Sunday, August 23, 2009

கார்கில் சவப்பெட்டி ஊழல் வழக்கு: குற்றப்பத்திரிக்கை

கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களுக்காக சவப்பெட்டி வாங்கியதில் பெருமளவில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதில் அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னான்டசுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ தயாராகி வருகிறது.

இந்நிலையில் ஜார்ஜ் பெர்னான்டசுக்கு இதில் எந்தவித தொடர்பு இல்லை என்றும் இந்த ஊழலில் ஒரு அமெரிக்க கம்பெனி மற்றும் 3 இந்திய ராணுவ அதிகாரிகள் ஆகியோர் மீது மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது.

No comments: