Wednesday, June 24, 2009

இதுதான் சர்கோசி கூறும் பெண்ணுரிமை....?

நேற்று முன்தினம் பிரான்ஸ் அதிபர் சர்கோசி, பர்தா என்பது பெண்ணடிமைத்தனம் என்று விமர்சித்திருந்தார். அவரது இப்பேச்சு பரவலாக முஸ்லிம்களின் மத்தியில் எதிர்ப்பை விதைத்திருக்கும் நிலையில், பர்தா என்பது ஒரு குறிப்பிட்ட வகை ஆடையை குறிப்பதல்ல. மாறாக பெண்ணின் முகம் முன் கை நீங்கலாக, ஏனைய பகுதிகளை அந்நிய ஆடவனின் பார்வையிலிருந்து மறைத்துக்கொள்ளும் வகையில் அணியும் எவ்வகை ஆடையும் பர்தாதான் என்பதை பல ஆயிரம் முறை விளக்கிய பின்னும் மேற்க்கத்திய உலகும், சில முற்போக்கு[?] வியாதிகளும் அவ்வப்போது தங்களின் இஸ்லாமிய அரிப்பை தீர்ப்பதற்காக பர்தாவை வம்புக்கு இழுப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.

அந்த வரிசையில் சர்கோசியும் தன்பங்கிற்கு இஸ்லாமிய எதிர்ப்பை பர்தாவை பற்றிய விமர்சனம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். பர்தாவை பெண்ணடிமைத்தனம் என்ற சர்கோசி,பெண்களுக்கு எது சுதந்திரம் என்பதை தன் மனைவியின் ஆடை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.[பார்க்க படம் ]
கிராமங்களில் குளங்களில் குளிக்கும் பெண்களில் சிலர் தங்களின் சேலை, ஜாக்கெட்டுகளை அவிழ்த்துவிட்டு பாவாடையை மார்பை மறைக்கும் அளவுக்கு ஏற்றிக்கட்டிக்கொண்டு குளிப்பார்கள். அதுபோன்றதொரு ஆடையைத்தான் சர்கோசியின் மனைவி அணிந்திருக்கிறார். அதுவும் அந்நிய நாட்டு மன்னர் ஒருவரின் வரவேற்பு நிகழ்ச்சியில். இவ்வகை ஆடை அணிவது சர்கோசியின் மனைவியின் உரிமை. அதை நாம் குறை கூற மாட்டோம். அதே நேரத்தில், பர்தாவை விரும்பி அணியும் பெண்களெல்லாம் அடிமைத்தளையில் கட்டுண்டவர்கள் என்ற ரீதியில் பேசும் சர்கோசி, இதுபோன்ற ஆடை தான் பெண்களின் சுதந்திரம் என்று கருதுகிறார் போலும்.

அது சரி! ' எல்லோரும் நிர்வாணமாக திரியும் ஊரில் ஒருவன் உள்ளாடை அணிந்து வந்தால் அவனை கண்டு கைகொட்டி சிரிப்பார்கள்' என்ற முதுமொழிக்கேற்ப, முக்கால் நிர்வாணமாக அலையும் மேற்க்கத்திய உலகத்திற்கு கணவனைத்தவிர மற்றவர் பார்வையிலிருந்து தற்காத்து கொள்ளும் கவச உடையான பர்தா அணிபவர்களைப்பார்த்தால் இலப்பமாகத்தான் தோன்றும்.

படம் நன்றி;தினத்தந்தி.

No comments: