Sunday, July 18, 2010

பெற்ற மகனுடன் செக்ஸ் உறவு கொண்ட அமெரிக்க தாய் கைது.

நியூயார்க்: பெற்ற மகனுடனேயே செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 36 வயது அமெரிக்கப்
பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்தவர் அய்மி ஸ்வோர்ட். இவருக்கு தற்போது வயது 36 ஆகிறது. இவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பிறந்தவுடனேயே தத்து கொடுத்து விட்டார் அய்மி. இந்த நிலையில் சிறுவனுக்கு 14 வயதான நிலையில் அவனைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்துக் கொண்டார்.

தற்போது 16 வயதாகும் அச்சிறுவனை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தவறாகப்
பயன்படுத்தியதாக அய்மி மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிறந்தவுடன் தத்து கொடுக்கப்பட்ட தனது மகனை 14 வயது பையனாக அய்மி பார்த்தபோது
மகன்-தாய் உணர்வுகளை அய்மி வெளிப்படுத்தவில்லை. மாறாக, ஒரு பாய் பிரண்டை
பார்க்கும் கேர்ள் பிரண்டின் உணர்வுகள்தான் அவரிடம் ஏற்பட்டதாக அய்மியின்
வழக்கறிஞர் மிச்சல் ரிபிட்வர் கூறியுள்ளார்.

இந்த உணர்வு காரணமாக கடந்த 2 வருடங்களாக தனது மகனுடனேயே செக்ஸ் உறவு வைத்து வந்துள்ளார் அய்மி. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அய்மிக்கு மன நல ஆலோசனை வழங்கப்படவுள்ளது. அய்மிக்கு 9 முதல் 30 வருடங்கள் வரை தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது.