Tuesday, April 28, 2009

ஏர் 'மலையாள' இந்தியா!

டெல்லி: இந்தியாவின் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் மலையாள அதிகாரிகளே.

இவர்கள்தான் இந்த நிறுவனங்களில் தங்களுக்கு கீழுள்ள அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் பெற்றுள்ளனர்.

ஏர் இந்தியாவின் தலைமைப் பொறுப்பு எப்போதும் மலையாளிகளுக்காகவே ரிசர்வ் செய்யப்பட்டுவிட்ட பதவி மாதிரி ஆகிவிட்டது. மலையாளி அல்லாதவர்கள் அந்தப் பதிவியை நினைத்துப் பார்க்கக் கூட முடியாத நிலை வந்துவிட்டது.

இதன் இப்போதைய சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் பாரத் பூஷன். இவருக்கு முன்பு இப்பதவியில் இருந்தவர் ரகு மேனன். அவருக்கும் முன்பிருந்தவர் துளசிதாஸ் மூவருமே மலையாளிகள், கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரிகள்.

இன்னும பல பொதுத் துறை நிறுவன உயர் பதவிகளையும் மலையாள அதிகாரிகளே பிடித்துள்ளனர். இதன் சூத்திரதாரிகள் யார் தெரியுமா... பிரதமர் அலுவலகத்தில் உள்ள இரு மலையாள அதிகாரிகள்.

பிரதமரின் முதன்மை செயலாளராக இருப்பவர் டி.கே.ஏ. நாயர். மத்திய அரசின் கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர். இந்த இருவரும்தான் அனைத்து பொதுத்துறை நிறுவன உயர் அதிகாரிகளையும் நியமிக்கும் முக்கிய பொறுப்பில் அமர்ந்துள்ளனர்.

இதுவே தமிழ்நாட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கிய பொறுப்புகளில் இருந்தால் செய்கிற முதல் 'நல்ல காரியம்' இருக்கிற சக தமிழ் அதிகாரிகளை ஒழித்துக் கட்டுவதுதான்!

not only india dubai also some like that..

No comments: