Wednesday, December 31, 2008

'திருடப்போனவனுக்கு தேள்கொட்டிய கதை


தலைமை அலுவலகத்தில் ரூ.2.6 கோடி மாயம்

டெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2.6 கோடி பணம் மாயமாகியுள்ளது. இது கட்சிக் கணக்கில் வராத, எந்த வழியில் வந்தது என்பதற்கு ரசீது இல்லாத பணம் ஆகும். இதனால் போலீசிடம் புகார் தர பாஜக தயக்கம் காட்டி வருகிறது.

டெல்லி அசோகா சாலையில் பாஜகவின் தலைமை அலுவலகம் உள்ளது. அங்குள்ள ஒரு அறையில் பணத்தை இருப்பு வைத்திருப்பது வழக்கம்.

அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 2.6 கோடி பணத்தைக் காணவில்லை என்று பாஜகவின் தலைமை காசாளர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமைதான் பணம் திருட்டுப் போனது தெரிய வந்தது. அதற்கு முதல் நாள் கிருஸ்துமஸ். அன்று அலுவலகம் திறக்கப்படவில்லை. அதை பயன்படுத்திக் கொண்டு யாரோ பணத்தை திருடிச் சென்றுள்ளதாக தெரிகிறது.
24ம் தேதிதான் அந்தப் பணம் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. கட்சி நிர்வாகிகள் பலரும் தலைமைக் கழக அலுவலக வளாகத்தில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையி்ல் பணம் திருட்டுப் போயுள்ளது பாஜக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பல வருடங்களாகவே நலின் தாண்டன் என்ற கட்சியின் மூத்த நிர்வாகிதான் பண விவகாரத்தை கையாண்டு வருகிறார். இவர்தான் தலைமைக் காசாளராகவும் இருக்கிறார். அவர்தான் பணம் திருட்டுப் போனதைக் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளார்.

பணம் வைக்கப்படும் அறைக்குப் போகும் அனுமதி பெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர். கட்சிக்காரர்கள் யாரேனும்தான் இதை செய்திருக்க முடியும் என சந்தேகிக்கப்படுகிறது. காரணம், அலுவலகத்தின் பூட்டுக்கள் எதுவும் உடைக்கப்படவில்லை. அதேசமயம், பணம் வைக்கப்பட்டிருந்த சிறிய அறையின் கதவு மூடப்படவில்லை.

இதற்கிடையே, இந்தப் பணத்தை இதுவரை கட்சிக் கணக்கில் சேர்க்கவில்லையாம். தேர்தலுக்காக இது வசூலிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எந்த வகையில் இந்தப் பணம் திரட்டப்பட்டது என்தற்கும் கட்சியிடம் ரசீது இல்லை. (இனிமேல் உருவாக்கினால் தான் உண்டு). கணக்கில் இல்லாத பணம் என்பதால் (கிட்டத்தட்ட பிளாக் மணி மாதிரி) போலீஸாரிடம் போக பாஜக தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது.

தற்போது தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றை அமர்த்தி விசாரணை மேற்கொண்டுள்ளதாம் பாஜக தலைமை.

பணம் காணாமல் போனது தொடர்பாக பாஜக வட்டாரத்தில் எந்தத் தகவலும் தெரிவிக்க மறுக்கின்றனர். கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்திடம் இதுகுறித்து கேட்டபோது, கருத்து கூறுவதற்கில்லை என்று மறுத்து விட்டார்.

டெல்லி போலீஸார் இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், நாங்களும் கேள்விப்பட்டோம். இருப்பினும் முறையான புகார் வராமல் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறுகின்றனர்.

தற்போது பாஜக தலைமை அமர்த்தியுள்ள துப்பறியும் நிறுவனம், தாண்டனை குறி வைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அவருக்குத் தெரியாமல் பணம் திருட்டுப் போயிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

மேலும், கட்சித் தலைமை அலுவலகத்தில் தங்கியிருப்பவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. பணம் வைக்கப்படும் அறைக்குப் போக அனுமதி பெற்றவர்களிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தாண்டன் பல வருடங்களாகவே காசாளராக இருந்து வருகிறார். இதை விட பெரிய தொகையை அவர் நிர்வகித்துள்ளார். எனவே அவரை சந்தேகப்படக் கூடாது என்று கட்சிக்குள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர் வாங்கும் சம்பளத்தை பார்த்தால், அவரிடம் இருக்கும் இன்னோவா காரும், அவரது ஆடம்பர வீடும், செலவுகளும் இடிக்கிறதே என்று அவர் மீது சந்தேகப்படுவோர் சுட்டிக் காட்டுகின்றனர்.

சமீபத்தில் கட்சியின் தலைமை அலுவலக ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு போர்க்கொடி உயர்த்தினர். அதுதொடர்பாக தாண்டனுக்கும், அலுவலக செயலாளர் ஷியாம் ஜாஜுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையெல்லாம் மனதில் வைத்தே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Islamic Hijri Calendar

Take a look at this:
http://al-habib.tripod.com/hijricalendar/hijricalendarcircle01.htm

தேவையான கோரிக்கையும், தேவையற்ற எதிர்ப்புகளும்!



இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளுக்கும் ஒர் ஒற்றுமை உண்டு. ஒரு முக்கிய சம்பவம் நிகழும் போதும் அதற்கு முந்தைய சம்பவங்கள் அனைத்தும் முக்கியமிழந்து போகும். அது பற்றிய விவாவதங்களும், செய்திகளும் குறைந்து போகும். அரசும், ஊடகமும் இதற்கு துணை நிற்கும். ஒருவகையில் இது திட்டமிட்ட சதியாகக்கூட இருக்கலாம். அந்த வகையில் பார்க்கும்போது தற்போதைய மும்பை தாக்குதலுக்கும் ஒரு வகையில் தொடர்பு இருப்பதனை நாம் மறுக்கவும் கூடாது, மறைக்கவும் கூடாது. எந்த ஊடகங்களை நாம் பார்க்க நேர்ந்தாலும் மும்பைத்தாக்குதல் பற்றிய ஏதாவது ஒரு முக்கிய செய்தி இடம் பிடித்திருக்கும். யாராவது ஒரு வெளிநாட்டு தலைவர் இந்தியாவிற்கு வந்து துக்கம் விசாரித்துவிட்டு சென்றிருப்பார். இந்திய அதிகாரிகளின் முகத்தில் மகிழ்ச்சி வழிந்தோடும். இது ஒரு புறம் இருக்கட்டும். இவர்களை விடுங்கள்!

இந்தியாவில் நடந்த ஏறக்குறைய அனைத்து குண்டு வெடிப்புகளூக்கும் ஆர்.எஸ்.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பின் குண்டர்கள்தான் காரணம் என்ற உண்மை செய்தி கசிந்ததே அதனை நாம் எப்படி மறந்தோம்? உண்மையை மறைக்க நினைத்தவர்களுக்கு நாம் மறந்த போன விஷயம் ஊக்கமாக மாறுவதற்கு முன்பு நாம் விழித்துக்கொள்ள வேண்டும். நல்லவேளையாக அப்துல் ரஹ்மான் அந்துலே என்ற அமைச்சர் இது பற்றி நாடாளுமன்றத்திலேயே குரல் எழுப்பி இந்தியா முழுவதும் உள்ள எம்போன்றவர்களின் நியாயமான எதிர்பார்ப்பினை நிறைவேற்றியிருக்கிறார்.

மாலேகான் உள்ளிட்ட நாட்டில் நடந்த பல குண்டுவெடிப்புகளில் ஹிந்து பயங்கரவாதிகளின் சதித்திட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கர்கரே கொல்லப்பட்டிருப்பதனால் இதுபற்றி தனியானதொரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். சாதாரண குடிமகனின் குரலை அவர் அங்கு ஒலித்தார். உடனே பா.ஜ.க மற்றும் சிவசேனை உறுப்பினர்கள் பொங்கி எழுந்து அந்துலே மீது வசைமாறி பொழிந்தனர். யாருக்கும் அஞ்சாது துணிச்சலுடன் குரல் எழுப்பிய அந்துலேயை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கூச்சலிட்டனர். அதிலும் சிலர் ஒருபடி மேலே போய் அந்துலே பாகிஸ்தானின் கையாளாக செயல்படுகிறார் என்றும் கூச்சலிட்டனர். துரதிஷ்டவசமாக காங்கிரஸ் கட்சியும் அந்துலே பக்கம் நிற்காமல் சங்பரிவாரத்தினருக்கு ஆதரவு கரம் நீட்டியது மிகவும் கேவலமானது. விசாரணை என்றவுடன் சங்பரிவாரத்தினருக்கு ஏன் இவ்வளவு பயம்? விசாரணை தானே கோரினார். சாத்விக்கள் பழி தீர்த்தனர் என்று கூறவில்லையே. பிறகு ஏன் இப்படி அலறுகிறார்கள்? நாட்டின் மீது உண்மையான பற்றுக்கொண்ட கோடானுகோடி மக்களின் மனசாட்சியை நாடாளுமன்றத்தில் பிரதிபலித்ததனாலா? இல்லை விசாரணையில் தங்களின் முகமூடி கிழிந்துவிடும் என்ற பயத்தினாலா? சங்பரிவாரத்தினரின் கூச்சலுக்கு பயந்து காங்கிரஸ் வேண்டுமானால் அந்துலே மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர் எழுப்பிய கோரிக்கையை தொடர்ந்து மக்களின் மனதில் உள்ள நியாயமான சந்தேகங்களூக்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளட்டும். (முஸ்லிம்களுக்கு துரோகம் இழைப்பது காங்கிரஸுக்கு ஒன்றும் புதிதில்லையே).

1) கர்கரே தான் கொல்லப்பட்டதற்கு சில நாட்களூக்கு முன்பு பத்திரிக்கையாளர்களிடம் "சில அடிப்படைவாதிகளிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக" தெரிவிக்கிறார். இதற்கும் கர்கரே கொல்லப்பட்டதற்கும் தொடர்பு இருக்குமா என்பது பற்றி விசாரிப்பதில் என்ன தவறு இருக்கிறது.

2)கர்கரேவை கொன்றவர்கள் காவல்துறையினரின் வாகனத்தில் எவ்வாறு வந்தார்கள்?

3)கர்கரேவைக் கொன்றவர்கள் பாகிஸ்தானியர் என்றால் அவர்கள் மராத்திய மொழியில் பேசினாதாக அங்குள்ளவர்கள் எப்படி சொல்கிறார்கள்?

4)கர்கரே கொல்லப்பட்டவுடன் நரவேட்டை நரேந்திர மோடி அவசர அவசரமாக அனுதாபம் தெரிவிப்பது மக்களை ஏமாற்றவா?

5)கர்கரேவுக்கு நரேந்திர மோடி வழங்கிய பணத்தினை கர்கரே குடுப்பத்தினர் வாங்க மறுத்ததேன்?

6)கர்கரே கொல்லப்பட்ட இடமான காமா மருத்துவமனைக்கு அவரைப் போகும் படி அவருக்கு அறிவுறுத்தியது யார்?

7)மும்பை தாக்குதலின் போது கொல்லப்பட்ட சுமார் 170 அப்பாவி மக்களூம் தனியாக குறிவைக்கப்படாத போது மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி போன்ற சங்பரிவார இயக்கத்தினரை கைது செய்த போலீஸ் உயர் அதிகாரியினர் மட்டும் குறிவைக்கப்பட்டது எப்படி?


மக்களின் மனதில் தோன்றியிருக்கும் இதுபோன்ற சந்தேகங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பயங்கரவாதம் தானே நாட்டில் அதிமுக்கியமான பிரச்சனை. பயங்கரவாத்தினை ஒழிப்பதற்கு தானே அரசு பல கோடிகளை செலவழித்து வருகிறது. பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்குத்தானே பல படைகளை உருவாக்கி வருகிறது. அப்படி உருவாக்கப்பட்ட ஒரு படைதானே பயங்கரவாத ஒழிப்புப் படை. அதன் தலைவர் கொல்லப்பட்டது குறித்தே விசாரணை நடத்த அரசு தயக்கம் காட்டும் போது சாதாரண குடிமகனின் மரணம் குறித்து அரசு எப்படி அக்கறை காட்டும். மும்பை ஹோட்டல் மீட்பு போராட்டத்தில் அப்பாவி மக்களை காப்பதற்க்காக தன்னுயிரை இழந்த கமாண்டோ படையினர் பற்றி கவலை காட்டும் அரசு கர்கரே மரணம் பற்றி ஏன் அவ்வளவாக கவலை காட்ட மறுக்கிறது?

இதனால் அரசிற்கு அப்படி என்ன இழப்பு ஏற்பட போகிறது? கர்கரே சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்துவதில் சாத்விகளை ஆதரிக்கும் அத்வானிகளுக்கு உடன்பாடு இல்லாமல் இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் சோனியா காந்திக்கும் இதில் ஏன் உடன்பாடில்லை.?

பயங்கரவாதத்தினை ஒழிக்க வேண்டும், பயங்கரவாத செயலில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அரசிற்கு உண்மையிலேயே இருக்குமேயானால் இனியும் தாமதிக்காமல் கர்கரே உட்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தி எம்போன்ற சாதாரண குடிமகனின் எண்ணத்தில் தோன்றியிருக்கும் சந்தேகத்தினை களைய முன்வர வேண்டும். இல்லை, மும்பையில் நடந்த அனைத்து பயங்கரவாத செயல்களுக்கும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புதான் காரணம் என்று அமெரிக்காவின் அறிக்கையிலேயே உறுதியாக இருக்குமேயானால் மக்கள் மனதில் தோன்றியுள்ள சந்தேகங்கள் நீங்காமல் அரசின் மீதான நம்பகத்தன்மை குறைந்து போகும் என்பதில் ஐயமில்லை.

வாசகர்: Faizur Hadi M
thanks to :சத்தியமார்க்கம்.

ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்த பயங்கர வாத இஸ்ரேல்!



உலகின் ஒரே வந்தேறி ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலின் வன்கொடுமைகள் எல்லை மீறியது. டிசம்பர் 27, 2008ல் இஸ்ரேலின் வான்படை தாக்குதலில் அந்த ஒரே நாளில் மட்டும் 205 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் குழந் தைகள் கொல்லப்பட்ட கொடூரம் கண்டு உலகமே அதிர்ந்தது. 60 ஆண்டுக்கு முன்பு அமெரிக்க குழந்தையான இஸ்ரேல் என்ற அந்த முறையற்ற குழந்தை ஜனித் தது. பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் விரட்டப்பட்ட அவர்களிடம் எந்த பகைமையும் காட்டாது சமாதானத் துடன் வாழ்ந்து வந்த ஒரு தூய சமூகத் தினரை வதைத்து அவர்களது நிலப் பரப்பை முற்றிலும் அபகரித்து தாங்கள் ஒரு இழிமக்கள் கூட்டம்தான் என்பதை நிரூபித்தார்கள். எவ்வித உரிமைகளும் வழங்காது மேற்குலகின் வக்கிரப் புத்தி யுடன் கூடிய நிதி மற்றும் ராணுவ உதவியுடன் அப்பாவிகளை வதைத்தனர்.


இப்பூமி கிரகத்தின் முதல் பயங்கர வாத நாடு இஸ்ரேல். மோசமான பயங்கர வாதிகள் யூதர்கள் என்ற இழிபெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. முஸ்லிம்களின் மூன்றாம் புனிதத்தலம் அமைந்துள்ள தியாக பூமியாம் பாலஸ் தீனத்தை முழுமையாக மீட்கும் நாள் எந்நாளோ என உலக முஸ்லிம்களும் நீதி விரும்பும் அனைத்து மக்களும் ஏங்கித் தவித்தனர். உரிமை வேண்டி போராடிய இயக்கங்களுடன் இரக்கமற்ற முறையில் போர் தொடுத்தனர் யூத கோழைகள். போரின் கொடுமைக்கு அஞ்சி நாட்டை விட்டு ஓடும் அப்பாவி மக்களைக் கூட யூதவெறிக் கூட்டம் விட்டு வைத்ததில்லை. அகதி முகாம் களைக் கூட, அதிலுள்ள குழந்தைக் கொழுந்துகளைக் கூட கொத்துக் குண்டுகளால் குதறிய கொடுமை இந்த உலகமே கனவிலும் நினைத்துப் பார்க் காதது. ஆம்புலன்ஸ்களைக் கூட குண்டு களால் துளைத்தது. இத்தனைக் கொடு மைகள் இழைத்த இஸ்ரேலைத்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் பிற ஐரோப் பிய நாடுகளும், ஏன் மன்மோகனின் அமெரிக்க காதல் அரசும் தலைமேல் தூக்கிப் பிடித்து வருகின்றன. கொண்டாடி, கூத்தாடி வருகின்றன.

இத்தகைய இக்கட்டான நிலையிலும் பாலஸ்தீன மக்களின் தலைவர்கள் சர்வதேச சமூகத்தின் ஆத ரவு வேண்டி நின்றனர். யாசர் அராஃபத் போன்ற வர்களுக்கு தார்மீக ரீதி யிலான ஆதரவினை வழங்கிய இந்தியா போன்ற நாடுகள் கூட அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு அணியில் இணைந்து விட்ட நிலையில் பாலஸ் தீன மக்களின் உரிமைப் போருக்கான சர்வதேச ஆதரவு என்பது அரசாங் கங்களின் மட்டத்தில் அறவே இல்லை என்ற நிலையில் உலகெங்கும் உள்ள வெகு ஜன மக்களின் ஆதரவு என்ற உயிர்க் காற்றை மட்டுமே பெற்று பாலஸ்தீன மக்களின் சுதந்திர தாகம் உலகெங்கும் ஒரு ஏக்கப் பிரச்சாரமாக வெளிப்பட்டி ருக்கிறது.
இந்நிலையில், 2006ஆம் ஆண்டு ஹமாஸ் என்ற விடுதலைப் போராளி களின் இயக்கம் தேர்தல் பாதைக்கு திரும்புவதாக அறிவித்தது. முதலில் உள்ளாட்சித் தேர்தல்கள் குதித்து பெருவாரியான வெற்றியைப் பெற்றது. அதோடு நாடாளுமன்றத் தேர்தலில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்று முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இஸ்மாயில் ஹனியா, பாலஸ்தீனத்தின் பிரதமரானார்.


போராளி அமைப்பு, தேர்தல் பாதைக்கு பிரவேசம் செய்து பெருவாரியான வெற் றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்ததைப் பாராட்டவோ, வரவேற்கவோ பரந்த மனம் இல்லாத போலி ஜனநாயக தத்துவ வாதிகளான மேற்குலக அரசுகள் ஹமாஸை அங்கீகரிக்க மறுத்தன. சிறப் பான முறையில் ஆட்சி செய்த ஹமாஸ் அரசை செயல்பட விடாமல் முடக்கும் சதிச்செயலை ஃபத்தாஹ் அமைப்பை பகடைக்காயாகப் பயன்படுத்தி அமெரிக் காவும் இஸ்ரேலும் செய்தன. பாலஸ்தீன அதிபர் என்று அழைக்கப்படும் மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்காவுடனும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கோண்டி என்ற கண்டலீசா ரைஸுடனும் அதிக மாக உறவு பாராட்டத் தொடங்கினார். பாலஸ்தீனத்தின் நிதி ஆதாரம் முடக்கப் பட்டது. அரசு அதிகாரிகளுக்குக் கூட மாதாந்திர ஊதியம் வழங்க முடியா அவலத்தை ஹமாஸ் தலைமையிலான அரசு சந்தித்தது. பிற்போக்கு ஆக்கிர மிப்பு சக்திகளின் தீய நோக்கத்தை முறியடிக்கும் விதமாக சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் ஒரு சமாதான முன்முயற்சியை மேற்கொண்டார். அதனடிப்படையில் சொந்த சகோதரர் களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டிருந்த நிலையை ஒழித்துக்கட்ட வேண்டும் என விரும்பினார்.ஃபத்தாஹ்வின் அப்பாஸும், ஹமாஸின் தலைவர் ஹாலித் மிஷாலும், இஸ்மாயில் ஹனியா வும் சவூதி அரேபியாவுக்கு வரவழைக் கப்பட்டனர். உணர்ச்சிமிகு சந்திப்பில் எங்கள் மூத்த சகோதரரின் (மன்னர் அப்துல்லாஹ்வின்) கட்டளைக்கு கீழ்ப் படிவோம், சமாதானத்தைப் பேணுவோம் சகோதரச் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என உள்ளம் உருக உறுதிமொழி மேற்கொண்டனர். இது வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத் தின்படி ஹமாஸுடன் பத்தாஹ் கூட்டு அமைச்சரவை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. சவூதியிலிருந்து பாலஸ்தீனத்திற்கு இரு பிரிவு தலைவர் களும் போய் சேர்ந்த சில நாட்களில் பிளவும் பிணக்கும் தோன்றின. இது எதிரிகளுக்கு கொண்டாட்டத்தைக் கொடுத்தது. மஹ்மூத் அப்பாஸ் அமெரிக்காவின் அடியொற்றி நடந்தார். ஹமாஸ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க தொடர்ந்து முயன்று வந்தது. ஹமாஸின் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டைகள் போடும் விதமாக பொருளாதாரத் தடையை விதித்து அமெரிக்கா தனது வக்கிரப் புத்தியைக் காட்டியது. பொருளாதாரத் தடையால் உயிர் காக்கும் மருந்துகள், எரிபொருள், உணவு, மின்சாரம் என அனைத்தையும் இழந்து பெரும் துயரத்தைச் சந்தித்தனர் காஸா பகுதி மக்கள். நிவாரணப் பொருட்களை சுமந்துகொண்டு சர்வதேச உதவிக் குழுக்கள் படகுகளில் வந்த போது அவர்களை வலுக்கட்டாயமாக இஸ்ரேல் அனுமதி மறுத்தது. பொறுமை இழந்த ஹமாஸ் போராளிகள் போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்தனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடை யிலான சமாதானப் பேச்சுவார்த்தையை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எகிப்து முன்னெடுத்தது. இந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ஹமாஸுக்கும் இஸ்ரேலுக் கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த மாதம் 19ஆம் தேதி ஆறு மாதம் கடந்துவிட்ட நிலையில் தொட ருமா? என கேள்விகள் எழுந்தபோது போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட மாட்டாது; போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது என அறிவித்தது. கடந்த நவம்பர் 4ம் தேதி இஸ்ரேல், எல்லைகளை மூடியது. சொல்லொணாத் துயரங்களை விளைவித்தது. 15 லட்சம் மக்கள் இன்று காஸாவில் வாழ்வாதார உதவிகள் ஏதுமின்றி வாடி வருகிறார்கள். உணவு, உயிர்காக்கும் மருந்துகள் ஏதுமின்றி தவிக்கும் நிலையில் ஹமாஸ் மற்றுமொரு இண்டிஃபாதாவை (மக்கள் போர்) அறிவித்திருக்கிறது.

அபூசாலிஹ் - tmmk.in

Tuesday, December 30, 2008

ஒற்றுமையே தீர்வு!



உண்மைகள் உறங்குவதற்கும் அசத்தியமும் அட்டூழியமும் அதிகாரங்களில் வீற்றிருப்பதற்கும் அநியாயமாக ஒரு சமூகம் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் தங்களது உரிமைகள் என்ன என்பதைக் குறித்தும் அதனை அடைவதற்கான வழிமுறைகள் யாவை என்பதைக் குறித்தும் போதிய அறிவின்றியும் அதற்காக ஒன்றுபட்டு போராடும் போராட்ட குணமின்றியும் இருப்பதே அச்சமூகம் பின்தங்கிக் கிடப்பதற்கு முழு முதற்காரணமாகும். விழிப்புணர்ச்சி என்பதும் ஒன்றிணைந்து உரிமைக்காக உழைத்தல் என்பதும் ஒன்றோடொன்று கலந்ததாகும். இரண்டில் எந்த ஒன்றில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் உண்மை உறங்கும்; அக்கிரமம் கோலோச்சும்; உரிமைக்குரியவர் அநியாயமாக அடக்கி ஒடுக்கப்படுவர். இவ்விரண்டில் இரண்டுமே இல்லாதிருந்தால்.....?


80 களிலிருந்து 2000 க்கு இடைப்பட்ட 20 ஆண்டுகால இடைவெளியில் இந்திய முஸ்லிம்களின் நிலையினை எடுத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட மேற்கண்ட இரண்டுமே இல்லாமல், அநியாயக்காரர்களால் படுபயங்கரமாக அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு கொள்ளலாம். இதனைத் தெளிவாக படம் பிடித்துக் காண்பித்ததுதான் இந்திய முஸ்லிம்களின் அரசியல், அதிகார, கல்வி, பொருளாதார நிலை குறித்த சச்சார் கமிட்டியின் அறிக்கை.

இந்திய அரசியல்-அதிகார அமைப்புக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது போன்று, தங்களை எவர் ஆண்டால் என்ன? யார் அதிகாரத்தில் இருந்தால் என்ன என்று, இந்திய முஸ்லிம் சமூகம் அசட்டையாக இருந்ததன் விளைவு, நாட்டில் வெடிக்கும் அனைத்து குண்டுகளுக்கும் மூலாதாரியாக வேறு சக்திகள் இயங்கினாலும் கார்க்கரேக்கள் மூலம் அவை வெளிச்சத்துக்கு வந்தாலும் சாமர்த்தியமாக அவை மறைக்கப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிரபராதியான இந்த முஸ்லிம் சமூகம் அடைக்கப்பட்டு நாட்டை விட்டு அந்நியப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

காலம் கடந்தெனினும் இன்று, மாநிலங்களிலிருந்து தேசியம்வரை, அரசியல் விழிப்புணர்ச்சியும் அதனை அடைவதற்கான வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கும் போக்கும் சமூகத்தில் கொஞ்சங் கொஞ்சமாக வேரூன்றி வருகிறது.

இதற்கான வெளிப்படையான உதாரணங்களாக சமீபத்தில் தமிழகத்தில் உருவான ஐ.டி.எம்.கே, தமுமுகவின் மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் அரசியல் இயக்கங்களும் தென்னகத்தை மையமாக வைத்து உருவாக நினைக்கும் பாப்புலர் 'ஃப்ரண்ட ஆஃப் இந்தியா'வின் அரசியல் பிரவேசமும் தேசிய அளவில் செயல்படப் போகும் ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரவேச அறிக்கையும் சான்றுகளாக அமைந்துள்ளன.

முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. அதனை அடைய, "அரசியலில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டால் மட்டுமே அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட இயலும்!". இதனை ஒரு தாரக மந்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு செயலாற்ற இந்த அமைப்புகள் முன்வர வேன்டும். என்றாலே உரிமைகளை மீட்டெடுப்பதிலும் அடக்கி ஒடுக்கப் படுவதிலிருந்து சமுதாயத்தை முழுமையாகப் பாதுகாப்பதிலும் வெற்றி பெற இயலும்.

இந்தத் தாரக மந்திரம் சரியாகப் பின்பற்றப் படுமானால், தமிழக அரசியல் கட்சிகள் பெருமளவில் முஸ்லிம்களை அணுகி மன்றாட வேண்டிய நிலையினை முஸ்லிம் சமுதாயத்தால் ஏற்படுத்த இயலும்.


கடந்த 1967 இல் தமிழகத்தில் நடந்த நான்காவது சட்டசபைத் தேர்தலின்போது இஸ்லாமியர்களிடையே ஏற்பட்ட மார்க்க மற்றும் அரசியல் ரீதியிலான ஒற்றுமை ஏற்படுத்திய விளைவுகளை ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.



தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை மொத்த மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது.



கடந்த 1967 இல் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் அமைந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மூலம் தமிழக முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டனர். காயிதே மில்லத் அவர்கள் அண்ணாதுரையுடன் கைகோர்த்து தி.மு.கவுடனான வலுவான அரசியல் கூட்டணியை அமைத்தார்.



அதனைத் தொடர்ந்து 1967 தேர்தல் களத்தில் 137 இடங்களைத் திமுக கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது. 1962 இல் நடந்த இதற்கு முந்தைய தேர்தலில் இதே திமுக வெறும் ஏழு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.



1967 தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திருச்சியிலிருந்து பிரசுரமாகும் "மறுமலர்ச்சி" செய்தித்தாள் தேர்தல் முடிவுகளைப் பற்றிய தனது ஆய்வுகளை மேற்கொண்டது.



அதில், 58 தொகுதிகளில் திமுக எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றதற்கான காரணிகள் அத்தனையும் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகின. அதாவது மேற்கண்ட தொகுதிகளில் மூவாயிரம் முதல் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது திமுக.



மேற்கூறிய அதே தொகுதிகளில், முஸ்லிம்களின் ஓட்டுக்கள் அனைத்தும் பெருவாரியாக திமுகவிற்கு அளிக்கப்பட்டிருந்ததும், அதுவே திமுகவின் அரசியல் வரலாற்றில் அண்ணாதுரையின் தலைமையில் முதன் முறையாக திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றக் காரணமாயிருந்ததும் நிரூபிக்கப்பட்டன. தேர்தல் களத்தில் 80% தொகுதிகளில் வெற்றியினை நிர்ணயிப்பது வெறும் 5% முதல் 10% வரையிலான ஓட்டுக்களே என்பதும் அதுவே ஒரு வேட்பாளரின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியதுமாகும் என்பதும் சிறுபிள்ளைக்குக்கூடத் தெரியும் ஒரு விஷயமாகும்.



அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஓரணியில் நின்றால் தமிழக அரசியலை நிர்ணயிக்கக்கூடிய பெரும் சக்தியாக முஸ்லிம்கள் விளங்க முடியும்.



தமிழக முஸ்லிம்களின் சக்தி என்னவென்பதைத் திமுகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் நன்கு அறிவர். அதிலும் குறிப்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் கண்களுக்கு தமிழக முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள தமுமுக- வினை தம் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் மிகுந்து காணப்படுகிறது.



இந்தியா விடுதலை பெற்று 61 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய அளவில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு கேட்டுப் பெறப் போராடும் வேளையில் முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைத் திமுக அளித்தது இந்த ஆவலை மனதில் வைத்துத்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.



அதே வேளையில் இந்திய ராணுவத்தில் 3.5 % முஸ்லிம்கள் உள்ளனரா? அல்லது வெறும் 0.25% மட்டுமா? போன்றவற்றினைப் பற்றி இத்தனை நாள் அறியாத கட்டுப் பெட்டிகளாக முஸ்லிம்கள் இருந்து வந்தனர்.



இதனைப் பற்றிய கேள்விகள் எழுப்பியபின் தொடர்ந்த விசாரணையில் அநீதியும் அவநம்பிக்கையும் வெளிப்படையாகத் தெரிந்தன. இத்தனை நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அநியாயத்தினை வெளிக் கொண்டுவந்த சச்சார் கமிட்டி அறிக்கையினை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். இதனை ஒட்டிய கேள்விகளையும் உரிமைக்குரல்களையும் முஸ்லிம் அறிவுஜீவிகள் உரிய இடங்களில் எழுப்ப வேண்டும்.



ஆக, ஒரு 6% முஸ்லிம் மக்கள்தொகை 40% சட்டசபை இடங்களை வெற்றியோ தோல்வியோ அடையச் செய்து தமிழக அரசியலை நிர்ணயிக்குமெனில் இந்திய அளவில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் என்னவாகும் என்பதை இந்தச் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக உ.பி, கேரளா, அஸ்ஸாம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களே துருப்புச் சீட்டுக்களாக உள்ளனர். அரசியல் ரீதியில் முஸ்லிம் அமைப்புகளிடையே ஒற்றுமை மலர்ந்தால் இந்திய அளவில் சிறிதும் பெரிதுமாக 150 பாராளுமன்ற சீட்களை முஸ்லிம்களால் நிர்ணயிக்க முடியும் என்பது ஆணித்தரமான உண்மை.



மார்க்க ரீதியில் இயக்கங்கள், அமைப்புக்கள் என்று ஏகத்திற்கு தமிழகத்தில் பெருகினாலும், அவைகூடத் தம்மை வளர்த்து விட்ட சாதாரண பாமர முஸ்லிம்களுக்கு அரசு மூலம் கிடைக்கக் கூடிய உரிமைகளை, பலன்களை எப்படி வாங்கித் தருவது? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.



இந்திய அளவிலும் மாநில அளவிலும் அரசியல் ரீதியில் முஸ்லிம்கள் பிரிந்து கிடப்பதே கடந்த 60 ஆண்டுகளாக மோசமான பின்தங்கியிருக்கும் சமுதாயமாக முஸ்லிம் சமுதாயத்தை இன்னும் வைத்திருக்கிறது.



எனவே முஸ்லிம்கள் குறைந்தபட்சம் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டு மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.



முஸ்லிம் சமுதாய இயக்கங்கள், அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரீதியிலாக கொள்கை கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும் தொலைநோக்குப்பார்வையுடன் முஸ்லிம் சமுதாயம் செல்ல வேண்டிய பாதையினை நிர்ணயிக்கும் அரசியல் சக்தியாக உருவெடுக்க தேசிய அளவில் ஒன்றிணைந்து ஒரே கட்சியாக வெளிவர வேண்டும்.



வெற்றியைத் தரக்கூடியவன் வல்ல இறைவன். அதற்கான அணுகூலங்களை அமைக்க சமுதாயம் ஒன்றுபடட்டும்!



கருத்தாக்க மூலம் : முஹம்மது அமின் பின் அப்துல் காதிர் E - MAIL :inpt19@aol.com

Monday, December 29, 2008

முஸ்லீம் என்றாலே தீவிரவாதியா? டைரக்டர் அமீர் பேட்டி!




`யோகி' திரைப் படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறார் அமீர். ஈழத் தமிழர் பிரச்னையில் ஆவேசமாய் பேசி, சிறை சென்று வந்ததால் சற்று தாமதமாகிறது படம்.

ஈழத்தமிழர் பிரச்னை குறித்தும் மும்பைத் தாக்குதல்கள் பற்றியும் பேசுகிறார், மீண்டும்.

`யோகி' எந்தளவிற்கு வந்திருக்கிறார்?

"இன்னும் பதினைந்து நாட்கள் ஷூட்டிங் மீதமிருக்கிறது.இதுவரை எடுத்ததைப் போட்டுப் பார்த்தால் என்னைத் தவிர மற்ற எல்லோரும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். அமீர் ஏன் நடிக்க வந்தான் என்ற கேள்வி எல்லோருக்குமே இருக்கிறது. ஒரு கதைக்குப் பொருத்தமாக இருப்பதால் தான் நடிக்கிறான் அல்லது அந்த கதாபாத்திரத்திற்காக ரொம்ப மெனக்கெட்டு இருக்கிறார் என்ற உண்மையான காரணம் இருக்கவேண்டும். இது கூட இல்லையென்றால் வேற என்ன?''

ஈழத்தமிழர் பிரச்னையில் குரல் கொடுத்து சிறை சென்றீர்-களே. அங்கு உங்களுக்குக் கிடைத்த சிறை அனுபவங்கள் எந்த உணர்வைக் கொடுத்தி-ருக்கிறது?

"திட்டமிட்டுத் திருடியவன், ப்ளான் பண்ணி சாதுர்யமாக கொலை செய்தவன், மிகவும் பெர்ஃபெக்ட்டாக என்னென்ன வழிகளில் சமூகத்தை ஏமாற்றலாம் எனத் தெரிந்த, படித்த கிரிமினல்கள் பலர் வெளியேதான் இருக்கிறார்-கள். அதே மாதிரி அங்கே உள்ளே இருப்பவர்-களில் பலர் கோபத்தில் கொலை செய்தவர்கள், அவசரப் பட்டுத் திருடியவர்கள், ஆத்திரத்தில் தப்பு செய்து வந்தவர்கள், கிராமங்களில் சின்னச் சின்ன பிரச்னைகளுக்காக ஏதாவது தப்பு செய்துவிட்டு உள்ளே வந்தவர்கள் அதிகம். `ஒரு நிமிஷம் கோபப்-பட்டேன். இப்ப யோசிச்சுப் பார்த்தா ஒண்ணுமில்ல. பதினைஞ்சு வருஷம் போச்சு. இளமையைத் தொலைச்-சாச்சு. இனி என்ன பண்ணப் போறோம்னு தெரியல' என்று மெஜாரிட்டியான பேர் சொல்லும்போது பரிதாபமாக இருக்கிறது. சிறையில் உள்ள பலர் மனரீதியாகப் பக்குவமடைந்து இருக்கிறார்கள். இன்னொரு வாய்ப்புக் கொடுத்தால் திருந்தி வாழ்வோம் என்பதுதான் அவர்கள் சொல்வது. இன்னும் நிறைய சங்கதிகள் சிறையில் இருக்கிறது. அவற்றையெல்-லாம் படமெடுக்க ஆசை இருக்கிறது.''

மிக விரைவில் தமிழர்களின் மன தைப் பிரதிபலிக்கும் விதத்-தில் ஈழப் படம் ஒன்றை இயக்க-விருப்பதாக வரும் செய்திகளில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது?

"ஈழம் சார்ந்த கதை ஒன்று மட்டும்தான் இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால், இல்லை, நிறைய கதைகள் என்னிடம் உள்ளன என்பதுதான் என் பதில். இன்று தீவிர வாதம் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது. முஸ்லிம் களில் தீவிரவாதி இருக்கிறான் என்பது போய், முஸ்லிம்களே தீவிரவாதிகள் என்ற மனநிலை உருவாகி விட்டது. இன்னும் ஐம்பது வருடங்களில் அடுத்த தலைமுறைக்கு மொக-லாயர்கள் எப்படிப் படையெடுத்தார் கள் என்று சொன்-னோமோ அதே போல் தீவிரவாதி-களான முஸ்லிம்கள் நம்மை அழிக்க முற் பட்டார்கள் என்று பாடமாகி விடும் நிலை இருக்கிறது. இதை உடைக்க ஆசை. இதேபோல் உண்மையான ஈழப் பிரச்-னையையும், உண்மையான காஷ்மீர் பிரச்னை யையும் பட-மெடுக்க ஆசை. இதைப் படமாக்க ஈழத்திலும், காஷ்மீரிலும் அனுமதி அளித்தால் சம்பளம் இல்லாமலே எடுக்கத் தயார்.''

ஈழத்தமிழர்களின் படுகொலை-களுக்கு எதிராக குரல் கொடுத்-தீர்கள். அதற்காக சிறை சென்றீர்-கள். ஆனால் சிறையிலிருந்து வந்தபிறகு அந்தப் பிரச்னை குறித்துப் பேசவில்லை. என்ன காரணம்?

"பேசக்கூடாது என்பதெல்லாம் இல்லை. ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் எந்த மனிதனுக்-கு அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கிற உரிமை எல்லா மனிதர்களுக்கும் உண்டு. அந்த நியாயங்களைத் தட்டிக் கேட்பது மனிதனின் சமூகப் பொறுப்பு. அதுவும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இந்தப் பொறுப்பு அதிகம். நான் பொது வாழ்க்கையில் இருப்பவன். ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள், நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன. ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை? இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை? அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியா-னார்கள்? இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு இந்திய-னுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லை-யென்றால் வாழ்வது எதற்கு? மருந்து குடித்துவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடலாம்.''.

- இரா. ரவிஷங்கர்

kumudam

அ.தி.மு.க. இருக்கும் வரை பி.ஜே.பி.யும்.,இந்துத்துவா அமைப்புகளும் தேவையில்லை.

அண்ணா தி.மு.கழகத்தின் அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது



திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பி.ஜே.பி. பெருந்தன்மையோடு அறிவித்திருக்கிறது. அந்தக் கட்சி போட்டியிட்டு ஆயிரம் வாக்குகள் சிதறினாலும் அது அண்ணா தி.மு. கழகத்திற்கு நட்டம் என்பது அதற்கு நன்றாகவே தெரியும்.

பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் அருண்ஜேட்லி இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆணித்தரமான வாதத்தை முன்வைத்தார். அ.தி.மு.க.வோடு நல்லுறவு உண்டு. ஆனாலும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் வேறு சில கட்சிகளுடனும் கூட்டுச் சேர்ந்து தமது பலத்தைப் பெருக்கிக் கொண்டு டெல்லிக்கு அ.தி.மு.க. வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


ஒருமுறை வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசை அ.தி.மு.க. கவிழ்த்திருக்கிறது. ஆனால், அதனை சொந்த வீட்டுப் பிள்ளை செய்த சுட்டித்தனம் என்றே எடுத்துக் கொண்டது. அ.தி.மு.க. மீது கொண்ட பாசம் எப்போதும் அதற்குப் பட்டுப் போனதில்லை. சோதனையான நேரங்களில் பி.ஜே.பி.க்குக் கரம் கொடுக்க அ.தி.மு.க.வும் தவறியதில்லை. கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில்கூட பி.ஜே.பி. வேட்பாளருக்குத்தான் அ.தி.மு.க. வாக்களித்தது.

எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி. தேவையில்லைதான். அதனால் அந்தக் கட்சி இங்கே காலை ஊன்ற முடியாமல் கண் கலங்கிக் கொண்டிருக்கிறது.

அமரர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. இன்று இல்லை. அதன் உருவமும் சிதைந்துவிட்டது. கொள்கை கோட்பாடுகளும் பறந்து போய்விட்டன. அண்மையில் ஒரிசாவில் ஒரு சாமியாரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர். அதனை அவர்களே ஒப்புக் கொண்டனர். பல தலைமுறைகளாக கிறிஸ்துவர்களாக இருக்கும் ஆதிவாசிகளை அந்த சாமியார் இந்துக்களாக ஞானஸ்நானம் செய்ய முயன்றார். சாமியாரின் கொலையை அ.தி.மு.க. தலைமை வன்மையாகக் கண்டித்தது. நியாயம்.

ஆனால், அதனைத் தொடர்ந்து தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஏசுவின் திருத்தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர் வனாந்தரங்களில் தொண்டு செய்ய வந்த சகோதரிகள் கற்பழிக்கப்பட்டனர். மாதக்கணக்கில் சிறுபான்மையின மக்கள் சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள்.

அதனை அ.தி.மு.க. இன்றுவரை கண்டிக்கவில்லை. எனவே, தமிழகத்தைப் பொறுத்த வரையில் அந்தக் கழகம் இருக்கும் வரை பி.ஜே.பி.யும் தேவையில்லை. இந்துத்துவா அமைப்புகளும் தேவையில்லை.

ஏன்? குஜராத்தில் இரண்டாயிரம் இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்..

இன்றைக்கும் அங்கே அந்தப் படுகொலைப் படலங்கள் தொடர்கின்றன.

நரேந்திர மோடியை உலகம் மனித இனப் படுகொலைக் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தி இருக்கிறது.



அதற்காக வாதாடியதில் இடதுசாரிக் கட்சிகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் பெரும் பங்கு உண்டு.

ஆனால், அடுத்து அதே நரேந்திரமோடிக்கு முடிசூட்டு விழா நடந்தபோது அந்த வைபவத்தில் பங்குகொள்ள தனி விமானத்தில் ஆமதாபாத்திற்குப் பறந்து சென்றவர் செல்வி ஜெயலலிதா. அதனை நாம் குற்றச்சாட்டாகக் கூறவில்லை. அதுதான் செல்வி ஜெயலலிதாவின் இயல்பு. அ.தி.மு.க.வின் இன்றைய நடைமுறைக் கோட்பாடு.

தன்னை இந்து சமயத்தின் ஏந்தல் என்பதனை செயல்படுத்திக் காட்டுவதற்கு அவர் என்றும் தயங்கியதில்லை.

மூன்று மாதங்களுக்கு முன்னால் அதே நரேந்திரமோடி சென்னை வந்தார். வேறு விழாவிற்கு வந்த அவரை தமது இல்லத்திற்கு அழைத்தார். 64 வகைப் பதார்த்தங்களுடன் விருந்து வைத்தார். தமிழகத்தின் விருந்தோம்பல் நரேந்திரமோடிக்குத் தெரியவேண்டாமா?

செல்வி ஜெயலலிதா தங்கள் அணிக்கு வந்துவிட்டால், அவரை தங்கள் கோட்பாடுகளுக்கு ஏற்ப சரி செய்து கொள்வோம் என்று ஒரு தலைவர் கூறினார். அதில் ஒரு திருத்தம். இவர்களுடைய உதவி கோரி செல்வி ஜெயலலிதா தூதுவிடவும் இல்லை. மனுப்போடவும் இல்லை.
இவர்கள்தான் அ.தி.மு.க. அரசியல் உறவு கோரி சுவர் ஏறிக் குதித்தார்கள். ஒட்டகத்தின் முதுகைச் சீர்செய்து மான்குட்டி ஆக்கிவிடும் அந்த தலைவரின் கரடி வித்தையைக் காண நாமும் தயாராக இருக்க வேண்டும்.

இவர்கள் குலுக்கப்போகும் கரங்கள் நஞ்சு நிறைந்த முட்புதர்கள் என்று இந்த வாரம் கிறிஸ்துவ மக்களின் குரலான `நம் வாழ்வும்', இளைய இஸ்லாமிய சமுதாயத்தின் சிந்தனையான `மக்கள் உரிமை'யும் சுட்டிக் காட்டியிருக்கின்றன.

சிறுபான்மையின மக்கள் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனை நாம் விமர்சிக்க விரும்பவில்லை.


ஆனால், அசைபோட்டால் நமது இதயக் களஞ்சியத்திலிருந்து பசுமையான பல நினைவுகள் துள்ளிக்குதித்து வெளிவருகின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் வெற்றி வீரராக அத்வானி பவனி வந்தார். பல மாநிலங்கள் அந்த பவனிக்குத் தடைவிதித்தன. ஆனால் அன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் இங்கே வெற்றி உலா வந்தார்.

அடுத்து தேசிய ஒருமைப்பாட்டுக் கழகக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் செல்வி ஜெயலலிதா கலந்து கொண்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அவர் நியாயப்படுத்திப் பேசினார். சிறுபான்மையின மக்கள் கோரும் உரிமைகள் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது என்றார். அந்தக் கூட்டத்தில் அத்வானியும் கலந்து கொண்டார். `பாபர் மசூதி இடிப்பிற்கு ஆதரவாக எங்களால் கூட இப்படி வலிமையாக வாதாட முடியாது' என்று, செல்வி ஜெயலலிதாவின் துணிச்சலைப் பாராட்டினார்...

பின்னர் ராமர் கோயிலை எங்கே கட்டுவது என்ற விவாதம் தொடங்கியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்தான் ராமர் பிறந்த இடம். எனவே அங்கே கட்டாமல் இத்தாலியிலா கட்ட முடியும் என்று செல்வி ஜெயலலிதா வினா எழுப்பினார். ஆயிரம் யானை பலம் பெற்றது போல் எழுந்த இந்துத்துவா சக்திகள் பூரித்துப் போயின.

இப்படி இந்து சமய சக்திகளுக்கு மட்டுமல்ல; பி.ஜே.பி.க்கும் அவர்தான் அரசியல் வழிகாட்டியாக வலம் வருகிறார். காலதேவனுக்கு நரைகள் பூத்திருக்கலாம். ஆனால் செல்வி ஜெயலலிதாவின் பெரும்பான்மை வாதங்கள் இளமையானவை. பசுமையானவை. இந்த வாதங்களை அவர் துணிச்சலோடுதான் முன்வைக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கும் மன உறுதியையும் பெற்றிருக்கிறார்.

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கழகம் பெறும் வெற்றி இந்துத்துவா சித்தாந்தத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கூட கருதலாம்.

அண்ணா தி.மு.கழகத்தின் அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது.

தங்கள் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யைவிட அந்த இயக்கம் அ.தி.மு.க.வை அதிகம் நேசிக்கிறது.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டார். அப்போது நடந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகளில் உலகம் பார்த்தது. அதிர்ந்து போனது.

அ.தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வாஜ்பாய் அரசு தயாராகி வருவதாகச் செய்திகள் வந்தன. வாஜ்பாய் கண்டித்தாலும் அத்வானி கண்டிக்கவில்லை.

`எந்தக் காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசைத் தொடாதே' என்று நாக்பூரிலிருந்து பகிரங்கமாக ஒரு குரல் எழுந்தது. அந்த எச்சரிக்கையை விடுத்தது ஆர்.எஸ்.எஸ். தலைமைதான்.

ஆகவே, திருமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க.விற்குக் குறுக்கே நிற்பதில்லை என்று பி.ஜே.பி. எடுத்துள்ள முடிவு அதன் கண்ணோட்டத்தில் சரியானதுதான்.

எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி.க்கு வேலையில்லைதான்.
THANKS :SOLAI IN KUMUDAM REPORTER

Thursday, December 25, 2008

இஸ்லாத்தை மறக்கச்செய்யும் பதவி




அன்பர்களே,

உலகத்தில் நமக்கு ஒரு அங்கீகாரம்/அதிகாரத்தை அடைவது என்பது வரவேற்கத்தக்கதே! ஆனால் அதை அடையும் வழி இஸ்லாத்திற்கு முரணாக இருக்கக்கூடாது. தமிழகத்தில் முஸ்லிம்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் பெரும்பாலானவை ஏதாவது ஒரு அரசியல் கட்சிகளின் உட்பிரிவாகவே செயல்படுவதைப்பார்க்கிறோம். எனவேதான் இவர்கள் ஆதரிக்கக்கூடிய கட்சிகள் இஸ்லாத்திற்கோ/முஸ்லிம்களுக்கோ விரோதமாக நடந்தாலும் இவர்களால் தட்டிக்கேட்க முடியவில்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான எத்தனையோ விசயங்கள் நாட்டில் அரங்கேறியபோது தனது பதவியை ராஜினாமா செய்யாத சகோதரரர் காதர்மொய்தீன்அவர்கள், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் கருணாநிதி சொன்னவுடன் தனது பதவியைராஜினாமா செய்தார். செய்துதான் ஆகவேண்டும் ஏனெனில், அவர் தி.மு.க.எம்.பி.யாவார்.

இதுமட்டுமன்றி, முஸ்லீம் அமைப்புகள் பிரசமுதாய மக்களிடமும் ஒரு நற்பெயரை பெற வேண்டுமென்ற எண்ணத்தில் இஸ்லாமிய வட்டத்தைதாண்டி செயல்பட்டு சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. காதற்மொய்தீன் அவர்கள் வேலூர் அருகே சாமியாரை சந்தித்ததும், இந்துமுன்னணி நிகழ்ச்சியில் பேசியதையும் குறிப்பிடலாம்.

மேலும், பிற சமுதாய மக்களின் பண்டிகைக்காலங்களில் இவர்கள் வாழ்த்து அறிக்கை வெளியிடுவார்கள். அதில்கூட ஒருதலைவர் வரம்புமீறி, 'கல்வியின் அன்னை சரஸ்வதியை நினைவுகூறும் இந்நாளில்' என்று குறிப்பிட்டிருந்தார்.

பிற சமுதாய மக்களுக்கு வாழ்த்துகூறுவது ஒருபக்கம் இருக்கட்டும்! நமது பெருநாள்களில் வாழ்த்து கூற நபியவர்கள் கட்டளையிடவில்லை. இருப்பினும், நமது சந்தோசத்தை பகிர்ந்து கொள்வதற்காக நாம் ஈத் முபாரக் சொல்லிக்கொள்கிறோம்.

பிற சமுதாய மக்களை கவர வேண்டும் என்ற நிலைப்பாடு நம் சமுதாய தலைவர்களில் ஒருவரை எங்கேபோய் நிறுத்தியிருக்கிறது என்பதை மேலே உள்ள படத்தைப்பாருங்கள். எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி செலுத்துகிறார். அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த அண்ணல்நபி[ஸல்] அவர்களுக்கே நினைவஞ்சலி செலுத்துமாறு மார்க்கம் கட்டளையிடாதபோது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத ஒருவர் சமாதியில் அஞ்சலி செலுத்தவைத்தது எது..? பதவி போதைதானே!

தனக்கென ஒரு அமைப்பு வைத்திருப்பவர்கள் நிலையே இதுவென்றால், பிற அரசியல் கட்சிகளில் அங்கம்வகிப்பவர்களை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தனது படத்தின் மூலம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக மக்கள் மனதில்பதியவைத்த விஜய்கான்[?] கட்சியை சேர்ந்த முஸ்லிம்களின் விளம்பரம்;

அகிம்சையை சொன்னார் காந்தி

ஈகையை சொன்னார் நபிகள்

இவை அனைத்தையும் சொன்னார் கேப்டன்.

தனது போலி தலைவரை உய்ர்த்திப்பிடிப்பதற்காக உண்மைத்தலைவர்,உத்தம தலைவர் நபி[ஸல்]அவர்களை பின்னுக்கு தள்ளியதை பார்த்தீர்களா! இந்த கேப்டன்[?] சொல்லாததை,சொல்லமுடியாத அத்துணை போதனைகளையும் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் நபிஸல்]அவர்கள்.
எனவே, அரசியலில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களே, நீங்கள் பிற சமுதாயமக்களை கவரவேண்டுமேனில், அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யுங்கள். வரவேற்கிறோம். அதைவிடுத்து மின்மினி பூச்சிகளின் வெளிச்சத்திற்காக சத்தியஒளியை மறந்துவிடாதீர்கள்!
படங்கள்;நன்றி தினத்தந்தி
thanks : http://mugavai-abbas.blogspot.com/2008/12/blog-post_24.html

Wednesday, December 24, 2008

9 என்பது 11 அல்ல; நவம்பரும் செப்டம்பரல்ல!


1977ஆம் ஆண்டின் உலகளாவிய எழுத்தாளர்களுக்கான புக்கர் பரிசை வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் நாடறிந்த சமூக ஆர்வலருமான அருந்ததி ராய், கடந்த மாதம் பம்பாயில் நடைபெற்ற பயங்கரவாதம் குறித்துத் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். இவரது 'ஒப்புதல் வாக்குமூலங்களின் உண்மை நிலை' என்ற கட்டுரையை ஏற்கனவே சத்தியமார்க்கம்.காம் வெளியிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். சமீபத்தில் அவுட்லுக் இந்தியா இதழில் வெளிப்படுத்திய அவரது கருத்துக்களைத் தமிழில் இங்கே தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். -

நம் நாட்டில் நிகழ்ந்த ஒரு துயரச் சம்பவத்தைப் பற்றி சுயமாக விவாதிக்கும் உரிமையைக்கூட நாம் இழந்து விட்டோம் போலுள்ளது. மும்பையில் அந்தப் பயங்கரம் நிகழ்ந்து கொண்டிருந்தபோது நம் நாட்டு 24 மணி நேரச் செய்தி சானல்கள், "நாம் இந்தியாவின் செப்-11-ஐ பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்று அறிவித்தன.



ஹாலிவுட் திரைப்படம் ஒன்றை காப்பியடித்து எடுக்கப்பட்ட இந்தித் திரைப்படம்போல நாம் 'நடிக்க' வேண்டிய காட்சிகளும் வசனங்களும்கூட ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டுவிட்டது - அதே வசனங்களை நாம் முன்னரே பேசி, நடித்திருந்தும் கூட.



தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை நிலவியபோது அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெய்ன், "பாகிஸ்தான் விரைவாகச் செயல்பட்டு 'கெட்ட நபர்களை' கைது செய்யாவிடில் அதன் 'தீவிரவாத முகாம்'களின் மீது இந்தியா ஆகாயத் தாக்குதல் நடத்த உத்தேசித்திருப்பதாக தனக்குத் தனிப்பட்ட தகவல் கிடைத்திருப்பதாகவும், மும்பைத் தாக்குதல் 'இந்தியாவின் செப்-11' என்பதால் இந்தியாவின் பதில் தாக்குதல்களை அமெரிக்காவால் தடுக்க முடியாது" என்றும் பாகிஸ்தானை எச்சரித்தார்.



ஆனால், நவம்பர் செப்டம்பர் அல்ல; 2008ஆம் ஆண்டு 2001ம் அல்ல; பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் அல்ல; இந்தியா அமெரிக்கா அல்ல!



நம் நாட்டில் நிகழ்ந்த அத்துயரச் சம்பவம் பற்றி நாமாகவே நமது மூளையைக் கொண்டும் புண்பட்டிருக்கும் நமது மனதைக் கொண்டும் அலசி ஆராய்ந்தால் மட்டுமே நமக்கான முடிவுகளை நாம் எடுக்க முடியும்.



நவம்பர் இறுதி வாரத்தில் காஷ்மீர மக்கள் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களின் கண்காணிப்பினூடே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக வரிசையில் காத்து நின்றபோது, இந்தியாவின் பணக்கார நகரங்களுள் ஒன்றான மும்பையில் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி, போர்களில் சிக்கிச் சின்னாபின்னமாகி இருக்கும் காஷ்மீரின் குப்வாரா பிரதேசம் போல காட்சியளித்தது விசித்திரமானதுதான்.



இந்த ஆண்டில் இந்தியாவின் பெரு நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் தொடர்ச்சியாக நடந்துவரும் தீவிரவாதச் செயல்களில் மும்பைத் தாக்குதல் என்பது மிக அண்மை நிகழ்வாகும்.



அகமதாபாத், பெங்களூர், டெல்லி, குவஹாத்தி, ஜெய்ப்பூர், மாலேகான் ஆகிய நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் நூற்றுக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்துமிருக்கின்றனர்.



சந்தேக நபர்கள் என இந்திய காவல்துறை கைது செய்திருப்போரில் இந்துக்களும் இருக்கின்றனர்; முஸ்லிம்களும் இருக்கின்றனர்.



அனைவருமே இந்தியப் பிரஜைகள்! காவல்துறை சந்தேகப்படுவது சரியானதென்றால், நம் நாட்டில் எதுவோ மிகவும் தவறாக நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.



நீங்கள் தொலைக்காட்சிச் செய்திகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தீர்களென்றால் மும்பைத் தாக்குதலில் சாதாரண பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டதை அறிந்திருக்க மாட்டீர்கள்.



பரபரப்பான ரயில் நிலையம் ஒன்றிலும் பொது மருத்துவமனை ஒன்றிலும் அவர்கள் சுட்டுத் தள்ளப் பட்டனர். தங்களால் தாக்கப் படுபவர்கள் பணக்காரர்களா? ஏழைகளா? எனத் தீவிரவாதிகள் பிரித்துப் பார்ப்பதில்லை. இந்த இரண்டு தரப்பினரையுமே அவர்கள் ஒன்றுபோல ஈவு இரக்கமின்றி கொன்றிருக்கின்றனர்.



ஆனால், இந்திய ஊடகங்களின் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் 'பணக்கார இந்தியா'வின் தடுப்புச் சுவர்களை ஊடுருவிச் சென்று சலவைக்கற்கள் பொதிக்கப்பட்ட உயர்தர ஹோட்டல்களின் வரவேற்பறைகளிலும் மினுமினுக்கும் அவற்றின் நடன அரங்குகளிலும் ஒரு சிறு யூத மையத்திலும் நிகழ்த்தப்பட்ட பயங்கரங்கள் மட்டுமே.



தாக்குதலுக்கு இலக்கான ஹோட்டல்களில் ஒன்று 'இந்தியாவின் அடையாளச் சின்னம்' என்று கூட நமக்கு அறிமுகப் படுத்தப்பட்டது!



அது நூற்றுக்கு நூறு உண்மைதான்.



அது இந்தியாவின் சாதாரண பொதுஜனம் நாள்தோறும் சந்திக்கும் அநீதிகளின் அடையாளச் சின்னம்.



தொடரும், இன்ஷா அல்லாஹ்.

தமிழில் : சகோ. ஸலாஹுத்தீன்

நன்றி : அவுட்லுக் இந்தியா , சத்தியமார்க்கம்.காம்

கேள்வியின் நாயகன்-அந்துலே!

சமீபத்தில்அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக ஆக்கப்பட்டிருக்றிர், திரு. அப்துல் ரகுமான் அந்துலே அவர்கள், மத்திய அரசில் சிறுபாண்மைத் துறை அமைச்சராக உள்ள அந்துலே அவர்கள் மும்பை தாக்குதலின்போது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுத் தலைவர் ஹேமந்த் கார்கரேவின் மரணம் பற்றி கூறுகையில்,

ஹேமந்த் கார்கரே மலேகான் குண்டு வெடிப்பு சதி வழக்கின் புலனாய்வில் மிக முக்கிய பங்காற்றியதன் பின்னணியில் கொல்லப்பட்டுள்ளார். கொன்றவர்களை விட கொல்ல அனுப்பியவர்கள் யார்என்பதுதான் முக்கியமான கேள்வி என தன் சந்தேகத்தைப் பகிர்ந்துகொண்டார். நாடெங்கும் உள்ள ஜனநாயகவாதிகள் மனதிலும் இந்த கேள்வி இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஊடகங்கள் தொடர்ந்து லஷ்கர் இயக்கம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆகியவைதான் மும்பை தாக்குதலுக்கு காரணமென்றும், இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் நாட்டின் மீதே இராணுவ தாக்குதலை தொடங்க வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்து வருகின்றன.
சில அரசியல் பார்வையாளர்கள் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-தான் இத்தாக்குதலின் சூத்திரதாரியாக இருக்கக்கூடும் எனவும் கருதுகின்றனர். அப்படியான அனுமானங்களுக்கு அடிப்படை இல்லாமல் இல்லை.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடலால் தன் ரத்த வெறி கொண்ட முகத்தை அமெரிக்கா திரை போட்டு மறைத்தே வைத்திருக்கிறது. தன் சந்தை நலனுக்காக உலகெங்கும் உள்ள வளரும் நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து அந்த நாடுகளின் இயற்கை வளங்களை சுரண்டிக் கொழுக்க தன் ஆக்டோபஸ் கரங்களால் அந்நாடுகளின் குரல் வளையை நெறிக்கும் ஏகாதிபத்தியம்தான் அமெரிக்கா.

பெட்ரோலிய வளம் கொண்ட வளைகுடா நாடுகளில், கட்டுமான பணிகளுக்கு செல்கின்ற சாக்கில் ஒட்டு மொத்த வளைகுடா எண்ணெய் வளத்தையே தன் கைக்குள் கொண்டு வந்துள்ளது அமெரிக்கா.
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் கொண்டே இன்னொரு பக்கம் அரபு நாடுகளை தன் அடிவருடிகளாக வைத்துள்ளது. உலகெங்கும் நடக்கிற மண்ணுக்கான போரினையும், அரசியல் அதிகாரத்திற்காக போராட்டத்தையும், ஆதிக்கத்திற்கு எதிரான, ஆக்கரமிப்புகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களையும் மதச்சாயம் பூசி, மதவெறிப் போராட்டங்களாக சித்தரித்து, அதன் மூலம் மத அடிப்படைவாதிகளை வளர்த்து விடுகிறது.

மத அடிப்படைவாதிகளுக்கு ராணுவ பயிற்சியும், ஆயுதங்களையும் அளித்து கலகங்களை உருவாக்கிவிட்டு அந்த கலகங்களை அடக்க அந்நாட்டு அரசுகளுக்கும் ஆயுதங்களை விற்கிறது. கலகக்காரர்களும், கலகத்தை அடக்கும் அரசும் தங்களின் ஆயுத தேவைக்கு அமெரிக்காவையே சார்ந்திருக்க வேண்டிய நிலை.

அமெரிக்க ஆதரவாளர் ஈரான் மன்னர் ஷா-வை அதிரடிப் புரட்சியின் மூலம் அகற்றிவிட்டு கொமேனி ஈரான் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றினார். அமெரிக்காவின் சொத்துகளை முடக்கினார். உடனே ஈரானைத் தாக்க சதாம் உசேனை அமெரிக்கா ஏவிவிட்டது. இரசாயன ஆயுதங்கள் உட்பட ஏராளமான ஆயுதங்களை உலகத்தை பங்கு போடும் போட்டியில்இருந்த ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரு ஏகாதிபத்தியர்களில் ஆப்கனிஸ்தானை ஆக்ரமிக்கும் முயற்சியில் ரஷ்யா வென்றது. மத்திய ஆசிய, நாடுகளின் கச்சா எண்ணெய் குழாய்களின் மூலமாக ஆப்கன், பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்ல ஆப்கானிஸ்தான் மண் தேவைப்பட்டது.
1979ஆம் ஆண்டு ரஷ்யா தன் கைப்பாவை நஜிபுல்லாவின் துணையுடன் ஆப்கனை ஆக்ரமித்தது. நாத்திகவாதிகளான ரஷ்ய கம்யூனிஸ்ட்களை விரட்ட, இஸ்லாமிய மத தீவிரவாதத்தை அமெரிக்கா திட்டமிட்டே வளர்த்தது. ஆப்கனில் முஜாஹிதீன்களும், தாலிபன்களும் அமெரிக்காவால், பாராட்டி சீராட்டி வளர்க்கப்பட்டனர். பல கோடி டாலர் பெருமான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியது. இது போதாதென பின்லேடனின் அல்-கொய்தாவும் சவுதி அரேபியாவிலிருந்து ஆப்கனுக்கு வந்து முஜாஹிதீன்களுக்கும், தாலிபான்களுக்கும் பக்கபலமாக நின்றது.

ஆப்கன் மண்ணை ரஷ்ய ஆக்ரமிப்பிலிருந்து காப்பாற்றும் மக்களின் போராட்டம் திசை திருப்பப்பட்டு, மத வெறியூட்டப்பட்ட தாலிபான்களும், முஜாஹிதீன்களும் ரஷ்ய படைகளையும், அதன் பொம்மை அரசான, கைகூலி நஜிபுல்லாவின் படைகளையும் எதிர்த்து வீரப்போர் புரிந்தனர். 1989ல் ரஷ்யாவின் படை புறமுதுகிட்டு ஓடியது. ஆப்கனில் ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான ஆக்ரமிப்பு யுத்தம்-நஜிபுல்லா அரசுக்கு எதிராக தாலிபான்களும், முஜாஹிதீன்களும் நடத்திய யுத்தமாக-உலகத்தின் பார்வைக்கு காட்டப்பட்டது.

ஆனால், அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு, ஊட்டி வளர்க்கப்பட்ட தாலிபன்களும், அல்-கொய்தாவும் வளைகுடாப் போரிலே அமெரிக்காவின் நரித்தனத்தை கண்டுகொண்டன. மேலும் தன் சொந்த மண்ணிலேயே அகதிகளாய் வாழும் பாலஸ்தீன மக்களின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக இருப்பதும் தாலிபன்களுக்கும், அல்-கொய்தாவுக்கும் ஒப்புடையதாக இல்லை. எனவே, அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரி என அறிவித்து அவை தாக்குதலில் இறங்கின.
தன்னாலே வளர்க்கப்பட்ட தாலிபன்களும், அல்-கொய்தாவும் தனக்கெதிராகவே திரும்பி இரட்டை கோபுரத்தை தாக்கியதும், தன் நரித்தனங்களையும், ஆயுத விற்பனைகளையும், வளைகுடா நாடுகளிடம் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதையும் மூடி மறைக்கவும், தன் சந்தை நலனைக் காத்துக்கொள்ளவும் அமெரிக்கா "பயங்கரவாதம் என்ற சொல்லாடலை உருவாக்கி உலவவிட்டது. "பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரிலே ஆப்கனில் தாலிபான்கள் மற்றும் அல்-கொய்தாவையும், இதற்கு உலக நாடுகளின் எதிர்ப்பு கடுமையாக இருக்கவே தனக்கு ஆதரவாக தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆளாகும் இந்தியா போன்ற நாடுகளை தன் வலைக்குள் இழுக்க முயற்சிக்கிறது. இந்த பின்னனியில்தான் மும்பை தாக்குதலில் அமெரிக்க சி.ஐ.ஏ.வின் சதித்தனம் இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் அனுமானிக்கின்றனர்.

அமெரிக்காவின் அடிவருடியாக பல பத்தாண்டு காலங்கள் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த பாகிஸ்தான் சமீபமாகத்தான் பாராளுமன்ற ஜனநாயகப் பாதைக்கு திரும்பியுள்ளது. இதுவரை பாகிஸ்தானை ஆண்ட இராணுவ தளபதிகள், அமெரிக்காவின் கைக்கூலிகளாக, அடியாட்களாக வலம் வந்தனர்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ என்பது பாராளுமன்ற அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத அமைப்பு. அமெரிக்க நலன் காக்கும் அரசு தொடர்ந்து இருப்பதை அது உறுதி செய்யும். முஜாஹிதீன்கள், லஷ்கர் போன்ற மத அடிப்படைவாத குழுக்களை உருவாக்கி, பயிற்சி அளித்து, ஆயுதங்களும் வழங்கி தம் அடியாட்களாக வைத்துள்ளது ஐ.எஸ்.ஐ. இதன் செயல்பாடுகளுக்கு மாறான எண்ணம் கொண்ட அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதும், 'மாண்டு போவதும் பாகிஸ்தானில் சகஜம். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது "நாங்கள்ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதிகளை இந்நாட்டிலிருந்தே ஒழித்திடுவோம் என முழக்கமிட்ட பெனாசிர் பூட்டோவும் இவர்கள் கையிலேதான் செத்துப் போனார். பாகிஸ்தான் அதிபரும், பிரதமரும் கூறுவதுபோல பாகிஸ்தான் இன்றளவும் பயங்கரவாதிகளின் களமாகவே உள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மட்டும் பாகிஸ்தானில் நடந்த நூற்றுக்கும் அதிகமான தற்கொலைப் படை தாக்குதல்களில் சுமார் 1200 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவைவிட அதிகமாக பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் கலவர பூமியாகவே இருக்கும் வரைதான் அமெரிக்காவின் ஆயுதங்கள் அங்கே விற்பனையாகும். அதற்காகவே, மத அடிப்படைவாத தீவிரவாதிகளை அமெரிக்கா ஆயுதங்களைக் கொடுத்து பாகிஸ்தானில் வளர்த்து வருகிறது.

இன்றைக்கு மும்பை தாக்குதல்களை நடத்தியவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அனைத்து ஊடகங்களும் பிரச்சாரம் செய்வதும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்ற பொதுக் கருத்தை மக்களிடம் உருவாக்க முயல்வதும் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒரு பதற்றமான நிலையை தொடர்ந்து இருக்க செய்வதற்கான மிகப்பெரிய சதி வலையின் கண்ணிகளே. இந்த பதற்றமான நிலை தொடர்வது அமெரிக்காவிற்கு பல வகைகளில் சாதகமானதாகும்.

முதலாவதாக "இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடலை இந்தியாவில் நிலை நிறுத்தலாம். "பயங்கரவாத எதிர்ப்பு போர் என்ற அமெரிக்காவின் படுபாதகத்திற்கு ஆதரவு அணியிலே உலகின் மிகப்பெரிய, வல்லரசு நாடாக வரக்கூடிய இந்தியாவையும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போரை மூளவைத்து விட்டால் அமெரிக்காவின் ஆயுத வியாபாரம் இரு நாடுகளுக்கும் கனஜோராக நடக்கும். இத்துணை சாதகங்கள் இருப்பதால்தான் மும்பை தாக்குதல்கள், பாகிஸ்தான் மத அடிப்படைவாத குழுக்கள் மூலம் அமெரிக்க உளவு அமைப்பால் நடைபெற்றிருக்கலாமோ என அரசியல் நோக்கர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்தியாவில் இந்துத்துவா அடிப்படைவாதிகள், முஸ்லிம்களை இல்லாதொழித்து, அகண்ட பாரதம், இந்து ராஷ்டிரம் உருவாக்கும் களப்பணியிலே இருப்பவர்கள். பல கொலைக்களங்களை கண்டவர்கள். குஜராத் கல வரத்தில் 2500க்கும் அதிகமான முஸ்லிம்களை படுகொலை செய்ய ஏதுவாக கோத்ராவில் தாங்களே ரயிலை எரித்து 60பேரை களப்பலி தந்தவர்கள். இவர்களின் அமைப்பு அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளில் இருந்து நிதி வசூலித்து அனுப்பி இந்திய திரு நாட்டை ரத்த பூமியாக்குவதை பல்வேறு ஊடகங்கள் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

இஸ்ரேலின் இனவெறி 'மொசாத படையுடன் நெருக்கமான இந்த இந்துத்துவா அமைப்புகள், மொசாத்தின் அரசியல் குரு சி.ஐ.ஏவுடன், நெருக்கமாகவே உள்ளன. இந்தியாவில் "இஸ்லாமிய பயங்கரவாதம் எனும் கடைச்சரக்கை விற்க இந்த "சாவு வியாபாரிகள் ஒப்பந்தம் போட்டிருக்கலாம் என்றும் சில அரசியல் நோக்கர்கள் அச்சமடைந்துள்ளனர்.

"ஹேமந்த கார்கரேவை கொன்றது பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகளாகவே இருக்கலாம் ஆனால் கொல்ல அனுப்பியது யார்?-என்ற அந்துலேவின் கேள்வி, இந்த நாட்டின் மீது பற்றுகொண்ட ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு தேசபக்தனும், கேட்கின்ற கேள்வி.

-வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன்

சத்யம் மிகப்பெரிய சைபர் மோசடி நிறுவனம்


வாஷிங்டன்/மும்பை: சத்யம் நிறுவனத்துக்கு 8 ஆண்டு கால தடை விதித்துள்ளது உலக வங்கி. இதனால் ஒட்டுமொத்தமாக இந்திய பிபிஓ துறையே பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

சமீப காலமாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து வீழ்ச்சிகளைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் மேடாஸ் கட்டுமான நிறுவன இணைப்பில் அதன் தலைவர் காட்டிய அவசரம், முதலீட்டாளர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. இதனால் இந்நிறுவனப் பங்குகள் சர்வதேச அளவில் கடுமையான வீழ்ச்சி கண்டன. செபி அமைப்பின் க டும் கண்டனத்துக்கும் ஆளானது சத்யம்.

இந்தியாவிலும் 35 சதவிகிதம் வரை இந்நிறுவன பங்குகள் விலை சரிந்தது.

இந்நிலையில் மிகப்பெரிய சைபர் மோசடியில் இந்நிறுவனம் சிக்கி, உலக வங்கியிடம் பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ளது.

உலக வங்கியின் கணிப்பொறி செயல்பாடுகள் முழுவதையும் சென்னையில் இருந்து சத்யம் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. சத்யம் நிறுவனத்தை சேர்ந்த சிலர் ஒரு மென்பொருளை வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் ஒரு கணிப்பொறியில் நிறுவி, உலக வங்கியின் தகவல்களைக் கடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலக வங்கி தொடர்பாக கணிப்பொறியில் அவர்கள் என்னவெல்லாம் தட்டச்சு செய்கிறார்களோ அவை அனைத்தையும் ஒரு வேறு ஒருவருக்கு இந்த மென்பொருள் கடத்தியுள்ளது. மேலும் உலக வங்கி தொடர்பான ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லையாம். சத்யம் நிறுவனத்தைச் சேர்ந்த தனிப்பட்ட சிலர் இதன் மூலம் ஆதாயமடைந்துள்ளதாக உலக வங்கி புகார் கூறியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம்தான் இந்த உண்மை எஃப்பிஐ மூலமாக உலக வங்கிக்கு தெரிய வந்துள்ளது.

உடனே சத்யம் நிறுவனத்தை உலக வங்கி அடுத்த 8 ஆண்டுகளுக்கு தடைசெய்துள்ளது. ஆனால் இந்த தகவலை வெளியில் வராமல் பார்த்துக் கொண்டது சத்யம் நிறுவனம். இப்போது விஷயம் வெளியில் கசிந்துவிட்டது.

இது சத்யம் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தபடி பன்னாட்டு அமைப்புகளுக்கு அவுட்சோர்ஸிங் செய்யும் பல பிபிஓக்களுக்கும் பலத்த அடியாகும். சத்யம் நிறுவனத்தின் இந்த செயல் இந்திய நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையை அடியோடு ஒழித்துவிட்டதாக பலரும் இப்போது கருத்துக் கூறி வருகின்றனர்.

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது சத்யம் நிறுவனம்.

இந்நிலையில் இந்த தகவல் வெளியில் கசிந்தபிறகு சத்யம் நிறுவனப் பங்குகள் பெரும் சரிவைச் சந்துள்ளன. மேலும் 16 சதவிகிதம் விலை குறைந்து நேற்று ரூ. 140க்கு விற்கப்பட்டன. நியூயார்க் சந்தையிலோ வெறும் 6 டாலருக்குக் கீழ் போய்விட்டது.

சத்யம் தலைவர் ராஜினாமா?:

இதற்கிடையே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் மற்றும் அதன் தலைவர் ராமலிங்க ராஜூ பதவி விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைவர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை அவர் இயக்குனர் குழுவுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், இயக்குனர் குழுவின் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழுக் கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது.

இதையொட்டி இப்போதே ராஜினாமா கடிதத்தை இயக்குனர் குழுவுக்கு அவர் அனுப்பிவிட்டார் என்கிறார்கள்.

thanks : thatstamil

Saturday, December 20, 2008

கர்கரே இல்லாத மாலேகான் வழக்கு-விசாரணை தேங்கும் அச்சம்



மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டு விட்டதால், மாலேகான் வழக்கு விசாரணை முன்பு போல துடிப்புடன் இருக்குமா என்று, அந்த வழக்கை விசாரித்து வரும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் அஞ்சுகின்றனர்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் கர்கரே. மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவராகப் பொறுப்பேற்றவுடன் மாலேகான் வழக்கை துப்பு துலக்குவதில் தீவிரம் காட்டினார்.

அவரது தீவிரமான, ஆழமான விசாரணையில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. பெண் தீவிரவாதி(துறவி) பிரக்யா சிங் தாக்கூர், தீவிரவாதி (சாமியார்) பான்டே உள்ளிட்ட பல இந்து தீவிரவாதிகள்தான் இதில் கைதாகினர்.
இந்து தீவிரவாதிகள்தான் இந்த செயலுக்குக் காரணம் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கினார் கர்கரே.
வழக்கு துரித கதியில் போய்க்கொண்டிருந்த நிலையில்தான் துரதிர்ஷ்டவசமாக மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியானார் கர்கரே.

இதனால் மாலேகான் வழக்கை விசாரித்து வரும் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் பெரும் சோகத்தில் உள்ளனர். வழக்கு இனி எப்படிப் போகும், முன்பு போல தீவிரம் இருக்குமா, அரசிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் மற்றும் அச்சத்தில் அவர்கள் உள்ளனர்.

கர்கரேவும் இல்லை, கர்கரே கேட்ட உதவிகளையெல்லாம் செய்து கொடுத்த உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இல்லை. இந்த நிலையில் இந்த வழக்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

முன்பு போல தங்களுக்கு ஆதரவு கிடைக்காது என்ற அச்சமும் அவர்களிடம் உள்ளது. இதுகுறித்து அவர்கள் பகிரங்கமாக பேசாவிட்டாலும் கூட, போலீஸ் வட்டாரத்தில் இந்த வழக்கு குறித்த கவலைகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றனவாம்.

இருப்பினும், கர்கரே கடுமையாக பாடுபட்டதற்கு உரிய பலனை அடையாமல் விடக் கூடாது என்ற உறுதியில் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் உள்ளனராம்.
தீவிரவாத தடுப்புப் பிரிவு கூடுதல் ஆணையர் சுக்வீந்தர் சிங் கூறுகையில், விசாரணையின் இறுதி கட்டத்தில் நாங்கள் உள்ளோம் என்றார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கை தற்போது குற்றப் பிரிவு விசாரித்து வருகிறது. மாலேகான் வழக்கை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு விசாரித்து வருகிறது. மும்பைத் தாக்குதல் வழக்கை தீவிரவாதத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தால் மாலேகான் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்பதால் இப்போதைக்கு அது ஒப்படைக்கப்படவில்லையாம்.

குண்டுவைக்க ரூ. 10 லட்சம் நிதி:

இதற்கிடையே, தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம், மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணமான இந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத் பொருளாளர் அஜய் ரஹிர்கர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்காக பாரத் அமைப்பிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை இந்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் ரஹிர்கர், 2 அறைகளை புக் செய்துள்ளார். இந்த அறைகள் ரஹிர்கர், எச்.வி. ஆப்தே, கர்னல் பி.எஸ். ராவ் பல்வந்த் ஆகியோரது பெயர்களில் புக் ஆகியுள்ளது. இதை ஹோட்டல் ஊழியரான கெளரவ் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

சிங்காகாட்டில் ஆயுதப் பயிற்சி:

மேலும், இந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு சிங்காகாட் என்ற இடத்தில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ராகேஷ் தாவ்டே கூறியுள்ளார்.

இவருக்கும், நான்டெட் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், சிபிஐ தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை, ராம்ஜி கலஸ்கரே என்பவர்தான் தனது மெக்கானிக் ஷாப்புக்கு கொண்டு வந்ததாக, இந்தூரைச் சேர்ந்த மெக்கானிக் கடை உரிமையாளரான ஜிதேந்திரா சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.

கலஸ்கரே-டேங்களேவுக்கு வலைவீச்சு:

இந்த கலஸ்கரே தற்போது தலைமறைவாக உள்ளார். மேலும் குண்டுகளை வைத்ததாக கருதப்படும் சந்தீப் டேங்களே என்பவரும் தலைமறைவாக உள்ளார். இவர்கள் இருவரும் இந்த வழக்கில் அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதால் இவர்களைப் பிடிக்க தற்போது தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கர்கரே இல்லாவிட்டாலும் கூட அவர் ஏற்படுத்தி வைத்து விட்டுப் போயுள்ள வேகத்தைப் பிடித்துக் கொண்டு தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் மாலேகான் வழக்கில் மீண்டும் மும்முரமாகியுள்ளனர்.

பயங்கரவாத தடுப்பு சட்ட வரைவுகள் மக்களவையில் நிறைவேறியது

மிகப் பெரிய திட்டமிடலுடன் அரங்கேறிய பம்பாய் கலவரத்திற்கு மூல காரணகர்த்தா இந்திய பயங்கரவாதி மோடி தான் என்பது பலவகையிலும் நிரூபணமாகி வருகிறது. பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்ட வரைவுகள் பயங்கரவாதி மோடி மீதுப் பாயுமா ?
அத்வானிப் போன்ற பயங்கரவாதிகள் அதை ஆதரித்திருப்பதால் சிறுபான்மை மக்கைளயே மேற்கானும் பயங்கரவாத தடுப்பு சட்டம் பாய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.







மும்பை கலவரத்தில் மோடியின் பங்கு

எப்படியாவது போலி சாமியாரினி பிரக்யா சிங்கை காப்பாற்றியாக வேண்டும், தரகர்கள் மூலம் பெட்டி பெட்டியாக கோடிகளை வைத்துப் பேரம் பேசியும் படியாத ஹேமந்த் கர்கரேவை தீர்த்துக்கட்டி விட்டால் மட்டுமே ப்ரக்யா சிங்கை காப்பாற்ற முடியும் அதன் மூலமாக முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டு பிரக்யா சிங் நிரபராதி என்று நிரூபிக்கச்செய்து சங்பரிவாரங்கள் தீவிரவாதிகள் அல்ல என்று மக்களை நம்ப வைக்க முடியும் என்ற முடிவுக்கு வந்த மோடி இந்தியாவில் நிலை கொண்டுள்ள உலக பயங்கரவாத அமைப்பாகிய மொஸாதுடன் கைகோரத்தார்.


மொஸாதுக்கு உலகம் முழுவதும் கிளைகள் இருக்கின்றன வல்லரசு நாடுகளின் தலைமைப் பொறுப்புக்கு வருகின்றவர்களை முடிவு செய்யும் அளவுக்கு தீய சக்தி வாய்ந்தவையே மொஸாத்.


உலகில் பல நாடுகளில் அரசுக்கு தெரியாமல் பல தீவிரவாத அமைப்புகள் செயல்படுகின்றன ஆனால் மொஸாது தான் அரசு,

அரசு தான் மொஸாது

என்று சொல்லும் அளவுக்கு இஸ்ரேலில் செயல்படுகிறது பயங்கரவாத மொஸாத் அமைப்பு. அதனால் தான் இந்தியாவின் பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த இந்திரா காந்தி அம்மையாருடைய இறுதி மூச்சுவரை பயங்கரவாத இஸ்ரேலுடனான எந்த உறவையும் இந்தியாவுடன் வைத்துக்கொள்ளவில்லை.

அதற்குப் பின் பாபர் மஸ்ஜிதை இடிப்பதற்கு மறைமுக ஆதரவு வழங்கிய பாஷிச சிந்தனை கொண்ட நரசிம்மராவ் முதன் முறையாக இஸ்ரேலை நோக்கி வெள்ளைப் புறாவை பறக்க விட்டார் அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த பிஜேபி இந்தியாவிற்குள் மொஸாது என்ற விஷப் பாம்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பளித்து இந்தியாவின் இதயமாகிய பம்பாயில், பம்பாயின் இதயமாகிய நரிமன் ஹவுஸில் குடியமர்த்தி பால் வார்த்தார்கள்.


மொஸாதுடைய நீண்ட நாள் திட்டம்

பாகிஸ்தானுடைய ராணுவ பலத்தை சீர்குலைக்க வேண்டும் என்பது மொஸாதுடைய நீண்ட காலத்திட்டம் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த மொஸாதுக்கு மோடியின் ஹேமந்த் கர்கரே கொலை திட்டம் நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது.


மோடியுடைய ஆவலை பூர்த்தி செய்து கொடுப்பதுடன் பாகிஸ்தானுடைய ராணுவ பலத்தை சீர்குலைக்க வேண்டும் என்கின்ற கணவை நிறைவேற்றிக் கொள்வதற்கு மோடியுடைய கொலைவெறி திட்டத்தை மொஸாத் நல்ல தருனமாக பயன்படுத்திக் கொண்டது.


இந்தியாவின் பொருளாதார, மற்றும் ராணுவ முன்னேற்றத்தைக் கண்டு சகிக்க முடியாத மொஸாதுடன் நெருங்கிய தொடர்புடைய வல்லரசுகள் மொஸாதை இன்னும் சூடேற்றி விடவே மொஸாது இந்தியாவின் சங்பரிவார தலைமையையும் அதன் கீழ் இயங்கும் ஊடகங்களையும் இது பாகிஸ்தானின் பயங்கரவாதம் என்று சூடேற்றி விட்டது மதவெறி (நடுநிலை ஊடகங்களைத தவிற) ஊடகங்களுக்கு பெரிய தீனியாகிப் போனது மும்பை கலவரம்.



ஹேமந்த் கர்கரே அவர்களை கொலைசெய்து கொலைப் பழியை பாகிஸ்தான் பயங்கரவாதம் என்று உலக ஊடகங்களை ஒருமித்தக் குரலில் ஊளையிடச் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் மோடிக்கு மிகவும் நெருக்கமான தாஜ் மஹால், ஓபராய் ஹோட்டல்கள்.


மேற்கானும் திட்டம் வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு பாகிஸ்தானிகளை தேர்வுசெய்வது புத்திசாலித்தனமல்ல காரணம் முஸ்லிம்களுடைய குணாதிசயங்களை நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள் முஸ்லீம்களை விட சங்பரிவாரத்தினரே, முஸ்லிம்கள் இரண்டு விஷயத்தில் மிக உறுதியானவர்கள என்பது அவர்ளுக்கு நன்றாகத் தெரியும்


1. ஒன்று தனது மார்க்கம்.

2. அடுத்தது தேசப்பற்று.


இந்த இரண்டு விஷயத்திலும் துரோகம் இழைக்கவே மாட்டார்கள் அதனால் மகுடியின் முன் அடங்கும் பாம்பைப் போன்று மோடியின் முன் அடங்கும் மூலை சளவை செய்யப்பட்ட சங்பரிவார்களே இதற்கு தகுதியானவர்களும், நம்பிக்கையானவர்களும் என்பதால் அவர்களையே கொம்பு சீவி கொலை களத்தில் இறக்கி விடப்பட்டு அவர்களிலும் பலரை கொன்று விட்டு நாலு வார்த்தை உருது பேசத் தெரிந்தவனை மட்டும் சாட்சியாக விட்டு விடுவது என்ற சதி திட்டத்தில் எஞ்சியவனே அஜ்மல் அமீர் என்ற முஸ்லிம் பெயர் சூட்டப்பட்டவன். ஆனாலும் அல்லாஹ் அவர்களுடைய திட்டத்தை அம்பலப் படுத்தினான்.


அஜ்மீர் அமீர் என்று பெயர் சூட்டப்பட்டவனுடைய கையில் கட்டப்பட்ட யூனிஃபாம் காவி கலர் காப்பு களட்டப்படாமல் கொலை களத்தில் இறக்கி விடப்பட்டதால் மாட்டிக் கொண்டான்.


குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட மதவெறியர்களுடைய கைகளிலும் அதே யூனிஃபாம் காவி கலர் காப்பு அணியப்பட்டிருப்பதையும் காணலாம்.


வீணை பிடிக்க வேண்டிய கைகளில் துப்பாக்கி ஏந்திப் பயிற்சி பெறும் பெண்களின் கைகளிலும் அதே யூனிஃபாம் காவி கலர் காப்பு அணியப்பட்டிருப்பதை கவனிக்கலாம்.





முஸ்லிம்கள் உயிரேப் போனாலும் காப்பு அணிய மாட்டார்கள்.

அதேப்போன்று வடஇந்திய சங்பரிவாரங்கள் உயிரேப் போனாலும் யூனிஃபாம் காவி கலர் காப்பைக் கழட்ட மாட்டார்கள்.


ஏற்கனவே காந்தியை சுட்டுக் கொல்வதற்கு இவ்வாறே திட்டம் தீட்டி சிபிஐ வசம் வசமாக மாட்டிக் கொண்டவர்களுடைய வாரிசுகள் தான் இவர்கள்.


அடுத்த ஆதாரம்:

அவன் கொடுத்த பாகிஸ்தான் விலாசத்தில் ஏற்கனவே ஆள் இருப்பதாகவும் இந்தியாவில் பிடிபட்டவன் பாகிஸ்தானைச் சேர்நதவன் அல்ல என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.


ஆதாரத்தை கொடுங்கள் நடவடிக்கை எடுபக்கின்றோம் என்று பாகிஸ்தான் பலமுறை கூறிய பின்னரும் இதுவரை தகுந்த ஆதாரத்தை இந்தியா சமர்ப்பிக்காமல் இருந்து வருகிறது.


மும்பை கலவரம் அந்திய பங்கரவாதி மோடியும், இஸ்ரேலிய பயங்கரவாத மொஸாதுடைய செட்டப் தான் என்பதை நன்றாக அறிந்திருந்தும் இந்திய சங்பரிவார ஊடங்கங்களும் உலக யூத, சியோனிஸ ஊடகங்களும் பாகிஸ்தானில் தீவிரவாதம் என்று ஒப்பாரி இடுகின்றன போதாக்குறைக்கு ஐநா பொதுச் செயலர் காண்டலிஸா ரைஸை இந்தியா – பாகிஸ்தானுக்கு அனுப்பி தீவிரவாத பல்லவியை பாட விட்டிருக்கின்றனர்.


வளரும் மேற்கத்திய நாடுகளின்

மொஸாதுக்கு பாகிஸ்தான் மீது ஒரு கண் என்றால் பொருளாதாரத்திலும் ரானுவத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் மீது மேற்கத்திய வல்லரசு நாடுகளுக்கு ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது.

அதனால் தான் அமெரிக்கா, பிரிட்டன், ரஸ்யா போன்ற நாடுகள் பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம்கள் அதிகரித்து விட்டது ஒடுக்குங்கள் என்று ஓலமிடுகிறது.


நாம் கேட்கிறோம் ?

ஈராக்கை சல்லடையாக்கியப் பின் உளவு துறை கொடுத்த தவறான தகவல்களின் அடிப்படையில் போர் நடத்தப்பட்டது என்றுக்கூறி வருத்தம் தெரிவித்தது போல், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் செயலபடுவதாக உளவுத் துறை கொடுத்த தவறான அடிப்படையில் இந்தியாவை பாகிஸ்தான் மீது போர் தொடுக்கப்பட்டது என்ற சால்சாப்பைக் கூறுவார்கள் எவருடைய கண்கெட்டப்பின்னே சூரிய உதயம் எந்தப்பக்கம் போனால் அவர்களுக்கென்ன ? அவர்களுடைய பார்வை மங்கா ஒளியாக இருக்க வேண்டும் நேட்டோ'' பவருடன் வாழவேண்டும் அதற்காக உலகில் எந்த கொடூரத்தையும் அரங்கேற்றத் தவற மாட்டார்கள்.




இந்திய மற்றும் உலக ஊடகங்களே!

வரலாற்று திரிபுகள் செய்து அத்வானி, உமாபாரதி தலைமையில் இந்திய வரலாற்று சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த பாபர் பள்ளிவாசலை இடித்த தீவிரவாத கும்பலை கண்டித்து எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


சபர்மதி எக்ஸ்ப்ரஸ் ரயில் பெட்டிக்கு வெளியிலிருந்து யாரும் பெட்ரோலை ஊற்றி கொளுத்த வில்லை மோடியுடைய சங்பாரிவாரர்கள் உள்ளுக்குள் தீவைத்துக் கொண்டார்கள் என்பதை அப்பொழுதே தடயவியல் நிபுனர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கள்,


முதல்வர் பதவி என்னை தடுக்கவில்லை என்றால் முஸ்லீம்கள் மீது நானே சென்று குண்டு வீசுவேன் என்று கூறிய மோடியுடைய தீவிரவாதத்தை தெஹல்கா இணையதளம் தோலுரித்துக் காட்டியது அவர்களுடைய சதி திட்டத்தால் மூவாயிரம் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு பலகோடி ரூபாய் சொத்துக்க்ள சூறையாட்ப்பட்டன ஆதாரங்கள் கிடைத்தப் பின்னராவது அதைக் கண்டித்து எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி வைத்து நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


சூலாயுதங்களுடன் இந்தியாவின் பொது மேடைகளில் தோன்றி சங்பரிவாரர்களிடத்தில் மதவெறியைத் தூண்டிப்பேசிய ப்ரவீன் தொகாடியாவின் தீவிரவாதத்தை ஒடுக்கச் சொல்லி எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி வைத்து நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


இனவெறியையும், மொழி வெறியையும் தூண்டி விட்டு பன்னெடுங்காலமாக மும்பையில் ரெத்த ஆறை ஓட்டச்செய்யும் பால் தாக்கரே, ராஜ் தாக்கரேயை கண்டித்து எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி வைத்து நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


சகோதரர்களே!

வல்ல அல்லாஹ் அவர்களுடைய சதி திட்டத்தில் மண்ணை அள்ளிக் கொட்டி உலகுக்கு இவர்கள் யார் ? இவர்களுடைய சதிதிட்டம் எவ்வாறு இருந்தது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விடுவான்.


நெஞ்சுரம் கொண்ட ஹேமந்த் கர்கரே அவர்களைப்போல் மும்பை கலவர சம்பவத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரக்கூடிய நெஞ்சுரங் கொண்டவர்களை அல்லாஹ் உருவாக்குவான்.


சதிகாரர்களுடைய சதி திட்டத்தின் அடிப்படையில் போர் மூளுமேயானால் ஏற்கனவே இந்திய ராணுவத்தினரால் காஷ்மீர் முஸ்லீம்கள் நிலை குலைந்துப் போயிருப்பதால் அந்த மக்களுடைய நிலமை இன்னும் மோசமாகக் கூடிய நிலை ஏற்படலாம்.








மும்பையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்திய சதிகாரர்களின் சதி திட்டத்தையும்,
அதனுடைய பிண்ணனியையும் வெளிச்சதிற்கு கொண்டு வரவும்,


இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் மூளாமல் இருக்கவும்


வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திப்பதிலிருந்து யாரும் பின் வாங்கி விடாதீர்கள்.
உள்ளம் உருகி இறைவனிடத்தில் பிரார்த்தியுங்கள்,
யாருடைய பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வான் என்று நமக்கு தெரியாது.


இன்று ஒற்றுமையிலும், பொருளாதாரத்திலும், வழிகாட்டுதலிலும் மிகவும் பின்தங்கி இருக்கின்ற நாம் சர்வ வல்லமை பொருந்திய இறைவனுடைய உதவியை கோருவதில் சோர்வடைந்து விடாதீர்கள்.



''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ, எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தை சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி, (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக ! திருக்குர்ஆன் 2:296.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


thanks to : Emil Friend

Thursday, December 18, 2008

புஷ்ஷுக்கு செருப்படி - தமிழகத்தில் கொண்டாட்டம் - புகைப்படங்கள் !

கொண்டாடுவோம்!


இது வீரத்தின் திருநாள்.


ஒரு வெடிகுண்டுத் தாக்குதலை விடவும்தற்கொலைப்படைத் தாக்குதலை விடவும்வலிமையானது இந்தத்தாக்குதல்.


வீரம் செறிந்தது இந்த நடவடிக்கை. மாவீரன் ஸய்தி !


முன்தாதர் அல் ஸய்தி - உண்மையிலேயே ஒரு மாவீரன்தான்.


அமெரிக்க வல்லரசின் இராணுவம்,


அதன் உளவுத்துறைகள்,


அதிபரின் சிறப்புப் பாதுகாப்புப் படைகள்..‏


இவர்களெல்லாம் மூடர்கள் என்றோ முன்யோசனை அற்றவர்கள் என்றோ நாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்க சிப்பாய்களின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் பொருட்டு, சமீபத்தில் இராக்கில் குழந்தைகளுக்கான பொம்மைத் துப்பாக்கிகளின் விற்பனையைக் கூடத் தடை செய்திருக்கிறது அமெரிக்க இராணுவம்.





நான்கு ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் இராக்கை சலித்து விட்டது. கொத்துக் குண்டுகள் முதல் அபு கிரைப் வரையிலான எல்லா வழிமுறைகள் மூலமும் இராக்கைக் குதறிவிட்டது. ஷியா, சன்னி, குர்து.. என எல்லா விதமான பிரிவினைகளையும் பயன்படுத்தி இராக் மக்களைத் துண்டாடி விட்டது. பொம்மை ஆட்சியை அமைத்து துரோக பரம்பரையையும் தோற்றுவித்து விட்டது..





‏‏இருப்பினும் “பலான தேதியில் பலான இடத்துக்கு அமெரிக்க அதிபர் வருகிறார்” என்று முன்கூட்டியே அறிவிக்கும் துணிவு அமெரிக்க அரசுக்கு இல்லை. ஊரடங்கிய பின்னிரவு நேரத்தில், வைப்பாட்டி வீட்டுக்கு விஜயம் செய்யும் நாட்டாமையைப் போல பாக்தாத் நகரில் புஷ்ஷை இறக்கியது அமெரிக்க உளவுத்துறை.

அவர் இராக் மக்களிடம் விடை பெறுவதற்கு வந்தாராம்!
2004 ஆம் ஆண்டு இராக்கில் புஷ்ஷின் படைகள் ஆரவாரமாக நுழைந்த அந்த நாளை உலகமே அறிந்திருந்தது. விடை பெறும் நாளோ, இராக் மக்களுக்கே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.‏‏

இரகசியமான இந்த விடையாற்றி வைபவத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு பலமாக இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு கூழாங்கல், ஒரு அழுகிய முட்டை, ஒரு தக்காளி எதையும் அந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தின் அரங்கினுள் ஸய்தி எடுத்துச் சென்றிருக்க முடியாது. இப்படியொரு ஆயுதத்தை ஒரு மனிதன் அணிந்து வரமுடியும் என்று அமெரிக்க உளவுத்துறை எதிர்பார்த்திருக்கவும் முடியாது.
எப்பேர்ப்பட்ட கவித்துவம் பொருந்திய தாக்குதல்! புஷ் கொல்லப்படவில்லை. காயம்படவுமில்லை. செருப்படிக்குத் தப்பி ஒதுங்கி சமாளித்து அந்த மானக்கேடான சூழ்நிலையிலும் மீசையில் மண் ஒட்டியது தெரியாத மாதிரி, அப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அமெரிக்கப் பெருமிதம் அடி வாங்காத மாதிரி, கம்பீரமான அசட்டுச் சிரிப்பின் பல வகைகளை நமக்குக் காட்டுகிறார் புஷ்.

சொற்களே தேவைப்படாத படிமங்களாக நம் கண் முன் விரிந்த அந்தக் காட்சி 4 ஆண்டுகளாக இராக்கில் அமெரிக்கா வாங்கி வரும் செருப்படிகள், அதன் அவமானங்கள், அதன் சமாளிப்புகள்.. அனைத்துக்கும் பொழிப்புரை வழங்குகிறது.

நான்காண்டு செருப்படிகளை உள்ளடக்கிய ஒரு செருப்படி. நான்காண்டு விடுதலைப்போருக்குப் பொருத்தமான ஒரு விடையாற்றி. எப்பேர்ப்பட்ட கவித்துவமிக்க காட்சி!

சதாம் தூக்கிலேற்றப்பட்ட காட்சியுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். அதுவரை தன்னை ஆதரித்திராத உலக மக்கள் பலரின் அனுதாபத்தையும் மரியாதையையும் அன்று சதாம் பெறமுடிந்தது. அநீதியான அந்தத் தண்டனைக்கு எதிராக அன்று உலகமே ஆர்த்தெழுந்தது.

ஆனால் அதிபர் புஷ்ஷுக்கு விழும் இந்தச் செருப்படி சொந்த நாட்டு மக்களின் அனுதாபத்தைக்கூட அவருக்குப் பெற்றுத்தரவில்லை. அமெரிக்காவின் அதிகாரத் துப்பாக்கியின் நிழலிலேயே அதன் அதிபர் அம்மணமாக நிற்பதைக் கண்டு அமெரிக்க மக்களே விலா நோகச் சிரிக்கிறார்கள்.


“இந்திய மக்கள் உங்களை நேசிக்கிறார்கள்” என்று சில மாதங்கள் முன் புஷ்ஷிடம் வாலைக்குழைத்தாரே மன்மோகன் சிங், அந்த புஷ்ஷுக்கு விழுந்த செருப்படியை அதே இந்திய மக்கள் ரசிக்கிறார்கள். செய்தி கேளவிப்பட்ட மறுகணமே பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள். நாமும் கொண்டாடுவோம்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலை விடவும் கம்பீரமானது இந்த இரட்டைச் செருப்புத் தாக்குதல். சுதந்திரம் என்ற சொல்லை மனித குலத்துக்கு வழங்கிய மெசபடோமிய நாகரீகம், அந்தச் சுதந்திரத்தின் சின்னமாக மாவீரன் ஸெய்தியை உலக மக்களுக்கும், ஒரு ஜோடி செருப்புகளை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் வழங்கியிருக்கிறது.

ஒரு வகையில் இந்தக் காலணிகள் புனிதமானவை

Wednesday, December 17, 2008

புஷ்ஷை நீங்களும் செருப்பால் அடித்து சந்தோசப்படலாம்

அஸ்ஸலாமு அலைக்கும்,
வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஏங்கிய உள்ளங்களுக்கு ஒரு சிறு ஆறுதல்...
இந்த Games இல் புஷ்ஷை செருப்பால் அடித்து சந்தோசப்படலாம்...
Links http://www.sockandawe.com/ http://www.kroma.no/2008/bushgame/www.bushbash.flashgressive.de

இதுவரை 63 லட்சதிக்கு மேலான செருப்புகள் இந்த game இல் புஷ்ஷின் மீது அடித்துள்ளார்கள். நீங்கள் எத்தனை அடிக்க போகிறீர்கள்? :-)

Tuesday, December 16, 2008

நாயே,ஈராக்கியர்களின் அன்பளிப்பு

நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகியுள்ள செய்தியின்படி, புஷ் - ஷை நோக்கி செருப்புகளை வீசிய அந்த இளம் தொலைக்காட்சி செய்தியாளர், அரபு மொழியில்,

· “நாயே,

ஈராக்கியர்களின் அன்பளிப்பு இது
வழியனுப்பு முத்தம் இது ...”
என்று சொன்னபடி முதலாவது செருப்பையும்,
“இது எம் விதவைகள், அநாதைகள், கொலையுண்டவர்களுக்காக” என்று இரண்டாவது செருப்பையும் வீசியிருக்கிறார்

கத்தரில் உருவாகும் உலகின் முதல் குர்ஆன் தோட்டம்!


உலகத்தின் முதல் குர் ஆனிய தோட்டம் (Qur'anic Botanical Garden) வளைகுடா நாடுகளில் ஒன்றான (தோஹா) கத்தரில் உருவாகிறது.எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் சக்திகளான மாணவர் சமுதாயத்தினை மேம்படுத்தும் வகையில் கத்தரில் எஜுகேஷன் ஸிட்டியில் இத்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நகரத்தில் இந்த இஸ்லாமியத் தோட்டம் அமைவதன் மூலம் உலகக் கல்வி மையங்களுக்கும், ஆராய்ச்சி நிபுணத்துவ மையங்களுக்கும் இது ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வமான அடிக்கல் நாட்டு விழா சென்ற வாரம் நடைபெற்றது. இதனை கத்தர் நாட்டு அரசரின் மனைவியான ஷேக்கா மோஜா நாஸர் அல் மிஸ்னாத் துவங்கி வைத்துள்ளார்.
150 க்கும் மேற்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில் இடம் பெற்றுள்ள மற்றும் ஏராளமான ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ள அனைத்து வகையான தாவரங்களும் இந்தத் தோட்டத்தில் இடம் பெறும். குறிப்பாக சுவர்க்கத் தோட்டம் (ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்) என்று வர்ணிக்கப்படும் தாவர வகைகள் அனைத்தும் இத் தோட்டத்தில் முதன்மையாக இடம்பெறும்.உலகில் ஆங்காங்கே அமைக்கப் படும் சாதாரண Botanical Garden போன்றல்லாமல் இந்தக் குர் ஆனிய தோட்டம் முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைக்கப் படுகிறது.கல்வி, மார்க்க நன்னெறி, அறிவியல் ஆராய்ச்சி, தாவரவியலில் பதப்படுத்துதல் மற்றும் பேணிப் பாதுகாத்தல் மற்றும் பல்வேறு நுண்ணாராய்ச்சி விரிவாக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகிறது" என்கிறார் கத்தர் ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் துணைத் தலைவரான டாக்டர் சைஃப் அல் ஹாஜாரி அவர்கள்.குர் ஆனில் கூறப்பட்டுள்ள தாவரவியலில் சாராம்சத்தினை அடிப்படையாகக் கொண்டு அவற்றில் பயன்கள், மருத்துவ முக்கியத்துவம் மற்றும் நவீன அறிவியல் துறையில் இவற்றிற்கான பங்கு ஆகியவற்றினை பகுப்பாய்வு செய்யும் முறைகளில் இந்த தோட்டம் அமையும்.யுனெஸ்க்கோ அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organisation's) சில வருடங்களுக்கு முன்பு சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அம்சங்கள் உள்ளடங்கிய தோட்டம் ஒன்றினை அமைக்கத் யோசனை தெரிவித்தபோது, ஏற்கனவே இவ்வம்சங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்த இஸ்லாமியத் தோட்டம் அமைக்கும் திட்டம் உருவெடுத்தது.குர் ஆனிய தோட்டம் மூன்று பகுதிகளாக அமைக்கப் பட உள்ளது. அதன் முதல் படியாக 24 ஹெக்டேர் நிலப்பரப்பில் திருக்குர்ஆனில் குறிப்பிடப் பட்டுள்ள 51 வகையான தாவரங்கள் இதில் பயிரிடப்படும்.
இவை முறையே கடுகு முதல் குங்குமப்பூ வரையிலும், பரங்கிக் காய் முதல் கற்றாழை வரையிலும், மருதாணி முதல் மாதுளம் பழம் வரை இறைமறை மற்றும் நபிமொழிகளில் இடம் பெறும் அத்துணை வகைகளும் இதில் இடம் பெறும். இது தவிர 350 க்கும் மேற்பட்ட மலர்களின் வகைகளும் இதில் இடம் பெறும்.விரைவில் இந்தத் தோட்டம் மற்றும் அதில் இடம் பெறும் தாவர வகைகள் ஆகியவை பற்றிய புத்தங்கள், பிரசுரங்கள் மற்றும் இணைய தளம் ஆகியவை மக்களிடையே அறிமுகப் படுத்தப் படும். இதன் மூலம் பண்டைய கால மக்கள் பயன்படுத்தி வந்த மரபு சார் தாவர வகைகளின் பயன்பாட்டிற்கும் இக்கால நவீன அறிவியலுக்கும் ஒரு இணைப்புப் பாலம் ஏற்படுத்தப்படும்.
இது ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் உதவிகரமாக இருக்கும்இந்த குர் ஆனிய தோட்டம் மூலம் இஸ்லாம் எவ்வாறு உலக அறிவியல் நிபுணத்துவம் மற்றும் மருத்துவத்துறை முன்னேற்றத்தில் பெரும் பங்கு ஆற்றியது என்ற முழு விபரமும் சர்வதேச அளவில் மக்களுக்குச் சென்றடையும். இது நாள் வரை பிற மதத்தினர் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான பல தகவல்களை இந்தக் குர் ஆனிய தோட்டம் முழுமையாக மாற்றியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் டாக்டர் அல் ஹாஜாரி. கத்தார் நாட்டினைத் தொடர்ந்து இவ்வகைத் தோட்டம் அடுத்தடுத்த அரபு நாடுகளில் அமைக்கப்பட உள்ளது.
உலகின் முதன் முதலில் அமையும் இந்த குர் ஆனியத் தோட்டத்தினை முழு உலகிற்கும் பறைசாற்றும் வகையில் இது சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக சேர்க்கப் படவும் உள்ளது என்பது கூடுதல் செய்தி.

Thanks TO : AMREENSAMA

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக எல்.டி.டி.இ நடத்திய கொலைகள்

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக எல்.டி.டி.இ நடத்திய
கொலைகள்
1990 ஜுலை 12 குருகல்மடத்தில் 68 முஸ்லீம் சகோததரர்கள் கொல்லப்பட்டனர்.
1990ஆகஸ்ட் 3 காத்தான்குடி பள்ளியில் தொளுகைனடக்கும் போது 103 சகோதரர்கள் கொல்லப்பட்டனர்.
1990 ஆகஸ்ட்12 எஅரூரில் 130 சகோதரசகோதரிகள் கொல்லப்பட்டனர்.
1992ஏப்ரல்29 அழிந்ஜிபோத்தனை 69பேர் கொல்லப்பட்டனர்.
1992ஜுலை15 கிராண்ட்குலத்தில் மறிக்கப்பட்ட பஸ்சில் 22முஸ்லீம் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டனர்.
தமிழ் விடுதலைப்புலிகள் தம் இந்து பாசிச கொள்கையை பின்பற்றுபவர்கள் என்பதுக்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டு.
இன்ஷா அல்லா விடுதலை புலிகள் இயக்கத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த முஸ்லீம் சகாக்களை பற்றி ஒரு தேடல் நடைபெற்று கொண்டிருகிறது அது பற்றயும் இங்கு நான் இடுகைகளை சமர்பிக்க உள்ளேன்.

Monday, December 15, 2008

அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப்பு அடி படம்

அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப்பு அடி. படம். பாக்தாத்தில் அவமானம் - புஷ் மீது ஷூ வீச்சு

இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது. பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார். பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார். அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார்.ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார். முதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குணிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது.2வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார்.அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ். பதவி விலகிச் செல்லும்போது பாக்தாத்தில் புஷ்ஷுக்குக் கிடைத்த இந்த வரவேற்பு அமெரிக்காவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெரியபட்டினத்தில் "ஈத் மிலன்" மாற்று மத சகோதரர்களுடன் கலந்துரையாடல்

டிசம்பர் 14, 2008, இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் இன்று மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஈத் மிலன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. மாற்று மதச் சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழச்சியில் அதிகமான அளவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து அருகில் உள்ள முத்துப்பேட்டை கல்லூரியில் தங்கிப் படிக்கும் மாற்றுமத மாணவர்களும், உள்ளூரைச் சேர்ந்த முக்கிய மாற்று மத பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.



சரியாக காலை 10.30 மனியளவில் நிகழச்சி ஆம்பமாகியது. நிகழ்ச்சியை துவக்கி வைத்தவர்களாக மாணவர்களுடன் நிகழ்கால பொருளாதார மாற்றங்கள் பற்றியும் இதன் பாதிப்பு பற்றியும் இதில் எந்த அளவிற்கு இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துறையாடினார் ஆசிரியர் காதர் அவர்கள்.








பின்னர் மனித நீதிப் பாசறையின் பெரியபட்டினம் நிர்வாகியான திரு. பீர் முகைதீன் அவர்கள் ஓர் கடவுள் கொள்கை பற்றியும், மாற்று மதங்களில் பின்பற்றப்படும் பல கடவுள் கொள்கை பற்றியும், இஸ்லாத்தின் பார்வையில் கடவுள் கொள்கை, ஏன் கடவுள் பல கடுவள்களாக இருக்க முடியாது என்றும், கட்வுள் என்பது ஒருவராகத்தான் இருக்க முடியும் என்றும் மிக அழுத்தம் திருத்தமாக மாற்று மதத்தினரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அறுமையான ஒரு உரையை நிகழ்த்தினார். தனது உரையின் மூலம் கூடியிருந்த மாற்று மத நன்பர்களிடத்தில் அழைப்பு பனியையும் மேற்கொண்டார்.



அதன் பின்னர் பேச வந்த மனித நீதிப் பாசரை பெரியபட்டனம் பகுதி பொறுப்பாளர் திரு. செய்யத இபுறாஹிம் அவர்கள் தூய இஸ்லாத்தை பற்றியும், இஸ்லாம் ஒரு போதும் வன்முறையை போதிக்கவில்லை என்பது குறித்தும், இஸ்லாத்தில் மனித நேயம், மனித உரிமைகள் பேன்றவை குறித்தும், இஸ்லாமிய ஆட்சியாளர்களான அபுபக்கர், உமர் போன்றோர் எப்படி தங்கள் ஆடசியில் மாற்றிமதத்தவர்களிடத்தும் நீதி செலுத்தினர் என்பது குறித்தும் விளக்கினார்.பின்னர் இன்று உலகம் எங்கும் இஸ்லாம் என்றால் தீவிரவாதம் என்றும், முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்றும் ஊடகங்களின் மூலமாக நடத்தப்பட்டு வரும் பாரிய பிரச்சார யுத்தத்தினை பற்றியும் இதன் பின்னணியில் உள்ள சக்திகள் எது என்பது குறித்தும் சிறப்புறையாற்றினார்.




அதன் பின்னர் மீண்டும் ஆசிரியர் திரு. காதர் அவர்கள் தனது சிறந்த நாவன்மையின் மூலம் இஸ்லாத்தினை பற்றியும், இஸ்லாத்தில் மனிதனை சிந்திக்க சொல்வது குறித்தும் உரையாற்றினார்கள். அதன் பின்னர் பக்கத்து கிராமமான நெய்னார் மரைக்கானை சேர்ந்த ஓய்வு வெற்ற ஆசிரியர் திரு. மனி மாதவன் அவர்கள் சமூக நல்லினக்கத்தை வலியுருத்தும் வகையில் தனது உரையை ஆற்றினார்கள். பாபரி மஸ்ஜிதை இடித்தது அனைத்து ஹிந்துக்களும் அல்ல என்றும் ஹிந்துக்களின் பெயரில் அரசியல் செய்யும் ஒரு மதவாத அரசியல் கட்சியே தனது தொண்டர்களை கொண்டு இடித்தது என்றும் இந்தியாவின் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் சில அரசியல் வாதிகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் சுய லாபத்திற்காக மத மோதல்களையும் குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தி அரசியல் செய்கின்றார்கள் என்றும் இதனால் நம்மள் பினக்கு வரக்கூடாது நாம் என்றும் ஒற்றுமையாக சகோதரர்களாகவு வாழ வேண்டும் என்றுமு் வலியுருத்தினார்.


அதன் பின்னர் கேள்வி நேரம் நட்நதது . கூடியிருந்த மாற்றுமத சகோதரர்களும், மாற்று மத மாணவர்களும் கேட்ட கேள்விகளுக்கு குறிப்பாக இந்தியாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் அதன் பிண்ணனி குறித்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரு. முகவைத்தமிழன் அவர்கள் சிறப்பாக பதில் அளித்தார்கள். மார்க்கம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு திரு. செய்யது இபுறாஹி்ம் அவர்களும் மனித நீதிப் பாசறையின் சித்தர்கோட்டை பிரிவு தாவா பொறுப்பாளர் திரு. சஃபீக் அவர்களும் சிறப்பாக பதில் அளித்தார்கள்.அதன் பின்னர் வந்திருந்த அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்தக்களை நிகழ்ச்சியை நடத்திய நிர்வாகிகளிடத்தில் எழுத்து மூலமாக தெறிவித்தார்கள். இன்னும் விளக்கம் தேவைப்பட்டவர்களுக்கும் மதிய உணவிற்கு பின்னர் விளக்கம் வளங்கப்பட்டது. பின்னர் நிகழச்சியின் முடிவில் அனைவரும் மிகுந்த மன திருப்பதியுடனும் மகிழச்சியுடனும் கலைந்து சென்றனர்.ஈத் மிலன் என்ற மாற்று மத சகோதரர்களுக்கான இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை பெரியபட்டினம் மனித நீதிப் பாசரை மற்றும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.