Tuesday, August 4, 2009

கொள்ளையர்கள் அதிரடி:ஏடிஎம் மெஷின் திருட்டு

சண்டிகரிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஷிம்லா பஹடி. இங்கு ஐசிஐசிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் உள்ளது.


அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் மிகவும் முக்கியமான இந்த ஏடிஎம்மில் 5 லட்சம் பணம் இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இது காணாமல் போனது.

இரண்டு நபர்கள் ஏடிஎம்முக்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து மேலும் சிலர் வந்தனர். அவர்கள் என்னை தாக்கிவிட்டு, ஏடிஎம்மை அடியோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு காரில் தப்பி விட்டனர் என பாதுகாப்பு பணியில் இருந்த சந்தீப் சிங் காவல் துறையில் புகார் செய்தார்.

உடனடியாக காவலரும் தன்னார்வ தொண்டர் ஒருவரும் கொள்ளைகளை துரத்திச் சென்றனர். தப்பிக்க முடியாத சூழலில், அவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் ஏடிஎம்மில் இருந்த பணம் திருடு போகவில்லை.

மேலும் காரில், செல்போன், காஸ் சிலிண்டர் மற்றும் வெல்டிங் மெஷின் ஆகியவையும் இருந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

No comments: