் கூட்டத்தையே ஆட்டிவிட்டது (கூட்டத்தில் சிரிப்பு). இப்போதுவரை அவரது சீடர்களின் லீலைகளை நாங்கள் சீரியலாக எடுத்து வருகிறோம். இந்தக் கொடியவர்களின் முகமூடியைக் கிழிப்பதில் தெஹல்கா பத்திரிகை முக்கியப் பங்காற்றியது. எங்களுக்கு அதில் பெருமை. ‘திற' படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநரின் குடும்பமே படத்தின் தயாரிப்புச் செலவை ஏற்றதால் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.

தலைமையுரை ஆற்றிய கி.வீரமணி, “தீவிரவாதம் என்றவுடனேயே அதை முஸ்லிம்களோடு முடிச்சுப் போடுகிறார்கள். முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று சொல்பவர்கள் எப்படிப்பட்டக் கொடிய பயங்கரவாதிகள் என்பதைத்தான் நாம் குறும்படத்தில் பார்த்தோம். எங்கள் இயக்கக் குடும்பத்துப் பிள்ளை பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியாரும் அவரது குழுவினரும் இதைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். கும்பல் முஸ்லிம்களை அந்நியர்களாக சித்தரிக்கிறார்கள். முஸ்லிம்கள் இம்மண்ணின் மைந்தர்கள். அவர்களை அந்நியர்கள் என்று செல்பவர்கள்தான் எங்கோ இருந்து வந்த வந்தேறிகள் என்பதுதான் உண்மை. இங்கே உண்மை தலைகீழாக ஆகியுள்ளது.

மாலேகானில் குண்டுவைத்தது இந்துத்துவ தீவிரவாதிகள்தான். அதை அம்பலப்படுத்திய ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரியைக் கொன்றததும் அவர்கள்தான்.

‘கர்கரேவைக் கொன்றது யார்? என்ற புத்தகம் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான முஹ்ஷி என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

ஊடகத்துறையிலும், காவல்துறையிலும், ஐ.பி. எனப்படும் உளவுத்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் மிகப்பெரிய அளவில் ஊடுருவியுள்ளது. கலை ஊடகங்களைக் கைப்பற்றி மக்களை மூளைச்சலவை செய்து தங்கள் லட்சியத்தை அடையலாம் என சங்பரிவாரக் கும்பல் சதித்திட்டம் தீட்டி அதை நிறைவேற்றியும் வருகிறது. அதை முறியடிக்கும் வேலைகளில் நாம் இறங்க வேண்டும்.

ஒரு கலைப்படைப்பு மக்கள் மனங்களில் எந்த விளைவை ஏற்படுத்துகிறது என்பதை வைத்தே அதை மதிப்பிட வேண்டும் என்றார் தந்தை பெரியார். - என்றார் கி.வீரமணி.

மதவெறிக்கு எதிரான உணர்வையும், மனிதநேயத்தையும் உருவாக்கும் இந்தக் குறும்படக் குழுவினரை வாழ்த்துகிறேன்.

Tuesday, December 15, 2009

மொபைல் ரீசார்ஜ் செய்து தந்து ஓட்டு கேட்கும் கட்சிகள்!

வந்தவாசி: வாக்காளர்களைக் கவர என்னவெல்லாம் வழி உள்ளதோ அத்தனை வழியையும் அடித்துப் பிடித்துக் கண்டுபிடித்து தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர் கட்சிக்காரர்கள்.

சாதனைகளைப் பார்த்து, வேட்பாளர்களின் பின்னணியைப் பார்த்து, தராதரம் பார்த்து ஓட்டுப் போட்டதெல்லாம் அந்தக் காலம் - ஆதி காலமாகி விட்டது.

இப்போதெல்லாம் யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ஓட்டுக்கள் விழும் காலம். அந்த அளவுக்கு வாக்காளர்களை மாற்றி விட்டனர் கட்சிக்காரர்கள்.

வந்தவாசி தொகுதி இடைத் தேர்தலில் என்னென்ன காட்சியெல்லாமோ அரங்கேறி வருகிறது.

இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் பல்வேறு
வழிகளில் வாக்காளர்களைக் கவர்ந்து வருகின்றனர். பிரியாணி போட்டு கிராமத்து வாக்காளர்களைக் கவர்ந்தனர். பின்னர் வேட்டி, சேலைகளை அள்ளி அள்ளி கொடுத்தனர். இப்போது அடுத்த கட்டமாக திமுக சார்பில் வாக்காளர்களைக் கவர குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்களைக் கவர, இலவச ரீசார்ஜ் கார்டுகளைக் கொடுத்து ஓட்டு கேட்கின்றனராம்.

கிராமம் கிராமாக செல்லும் கட்சி பிரமுகர்கள், இளைஞர்கள் அதிகம் கூடியிருக்கும் இடங்களை தேடிப் பிடிக்கின்றனராம். பின்னர் அவர்களிடம் ரீசார்ஜ் கார்டுகளை கையில் வைத்து நமக்கே ஓட்டுப் போடணும் என்று அன்பாக கேட்டுக் கொண்டு விடை பெறுகின்றனராம்.

இன்னும் என்னென்ன கன்றாவிக் காட்சிகளைக் காணப் போகிறோமோ..

Monday, December 14, 2009

பாலியார் புகார்: சென்னை sex சாமியாருக்கு போலீஸ் வலைவீச்சு!

சென்னை கோடம்பாக்கம் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது ஹேமலதா என்பவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். வேலைவாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும், தமது ஆபாசப் படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும், சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவார் எனவும் அந்த புகாரில் கூறியுள்ளார். பெண்ணின் புகாரை அடுத்து சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாருக்கு போலீஸ் வலைவீசியுள்ளனர்.

சென்னை தேனாம் பேட்டை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

அடையாறு சர்தார்பட் டேல் சாலையில் உள்ள சக்தி விலாஸ் மிஷனில் உள்ள டாக்டர் ஈஸ்வர ஸ்ரீகுமார் என்கிற சாமியார் தனது நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள் எடுப்பதாக என் அப்பாவின் நண்பர் மூலம் தகவல் கிடைத்தது.

நானும் அந்த நிறுவனத்திற்கு வேலை கேட்டு விண்ணப்பம் போட்டேன். சாமியார் ஈஸ்வரகுமார் என்னிடம் இண்டர்வியூ நடத்தினார். சூப்பர்வைசர் வேலை தரு வதாகவும் படிபடியாக சிங்கப்பூரில் உள்ள தனது நிறுவனத்தில் பதவி உயர்வும் அதிக சம்பளமும் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.

ஒரு தனி அறையில் வைத்து எனக்கு காபி கொடுத்தார். அதை குடித்த சிறிது நேரத்தில் மயங்கிவிட்டேன். பிறகு கண்விழித்து பார்த்த போது ஆடைகள் களைந்த நிலையில் அலங்கோலமாக கிடந்தேன். என்னை சாமியார் பலாத்காரம் செய்ததை உணர்ந்தேன்.

இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று சாமியார் மிரட்டி அனுப்பினார். அடிக்கடி போன் செய்து அழைத்தார். நான் மறுத்தேன். உன்னுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன். அதனை இண்டர்நெட்டில் போட்டு விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போய் அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு மீண்டும் என்னை கற்பழித்தார். எனக்கு 10வயதில் மகள் இருக்கிறாள் என்று கெஞ்சினேன். அவர் விடவில்லை. தொடர்ந்து ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி என்னை அனுபவித்தார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது ஆபாச வீடியோவை அழித்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகார் மனு குறித்து விசாரிக்க சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அதிவீர ராம பாண்டியனுக்கு உத்தரவிடப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமார் நடத்திய விசாரணையில் சம்பவம் தியாகராயநகர் பகுதியில் நடந்ததாக தெரிய வந்ததால் புகார் மாம்பலம் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Saturday, December 12, 2009

இந்து மதத்தில் ஒரு பிரிவுதான் இருக்கிறதா? ஒரு பிரிவு இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்கிறதா?



‘சிவசேனா’

‘இஸ்லாமியர்' ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டுமானால், முசுலிம் சமுதாயத்து மக்கள் பொது சிவில் சட்டம் இயற்ற ஆதரவு தரவேண்டும்; குடும்ப நலத் திட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்; வந்தே மாதரம் பாடலை ஏற்கவேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக அயோத்தியில் ராமன் கோயில் கட்ட ஒப்புக்கொள்ளவேண்டும்’ என்று ஆணை போடுகிறார் ‘சிவசேனா’ தலைவர் பால்தாக்கரே!

அதைச் சொல்ல இவர் யார் என்று தெரியவில்லை. இந்தியாவின் சர்வாதிகாரியாக இவர் எந்தத் தேதியிலிருந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டார் என்றும் தெரியவில்லை.

இந்தியாவில் பிறக்கும் எல்லோரும் சமமானவர்கள்தாம்; சம உரிமை படைத்தவர்கள்தாம். இதில் வேறுபாடு காட்டப்படக்கூடாது என்பதை ஒப்புக்கொண்டு இந்து மதத்தில் உள்ள ஜாதியை ஒழிக்க ஒப்புக்கொள்ளவேண்டும்; உயர்ஜாதி ஆணவச் சின்னமான பூணூலை அகற்றவேண்டும் என்ற நிபந்தனைகளை சிவசேனா, சங் பரிவார் வகையறாக்கள் ஒப்புக்கொள்வார்களா?

இந்தச் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தாம் இந்தியாவின் குடிமக்களாக இருக்கவேண்டும் என்கிற நியாயமான, அறிவார்ந்த, மனித உணர்வை மதிக்கும் குரலை ஏற்றுக்கொள்வார்களா இவர்கள்?

இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்த இவர்கள் யார்?

ஆர்.எஸ்.எஸின் முன்னாள் தலைவர் சுதர்சன் இப்படித்தான் ஒருமுறை சொன்னார். முசுலிம்கள் தங்கள் மதத்தை இந்திய மயமாக்கிக் கொள்ளவேண்டும். ராமன், கிருஷ்ணன் கடவுள்களை வழிபடவேண்டும் என்று கூறினார். ‘சிவசேனா’ தலைவரோ, இதே கருத்தை வேறு சொற்களில் சொல்கிறார் என்பதுதான் இதன் பொருள்.

இன்னொரு முக்கிய கேள்வி: இந்து மதத்தின் பிரதிநிதிகளாக இவர்களை யார் ஏற்றுக்கொண்டார்கள்?

இந்து மதத்தில் ஒரு பிரிவுதான் இருக்கிறதா? ஒரு பிரிவு இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்கிறதா? ‘வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்!’ என்பதுதான் நமது முதலாவது வேண்டுகோள்!

‘இந்து’ மதம் என்ற பெயர் அதற்கு உண்டா? என்பதற்கு முதலில் அவர்கள் பதில் சொல்லட்டும்; மற்றவற்றை பிறகு பேசிக் கொள்ளலாம்.

--------------------- மயிலாடன் அவர்கள் 11-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

Sunday, December 6, 2009

அப்சல் குருவுக்கு ஒரு நீதி - அத்வானிக்கு ஒரு நீதியா?

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தியபோது நமது பாதுகாப்பு வீரர்கள் உட்பட தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆளும் கட்சியாக பாஜகவும் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்தபோது 'நாட்டையே உலுக்கிய' இச்செயல் பரபரப்பாகப் பேசப்பட்டது.

தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதால் அநீதியிழைக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் குடும்பத்திற்கு நீதிவழங்கவும் வழக்கை மேற்கொண்டு நடத்தக் குற்றவாளி தேவை என்பதால் முன்னாள் காஷ்மீர் போராளிகளின் கூட்டாளியும் பிற்கால ராணுவ உளவாளியுமான 'அப்சல் குரு' வழக்கின் பிரதானக் குற்றவாளியாக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு நாட்டுமக்களின் கூட்டுமனசாட்சியைக் கருத்தில் கொண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார்.

உயிர்பிழைப்பதற்கான அத்தனை வாசல்களும் அடைக்கப்பட்ட பிறகு இனி யாரிடமும் மேமுறையீடு செய்யப்போவதில்லை என்று இருந்தாலும், மனித உரிமை ஆர்வலர்களால் அவரின் மரணதண்டனை இந்திய ஜனாதிபதியின் கருணை மணுவுக்காகக் காத்திருக்கிறது.

நாடாளுமன்றத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதிலும், பாதிக்கப்பட்ட பாதுகாப்புப்படையினர் குடும்பத்திற்கு நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியைத் திருப்தி செய்வதற்காக அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்குவதாகத் தீர்ப்பளித்தார். ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், கிரகாம் ஸ்டெயின் உயிருடன் கொளுத்தப்பட்டபோதும், ஒரிசா கந்தன்மால் கிறிஸ்தவர்களின் உடமைகள், உயிர்கள் நாசமாக்கப்பட்ட போதும் விழிக்காத 'கூட்டு மனசாட்சி' அப்சல்குரு விசயத்தில் மட்டும் விழித்துக்கொண்டதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

நாடாளுமன்றம் என்பது அரசியல்வாதிகளின் புனிதத் தளமல்ல. ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரிகள் சட்டம் இயற்றும் சபையாகவோ அல்லது ஆளுங்கட்சியின் அடாவடிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அவையாகவுமே இருந்து வருகிறது. மக்களுக்குச் சேவையாற்றப்போகிறோம் என்று சொல்லி கேள்விநேரத்தைப் புறக்கணித்த புன்னியவான்கள் புழங்குமிடம்தான் நமது நாடாளுமன்றம்! அம்பானிகளைப் பகைத்துக் கொள்ளாத வரையில் மட்டுமே ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சி வரிசையில் அமரமுடியும்.


1992 டிசம்பர்-6 அன்று காவிக் கயவர்களால் திட்டமிட்டு தகர்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் என்பதோடு இந்திய வரலாற்றின் பாரம்பர்யச் சின்னமும் ஆகும். பாப்ரி மஸ்ஜிதையும் இடித்து விட்டு நாடு முழுவதும் முஸ்லிம்களைக் கருவருத்தக் கூட்டத்திற்கு முறையே பிரதமர், துணைப் பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சரகங்களைத் தாரை வார்த்தோம்.

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமம் - நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு அப்பாவி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம் தானா? 17 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 10 கோடி செலவிட்டு, இதைச் சாக்காக வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நாடாளுமன்ற நேரங்களை வீணடித்து, அவையை முடக்கி, ஒத்திவைத்து என பொன்னான நாடாளுமன்ற நேரங்களை வீணடித்து, சென்றவாரம் தாக்கல்செய்யப்பட்ட லிபரான் கமிசன் அறிக்கையையும் ஏனைய கமிசன் அறிக்கைகளைப்போல் கிடப்பில் போடப்படுமென்றே தெரிகிறது.

லிபரான் கமிசன் அறிக்கையின்படி யாருக்கும் தண்டனைகள் பரிந்துரை செய்யப்படாத காரணத்தால் 68 குற்றவாளிகளில் எவனையும் தண்டிக்கப் போவதில்லையென சொல்லப்படுகிறது.எனில்,என்ன மயிருக்காக இத்தனை களேபரங்கள் நடத்தினர்? என்று சட்டத்தையும் இறையான்மையையும் மதிக்கும் சாமான்யரின் மனதில் கேள்வி எழுகின்றது.

அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கிய கூட்டு/குருட்டு மனசாட்சி அத்வானி உள்ளிட்ட 68 குற்றவாளிகளுக்காவும் விழித்துக்கொண்டு என்ன தண்டனையை வழங்கப்போகிறது? நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளிடமிருந்து வந்த செல்போன்அழைப்பிற்காக அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கியது சரியென்றால், பாப்ரி மஸ்ஜிதை இடிக்கும் நோக்கத்துடன் மேடைபோட்டு ஒலிபெருக்கியில் அழைத்த சங்பரிவாரக் கும்பலைச் சர்ந்த 68 பேர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்? யார் வழங்குவார்? என்பதே தொக்கி நிற்கும் கேள்வி!

பாபர் மசூதி இடிப்பும் - சங் பரிவார் வகையறாக்களும்



திமிரடி என்பது இதுதான்!

1992 டிசம்பர் 6 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் பா.ஜ.க. சங் பரிவார் காவிக் கும்பல் 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்கள் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்துத் துவம்சம் செய்து குதூகலித்தது. உலகமே இது கண்டு நகைத்தது. இந்தியாவின் மதச் சார்பின்மையின் கண்ணியம் இதுதானோ என்று ஏளனம் செய்தது.

ஆண்டுகள் 17 ஓடிவிட்டன. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் வாக்குறுதி அளித்தபடி இடிக்கப்பட்ட இடத்தில் மசூதி மீண்டும் கட்டிக் கொடுக்கப்படவில்லை.

குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்த கதையாக, பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நாடெங்கும் மதக் கலவரங்களை உண்டாக்கி சிறுபான்மை மக்களின் உயிரைக் குடித்தார்கள்.

இந்த அளவில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள், தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தித் தங்களின் உணர்வுகளைத் தெரிவிக்கவும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே நாளில் நியாயம் கேட்டுக் குரல் எழுப்புவதிலும் அர்த்தம் உண்டு.

அதே நேரத்தில் அந்த நாளில் நாங்களும் போராட்டம் நடத்துவோம் என்று இந்து முன்னணி வகையறாக்கள் கூறுவது அவர்களின் மதவெறித் தனத்தின் கேவலத்தைப் பறைசாற்றுவதாகும்.

பாதிக்கப்பட்டவர்கள் உரிமைக்குரல் கொடுக்கிறார்கள் என்றால், அந்தப் பாதிப்புக்குக் காரணமானவர்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க முனைவது எந்த வகையில் நியாயம்?

அடிபட்டவனுக்கு அழக்கூட உரிமையில்லையா? எந்த அளவுக்கு அராஜக புத்தியிருந்தால், இப்படியெல்லாம் செயல்பட முன்வருவார்கள்?

இந்துக்கள் பெரும்பான்மையினர்; முஸ்லிம்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர்தானே என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்கின்ற கொழுப்பா ஆணவமா?

இந்துக்களின் பிரதிநிதிகள் என்று இந்து முன்னணி வகையறாக்களை யார் ஏற்றுக் கொண்டார்கள்? இந்துக்களில் எத்தனை எத்தனை பிரிவுகள் உண்டு? காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் யானைக்கு எந்த நாமம் போடுவது என்று சில நாள்களுக்கு முன்பு கூட தகராறு ஏற்பட்டதே, சில ஆண்டுகளுக்கு முன் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு தெருவில் கட்டிப் புரண்டார்களே!

ராமன் கோயில் விவகாரம் வைணவர்களைப் பொறுத்தது. இதில் சங்கராச்சாரியார் ஏன் தலையிடுகிறார் என்று கூட எதிர்க் குரல் கேட்டதே! திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறைக்குள் காஞ்சி சங்கராச்சாரியார் சென்றது கூட பெரிய பிரச்சினையாக புயலாக வெடித்துக் கிளம்பியதே! இந்த நிலையில் இந்து முன்னணிக் கூட்டம் இந்துக்களுக்கெல்லாம் ஏகப் பிரதிநிதிகள் போல வஸ்தாதுக் காட்டுகிறார்களே!

இதுபோல் அடாவடித்தனமாகப் பேசுவது என்பது ராமகோபாலனுக்குக் கைவந்த கலை. அதன் மூலம் ஒரு தற்காலிக விளம்பரம் கிடைக்கும் அல்லவா? அதற்குத்தான் இந்தச் சில்லறை அறிக்கைகள்.

இந்திய அரசு ஒன்றை உணரவேண்டும். பாபர் மசூதி இடிப்பு என்பது மாபெரும் குற்றமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த மரியாதையைக் கேவலப்படுத்தக் கூடிய செயலாகும். உலகில் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கக்கூடிய இசுலாமியர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படாத காரணத்தால் இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார் வகையறாக்கள், நம்மைத் தட்டிக் கேட்க ஆளில்லை என்ற மனப்பான்மையில், இது போன்ற வல்லடி வழக்குகளில் ஈடுபடுகிறார்கள். வீண் வம்புக்கு வரும் விஷம வேலைகளில் குதிக்கிறார்கள். இதனை அனுமதிக்கக்கூடாது.

எவ்வளவு விரைவாக பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரமுடியுமோ, அவ்வளவு விரைவாக அந்தக் கடமையைச் செய்தால்தான் இந்த நச்சுக் கூட்டத்தினரின் விஷமத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களிடத்திலிருந்து தீவிர உணர்வோடு இளைஞர்கள் உருவாகாமல் இருப்பதற்கும் இதுதான் சரியான மார்க்கமுமாகும்.

------------------------"விடுதலை" தலையங்கம் 5-12-2009

Saturday, December 5, 2009

டி.எடப்பாளையம்: அரசு மேப்பில் இல்லாத கிராமம்!

விழுப்புரம் மாவட்ட திருக்கோவிலூர் தாலுகாவில்... கடலூரிலிருந்து திருவண்ணாமலை போகும் சாலையில் இருக்கும் கிராமம்தான் டி.எடப்பாளையம். இங்கு 3500 பேர் வசித்துவர.. இவர்களில் 1500 பேர் வாக்குரிமை உள்ளவர்கள். இந்த கிராமத்திற்கு மட்டும் 850 ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் வருவாய்த்துறை... இப்படி ஒரு ஊரே எங்கள் மேப்பில் இல்லை என கைவிரித்திருக்கிறது.
டி.எடப்பாளையம் ஊராட்சித் தலைவரான அப்துல் கபூரோ, எங்க ஊர் நிலபுலன்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாயும், பத்திரப் பதிவுகள் மூலம் கிடைக்கும் வருவாயும் எங்க ஊராட்சிக்கு கிடைப்பதில்லை. காரணம் வருவாய்த்துறை கெசட்படி... டி.எடப்பாளையம் என்ற கிராமமே வருவாய்த் துறையிடம் இல்லை. எங்க கிராமத்தை நாலா பங்கு போட்டு... சுற்றி இருக்கும் சித்தலிங்கமடம், வடமருதூர், எல்ராம்பட்டு, கொடியூர் ஆகிய 4 கிராமங்களோடும் சேர்த்து வச்சிருக்காங்க.

நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் எங்க கிராமத்தில் இருக்கும் குளத்தை தூர் வாரலாம்னு பார்த்தா... சித்தலிங்கமடத்துக்காரங்க ஓடிவந்து... எங்க ஊராட்சி லிமிட்ல இருக்கும் குளத்தை நீங்க எப்படி தூர்வாரலாம்னு தடுக்குறாங்க. சரி ரோடு போட்டுக் கொடுங்க... குடிதண்ணீர் வசதி பண்ணிக் கொடுங்கன்னு அந்த ஊராட்சிகளைக் கேட்டா... உங்க ஊர்தான் தனி ஊராட்சியாச்சே நீங்களே பண்ணிக்கங்கன்னு கை விரிக்கிறாங்க என்கிறார் கலக்கமாய்.

எடப்பாளையத்தை வருவாய்த்துறை ஒரு கிராமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என குரல் கொடுத்துவரும் த.மு.மு.க. மாவட்ட நிர்வாகி பைசல் முகமது, எங்கள் கிராமத்துக்கு உண்டான உரிமையைக் கொடுக்கும்வரை வாக்களிக்க மாட்டோம் என சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது அறிவித்தோம்.

இதன்பிறகு ஓடிவந்த அதிகாரிகள். தேர்தல் முடிந்தததும் கிராமத்தின் எல்லைகளை அளந்து தனி ரெவின்யூ கிராமமாக அறிவிக்கிறோம் என வாக்குறுதி கொடுத்தனர். நேர்மையான அதிகாரியான திருக்கோவிலூர் கோட்டாட்சியர் கோதண்டராம குப்தா... சொன்னபடியே கிராமத்தை அளக்கச் செய்தார்.

இந்த நிலையில் அவர் மாற்றலாகிப் போக... வேலைகள் நின்றுபோய் விட்டன. என்ன நடந்தாலும் சரி... எங்க டி.எடப்பாளையம் கிராமத்தை வருவாய் கிராமமாக அறிவிக்கும்வரை நாங்க ஓயப் போவதில்லை என்கிறார் உறுதியான குரல்.

லிபரான் சுட்டிக்காட்டியுள்ள வாஜ்பேயி உள்ளிட்ட 68 குற்றவாளிகள் பிணையில் வெளிவர முடியாத வழக்கில் உடனடியாக கைதுச் செய்யப்பட வேண்டும்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பத்து தினங்கள் கழித்து அமைக்கப்பட்ட நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் ஆணையம் 17 ஆண்டுகள் கழித்து 8 கோடி ரூபாய் செலவு செய்து 48 முறை ஆயுள் நீடிப்புப் பெற்று தனது அறிக்கையை சமர்பித்துள்ளது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை, விடுதலைப் பெற்ற இந்தியாவில் காந்தியடிகள் படுகொலைக்கு பிறகு நடைபெற்ற மிகப் பெரும் பயங்கரவாதச் செயல்களுக்கு காரணமான நாசகர சக்திகளை தெளிவாக அடையாளம் காட்டியுள்ளது. சங் பரிவார் அமைப்புகள் கூறி வந்தது போல் பாபரி மஸ்ஜித் இடிப்பு தற்செயலாக உணர்ச்சி பெருக்கத்தால் நடைபெற்ற நிகழ்வு அல்ல என்பதை லிபரான் ஆணையத்தின் அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டாக நடைமுறைப்படுத்திய நன்கு திட்டமிட்ட நடவடிக்கைகளினால் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது என்று லிபரான் ஆணையம் தெளிவான முடிவிற்கு வந்துள்ளது. தவறான கட்சியில் உள்ள நல்ல மனிதர் என்று வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயிக்கும் பாபரி மஸ்ஜித் இடிப்பில் பங்கு உள்ளது என்று லிபரான் ஆணையம் கூறியிருப்பது இந்த அறிக்கையின் சிறப்பு அம்சம் என்று கூறலாம். ஆர்.எஸ்.எஸ். என்ற தாய் அமைப்பின் கீழ் செயல்பட்டு பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமாக இருந்த அரசியல் தலைவர்கள் முதற் கொண்டு அரசு அதிகாரிகள் வரை லிபரான் ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளார்கள்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு நிகழ்ந்த போது உ.பி.யில் ஆட்சியில் இருந்த கல்யான் சிங் அரசு எவ்வாறு பள்ளிவாசல் இடிப்பிற்கு காரணமாக இருந்தது என்பது குறித்து தெளிவான ஆதாரங்களை எடுத்துக் கூறும் லிபரான் ஆணையத்தின் அறிக்கை அன்றைய நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசிற்கு இடிப்பில் உள்ள பங்கை தெளிவுப்படுத்தாது வேதனைக்குரியது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அந்த கருப்பு ஞாயிறு அன்று அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் துங்கிக் கொண்டிருந்தார். அன்றைய குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா எச்சரித்த பிறகு தான் அவர் நாட்டு மக்களிடம் துர்தர்ன் வாயிலாக இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்தார். பாபரி பள்ளிவாசலை காக்க தவறிய நரசிம்ம ராவின் நடவடிக்கைக்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சீத்தாராம் கேசரியும் திருமதி சோனியா காந்தி அம்மையாரும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட நிலையில் லிபரான் அறிக்கை காங்கிரஸ்காரர் போர்வையில் இருந்த சங்பரிவார் விசுவாசி நரசிம்ம ராவின் பங்கை அம்பலப்படுத்தாது நீதிபதி லிபரானின் நேர்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

லிபரான் ஆணையத்தின் அறிக்கை பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை நடத்தி வரும் மத்திய புலனாய்வு துறையிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளதை வரவேற்கிறோம். இதே நேரத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக ராய் பிரேலி நீதிமன்றத்தில் 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கு 3 மாதங்களுக்குள் முடிக்கப்படும் வகையில் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விரைவு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஏற்கெனவே சி.பி.ஐ.யினால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மட்டுமில்லாது லிபரான் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ள வாஜ்பேயி, வகேலா உள்ளிட்டவர்கள் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டு அவர்களும் கைதுச் செய்யப்படவேண்டும். லிபரான் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ள 68 குற்றவாளிகளில் தற்போது பிணையில் இருப்பவர்களின் பிணை ரத்துச் செய்யப்பட்டு இடிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவர்களை சிறையில் அடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடம் யாருக்கு சொந்தம் என்ற சிவில் வழக்கு 60 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கப்படவும் மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினத்தில் அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம ராவ் வாக்களித்தது போல் இன்றைய காங்கிரஸ் தலைமையிலான அரசு பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் கட்டித்தர வேண்டும்.

வலுவான மதசார்பற்ற தலைமை நாட்டிற்கு மிக அவசியம் என்று நீதிபதி லிபரான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மதசார்பின்மையை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்தது. நாட்டில் மதசார்பின்மை ஆழமாக வேரூன்றவும், பாபரி மஸ்ஜித் பிரச்னையில் நரசிம்மராவ் செய்த பாவங்களை கழுவுவதற்காகவும் மேற்சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக மன்மோகன் சிங் அரசு முன்வரவேண்டும்.
இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 36 இடங்களில் டிசம்பர் 6 அன்று போராட்டம் நடத்த உள்ளோம்.

பேட்டியின் போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிபாயி, மாநிலச் செயலாளர் மௌலா நாசர், மாநில துணைச் செயலாளர் கோவை செய்யது ஆகியோர் உடன் இருந்தனர்.

Sunday, November 22, 2009

துறவறம்/கலப்புத் திருமணம் v/s கண்ணிய மார்க்கம்!

முகவை எஸ்.அப்பாஸ்

அல்லாஹ்வின் திருப்பெயரால்... அகிலத்தை படைத்து, அதில் மனிதனை படைத்து, மனிதன் வாழ்வின் வழிகாட்டியாக வேதத்தையும் -தூதரையும் தந்த இறைவன் மனிதனின் எல்லாவிதமான விஷயங்களுக்கும் இவ்விரண்டின் மூலம் வழிகாட்டியிருப்பதை காணலாம். அந்த வகையில் உணர்வுகளோடும்-உணர்ச்சிகளோடும் மனிதனை படைத்த இறைவன், அந்த உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் சரியான வடிகால் தேவை என்பதால்தான் திருமணம் என்ற பந்தத்தையும் உருவாக்கினான்.இத்திருமணத்தின் மூலம் தான் மனிதனுக்கு மன அமைதி ஏற்படும் என்று அல்லாஹ் கூறுகின்றான்;

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.(30:21)

இந்த வசனம் திருமணம் மட்டுமே அனைத்துவகையான மன சுமைகளையும் நீக்கி ஆறுதல் அளிக்கும் அருமருந்து என்று கூறுவதை உண்மையான தம்பதிகளால் உணர்ந்து கொள்ளமுடியும். எங்கோ வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு தாயின் வயிற்றில் பிறந்த ஆணும்-பெண்ணும் திருமணம் எனும் பந்தத்தின் மூலம் இணைந்தவுடன் ஒருவர் மற்றொருவருடன் கலந்துவிடுகிறார்கள் உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் தான்.

மனைவி மற்றும் அவள் மூலம் பெற்றெடுக்கும் தன் பிள்ளைகளின் அனைத்து வகையான தேவைகளை நிறைவேற்றும் கடமையில் அது கஷ்டமாகவே இருந்தாலும் அதில் ஈடுபடுவதில் ஒரு உண்மையான குடும்பத் தலைவனுக்கு ஏற்படும் இன்பம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதவை .

அதுபோல் தனது கணவனின் உடல் தேவைக்கு மட்டுமன்றி, அவன் உள்ளத்தால் காயம்பட்டாலும் அவனது அனைத்து வலிகளுக்கும் அற்புதமான நிவாரணியாக இருக்கும் ஒரு உண்மையான குடும்பத்தலைவிக்கு அவளது இந்த பணியில் கிடைக்கும் இன்பமும் வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை. இதை தான் அல்லாஹ் ரத்தின சுருக்கமாக கூறுகின்றான்;

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (2:187)

ஆடை என்பது எப்படி மனிதனின் மானத்தை மறைக்கும் காரணியாக இருக்கிறதோ , அது போன்று கணவனின் கண்ணியத்தை காப்பவளாக மனைவியும்- மனைவியின் கண்ணியத்தை காப்பவனாக கணவனும் எல்லா நேரமும் இருக்கவேண்டும் என்று இஸ்லாம் சொல்லிகாட்டுகிறது. மேலும் இந்த திருமண பந்தம் முறித்து துறவறம் எனும் நிலை மேற்கொள்ள ஆரோக்கியமான எந்த ஒரு முஸ்லிமுக்கும் அனுமதியில்லை என்பதை இஸ்லாம் திட்டவட்டமாக தெரிவிக்கிறது.

ஸஅத் இப்னு ஆபி வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; உஸ்மான் இப்னு மழ்வூன் ரளியல்லாஹு அன்ஹு துறவறம் மேற்கொள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அப்படி) துறவறம் மேற்கொள்ள அவருக்கு (மட்டும்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். (புகாரி எண் 5074)

இன்றைய நவீன உலகில் சிலர் குடும்ப வாழ்க்கை என்பது இறை நினைவை விட்டும் தடுத்துவிடும். மேலும் துறவறம் மட்டுமே மன அமைதியை தரும் என்று கூறி துறவறம் மேற்கொள்வதை பார்க்கிறோம். அப்படி துறவறம் மேற்கொண்டவர்களால் தனது உணர்வை கட்டுப்படுத்தி அவர்களால் இருக்கமுடிந்ததா என்றால் இல்லை.

பல்வேறு மத குருமார்கள் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது உலகறிந்த உண்மையாகும். இது ஒரு புறமிருக்க துறவறம் மன அமைதியை தராது என்ற இஸ்லாத்தின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் துறவறம் மேற்கொண்டு பின்பு மன வாழ்க்கையில் சங்கமித்து மன அமைதிகண்ட ஒருவரின் கூற்று உண்மை படுத்துவதை பாரீர்;

மூன்றாண்டுக்கு முன் "மாயமான' துறவி, இப்போது துறவறத்தை துறந்து, விவசாயியாகி விட்டார்.

இது குறித்து சுவாமி கூறுகையில்,"ஒரு மத நிறுவனத்தில் பணம் சேரும் போது, தங்களது சொந்த ஆதாயங்களுக்காக பக்தர்கள் அதில் நுழைகின்றனர். சீர்கேடு ஆரம்பிக்கிறது.

என் மனசாட்சிப்படி, மடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், அதன் கணக்குகளை மக்கள் முன் வெளியிட தீர்மானித்தேன்.

துறவு வாழ்வில் கிடைக்காத அமைதி, நிம்மதி இல்லறத்தில் எனக்குக் கிட்டியது. இனி மடத் துக்குத் திரும்புவதற்கு வாய்ப்பில்லை.

சுவாமி பஸவேஸ்வரரின் "காயகதர்ம'த்தை கடைப்பிடிப்பதன் மூலம் இப் போது தான் அவரது உண்மையான சீடனாக நான் வாழ்கிறேன்' என்று மனம் திறந்து பேசினார்.

அவர் மனைவி கீதா,"நான் இனி வேறு எந்தப் பணியிலும் ஈடுபடப் போவதில்லை. இல்லத்தரசியாகவே இருக்க விரும்புகிறேன். நானும் என் கணவரும் எதிர்கொண்ட பிரச்னைகளே இந்த உலகுக்கு நாங்கள் கொடுக்க விரும்பும் செய்தி' என்று கூறுகிறார். [தினமலர்]

எனவே இஸ்லாம் கூறும் இல்லற வாழ்க்கையே சிறந்தது என்பதை மேற்கண்ட செய்தி வலுவாக உறுதிப்படுத்துகிறது. இது ஒருபுறமிருக்க, சில அதிமேதாவிகள் சாதி வேறுபாடு ஒழிய கலப்புத் திருமணமே சிறந்தது என்ற தத்துவத்தை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்வதையும், அத்தகைய திருமணத்தை அரசே அங்கீகரித்துள்ளதையும் பார்க்கிறோம் . ஆனால் இஸ்லாம் ஒருபோதும் கலப்பு திருமணத்தை ஆதரிக்கவில்லை. ஒரு முஸ்லிம் ஆணாயினும்- பெண்ணாயினும் முஸ்லிமல்லாத ஒரு ஆணையோ- முஸ்லிமல்லாத பெண்ணையோ திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

அல்லாஹ் கூறுகின்றான்;

أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ وَآتُوهُم مَّا أَنفَقُوا وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ وَاسْأَلُوا مَا أَنفَقْتُمْ وَلْيَسْأَلُوا مَا أَنفَقُوا ذَلِكُمْ حُكْمُ اللَّهِ يَحْكُمُ بَيْنَكُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள், அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை, மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம், அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள், (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும், உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.(60:10)

இந்த வசனத்தில் ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதவர்களை திருமணம் செய்வது கூடாது என்று அல்லாஹ் தெளிவாகவே கூறுகின்றான். காரணம் பலவாக இருந்தாலும் கலப்பு திருமணம் பெரும்பாலும் நிலைப்பதில்லை. அதில் ஒன்று ஆணும்-பெண்ணும் வெவ்வேறு மதத்தவராக இருந்தால் அவர்கள் காதலித்து கலப்பு திருமணம் செய்யும்போது, எந்த மதத்தின் அடிப்படையில் திருமணம் செய்வது, பிறக்கும் பிள்ளையை எந்தமதத்தில் அடிப்படையில் வளர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் வரும். அப்போது கணவன் விட்டுக்கொடுத்தால் கணவனின் உரிமை அங்கே பாதிக்கப்படும். மனைவி விட்டுக்கொடுத்தால் அங்கே மனைவியின் உரிமை பதிக்கப்படும். வெளிப்படையாக கணவனோ-மனைவியோ விட்டுக்கொடுத்து ஏதாவது ஒரு மதத்தின் சாயலில் வாழ முற்ப்பட்டாலும் அங்கே மனதளைவில் இருவரில் ஒருவர் குமைந்துகொண்டு போலித்தனமான வாழ்க்கை வாழ நேரிடும். எனவேதான் இஸ்லாம் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கே! எனவே ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத்தான் திருமணம் செய்ய வழிகாட்டுகிறது. இந்த கலப்பு திருமணம் என்பது கதைக்கு உதவாததுஎன்பதற்கு நிகழ்கால சம்பவம் ஒன்று சான்றாக உள்ளது.

திண்டுக்கல் : ஒன்றரை ஆண்டு காதலித்து திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, எந்த மத சம்பிராயப்படி திருமணம் செய்வது என்ற தகராறில் பிரிந்து சென்றனர்.

திண்டுக்கல் லட்சுமணபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (27). கோவையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தோழி ஒருவர் மூலம் அறிமுகம் ஆன சென்னை அசோக்நகர் முகமது என்பவர் மகள் ரியாஸ்பாத்துமாவை (19) ஒன்றரை ஆண்டுகளாக காதலித்தார்.

ரியாஸ் பாத்துமாவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்யவே, அவர் வீட்டை விட்டு வெளியேறி காதலன் தங்கியிருந்த கோவைக்கு சென்றார். அங்கிருந்து இந்த ஜோடி திருமணம் செய்ய திண்டுக்கல் வந்தது. இதற்கிடையில் ரியாஸ்பாத்துமாவை காணவில்லை என அசோக்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதனால் இந்த ஜோடி திண்டுக்கல் மகளிர் போலீஸ் எஸ்.ஐ.,கீதாதேவியிடம், தாங்கள் திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர்.

ஆனால் இந்து முறைப்படி திருமணம் செய்வதா, முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்வதா என ஸ்டேஷனில் காதல் ஜோடிகளுக்குள் விவாதம் நடந்தது. இது தகராறாக மாறி இருவரும் பிரிந்து தங்களது வீட்டிற்கு திரும்பினர்.(தினமலர்)

திருமணத்திற்கு முன்பே இங்கே கருத்து வேறுபாடு எனில் வருங்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதுதான் எதார்த்தம்! எனவே இன்றைய காலத்து ஆசாபாசங்களுக்கு கட்டுப்பட்டு காதல்-கத்திரிக்காய் என்று மனதை அலைபாயவிட்டு அந்நிய மதத்தவரை திருமணம் செய்து அல்லல்படுவதை விட்டு அல்லாஹ் அனுமதித்த வகையில் அருமையான திருமண பந்தத்தில் இணைய சமுதாயம் முன்வரவேண்டும். அதுதான் நிரந்தர மகிழ்ச்சிக்கும் மறுமை வெற்றிக்கும் வழிவகுக்கும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்

Thursday, November 19, 2009

துபாய்: 15 ம‌ணி நேர‌ம் பயணிகளை ப‌ரித‌விக்கவிட்ட ஏர் இந்தியா!

துபாய்: துபாயிலிருந்து திருச்சி வ‌ழியாக சென்னை செல்ல‌ வேண்டிய‌ 150க்கும் மேற்ப‌ட்ட‌ ப‌யணிக‌ள் ஏர் இந்தியா எக்ஸ்பிர‌ஸ் நிர்வாக‌த்தின் மோச‌மான‌ ந‌ட‌த்தை கார‌ண‌மாக‌ ந‌ள்ளிர‌வில் குழ‌ந்தைக‌ளுட‌ன் அவ‌திப்ப‌ட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

துபாயிலிருந்து புத‌ன்கிழ‌மை மாலை 6.15 ம‌ணிக்கு புற‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விமான‌ம் தாம‌தமாக‌ புற‌ப்ப‌ட்ட‌து. புற‌ப்ப‌ட்டு ர‌ன்வேயில் விமானி விமான‌த்தை செலுத்திய‌ சில‌ நிமிட‌ங்க‌ளில் திடீரென‌ பிரேக் போட்டு நிறுத்தினார். இதில் ப‌ய‌ணிக‌ள் த‌ங்க‌ள‌து இருக்கையினை விட்டு இழுத்துச் செல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். குழ‌ந்தைக‌ள் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌தை அறியாது தவித்தனர்.

இதையடுத்து என்ன ஏது என்று விளக்கம் தராமலேயே பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிவிட்டனர். விமானத்தில் என்ன பிரச்சனை, ஏன் நிறுத்தப்பட்டது, எப்போது கிளம்பும் என்ற விவரத்தை சொல்லாமல் தவிக்க விட்டனர்.

இதுகுறித்து இந்த விமான‌த்தில் திருச்சிக்கு ப‌ய‌ணித்த‌ ஹுசைன் என்ப‌வ‌ர் கூறிய‌தாவ‌து: மாலை மூன்று விமான‌ நிலைய‌ம் சென்றோம். 6.15க்கு புற‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விமான‌ம் மிக‌வும் தாம‌த‌மாக‌க் கிள‌ம்பிய‌து. தொழில்நுட்ப‌க் கோளாறு கார‌ண‌மாக‌ புற‌ப்ப‌ட்ட‌ சில நிமிட‌ங்க‌ளிலேயே விமான‌ம் நிறுத்த‌ப்ப‌ட்டு விட்ட‌து.

இது குறித்து ப‌ய‌ணிக‌ள் துபாய் ஏர் இந்தியா எக்ஸ்பிர‌ஸ் விமான‌ நிலைய‌ பெண் அதிகாரி ஷெட்டியிட‌ம் விளக்கம் கேட்டபோது, அவ‌ர் ப‌ய‌ணிக‌ளின் குறைக‌ளைக் கேட்காம‌ல் அவ‌ர்க‌ளை மிர‌ட்டுவ‌திலேயே குறியாக‌ இருந்தார். மேலும் இது குறித்த‌ புகார் அளித்த‌ ஒரு ப‌ய‌ணியின் பாஸ்போர்ட்டை காவ‌ல்துறை மூல‌ம் வாங்கி மிர‌ட்ட‌ல் போக்கினை க‌டைப்பிடித்தார் என்றார்.

ப‌ய‌ணிக‌ள் அனைவ‌ரும் ஒட்டு மொத்த‌மாக‌ இந்த‌ விமான‌த்தில் தாங்க‌ள் செல்ல‌ மிக‌வும் ப‌ய‌மாக‌ இருக்கிற‌து. வேறு ஏற்பாடு செய்யுங்க‌ள் என‌க்கூறியும், இதே விமான‌த்திலேயே செல்ல‌ வேண்டும் என‌வும் க‌ட்டாய‌ப்ப‌டுத்தியுள்ளார்.

ந‌ள்ளிர‌வு 12.30 ம‌ணிவ‌ரையிலும் விமான‌ம் தயாராக‌வில்லை. ப‌ய‌ணிக‌ளுக்கு எவ்வித‌ மாற்று வ‌ச‌தியும் செய்து த‌ர‌ப்ப‌ட‌வில்லை. குழ‌ந்தைக‌ளுட‌ன் சென்ற‌ ப‌ய‌ணிக‌ள் விமான‌ நிலைய‌த்தில் மிகுந்த‌ அல்ல‌லுக்குள்ளாகின‌ர்.

க‌டைசியாக‌ கிடைத்த‌ த‌க‌வ‌லின்ப‌டி வியாழ‌க்கிழ‌மை இன்று காலை 5.30 ம‌ணிக்கு விமான‌ம் திருச்சி புற‌ப்பட்ட‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ 15 மணி நேரம் ஏர் இந்தியா எக்ஸ்பிர‌ஸ் நிர்வாக‌த்தின‌ரால் எந்த வ‌ச‌தியும் செய்து த‌ர‌ப்ப‌டாம‌ல் விமான‌ நிலைய‌ வ‌ளாக‌த்திலேயே த‌ங்க‌ள‌து இர‌வுப் பொழுதை க‌ழித்துள்ளனர் பயணிகள்.

தொட‌ர‌ட்டும்‌ இந்திய‌ தேசிய‌ விமான‌ நிறுவ‌ன‌த்தின் 'சேவை'!

Tuesday, November 17, 2009

யூத ரப்பிகளின் சர்வதேசக் கொள்கை.

சமீப காலமாக உலக மக்கள் அனைவரும் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப் படுவதை தவிர்க்க இஸ்லாத்தின் மீதும் முஸ்லீம்கள் மீதும் பல அநியாயங்களை கட்டவிழ்த்துவிட்டு, பின்னர் அந்த அநியாயங்களை பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் தட்டிக்கேட்டால் அவர்களை காட்டுமிராண்டிகள் என்றும் நாகரீகமற்றவர்கள் என்றும் அனைத்து ஊடங்களிலும் பரப்பும் இன வெறி பிடித்த யூத கிறித்தவர்களின் யோக்கிதை தற்பொழுது வெளியாகியுள்ளது.
தாங்கள் செய்யும் அக்கிரமங்களை பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், என்றோ ஹிட்லரால் நடத்தப்பட்ட யூதர்களின் படுகொலையை சொல்லி இதனை நீ மறுக்கிறாயா என்று எதிர் கேள்வி எழுப்புவார்கள் இந்த சியோனிஸவாதிகள். ஹிட்லர் யூதர்களை கொன்றதற்கும் தற்பொழுது இந்த சியோனிஸவாதிகள் அப்பாவி முஸ்லீம்களை கொல்வதற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று நமக்கு தெரியவில்லை.
தற்பொழுது நமக்கு கிடைத்துள்ள செய்தியாவது, "யூத ரப்பி ஒருவன் தான் எழுதிய புத்தகத்தில், யூதர்கள் அல்லாத மற்றவர்கள் யூதர்களுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ அச்சுறுத்தலாக தோன்றினால் அவர்கள் குழந்தைகளாகவும் சிறுவர்களாகவும் இருந்தாலும் கூட அவர்களை கொல்வது தான் சரி" என்று எழுதியுள்ளான்.
யூதர்கள் அல்லாதவர்களை, நல்லவர்களை, அவர்கள் யூதர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாத பொழுதும் அவர்களை கொல்ல யூதர்களுக்கு அவர்களின் வேதம் அனுமதியளிக்கிறது என்று Yitzhak Shapira என்ற ரப்பி தன்னுடைய The King's Torah என்ற புத்தகத்தில் எழுதியுள்ளான். அவன் கூறுகையில், "கோயெம் களை (இது யூதர்கள் அல்லாதவரை சிறுமைப்படுத்துவதற்காக கூறும் அடைமொழி) அவர்கள் இஸ்ரேலை அச்சுறுத்தினால் அவர்களை கொலை செய்யலாம்" என்று கூறுகின்றான்.
"பாவம் செய்த அல்லது யூதர்களின் 7 கட்டளைகளை ஏதாவது ஒன்றை மீறிய யூதர்கள் அல்லாதவர்களை கொலை செய்வது குற்றமில்லை. ஏனென்றால் யூதர்களுக்கு இறைவன் கொடுத்த அந்த 7 கட்டளைகள் தான் மிக முக்கியம். அதனால் கொலை செய்வது தப்பில்லை" என்று கூறுகின்றான்.
யூதர்களின் பள்ளி ஒன்றின் தலைமை பதவி வகிக்கும் ஷபிரா, அவனது இந்த கூற்றினை யூதர்களின் வேதமான தவ்ராத்தும் அங்கீகரிக்கின்றது என்று கூறுகின்றான்.
இவனின் இந்த கூற்று, இரண்டு அப்பாவி பாலஸ்தீனிய ஆடு மேய்ப்பவர்கள் இருவரை கொன்றதற்காக யூதன் ஒருவனை இஸ்ரேலிய காவல் துறையினர் கைது செய்ததன் விளைவாக வெளிவந்துள்ளது.
இந்த சியோனிச தீவிரவாதி அமெரிக்காவில் பிறந்து இஸ்ரேலில் குடியேறிய யாகொவ் டேயிடேல் என்பவனாவான். இவன் நடுநிலை வகிக்கும் யூதர்களையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தான் என்பதும் இவனது வாக்குமூலத்தின் வழியே தெரிய வந்துள்ளது.
இதேபோல் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன்பாக இகால் அமீர் என்பவன் முன்னாள் இஸ்ரேலிய பிரதமரான Premier Yitzhak Rabin என்பவரை கொலை செய்தான்.
மேலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனியர்கள் அவ்வப்போது இனவெறி பிடித்த யூதர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
1994 ல் Baruch Goldstein என்ற யூத வெறியன் ஒருவன் மேற்குக் கரையில் உள்ள அல் இப்ராஹிமி பள்ளிவாசலில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினான். அதில் 29 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.
ஷபிராவின் இந்த புத்தகத்தை அவனைப்போல பல ரப்பிகளும் ஆதரிக்கின்றனர். இவனது இந்த் புத்தகத்தை வெளிப்படையாக ஆதரித்த ரப்பிகள் Yitzhak Ginsburg மற்றும் Ya’akov Yosef ஆகியோராவர்.
இதில் Ginsburg கொலைகாரன் Goldstien ஐ தெய்வீகமானவர் என்று வர்ணித்துள்ளான்.
ஷபிராவின் பாலஸ்தீனியர்கள் மற்றும் யூதரல்லாதவர் மீதான இந்த கருத்து, பெரும்பாலான யூத சமுதாயத்தின் மனநிலையை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது.
கடந்த ஜனவரியில் இஸ்ரேலின் காசாமீதான தாக்குதலின் போது யூத ரப்பிகளில் மிகவும் பிரசித்திப் பெற்ற ரப்பியான Mordecahi Elyahu என்பவன் இஸ்ரேலிய படைகளிடம், "உங்கள் வீரர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் எதிரியின் குழந்தைகளை கொல்வதற்கு கூட தயங்காதீர்கள்" என்று கூறியுள்ளான்.
இவன் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் பாலஸ்தீனின் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மீது Carpet Bombing (இது குறிப்பிட்ட இலக்கு என்றில்லாமல் ஒரு பகுதியை மொத்தமாக அழிப்பதற்காக பயன்படுத்தக் கூடியது.) நடத்துவதற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளான்.
அவன் மேலும் கூறியதாவது, " நாம் அவர்களில் 100 பேரை கொன்றதும் அவர்கள் தங்களின் எதிர்ப்பை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் அவர்களில் 1000 பேரை நாம் கொல்ல வேண்டும். 1000 பேரை கொன்றும் அவர்கள் நிறுத்தவில்லை என்றால் அவர்களில் 10000 பேரை கொல்ல வேண்டும், அவர்களில் 10000 பேரை கொன்றும் அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் 100000 பேரை கொல்ல வேண்டும். இன்னும் அவர்களை தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்று கூறியுள்ளான்.
Jewish History, Jewish Religion: the Weight of Three Thousand years என்ற புத்தகத்தை எழுதிய இஸ்ரேல் ஷஹக் என்பவனின் கூற்றுப்படி, "மனிதன் என்ற சொல்லாக்கம் யூதர்களை மட்டுமே குறிக்கும்" என்று கூறியுள்ளான்.
மேலும் இஸ்ரேலில் உள்ள பல ரப்பிகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் அப்பாவிகளை கொல்லக்கூடாது என்பதெல்லாம் கிறித்தவர்களின் சட்டமென்றும் அது யூதர்களுக்கு பொருந்தாது என்றும் கூறுகிறார்கள்.
2006 இல் நடந்த யூத குடியிருப்புகளில் உள்ள ரப்பிகளின் கூட்டமைப்பு, கிறித்தவர்களின் சட்டங்களை புறக்கணித்து லெபனான் மற்றும் காசாவில் உள்ள எதிரிகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இது போன்ற இன வெறியை தூண்டும் கருத்துக்கள் சர்வதேச அளவிலும் சரி, இஸ்ரேலின் உள்ளும் சரி யாரிடமும் இது அடிப்படைவாத கொள்கையாகவோ, மனித நெறிகளுக்கு முரணாகவோ தோன்றவில்லை.

Monday, November 16, 2009

இளம் பெண் வன்புணர்ந்து கொலை! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கடலூர்: இரவில் தோட்டத்திற்கு சென்ற இளம் பெண்ணை மர்ம நபர்கள் வன்புணர்ந்து கொலை செய்த போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் பச்சையாங்குப்பம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி கவுரி.
இவர்களுக்கு இந்துமதி(19), இலக்கியா(16), இனிதா(12) என்ற மூன்று மகள்கள் உள்ளனர். தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த இந்துமதி கடந்த ஆறு மாதமாக வேலைக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இந்துமதி தனது தந்தையிடம் கூறிவிட்டு தோட்டத்திற்கு சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் மகளை தேடி தோப்பிற்கு சென்றபோது, இந்துமதி ஆடைகள் கிழிந்த நிலையில் மயங்கி கிடந்தார்.
இந்நிலையில் கடலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, இந்துமதி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் கூறினார்.டி.எஸ்.பி.,க்கள் ஸ்டாலின், அரிகிருஷ்ணன், முதுநகர் நகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஏழுமலை, சப்- இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
அங்கு கிழிந்த குடை ஒன்றும், இந்துமதியின் காலணி, அவர் பயன்படுத்திய செல்போனின் "பேட்டரி' கிடந்தது. மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. பச்சையாங்குப்பம் கிழக்குத் தெரு வழியாக ஜெ.கே., கம்பெனி சாலை வரை சென்றுத் திரும்பியது.கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, இந்திமதி எதற்காக செல்போன் பேட்டரியை மட்டும் எடுத்து சென்றார் அவருக்கு ஏதேனும் மிரட்டல் போன் வந்ததா. என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Thursday, November 12, 2009

வெடிபொருள்கள் பறிமுதல்; முன்னாள் இராணுவ வீரர் கைது!

முன்னாள் இராணுவ வீரர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உத்திரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தின் லால்கஞ்ச் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் முன்னாள் இராணுவ வீரர் ஆவார். ஷ்யாம் சுந்தர் பட்டேல் என்ற அந்த இராணுவ வீரரும் ராம்ஜி பட்டேல் என்பவரும் மத்தியப் பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களிடமிருந்து சுமார் 4,000 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 4,000 எலெக்ட்ரானிக் டெடனேட்டர் ஆகியவை மிர்சாபூர் மாவட்டத்தில கைப்பற்றப்பட்டன. இந்தப் பொருள்கள் 9 சாக்குப் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கோவை மாநகராட்சி வ.உ.சி., பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலையில் - காதல் லீலைகள்

கோவை மாநகராட்சி வ.உ.சி., பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலையில் ஆண், பெண் ஜோடிகள் பொது இடமென்று பார்க்காமல் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக ஒழுங்கை சீர்குலையச் செய்யும் இவர்களை, மாநகராட்சி நிர்வாகமும், போலீசும் வேடிக்கை பார்ப்பது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.




வ.உ. சி., பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டதும் ஆண், பெண் ஜோடிகள் நுழைந்து ஆங்காங்கு ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். புல்வெளியில், புதர் மறைவில், மரத்தின் பின்னால் என பல இடங்களிலும் தனியாக அமர்ந்து காதல் லீலைகளில் ஈடுபடுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும், கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதும், மடியில் படுத்தபடியும் காதல் விளையாட்டு புரிகின்றனர். இவர்களில் பலரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், பூங்காவுக்கு வருவோரை பற்றிய எவ்வித கவலையும் கொள்வதில்லை. சமீபத்தில், இது போன்ற ஜோடிகளின் அத்துமீறல் அதிகரித்ததை தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் போலீசுக்கு அதிகளவில் புகார்கள் சென்றன. மாலை நேரத்தில் திடீர் ரெய்டு நடத்திய போலீசார், பூங்காவில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டிருந்த ஜோடிகளை பிடித்து கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பினர். ஓரிரு நாட்கள் போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்த காரணத்தால், ஜோடிகளின் சில்மிஷ வேலைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பின்னாளில் போலீசாரின் கண்காணிப்பு படிப்படியாக குறைந்து, தற்போது அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதை வேடிக்கை பார்த்து ரசிக்கவும், மொபைல் போன் கேமராவில் படம் பிடிக்கவும் சில வாலிபர்கள் சுற்றித்திரிகின்றனர்; சில ஜோடிகளை படம் பிடித்து மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட போட்டோவை காண்பித்து மிரட்டி பணம் பறித்த சம்பவங்களும் நடந்துள்ளன. எனினும் ஆண், பெண் ஜோடிகள் வருவது குறைந்தபாடில்லை.




வ.உ.சி., பூங்காவில் காதல் ஜோடிகளின் சில்மிஷ செயல்கள் ஒரு புறம் அதிகரித்திருக்க, மறுபுறம் பள்ளி மாணவர்கள் வகுப்பை புறகணித்து பூங்கா மற்றும் வ.உ.சி.,மைதானத்தில் சுற்றித்திரிவதும் அதிகம் நடக்கிறது. புத்தக மூட்டைகளை மைதானத்தின் ஓரத்தில் வைத்துவிட்டு, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடுகின்றனர். மாலை நேரத்தில் பள்ளி வகுப்பு முடிந்து செல்வதை போல, வீட்டுக்கு கிளம்பிச் செல்கின்றனர். இந்த மாணவர்களில் சிலர் புகை பிடிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.




இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பொதுமக்கள் வந்து செல்லும் வ.உ.சி., பார்க்கில் ஆண், பெண் ஜோடிகளின் காதல் விலையாட்டு அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வரவும் மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம்.

Tuesday, November 10, 2009

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி

சென்னை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்று தற்கொலை என நாடகம் போட்ட மனைவியையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, ஆவடி வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வசித்து வந்தவர், சுதாகர் (38) ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரது மனைவி ஷீலா (32). இவர்களுக்கு நிவேதிதா (8) என்ற மகளும், விஜய் (2) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த மாதம் 26-ந் தேதி சுதாகர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி ஷீலா ஆவடி போலீஸ் நிலையத்திற்கு அதிகாலை 3 மணிக்கு போன் செய்து எனது கணவர் சுதாகரை யாரோ மர்ம ஆசாமிகள் கொலை செய்து விட்டு போகும் போது வீட்டின் கதவை வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றதாக கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையிலான போலீசார் சுதாகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிரேத பரிசோதனையில் சுதாகர் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
பிணத்தை மனைவியிடம் ஒப்படைத்த போலீசார் இறுதிச் சடங்கு முடியும் வரை மவுனம் காத்தனர். எனினும், சுதாகரின் மனைவியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது ஷீலா அதிகநேரம் செல் போனில் யாரோ ஒருவருடன் பேசுவது தெரியவந்தது. உஷாரான போலீசார் ஷீலா உபயோகப்படுத்தும் செல்போனின் விவரங்களை சேகரித்தனர்.

அதில், தினமும் இரவில் மணிக்கணக்கில் ராஜேஷ் (24) என்பவருடன் அவர் பேசியது தெரியவந்தது. ராஜேஷை பற்றி விசாரித்த போது, அவர் சுதாகரின் அக்காள் மகன் என்பதும் அவருக்கு சுதாகர் கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் நிறுவனம் வைத்து கொடுத்ததும் தெரிய வந்தது. பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சிணை காரணமாக காரை திரும்ப வாங்கிக் கொண்டு சுதாகர் ராஜேஷைத் துரத்தியதும் விசாரணையில் தெரிந்தது.

குண்டாக - அசிங்கமாக இருப்பார்...

இதையடுத்து இருவரிடமும் துருவி, துருவி போலீசார் விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதுகுறித்து ஷீலா போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலம்:

எனது கணவர் சுதாகர் எனக்கு மாமன் முறை ஆகும். ரியல் எஸ்டேட் தொழிலில் கைநிறைய சம்பாதித்தார். உடல் பருமன் ஆகி குண்டாக இருப்பார். இதனால், வெளியில் அவருடன் செல்வதற்கு எனக்கு அசிங்கமாக இருக்கும். மேலும் உடல் பருமனாக இருப்பதால் அவரால் என்னுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லை.

அவரது அக்கா மகன் ராஜேஷிற்கு கார் ஓட்ட தெரியும் என்பதால் அவனுக்கு வங்கியில் கடன் பெற்று ஒரு கார் வாங்கி கொடுத்து டிராவல்ஸ் நிறுவனம் வைத்து கொடுத்தார்.

மாமி மாமி என்று பாசமாக இருப்பார் ...

ஒருநாள் கடைக்கு செல்லவேண்டும் என்று என் கணவரிடம் கூறினேன். அவரோ ராஜேஷுடன் காரில் அனுப்பி வைத்தார். அவனும் என்னை மாமி மாமி என்று பாசமாக அழைத்தான். அவனது அன்பில் நான் மயங்கினேன்.

என்னை விட 8 வயது குறைந்த ராஜேஷுடன் உல்லாசமாக இருக்க முடிவு செய்தேன். ஒருநாள் தலைவலிக்கிறது என்று பாசாங்கு செய்தேன். அவனும் தைலம் தேய்த்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று அவனை இழுத்து அணைத்துக் கொண்டேன்.

அன்று முதல் தினசரி உல்லாசமாக இருப்போம். இந்த கள்ள உறவு என் கணவருக்கு தெரிந்து விட்டது. அவர் இருவரையும் கண்டித்தார். இதைத் தொடர்ந்து தினமும் எனக்கும் அவருக்கும் சண்டை வந்தது. என்னால் ராஜேஷை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

ஒருநாள் நான் உணர்ச்சி வசப்பட்டு, இனி என் கணவன் உயிருடன் இருந்தால் நாம் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பில்லை என்று கண்ணீர் மல்க கூறினேன். இதைக் கேட்டு மனமுடைந்த ராஜேஷ் விரைவில் சுதாகருக்கு முடிவு கட்டிவிட்டு உன்னுடன் காலமெல்லாம் வாழ்வேன் என்று கூறினான்.

சம்பவத்தன்று நாங்கள் எதிர்பார்த்தது போல் வீட்டிற்கு வந்த சுதாகர் உடனடியாக அசந்து தூங்கி விட்டார். இந்த தகவலை செல்போன் மூலம் ராஜேஷிற்கு நான் கூறினேன்.

அதன்படி ராஜேஷ் நைலான் கயிற்றுடன் எங்கள் வீட்டிற்கு வந்தான். பின்னர் இருவரும் சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சுதாகரின் காலை டவலால் கட்டிபோட்டோம். ராஜேஷ் நைலான் கயிற்றால் இறுக்க நான் கணவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பிடித்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் எனது கணவர் துடித்து, துடித்து செத்தார்.

பிணத்தை வைத்துக் கொண்டு உல்லாசம்...

சுதாகர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நாங்கள் இருவரும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்தோம். பின்னர், வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு ஒன்றும் தெரியாதது போல் ராஜேஷ் அவனது வீட்டிற்கு சென்று படுத்துவிட்டான்.

மறுநாள் சுதாகரை எழுப்புவது போல் நடித்தேன். அவர் பிணமாக இருந்தார். அழுது புலம்பி ஊரை கூட்டினோம். எல்லோரும் நம்பினார்கள். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் அல்லது அவரே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்ப வைத்தோம். ஆனால் போலீசார் எங்களை கண்காணித்து பிடித்துவிட்டனர் என்று கூறியுள்ளார் ஷீலா.

ஷீலா, ராஜேஷை போலீஸார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Wednesday, November 4, 2009

வந்தே மாதரம் : எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!

1.வந்தே மாதரம் : எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!
2."வந்தே மாதரமா' ?? "வந்தே ஏமாத்துறோமா' ???
3.`வந்தே மாதரம்' பாடலுக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு -பா.ஜனதா கடும் கண்டனம்

1.வந்தே மாதரம் : எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!

சக மனிதர்களைக் கூட நம்ப மறுக்கும் அளவிற்கு நாட்டு மக்களை நிரந்தர பயத்தில் ஆழ்த்துவதற்காக ""முஸ்லீம் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, முக்கிய தலைவர்களைக் கொல்ல தீவிரவாதிகள் சதி'' என்ற வழக்கமான பீதியை மீண்டும் ஒருமுறை அனைத்து ஊடகங்களும் ஆகஸ்ட் 15ஐ முன்னிட்டு உரக்கச் சொல்லி ஓய்வதற்குள், அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது

""தேசபக்தி'' பஜனையும் அதையொட்டிய லாவணிக் கச்சேரிகளும்.
மைய அமைச்சர் அர்ஜுன் சிங், "வந்தே மாதரம்' பாடலின் நூற்றாண்டு விழாவினை முன்வைத்து, செப்டம்பர் ஏழாம் தேதியன்று நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக "வந்தே மாதரம்' பாடவேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதைத் தொடர்ந்து, தேசபக்தியை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க. கும்பல், பாட மறுப்பதை தேசத் துரோகமாகச் சித்தரித்து, சிறுபான்மையினருக்கு எதிரான தனது வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தான் ஆளும் மாநிலங்களில் இப்பாடலைப் பாடவேண்டியது கட்டாயம் என உத்தரவிட்டது.

குறிப்பாக அம்மாநிலங்களில், அனைத்து மதரஸாக்களும் இந்தப் பாடலைத் தங்களது மாணவர்களைக் கட்டாயமாகப் பாடச் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் அடிமை வேலை செய்யும் ""அம்பி''கள் அனுப்பும் அமெரிக்க டாலரை நன்கொடையாக வாங்கிக் குவிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பன்னாட்டுத் தலைவரான அசோக் சிங்கால், ""வந்தே மாதரத்தைப் பாட மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று பேட்டி கொடுத்துள்ளார். மறுபுறம், ""சுதந்திரப் போராட்டக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த இந்தப் பாடலைப் பாட மறுப்பது தேசத்துரோகச் செயல்'' என ஆட்சியாளர்களால் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

"திராவிட நாடு' கேட்டுக் கொண்டிருந்தபோது, இதே பாடலை "வந்தே ஏமாத்துறோம்' என நக்கலடித்த கருணாநிதியோ, இன்று பெருமுதலாளியாகி, தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதால், "பாட வேண்டியது கட்டாயமில்லை' என்று இந்தப் பஜனைக்குச் சுருதி தப்பாமல் பின்பாட்டுப் பாடுகிறார். சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில், சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி ஒரு மைல் நீளத்துக்கு தேசியக் கொடியைத் தெருவெங்கும் பரத்திப் பரவசப்பட்டவர்கள்தானே இவர்கள்! சமயம் கிட்டும்போதெல்லாம் ""கழக அரசுதான் கார்கில் நிதியை அதிகமாகக் கொடுத்தது'' என்று தம்பட்டம் அடித்து இந்திய தேசிய சாக்கடையில் மூழ்கவும் தயங்காத இவர்கள், இம்முறை பா.ஜ.க.வின் பஜனையில் கரைந்து போனது ஆச்சரியமில்லைதான்.

இவர்கள்தான் இப்படி என்றால், மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிஸ்டும், தரகு முதலாளிகளின் கையாளுமான புத்ததேவ் பட்டாச்சார்யாவும், ""அனைவரும் பாடலாம்; ஆனால் பாடவேண்டியது கட்டாயம் இல்லை'' என்று கூறி ஒதுங்கிவிட்டார். மதச்சார்பின்மைக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், பா.ஜ.வின் இந்து தேசியவெறியை எதிர்க்கத் துப்பில்லாமல், காங்கிரசும் பா.ஜ.க.வோடு ஓரணியில் நிற்பதைப் பார்த்து அடங்கிப் போய் மவுனம் காக்கின்றனர்.

முதலில் இந்த ஆண்டு, வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டே அல்ல. 1870களில் எழுதப்பட்டு 1882இல் ஒரு நாவலில் சேர்க்கப்பட்ட ஒரு பாட்டுக்கு இந்த ஆண்டுதான் நூற்றாண்டு எனத் திடீரென விழா எடுப்பதற்கு அவசியமென்ன வந்தது? அமெரிக்காவின் அடியாளாக மாறிக் கொண்டிருக்கும் இந்த அரசு சமீபத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு, அணுசக்தி விஞ்ஞானிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்து சேர்ந்து, தனது முகமூடி கிழிந்து தொங்கியதாலும், மறுகாலனியத் தாக்குதலால் உழைக்கும் மக்களிடம் வெறுப்பும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆத்திரமும் பெருகி வருவதாலும், பிரச்சினையைத் திசைதிருப்பி தேசபக்தித் தீயை மூட்டிக் குளிர்காய அரசு நினைத்தது. ஆளும் கட்சியினருக்கு இது ஒன்றும் புதியதல்ல; முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது தேசிய வெறியைக் கிளப்ப போக்ரானில் அணுகுண்டு வெடித்தும், பிரச்சினைகள் முற்றியபோது எல்லைப்புறத்தில் சிப்பாய்களைக் கொண்டு போய் நிறுத்தி தோட்டா ஒன்றைக் கூடச் சுடாமல் "போர் பீதி'யை கிளப்பியதும் யாவரும் அறிந்ததுதான்.

கட்சிக்குள் நிலவும் கோஷ்டி தகராறால் உமாபாரதி வெளியேற்றம், போதைப் பொருள் உபயோகித்துக் கையும் களவுமாய் மாட்டிய ராகுல் மகாஜன் விவகாரம், ஜார்கண்ட் மாநிலத்தில் பறிபோன ஆட்சி, முக்கிய தலைவர்களின் ஒழுக்கக்கேடுகள் ""வீடியோ சிடி''களாக வெளிவந்த விவகாரம் என அழுகி நாறிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.விற்கு, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வரப்போகும் உ.பி., போன்ற மாநிலங்களின் தேர்தலுக்கு உதவிட அருமருந்தாய் இந்த வந்தே மாதரம் விவகாரம் கிடைத்தவுடன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. "முஸ்லீம்கள் பாட மறுக்கிறார்கள், அதனால் அவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள்' என மக்களிடையே இந்துமுஸ்லீம் பிளவைக் கூர்மைப்படுத்தி, தனது இந்துவெறி ஓட்டு வங்கியைத் தூசு தட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே "கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் வெடி போடுகிறார்கள்' என்று முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லி வந்த அவதூறின் தொடர்ச்சியாக "வந்தே மாதர' விவகாரத்தை அக்கட்சி கையில் எடுத்துக் கொண்டது. செப்டம்பர் 7ஆம் தேதியன்று காங்கிரசு தலைவி சோனியா "வந்தே மாதம்' பஜனையில் கலந்து கொள்ளாததை ஊதிப் பெருக்கி ""சிறுபான்மையினரை தாஜா செய்கிறார்'' என்று தனது மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?

1882ஆம் ஆண்டு வெளிவந்த ""ஆனந்த மடம்'' எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் "வந்தே மாதரம்'. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.

1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது "வந்தே மாதரம்' பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.

""இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்'' என்றும், ""இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்'' என்றும் ""நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!'' என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.

""இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை'' என்றும் ""இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்'' என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, ""பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.

முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?

வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது?

பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.

இந்தத் தாயைப் ""அகண்ட பாரத மாதா''வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை "தேசிய கீதமாக்க' காங்கிரசுக் கட்சி முயன்றது.

இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ""வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது'' என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?

முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக ""ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்'' என்றும் ""இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்'' என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.

நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் "வந்தே மாதரம்' பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.

வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி'' SONY தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும்.

போலியான தேசபக்தி அரட்டைக் கச்சேரி செய்யும் காங்கிரசு கும்பலோ தாம் ஆண்ட ஐம்பது ஆண்டுகளில் அடுத்தடுத்து நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து, இந்திய ராணுவத்திற்கு போர் விமானம், போபர்சு பீரங்கி, நீர் மூழ்கிக் கப்பல் வாங்குவதிலும் ஊழல் செய்து திளைத்தது. அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, "வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி' எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேச பக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா?

ஒரு நாடு என்பது நாட்டு மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களையும் பண்பாட்டையும் குறிப்பதாகும். நாட்டு மக்களின் மீதும், நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன், அந்நிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராகவும், நாட்டு மக்கள் நலன் மீது மாளாக் காதலுடனும் போராடுவதே உண்மையான நாட்டுப் பற்றாகும். இதைச் செய்யாமல் தேசத்துரோக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டு, "வந்தே மாதரம்' பஜனை பாடுவது நாட்டுப் பற்றாகாது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரத்தைவிட வேறு இரண்டு முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. அவை: சுபாஷ் சந்திரபோஸின் ""ஜெய்ஹிந்த்'' மற்றும் பகத்சிங்கின் ""இன்குலாப் ஜிந்தாபாத்'' 1929இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்தைக் கண்டித்துப் போராடும் விதமாக வெடிகுண்டு வீசியபோதும், பின்பு ராஜகுரு, சுகதேவுடன் தூக்கிலிடப்பட்டபோதும் பகத்சிங் முழங்கியது இதே "இன்குலாப் ஜிந்தாபாத்'தான். அத்தகைய தேசப்பற்றாளனின், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் பிறந்தநாள் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.

""புரட்சி ஓங்குக!'' (இன்குலாப் ஜிந்தாபாத்!) என பகத்சிங் முழங்கிய முழக்கம்தான் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நூற்றாண்டும் புரட்சியின் நூற்றாண்டாக இருக்கப் போகிறதே அன்றி, இந்துவெறி தேசியவெறிக்கானதாக இருக்கப் போவதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் நாட்டுப்பற்றும் மதச்சார்பின்மையும் கொண்ட புரட்சியின் முழக்கம்தான் இனி நாடெங்கும் எதிரொலிக்கப் போகிறதே தவிர, ஏகாதிபத்திய கைக்கூலிகளின் வந்தேமாதரம் பஜனை அல்ல.

மு அன்பு
Written by புதிய ஜனநாயகம் Sunday, 08 October 2006 21:23 புதிய ஜனநாயகம் 2006

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&catid=35:2006&id=1281:2008-05-08-20-29-19
***********************
2."வந்தே மாதரமா' ?? "வந்தே ஏமாத்துறோமா' ???
1937 இல் பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

இதே பாடலை "வந்தே ஏமாத்துறோம்' என நக்கலடித்த கருணாநிதி;

இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் அடிமை வேலை செய்யும் ""அம்பி''கள் அனுப்பும் அமெரிக்க டாலரை நன்கொடையாக வாங்கிக் குவிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பன்னாட்டுத் தலைவரான அசோக் சிங்கால், ""வந்தே மாதரத்தைப் பாட மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று பேட்டி கொடுத்துள்ளார்.

மக்களைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த இந்தப் பாடலைப் பாட மறுப்பது தேசத்துரோகச் செயல்'' என ஆட்சியாளர்களால் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

முதலில் , வந்தே மாதரம் . 1870களில் எழுதப்பட்டு 1882இல் ஒரு நாவலில் சேர்க்கப்பட்ட ஒரு பாட்டு;

வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?

1882ஆம் ஆண்டு வெளிவந்த ""ஆனந்த மடம்'' எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் "வந்தே மாதரம்'. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது.

அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது "வந்தே மாதரம்' பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.

""இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்'' என்றும், ""இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்'' என்றும் ""நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!'' என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.

""இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை'' என்றும் ""இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்'' என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, ""பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.

முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?

வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய்.

பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.இந்தத் தாயைப் ""அகண்ட பாரத மாதா''வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை "தேசிய கீதமாக்க' காங்கிரசுக் கட்சி முயன்றது.

இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ""வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது'' என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?

முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக ""ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்'' என்றும் ""இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்'' என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.

நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் "வந்தே மாதரம்' பிறந்துள்ளது.

இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.

வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி''தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும்.

அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, "வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி' எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேச பக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா?


SOURCE: VIDUTHALAI.COM
******************
3.`வந்தே மாதரம்' பாடலுக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு -பா.ஜனதா கடும் கண்டனம்


புதுடெல்லி, நவ.4-
`வந்தே மாதரம்' பாடலுக்கு ஒரு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உம்ளது. இஸ்லாமியர்கம் யாரும் `வந்தே மாதரம்' பாடலை எப்போதும் பாடக் கூடாது என்று அந்த அமைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு
தாருல் உலூம் என்ற இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் நீதி பரிபாலனத்துறை கடந்த 2006-ம் ஆண்டு ஒரு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் ``வந்தே மாதரம் பாடல் இஸ்லாமியத்துக்கு எதிரானது. ஆகவே அந்த பாடலை முஸ்லிம்கம் யாரும் பாட வேண்டாம். எந்த முஸ்லிம் நிகழ்ச்சியிலும் அந்த பாடலை பாடக் கூடாது'' என்று கூறி இருந்தது.
இந்த தீர்ப்புக்கு இன்னொரு முஸ்லிம் அமைப்பும் நேற்று ஆதரவு தெரிவித்து, `வந்தே மாதரம்' பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

சிதம்பரம் முன்னிலையில் தீர்மானம்
அந்த முஸ்லிம் அமைப்பின் பெயர் ஜாமியத் உலாமா-இ-ஹிந்த் ஆகும். இந்த அமைப்பின் 30-வது பொதுக்குழு கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் டியோபாண்ட் என்ற இடத்தில் நேற்று நடந்தது. நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரம் இஸ்லாமிய குருமார்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு மத்திய உம்துறை மந்திரி ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 25 தீர்மானங்களை அந்த அமைப்பு நிறைவேற்றியது. அதில் ஒரு தீர்மானத்தில் ``தாருல் உலூம் கடந்த 2006-ம் ஆண்டு வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது, எந்த முஸ்லிம் நிகழ்ச்சியிலும் சேர்க்கக் கூடாது என்று அளித்த தீர்ப்பு மிகவும் சரியானது. சுப்ரீம் கோர்ட்டு கூட வந்தே மாதரம் பாடலை பாடும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று தெளிவாக தீர்ப்பளித்து உள்ளது. ஆகவே முஸ்லிம்கள் யாரும் வந்தே மாதரம் பாடலை பாடக் கூடாது. முஸ்லிம்களின் நிகழ்ச்சியில் அந்த பாடலை சேர்க்கக் கூடாது'' என்று கூறப்பட்டு உள்ளது.

``தாயை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம், மதிக்கிறோம். ஆனால் அவரை வணங்க மாட்டோம். வந்தே மாதரம் பிரச்சினையை வேண்டுமென்றே ஒரு மதத்துக்கு எதிராக கிளப்பி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கக் கூடாது.
வந்தே மாதரம் பாடல் முஸ்லிம்களை குறிவைத்து எழுதப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்'' என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உம்ளது.
தாய் நாட்டை மதிக்கிறோம்

``தேசிய உணர்வுக்கு, தியாகத்துக்கு வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தாய் நாட்டை நாங்கம் (முஸ்லிம்கள்) மிகவும் நேசிக்கிறோம், மதிக்கிறோம். இதை பலமுறை நிரூபித்து இருக்கிறோம். ஆனால் வந்தே மாதரம் ஒரே கடவுள் என்ற எங்களது சித்தாந்தத்துக்கு எதிரானது'' என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உம்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை கண்டித்தும் தீர்மானங்கம் நிறைவேற்றப்பட்டன. ``சிறுபான்மையினரிடம் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் மத்திய அரசு தங்களுக்கு சாதகமான வாக்குறுதிகம் அளிப்பதை நிறுத்திக்கொண்டு, சச்சார் கமிட்டி பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்'' என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும், மதரசா வாரியம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், அரசியல் சட்டம் 377-வது பிரிவை அமல்படுத்தக் கூடாது என்றும், சிறுபான்மையினர் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்றும் பல தீர்மானங்கள் மத்திய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டன.

பா.ஜனதா கண்டனம்
முஸ்லிம் அமைப்பு வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

அந்த கட்சியின் தேசிய துணைத்தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி இது பற்றி கூறும்போது, ``நாங்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடி எந்த நிகழ்ச்சியையும் தொடங்குகிறோம். ஆனால் இந்த முஸ்லிம் அமைப்பு தேசிய கீதத்துக்கு எதிராக தொடங்கி உள்ளது. ஒரு மத்திய மந்திரி முன்னிலையில் வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருப்பது அவரும் அதை நியாயப்படுத்துவது போல உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய மந்திரி சிதம்பரம் பேசுகையில், இது பற்றி ஏதாவது கூறி இருக்கலாம். ஆனால் வந்தே மாதரம் பற்றிய தீர்மானம் பற்றி எதுவும் சொல்லாமல், பாபர் மசூதி இடிப்பு, மத கலவரம் பற்றி மட்டுமே பேசி இருக்கிறார். மந்திரி சிதம்பரம் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் தெளிவு படுத்த வேண்டும்'' என்று தெரிவித்தார்.

முரளி மனோகர் ஜோஷி
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், ``வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்றுக் கொம்ள முடியாது. அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரம் பாடல் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. நாட்டு பற்று உடைய ஒவ்வொருவரும் பாடவேண்டிய பாடல் இது'' என்று தெரிவித்தார். SOURCE : DINATHANDHI
+++++++++++++++++++++++++++++

அல்லாவைத்தவிர வேறு எதையும் வணங்கக்கூடாது என்பதே இஸ்லாமின் அடிப்படையாகும், தாய்நாட்டை உயிரினும் மேலாக மதிக்கலாம், அதை வணங்கத் தேவையில்லை.அதுபோன்றே வணங்குகிறேன் என்றும் தேசபக்தி என்றும் சொல்லிக் கொண்டே தாய்நாட்டிற்கு துரோகம் செய்வதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.