Tuesday, January 13, 2009

குவைத்தில் மாபெரும் சமூக நீதி மாநாடு



குவைத்தில் ஜனவரி 1, 2009 அன்று இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (ஐழுஊ) சார்பாக சமூக நீதி கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு லக்கி பிரிண்டர்ஸ் நிறுவன உரிமையாளர் ஏ. சுலைமான் பாட்சா தலைமை தாங்கி னார். மௌலவி நசீர் அஹமது ஜமாலி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஐ.ஜி.சி. மாணவர் ஜாஸிம் அப்துல் லத்தீஃப் “சமூகப் பணியும் இஸ்லாத்தின் ஒரு முக்கியக் கடமை’’ என்ற அர்த்தம் தரக்கூடிய வசனங்களை ஓதினார். சகோ. நாகூர் சுல்தான் வரவேற்புரை ஆற்றினார். தமுமுக மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, திராவிட இயக்க தமிழர் பேரவை செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.



சுப.வீ அவர்கள் தமிழ்நாட்டில் பாஸிஸ பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்றார். சகோ. தமிமுன் அன்சாரி தமது உரையில், “தமிழ்நாட்டில் இன்று ஒரு மாபெரும் சமுதாய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. அத்தகைய எழுச்சி யில் குவைத் தமிழ் சமூகமும் பங்கு கொள்ள வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார். இந்த எழுச்சி 1995ஆம் ஆண்டு தொடங்கி 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு அரசியல் இயக்கமாக மாற இருப்பதைச் சுட்டிக் காட்டினார். மேலும் பேராசிரியர் தாஜுதீன், தமிழர் சமூக நீதி பேரவை தமிழ் நாடான் ஆகியோரும் உரை நிகழ்த்தினார்கள்.


குவைத் தட்பவெட்ப நிலை திடீரென கடுமை யாக மாறிய போதும் மக்கள் திரளாக வந்திருந்தது ஒரு புதிய சமூக எழுச்சி யாக இருந்தது. தலைவர் லால்குடி இக்பால் அனைவருக்கும் நன்றி கூறினார்.


ஜனவரி 2, 2009 அன்று தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம், குவைத் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட “தேசம் நாமே என்போம்’’ என்ற சமூக நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடை பெற்றது. ஐ.ஜி.சி. மாணவர் ஜாஸிம் அப்துல் லத்தீஃப் சூரா இஹ்லாஸ் ஓதி, ஏகத்து வத்தைக் கூற, நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. தமிழ் முஸ்லிம் கலாச் சாரப் பேரவையின் (கூஆஊஹ) முன்னாள் தலைவரும், பிமா (குநனநசயவiடிn டிக ஐனேயைn ஆரளடiஅ ஹளளடிஉயைவiடிளே) என்ற அமைப்பின் முன்னாள் செயலாளருமான சகோ. டானா முஹம்மது இக்பால் தலைமையில் தமுமுக - குவைத்தின் செயலாளர், பொறியாளர் ஷாநவாஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.


தமுமுக குவைத் மண்டல பத்திரிகை செயலாளர் சகோ. பெருங்களூர் முஜிபுர் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார். சகோ. டானா இக்பால் பாலஸ்தீனத்தைப் பற்றியும், இந்திய முஸ்லிம்களின் இன் றைய அவல நிலை பற்றியும் எடுத்துச் சொன்னார்கள். “நமது தேசம், நாமே காப்போம்’’ என்ற தலைப்பில் பேராசிரியர் சுபவீரபாண்டியன் உரையாற்றினார். “வேண்டும் மறுமலர்ச்சி’’ என்ற தலைப் பில் தமிமுன் அன்சாரி உரையாற்றினார்.

தமிமுன் அன்சாரியின் பாலஸ்தீனப் படுகொலைகளைப் பற்றிய பேச்சு அனை வரது சிந்தனையையும் தூண்டும் வித மாக அமைந்தது. இறுதியில் தமுமுகவின் செயல்பாடுகள், பணிகள், எதிர்காலத் திட்டங்களைப் பற்றிய கேள்விகளுக்கு மிக நேர்த்தியான பதில்களைக் கூறி அனைவரது பாராட்டுதலையும் பெற்றார்.


குவைத்தில் கடந்த நான்கு வருடத் தில் தமிழக முஸ்லிம்களால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் பங்கு கொண்ட நிகழ்ச்சியாக இது அமைந்தி ருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நந்திகிராம் இடைத்தேர்தலில் படுதோல்வி:இடதுசாரிகளுக்கு இது ஒரு பாடம்!


நந்திகிராம் இடைத்தேர்தலில் படுதோல்வி:
இடதுசாரிகளுக்கு இது ஒரு பாடம்!

சர்ஜுன்

மார்க்சிஸ்டுகள் நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தோல் வியை சந்தித்திருக்கிறது. தேர்தல்களில் வெற்றி தோல்வி சகஜம், எனினும் மார்க்சிஸ்டுகளின் கோட்டையான மேற்கு வங்காளத்தில் தற்போதைய அரசியல் சொல்லிக் கொள்ளும் படியாக எந்தவித வளர்ச்சியும் இல்லாத திரிணா மூல் காங்கிரஸ் கட்சியிடம் இடதுசாரி கள் தோல்வி அடைந்திருப்பது ஒரு அரசியல் அவலம் என்பதை இடது சாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங் கிரஸ் கட்சி அங்கு தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை 39 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக் கிறது.


நந்திகிராம் என்ற பகுதியைப் பற்றி வாசகர்களுக்கு அதிகம் விளக்கத் தேவையில்லை. ஏனெனில் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக நந்திகிராமில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்து வதற்காக அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தியது மாநில அரசு. தங்களது வாழ்வாதாரமாக விளங்கும் விளை நிலங்களை விட்டுத்தர மாட் டோம் என நந்திகிராமில் வாழும் அந்த பாமர மக்கள் போராடினர். ஏழைப் பாட்டாளிகளுக்காகப் பாடுபடுவதற் காகவே இயக்கம் கண்டோம் எனக் கூறியவர்கள் உரிமை காக்க போராடிய மக்களை மூர்க்கத்தனமாக நசுக்கினார் கள். ஆளும் கட்சியாக இருப்பதால் காவல்துறையினரை வைத்து காட்டுத் தனமாக நந்திகிராம் மக்களைத் தாக்கினார்கள். இதில் பல உயிர்கள் பலியாயின.


காவல்துறையினர் பொதுமக்களைத் தாக்குவதா? பொறுக்க முடியுமா காம்ரேடுகளுக்கு? காவல்துறையினர் தாக்க பார்த்துக் கொண்டிருப்பதா? பொறுமை இழந்த கம்யூனிஸ்ட் தொண் டர்களும் அப்பாவி மக்களைத் தாக்கினர்.


தாக்கப்படுபவர்கள் பல்வேறு முனை களிலும் வஞ்சிக்கப்படும் அப்பாவி மக்களாயிற்றே? பரிதாபத்துக்குரிய முஸ்லிம் சமூகத்தினராயிற்றே என அவர்கள் பார்க்கவில்லை. அவர்கள் தான் மதச்சார்பின்மை பேசும் மாவீரர் களாயிற்றே. பாதிக்கப்பட்டவர்களை மேலும் மேலும் தாக்கும் வேலையைத் தொடர்ந்து செய்தார்கள். ஏழைப் பாட் டாளிகளின் கண்ணீருக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. கடந்த மே மாதம் நந்திகிராமில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 5ஆம் தேதி 2009ஆம் ஆண்டு நந்திகிராமில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தனது கூட்டணிக் கட்சியான சி.பி.ஐ.யிடம் தொகுதியை ஒதுக்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. நந்திகிராமில் மார்க் சிஸ்ட்களால் நிகழ்த்தப்பட்ட அரசு வன்முறையில் கொடூரமாக கொல்லப் பட்ட ஷேக் இம்தாதுல் என்ற ஒரு விவசாய இளைஞனின் தாயாரிடம் இடது சாரிகள் தோல்வியைத் தழுவினார்கள்.


எந்தக் காவல்துறையின் அராஜகத்தை நம்பி அவர்கள் நந்திகிராமில் வெறியாட் டம் போட்டார்களோ, அந்த காவல்துறையின் அராஜகம்தான் அவர்களை படு தோல்வி பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டி ருக்கிறது.


காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவரின் தாயாரையே அந்தத் தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்து இடதுசாரிகளின் நோக்கம் தவறு என்பதை தங்கள் வாக்குச் சீட்டுகளின் மூலம் காட்டினார்கள்.


இதற்கு முன்பு நந்திகிராமின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த முகமது இல்யாஸ் மீதான லஞ்ச ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டதால் பதவி இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பதவி இழந்ததால் நந்திகிராமில் இடைத் தேர்தல் நடைபெற்றது. ஃபெரோஸா பீவியை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பரமானந்த் படுதோல்வியை சந்தித்திருக்கிறார்.


நந்திகிராம் விவகாரத்தில் காம்ரேடு கள் மறந்துபோன கொள்கையை நந்தி கிராம் மக்கள் இந்தத் தேர்தல் முடிவு களின் மூலம் நினைவூட்டியுள்ளார்கள்.


இதில் இடதுசாரிகள் பாடம் கற்றுக் கொள்வார்களா?

thnaks :tmmk.in

Monday, January 12, 2009

போகியை கைவிட்டால் சுற்று சூழல் பாதுகாக்கப்படும்


ஒவ்வொரு மதத்திற்கும் கொண்டாடக்கூடிய பண்டிகைகள் உண்டு. அதை யாரும் குறைகாண முடியாது. அதே நேரத்தில் அந்த பண்டிகைகள் அடுத்தவர்களுக்கு எவ்வகையிலும் பாதிப்பை உண்டாக்கும்வகையில் கொண்டாடப்படக்கூடாது. மனிதன் ஆரோக்கியமாக வாழ மூன்று அடிப்படையான விசயங்கள் தூய்மையானதாக இருக்கவேண்டும்.


அவை; நீர், நிலம், காற்று ஆகும். அந்த காலத்தில் வாழ்ந்த பெரிசுகள் இன்றைக்குள்ள ஆங்கில நோய்கள் ஏதும் தாக்காமல் இறக்கும்வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் எனில், மேற்கண்ட மூன்று விசயங்களில் அவர்கள் தூய்மையை கடைபிடித்தார்கள். ஆனால் நாகரிகத்தின் உச்சத்திற்கு சென்ற நாம் நீரை ரசாயன கழிவுகள் மூலமும், நிலத்தை பிளாஸ்டிக் கழிவுகள் மூலமும், காற்றை வாகன புகைகள், பட்டாசு கொளுத்துதல், போகி கொளுத்துதல் ஆகியவற்றின் மூலமும் மாசுபடுத்தி வருகிறோம்.


வரவுள்ள போகியன்று ' பழையன கழிதலும் - புதியன புகுதலும்' என்ற தத்துவத்தை முன்வைத்து வீட்டில் உள்ள பழைய பொருட்கள் மட்டுமன்றி, வாகன டயர்களை கொளுத்துவதன் மூலம் காற்று பெருமளவு மாசுபடுகிறது. இதுபற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாசு கட்டுப்பாடு வாரியம் மூலமாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் செய்யப்பட்டாலும் போகி கொளுத்துவோர் குறைந்தபாடில்லை.


பழையதை கழிப்பதுதான் போகியின் நோக்கமெனில், அந்த பழையது கூட தேவையுள்ள நிலையில் நம்நாட்டில் எத்தனையோ பேர் உள்ளனர்.' சாமி' படத்தில் பழைய துணிகளை கொளுத்தவந்தவரிடம் இருந்து அதை பெற்று ஏழை சிறுவர்களுக்கு வழங்குவார் விவேக்.படத்தில் மட்டுமல்ல.நிஜத்திலும் நாம் தூக்கிவீசும் எத்தனையோ பொருட்கள் தேவையுடையோர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எனவே அவர்களை கண்டறிந்து நமக்கு அவசியமில்லாத பொருட்களை வழங்கினால் அவர்கள் சந்தோஷப்படுவர். அல்லது அதற்கு சம்பிரதாயம் இடம்கொடுக்காது எனில், பழைய பொருட்களை கொளுத்தாமல் குப்பைத்தொட்டியிலாவது போடலாம். இதன்மூலம் காற்று மாசுபடாமல் தடுக்கப்படும்.

போகி கொண்டாடுபவர்கள் இந்த கருத்தை மதக்கன்னோட்டத்தோடு பார்க்காமல், சமூக அக்கறையோடு சிந்தித்து போகியை கைவிட்டால் சுற்று சூழல் பாதுகாக்கப்படும். நாமும் ஆரோக்கியமாக வாழலாம்.
thanks to : நிழல்களும் நிஜங்களும்

முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகள் போடுவதைத் தவிர்க்க வேண்டும்

த.மு.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்



ராமநாதபுரம், ஜன. 10: கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பாக த.மு.மு.க. சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் மத்திய மாவட்டத் தலைவர் எஸ். சலிமுல்லாகான் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்கள் (வடக்கு) சாதிக்பாட்ஷா, சம்சுதீன் சேட் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் தஸ்பீக்அலி வரவேற்றார்.

முஸ்லிம்கள் மீது காவல் துறை பொய் வழக்கு போடுதல், இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்து உண்மையைக் கண்டறிய அரசை வலியுறுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

த.மு.மு.க. அமைப்பின் மாநில பொதுச் செயலர் ஹைதர்அலி கண்டன உரையாற்றினார்.

இதில் மாவட்டப் பொருளாளர் சல்மான், துணைத் தலைவர் கபீர், ஒன்றியச் செயலர் ருகைபு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஹைதர் அலி கூறியது:

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் பெருகி விட்டனர்.

நீதிமன்றத்தில் சில தீர்ப்புகள் கூட நியாயமாக வழங்கப்படுவதில்லை.

அரசியல்வாதிகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் வகையில், மனிதநேய மக்கள் கட்சியைத் தொடங்க உள்ளோம்.

மனிதநேயத்தை வளர்க்கும் வகையில், பழைய இயல்பான உணர்வுகளைக் கொண்டு வரவே கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. முக்கியப் பிரச்னைகளை முதல்வர் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு செல்வதில்லை.

மக்களின் மனநிலையை அறிந்து செயல்படுபவரே சிறந்த அதிகாரி.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரம், காவல்துறை அதிகாரிகள் மனித நேயத்துடனும், சமூக அக்கறையுடனும் செயல்பட வேண்டும்.

முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகள் போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் ஹைதர்அலி.

Sunday, January 11, 2009

சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்



இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று,இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்,இன்ஷா அல்லாஹ்,வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009 ) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில்,ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில்,மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது.(ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.

எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம்.பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM

சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!!!

Saturday, January 10, 2009

ஐ.நா. தீர்மானத்தை அலட்சியப்படுத்தும் அயோக்கிய இஸ்ரேல்!



பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய பயங்கரவாதம் பதினைந்து நாட்களாக தொடர்ந்து வரும் நிலையில், உலக நாடுகளில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது மனிதநேயத்தை விரும்பக்கூடிய மக்கள் அனைவரும் இஸ்ரேலிய தீவிரவாதத்தை கண்டித்து ஆர்பாட்டங்கள் நடத்திவரும் நிலையில், காசாவில் நடந்துவரும் போர் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடந்த விவாதத்தில் அரபு நாடுகளுக்கும்-மேற்கத்திய நாடுகளுக்கும் கடும் வார்த்தைப்போர் நடந்துள்ளது. உறுப்புநாடுகளில் அமேரிக்கா நீங்கலாக ஏனைய நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. அமெரிக்கா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.இறுதியாக கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகிறது.

* காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும்.

*காசா பகுதியிலிருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறப்படவேண்டும்.

*காசா பகுதியில் நிரந்தர போர்நிறுத்தம் ஏற்பட ஆவன செய்யவேண்டும்.

* பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துகள், எரிபொருட்கள் கிடைக்க ஆவன செய்யவேண்டும்.

சட்டமும் கட்டளையும் சாமான்யனைத்தான் காட்டுப்படுத்தும் என்பது உலக அளவில் எழுதப்படாத சட்டமாக உள்ளது. அதற்கு சான்று; அமெரிக்காவும், இஸ்ரேலும்தான். ஈராக்கை ஆக்கிரமிக்கும்போது ஐ.நா.விடம் அமெரிக்கா அனுமதி பெறவில்லை. அதுபோல காசா விசயத்தில் ஐ.நா.வின் மேற்கண்ட தீர்மானத்தை அலட்சியம் செய்துவிட்டு அயோக்கிய இஸ்ரேல் தன்னுடைய தீவிரவாத தாக்குதலை இந்த நிமிடம் வரை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

எங்கள் இறைவனே! மூமீன்களின் பாதுகாவலனே! உனது உதவியை எம்மக்களுக்கு அளித்திடு ரஹ்மானே!

தமிழகமே திரண்டு வரட்டும்


தமிழக மக்கள் அனைவரின் உள்ளங் களிலும் நீங்கா இடம்பெற்று இயங்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 13ஆம் பொதுக்குழு, தீரர்களின் கோட்டையாம் திருச்சி மாநகரில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்று நிறைவுபெற்றிருக்கிறது.


தமிழக மக்களின் சுக துக்கங்களில் பங்குகொண்டு வீரியமுடன் காரிய மாற்றும் தமுமுகவின் பொதுக்குழுவுக்கு அரசியல் வரலாற்றில் சிறப்பிடம் உண்டு எனினும் 2009 ஜனவரி 4ஆம் தேதி திருச்சியில் கூடிய பொதுக்குழுவுக்கும் அதற்கு முந்தைய நாள் கூடிய செயற் குழுவுக்கும் தமிழக அரசியல் வானில் திருப்புமுனைக்குரிய சிறப்பிடம் உண்டு.


அரசியல் அரங்கில் வெற்றி தோல் வியை தீர்மானிக்கும் சக்தியாக தமுமுக உருவான 13 ஆண்டு காலமாக வெற்றி நடை போட்டு வருகிறது.


தமுமுக எனும் சமூக விழிப்புணர்வு இயக்கம் அரசியல், சமூக, மார்க்க தளங்களில் வெற்றித்தடத்தை பதித்தது எனினும் தமிழக மற்றும் இந்திய அரசியல் அரங்கில் ஒரு பெரும் வெற்றி டம் ஒன்று நீடித்தவண்ணம் இருந்தது.


இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அழுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக் கான அரசியல் அமைப்பு தேவை என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு அனைத்து மட்டங் களிலும் பரவி இருந்தது. யாதொரு பலனும் கருதாது, மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் உறக்கம் இல்லாது, கடமையாற்ற தங்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற ஒரு தூய்மையான அரசியல் இயக்கம் வராதா என ஏங்கியதற்கு விடை தரும் விதமாக தமுமுக எனும் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி ஒன்றை தோற்று விப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.


தமுமுகவின் அரசியல் பிரிவிற்கான பிரகடனம் வெற்றிடத்தை நிரப்புவதற் கான முன்னோட்டமாக அமைந்திருக்கிறது.


வெற்றிடத்தை நிரப்புவது என்பது தமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காக மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற் காகவும் அல்ல, உலகுக்கு ஒரு அரசியல் முன்மாதிரியை உருவாக்கும் விதமாக தமுமுகவின் அரசியல் பிரிவு அரங்கேற இருக்கிறது.


அரசியல் பிரிவு தொடங்குவதற்கு முன்பாக தமுமுக தலைவர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு அந்த ஆய்வுக்குழு தமுமுகவின் உயர்மட்டக் குழுவிடம் தனது பரிந்துரையை வழங்கியது.


'மனிதநேய மக்கள் கட்சி' மக்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர விருக்கிறது இன்ஷாஅல்லாஹ்.


அரசியல் தூய்மையையும், கூர்மை யையும், நேர்மையையும் கடைப்பிடித்து நிலைத்த புகழ்பெற்ற கலிபாக்கள் அபூபக்கர், உமர் (ரலி) ஆகியோரின் ஆட்சி, நிர்வாகத் திறமை கடைக்கோடி குடிமகனுக்கும் சமநீதி வழங்கியது. காந்தியடிகள் கூட கனவு கண்ட ஆட்சி முறை அது. அத்துணை சிறப்பு மிகுந்த ஆட்சியாளர்களின் வழிமுறையைப் பின்பற்றி அரசியல் நெறி பேண தமுமுக வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி (ம.ம.க.) சூளுரைக்கிறது.


அரசியலில் புதிய பாடத்தை இந்த தேசத்துக்கு கற்பித்துத்தர தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சி தயாராக இருக்கிறது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது. இஸ்லாத்தின் அரசியல் கொள்கையென அறிஞர் அல் மவாரிதி கூறியதைப் போல மார்க்கத்தை நெஞ்சில் ஏற்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அரசுகளையும் திறமையாக நிர்வாகம் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு அரசியல் இயக்கத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தவே தமுமுக விரும்புகிறது.


அரசியல் என்பது ஒரு தீமை. அரசியல் வாதி என்பவர் முறைகேடுகளின் மொத்த உருவம் என்ற கற்பிதங்களை உடைத் தெறியும் விதமாக அரசியல்வாதி என்பவர் இறைவனுக்கு நெருக்கமாகி தன்னையும் தனது மக்களையும் தீமையிலிருந்து பாதுகாத்துக் கொள் வார், சிறந்த மக்கள் கூட்டத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கையை தமுமுக வழங்கும் இன்ஷாஅல்லாஹ்.


1995 ஆகஸ்ட் 25ஆம் தேதி தடா என்னும் கொடும் சட்டத்தை எதிர்த்து தமுமுக செறுகளம் கண்டது. அஞ்சிய காகிதப் புலிகள் வாயடைத்து நிற்க, திரளான முஸ்லிம்களின் கூட்டத்துக்கு தலைமை வகித்த தமுமுக அன்றிலிருந்து தமிழக முஸ்லிம்களின் சமுதாயத்தின் முதல் நிலை சக்தியாக விளங்கி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.


உலக பயங்கரவாத இஸ்ரேலின் செயற்கைக்கோள் இந்திய மண்ணில் ஏவப்பட்ட போதும், அப்பாவி முஸ்லிம்களின் மீது பயங்கரவாத பழிசுமத்திய போதும், மது என்ற கொடும் தீமை தலைவிரித்து ஆடும் போதும், கந்து வட்டி கொடுமைகளால் ஏழைப் பாட் டாளி வர்க்கம் வேதனையில் ஆழ்ந்த போதும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை போன்ற உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய பரிந்துரைகள் அரசாங்க பரண் களின் தூசு படிய கிடக்கும் போதும், உழைக்கும் வர்க்கத்தை சுரண்டும் வர்க்கம் ஒன்று ஏய்க்கும் போதும், ஒரு தூய்மையான லி அறிவார்ந்த லி செயல் திறன் படைத்த ஒரு வெகுஜன மக்கள் இயக்கம் ஒன்றுவந்து நம் ஏக்கத்தைத் தீர்க்காதா? நம் கண்ணீரைத் துடைக் காதா? என ஏங்கும் மக்களுக்காக புது யுகம் படைக்க புறப்பட்டிருக்கிறது தமுமுகவின் புதிய அரசியல் பிரிவு.


இந்தியாவை எழுச்சியுடன் கட்ட மைக்க மனிதநேய மக்கள் கட்சி உறுதி ஏற்கிறது. இணைந்து பணியாற்ற மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. புதிய வரலாற்றின் முதல் அத்தியாயம் இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 7 அன்று எழுதப்படவுள்ளது. அதில் இடம்பெற தமிழகமே திரண்டு வரட்டும்.