Wednesday, January 14, 2009

'நரமாமிசபட்சினி' நரேந்திரமோடிக்கு உச்சநீதிமன்றம் குட்டு!


மறக்கமுடியுமா?

மோடியின் ஆசீர்வாதத்தோடும்,ஆசியோடும் நடைபெற்ற முஸ்லீம் இனபடுகொலையை!
மாபாவிகள் எம் சகோதரிகளின் மானத்தை பறித்த அந்தநாளை!

எம் சொந்தங்கள் கரிக்கட்டையாக கொளுத்தப்பட்டதை!
வயிற்றில் உள்ள பிஞ்சையும் வயிற்றை கிழித்து கொளுத்திய கொடுமையை! பயங்கரவாதிகள் நாங்கள் தான் செய்தோம் மோடியின் ஆசியோடு செய்தோம் என்று பகிரங்கமாக சொல்லியதை!

தடயங்கள் அழிக்கப்பட்டதை! சாட்சிகள் மிரட்டப்பட்டதை! வழக்குகள் குழியில் புதைக்கப்பட்டதை!

இருப்பினும், உண்மையை ரெம்ப காலம் ஒழிக்கமுடியாது என்ற நியதிக்கேற்ப சில மனிதநேயர்களின் முயற்சியால் புதைக்கப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தோண்டப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைத்துவிடக்கூடாது என்பதிலே ஆரம்பம்முதலே குறியாக இருப்பவர் குஜராத் காவல்துறை தலைவர் பாண்டே என்பவர்.

இதற்கிடையில், இந்தவழக்கில் பாண்டே குறுக்கீடு செய்வதாக கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ - மோடி அரசின் நிருவாகத் திறமையின்மையைக் குறிப்பிட்டுக் கூறினார். குஜராத்தில் நடந்தப்பட்ட கொலைகளும், வன்கொடுமைகளும் இந்திய நாட்டுக்கே அவமானத்தை உண்டாக்கிவிட்டன என்றார். குஜராத்தில் சிறுபான்மையின மக்களுக்கு என்ன கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். அந்தக் கொடுமைகள் இந்திய நாட்டுக்கு அவமானமானவை என்று நீதிபதி குறிப்பிட்டார்.
காவல்துறைத் தலைவரின் தலையீடு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தால் அவரை மாற்றவேண்டும் என நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கப்பட்டது.

ஏற்கனவே,திருவாளர் மோடியை 'ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னனோடு'ஒப்பிட்டு உச்சநீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

தர்மத்தின்[முஸ்லிம்களின்]வாழ்வுதனை சூது[இந்துத்துவாக்கள்]கவ்வும்; மறுபடியும் தர்மம்[முஸ்லிம்கள்]வெல்லும். அன்று இந்த மோடிகள் 'குமுதம்-அரசு' சொன்னதுபோல, இருக்குமிடம் தூக்கு மேடையாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்!

தேங்க்ஸ் டு :நிழல்களும் நிஜங்களும்

No comments: