Monday, December 14, 2009

பாலியார் புகார்: சென்னை sex சாமியாருக்கு போலீஸ் வலைவீச்சு!

சென்னை கோடம்பாக்கம் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது ஹேமலதா என்பவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். வேலைவாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும், தமது ஆபாசப் படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும், சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவார் எனவும் அந்த புகாரில் கூறியுள்ளார். பெண்ணின் புகாரை அடுத்து சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாருக்கு போலீஸ் வலைவீசியுள்ளனர்.

சென்னை தேனாம் பேட்டை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

அடையாறு சர்தார்பட் டேல் சாலையில் உள்ள சக்தி விலாஸ் மிஷனில் உள்ள டாக்டர் ஈஸ்வர ஸ்ரீகுமார் என்கிற சாமியார் தனது நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள் எடுப்பதாக என் அப்பாவின் நண்பர் மூலம் தகவல் கிடைத்தது.

நானும் அந்த நிறுவனத்திற்கு வேலை கேட்டு விண்ணப்பம் போட்டேன். சாமியார் ஈஸ்வரகுமார் என்னிடம் இண்டர்வியூ நடத்தினார். சூப்பர்வைசர் வேலை தரு வதாகவும் படிபடியாக சிங்கப்பூரில் உள்ள தனது நிறுவனத்தில் பதவி உயர்வும் அதிக சம்பளமும் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.

ஒரு தனி அறையில் வைத்து எனக்கு காபி கொடுத்தார். அதை குடித்த சிறிது நேரத்தில் மயங்கிவிட்டேன். பிறகு கண்விழித்து பார்த்த போது ஆடைகள் களைந்த நிலையில் அலங்கோலமாக கிடந்தேன். என்னை சாமியார் பலாத்காரம் செய்ததை உணர்ந்தேன்.

இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று சாமியார் மிரட்டி அனுப்பினார். அடிக்கடி போன் செய்து அழைத்தார். நான் மறுத்தேன். உன்னுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன். அதனை இண்டர்நெட்டில் போட்டு விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போய் அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு மீண்டும் என்னை கற்பழித்தார். எனக்கு 10வயதில் மகள் இருக்கிறாள் என்று கெஞ்சினேன். அவர் விடவில்லை. தொடர்ந்து ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி என்னை அனுபவித்தார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது ஆபாச வீடியோவை அழித்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகார் மனு குறித்து விசாரிக்க சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அதிவீர ராம பாண்டியனுக்கு உத்தரவிடப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமார் நடத்திய விசாரணையில் சம்பவம் தியாகராயநகர் பகுதியில் நடந்ததாக தெரிய வந்ததால் புகார் மாம்பலம் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments: