Saturday, July 25, 2009

மாணவிகளை மயக்கி பேராசிரியர் உல்லாசம்-வீடியோ

ஸ்ரீரங்கம்: திருச்சியில் கல்லூரி மாணவியை மயக்கி செக்ஸ் உறவு வைத்து அதை வீடியோ எடுத்த பேராசிரியர் மீது மனைவி போலீசில் புகார் தந்தார். இதையடுத்து பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பீட்டர் (32) திருச்சியில் ஒரு கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக வேலைப் பார்த்து வந்தார். இவரது மனைவி மரிய மெடில்டா. இவர் தனியார் வங்கியில் பணியாற்றுகிறார்.

ஜேம்ஸ் பீட்டரின் நடத்தை சரியில்லாததால் சில மாதங்களுக்கு முன் கல்லூரி நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கிவிட்டது.

இந் நிலையில் ஜேம்ஸ் பீட்டரின் லேப்-டாப்பில் இருந்த ஒரு வீடியோவைப் பார்த்த மரிய மெடில்டா அதிர்ந்தார். அதில் ஒரு பெண்ணுடன் ஜேம்ஸ் பீட்டர் செக்ஸ் வைத்துக் கொண்டு உல்லாசமாக இருந்த காட்சி இருந்தது.

இதையடுத்து லேப்-டாப்புடன் சென்று ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் மெடில்டா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் பீட்டரிடம் விசாரித்தபோது அவருடன் வீடியோவில் இருந்த பெண், அவர் வேலை பார்த்த கல்லூரியில் படித்த ஒரு மாணவி என்று தெரியவந்தது.

அந்த மாணவிக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவியின் நலன் கருதி, அவரிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர்.

அப்போது ஜேம்ஸ் பீட்டர் தன்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று பானத்தில் மயக்க மருந்து தந்து வலுக்கட்டாயமாக உறவு கொண்டதாக அந்தப் பெண் தெரிவித்தார். மேலும் தனக்குத் தெரியாமலேயே அதை வீடியோவில் ஜேம்ஸ் பீட்டர் பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அந்த மாணவியின் நலன் கருதி அவரது விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.

ஜேம்ஸ் பீட்டரை இதேபோல வேறு எந்த மாணவியையாவது தனது வலையில் வீழ்த்தினாரா என்று விசாரணை நடக்கிறது.

No comments: