Wednesday, December 23, 2009

மாணவியிடம் காமலீலை - ஆசிரியர் கைது

மாணவியுடன் காம லீலையில் ஈடுபட்டு அதை செல்போனில் படம்பிடித்த டியூஷன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


மணலி பலராமன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (34). திருமணமானவர். மகள், மகன் உள்ளனர். மணலி காமராஜர் தெருவில் டியூஷன் சென்டர் நடத்தி வந்தார். இவரிடம், படிக்க வந்த மணலியை சேர்ந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதை தனது செல்போனிலும் படம் பிடித்துள்ளார். இதை நண்பரிடம் காட்ட அவர் மூலம் பலருக்கும் எம்எமஎஸ் மூலம் பரவியது. மணலியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மாணவியின் பெற்றோர் போலீசுக்கு சென்றனர். மாணவியின் எதிர்காலம் கருதி வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரித்து வந்தனர். இதையறிந்த டியூஷன் ஆசிரியர் குடும்பத்துடன் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.


செல்வராஜின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் கோனூருக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். இதையறிந்த செல்வராஜ், திருப்பதிக்கு தப்பி சென்றார். ரயிலில் ஒவ்வொரு இடமாக சுற்றி வருவது தெரிந்தது. நேற்று சென்ட்ரலில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று, செல்வராஜை மடக்கி பிடித்தனர்.


பின்னர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பல மாணவிகளின் வாழ்க்கையை அவர் சூறையாடி இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் கணேசன் தீவிரமாக விசாரித்து வருகிறார். இதற்கு பின்னரே, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

No comments: