Tuesday, August 11, 2009

இந்திய சமத்துவ நாடா? ம. பி., பள்ளிகளில் போஜன மந்திரம் அறிமுகம்

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. ஏற்கனவே இங்குள்ள பள்ளிகளில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் திட்டம் அமல்படுத்தப் பட் டுள் ளது. இந்நிலையில், மதிய உணவு சாப்பிடுவதற்கு முன் போஜன மந்திரத்தை சொல்ல வேண்டும் என, கல்வித்துறை அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ் அறிவுறுத்தியுள்ளார். அடுத்த மாதம் 5ம் தேதியிலிருந்து 4,000 அரசு பள்ளிகளில்
படிக்கும் மாணவர்கள், மதிய நேரத்தில் போஜன மந்திரத்தை சொல்லி விட்டு சாப்பிடலாம் (தினமலர் 05/07/2009).

இந்தியாவின் பெருமையே சமத்துவம் என்று சொல்லுபவர்களே, தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும், போஜன மந்திரம் சொல்லுவதும் தான் சமத்துவமா?

இந்திய சட்டத்தை பார்த்தாலும், சமய சார்பற்ற நாடு என்று சொல்லுகிறது. ஆனால், பிஞ்சு வயதிலேயே பார்ப்பனிய சடங்கை செய்ய வைப்பது எந்தவிதத்தில் சரி?

இதே மாதிரி, வேறொரு மாநிலத்தில் கிருத்தவ, முஸ்லிம் மத சடங்கை செய்ய வைத்தால் இந்து பாசிஸ்டுகள் ஏற்றுக்கொள்வார்களா?

No comments: