Sunday, January 4, 2009

சிங்கம் இல்லாத ஊரில் நரி நாட்டாமை

அடித்தவனை விட்டுவிட்டு அழுபவனை அரட்டும் அறிவிலி.
அன்பர்களே,
'சிங்கம் இல்லாத ஊரில் நரி நாட்டாமை'என்பதுபோல சிங்கங்கள்[முஸ்லீம் நாடுகள்]உறங்கிகொண்டிருப்பதால் சாயம் பூசிய நரி புஷ் உலக சட்டாம்பிள்ளையாக வலம்வந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீன முஸ்லிம்கள்மீது யூத வந்தேறிகள் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,நேற்று வானொலி ஒன்றில் ஊளையிட்ட[சாரி]பேட்டியளித்த புஷ் பாலஸ்தீனத்தில் இப்போது ஏற்பட்டுள்ள மோதலுக்கும்,ரத்தகலரிக்கும் ஹமாஸ்தான் காரணம் என்று திருவாய் மலர்ந்துள்ளார்.



#ஹாசாபகுதியை கைப்பற்றியதில் இருந்து ஹமாஸ் ஆயிரக்கணக்கான பீரங்கிகளையும்,ராக்கெட்டுகளையும் தயாரித்துள்ளது.#



இராக் மீது ஆக்கிரமிப்பு நடத்த இராக் அதிபயங்கர அணுஆயுதங்கள் வைத்துள்ளதாக வாய்கூசாமல் புளுகிய புஷ் அதேபாணியில் ஹமாஸ் ஆயுதங்களை குவித்துள்ளதாக அலறுகிறார். உண்மையில், பீரங்கிகளும்,ராக்கெட்டுகளும் ஹமாஸிடம் இருந்திருந்தால் உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேல் என்றோ அழிக்கப்பட்டிருக்கும்.



#ஈரானும், சிரியாவும் தூண்டியதால்தான் இஸ்ரேல்மீது ஹாமாஸ் தாக்குதல் தொடுத்தது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பாதுகாப்பு பதில் நடவடிக்கைதான்#



நல்லவேளை! ஈரானும்,சிரியாவும்தான் ஹமாசுக்கு ஆயுதம்கொடுத்து இஸ்ரேலை தாக்கசொன்னது என்று சொல்லாமல்விட்டீரே அதுவரை சந்தோசம். ஹமாசின் தாக்குதலுக்கு பதிலடி என்றுகூறும் புஷ்ஷே!
ஹமாஸ் தாக்குதலில் எந்த அப்பாவி இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டார்கள் எத்துனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் எத்துனை யூதர்களின் வழிபாட்டுத்தலங்கள் தரைமட்டமாக்கப்பட்டது என்று பட்டியலிட தயாரா? பாலஸ்தீன குடியிருப்புகள் மீதும், மஸ்ஜித்மீதும், பச்சிளம் பாலகர்கல்மீதும் தாக்குவதுதான் பதிலடியா? உமக்கு திராணி இருந்தால் உமது கள்ளகுழந்தை இஸ்ரேலை தரைப்படை தாக்குதலுக்கு வரசொல்லுங்கள்.
#மஹ்மூத் அப்பாஸ் ஹமாசை கண்டித்துள்ளார்#



ஒரு காலத்தில் ஹமாசை போல வீரியமாக களமிறங்கி இஸ்ரேலை கதிகலங்கவைத்த யாசிர் அரபாஅத்[அல்லாஹ் அவரை பொருந்திகொள்வானாக] அவர்களை சமாதானம் எனும் வஞ்சக வலைவிரித்து கவுத்தியதுபோல இப்போது மஹ்மூத்அப்பாசை கவுத்துகிறீர்கள். இதை அவர் உணரும் நாள் என்நாளோ?
புஷ்ஷே! தினமும் உதித்துகொண்டிருக்கும் சூரியன் நினைத்ததாம் நமக்கு முடிவென்பதே இல்லை என்று! ஆனால் அதையும் முடித்துவைக்கும் இறைவனை நம்புபவர்கள் நாங்கள்!! எனவே, எமது சொந்தங்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் இஸ்ரேல் பதில்சொல்லும் காலம் விரைவில் வரும் இன்ஷா அல்லாஹ்.
thanks to :நிழல்களும் நிஜங்களும்

No comments: