Monday, January 5, 2009

காசா இஸ்ரேலியர்களின் மயானபூமியாகும்



அன்பர்களே,
ஒருவார வான்வழி தாக்குதலுக்குப்பின் தரைவழி தாக்குதலுக்கு முன்வந்து காசாவிற்குள் யூத வந்தேறிகளின் பீரங்கிகள் நுழைந்துள்ளது. தரைவழி தாக்குதலில் பெரிய இழப்பை சந்திக்கநேரிடும் என்பதால், பீரங்கிகளுக்கு பாதுகாப்பாக இஸ்ரேலிய ஹெலிகாப்டர்களும் ஹமாஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்திவருகிறது.
யூதர்கள் தரைவழி தாக்குதலுக்கு வரக்கூடும் என முன்பே கணித்திருந்த ஹமாஸ் வீரர்கள் பதுங்கு குழிகளை ஏற்படுத்தியும்,கண்ணிவெடிகளை பதித்தும் வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றது. மேலும் இஸ்ரேலிய டாங்கிகள்மீது ஹமாஸ் வீரர்கள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்திவருகின்றனர். முதன்முறையாக இஸ்ரேலிய ராணுவ கோழைகள் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.
மேலும்,அல்-அக்சா வானொலியில் பேட்டியளித்துள்ள ஹமாசின் செய்தி தொடர்பாளர் சகோதரர் இஸ்மாயில் அல் ரத்வான் அவர்கள், இஸ்ரேலிய ரானுவத்தினற்கு காசா மலர்பாதையாக இருக்காது! மயானமாக இருக்கும்!! என அறைகூவல் விடுத்துள்ளார்.
எங்கள் இறைவா! காபிர்களின் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு[முஸ்லிம்களுக்கு]உதவுவாயாக!

thanks To : நிழல்களும் நிஜங்களும்

No comments: