Tuesday, March 24, 2009

எது தேசிய அவமானம் ...சிதம்பரம்

ரோம் பற்றி எரியும்போது பிடில் வாசித்தான் நீரோ மன்னன்' என்ற செய்தியை நாம் அறிந்து வைத்துள்ளோம். அதுபோல் நாடாளுமன்றதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நாடு தகித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகளை தள்ளிவைக்குமாறு மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று ஐபிஎல் நிர்வாகம் மாற்றி அறிவித்த தேதிகள் அனைத்தும் தேர்தல் காலமாக இருப்பதால், மே 16. க்கு பின்தான் நடத்த அனுமதிக்கமுடியும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியதையடுத்து, ஐபிஎல் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்த முடிவு செய்தது கிரிக்கெட் வாரியம்.

ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்தமுடியாதது பற்றி கருத்து தெரிவித்த 'நவீன நீரோ மன்னனும்', தேசப்பற்றை[?] ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்தவருமான திருவாளர் மோடி,
ஐபிஎல் விளையாட்டை இந்தியாவில் நடத்த முடியாதபடி மத்திய அரசு செய்து விட்டது. இது தேசிய அவமானம் என்றுகூறியுள்ளார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் திரு ப.சிதம்பரம்,
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பாதுகாப்புடன் நடத்த முடியும். ஆனால், முழு அளவிலான பாதுகாப்பை மே 16ம் தேதிக்குப் பிறகுதான் தர முடியும்.உண்மையில், 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம்தான் தேசிய அவமானம்.என்று மோடியை கடுமையாக சாடினார்.

சிதம்பரம் இவ்வாறு சாடுவதால் மோடி போன்ற இந்துத்துவாக்களுக்கு எவ்வித ரோஷமும் வந்துவிடப்போவதில்லை.ஏனெனில், குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நடத்தப்பட்டபோது, 'நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளிநாடு போவேன் என்று ஒப்பாரி வைத்துவிட்டு, அடுத்ததேர்தலிலும், பாசிச மோடியை களமிறக்கிய இந்துத்துவாக்களுக்கு ஏது வெட்கம்! சிதம்பரம் தன் கூற்றில் உண்மையாளராக இருந்தால், குஜராத்தில் மோடியின் ஆட்சியை கலைத்துவிட்டு அங்கே ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவதோடு, தேசிய அவமானத்தை ஏற்படுத்திய மோடி வகையறாக்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டிக்கவேண்டும். அதுதான் இந்தியாவின் நலனுக்கு சிதம்பரம் செய்யும் அளப்பரிய பணியாகும்.

No comments: