Thursday, March 26, 2009

மகளை கற்பழித்த பிஜேபி தலைவர் கைது (

அமிர்தசரஸ் - தனது மகளை எட்டு ஆண்டுகளாக கற்பழித்து வந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த உள்ளூர் பிஜேபி தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா பகுதியின் பிஜேபி தலைவராக இருப்பவர் அசோக் தனேஜா. இவர் தனது 20 வயது மகளை கடந்த 8 ஆண்டுகளாக கற்பழித்து வந்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் பஞ்சாப் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

தனது தந்தை கடந்த 8 ஆண்டுகளாக தன்னை கற்பழித்து வந்தார் என்றும், இதைப் பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அந்தப் பெண் புகார் செய்துள்ளார்.

இதனால் பயந்து போய் இருந்ததாகவும், சமீபத்தில் மும்பையில் ஒரு தொழிலதிபர் தனது மகளை 9 ஆண்டுகளாக கற்பழித்து வந்து சமீபத்தில் கைது செய்யப்பட்ட செய்தி தெரியவந்ததைத் தொடர்ந்து தானும் தன் உறவினர்களிடம் கூறி அதன் பின்னர் போலீசில் புகார் செய்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

No comments: