Wednesday, September 29, 2010

பெரியாரைப் புரிந்து கொள்ளாத பெரியாரிஸ்டுகள்



இன்று எல்லாத் துறையிலும் போலிகள் அதிகரித்து விட்டனர். அரசியல், இலக்கியம், ஆன்மீகம் என இல்லாமல் பகுத்தறிவு தளத் திலும் போலிகளின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கிறது.

சாமியார்களும், சன்னியாசிகளு மாகிய காவி உடைதாரிகள் மட்டுமல்லாமல், "கருஞ்சட்டை' பெருமை பேசும் பெரியாரிஸ்டு களிலும் போலிகள் நிறைந்து காணப்படுகின்றனர். அதிர்ச்சியோ, ஆச்சரியமோ கொள்ளாதீர்கள்.... இது நிஜம்!

பகுத்தறிவு தந்தை என அழைக் கப்படும் திராவிடக் கழக நிறுவனத் தலைவர் பெரியார் ஈ.வே. ராமசாமியின் பிறந்த நாள் பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் - தமிழகம் முழுவதும் பலராலும் நடத்தப்பட்டுக் கொண்டிருக் கின்றன. அந்த வகையில் "கீற்று' இணைய தளம் குழுவினர் ஏற்பாட் டில் ""பெரியாரோடு ஒரு பயணம்'' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் 18-09-2010 அன்று சென்னை தேவநேய பாவணர் நூலக கருத் தரங்கு வளாகத்தில் நடைபெற்றது.

பெரியார் நடத்தி வந்த குடியரசு பத்திரிகையின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு கால வரிசைப்படி சுமார் 6 பேர் உரையாற்றும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது.
பெரியார் திராவிட கழகத் தலைவர் கௌத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட மூத்த பெரியாரிஸ்டுகள் பங்கேற்று பங்கேற்று உரையாற்றினர்.

பெரியார் இன இழிவு நீங்கவும், தீண்டாமைக் கொடுமை, சாதீய இழிவுகள் நீங்கவும் இஸ்லாமே நன் மருந்து எனப் பரிந்துரைத்தார். இஸ்லாம்தான் சாதியை வேரறுத்து சகோதரத்துவத்தையும், சமத்துவத் தையும் தருகிறது என்றெல்லாம் இஸ்லாம் குறித்து தனது மேடைப் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் வெளிப்படுத்தினார்.
"குடியரசு' பத்திரிகை தொகுப்பு களின் செய்திகளைப் பார்த்தால், பெரியார் அனைத்து விதமான இழிவுகளிலிருந்தும் விடுபட இஸ் லாம் மார்க்கத்தை தீர்வாகச் சொல்லியிருப்பது விளங்கும். தனது பேச்சுக்களில் எழுத்துக்களில் இஸ் லாத்தை வெகுவாகப் பாராட்டியுள் ளார். மதம் கூடாது, கடவுள் இல்லை என்ற பரப்புரை செய்த அவர், சமத்துவ - சகோதரத்துவ அடிப்படையில், பகுத்தறிவு சிந்த னைக்கு ஒட்டிய இறை நம்பிக்கை கொண்ட இஸ்லாத்தைப் பாராட்டி பேசிய செய்தி இன்று பலராலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருகிறது.
பெரியாரைப் பின்பற்றுகிறோம், பெரியாரின் வாரிசுகள் நாங்கள் தான் எனக் கூறுவோர் எல்லாம் கூட - இஸ்லாம் குறித்த சிந்தனை களை பேச மறுக்கின்றனர். பெரியா ரின் படம் தான் அவர்களுக்குத் தேவை! பாடம் இல்லை! அவரால் திரட்டப்பட்ட லட்சங்கள் தேவை - அவரது லட்சியங்கள் தேவை இல்லை என்ற நோக்குடன் செயல் படுகின்றனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் நிறை வுரையாற்றிய பெரியார் தி.க. தலைவர் கொளத் தூர் மணியின் பேச்சுத் தான் நம்மை ஆச்சரியப்படுத்தியது.

""பெரியார் இஸ்லாத்தைப் பாராட்டியதாக கூறுவது தவறு. அவர் எல்லா மதங்களையும் விமர்சித்துள்ளார். அவர் ஒன்றும் ஏமாளி அல்ல! இஸ்லாத்தைப் பாராட்ட... அவர் தீண்டாமைக் கொடுமையில் சிக்கித் தவித்தவர்க ளுக்கு மட்டும்தான் இஸ்லாத்தைத் தீர்வாகச் சொன்னார். அது குறித்து இன இழிவு ஒழிய இஸ்லாம் என புத்தகம் கூட வந்துள்ளது. சுயமரி யாதைக்காரர்களுக்கும், பெண்ணுரி மையை விரும்புவர்களுக்கும் இஸ் லாத்தை அவர் பரிந்துரைக்க வில்லை.
மேலும் துருக்கியில் புரட்சி நிகழ்த்திய கமால் பாஷாவை பெரி யார் பாராட்டிப் பேசினார். கமால் பாஷா குர்ஆனை தடை செய்தவர், பள்ளிவாசலைப் பூட்டியவர்.
அவரைப் பாராட்டியதிலிருந்தே பெரியார் இஸ்லாம் குறித்த விமர்சன சிந்தனை கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. மேலும் பெரி யார் இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்குப் போனவர்களை எல்லாம் திரும்பவும் இந்து மதத் துக்கே கொண்டு வர நினைத்திருந் தார்'' என்பதாக கொளத்தூர் மணி பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் பெரியாரிஸ் என கூறிக் கொள்ளும் ஒருவரது வாயிலிருந்து இப்படியான வார்த் தைகள் வெளிப்பட்டதும், பார்வை யாளராக பங்கேற்றிருந்த நமக்குப் பேரதிர்ச்சி! அப்பொழுதுதான் நமக்கு ஒன்று விளங்கியது. போலிகள் ஆன்மீகத் துறையில் மட்டுமல்ல, அறிவுத் துறையிலும் ஊடுருவியிருக்கின்றனர் என்று!
பெரியாரின் கொள்கைகளைச் சொல்வதாகக் கூறிக் கொண்டு அவரது லட்சியங்களை இருட்ட டிப்புச் செய்யக் கூடியவர்களாக அவர்கள் உலவுகின்றனர். பெரியா ரின் கோடிக்கணக்கான சொத்துக் களுக்கு வாரிசுரிமை கொண்டாடும் கி. வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் மட்டுமல்லாமல், லட்சியங்களுக்கு உரிமை கொண் டாடுவதாகக் கூறும் கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடக் கழகத்தினரும் கூட பெரியாரின் உண்மையான கொள் கைகளை - லட்சியங்களை இருட்ட டிப்புச் செய்வதில் குறியாக இருக் கின்றனர்.
வெளியில் பேசும் போது, சாதீய ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் பாடுபடுகிறோம் என கூறிக் கொள்ளும் அவர்கள் ஒவ்வொருவ ரும், அந்தரங்கத்தில் மிகப் பெரிய சாதீய இந்துத்துவா உணர் வாளர்களாக இன்னும் கூர்மையாகச் சொல்வதானால், சாதி வெறியர்களாக - தீவிர இந்துக்களாக உள்ளனர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

சாதி, தீண்டாமை ஒழியக் கூடாது என்பதில் இந்துத்துவ சக்திகளுக்கு நிகராக இவர்களும் உழைத்துக் கொண்டிருக்கின்றார் களே என்ற சிந்தனை எழுகிறது. திகவின் சார்பில் பெரியார் பெய ரால் நடத்தப்படும் கல்லூரிகள், பல்கலைக் கழகத்தில் இதுவரை சமூக நீதி அடிப்படையிலான 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்படவே இல்லை.
பெரியாரின் சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளை தலை மைப் பொறுப்பில் தாழ்த்தப்பட்ட வர் ஒருவர் கூட நியமிக்கப்பட வில்லை என கூப்பாடு போடும் பெரியார் திராவிட கழகத்தின் தலைமை பொறுப்பில் மட்டும் தலித்களுக்கு வாய்ப்பளிக்கப்பட் டுள்ளதா என்றால், இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.
இடஒதுக்கீட்டில் தான் இப்படி என்றால் பெண்ணுரிமை விஷயத்தி லாவது கி. வீரமணியும், கொளத் தூர் மணியும நேர்மையாக நடந் துள்ளார்களா என்றால் இல்லை என்பதுதான் பதிலாகும். பெரியார் தி.கவின் தலைமைப் பொறுப்பில் எத்தனை பெண்கள் உள்ளனர்? கொளத்தூர் மணி குடும்பத்துப் பெண்கள் முழு உரிமையுடன் நடத்தப்படுகிறார்களா? என்றால் இல்லை! இல்லை.... இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.
சரி, பெரியார் விரும்பியபடி சுய மரியாதை உணர்வுடனாவது இவர்கள் நடந்து கொள்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை.

""ஏண்டா வெங்காயம்... சாமின்னு சொல்லி கல்லுக்கும் - சிலைக்கும், மாலையும், மரியாதையும் செய்து பூஜை செய்கிறாயே இது முட்டாள் தனமாக, பகுத்தறிவுக்குப் பொருந் தாத செயலாக உனக்குப்படவில் லையா?'' எனக் கேட்ட பெரியா ருக்கே, இவர்கள் சிலை அமைத்து பூஜை செய்வது சுயமரியாதையா? பகுத்தறிவா?
இப்படி எல்லா வகையிலும் பெரி யாருக்கு எதிராக - அவரது கருத் துக்களுக்கு விரோதமாக செயல்பட் டுக் கொண்டு போலி பெரியாரிஸ்டு களாக உள்ளவர்கள், பெரியாரின் இஸ்லாமிய சிந்தனைகளை இருட் டடிப்புச் செய்வது மட்டுமல்லாமல், திரிவு வேலைகளும் செய்யத் துவங்கி இருக்கின்றனர்.

பெரியார் இஸ்லாத்தைத் தீண் டத்தகாத தலித்துகளுக்கு மட்டும் தான் பரிந்துரைத்தார் என்பது எவ் வளவு பெரிய பொய்? திரிபு வாதம்? தலித்களுக்கு மட்டுமா அவர் சொன்னார்! ஒட்டு மொத்த திரா விட இனமும் இழிவிலிருந்து விடு பட இஸ்லாம் தான் தீர்வு என்ப தாகத்தான் பெரியார் கூறியுள்ளார்.
மேலும் கொளத்தூர் மணி கூறு வது போல், இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்கு மாறியவர்களை மீண்டும் இந்துத்துவாக மாற்ற முயற்சித்தார் என்பது அபாண்டம்! அநியாயம்! அக்கிரமம்! அயோக்கி யத்தனம்!
இப்படி ஒரு சிந்தனையை பெரி யார் எப்போதுமே கொண்டிருக்க வில்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும் பெரி யார் துருக்கி கமால் பாஷாவை ஆத ரித்தார் என்பதன் மூலம் இஸ் லாத்தை அங்கீகரிக்கவில்லை என்ப தாக கொளத்தூர் மணி கூறுவது அறிவுக்குப் பொருந்தாத விஷயம்.

"குடியரசு' பத்திரிகையில் பெரி யார் மட்டுமே கட்டுரைகள் எழுத வில்லை. பல நேரங்களில் குத்தூசி குருசாமியும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்படி குத்தூசி குருசாமி எழுதிய பல கட்டுரைகள் பெரியார் எழுதியதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதுண்டு. இது குறித்து குத்தூசி குருசாமியே வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.
துருக்கி கமால் பாஷா குறித்த கட்டுரை குத்தூசி குருசாமி எழுதி யதுதானே தவிர பெரியார் எழுதிய தில்லை. பெரியார் இஸ்லாத்தைப் புரிந்து கொண்டிருந்த அளவுக்கு குத்தூசி புரிந்து கொண்டவரல்ல என்பது திராவிட இயக்க ஆய் வாளர்களுக்கு எளிதாகப் புரியும். பெரியார் இஸ்லாத்தை தீர்வாகக் குறிப்பிட்டு பல மேடைகளில் பேசி யுள்ளதால் அதனைத்தான் அவரது கருத்தாகக் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் மார்க்கத்தையும், முஸ் லிம் சமுதாயத்தையும் நுட்ப மாக ஆராய்ந்து தெளிவாக பெரி யார் புரிந்து கொண்டிருந்தது போன்று பெரியாரை - அவரது சிந்தனை களை, லட்சியங்களை முழுமையா கத் தெளிவாகப் புரிந்து கொண்ட வர்கள் முஸ்லிம்கள்! முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் பெரியாரின் லட் சியங்களை பரப்புரை செய்யத் துவங்கினால் எத்தனை "மணி'கள் வந்தாலும், சதிகள் பல செய்தாலும் இஸ்லாமிய எழுச் சியை - திராவிட இன மறுமலர்ச்சி யைத் தடுக்க முடியாது. முஸ்லிம் அமைப்புகள் - இயக்கங்கள் பெரியாரின் சிந்தனை களை பரப்புரை செய்வது காலத் தின் கட்டாயம்.
- பாபா

Monday, September 20, 2010

காதலனை நம்பி ஏமாந்தாள்: விபசார விடுதியில் விற்கப்பட்ட பெண்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் ரஷ்மி (21). இவர் அந்த பகுதியில் RSS னுடைய smart friend சேர்ந்த கிருஷ்ணா என்ற வாலிபரை சந்தித்தார். முதல் சந்திப்பே அவர்களுக்குள் காதலை ஏற்படுத்தியது. கிருஷ்ணா ஐதராபாத்தை சேர்ந்தவர். சினிமா கலைஞர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவரோடு நெருங்கி பழகிய ரஷ்மி அவர் இல்லை என்றால் தான் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்.

ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள் ளும் படி காதலனிடம் கேட்டார். கிருஷ்ணாவும் சம்மதித்தார். ஆனால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பெற்றோருக்கு தெரியாமல் காதலனுடன் ரஷ்மி வீட்டை விட்டு வெளியேறினார். ரஷ்மிக்கு அன்று தான் 18-வது பிறந்த நாள். ஐதராபாத்துக்கு அழைத்து சென்ற கிருஷ்ணா அங்கு ஒரு வீட்டில் தங்க வைத்தார்.

பிறந்த நாள் அன்றே காதலனை கரம் பிடிக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ரஷ்மி திளைத்து போனார். திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக சில பொருட்களை வாங்கி விட்டு வருவதாக கிருஷ்ணா வெளியே சென்றார். அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை.
அதன் பிறகு தான் ஒரு விபசார கும்பலிடம் விற்கப்பட்டுள்ளோம் என்பது ரஷ்மிக்கு தெரிய வந்தது.

தேடிவரும் வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் அடி விழுந்தது. அந்த வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்ட ரஷ்மி பலருக்கு விருந்தாக்கப்பட்டாள். 2 வருடங்களாக கட்டாயப்படுத்தி விபசார தொழிலில் தள்ளப்பட்டார். வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பியபடி ஒத்துழைக்காவிட்டால் அடித்து துவைப்பார்கள்.
அந்த விபசார பங்களாவில் இருந்து தப்பி செல்ல உதவும்படி அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கெஞ்சினார். ரெய்டில் ஈடுபட்ட போலீஸ்காரரின் மனிதாபிமான உதவியால் விபசார கும்பலிடம் இருந்து ரஷ்மி மீட்கப்பட்டார்.

பல ஆண்டுகள் பட்ட வேதனை கலந்த நினைவுகளுடன் ரஷ்மி தற்போது சென்னையில் ஒரு மறுவாழ்வு மையத்தில் தங்கி உள்ளார்.

Saturday, September 18, 2010

கற்புதான் குருதட்சணையா? கொந்தளிக்கும் மாணவிகள்!



நமது செல்போனில் பதட்டத்தோடு வந்த அந்தப் பெண்குரல்...’’""நர்ஸிங் கல்லூரி மாணவி சாய்னா பேச றேன். நக்கீரன் மூலம் எங்க கல்லூரி தாளாளரின் முகத்திரையைக் கிழிக்க விரும்பறேன். உங்களைச் சந்திக்கணும்'' என்றார் அழுகை கலந்த குரலில்.

"பதட்டப்படாதேம்மா. எப்ப வேண்டு மானாலும் சந்திக்கலாம்'’என்று ஆறுதல் படுத்தினோம். அடுத்த கொஞ்ச நேரத்தில் தன் வாப்பா அப்துல் ரஹீத்துடன் நம்மை சந்தித்தார் சாய்னா. என்ன நடந்தது? என்றோம்.

தனக்கு நேர்ந்த சங்கட அனுபவங்கள் குறித்து விவரிக்க ஆரம்பித்தார் சாய்னா. ""எனக்கு சொந்த ஊர் குடியாத்தம். வாப்பா.. எங்கவூர் மசூதியில் வேலை பாக்கறார். நர்ஸிங் படிச்சி... அன்னை தெரசா மாதிரி... நோயாளிகளுக்கு சேவை பண்ணணும் என்பதுதான் என் லட்சியம். எங்க வாப்பாவும் இதுக்கு ஓ.கே. சொல்லிட்டார். இங்க தமிழ்நாட்டில் இருக்கும் நர்ஸிங் கல்லூரிகள் நன்கொடைகளை அதிகமா கேட்டுச்சி. அப்ப என் தோழிகள்... ஆந்திர மாநில கல்லூரிகள்ல நன்கொடை குறைவு. அதேபோல்.. கட்டணத்தை வசதிக்குத் தகுந்த மாதிரி... கொஞ்ச கொஞ்சமா கட்டலாம்னு சொன்னாங்க. அதைக்கேட்டு சந்தோசமான நான்... திருப்பதியில் இருக்கும் வேதா நர்ஸிங் கல்லூரிக்கு அப்ளிகேஷன் போட்டேன். எனக்கும் சீட் கிடைச்சிது. ரொம்ப சந்தோசமா... அந்தக் கல்லூரியில் போய்ச் சேர்ந்தேன். அங்க என் சந்தோசம் ஒருவாரம் கூட நீடிக்கலை. காரணம், அங்க சேர்ந்தப்பவே என் சீனியர் மாணவிகள் என்னைத் தனியாக் கூப்பிட்டு... "இங்க இருக்கும் கரஸ்பாண்டண்ட் வேதநாயகம் மோசமான ஜொள் பார்ட்டி. அவர்ட்ட ரொம்ப... ஜாக்கிரதையா இருக்கணும்'னு எச்சரிக்கை கொடுத்தாங்க.


அவங்க சொன்னமாதிரியே... கரஸ்பாண்டண்ட் வகுப்பில் டபிள் மீனிங்கில் பேசினார். சிலநேரம் வல்கராவும் கமெண்ட் அடிப்பார். ஹாஸ்டல தங்கி இருக்கும் மாணவிகளை அடிக்கடி வீட்டுக்குக் கூப்பிட்டு.. வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வார். அப்ப அவர் நிறைய சில்மிஷங்களும் பண்ணுவாராம். பல மாணவிகள் இதைச் சொல்லி அழுதிருக்காங்க. அவர் பலவிதமா எனக்குத் தூண்டில் போட்ட போதும் ரெண்டு வருசம் எப்படியோ சமாளிச்சிட் டேன். இப்ப ஃபைனல் இயர். இதற்கிடையில் இதே கல்லூரியில் படிக்கும் எங்க மாமா பையனை எங்க வீட்டில் எனக்கு நிக்காஹ் பண்ணிவச்சிட்டாங்க. எக்ஸாம் நெருங்கிய நேரத்தில் பலருக்கும் ஹால் டிக்கட் கொடுத்த கரஸ்பாண்டண்ட் எனக்கு மட்டும் கொடுக்காம இழுத்தடிச்சார்.. அதைக் கேட்டு நான் அவர் அறைக்குப் போனேன். எடுத்த எடுப்பிலேயே "நீயும் உன் ஹஸ்பண்டும் ஒழுங்கா எக்ஸாமை எழுதி நல்லபடியா ஊர்ப்போய்ச் சேரணும்னா... நான் சொல்றதைக் கேட்கணும். உன்னை நினைச்சி நான் பலநாள் தூங்கலை. உன் அழகு என்னை பைத்தியமா ஆக்கிடிச்சி. ஒருநாள்.. ஒரே ஒருநாள் என் ஆசையை நீ தீர்த்துவச்சா... அடுத்த நிமிஷமே ஹால் டிக்கட் தருவேன். இல்லைன்னா... உன்னைப்பத்தி தப்புத் தப்பா வதந்தி பரப்பி... உன்னை வாழவிடாமப் பண்ணிடு வேன்'னு வில்லன் கணக்கா.. வெட்கமில்லாமப் பேசினார். எனக்கு அழுகை வந்துடுச்சி. அப்படியே வெளில ஓடிவந்துட்டேன்...''’என்று வழிந்த கண்ணீரைத் துடைத்துகொண்டவர்..

""மேதாவி வேசத்திலிருக்கும் அந்த அயோக்கியனின் முகமூடியைக் கிழிக்கணும். என்னோட எக்ஸாமை நான் நல்லபடியா முடிச்சி.. நர்ஸ் சேவையை வாழ்நாள் முழுக்கத் தொடரணும். இதுதான் என் விருப்பம். நம்ம வேலூர் கலெக்டர்ட்ட கூட... அந்த கேடுகெட்ட கரஸ்பாண்டண்ட் பத்தி புகார் கொடுத்திருக்கேன். எனக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன்''’’ என்றார் அழுத்தமாக.
அந்தக் கல்லூரி கரஸ்பாண்டண்ட் வேதநாயகத்தைப் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும்.. ’அவர் பிஸி. வெளியே போயி ருக்கிறார்’ என்ற பதிலையே காலர் ஐ.டி.போல சொல்லிக் கொண்டிருந்தது அந்தக் கல்லூரி நிர்வாகம்.

இது குறித்து வேலூர் ஆட்சியர் ராஜேந்திரனிடன் நாம் கேட்டபோது ‘""சாய்னாவின் புகார் திடுக்கிடவைத்தது. இது குறித்து சித்தூர் கலெக்டருக்கு இவரது புகார் மனுவை அனுப்பி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டிருக்கிறேன். கல்லூரிக்குள்ளேயே இப்படி காமப் பிசாசுகள் என்றால்... சங்கடமாகத்தான் இருக்கிறது''’என்றார் வருத்தம் இழையோட.

இந்த நிலையில்.... நமது நண்பர் ஒருவர் மூலம் கடலூர் பகுதியைச் சேர்ந்த அந்த இரண்டு கல்லூரி மாணவிகளும் நம்மைச் சந்தித்தனர். அவர்கள் முகத்தில் கவலையான கவலை. அவர்களின் புகாரும் இதே ரகம்.

அவர்களை விசாரித்தபோது... ""கடலூரில் இருக்கும் ஒரு கிறிஸ்த்தவக் கல்லூரியில் படிக்கிறோம். எங்க கல்லூரியில்.. தனது பெயரில் அருமையை வைத்திருக்கும் வசதிப் பேராசிரியர்... துறைத் தலைவரா இருக்கார். அவரிடமும் ஜானின் மகன் என்ற பொருள் வரக்கூடிய பெயரையுடைய பேராசிரியரிடமும் நாங்க படாதபாடு படறோம். புராஜக்ட் ஒர்க்குக்கு கையெழுத்து வாங்கப்போனா.... அனுசரிச்சிப்போனாதான் கையெ ழுத்துன்னு கட்டிப்பிடிக்கறாங்க. மிரட்டி மிரட்டியே தப்புத்தப்பா நடந்துக்கறாங்க. குறிப்பா துறைத் தலைவர் வீட்டில் பெரும்பாலும் அவர் மனைவி இருக்கமாட்டாங்க. அதனால் மகள் வயசு உள்ள மாணவிகளை எல்லாம் பலவந்தமா வீட்டுக்கு கூட்டிட்டுப்போய்.... விதவிதமா தன் ஆசையைத் தீர்த்துக்குவார்.

அழகான மாணவிகளைப் பார்த்தா எதையாவது சொல்லி... தங்கள் சபலத்தை தீர்த்துக்கறதில் இவங்க ரெண்டுபேருமே கில்லாடிங்க. போன வருசம் டூர் போனப்ப... இந்த மன்மதப் பேராசிரியர்கள் பல மாணவிகளைத் தனித்தனியா கூட்டிட்டுப்போய் அங்க இங்க தொட்டுத் தடவி... எல்லா அசிங்கமும் பண்ணி... செல்போன்லயும் படம்பிடிச்சாங்க. அதே போல் இப்ப வந்திருக்கும் பாதரும்.. அந்த விஷயத்தில் பிளேபாயா இருக்கார். படிக்கவரும் மாணவிகள் வாழ்க்கையில் இவர்கள் விளையாடுவது எந்த வகையில் நியாயம்? இவங்க அட்டூழி யம் நாளுக்கு நாள் அதி கரிச்சிக் கிட்டே இருக்கு. இவங்களை யாரு தட்டிக்கேட்கறது.?''’’ என குமுறி யவர்கள்....

""எங்களுக்கு மட்டும் இல்லை. திருவண்ணாமலை கடவுள் பெயரில் இருக்கும் அந்த கல்வி உலகத்தில் படிக்கும் மாணவிகளையும்... சில பேராசிரிய மிருகங்கள் வேட் டையாடிக்கிட்டு இருக்கு. என் தோழி ஒருத்தியை போனில் பேசச் சொல்றேன் அவ கிட்டயும் விசாரிங்க''’ என்றபடி அந்த மாணவியை செல்போன் லைனில் பிடித்துக்கொடுத்தனர்.

லைனில் வந்த அந்த மாணவி...

""எங்க கல்லூரியில் மகிழ்ச்சியானவரும்... அரச மோகனமானவரும் பேராசிரியரா இருக்காங்க. இவங்க மாணவிகளை பாலியல் ரீதியாய்ப் பாடாய்ப் படுத்திக்கிட்டு இருக்காங்க. அவங்க எந்த மாணவியைக் குறிவைக்கிறாங்களோ அவங்க.. இவங்க கூப்பிடற இடத்துக்கு வந்தாகணும். இல்லைன்னா... எல்லா வகையிலும் பழிவாங்கிடுவாங்க. சமீபத்தில்... நாங்க நெட்டை குட்டைன்னு பட்டப்பெயர் வச்சிக்கூப்பிடும் ரெண்டு மாணவிகளை அவங்க வற்புறுத்தி... பிச்சாவரத்துக்குக் கூட்டிட்டுப்போனாங்க. குட்டையான மாணவிக்கு தங்கமான பெயர். ஆள் சிவப்பா, கொஞ்சம் புஷ்டியா இருப்பா. அந்த நெட்டை மாணவிக்கோ ஒரு மிடுக்கான கவிஞரின் பெயர். ஆள் கருப்பா இருந்தாலும் வளர்ந்து வாட்டசாட்டமா இருப்பா. இவங்களை அங்க இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. அப்ப ஒரு பேராசிரியர் தன் செல்போன்ல... ஒரு மாணவியை அங்க அங்கமா... படம் எடுக்க... அந்த மாணவி... என் வாழ்க்கையை ஏன் சார் வீணாக்கறீங்கன்னு அழுதிருக்கா. அவ அழுகையைப் பார்த்து பயந்துபோன அந்த பேராசிரியர்... சரி இதோ டெலிட் பண்ணிடறேன்னு அவ எதிர்லயே அழிச்சிருக்கார். அப்பவும் அந்தப் பொண்ணு... அழிச்சாலும் படத்தை ரெகவரி பண்ணமுடியும். எனக்கு எதிர்காலத்தில் பிரச்சினை வந்தா என்ன பண்றதுன்னு... கதற... "உனக்கு நிறைய மார்க் போடறேன். ஏன் கவலைப்படறே. இதை நானும் மறந்துடறேன், நீயும் மறந்துடு'ன்னு சொல்லியிருக்கார். பாடம் போதிக்கக்கூடிய புனிதமான தொழிலில் இருப்பவர்கள் செய்யக்கூடிய செய்கையா இது?''’என்றார் கொதிப்பாய்.

இவர்கள் சொன்ன தகவல்களைக் கேட்டு கலவரமான நாம்.. சிதம்பரத்தில் இருக்கும் அந்த எஸ்.ஐ.யைத் தொடர்பு கொண்டு... இது குறித்தெல்லாம் கேட்க...

""கல்விக்கூடங்கள் சமீபகாலமா காமக்கூடங்களா மாறிக்கிட்டு வருது. பிச்சாவரத்துக்கு போறதோட இதே சிதம்பரத்தில் இருக்கும் லாட்ஜ்களில் ரூம்போட்டும் மாணவிகளை இப்படிப் பட்ட பேராசிரியர்கள் வேட்டை யாடறாங்க. ஒரு தடவை நாங்க ரெய்டுக்குப் போனப்ப.... ஒரு லாட்ஜில் மாணவிகளோட தங்கியிருந்த பேராசிரி யரைக் கையும் களவுமா பிடிச்சோம். அந்த மாணவிகள்... வீட்டுக்குத் தெரிஞ்சா தற்கொலை பண்ணிக்குவோம்னு கதற அவங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பி வச்சோம். அந்தப் பேராசிரியருக்கு மட்டும் நாலு அறைகொடுத்து எச்சரிச்சோம். இதேபோல்.... இன்னொரு ரெய்டில் டி.டி.யில் ஒர்க் பண்ணும் 35 வயசு பேராசிரியை ஒருத்தர்... 19 வயசு மாணவ னோட மாட்டினாங்க. அந்தப் பேராசிரி யை இனி இப்படி செய்யமாட்டேன். என்னை விட்டுடுங்கன்னு காலில் விழுந்து கதறினாங்க.

பையனோ மேடம்தான் வற்புறுத்தி அழைச்சிக்கிட்டு வந்தாங்கன்னு கண்ணைக் கசக்கினான்.... அடக் கருமமேன்னு ரெண்டுபேரையும் துரத்திவிட்டோம். காலம் எப்படியெல்லாம் மாறிப்போச்சு பாருங்க'' என்று அதிரவைத்தார்.

இத்தகைய கொடு மைகளுக்கு யார் முற் றுப்புள்ளி வைப்பது?

Wednesday, September 15, 2010

காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு

‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர். பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.

காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பதை அலசி ஆராயும் முன், காஷ்மீர் மாநிலம் கடந்த இருபது ஆண்டுகளில் எப்படி ஒரு திறந்தவெளி இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரில் 3,00,000 இந்திய இராணுவச் சிப்பாய்களும், தேசியத் துப்பாக்கி படைப் பிரிவைச் சேர்ந்த 70,000 சிப்பாய்களும், மத்திய போலீசு படையைச் சேர்ந்த 1,30,000 சிப்பாய்களும் – ஆக மொத்தம் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலப் போலீசுப் படை இந்த எண்ணிக்கையில் சேராது.

காஷ்மீரில் ‘அமைதி’யை ஏற்படுத்த இத்தனை இலட்சம் துருப்புகள் தேவை என்றால், எத்தனை ஆயிரம் தீவிரவாதிகள் அம்மாநிலத்தில் இருக்கக்கூடும் என உங்கள் மனம் கணக்குப் போடலாம். அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள், அங்கே வெறும் 660 தீவிரவாதிகள்தான் இருப்பதாக சமீபத்தில் இந்திய இராணுவம் அறிக்கை அளித்துள்ளது.

‘‘தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தை முசுலீம் தீவிரவாத அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கி நடத்துவதாகத் தெரியவில்லை; இளைஞர்களும் தாய்மார்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடுகிறார்கள்; போராடுபவர்கள் கைகளில் துப்பாக்கிகள் கிடையாது; மாறாக, தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்; இப்போராட்டத்தை போலீசைக் கொண்டே கட்டுப்படுத்திவிட முடியும்; இராணுவம் தேவையில்லை” எனச் சில நடுநிலையான பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர். உண்மை இப்படியிருக்க, அம்மாநிலத் தலைநகர் சீறிநகரை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமென்ன?

ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் இறக்கிவிடப்பட்டிருக்கும்பொழுது, காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது. அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?

****

தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பு, எப்படிபட்ட அநீதியை காஷ்மீர் மக்களுக்கு இழைத்து வருகிறது தெரியுமா?
1990-ஆம் ஆண்டு தொடங்கி 2007-ஆம் ஆண்டு முடியவுள்ள 17 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள், இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல் ‘காணாமல்’ போய்விட்டனர். அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது.

அம்மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் மீது, இந்திய அரசின் அனுமதியின்றி அம்மாநில அரசு புகார்கூடச் செய்ய முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தேசிய நலன் என்ற பெயரில் இராணுவச் சிப்பாய்கள் நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றி காஷ்மீரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் புகார் கொடுக்க வேண்டும் என்றால், அவர் முதலில் “தான் இந்திய தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை” என்று நிரூபித்தாக வேண்டும்.

காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைச் சந்தித்து வரும்பொழுது, மைய அரசோ கடந்த பதினேழு ஆண்டுகளில் இராணுவச் சிப்பாய்களுக்கு எதிரான வெறும் 458 வழக்குகளைத்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. இதே காலத்தில் இந்திய இராணுவத்தின் மனித உரிமைப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1,321 வழக்குகளில் 54 வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

காஷ்மீர் மக்கள் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான், இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும், இப்போராட்டங்களின்பொழுது நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இப்படி காஷ்மீர் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் இந்திய அரசையும் அதனின் இராணுவத்தையும் வெளியேறக் கோரி அம்மக்கள் போராடுவது தேச விரோதச் செயல் என்றால், கொலையும், கொள்ளையும், பாலியல் வன்புணர்ச்சியும்தான் தேச நலனின் பொருளாகிவிடுகிறது.

காஷ்மீர்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 'காணாமல் போனவர்களின்' புகைப்படங்களைப் பார்ர்த்து விம்மியழும் காஷ்மீரத்துத் தாய்

இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் இந்து தேசிய வெறிதான் இப்பிரச்சினையின் மூல காரணமாக இருக்கிறது என்பதும்.

இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி ஜம்மு-காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தாமல் மறுத்தது; இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சில தனியுரிமைகளை நீர்த்துப் போகச் செய்தது; காங்கிரசு கும்பல் தனது சுயநலனுக்காக அம்மாநிலத்தில் நடத்திய ஆட்சி கவிழ்ப்புகள், தேர்தல் மோசடிகள் – இவைதான் 1980-களின் இறுதியில் காஷ்மீரில் ஆயுதந்தாங்கிய போராட்டம் வெடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தன.

வரலாற்றை அவ்வளவு பின்னோக்கிப் பார்க்கத் தேவையில்லை. இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துபோய்விட்டதாகச் சொல்லப்பட்ட பின்னும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஷ்மீரில் அடுத்தடுத்து இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதற்குக் காரணம் பாகிஸ்தானா, இல்லை இந்திய தேசியவாதிகளா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அம்மாநிலத்தை ஆண்டு வந்தபொழுது, அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கிப் போவதற்காக 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கப் போவதாக அக்கூட்டணி ஆட்சி அறிவித்தது. அமர்நாத் யாத்திரை முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வருடாந்திர நிகழ்ச்சி நிரலாக மாறிப் போனதால், காஷ்மீர் மக்கள் பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். உடனே, ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெளிமாநிலங்களில் இருந்து ஜம்முவிற்கு ஆட்களைத் திரட்டிவந்து எதிர் போரட்டத்தை நடத்தியதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது ஒரு சட்டவிரோத பொருளாதார முற்றுகையைத் திணித்தது. காஷ்மீர் மக்கள் இம்முற்றுகையை முறியடிக்கும் வண்ணம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பது என்ற போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியான பின்னர், நில ஒதுக்கீடு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இப்போராட்டத்திற்குப் பின் நடந்த தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிட்ட காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் தேர்தலுக்குப் பின் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின. இந்தச் சந்தர்ப்பவாத ஆட்சிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளும் முகமாக, “காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்; அத்துமீறல்கள் குறித்த உண்மை கண்டறியும் குழு நிறுவப்படும்” என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார், முதல்வர் ஒமர் அப்துல்லா. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை என்பது ஒருபுறமிருக்க, காஷ்மீர் மக்களின் மீதான இராணுவத்தின் பிடியும், அடக்குமுறையும் கொஞ்சம்கூடக் குறையவில்லை என்பதையும் மக்கள் கண்டனர்.

ஷோபியான் என்ற சிறுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது; கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஜஹித் ஃபாரூக் என்ற 16 வயது சிறுவன் நடுத்தெருவில் நாயைச் சுடுவது போல எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; கடந்த ஏப்ரல் மாதம் தேசியத் துப்பாக்கிப் படைப் பிரிவினர், மூன்று தொழிலாளர்களை எல்லைப் பகுதிக்குக் கடத்திக்கொண்டு போய்ச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை எல்லை தாண்டி வரமுயன்ற தீவிரவாதிகளாக ஜோடனை செய்த சம்பவம் – இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரும், துணை இராணுவப் படைகளும், காஷ்மீர் போலீசாரும் நடத்திய பல பச்சைப் படுகொலைகள்தான் இப்போராட்டத்தின் தூண்டுகோலாக அமைந்தன.

‘‘துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்ட பிறகு, மக்களின் விடுதலை உணர்வும் செத்துவிடும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் பாலிவுட் திரைப்படங்களிலும், பப் கலாச்சாரத்திலும் மூழ்கிப்போய் விடுவார்கள் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால், எங்களின் விடுதலை வேட்கை கொஞ்சம்கூடக் குறையாமல் இருப்பதைத்தான் இப்போராட்டம் காட்டுகிறது” என காஷ்மீர் மக்களின் மனோநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பள்ளத்தாக்கைச் சேர்ந்த புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஷாத் சலீம்.
காஷ்மீர் மக்களின் தேசிய இன விடுதலை உணர்வுதான் இப்போராட்டத்தின் அடிப்படையாக உள்ளது என்ற உண்மையை மூடிமறைக்க, இப்போராட்டம் பற்றிப் பலவித கட்டுக்கதைகளையும் அவதூறுகளையும் மைய அரசும் அதனை நத்திப் பிழைக்கும் தேசியப் பத்திரிகைகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு பரப்பி வருகின்றன. “விரக்தியடைந்த இளைஞர்களின் போராட்டம்” என ஒருபுறம் நையாண்டி செய்துவரும் அக்கும்பல், இன்னொருபுறமோ, “லஷ்கர்-இ-தொய்பாவிடம் 200 ரூபாய்யை வாங்கிக்கொண்டு நடத்தப்படும் கூலிப் போராட்டம்” என அவதூறு செய்து வருகிறது.

சோபுர் நகரில் கடந்த ஜுன் 29 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டான். “அவன் அப்பாவி கிடையாது; கூலிக்காக வேலை செய்யும் போக்கிரி” என அச்சிறுவனைப் பற்றிக் கூறியிருக்கிறார், உள்துறை அமைச்சகச் செயலர். இப்படி வக்கிரமும், காலனியாதிக்க ஆணவமும் நிறைந்த இந்திய அரசை வெளியேறக் கோருவது எந்த விதத்தில் தவறாகிவிடும்?

பதாமாலூ என்ற ஊரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு வெளியே வருவதைப் பார்த்த இராணுவச் சிப்பாய்கள், துப்பாக்கியை நீட்டியபடியே அவனை நோக்கிப் பாய்ந்து வந்து, “உன்னைக் கொன்று விடுவோம்” என மிரட்டியுள்ளனர். அரண்டு போய் வீட்டுக்குள் ஓடிப்போன அந்தச் சிறுவன் பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகிப் போனான். ஐந்து வயதுச் சிறுவனைக் கொன்றுவிடுவோம் என மிரட்டும் இந்திய இராணுவம் காஷ்மீரில் யாரைக் காப்பாற்ற நிற்கிறது?

இந்தக் கேள்வியை காஷ்மீருக்கு வெளியேயுள்ள பெரும்பாலான “இந்தியர்கள்” எழுப்ப மறுக்கிறார்கள். “அவர்கள் காஷ்மீர் பற்றி பொய் சொல்கிறார்கள்; தங்களின் சொந்தப் பொய்யைத்தான் அவர்கள் நம்புகிறார்கள்” என இத்தகைய இந்தியர்களைப் பற்றிக் கூறுகிறார், டெல்லியில் வாழும் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்.

காஷ்மீர்

காஷ்மீர் பற்றிய உண்மை நிலவரம் வெளியே தெரியக்கூடாது என்ற நோக்கில், இந்திய இராணுவம் உள்ளூர் செய்தி ஊடகங்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாட்டுகளைக் கண்டித்து பத்திரிக்கையாளகர் நடத்தும் ஆர்பாட்டம்

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் 800-க்கும் மேற்பட்ட அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன மக்கள் இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தி வரும் இண்டிஃபதா போராட்டத்தைத்தான் இது நமக்கு நினைவூட்டுகிறது. சமூகம் தழுவிய ஆதரவோடு நடைபெற்று வரும் இப்போராட்டங்களை, இராணுவ அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் ஒடுக்கிவிட முடியும் என ஆளுங்கட்சி காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.-வும் ஒரேவிதமாக எண்ணுகின்றன.

ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தங்களைத் தற்காத்துக் கொள்ள இராணுவம்-துணை இராணுவப் படைகள் மீது கற்களை வீசியெறியும் இளைஞர்கள், மரண தண்டனைகூட விதிக்கப்படும் சாத்தியமுள்ள, “அரசின் மீது போர் தொடுத்த” குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். இந்த அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரத்தையும் தியாக உணர்வையும் 200 ரூபாய் கூலிப் பணத்தால் ஊட்டிவிட முடியுமா? விடுதலை உணர்வால் உந்தித் தள்ளப்படும் அந்த இளைஞர்கள் தமது மனங்களிலிருந்து பயம் என்பதையே அகற்றி விட்டார்கள் என்கிறார், ஹுரியத் மாநாட்டு கூட்டணியைச் சேர்ந்த தலைவரான சையத் ஷா கீலானி.

காஷ்மீரில் ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால்கூட, “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது; இராணுவத்தையும், துணை இராணுவப் படைகளையும் திரும்ப அழைத்துக் கொள்வதோடு, காஷ்மீர் போலீசு துறையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குழுவைக் கலைப்பது; மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது” ஆகிய குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற மைய அரசு முன்வர வேண்டும்.

ஆனால், மைய அரசோ, இந்த குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற மறுக்கிறது. இதற்குப் பதிலாக, பொருளாதார சலுகை என்ற பெயரில் அஞ்சையும் பத்தையும் தூக்கியெறிந்து, இப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என இந்திய ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கின்றனர். விடுதலை உணர்வை பணத்தால் விலை பேசும் இந்திய அரசின் முட்டாள்தனமான ஆணவம் காஷ்மீரில் பலமுறை தோல்வி கண்டிருக்கிறது.

‘‘காஷ்மீரில் ஒரு அடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” எனத் தேசிய வெறியூட்டும் ஓட்டுக்கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை. இதனை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆளும் கும்பலின் தேசியம் என்பது மாபெரும் மோசடி என்பதைப் புரிந்து கொண்டுவிட முடியும்.

இந்து தேசியவெறி கொண்ட ஓட்டுக்கட்சிகள், அவர்களை நத்திப் பிழைக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற துரோகிகள், போலி மோதல் கொலைகள் மூலம் பணத்தையும் பதவியையும் அள்ளிக் கொள்ளத் துடிக்கும் காக்கிச் சட்டை கிரிமினல்கள் – ஆகியோர்தான் காஷ்மீர் இந்திய அரசின் காலனியாக நீடிப்பதால் இலாபமடையப்போகும் பிரிவினர். போலி தேசியப் பெருமையில் மூழ்கிப் போயுள்ள பிற இந்தியர்களுக்கு ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை எந்தப் பலனையும் அளிக்காது. மாறாக, முசுலீம் தீவிரவாதம் வளர்வதற்கும், பாகிஸ்தான் அதனைத் தூண்டிவிடுவதற்கும், இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து முறுகல் நிலை நீடிப்பதற்கும் ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

Tuesday, September 7, 2010

எங்கே…செல்லும்…இந்தப்பாதை…

மொபைல் போனில் பொழுதுபோக்காக வாலிபர்களிடம் பேசி, காதலில் விழ அலைய வைக்கும் பெண்கள் மீது வரும் புகாரின் எண்ணிக்கை கூடி வருவதாக, கோவை சைபர் க்ரைம் போலீசார் “அதிர்ச்சி” தகவல் தெரிவிக்கின்றனர்.

கோவை மாநகர குற்றப்பிரிவின் கீழ் செயல்படும், “சைபர் க்ரைம்” பிரிவுக்கு வரும் புகார்களில், மொபைல்போன் மூலம் ஆபாச அழைப்பு விடுத்தல், “செக்ஸ் மெசேஜ்” மற்றும் ஆபாச படங்கள் அனுப்பி, “டார்ச்சர்” கொடுப்பது தான் அதிகம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள், தனியார் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு மட்டுமன்றி, முன் பின் அறிமுகமில்லாத மாணவியர், வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் மற்றும் குடும்ப பெண்களுக்கும் அனுப்பி தங்களுக்குள் சந்தோஷம் கொள்கின்றனர்.

தொடர்ந்து பெறப்படும் ஆபாச அழைப்புகளால் மனவேதனை அடையும் பெண்கள், மாணவியர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் தரும் புகாரின் எண்ணிக்கை கூடியுள்ளன. சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, “டார்ச்சர்” கொடுக்கும் ஆசாமிகளை வளைத்து பிடிக்கின்றனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஜாலிக்காகவும், ஆர்வ கோளாறு காரணமாகவும் மெசேஜ் அனுப்புவதாகக் கூறி, மன்னிப்பு கேட்டு மன்றாடி தங்களை விடுவித்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில், கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த 160 க்கும் மேற்பட்ட புகார்கள், புகார்தாரரின் வேண்டுகோளின்படி எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர். சிலர் மட்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவற்றில், போலீசாரையே திடுக்கிட வைத்துள்ள சில சம்பவங்களும் நடந்துள்ளன. முன் பின் பார்த்திராத வாலிபரை காதல் வலையில் விழ வைத்த திருமணமான பெண், தங்கைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய அக்கா, ஒருதலைக் காதல் வசப்பட்டு, ஆபாச மெசேஜ் அனுப்பிய தனியார் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஆகியோரை, சைபர் க்ரைம் போலீசார் பிடித்துள்ளனர்.

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் ஸ்வீட்டி (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், பெற்றோருடன் வசிக்கிறார். தனக்கு தெரிந்த வாலிபர் ராகுலுடன் (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மொபைல் போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு குழையக் குழைய பேசியுள்ளார். அவளது பேச்சில் தன்னை பறிகொடுத்த வாலிபர், நேரில் சந்திக்க வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுத்தும், பிடி கொடுக்காமல் இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் என காலம் கடத்தியுள்ளார்.

தன்னுடன் பேசுவது யார் என்று தெரிந்து கொள்ளாமலே காதலில் விழுந்த வாலிபர், திருமணம் செய்தே ஆக வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றுள்ளார். இதை உறுதி செய்த ஸ்வீட்டி தன்னை பெண் பார்க்க வருமாறு சென்னைக்கு அழைத்துள்ளார். ஆர்வத்தில் தன் பெற்றோரையும், பக்கத்து வீட்டு நண்பரின் பெற்றோரையும் சென்னை அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற போது, ஸ்வீட்டியின் தோழி ஒருவர் போனில் தொடர்பு கொண்டு, “ஸ்வீட்டிக்கு உடல் நலமில்லை. அவளது தோழி வீட்டில் இருக்கிறார். பெண் பார்க்கும் நிகழ்ச்சியை இன்னொரு நாளைக்கு வைத்து கொள்ளலாம்” என்று தெரிவிக்க, ராகுல் மற்றும் குடும்பத்தினர் ஏமாற்றத்துடன் கோவை திரும்பினார்.

அடுத்தடுத்து அவள் யார் என்று தெரிந்து கொள்ள ராகுல் பல முயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லை. சில மாதங்களுக்கு முன், சூலூர் போலீசுக்கு வந்த போனில், தனது பெயர் ஸ்வீட்டி என்றும், தன்னை காதலிக்கும் ராகுல், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும் புகார் செய்ததோடு, தன் காதலனின் மெபைல் எண்ணையும் கொடுத்து இணைப்பை துண்டித்து விட்டாள். போலீசார் விசாரித்ததில் ஸ்வீட்டி கொடுத்த மொபைல் எண்ணுக்கு, சொந்தக்காரர் காதலில் விழுந்த வாலிபர் தான் என தெரிந்தது.

ஆத்திரமடைந்த ராகுல், “அவள் யாரென்று தெரியாது. முன் பின் முகத்தை பார்த்ததில்லை. ஆனால், என்னை காதலிப்பதாக கூறி அலைய விட்டு அசிங்கப்படுத்தி விட்டாள். அவளை கண்டுபிடித்து கொடுங்கள்” என, புகார் தெரிவித்துள்ளார். இது சைபர் க்ரைம் விசாரணைக்கு வந்தது. தீவிர தேடுதலில் ஸ்வீட்டி சிக்கினாள். அவள் வேறு யாருமல்ல. காதலில் விழுந்த ராகுலின் பக்கத்து வீட்டு குடும்ப நண்பரின் மருமகள்; திருமணமானவர். மேலும், அப்பெண்ணிடம் 10 சிம்கார்டுகள் இருந்ததாகவும், ஒவ்வொரு முறை பேசும் போதும் வெவ்வேறு எண்களில் இருந்து பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

காதலில் ஆண்கள் எப்படி விழுகின்றனர் என்பதை அறிந்து கொள்ள, ஜாலிக்காக இதில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இரு வீட்டாரும் கேட்டுக் கொண்டதால் வழக்குப் பதிவு செய்யவில்லை.

மற்றொரு வழக்கு :

மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் விற்பனை மையத்தில் வேலை. இவரது கடைக்கு பொருள் வாங்க வரும் வாலிபரும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தான். இவரது மொபைல் போனை தெரிந்து கொண்ட செல்வி, தொடர்ந்து போன் செய்து, தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.காதல் மெசேஜ், ஆபாச படங்களுடன் கூடிய மெசேஜை தொடர்ந்து அனுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த வாலிபர், சைபர் க்ரைமில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்ததில் செல்வி பிடிபட்டார்.

விசாரணையில், தினமும் ஒரே பஸ்சில் பயணிக்கும் வாலிபரின் அழகை ரசிப்பதற்காகவே இச்செய்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். வாலிபரின் வேண்டுகோள் காரணமாக செல்வி மன்னிக்கப்பட்டாள். இதை விட, மிக மோசமான, தரமில்லாத மெசேஜ் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வந்ததால், மனநிம்மதி இழந்த ஒரு பெண், போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்தனர். அந்த வீட்டில் அக்கா, தங்கை இருவர். தங்கை அழகானவர். இதனால் ஆபாச படங்கள், ஆபாச அழைப்புகள் தங்கைக்கு வந்துள்ளது.

குறிப்பிட்ட மொபைல் எண்ணை கண்டுபிடித்து பார்த்த போது, அக்காவே தங்கைக்கு மெசேஜ் அனுப்பியது தெரிந்தது. விசாரணையில் பொறாமை தான் காரணம் என தெரிய வந்தது. இதுவும் சமாதானத்தில் முடிந்துள்ளது. தற்போதைய சூழலில் ஆண்களுக்கு நிகராக, மொபைல் போனில் மெசேஜ், ஆபாச அழைப்பு விடுத்து பெண்களும் சிக்கிக் கொள்கின்றனர் என்பது வெளிப்படையாக நடக்கிறது. போலீசுக்கு வரும் புகார் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கோவை சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்தனர்.

எங்கே…செல்லும்…இந்தப்பாதை…

Sunday, September 5, 2010

காவி பயங்கரவாதமல்ல, காவி தரித்த பயங்கரவாதம்

FILE
நமது நாட்டில் “காவி பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளத” என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னாலும் சொன்னார், பாஜக உள்ளிட்ட சங் பரிவாரங்கள் அவருக்கு எதிராக பெரும் போரை நடத்தி வருகின்றன.

பாபர் மசூதியை இடிப்பதற்கு இர(த்)த யாத்திரை மேற்கொண்டு, அந்த இடிப்பிற்கு தலைமை தாங்கி, உற்சாகப்படுத்தி நடத்தி முடித்த இந்த நாட்டின் முன்னாள் துணைப் பிரதமர் லால் கிஷண் அத்வானி முதல் குஜராத்தில் மிகப்பெரிய கலவரத்தை ‘வெற்றிகரமா’ நடத்தி முடித்நரேந்திர மோடி வரை, அமைச்சர் சிதம்பரம் மீது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுகமாக பாய்ந்து பாய்ந்து தாக்கிக்கொண்டிருக்கின்றனர்.

ரெய்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் நித்தின் கட்கரியும் தன் பங்கிற்கு சிதம்பரத்தை கடித்துக் குதறியுள்ளார். அவர் கூறிய குற்றச்சாற்றுதான் சற்று வேடிக்கையானது. “காவி பயங்கரவாதம் என்று கூறியதன் மூலம் உள்துறை அமைச்சர் இந்தியப் பண்பாட்டை இழிவுபடுத்தியுள்ளார” என்று குற்றம் சாற்றியுள்ளார்.

அதுமட்டுமல்ல, நமது நாட்டின் தலைவர்கள் அனைவரும் - பிரதமரில் இருந்து முதல்வர்கள் வரை - கூறுவதை கட்கரியும் கூறியுள்ளார். அதாவது, பயங்கரவாதத்திற்கு நிறமும் இல்லை, மதமும் இல்லை, சாதியும் இல்லஎன்று தனது தெளிவை வெளி்ப்படுத்தியுள்ளார்.

நமது நாட்டின் பண்பாட்டுக் காப்பாளர்களான சங் பரிவாரின் அரசியல் கிளையின் தலைவர்கள் இந்த அளவிற்கு கடிந்து குற்றம் சாற்றுவதற்கு அமைச்சர் சிதம்பரம் என்னதான் சொல்லிவிட்டார்? என்பதை முதலில் பார்க்க வேண்டும். அவர் கூறியதில் உண்மையேதும் இருக்கிறதா என்பதை அடுத்து ஆராய வேண்டும்.

மதத்தின் பெயரால் இளையோரை...

ஆகஸ்ட் 25ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடந்த காவல் துறை இயக்குனர்கள், தலைமைக் ஆய்வாளர்கள் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், “இதுவரை நடந்துள்ள பல்வேறு குண்டு வெடிப்புக்களை புலனாய்வு செய்ததில் காவி பயங்கரவாதம் எனும் புதிய வடிவம் தலையெடுத்துள்ளது தெரியவந்துள்ளது” என்று பேசினார்.

இந்தியாவின் உள்துறை அமைச்சராகவுள்ள சிதம்பரம், இவ்வாறு பேசியதற்கு அடிப்படையென்ன? பல்வேறு குண்டு வெடிப்புகளில் சில சாமியார்களும், அவர்களின் தொடர்புகளும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும், அந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதும், அந்த ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதுமே காரணமாகும்.

2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்ற சம்ஜெளதா விரைவு இரயிலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 68 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இந்தக் குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளே காரணமாக இருப்பார்கள் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஓராண்டுப் புலனாய்விற்குப் பிறகு தெரியவந்த தகவல்தான் நாட்டையே திடுக்கிட வைத்தது.

மராட்டிய மாநிலம் மாலேகானிலுள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களே, சம்ஜெளதா இரயிலிற்கும் குண்டு வைத்தவர்கள் என்பதே அந்த உண்மையாகும். மாலேகான் குண்டு வெடிப்பில் இந்திய இராணுவத்தில் பணியாற்றி வந்த லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோகித் என்பவர்தான் குண்டுகளில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை தருவித்துத் தந்தவர் என்பதும், இவர் அபினவ் பாரத் என்ற அமைப்பில் செயல்பட்டு வந்தவர் என்பதையும் கண்டு பிடித்தனர்.

இவர் யாரோடு சேர்ந்து இந்த குண்டு வெடிப்புச் சதித் திட்டம் தீட்டினார் என்பைத மராட்டிய காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அவர்கள் மட்டும் தனியாக அல்ல, உத்தரப் பிரதேச காவல்துறையுடன் இணைந்த பல்வேறு குண்டு வெடிப்புகள் குறித்து புலனாய்வு செய்தபோது தெரிந்த உண்மையே நாட்டை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“பிரக்யான் தாக்கூர், தயானந்த் பாண்டே (இவர்கள் இருவரும் காவி தரித்த சாமியார்கள்) ஆகியோருடன் சேர்ந்தே பிரசாத் புரோகித் சதித் திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளார். மாலேகான் மட்டுமல்ல, பல குண்டு வெடிப்புக்களில் இவர்கள் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று நாசிக் நீதிமன்றத்தில் அவர்களின் விசாரணைக் காவலை நீட்டிக்கக் கோரி வாதிட்ட மராட்டிய காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவிற்கு வாதிட்ட அரசு வழக்கறிஞர் அஜய் மிசார் கூறியுள்ளார்.
பிரசாத் புரோகித் காஷ்மீருக்குச் சென்று 60 கி.கி. ஆர்டிஎக்ஸ் வெடிபொருளை பெற்றுக் கொண்டு வந்ததாகவும், அதனை பக்வான் என்பவரிடம் கொடுத்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார். அவர் கொடுத்த சரக்கை பயன்படுத்தித்தான் சம்ஜெளதா விரைவு இரயிலில் குண்டு வைக்கப்பட்டுள்ளது.

சம்ஜெளதா விரைவு இரயில் குண்டு வெடிப்பு, ஹைதராபாத்திலுள்ள மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு, ஆஜ்மீர் தர்க்கா குண்டுவெடிப்பு ஆகியன அபினவ் பாரத் எனும் இந்த சாமியார் கும்பலின் சதி வேலை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகியுள்ளது.

ஆனால் காவி உடை தரித்தவர்கள் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அது கண்டிக்கப்பட வேண்டியது என்று கூட பாரதிய ஜனதா கட்சி கண்டனம் வெளியிடவில்லை. மாறாக, அவர்களை கைது செய்தது தவறு என்று நாடாளுமன்றத்திலேயே குரல் கொடுத்தது.

அபினவ் பாரத் என்கிற இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய சங் பரிவார் அமைப்புகளில் உள்ளவர்களுக்கும் தொடர்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடலை ஒலி பரப்பிய காரணத்தினால்தான் ஹெட்லைன்ஸ் டுடே தாக்கப்பட்டது. இதே ஆதாரத்தை டெஹல்கா இணையத் தளமும் வெளியிட்டது.

ஆக தாக்குதல் நடத்துவதற்காக துவக்கப்பட்டுள்ள ஒரு அமைப்புதான் அபினவ் பாரத் என்று தெரிகிறது.

இதைக் குறிப்பிடும் வகையில்தான் காவி பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது, எச்சரிக்கையாய் செயல்படுங்கள் என்று காவல் துறை இயக்குனர்களையும், தலைமை ஆய்வாளர்களையும் உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் எச்சரித்துள்ளார். இதில் என்ன தவறு உள்ளது?

இவர்கள் கூறியதை இப்படி எடுத்துக் கொள்ளலாம். எங்களின் துணை அமைப்புகளோடு தொடர்புடைய சில காவிகளை வைத்து ஏன் ஒட்டுமொத்தமாக காவியை தொடர்புபடுத்திப் பேசிகிறீர்கள் என்று கேட்கிறார்களா அத்வானியும் கட்கரியும் மோடியும்?

அப்படியென்றால் சரிதான். காவி பயங்கரவாதம் என்று கூறுவதற்கு பதிலாக காவி தரித்த பயங்கரவாதிகள் என்று இவர்களை குறிப்பிடலாம். பசுத்தோல் போர்த்திய புலி என்பதுபோல் காவி தரித்த பயங்கரவாதிகள்.

பயங்கரவாதத்தை அரசியலாக்கக் கூடாதா?

மற்றொரு குற்றச்சாற்றையும் கட்கரி கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் பயங்கரவாதத்தை அரசியல் ஆக்குகிறார் என்று கூறியுள்ளார். அதில் என்ன தவறு? பயங்கரவாதம் இந்த நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் அச்சுறுத்தும் ஒரு பிரச்சனை என்றாகிவிட்டப் பிறகு அதனை ஏன் அரசியலாக்கக் கூடாது?

FILE
மதம் என்பது தனி மனிதர் சம்மந்தப்பட்ட பிரச்சனை. அதனை அரசியலாக்கி ஆட்சியைப் பிடிக்கவில்லையா பாரதிய ஜனதா கட்சி? இதர பிறபடுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்து வி.பி.சிங் அரசு உத்தரவு பிறப்பித்ததை எதிர்க்க பாபர் மசூதியா ராம் ஜன்ம பூமியா? எனும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சனையை பெரிதாக்கி, பாபர் மசூதியை இடித்து, அதன் மூலம் பிரிவினைக்குப் பிறகு இந்தியா கண்டிராத மாபெரும் மதக் கலவரத்தை ஏற்படுத்திய பாரதிய ஜனதா, மதவாத வாக்குவங்கியை உருவாக்கி ஆட்சியிலும் 6 ஆண்டுகள் இருந்ததே? மதத்தை அரசியலாக்கலாம், பயங்கரவாத செயல்களுக்கு மூல காரணமாக இருந்தவர்களை (அவர்கள் சாமியாராக இருந்தால் என்ன, சந்நியாசியாக இருந்தால் என்ன?) அடையாளம் காட்டக் கூடாதா?

ஜனநாயகம், சமூக நீதி, மத நல்லிணக்கம், மதச் சார்ப்பற்ற அரசியல் என்ற நாகரீக பொது அரசியல் கோட்பாடுகள் எதையும் மதிக்காத ஒரு கொள்கை கொண்ட வன்முறை அரசியலாளர்கள், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்குத் தகுதி பெற்றவர்கள்தானா?

இந்தியாவிற்கு இன்றைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாத செயல்களுக்கு தங்களுடைய மதவாத நடவடிக்கைகளால் வித்திட்ட கட்சியும் அதற்கு அடித்தளமாக உள்ள அமைப்புகளும் பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசுவதை விட வேறு என்ன வேடிக்கை விநோதம் இருக்க முடியும்?

Saturday, September 4, 2010

கல்விக் களவாணிகள்!

சிராஜ் சுல்தானா

அண்ணா பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு, பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் வழங்கிய மாணவர்களில் 41 பேரும், மருத்துவப் படிப்பிற்கு சான்றிதழ் வழங்கிய மாணவர்களில் 10க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண் சான்றிதழ், போலி என கண்டறியப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வில், தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கப் பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தில் தங்களுக்கு மதிப்பெண்கள் அதிகம் இருக்கும் என்ற எண்ணத்தில், மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீடு செய்கின்றனர். இது வழக்கமான ஒன்று தான். யார், யார் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்கின்றனர் என்பது, கல்வித் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம், ஏஜன்டுகள் கைக்குச் செல்கிறது.

அவர்கள் மாணவர்களை அணுகி, 10 ஆயிரம் முதல், பல லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்று, "கல்வித் துறையின் கம்ப்யூட்டரில் மதிப்பெண் மாற்றியமைக்கப்படும்' என்ற உறுதிமொழியுடன், கடந்த 2000 ஆண்டு முதல், மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக வாரி வழங்கியுள்ளனர். இதில் பலர், பல லட்சம் சம்பாதித்தும், ஓய்வு பெற்றும், வேறு துறைக்கும் போய்விட்டனர். இந்த ஆண்டு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய, 66 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

கல்வித் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம், அவர்களின் முகவரி அறிந்த ஏஜன்டுகள், 10 அல்லது 5 சதவீத மாணவர்களையாவது அணுகி இருப்பர் என வைத்துக் கொண்டால் கூட, மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், போலி மதிப்பெண் சான்றிதழ்களை இந்த ஆண்டு பெற்றிருப்பர். இதில், ஒரு சில மாணவர்களின் மதிப்பெண், கல்வித் துறையில் உள்ள கம்ப்யூட்டரில், சரியான தருணத்தில் திருத்தப்படாத காரணத்தால், இன்று சிலர் மட்டும் மாட்டிக் கொண்டனர். 2000ம் ஆண்டிலிருந்து, இதுபோன்ற போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்ற மாணவர்கள், இன்று காலரை தூக்கிக் கொண்டு, பல உயர் பதவிகளில் அமர்ந்து, தங்களின், "கடமை'யை செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில், பணம் கொடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம், வசதியானவர் அல்லது ஓரளவு வருமானம் உள்ளவர்கள். ஏழை, எளிய கிராமப்புற மக்கள் இதில் சிக்கவில்லை என்பது, கவனிக்க வேண்டிய ஒன்று.

பண வசதியில்லாத, தன் கிராமத்தில் பள்ளி இல்லாத ஏழை மாணவன், இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே பள்ளிக்கு புறப்பட வேண்டும். அங்கு பாடம் படித்து, தனிப் பயிற்சி எனும் டியூசன் இல்லாமல், மாலை வீடு வந்து, பெற்றோருக்கு சில உதவிகள் செய்ய வேண்டும். மின் வசதி கூட இல்லாத நிலையில் படித்து, தேர்வில் வெற்றி பெறுவதே சாதனையாக உள்ள நிலையில், பணம் உள்ளவர்கள், இப்படி குறுக்கு வழியில், போலி மதிப்பெண்கள் மூலம் சாதனை மதிப்பெண்கள் பெற்று, சன்மானம் பெறுகின்றனர். போலிகள், இன்று நமக்கு விடப்பட்ட சவால்களில் பெரும் சவாலாக உள்ளது. போலி டாக்டர், போலி வக்கீல், போலி காவல் அதிகாரி என பலர், இன்று நாட்டில் உலா வருகின்றனர்.

மனிதனுக்கு முக்கியம் உயிர். அதில் கூட விளையாட, போலிகள் துணிந்து விட்டனர். ஊசி போட தெரிந்தால் போதும், மருத்துவ பிரதிநிதிகள் மூலம் நான்கு மாத்திரைகள் பெயரை தெரிந்து வைத்து, போலி டாக்டர்கள் உலா வர துவங்கி விட்டனர். போலி கல்வி நிறுவனங்களில், தங்களின் வாழ்வை தொலைத்து, பலர் நடுத்தெருவில் நிற்கின்றனர்.

போலி முத்திரை தாள்கள், போலியாக தயாரித்த விற்பனை பத்திரம், கள்ள நோட்டுகள், போலி தபால் தலைகள் என, பல போலிகள் வந்துவிட்டன. தமிழகத்தில், அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் பங்கு பெற்ற மாணவர்களின், போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கண்டறியப்பட்டன. வேறு கலைக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், வேறு மாநிலத்திற்குச் சென்ற மாணவர்களின் போலி மதிப்பெண் சான்றிதழ் என்னவானது?

தமிழக அரசின் சிறப்பு முத்திரை வில்லை ஒட்டப்பட்ட, போலி மதிப்பெண் சான்றிதழ், கல்வித் துறையில் பணிபுரியும் பலரின் துணை இல்லாமல் எப்படி கிடைத்தது? சரி... ஒவ்வொரு மதிப்பெண்ணும், ஒவ்வொரு மாணவனுக்கும் உயிர். ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட, விரும்பிய பாடமோ, கல்லூரியோ கிடைக்காமல் போய்விடும். ஒரு மதிப்பெண்ணுக்கு இத்தனை ரூபாய் என்று பணத்தை கறந்துள்ளனர்.

மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்த 66 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாள்களை சரிபார்த்து, சான்றிதழ்களை சரிபார்த்தால், இந்த ஆண்டில் நடந்த ஊழலில் உண்மை, உலகுக்குத் தெரியும்.

o மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டை கண்காணிக்க, தனியாக ஒரு துறை ஏற்படுத்த வேண்டும்.

o கடந்த 2000 ஆண்டு முதல், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்த மாணவர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும்.

o விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, நல்ல ஓய்வு தரப்பட வேண்டும். ஒரு சில ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு தினமும் 100 கி.மீ., பயணம் செய்கின்றனர். காரணம், விடைத்தாள்களை திருத்தும் மையத்திற்கு தங்கும் வசதி போதிய அளவில் இல்லை.

o விடைத்தாள் திருத்தும் இடங்களில் போதிய மின் வசதி, தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். கத்திரி வெயில் காலத்தில், விடைத்தாள் திருத்துபவர்களுக்கு கஷ்டம் தவிர்க்கப்பட வேண்டும்.

நன்கு படித்து, தேர்வு எழுதி, எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத ஏழை, எளிய மக்கள் என்ன செய்வர்? தன் பிள்ளை நல்ல மதிப்பெண் பெற்று வாழ வேண்டும் என்று எண்ணி, மூட்டை தூக்கும் தொழிலாளி, கூலித் தொழிலாளி, விற்பனை பிரதிநிதிகள், ரிக்ஷா ஓட்டுபவர்கள் என, ஏழை மக்கள் எல்லாம் வாய் பேச முடியாத ஊமைகள். இவர்களின் வாய்ப்பை பறித்து, தங்கள் வாழ்வை வசந்தமாக மாற்றிய போலி மதிப்பெண் சான்றிதழ் பெற்றவர்களை, எந்த சட்டத்தின் மூலம் தண்டிப்பது?

கடந்த 2009ம் ஆண்டு, மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வில், 1,179 மதிப்பெண் பெற்ற மூன்று மாணவர்கள், மாநிலத்தில் முதல் மாணவர்களாக அறிவிக்கப்பட்டனர். தனக்கு மதிப்பெண்கள் மிகவும் குறைந்துள்ளது என்று எண்ணிய ஊத்தங்கரை தனியார் பள்ளியைச் சேர்ந்த பாலமுருகன், மறு மதிப்பீடு செய்தான். விடைத்தாள்களின் நகல்களை வாங்கிய போது தான் தெரிந்தது, சில விடைகள் திருத்தப்படவே இல்லை என்று. அந்த மாணவனுக்கு, 1,184 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, சத்தமில்லாமல் சாதனை அமுக்கப்பட்டது. ஒருவேளை அந்த மாணவனுக்கும், பெற்றோருக்கும், பள்ளிக்கும் போராடும் திறன் இல்லையென்றால், அந்த மாணவனின் திறமை வெளியே தெரிந்திருக்காது. இதுபோல் எத்தனை மாணவர்கள், காணாமல் போயினர்.

மொரார்ஜி தேசாயின் மகள், மருத்துவக் கல்லூரி தேர்வில் தோல்வியடைந்தார். "மறு மதிப்பீடு செய்ய வேண்டும்' என மகள் கூறியதை, மொரார்ஜி தேசாய் மறுத்தார். "மறு மதிப்பீட்டில் மகள் வெற்றி பெற்றால், என் அதிகாரத்தை நான் தவறாக பயன்படுத்தி, இந்த வெற்றி கிடைத்தது என கூறுவர். எனவே, மீண்டும் தேர்வை எழுதி வெற்றி பெறு' என அறிவுரை கூற, மனமுடைந்த தேசாயின் மகள், தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும் தேசாய், தன் மீது தவறில்லை என வாதிட்டார். தேசாய் நினைத்திருந்தால், தன் மகளுக்கு ஒரு மருத்துவமனையே கட்டித் தந்திருக்க முடியும். தேசாய் எங்கே... இவர்கள் எங்கே...

நவீன கம்ப்யூட்டர் உலகில், தவறுகள் நடக்காது என்று எல்லாரும் எண்ணினோம். கம்ப்யூட்டரில் திருத்தி, ஊழல் செய்ய முடியும் என்றால், உண்மையான குடிமகன் ஒவ்வொருவனும், போலி நாட்டில் வாழும் போலி மக்கள் போல் உள்ளனர்.

சிராஜ் சுல்தானா - முதுகலை ஆசிரியர்

நன்றி: தினமலர்