Monday, August 2, 2010

காவி பயங்கரவாதம்

சமீபத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் அனைத்திலும் சங்பரிவார் சக்திகள் பின்னணியில் இருப்பதாக நாட்டிலுள்ள நடுநிலையாளர்களும் சமூக நல ஆர்வலர்களும் தொடர்ந்து கூறிவருகின்ற நிலையில் அது தொடர்ந்து அலட்சியப்படுத்தப்பட்டு வருகிறது.

பகிரங்கமாகவே 'பாபரி மஸ்ஜித்தை இடிக்க கரசேவகர்களை நாங்கள் அனுப்பினோம் அதற்காக பெருமைப்படுகிறோம் எனக் கூறினார் சிவசேனாத் தலைவர் பால் தாக்கரே.

பாசிஸ குண்டர்களுக்கு திரிசூலம் வழங்கும் விழாவை பகிரங்கமாக நடத்தி திரிசூலத்தின் முதல் சூலம் முஸ்லிம்களையும்இ இரண்டாவது சூலம் கிறித்தவர்களையும்இ மூன்றாவது சூலம் மதசார்பின்மை பேசும் ஹிந்துக்களையும் குத்திக்கிழிக்கும் என வெளிப்படையாகவே வெறித்தன அறிக்கை வெளியிட்டவர் விஸ்வஹிந்து பரிஷத்தின் பிரவீண் தொகாடியா.

இதைப்போன்றே பல எடுத்துக்காட்டுகளை கூறிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் நாடும் ஏடும் அறிந்த ஒன்றுதான். இவையெல்லாம் பகிரங்கமான வெளிப்படையான பேச்சாக இருந்தும் இதற்காக பாசிஸ சக்திகள் மீது எந்த சட்டமும் பாயவில்லை. 3000 மக்களைக் கொன்ற நரவேட்டை நரேந்திரமோடி மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதைவிடக் கொடுமை என்னவெனில் பாசிஸசக்திகளின் வாக்கு மூலங்களை நேரடியாக அம்பலப்படுத்தியது தெஹல்கா செய்தி ஏடு. 2007-ம் ஆண்டு தெஹல்கா செய்தி ஏடு குஜராத் கொடூரர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்தியது. முஸ்லிம் பெண்கள் பழம் போல் இருந்தார்கள் அவர்களை ருசித்து சுவைத்தோம். பள்ளிவாசல்களை பெட்ரோல் டாங்கர்களால் தாக்கி நொறுக்கினோம். இஹ்சான் ஜாஃப்ரியைக் கொன்ற பின்னர் மகாராஜாவைப் போல் உணர்ந்தேன் என்றனர்.

கர்ப்பிணி கவுசர் பீவியை வயிற்றில் சூலாயுதத்தால் குத்திக்கிழித்த கொடூரர்கள் அளித்த வாக்குமூலங்கள் வீடியோ ஆதாரங்களாக தெஹல்கா அம்பலப்படுத்தியும் கூட இந்நாட்டின் நீதி பரிபாலனம் பேணும் அமைப்புகள் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

படுகொலைகள் நடைபெற்றபோது முதலமைச்சர் நரேந்திரமோடி கொலையாளிகளை உற்சாகப்படுத்த சம்பவ இடத்திற்கே வந்ததையும் அவருக்கு பெண்கள் மாலை சூட்டி வரவேற்றதையும் கொலையாளிகள் காமிரா முன் வாக்கு மூலங்களாக தெரிவித்தனர்.

ஆனாலும் இன்றுவரை அந்தக் கொலையாளிகள் மீதோ பாதகத்தை தூண்டியவர்கள் மீதோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.

பாசிஸவாதிகள் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க யாருக்கும் துணிச்சல் இல்லை? யாரால் நம்மை என்ன செய்துவிட முடியும்? என்ற ஆணவத்தில் தங்கள் கொடூரங்களை இன்றுவரை தொடர்ந்து வருகின்றனர்.

சமீபகால குண்டுவெடிப்புகளில் சங்பரிவார் கும்பல்களின் தொடர்புகள் சந்தேகமின்றி ஆதாரப் பூர்வமாக ஆவணப்பூர்வமாக ஹெட்லைன்ஸ் செய்தித் தொலைக்காட்சி சென்றவாரம் அம்பலப்படுத்தியது.

குடியரசுத் துணைத்தலைவர் ஹமித் அன்சாரியை கொல்ல சதி செய்ததாகவும்இ அஜ்மீர்இ ஹைதராபாத் பள்ளிவாசல்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் முக்கிய சதியாளர்களாக இருந்ததாகவும்இ சங்பரிவார் சண்டாளர்கள் நேரடி வாக்குமூலம் கொடுத்தும் இன்னும் நடவடிக்கை இல்லையே ஏன்? என்ற வினா நாட்டுமக்களின் உள்ளத்தில் எழுகிறது.

இந்த கயவர்களை கைது செய்யாத இந்நாட்டின் சட்டம் மற்றும் நீதித்துறை தான் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்திற்கு கேள்வியின்றி சுட்டுக் கொல்லும் உரிமையை வழங்கியிருக்கிறது. சந்தேகம் இருந்தால் கூட சுட்டுக்கொல்லும் ஆயுத சட்டத்தின் மூலம் ஜம்முகாஷ்மீரில் உரிமை வழங்கிய இந்நாட்டின் நீதி பரிபாலனத்துறை சங்பயங்கரவாதிகளை கைது செய்யக்கூட முன்வராதது ஏன்?

இந்த இரட்டை நிலை உடனடியாக சரிசெய்யபட்ட வேண்டும்.

No comments: