Saturday, January 10, 2009

ஐ.நா. தீர்மானத்தை அலட்சியப்படுத்தும் அயோக்கிய இஸ்ரேல்!



பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய பயங்கரவாதம் பதினைந்து நாட்களாக தொடர்ந்து வரும் நிலையில், உலக நாடுகளில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது மனிதநேயத்தை விரும்பக்கூடிய மக்கள் அனைவரும் இஸ்ரேலிய தீவிரவாதத்தை கண்டித்து ஆர்பாட்டங்கள் நடத்திவரும் நிலையில், காசாவில் நடந்துவரும் போர் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடந்த விவாதத்தில் அரபு நாடுகளுக்கும்-மேற்கத்திய நாடுகளுக்கும் கடும் வார்த்தைப்போர் நடந்துள்ளது. உறுப்புநாடுகளில் அமேரிக்கா நீங்கலாக ஏனைய நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. அமெரிக்கா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.இறுதியாக கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகிறது.

* காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும்.

*காசா பகுதியிலிருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறப்படவேண்டும்.

*காசா பகுதியில் நிரந்தர போர்நிறுத்தம் ஏற்பட ஆவன செய்யவேண்டும்.

* பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துகள், எரிபொருட்கள் கிடைக்க ஆவன செய்யவேண்டும்.

சட்டமும் கட்டளையும் சாமான்யனைத்தான் காட்டுப்படுத்தும் என்பது உலக அளவில் எழுதப்படாத சட்டமாக உள்ளது. அதற்கு சான்று; அமெரிக்காவும், இஸ்ரேலும்தான். ஈராக்கை ஆக்கிரமிக்கும்போது ஐ.நா.விடம் அமெரிக்கா அனுமதி பெறவில்லை. அதுபோல காசா விசயத்தில் ஐ.நா.வின் மேற்கண்ட தீர்மானத்தை அலட்சியம் செய்துவிட்டு அயோக்கிய இஸ்ரேல் தன்னுடைய தீவிரவாத தாக்குதலை இந்த நிமிடம் வரை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

எங்கள் இறைவனே! மூமீன்களின் பாதுகாவலனே! உனது உதவியை எம்மக்களுக்கு அளித்திடு ரஹ்மானே!

1 comment:

ers said...

விரைவில் துவங்க உள்ள நெல்லைத்தமிழ் இணையத்தின் திரட்டியில் இணையலாமே...
சோதனை திரட்டியில் உங்கள் இடுகையை பதிய...
http://india.nellaitamil.com/