Sunday, March 29, 2009

உ.பி., ஆசிரமத்தில் இளம்பெண் மர்மச்சாவு!


முன்னாள் எம்.பி யும் உ.பி மாநில அளவிலான ஒரு கட்சியின் தலைவருமான சட்சிதானந்த் ஹரி சாக்ஷி மஹராஜின் ஆசிரமத்தில் உள்ளூர் பள்ளி ஆசிரியை லட்சுமி (24) மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.


இறந்த அப்பெண்ணின் உடலில் நிறைய காயங்கள் காணப்படுகின்றன என்றும், அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், ஓடிப்போன ஆசிரமத்தின் பாதுகாவலரைத் தேடி வருவதாகவும் ஷியாம் நகர் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் தெரிவித்தார்.


பாஜக விலிருந்து தன் அரசியல் வாழ்வைத் துவக்கிய சச்சிதானந்த், சமாஜ்வாதி கட்சிக்குத் தாவி, பின்னர் கல்யான்சிங் துவக்கிய ராஷ்டிரிய கிராந்தி கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் தலைவராக உள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக சட்சிதானந்த் கூறியிருந்தார். இவ்வேளையில் இந்த கொலை நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments: