Thursday, November 27, 2008

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம்…

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பொயரால் துவங்குகின்றேன்.


1. எல்லாப் புகழும் அல்லாஹவுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.

2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

3. தீர்ப்பு நாளின் அதிபதி.

4. (எனவே) உன்னையே வணங்குகின்றோம். உன்னிடமே உதவியும் தேடுகின்றோம்.

5. எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக.

6, 7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.

- அல் குர்ஆன் - 1: 1 - 7

No comments: