Sunday, August 30, 2009

தனக்குரிய பாதுகாப்பை விலக்க சோம்நாத் சாட்டர்ஜி கோரிக்கை

Somnath Chatterjee
டெல்லி: தனக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும்படி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை, முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கோரியுள்ளார்.

இதுதொடர்பாக சிதம்பரத்திற்கு சோம்நாத் சாட்டர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், நான் டெல்லிக்கு வரும்போதெல்லாம் நான் தங்குவதற்காக தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ள வீட்டில் பாதுகாவலர்கள் குவிக்கப்படுகிறார்கள்.

ஆனால் இந்தப் பாதுகாப்பை நான் விரும்பவில்லை. எனவே தயவு செய்து எனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இத்தகைய பாதுகாப்பு அளிப்பதற்கான தகுதியில் நான் இல்லை என்பதை உணர்கிறேன் என்று கூறியுள்ளார் சோம்நாத்.

சமீபத்தில் 30 விஐபிக்களுக்கு அளிக்கப்பட்ட எக்ஸ் பிரிவு பாதுகாப்பை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

No comments: