Saturday, December 6, 2008

ஆறாதே மனம் டிசம்பர் ஆறுவந்தால்.

ஆறாதே மனம் டிசம்பர் ஆறுவந்தால்..
நரசிம்மன் என்ற நரி கண்மூடி தூங்கியதுபோல் நாடகமாடிய பொழுதினில்..
ஓ நாய்கள் சேர்ந்து நம் தன்மானதில் சிறு நீர் கழித்ததுவே!
ஹிட்லர் கூட்டங்கள் இடித்தது இறை இல்லத்தை மட்டுமா?
மன சாட்சியுள்ள மனிதன் சொல்வர்- இறையாண்மையும்,இந்தியப்பெருமையும் சேர்த்துதான்!
குற்றம் செய்தவன் நாளை நாட்டின் பிரதமர்,சனாதிபதி,சட்டம் இயற்றுபவன் ஆனால் நிரபராதி கைதியாய்....
சட்டத்தின் கால் அவனின் குரல் வலையை அழுத்தி கொண்டும் இருப்பதில் இந்தியன் என்று சொல்வதில் பெருமையா? இழிவா? இதில் வேற்றுமையில் ஒற்றுமை என வெற்று பிரச்சாரம்!
மசூதி இடித்ததை காலம் மறக்கலாம்....
ஆனாலும்,அந்த புண் புனுக்குக்குள் இன்னும் ஆறாமல் இன்னும் மறைந்தே இருக்கிறது!
தினம் அந்த ரணம் ,வேதனை!
ஒரு நாள் காயம் ஆரும் அன்று மசூதி அங்கே மருபடியும் எழும்!
அதுவரை இந்திய முஸ்லிம் என்று சொல்லாமல்...
இந்தியாவில் வாழும் முஸ்லிம் என கொள்வோமா?

thanks to : தபால் காரன்.

பாபரி மஸ்ஜித் உரிமை மீட்பு தினம்!

பாபரி மஸ்ஜித் உரிமை மீட்பு தினம்!
இலட்சிய வெற்றி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்!!







பரிதாபமாய் நின்ற பாபரி மஸ்ஜித்
நம் நாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட களங்கம் இன்னும் துடைக்கப்படாமலேயே இருக்கிறது. இந்திய முஸ்லிம் களின் இதயங்களில் எரிகணையால் துளைத்தாற் போன்ற அந்த துரோகச் செயல் நிகழ்ந்து 15 ஆண்டுகள் முடிவடையப் போகிறது.

ஆம். டிசம்பர் 6 என்ற சரித்திரக் கரும்புள்ளியாய் மாறிய அந்த நாளை இந்த நாடும் மக்களும் மறக்கத் தயாராக இல்லை.
உச்சநீதிமன்றத்தின் மாண்பினையும், இந்தியாவின் இறையாண்மையையும் சமாதானத்தையும் பேணியவர் கள் முஸ்லிம்கள். சங்பரிவார் சக்திகளின் சதிகளினால் இறைவனின் ஆலயத்தை இழந்த அவர்கள் எவ்வித உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் இலக்காகாமல் ஒற்று மையைப் பேணினார்கள். பாபரி பள்ளிவாசல் தகர்க்கப் பட்ட நிகழ்வு போன்ற ஒரு அடாத செயல் வேறு எந்த சமூகத்திற்காவது நிகழ்ந்திருந்தால் இந்த தேசத்தின் ஒற்றுமையே கேள்விக்குறியாகி இருக்கக்கூடும். ஒரு சிலை அல்லது ஒரு உருவப் படம் அல்லது ஒரு நினைவிடம் சேதப்படுத்தப்பட்டால் அந்த ஊரே அல்லோல கல்லோலப் பட்டிருக்கும். சேதப்படுத்தப்பட்ட அவர்களது புனித சின்னம் அதே இடத்தில் வைக்கப் படுவதாக அரசினால் வாக்களிக்கப்பட்டு பின்னர் அதே இடத்தில் அவை நிறுவப்பட்ட பின்னரே அந்த சமுதாயம் அமைதியடையும். அந்த அரசாங்கமும் நிம்மதிப் பெருமூச்சு விடும். அதைப் போலவே முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தால் வாக்குறுதி வழங்கப்பட்டது. அன்றைய பிரதமர் நரசிம்மராவ், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்திலேயே கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.



>

நான்கே நாட்களில் இடித்த குற்றவாளிகள் குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைக் குழுவும் அமைக்கப் பட்டது. லிபர்ஹான் என்ற உலக மகா(!) புண்ணிய(!) வான் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப் பட்டது.


விசாரணைக்குழு இன்று எந்த கதியில் இருக்கிறது என்பதையே ஒரு விசாரணைக்குழு வைத்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவல நிலையிலே லிபர்ஹான் ஆணையம் நீதி விசாரணையின் லட்சணம் இருந்தது. 46, 47வது முறையாக நீட்டிக்கப்பட்டு இனி அது மேலும் ஒரு தடவை நீட்டிப்பதற்காக மட்டும்தான் கூடும் என்றே நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப் பது மகா அவமானகரமான ஒன்று.



இந்நிலையில், மற்றொரு டிசம்பர் 6 நம்மை நோக்கி வருகிறது. ஆர்த்தெழுந்து அறப்போர் தொடுக்க உரிமை மீட்பு பேரியக்கம் போர்ப்பரணி பாடி புறப்படத் தயாராகி விட்டது.


பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை முதன்மை கோரிக் கையாக்கி அகில இந்திய அளவில் போராட்டக் களம் அமைத்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். அதன்பிறகே அதுகுறித்த விழிப்புணர்வு இந்தியா முழுவதும் பரவியது.

பாபரி பள்ளிவாசல் தகர்ப்பு சதிகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் நாள் எந்நாளோ என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், 2008 டிசம்பர் 6ஆம் தேதி நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு தமுமுக செயல் வீரர்கள் தயாராகி விட்டார்கள். அவர்களது எழுச்சிமிகு போராட்டத்தில் பங்கேற்க தமிழக முஸ்லிம்கள் குடும்பம் குடும்பமாக திரளத் தொடங்கி விட்டார்கள்.

கேடுகெட்ட அரசுகளால் காப்பாற்ற முடியாத பாபரி மஸ்ஜித்


உணர்ச்சிப் பிழம்பாக மக்கள் பாபரி மஸ்ஜித் கோரிக்கைக்காக - அறப்போருக்காக ஆயத்தம் ஆகும் வேளையில் நாட்டு மக்களை பிளவுபடுத்தும் கும்பல் பாபரி பள்ளிவாசல் உரிமை மீட்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துவதைப் போன்று வெற்றி நாள் என கோஷமிட்டுக் கொண்டு கடந்த ஆண்டுகளைப் போலவே அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் முயற்சி யில் ஈடுபட்டிருப்பதாகவே தோன்றுகிறது. காவல்துறை யினர் இதுபோன்ற வன்முறைக்கு வித்திடுவோரின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. டிசம்பர் 6 அன்று கலவர சக்திகளை குழப்பம் விளைவிக்க அனுமதிக்கக் கூடாது.

டிசம்பர் 6 அன்று தமிழகம் முழுவதும் ரயில்களின் இயக்கத்தை தமுமுக செயல் வீரர்களின் அறப் போராட் டம் தடுத்து நிறுத்தப் போகிறது இன்ஷாஅல்லாஹ். இதுவரை இல்லாத அளவு எழுச்சிமேல் எழுச்சியாக டிசம்பர் 6 போராட்டம் வெற்றி முகம் காண்கிறது. இலட்சியத்தில் வெற்றி காணும் வரை ஓய்வில்லை உறக்க மில்லை. உரிமைகளை மீட்கும் வரை நமது அறப்போர் முற்றுபெறப் போவதில்லை.


இந்திய பூபாகத்தில் பாபரி மஸ்ஜித் மீதான உரிமையை மீட்பது முழுமுதல் லட்சியம் என தமிழக மக்களின் உரிமைகள் பேணும் பேரியக்கமாம் தமுமுக சூளுரைக்கிறது.

thanks to :tmmk.in

Wednesday, December 3, 2008

மும்பை சம்பவம் துளைக்கும் வினாக்கள் & மோடி ஆடிய நாடகம்


ஒவ்வொரு பயங்கரவாத சம்ப வங்கள் நடக்கும் போதும் இதுகுறித்து தனக்கு முன்பே தெரியும் என்றும் மோடி சொல்லி வருகிறார். ஆனால் இதுவரை மோடி மீது விசாரணைக் கணைகள் பாயாமல் இருப்பது ஏன்? மோடியை விசாரணைக்கு உட்படுத்து வதில் என்ன பிரச்சினை?
தீவிரவாத தடுப்பு படை தலை வர் ஹேமந்த் கர்கரே சங்பரிவார் அமைப்பினரால் தனக்கு மிரட்டல்கள் வந்ததையும், அவர்கள் தன்னை தவறாக சித்தரித்ததையும் குறித்து வேதனை தெரிவித்த கர்கரே, பிரத மரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். இதுகுறித்து தனக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து பிரதமரிடமோ, உள்துறையிடமோ கர்கரே கடிதம் மூலம் ஏதேனும் தெரிவித்திருக்கிறாரா?
முதல் நாள் டெக்கான் முஜாஹி தீன் இயக்கம்தான் இதற்குக் காரணம் என ஊடகங்கள் பரபரப்பாக அறிவித் தன. இத்தகவலை இவர்களுக்கு தெரிவித்தது யார்?
இரண்டாவது நாள் லஷ்கரே தொய்பா தான் காரணம் என பெரும் பாலான ஊடகங்கள் அறிவித்தன. லஷ்கரே தொய்பாதான் காரணம் என இவர்களுக்கு யார் சொன்னார்கள்? இல்லையெனில், `டெக்கான் முஜாஹி தீன் காரணமில்லை, அந்தப் பெயரை இரண்டாவது நாள் குறிப்பிட வேண் டாம்’ எனக் கூறியது யார்? ஆனால் செய்திகளின் போக்கை கணிக்காமல் பெரிய அறிவாளித்தனமாக இன்ன மும் `டெக்கான் முஜாஹிதீன்தான் காரணம்’ என செய்தி கூறிக் கொண் டிருக்கும் சன் தொலைக்காட்சிக்கு மட்டும் முக்கியத் தகவல்களைக் கொடுத்தது யார்?
டெக்கான் முஜாஹிதீன் ஆயிற்று, லஷ்கர்-இ-தொய்பா போயாச்சு, மூன்றாவது நாள், `தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு இருப்பதாக’ கூறப்பட்டது. அப்படியானால் மேற் கூறப்பட்ட இரண்டு பயங்கரவாத அமைப்புகளையும் காப்பாற்றி வேறொரு நபரைப் பற்றி குறிப்பிடப்படுகிறது என்றால், இடையில் என்ன மாற்றம் அல்லது குழப்பம் நிகழ்ந்தது?
பயங்கரவாதிகள் போர்பந்தரில் இருந்துதான் வந்திருக்கிறார்கள் என் றால், இதற்கு குஜராத் அரசின் கையாலாகத்தனம்தான் முக்கியக் காரணமாக இருக்க முடியும். ஆனால் இதுகுறித்து மோடி அரசை விசாரிக் காமல் காலம் தாழ்த்துவது ஏன்? இதுகுறித்து எந்த புண்ணியவானும் (!) வாய் திறக்கவில்லையே ஏன்?
இவ்வளவு ஆயுதங்களுடன் சதிகாரர்கள் ஊடுருவ முடிந்தது என்றால் பாஜகவுக்கு நெருக்கடியான சூழ்நிலையில் குண்டுகள் வெடிக்கின் றன. இவ்வாறு கூறியவர் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய்சிங். தற்போதும் சட்டமன் றத் தேர்தல்கள் நடைபெற்றுவரும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என செய்திகள் வெளிவந்த சூழ்நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எந்த புலனாய்வு அமைப்பும் ஊடகங்களும் வாய்திறக்கவில்லையே ஏன்?
தீவிரவாதிகள் பஞ்சாபி மொழி பேசியதாக முதலில் ஊடகங்கள் குறிப்பிட்டன. உருதுமொழி பேசிய தாகக் கூட பல ஊடகங்கள் குறிப்பிட் டன. மராத்திய மொழியில் பேசியதாக மராட்டிய டைம்ஸ் குறிப்பிடுகிறது. அவ்வாறெனில், அவர்கள் யார்? என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

மோடி ஆடிய நாடகம்
மோடி, ஓபராய் ஹோட்டலுக்குச் சென்று பார்வையிடு வது போல சென்றதை பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டை நடத்திய கமாண்டோ படையினர் கோபத்துடன் குறிப்பிட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டிய லிஸ்ட்டில் உள்ள மோடி எந்த பயமும் இல்லாமல் நாடகமாடியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது

நன்றி :

tmmk

வெடிகுண்டு சப்ளை செய்த தீவிரவாதி சாமியார் கைது

திருச்சி: திருச்சி அருகே பிரபல ரவுடிகளுக்கு வெடி குண்டு சப்ளை செய்த தீவிரவாதி சாமியார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி உறையூர் தொழில் அதிபர் பாலகிருஷ்ணன், புத்தூர் ஒட்டல் ஊழியர் கருணாகரன், உறையூர் ஜவுளி தொழில் அதிபர் ஆதிமூலம் ஆகியோரை கடந்த சில திங்களுக்கு முன்பு பிரபல ரவுடிகள் கண்ணாடி ஆனந்த், எடமலைப்பட்டி புதூர் பிரதாப், சறுக்குப்பாறை ஆனந்த், ஒத்தக்கை வினோத் ஆகியோர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியது.

தகவல் அறிந்த போலீசார் துரித கதியில் செயல்பட்டு அந்த ரவுடிகளை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடி பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீசார் கண்களில் இருந்து தப்பிச் சென்ற மணச்சநல்லூர் குணாவை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ரவுடி கும்பல்களுக்கு வெடி குண்டு தயாரித்துக் கொடுத்த மணச்சநல்லூர் அண்ணாநகர் கீழ காமாட்சித் தெரு தீவிரவாதி சாமியர் அழுக்கு சித்தன் என்கின்ற சரவணனை திருச்சி கோட்டை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் ரவுடிகளுடன் ஏற்பட்ட தொடர்பு, வெடி குண்டு தயாரிப்பு பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Monday, December 1, 2008

அயோத்தி, கோயம்புத்தூர், குஜராத், ஒரிசா, மும்பை . . . சோதனைச்சாலைகள்Xகுண்டுவெடிப்புகள்

இன்று இந்தியாவில் அதிலும் குறிப்பாக மும்பையில் உள்ள அனைவரின் பேச்சிலும் தீவிரவாதம் என்ற சொல் ஒரு முறையாவது உச்சரிக்கப்பட்டிருக்கும்,பல அப்பாவி இசுலாமியர்கள் வழக்கம் போல் புயலுக்குப்பின்னான சோகமாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படலாம். தாக்குதலில் இறந்த‌ இந்துக்களின்,இசுலாமியர்களின் சொந்தங்கள் கன‌த்த இதயத்தோடு நொடிகளை கடத்தலாம். புயல் போல் நடந்து முடிந்துவிட்ட‌ இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட இரு நூறு உயிர்கள் பலியாகியிருக்கிறது.ரயில் நிலையங்களில் நின்று இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இரையாகிப்போன அப்பாவி பயணிகளுக்கும்,ஒட்டலில் பணிபுரிந்த‌ பணியாளர்களுக்கும்,சமையல்காரர்களுக்கும்,இன்னும் இந்த தாக்குதலில் இறந்த அனைத்து அப்பாவி உழைக்கும் மக்களுக்கும் நாம் நமது ஆழ்ந்த இரங்களைத் தெரிவிப்போம்,அதே நேரத்தில் இந்த பயங்கரவாத தாக்குதலின் நுட்பமும்,வேகமும்,உயிரையே இழக்கும் ஆவேசமும் கூடியிருப்பதையும் இதற்கான காரணிகளை,உற்றுக்கண்னை,இதன் தோற்றுவாயை ‘நடுநிலையாளர்களுக்கு’ மீண்டும் ஒரு முறை நினைவூட்டுவதும்,இந்தியாவில் தொடரும் இந்த‌ பயங்கரவாதத்தின் வினை எது என்பதை பார்க்க வைப்பது அவசியமானது என்று கருதுகிறேன்.மற்ற‌ குண்டு வெடிப்புகள், தாக்குதல்கள் அனைத்தின் போதும் பீதியை கிளப்பி இந்து ம‌தவெறிக்கு தூபமிட்டு வெறியை கிளறிவிட்டுக்கொண்டிருந்த இந்திய புளுகுனி ஊடகங்கள் தற்போது கண்ணீரும் கம்பலையுமாக‌ அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்‌றன.இந்த தாக்குதல் சம்பத்திலிருந்து புதிதாக‌ எந்த பீதிகளையும் கிளப்பமுடியாமல் இந்தியாவையே தேசபக்த,இந்துமதவாத உணர்ச்சிகளுகுள் மூழ்கடிக்கும் செண்டிமென்ட் கட்டத்தை எட்டிவிட்டார்கள். அழுது வடியும் ஊடகங்களும் ஆழ்ந்த இர‌ங்கள்களை தெரிவித்துக்கொண்டிருக்கும் ஆளும்வர்க்கமும் ஏன் இதற்கு மட்டும் இப்படி கண்னீர் மல்கி உணர்ச்சிகளில் மூழ்குகிறார்கள் நம்மையும் பிடித்து முக்கி எடுக்கிறார்கள் ?






சாதாரணமாக மக்களிடம் ஒன்றும் தேசபக்தி பொத்துக்கொண்டு சாக்கடையில் ஓடுவதை போல ஓடவில்லை,தொலைகாட்சிகள்,வானொலிகள்,செய்திப்பத்திரிகைகள் அனைத்தும் மேலிருந்து இந்த உணர்ச்சிகளை இறக்குகிறார்கள்,தொடர்ச்சியாக‌ சூடேற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஏனெனில் இதுவரை ஆங்காங்கே குண்டுகள் தான் வெடித்தன ஆனால் தற்போது நடந்திருப்பது இதுவரையிலும் இந்தியா காணத,இந்துமதவெறி பயங்கரவாத‌ கும்பல் காணாத‌ தாக்குதல் என்பதை விட போர் என்றே கூறலாம்.அதுவும் இந்தியத் தரகு முதலாளியின் நூற்றாண்டு கால‌ பழமை வாய்ந்த ஹோட்டலின் மீதே போர் தொடுத்ததன் மூலம் இவர்களின் அமெரிக்க,பிரிட்டன் சொந்தங்கள் பீதியின் காரண‌மாக இன்னும் சில ஆண்டுகளுக்காவது இங்கு வரமுடியாமல் போகலாம் அதனால் உண்டான சோகம்,இனியும் பயங்கரவாதிகள்,பயங்கரவாதிகள் என்று கூறி அப்பாவி இசுலாமிய இளைஞ‌ர்களை நாய்களை போல‌ வேட்டையாட முடியாது அவ்வாறு செய்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணியதால் ஏற்பட்ட பீதி தேசபகத‌ வடிவில் வெளிப்பட்டிருக்கலாம். எந்த டாட்டாவும்,அம்பானியும் கொழுத்து சொத்து சேர்ப்பதை வைத்துக்கொண்டு இவர்கள் இந்த நாடு முன்னேறுகிறது,வல்லரசாகிறது என்று கதை சொல்லிக்கொண்டிருந்தார்களோ அந்த டாட்டாவின் ஹோட்டலின் மீதே நடத்தப்பட்ட தாக்குதலாலும் இந்த தாக்குதலின் எண்ணிப்பார்க்கவும் இயலாத திடீர் அதிர்ச்சியும் தான் இவர்களை தேசபக்த பஜனையை கோரசாக பாட வைக்கிறது.இதற்கு முன்பு இங்கே குண்டுகள் வெடிக்கவில்லையா ? அப்போதெல்லாம் இந்த ஊடகப்பொய்யர்களும்,ஆளும் கும்பலும் என்ன செய்தார்கள்? எல்லா குண்டு வெடிப்புகளின் போதும் வெறிக்கூச்சலிட்டு ஊரைக்கூட்டிய‌ இவர்கள் செய்ததெல்லாம் என்ன? இந்தியாவில் ஒவ்வொரு முறை குண்டுகள் வெடித்த போதும் இவர்கள் பயங்கரவாத பீதியை மட்டும் தான் கிளப்பினார்கள்,அதுவும் ஒவ்வொரு முறையும் திட்டமிட்டு இசுலாமிய மக்களுக்கு எதிராக திருப்பிவிட்டு அவர்களை பயங்கரவாதிகளாக சமூகத்திற்கு அடையாளம் காட்டி ஒதுக்கித்தள்ளினார்கள்,

ஆனால் இப்போது அத்வானி கூட தனது வார்த்தைகளிலிருந்து விக்ஷத்தை கக்காததன் மர்மம் என்ன ? காங்கிரசு அரசை ஏன் முன்பைப் போல லாயக்கற்ற அரசு, நாட்டை பாதுகாக்க முடியாத அரசு என்று கடித்து குதற‌வில்லை அதுவும் இந்து ஓட்டை பொறுக்கத் நல்ல வாய்ப்பாக‌ தேர்தல் நெருங்கும் தருணத்தில் கூட ஏன் பேசவில்லை ?ஏனென்றால் மேற்கூறியது மட்டும் தான் காரணமாக இருக்க முடியும், ஆனால் இதற்கு இவர்கள் சொல்லும் விளக்கமே வேறு அது தான் தேசபக்தி, நாடே அச்சுறுத்தலில் இருக்கும் போது காங்கிரசை விமர்சிப்பதா முக்கியம் இப்போது நாம் காட்ட வேண்டியது தேசபக்தியே என்று இந்த நாட்டை வல்லரசாக்க உழைக்கும் டாட்டாவின் இழப்பிற்காக நாமும் கண்ணீர் வடிக்க வேண்டும் என்கிறார்கள்,டாட்டாவை விடுங்க சாதாரண மக்கள் பலியாகியிருக்காங்களே என்று நீங்கள் கேட்கலாம், ஆம் உண்மை தான் ஆனால் அத்வானியோ இன்னபிற தேசபக்தர்களோ அவர்களுக்காக கண்ணீர் விடவில்லை என்பதை அடித்துச்சொல்லலாம் அவர்களுக்காக நாம் தான் உண்மையாக வருந்துகிறோம்.இதற்கு முன்னாலும் பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன அங்கேயும் மக்கள் நூற்றுக்கணக்கில் இறந்து போயிருக்கிறார்கள் ஆனால் எந்த இடத்தையும் இந்தளவிற்கு செண்டிமெண்ட் சீனாக்கி நட்டையே தேசபக்த சோகத்திற்குள் மூழ்கடிக்கவில்லையே ஏன்? அதற்கு இது மட்டுமே காரணமாக இருக்க முடியும்.ஆனால் இனி இதுபோல எண்ணிப்பார்க்கவியலாத வடிவங்களிலான தாக்குதல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்! இதில் ஒன்றுமறியாத அப்பாவி மக்களும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை,ஆனால் அடிக்கும் இந்த புயல் காற்றிற்கான காரணத்தை மட்டும் அறிவார் யாருமில்லை,அறிய முற்படுவதுமில்லை,அல்லது நினைப்பது கூட இல்லை ஏனெனில் இந்து பயங்கரவாத கும்பல் வேறு பக்கம் பார்க்காத வண்ணம் பயங்கரவாதத்தை அடையாளப்படுத்தியுள்ள‌து






ஒரு பயங்கரம் அல்லது பயங்கரவாதம் உருவாக காரணம் இன்னொரு பயங்கரவாதமே என்பதை யாரும் மறுக்க முடியுமா? அதை யாரும் மறுக்க முடியாது. இல்லையென்றால் அகிம்சை தான் பயங்கரவாதத்தை உருவாக்குகிற‌தா?ஒரே வரியில் சொல்வதெனில் இசுலாமிய பயங்கரவாதத்தை உருவாக்கியது பார்ப்பன இந்து பயங்கரவாத‌ம் தான். இந்து பயங்கரவாதத்தால் பழிவாங்கப்பட்டவர்களின் போர் தான் இசுலாமிய பயங்கரவாதம்.எனவே இசுலாமியர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என்று பார்ப்பன பயங்கரவாத கும்பல் பிரச்சாரம் செய்கிறது, அந்த கண்ணோட்டம் என்பது பரவலாகவும் பரவியுள்ளது.அந்த பிரச்சாரத்திற்கு இரையாகாமல் தங்களுடைய‌ சுயமான கண்ணோட்டத்துடன் இந்த பயங்கரவாதிகளையும் இவர்கள் தோற்றுவித்துள்ள எதிர் பயங்கரவாதத்தையும் அடையாளம் காணும் வரை இவை தொடரும் என்பதே முடிவு. இந்து மதவெறி பயங்கரவாதிகள் சமீபத்தில் தமது பயங்கரவாத செயலுக்காக பிடிபட்டுள்ளார்கள்.மாலேகானிலும் ,ஆமதாபாத்திலும்,சாம்ஜத் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் வெடித்த குண்டுகளை வைத்த‌ பயங்கரவாதிகள் இந்துமதவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பல் என்பது அம்பலமாகியுள்ளதே ஆனால் இந்த‌ குண்டு வெடிப்பு பற்றி தேசபக்தியுள்ள தேசீய ஊடக யோக்கியர்கள் ஏன் வாயை திறக்கவில்லை? இவர்கள் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பது ஏன் ? அது பயங்கரவாத செயல் இல்லையா? இல்லை! ஏனென்றால் அது இந்து பயங்கரவாதிகள் வைத்த குண்டுகள் ! எனவே இந்த ஊடகங்கள் பற்றியும் இவர்களின் தேசபக்தி பற்றியும் நடு நிலையாளர்களே கேள்விகேளுங்கள்,அவர்களின் முகத்தின் முன் உள்ள திரையை விலக்கி பாருங்கள். அப்போது தான் உண்மை செய்திகளை அரிய முடியும். நீங்கள் உண்மை செய்திகளை அறியாத வரை உண்மையான,முதன்மையான பயங்கரவாதிகளை அடையாலம் கானாதவரை இந்த தாக்குதல்களை நாம் எதிர் நோக்கியிருக்கலாம். இந்த பயங்கரவாத செயல்கள் பற்றி எழுத்தாளர் அருந்த‌தி ராய் சில மாதங்களுக்கு முன்பு தெகல்கா வார ஏட்டுக்கு கொடுத்த நேர்காண‌லின் மொழியாக்கம் தற்போதைய சூழலின் அவசியம் கருதி இங்கே பதிவிடப்படுகிறது.இதன் மூலமும் இதே தளத்தில் இருக்கிறது.மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது.





தெகல்கா : அதிகரித்துவரும் தீவிரவாத தாக்குதல்கள் எதனை குறிக்கின்றன ?காக்ஷ்மீர்,வ‌ட‌கிழ‌க்கு மாநில‌ங்க‌ள் அல்ல‌து ப‌ஞ்சாப்பை போன்று குறிப்பான‌ அர‌சிய‌ல் கோரிக்கைக‌ளை ஒட்டிய‌ வ‌ன்முறையாக‌ இல்லாம‌ல் இது தொட‌ர்பின்றி ந‌டைபெறுகிற‌தே, இந்தியாவில் என்ன‌ மாற்ற‌ங்க‌ள் ந‌டைபெற்றுள‌து?
அருந்ததி ராய் : இது தெளிவாக‌ உள்ள‌து, இது வெறுப்புண‌ர்ச்சியினுடைய‌ அறிக்கை. நாம் அனைவ‌ரும் இதை எதிர் கொண்டாக‌ வேண்டும். சென்ற‌ வார‌ம் பா.ஜ‌.க‌ வெளியிட்டிருக்கும் அறிக்கை இந்த வெறுப்புண‌ர்ச்சிக்கான‌ துதிபாடல் [அதை மேலும் தீ விட்டு வ‌ள‌ர்க்கும் எண்ணை‍‍‍ - நாம்] காங்கிர‌சும் முன்பைப்போல‌ த‌ன‌து பிரித்தாளும் அர‌சிய‌லை துவ‌ங்கியுள்ள‌து.இன்னும் சொல்ல‌ப்போனால் பா.ஜ‌.க வினுடைய‌ விருப்ப‌ம் என்ன‌வென்றால் இந்த‌ வெறுப்புண‌ர்ச்சியை மேலும் அதிக‌மாக‌,மிகுந்த‌ வெறுப்புண‌ர்ச்சியாக‌ மாற்றிச்செல்ல‌ விரும்புகிற‌து. இது போன்று ம‌த‌ ம‌ற்றும் சாதிய‌ வாக்குக‌ளை அறுவ‌டை செய்வ‌தென்ப‌து த‌ற்கால அரசியல் ந‌டைமுறையின் ஓர் அங்க‌மே. கடந்த‌ கால‌ங்க‌ளில் ம‌ட்டுமல்ல‌‌ நாம் இத‌ற்கெதிராக‌ எதையும் செய்யாத‌ வ‌ரை இனி எதிர்கால‌ங்களிலும் இந்நிலை தொட‌ரும். நாம் இத‌ற்கு அர‌சிய‌ல்வாதிக‌ளை ம‌ட்டும் குறை சொல்லி ப‌ய‌ன் இல்லை. இது மைய‌மான‌ ஒழுங்க‌மைக்க‌ப்ப‌ட்ட‌ பிர‌ச்சினையாக‌ இருக்கிற‌து. ஒவ்வொரு முறையும் நிச்ச‌யமாக‌ ம‌க்க‌ளுக்கு நீதி கிடைப்ப‌தில்லை. இந்த‌ விச‌ய‌த்தில் நீதிமன்ற‌‌ங்க‌ளும்,போலீசும்,ஊட‌க‌ங்க‌ளும் ஒருங்கினைந்து ஒன்று போல‌ செய‌ல்ப‌டுகிறார்க‌ள்.


ஒவ்வொருவ‌ரும் இந்து ம‌த‌ச்சாயத்திற்குள் மூழ்கிக்கிட‌க்கின்ற‌ன‌ர். ஜ‌ன‌நாய‌க‌த்தை ப‌ர‌வ‌லாக்கும் ஒவ்வொரு நிறுவ‌ன‌மும் முற்றிலுமாக‌ உடைந்து செயலற்று கிட‌க்கிற‌து. அனைவ‌ரும் த‌த்த‌ம‌து சொந்த‌ வ‌ழிக‌ளில் ப‌ய‌ணிக்கின்ற‌ன‌ர். என‌வே தான் ம‌க்க‌ள்[நீதி கிடைக்காத‌, நீதி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்கள் - நாம்] ச‌ட்ட‌ங்க‌ளை த‌ம‌து கைக‌ளில் ஏந்தத்துவ‌‌ங்கிவிட்ட‌னர், சட்டத்தை மீறிய செயல்களில் துவ‌ங்கி தீவிர‌வாத‌ தாக்குத‌க‌ள் வ‌ரை செல்கின்ற‌ன‌ர்.தெகல்கா : ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை மென்மையாக‌ கையாள்வ‌தா க‌டுமையான‌ முறைகளில் கையாள்வ‌தா என்கிற‌ ச‌ர்ச்சை இப்பொழுது மைய‌ம் கொண்டுள்ள‌து. உண்மையில் இவையெல்லாம் தீர்வாகுமா ?
அருந்ததி ராய் : பொடா, த‌டா, ச‌த்திஸ்க‌ர் பாதுகாப்புச்ச‌ட்ட‌ம் என எந்த ஒரு ச‌ட்ட‌மும் இதுவ‌ரை தீவிர‌வாத‌த்திற்கு முடிவு க‌ட்டிவிட‌வில்லை. இந்த‌ ச‌ட்ட‌ங்க‌ள் எதையும் சாதித்த‌தாக‌ சான்றுக‌ளும் இல்லை, மாறாக இந்த‌ ச‌ட்ட‌ங்க‌ள் அனைத்தும் சமூகத்தின் இயல்பை மாற்றியமைப்பதற்கும் மேலும் ஜ‌ன‌நாய‌க‌த்தின் இட‌ங்க‌ளை கிரிமினல்ம‌ய‌மாக்குவ‌த‌ற்கும், கேள்வி கேட்ப‌வ‌ர்க‌ளின் வாயை அடைப்ப‌த‌ற்கும் ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌ட்டிருக்கிற‌து.
தெகல்கா : தேர்த‌ல் நெருங்கிக்கொண்டிருக்கும் நேர‌த்தில், செயற்கையாக உருவேற்றப்பட்ட இந்த அரசியல் சூழலில் இது போன்ற‌ தாக்குத‌ல்க‌ள் நிக‌ழ்கின்ற‌ன‌வே, இவற்றை எவ்வாறு பார்க்கிறீர்க‌ள் ?அருந்ததி ராய் : நான் ஒரு நேர்கான‌லை க‌ண்டு விய‌ப்படைந்து போனேன், ச‌மீப‌த்தில் தெக‌ல்கா இத‌ழுக்கு காங்கிர‌சு த‌லைவ‌ர் திக்விஜ‌ய் சிங் கொடுத்த‌ பேட்டி தான் அது. முத‌ன் முறையாக‌ ஒரு முன்னணி அர‌சிய‌ல் த‌லைவ‌ர் சொல்கிறார் “தாக்குதல்களுக்கான நேரம் தெரிந்தும், இந்த‌ தீவிர‌வாதிக‌ள் யார் என்று எங்க‌ளுக்கு தெரியாது” கடைசியில் இதனால் லாபமடையப்போவது யார்?, த‌வ‌றான‌ ந‌ப‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌டுவ‌தும்,தேவையான ஆதாரங்கள் வ‌ழ‌ங்கிய‌ பிற‌கும் யாருக்கும் உண்மையான‌ குற்ற‌வாளிக‌ளை தெரிந்துகொள்ள‌ விருப்ப‌மில்லை, அல்லது தெரிந்தே அதை மூடி மறைக்கின்றனர். உதார‌ண‌த்திற்கு இந்திய‌ முஜாகிதீன்க‌ளை எடுத்துக்கொள்ளுங்க‌ள் தீவிர‌வாத‌க்குழுக்க‌ளில் இவ‌ர்க‌ள் தான் முன்ன‌ணியான‌வ‌ர்க‌ளா அல்லது அரசுக்கு எதிரான பயங்கரவாதிகள் என்று அரசால் புனையப்பட்டவர்களா ? இதில் குறிப்பிட வேண்டிய விசயம் என்னவெனில் இவையெல்லாம் திட்டமிட்டு உருவாக்கப்படுபவை, இதை கேட்டு நாம் ஆச்சர்யப்பட தேவையில்லை. நீங்கள் தொட‌ர்ச்சியாக‌ ஒரே செய்தியை வெளியிடுகிறீர்கள் அது சீக்கிய‌ர் பிர‌ச்சினையாக‌வோ அல்ல‌து இப்போது ஒரிசாவிலுள்ள கிறித்தவர்களின் பிர‌ச்சினையாக‌வோ இருக்க‌ட்டும், அனைத்திலும் ம‌க்க‌ள் நீதியையும், நியாய‌த்தையும் எதிர்பார்க்க‌ முடியாது. இவை அனைத்தையும் விட‌ அபாய‌க‌ர‌மான‌ விச‌ய‌ம் என்ன‌வென்றால் பா.ஜ‌.க‌ இதை வைத்து பெரும்பான்மை ஒட்டை கைப‌ற்ற‌ முய‌ற்சிப்ப‌தும், சிறுபான்மையினரை தீவிரவாதிகளாக்குவதும் தான். இந்தியாவில் மட்டும் தான் 200 மில்லியன் மக்களை சிறுபான்மையினர் என்ற கருதுகோள் உள்ளது. இந்த‌ க‌ண்ணோட்ட‌ம் நிச்ச‌ய‌மாக இந்த‌ நாட்டையே இல்லாம‌ல் அழித்து விடும். இது போன்ற‌ க‌ருத்துக்க‌ள்,க‌ண்ணோட்ட‌ம் இந்தியாவிற்கு ம‌ட்டும‌ல்ல‌ ஒட்டு மொத்த‌ உல‌கிற்கும் ஆப‌த்தான‌து.
நீங்க‌ள் ஒட்டுமொத்த‌ த‌லைமுறையையே,

வாழ வேறு வழியில்லை என்று உணரும்படியான நிலைக்கு தள்ளுகிறீர்கள், சில‌ர் ம‌ட்டும் வேண்டுமானால் இந்த‌ கொடுமைக‌ளையெல்லாம் த‌லையை தொங்க‌விட்டுக்கொண்டு ஏற்க‌லாம் ஆனால் பெரும்பான்மையின‌ர் அவ்வாறு கிட‌க்க‌ மாட்டார்க‌ள். தீவிர‌வாத‌த்தின் நோக்க‌ம் அழிவாக ம்ட்டுமே உள்ளது. அது ஒன்றும் புர‌ட்சிக‌ர‌மான‌ அர‌சிய‌ல் அல்ல‌. காக்ஷ்மீரிலுள்ள‌ பாதுகாப்பு ப‌டையின‌ரிட‌ம் கேட்டுப்பாருங்க‌ள்.அந்த‌ சிறு ப‌ள்ள‌த்தாக்கை உங்க‌ள் [அரசின்] க‌ட்டுப்பாட்டிற்குள் வைக்க‌ 5 ல‌ட்ச‌ம் பேர் தேவைப்ப‌டுகிற‌து.இதையே ஒட்டுமொத்த‌ நாட்டிற்கும் செய்ய‌போகிறீர்க‌ளா ? ஆனால் இதை விட இன்னும் ஒரு படி மேலே போய் உடனடியாக தேர்தலில் நடக்கப்போவது, என்னுடைய‌ க‌ருத்துப்ப‌டி காங்கிர‌சு திறனற்று இன்னும் பல‌கீன‌மாகி பா.ஜ‌.க‌ எடுத்த‌முடிவுக‌ளை தான் எடுக்கும். பா.ஜ‌.க‌ வை பொறுத்த‌வரை த‌ம‌து சொந்த‌ நிலைப்பாடுக‌ளின் ப‌டியே அவ‌ர்கள் தமது எதிர்மறையான‌ செயல்கள் என்ப‌திலிருந்து இதை கொடூர சகாப்ததிற்கு எடுத்துச்செல்வார்க‌ள். நாம் இத‌ன் விளைவுக‌ளை இந்தியாவை கடந்து உல‌க‌ள‌விலும் எதிர்கொள்ள நேரிடும். இதற்கான பாதைகள் திறந்தே இருக்கிறது. நாம் இதை இன்னும் முறைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ வ‌ழிக‌ளில் சந்தித்தாக‌ வேண்டும்.
தெகல்கா : சிமி அமைப்பை எப்ப‌டி பார்ப்ப‌து, ஏற்கென‌வே தெக‌ல்காவின் தந்திர‌மான‌ புல‌ணாய்வில் சிமிக்கு எதிரான‌ அர‌சின் அனைத்து வ‌ழ‌க்குக‌ளும் ஆதார‌ம‌ற்ற‌வை என்றும் இதன் பேரில் பல அப்பாவி இசுலாமியர்கள் பலிகடாவாக்கப்பட்டார்கள் என்றும் நிரூபிக்க‌ப்ப‌ட்டுள்ளது எனினும் சிமி வெளிப்படையான இஸ்லாமிய‌ அடிப்ப‌டைவாத‌ அமைப்பு தான்.
அருந்ததி ராய் : நாம் ப‌ஜ்ர‌ங்த‌ளை எப்ப‌டி பார்க்கிறோமோ அப்ப‌டி தான் சிமியையும் பார்க்க‌ வேண்டும். இருந்தாலும் அவ‌ர்க‌ளின் ந‌ம்பிக்கையை எந்த அளவிற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதல்ல விசயம், அவர்களுக்கு எதிரான‌ ஆதார‌ங்க‌ளை புனைந்து உருவாக்கும் அர‌சுக்கு உத‌வும் வ‌கையில் யாரும் வலிந்து போய் நிற்க‌க்கூடாது. நான் இதை வெறும் ச‌ட்ட‌த்திற்கு எதிரான‌ செய‌லாக‌ ம‌ட்டும் பார்க்க‌வில்லை, மீண்டும் இங்கு மறுத்து ஒதுக்கித்த‌ள்ள‌ப்படுவது நீதி மட்டுமே. விக்ஷ்வ இந்து பரிக்ஷ‌‌த்தோ,ப‌ஜ் ர‌ங்த‌ள்ளோ அல்ல‌து சிமியோ த‌ம‌து செய‌ல்பாடுக‌ள் அனைத்தும் ச‌ட்ட‌த்திற்கும் நீதிக்கும் எதிரான‌து என்ப‌தை புரிந்து கொண்டால் வ‌ன்முறை செய‌ல்க‌ளில் ஈடுபட மறுப்பார்கள், இப்ப‌டித்தான் ந‌ம‌து ச‌மூக‌ம் தாங்கிப்பிடிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆனால் இங்கு ஒரு சூழ‌ல் உருவாக்க‌ப்ப‌டுகிற‌து,ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டம் இன்னொரு மக்கள் கூட்டத்தை எரிக்கவும், கொல்லவும் முடிகிறது,
அதன் பிறகு அதற்கான சாட்சிகள் இருந்தும் கூட தண்டனை கிடைக்காது என்கிற துணிவான சூழல் உருவாக்கப்படுகிறது. அதே வேலையில் தாக்கப்பட்டு ஒடுக்கப்படும் மக்கள் நீதியின் பாலும் சட்டத்தின் பாலும் நம்பிக்கையை இழக்கிறார்கள். இந்த செயல்களின் விளைவு புரட்சியை கொண்டு வராது, நிச்சயமாக அழிவைத்தான் த‌ரும். இதைப்போன்று மாற்றப்படுகின்ற சிறுபான்மை மக்கள் கூட்டம் கண்டிப்பாக ஒரு அரசை தேர்வு செய்யவோ, ஒரு புரட்சியை நடத்தவோ முடியாது. ஆனால் கண்டிப்பாக அது இந்த நாட்டை அழிப்பதோடு மட்டுமின்றி மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக மாறும்.
தெகல்கா : அரசின் அமைப்புகளால் தாக்குதல்கள் எப்போது நடக்கும் என்று யூகித்தறிய முடியாததாலும், உண்மை குற்றவாளிகளை கண்டறிய முடியாததாலும் எப்போதுமே அவர்களிடையே ஒரு வகை பீதி நிலவுகிறது. அவர்கள் என்ன வகையான பிரச்சனைகளை எதிர் கொள்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
அருந்ததி ராய் : பிர‌ச்ச‌னையின் இத‌ய‌ம் என்ன‌வெனில், இங்கு யாருக்குமே பிர‌ச்ச‌னையின் அடியாழ‌ம் வ‌ரை சென்று பார்க்க‌ விருப்ப‌மே இல்லை.
மீண்டும் மீண்டும் ந‌ம‌க்கு கூற‌ப்ப‌ட்ட‌வை அனைத்தும் நிறைய‌ பொய்க‌ள் என்றே நிரூபிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. பாராளும‌ன்ற‌ தாக்குத‌லுக்கு பிற‌கு கிட்ட‌த‌ட்ட‌ 5 ல‌ட்ச‌ம் சிப்பாய்க‌ள் எல்லையில் இருத்த‌ப்ப‌ட்டார்க‌ள், இந்த‌ ந‌க‌ர்த‌லில் அறுநூற்றுக்கும் அதிகமான‌ பேர் ம‌டிந்தார்க‌ள். மீண்டும் மீண்டும் கூற‌ப்ப‌ட்டு உறைந்து போன‌ பொய்க‌ளால் நாம் இன்று அணு ஆயுத‌ப் போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம். தெக‌ல்காவின் ‘சிமி’ விசார‌னையை எடுத்துக்கொள்ளுங்க‌ள் இன்று வ‌ரை ஒவ்வொரு முறையும் யாரெல்லாம் பொய்க‌ளை அம்ப‌ல‌மாக்கினார்க‌ளோ அவ‌ர்களையெல்லாம் அன்று தேச‌விரோதிக‌ள் என்று வாயை அடைத்தார்க‌ள். ஆனால் உண்மை குற்ற‌வாளிக‌ளை கைது செய்ய‌ சிறு முய‌ற்சி கூட‌ எடுக்க‌ப்ப‌ட‌வில்லை. பொய்யை ‘பொய்’ என்று நிறுவிட‌ எந்த முய‌ற்சியும் எடுக்க‌ப்ப‌ட‌வில்லை. உண்மை குற்ற‌வாளிக‌ளை க‌ண்ட‌றிவ‌த‌ற்கான ஆர்வ‌மின்மையின் தேக்க‌ம் ப‌ல‌ வித‌மான‌ க‌ருத்துக்க‌ளை தோற்றுவித்துள்ள‌து. இந்திய‌ முஜாகிதீன்க‌ள் யார் என்ப‌தை ஏன் அவ‌ர்க‌ளால் அறுதியிட்டு கூற‌ முடிய‌வில்லை. நாம் அனைவ‌ரும் ப‌ரிசீலிக்க‌ப்ப‌டாத‌, ஆய்வுக்குட்ப‌டுத்தாத‌ ப‌ல‌ க‌ற்ப‌னைக‌ளையே வைத்திருக்கிறோம். சொல்ல‌ப்போனால் இந்த‌ அர‌சு பிர‌ச்ச‌னையின் அடி ஆழ‌த்தை காண‌ விரும்ப‌வில்லை!



thanks To: http://brahmanicalterrorism.wordpress.com

விலாஸ் ராவ் தேஷ்முக்கும் விலகினார்-துணை முதல்வரும் விலகுகிறார்

மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தாஷ்முக்கும், துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீலும் பதவி விலகி விட்டனர்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் விலகி விட்டார். அடுத்து மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் மற்றும் துணை முதல்வரும், அம்மாநில உள்துறை அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை பாட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் தேஷ்முக்கை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.

மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆர்.ஆர்.பாட்டீல், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். டெல்லியில் நடந்த இக்கட்சிக் கூட்டத்தில் பாட்டீலை ராஜினாமா செய்ய கேட்டுக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து கட்சித் தலைவர் சரத்பவார், பாட்டீலை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார். இதையடுத்தே ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார் பாட்டீல்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் மக்களை மீட்கும் முயற்சியில் உயிரைப் பணயம் வைத்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, செய்தியாளர்களிடம் பேசிய பாட்டீல், இது சாதாரண சம்பவம்தான், பெரிய விஷயமல்ல என்று முட்டாள்தனமாக உளறினார் என்பது நினைவிருக்கலாம்.

தேஷ்முக்கும் விலகினார்

இதைத் தொடர்ந்து முதல்வர் தேஷ்முக்கும் விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி தேஷ்முக்கும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு அவர் அனுப்பி விட்டார். இன்னும் 48 மணி நேரத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

செளகான் அல்லது ஷிண்டே

தேஷ்முக்குக்குப் பதில் மத்திய அமைச்சர் பிருத்வி ராஜ் செளகான் அல்லது ஏற்கனவே முதல்வராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரில் ஒருவர் முதல்வர் பதவிக்கு அமர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்க சொல்லி ஓலமிடும் தெருநாய்!!

மும்பாயைச் சொல்லி யுத்தம் கவியுமா? மும்பாயில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து,பார்ப்பனியப் பண்டாரங்கள் பதைபதைத்துப் பாரதத்தின் படைகளிடம்-இராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைக்கக்கோருவதும் அல்லது முஸ்லீம்களை குஜராத்தில் நரவேட்டையாடிய மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்கச் சொல்வதிலிருந்து நாம் பார்ப்பனியத்தின் பக்கச் சார்பைக் கணிக்கமுடியும்.இந்தியத் தேசவிரோதப் பார்ப்பனியம் இந்தியத் தேசத்தை அந்நியச் சக்திகளிடம் கையளித்து, ஆரிய நாமத்தை இந்தியமக்களுக்குப் போடுவதற்குப் பெயர்"இந்திய-பாராத தேச நலம்"என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.இந்தத் தேச விரோதப் பார்ப்பனிய மற்றும் பனியா நலன்களின்பின்னே கைகோர்த்திருக்கும் அந்நியத் தேசங்களினது அரசியல் இலக்கு என்ன?அது குறித்து எவர்-எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதிலிருந்தே இந்தியப் பிராந்தியத்தில் சமாதானத்துக்கான முன்னெடுப்பு அமையும்.இது குறித்துப் புரிய முனைவோம்.









"பயங்கரவாதத்தின்" இன்னொரு முகத்தை நாம் மிக மெலினப்படுத்தப்பட்ட மொழிவுகளால் உய்துணர முடியாது! இதைப் புரிக முதலில்-புரிக!இந்தத் தருணத்தில் இந்தியாவின்மீது கவிந்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கத்தின் அரசியல் மோசடிகள் மிகவும் கெடுதியானவொரு சூழலை முழுமொத்த இந்திய உழைக்கும் வர்க்கத்துக்கு வழங்கப் போகிறது.கடந்தபல நூற்றாண்டுகளாக இந்தியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கங்கள் காலனித்துவக்காலத்தில்கூட அந்நியர்களைத் தமது ஏஜமானர்களாக்கி, முழுமொத்த இந்தியாவையும் சுரண்டிக் கொழுத்தார்கள்.அவர்களில் மிக முக்கியமான டாட்டா போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் அன்று, நிபந்தனையற்ற உதவிகளை காந்திக்கு வழங்கிப் போலிச் சுதந்திரத்துக்குப் பின்பான இந்தியாவைத் தமது காலடிக்குள் வைத்துச் சுரண்டிக் கொழுத்தார்கள்.இது,இந்தியப் போலித் தேசியத்துள் மறைக்கப்பட்ட வரலாறு.இதைக் காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காரன் கோட்சேயின் மொழியில் நாம் இனம் காணமுடியும்.இந்தியாவின் மிக முக்கியமான கல்வியாளரும் சமூகவியலாளருமான திரு.அஸீஸ் நந்தியைக் கற்றவர்களுக்கு இதுள் சந்தேகம் வரமுடியாது.





இன்றும், இதே கதையோடு தலைமுறை கடந்த "டாடட்டா"நிறுவன அதிபர் திருவாளர் இராற்றான் டாடா தனது தாஜ்மால் கோட்டலின் சிதைவுகளுக்கு மத்தியில் ஆத்திரத்தோடு இந்தியப் பாதுகாப்புக்குறித்துத் தமது எஜமானர்களின் தொலைக்காட்சிச் சேவையான சி.என்.என்.க்குப் பதிலளிக்கையில், இந்தியப் பாதுகாப்புக்குறித்து கேள்வி எழுப்புகிறார்.தமது கோட்டலுக்குப் பாதுகாப்பு வழங்குவதிலுள்ள குறைபாடுகளைக்குறித்து மூச்சுவிடும் இந்தக் களவாணிப்பயல் மோடியின் தலைமையில் அழித்தொழிக்கப்பட்ட அப்பாவி முஸ்லீங்கள் மூவாயிரம் பேர்கள் குறித்தோ, அவர்களது வாழ்வாதாரங்களின் சிதைப்புக் குறித்தோ மூச்சு விடவில்லை அன்று!இப்போது இத்தகைய துரோகிகளின் மூச்சுத் திணறல் தமது எஜமானர்களின்(அமெரிக்க-மேற்குலக) நாடுகளினது பொருளாதார இருப்போடு சம்பந்தப்படுகிறது.மும்பையில் நடந்தேறிய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவினதும் பாகிஸ்த்தானினதும் அரசியல் நடாத்தையில் பல மாற்றங்களை வேண்டி, உலகம் எதிர்பார்க்கிறது.அதற்கேற்ற சதிவேலைகளை உருவாக்கியவர்கள் மும்பாயில் நடந்தேற்றிய ஒரு நாடகம் பல நூறு மக்களைப் பலியெடுத்துள்ளது.இதன் உண்மை மிக விரைவாக அம்பலத்துக்கு வரும்-வரவேண்டும்!பாகிஸ்த்தானும்,இந்தியாவும் போருக்குச் செல்வதை உலகம் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிடக்கிறது.இதற்கு மும்பாயில் நடத்திமுடிக்கப்பட்ட தாக்குதல் வழிவகுக்குமென அவர்கள் ஏலவே திட்டமிட்டார்கள்.அது அவர்களது பொருளாதார நலனுக்குமட்டுமல்ல,இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதாரத்தைத் திட்டமிட்டுச் சிதைப்பதற்கும் இதுவே அவர்களது இறுதி முடிவாகவும் இருக்கிறது.மேற்குலகம் திட்டமிட்டபடி இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தானும் அதனால் வளர்த்தெடுக்கப்படும் காஸ்மீரிய விடுதலை கோரும் அமைப்பான Jaish-i-Mohammed மற்றும் Lashkar-i-Toiba அடிப்படைவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாகச் சொல்லும் கருத்துகளுக்குள் தமது பொருளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் ஆயுதத் தளபாடவுற்பத்திச் சாலைகளுக்கான புதிய ஓப்பந்தங்கள் குறித்த நோக்கு இருக்கிறது என்பதை நாம் இனம் காணவேண்டும்

அமெரிக்க-ஐரோப்பியப் பங்குச் சந்தைகளில் தமது பெரும் மூலதனத்தை இழந்த இத்தேசங்களின் ஆளும் வர்க்கங்களுக்கு மிக அவசியமாக ஒரு பாரிய யுத்தம் தேவையாக இருக்கிறது.யுத்தங்களில் அழிக்கப்படும் இராணுவத் தளபாடங்களால் ஆயுத உற்பத்தி தொடர்ந்து மேல் நிலைக்கு வரும்போது, அத்தகைய தொழிலில் முதலீடு செய்த இந்த ஆளும் வர்க்கம் ஓரளவாவது அழிந்த மூலதனத்தை; மிக விரைவாகத் திரட்ட முடியும்.இது,பொருளாதாரத்தின் அரிச்சுவடியாகத் திருவாளர்.கெய்னிஸ் குறித்துரைப்பதிலிருந்து நாம் விளங்க முடியும்.நவ லிபரல்களின் பொருளாதார இலக்குள் யுத்தம் மிக அவசியமானது.இதனால் அவர்கள் செய்த பற்பல யுத்தங்களை நாம் வரலாற்றில் கண்டோம்.

இன்று,மேற்குலகப் பொருளாதாரச் சரிவைக்குறித்து யுத்தமொன்றை நேரடியாகச் செய்வதற்கு மேற்குலக நாடுகளின் மக்கள் தடையாக இருக்கிறார்கள்.அதேபோன்று, அமெரிக்கா இருக்கும் பொருளாதாரச் சூழலில் அது இன்னொரு யுத்தத்தில் ஈடுபட்டுத் தமது எஜமானர்களைக் காக்கும் நிலையில் இல்லை!இதன் தாக்கம் மிகவிரைவாக மூன்றாந்தரப்பால் யுத்தம் நடாத்தப்பட்டுத் தமது ஆயுத உற்பத்தியால் வளங்களைப் பெருக்குவதற்கு ஏதாவதொரு இழிச்சிவாய்த் தேசங்கள் அவசியமாக இனம் காணப்பட்டது.அங்கே,மிகப் பலமான முரண்பாடுகளைக் கொண்ட யுத்தமுனைப்புத் தேசங்களாக இருப்பவை தென்கிழக்காசியாவில் இந்தியாவும்,பாகிஸ்த்தானுமாகவே இனம் காணப்படுகிறது.இதற்குப் பல தசாப்தங்களாக இந்துமதப் பரிவாரங்கள் முகாந்திரம் அமைத்துள்ளார்கள் கூட்டாக!

இவ்விரண்டு தேசங்களினதும் முரண்பாடுகள் வெறுமனவே பொருளாதார இலக்குகளாக நீர்த்துப்போவதைத் தடுத்து, அவற்றுக்கு "இந்து-முஸ்லீம்"எனும் மிகப் பெரிய மத முரண்பாடு உருவகப்படுத்தி அடுத்த பல தசாப்தத்துக்கு அதையே யுத்தமாக நடந்தேற்றுவதற்கு அவசியமான தத்துவார்த்த அடித்தளதைக் கோரிக் கொள்கிறது மேற்குலகமும் அமெரிக்காவும்.இது மிக அவசியமான அரசியற் சூழ்ச்சியோடு அடுத்த தசாப்த வியூகமாக அமெரிக்க-மேற்குலக அரசியல்-பொருளாதாரச் சூழலில் விரிகிறதென்பதை மூன்றாம் உலகத்தவர்களின் அரசியல் புரிந்துகொள்வது மிக அவசியமானது.

அண்மைக் கிழக்குத் தேசங்களின் மூலதன இருப்பினது வளப் பிரிப்புப் போட்டியானது மேற்குலகத்தோடு மிகக்கெடுதியான பகை முரண்பாட்டைக் கொண்ட இஸ்லாமிய அடிப்படை வாதமாக முன்னே தள்ளுகிறது.இதனால்,மூலதனத்தைத் தொடர்ந்து கையகப்படுத்தும் அரசியல் வியூகமானது மேற்குலகத்தின் முற்றத்துக்கு இஸ்லாமியக் குண்டுதாரிகளைக் கையோடு கூட்டிவருகிறது.இது தமது தேசத்தின் உள்நாட்டு அரசியலில் பாரிய பின்னடைவுகளை இத்தேசங்களுக்குள் ஏற்படுத்திவருகிறது. இப்போது,இந்த இஸ்லாமியக் குண்டுகளை இந்தியாவை நோக்கித் திசை திருப்பிவிடும்போது,மிகவும் சாதகமான பொருளாதார வளர்ச்சியை மேற்குலக மற்றும் அமெரிக்கா மூலதனம் எட்டிவிடும்.

ஈராக் யுத்தத்துக்குப் பின்னான அரசியல்-பொருளாதார மற்றும் உள் நாட்டுப் பாதுகாப்புச் சூழல் மிகவும் கெடுதியாக மேற்குலகைப் பாதிக்கிறது.என்றுமில்லாதவாறு பெரும் பாதுகாப்புச் செலவீனங்களும் பொருளாதார நெருக்கடிகளையும் இத்தேசங்கள் சந்திக்கும்போது,இந்தியா மற்றும் சீனா போன்ற தேசங்கள் மிக இலகுவாக உலகத்தில் தமது சந்தைகளை வரிவுப்படுத்திப் பொருளாதார ஸ்த்திரத்தைக்கொண்டியங்குவது சகிக்கமுடியாத அச்சத்தை இந்தத் தேசங்களுக்கு ஏற்படுத்தியதைக் கடந்தகால மேற்குலகத் தகவல் மற்றும் ஊடகங்களில் பயிற்சியுடையவர்கள் அறிந்திருக்க முடியும்.

இன்று,"கிறிஸ்த்துவ-இஸ்லாம்" பகை முரண்பாட்டைத் திசை திருப்பி "இந்து-இஸ்லாம்" பகை முரண்பாடாக்கிய பெருமைக்கு மேற்குலகத்தோடு சேர்ந்து-கள்ளக்கூட்டுவைத்து இயங்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்திய மக்களின் எதிரிகளுக்கே சேரும்.

இந்தப் பார்ப்பனிய-பனியாச் சகதிகள் பாரத தேசத்தின் பாதுகாப்பு என்று கூலிக்குக் குரல் கொடுத்துப் பாகிஸ்த்தானுக்கும், இந்தியாவுக்குமானவொரு யுத்தத்தை மேற்குலகோடிணைந்து உருவாக்க முனையுந்தருணங்கள் தென்படுகின்றன.இங்ஙனம் யுத்தம் மேல் நிலைக்கெழுந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை யுத்தத்துக்குள் கொட்டித் தமது மக்களில் பலரைப் பலியாக்கும்.இதனால் தேசம் தனது பொருளாதார ஸ்த்திரத்தை இழந்து,அனைத்து வளங்களையும் மேற்குலக ஆயுத உற்பத்தியாளர்களிடம் தாரவார்த்துவிடும்.இதுவே இன்றைய மேற்குலக-அமெரிக்க அரசியல்-பொருளியல் வியூகமாக எதிர்காலத்து அரசியல் இலாபங்களையும் அதனூடாகச் சந்தை விரிவாக்கத்தையும் தக்கவைக்க முனைகிறது.

இதையெல்லாம் ஒருங்கே நிறைவேற்றத் தகுந்த மாதிரிகளை உருவாக்கத் தமிழ்நாட்டுப் பார்ப்பனியக்கூட்டமும் தம்மாலான முயற்சியல் கூக்குரலிடுகிறது.அதில் ஒன்றுதாம் யூதர்களிடம் ஆலோசனை மற்றும் இந்திய இராணுவத்திடம்-மோடியிடம் ஆட்சியை ஒப்படை என்று ஓலமிடுகிறது.இத்தகையத் தெரு நாய்கள் இந்தியத் தேசத்தையும்,இந்திய உழைப்பாளர்களையும் அந்நியத் தேசங்களுக்குக் காட்டிக் கொடுத்து, கொலை செய்து வருகிறது.இதன் ஆரம்பம் மும்பையில் தொடரவில்லை.அது, ஏலவே மோடி தலைமையில் அயோத்திக்கான கொலைகளாக நடந்தேறியது.

அந்நிய ஆர்வங்களுக்கும் அமெரிக்க-மேற்குலக உளவுப்படைகளுக்கும் ஏஜென்டுக்களாக மாறியுள்ள இந்தப் பார்ப்பனியத்தை(சுப்பிரமணியசுவாமி மற்றும் சோ,சிதம்பரம் போன்றவர்களை மனதில் நிறுத்தவும்) வேரோடு சாய்பதற்கு மேற்குலகமே முட்டுக்கட்டையாக இருக்கும்.ஏனெனில், அடுத்தகட்ட யுத்த முனைப்பும்,பகை முரண்பாடும் மையங்கொள்வது இந்தியப் பிராந்தியத்தில் என்பது முடிந்த முடிவாகும்.அது,"இந்து-இஸ்லாம்"மதவாத யுத்தமாக உலகம் தகவமைக்கிறது!

இது குறித்து,இந்திய வம்சாவழியாகிய ஒவ்வொரு மனிதரும் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.பாப்பனிய மற்றும் மேற்குலக உறவுகளை அம்பலப்படுத்தி,இவர்களைத் தோற்கடிக்காமால் தென்கிழக்காசியப் பிராந்தியத்தை சமாதான பூமியாக்கமுடியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.11.2008
நன்றி : அகதி