Wednesday, December 3, 2008

மும்பை சம்பவம் துளைக்கும் வினாக்கள் & மோடி ஆடிய நாடகம்


ஒவ்வொரு பயங்கரவாத சம்ப வங்கள் நடக்கும் போதும் இதுகுறித்து தனக்கு முன்பே தெரியும் என்றும் மோடி சொல்லி வருகிறார். ஆனால் இதுவரை மோடி மீது விசாரணைக் கணைகள் பாயாமல் இருப்பது ஏன்? மோடியை விசாரணைக்கு உட்படுத்து வதில் என்ன பிரச்சினை?
தீவிரவாத தடுப்பு படை தலை வர் ஹேமந்த் கர்கரே சங்பரிவார் அமைப்பினரால் தனக்கு மிரட்டல்கள் வந்ததையும், அவர்கள் தன்னை தவறாக சித்தரித்ததையும் குறித்து வேதனை தெரிவித்த கர்கரே, பிரத மரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். இதுகுறித்து தனக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து பிரதமரிடமோ, உள்துறையிடமோ கர்கரே கடிதம் மூலம் ஏதேனும் தெரிவித்திருக்கிறாரா?
முதல் நாள் டெக்கான் முஜாஹி தீன் இயக்கம்தான் இதற்குக் காரணம் என ஊடகங்கள் பரபரப்பாக அறிவித் தன. இத்தகவலை இவர்களுக்கு தெரிவித்தது யார்?
இரண்டாவது நாள் லஷ்கரே தொய்பா தான் காரணம் என பெரும் பாலான ஊடகங்கள் அறிவித்தன. லஷ்கரே தொய்பாதான் காரணம் என இவர்களுக்கு யார் சொன்னார்கள்? இல்லையெனில், `டெக்கான் முஜாஹி தீன் காரணமில்லை, அந்தப் பெயரை இரண்டாவது நாள் குறிப்பிட வேண் டாம்’ எனக் கூறியது யார்? ஆனால் செய்திகளின் போக்கை கணிக்காமல் பெரிய அறிவாளித்தனமாக இன்ன மும் `டெக்கான் முஜாஹிதீன்தான் காரணம்’ என செய்தி கூறிக் கொண் டிருக்கும் சன் தொலைக்காட்சிக்கு மட்டும் முக்கியத் தகவல்களைக் கொடுத்தது யார்?
டெக்கான் முஜாஹிதீன் ஆயிற்று, லஷ்கர்-இ-தொய்பா போயாச்சு, மூன்றாவது நாள், `தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு இருப்பதாக’ கூறப்பட்டது. அப்படியானால் மேற் கூறப்பட்ட இரண்டு பயங்கரவாத அமைப்புகளையும் காப்பாற்றி வேறொரு நபரைப் பற்றி குறிப்பிடப்படுகிறது என்றால், இடையில் என்ன மாற்றம் அல்லது குழப்பம் நிகழ்ந்தது?
பயங்கரவாதிகள் போர்பந்தரில் இருந்துதான் வந்திருக்கிறார்கள் என் றால், இதற்கு குஜராத் அரசின் கையாலாகத்தனம்தான் முக்கியக் காரணமாக இருக்க முடியும். ஆனால் இதுகுறித்து மோடி அரசை விசாரிக் காமல் காலம் தாழ்த்துவது ஏன்? இதுகுறித்து எந்த புண்ணியவானும் (!) வாய் திறக்கவில்லையே ஏன்?
இவ்வளவு ஆயுதங்களுடன் சதிகாரர்கள் ஊடுருவ முடிந்தது என்றால் பாஜகவுக்கு நெருக்கடியான சூழ்நிலையில் குண்டுகள் வெடிக்கின் றன. இவ்வாறு கூறியவர் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய்சிங். தற்போதும் சட்டமன் றத் தேர்தல்கள் நடைபெற்றுவரும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என செய்திகள் வெளிவந்த சூழ்நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எந்த புலனாய்வு அமைப்பும் ஊடகங்களும் வாய்திறக்கவில்லையே ஏன்?
தீவிரவாதிகள் பஞ்சாபி மொழி பேசியதாக முதலில் ஊடகங்கள் குறிப்பிட்டன. உருதுமொழி பேசிய தாகக் கூட பல ஊடகங்கள் குறிப்பிட் டன. மராத்திய மொழியில் பேசியதாக மராட்டிய டைம்ஸ் குறிப்பிடுகிறது. அவ்வாறெனில், அவர்கள் யார்? என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

மோடி ஆடிய நாடகம்
மோடி, ஓபராய் ஹோட்டலுக்குச் சென்று பார்வையிடு வது போல சென்றதை பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டை நடத்திய கமாண்டோ படையினர் கோபத்துடன் குறிப்பிட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டிய லிஸ்ட்டில் உள்ள மோடி எந்த பயமும் இல்லாமல் நாடகமாடியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது

நன்றி :

tmmk

No comments: